கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com
Showing posts with label முஸ்லிம் உலகம். Show all posts
Showing posts with label முஸ்லிம் உலகம். Show all posts

உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முஹம்மத் அலி: நிறவெறி கொடுமையை மாய்க்கும் சக்தி இஸ்லாம் என உணர்ந்து சத்தியத்தின் பக்கம் வீழ்ந்தவர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பெரும்புரட்சி செய்த ஓர் மாவீரனாக - நிறவெறி அக்கிரமத்துக்கு எதிரான அமெரிக்க இஸ்லாமிய போராளியாக அவரை யாருக்குத்தான் பிடிக்காது..?
1967-ல் அமேரிக்கா நடத்திய வியட்நாம் போரில் கலந்து கொள்ள தம் இளம் குடிமக்களை அமெரிக்க அரசு கட்டாயப்படுத்திய பொழுது, போருக்கு சென்றாக வேண்டிய தமது முறை வந்த நேரத்தில்... அப்போது முஹம்மது அலி சொன்ன புரட்சிக்கருத்துகள் எந்நாட்டுக்கும் பொருந்தி, எந்நாளும் போற்றத்தக்கன.
"வியட்நாமில் என் சகோதரன், என் சில இருண்ட மக்கள், சேற்றில் வாழும் சில பசித்த ஏழை மக்கள் ஆகியோரை பெரிய சக்தி வாய்ந்த அமெரிக்காவிற்காக சுட்டுக்கொல்ல, என் மனசாட்சி என்னை அனுமதிக்காது.
எதற்காக அவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்..?
என்னை அவர்கள் ஒருபோதும் நீக்ரோ என்றழைத்தது கிடையாதே.
அவர்கள் என்னை விசாரணையின்றி ஒருபோதும் அடித்து மிதித்துக்கொலை செய்ய முயன்றது கிடையாதே.
அவர்கள் என் மீது எந்த நாய்களையும் ஏவி கடிக்கவிடவில்லையே.
அவர்கள் என்னிடமிருந்து எனது குடியுரிமையை திருடவில்லையே.
அவர்கள் என் தந்தையை கொல்லவில்லை; என் தாயை பாலியல் வல்லுறவு செய்யவில்லை.
அப்புறம் நான் எப்படித்தான் அந்த ஏழை மக்களை சுட முடியும்..?
என்னால் போருக்கு போகவியலாது.
இதற்காக நான் சிறை செல்லவும் தயார்..." என தனது அமெரிக்க அரசுக்கு எதிராக முழக்கமிட்டார்.
விளைவு..?
5 வருஷ சிறை தண்டனையும் $10,000 அபராதமும் (1967ம் வருஷம்... 7 லட்சம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை) விதிக்கப்பட்டன.
அதுமட்டுமா..?
அதற்குமுன்னர் அவர் வென்ற பதக்கம், வெற்றிப்பட்டயம் அனைத்தும் பறிக்கப்பட்டன. மேலும்,
எல்லா அமெரிக்க மாகாணத்திலும் அவருக்கான குத்துச்சண்டை உரிமம் மறுக்கப்பட்டு அவர் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி,
வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளிலும் அவரால் கலந்து கொள்ள முடியாதவாறு அவரது பார்போர்ட் பறிக்கப்பட்டது.
1964 லேயே ‪#‎முஹம்மத்_அலி‬ என்று அவர் தன் பெயரை மாற்றி இருந்தாலும், அப்படி அழைக்காமல் வேண்டுமென்றே க்ளே என்ற அவரது பழைய பெயரிலேயே தொடர்ந்து அவர் பற்றிய செய்தி போட்டு நிறவெறி ஊடகங்கள் தம் வஞ்சம் தீர்த்தன.
தடை விளைவாக அவரால், 1967 முதல் 1970 வரை உலகில் நடந்த எந்த ஒரு போட்டியிலும் கலந்துகொள்ள முடியாமல் போனது. 1971ம் ஆண்டு பல்வேறு முறையீடுகளுக்கு பிறகு, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் அவர் மீதான தண்டனை ரத்தானது. அதன்பின்னர் மீண்டும் பல பல வெற்றிகள்.
இப்படியாக, "கலந்து கொண்ட எந்த ஒரு போட்டியிலும் தோல்வியே தழுவாத ஒரே வீரர்..." என்று தடைக்கு முன், குத்துச்சண்டை உலகின் சிகரத்தில் புகழோடு இருந்த போதுதான்... தமது 25 லிருந்து 29 வயது வரை தடை காரணமாக பல்வேறு வெற்றிப்பட்டங்களை பதக்கங்களை அவரால் வெல்ல முடியாமல் போனது.
இருந்தும்... குத்துச்சண்டை உலகில் இன்றும் கூட இவர்தான்... 56 வெற்றிகள், 37 நாக்கவுட், 5 தோல்விகள் மட்டுமே என... வேர்ல்ட் ரெக்கார்ட் வைத்துள்ள நம்பர் ஒன் சாதனையாளர்..!

Jazakkallah - Mohamed Ashik

தொழுகைக்காக வர்த்தகத்தை இடை நிறுத்தும் முதல் பிரதேசம் மற்றும் முதல் முஸ்லிம் பாடசாலை

அஸ்லம் அலி: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம்கள் செறிவாகவும் அதிகமாகவும் வாழும் கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசதில் முஸ்லிம் வர்த்தகர்கள் தொழுகைக்காக தமது வர்த்தகங்களை இடைநிறுத்தி தொழுகையில் ஈடுபட தீர்மானித்தனர். அதற்கு அமைவாக தற்போது அந்த தீர்மானம் ஏழு மாதங்களை அடைந்துள்ள நிலையில் தற்போதும் அந்த தீர்மானம் மிகவும் உச்சாகத்துடன் தினமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. என்பதுடன் அக்குரணை மத்திய (அல் அஸ்ஹர்) கல்லூரியிலும்  கல்வி அமைச்சின் அனுமதியுடன் இமாம் ஜமாத்துடன் லுகர் தொழுகை இடம்பெற்று வருகிறது .
அக்குரணை பிரதேசம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும், அங்கு 99 வீதமான வர்த்தக நிலையங்கள் முஸ்லிம்களுக்கு உரியதாகும். அங்குள்ள மஸ்ஜிதுகளில் பாங்கு -தொழுகைக்கான அழைப்பு- செய்யப்படும்போது முஸ்லிம் வர்த்தகர்கள் தமது கடைகளை குறித்த நிமிடங்கள் தொழுகைக்காக மூடிவிட ஏகமனதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்மானித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
தினமும் வர்த்தகம் சூடுபிடிக்கும் நேரங்கலான லுஹர், மற்றும் அஷர் நேரங்களில் தொழுகைக்காக முழு வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு முதலாளி , தொழிலாளி உட்பட அனைவரும் மஸ்ஜிதுகளுக்கு சென்று வருகின்றனர். தினமும் அக்குரணை பிரதேச மஸ்ஜிதுக்களில் லுஹர், மற்றும் அஷர் நேரங்களில் ஜும்மாஹ் தொழுகைக்கு கூடும் தொகைக்கு நிகரான மக்கள் கூட்டத்தை காணக்கூடியதாக இருப்பது சிறப்பம்சமாகும் .
இந்த நடைமுறையின் மூலம் ஏனைய மதத்தவர்களுக்கு சிரம்பங்கள் ஏற்படாதவாறு சில விசேட வழிமுறைகளும் கையாளப்படுகிறது . தற்போது அக்குரணை பிரதேச அரச தேசிய முஸ்லிம் பாடசாலையான அக்குரணை மத்திய (அல் அஸ்ஹர்) கல்லூரியிலும் மாணவர்கள் லுகர் தொழுகையை இமாம் ஜமாத்ஆக பாடசாலையின் மைதானத்தில் பல மாதங்களாக நிறைவேற்றி வருகிறார்கள் .
இதன் பிரகாரம் தொழுகைக்காக தமது வர்த்தகத்தை இடை நிறுத்தும் முதல் முஸ்லிம் பிரதேசம் என்ற பெருமையை அக்குரணை பிரதேசம் பெற்றுகொண்டுள்ளதுடன் லுகர் தொழுகையை இமாம் ஜமாத்துடன் நிறைவேற்றும் முதல் முஸ்லிம் அரச பாடசாலை என்ற பெருமையை அக்குரணை (அல் அஸ்ஹர்) மத்திய கல்லூரி பெற்று கொண்டுள்ளது . தொழுகைக்காக செலவு செய்யப்படும் குறித்த நிமிடங்கள் மேலதிகமாக கல்லூரியால் பெறப்படுவாதல் குறித்த பாடசாலை 10 நிமிடங்கள் தாமதித்தே நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
lankamuslim

கொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..? (வீடியோ)

 17-04-2016 கொழும்பு மருதானை டெம்பள் ரோட் பள்ளிவாசலுக்கு நிகாஹ் பயான் ஒன்றுக்காக சென்றிருந்தேன்.

 அஸர் தொழுகையின் பின், நமது நிகாஹ் பயான் முடிந்ததும் விவாகப் பதிவாளர் மணமகனிடம் உங்களது மனைவிக்கு மஹராக என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டதும், உடனே மணமகன் எனக்கு மனைவியாக வரப்போகும் அந்த பெண் கேட்ட மஹரையும் மேலதிகமாக குறித்த தொகை பணமும் கொடுக்கிறேன் என்றார்.

 இதனைச் சொன்னதும் சபையிலுள்ளவர்களுக்கு அந்த மணமகள் என்ன கேட்டிருப்பாள் என்ற ஒரு ஏக்கம்

 உடனே மணமகன் அல் குர்ஆனின் சூரா பத்ஹ் 48 வது அத்தியாயத்தை மனப்பாடம் செய்து நீங்கள் தருவதையே எனக்கு நீங்கள் மஹராகத் தந்து என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்ற மனைவியின் வேண்டுதலை மணமகன் அந்த சபையில் உரைத்தார் அல் ஹம்துலில்லாஹ்.

 இவ்வாறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் நம்மால் அவ்வப்போது ஒரு கதையாகவோ சம்பவமாகவோ வாசிக்கக் கிடைத்தாலும், நான் நேரில் கண்ட முதல் அனுபவம் என்பதனால் இதனை நமது முஹிப்பீன்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

 முஃமின்களின் அன்னைகளான  ஆயிஷா, ஹப்ஸா, ஸைனப்,  (ரழி) உம்மு சுலைம் (ரழி) போன்ற கல்வியறிவுள்ள சிறந்த சாலிஹான ஈமானியப் பெண்களும் நம் சமூகத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
 மாஷா அல்லாஹ்..!

 அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் குறித்த அந்த மணப்பெண் பாகிஸ்தானில் கல்விகற்ற ஒரு டாக்டர் பெண் என்பதுவே.

 அல்லாஹ் அவர்களது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கி வைப்பானாக..!"



Mufaris Rashadi-

அல்லாஹு அக்பர், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் 13ஆவது தலைவர்கள் மாநாட்டில் துர்க்கி ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரை..

ஆங்கிலம் புரியக்கூடியவர்கள் கண்டிப்பாக இந்த வீடியேவை பார்ப்பதற்கு சற்று நேரம் ஓதிக்கிங்கள். அவருடைய தாய்மொழி புரியாவிட்டாலும் சில இடங்களில் அவருடைய முகபாவனை அவருடைய ஆதங்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

இந்தோனேசியா தீவுகளில் விசித்திர குள்ளர்கள்: யாஜுஜ் – மாஜுஜ்??

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல்லாஹ்வின் அருள் மறையாம் திருமறைக் குர்ஆனில், மனித சமுதாயம் படிப்பினைப்  பெறுவதற்காக ஏராளமான வரலாற்று சம்பவங்களை எடுத்துக் கூறுகிறான். இனி வரும் காலங்களில் நடைபெறப்போகும் சம்பவங்களும் நமக்கு முன் எச்சரிக்கை ஊட்டுவதற்காக அதில் தெளிவாக விளக்கியுள்ளான். அப்படியான ஒரு நிகழ்வுதான் கடைசி  காலத்தில் வரக்கூடிய யாஜூஜ்-மாஜூஜ் கூட்டமாகும்.
இந்தக் கூட்டத்தைபற்றி எல்லா நபிமார்களும் தம் உம்மத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இக்கூட்டம் வெளிவரவில்லை. இறுதி உம்மத்தான நம்  காலத்தில்தான் இக்கூட்டம் வெளிவரப்போவதால், இக்கூட்டத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விரிவாக தெளிவாக விளக்கிச் சென்றுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் மக்காவில் இஸ்லாத்தை குரைஷி மக்களிடம் போதித்த நேரத்தில், உண்மையில் இவர் இறைதூதர்தானா என்பதை சோதிப்பதற்காக, வேதம் கொடுக்கப்பட்ட யூதர்களிடம் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினர்.
உண்மையில் இவர் இறைத்தூதர்தான் என்பதை அறிந்து கொள்ள மூன்று கேள்விகளைக் கேட்குமாறு யூதர்கள் ஆலோசனை சொன்னார்கள். அவற்றில்  ஒன்றுதான், உலகின் கிழக்கு மேற்கு திசைகளில் பிரயாணம் செய்த பயணியைப்பற்றிய செய்தி. இது குறித்து அல்லாஹ் வசனத்தை இறக்குகின்றான்.
(நபியே!)அவர்கள் துல்கர்னனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்,” அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக்காண்பிக்கிறேன்” என்று கூறுவீராக.  அல் குர்ஆன்.18:83.
பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை. அவர்கள் ”துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜுஜும், மஃஜுஜும் பூமியில் ஃபஸாது குழப்பம் செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.
அதற்கவர்; ”என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; ”நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் ”உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்”” (என்றார்).
எனவே, (யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை. ”இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள்தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.    அல்குர்ஆன் 18:83-98
யஃஜுஜு, மஃஜுஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.    அல்குர்ஆன் 21:96
பூமியில் குழப்பம் விளைவிக்கும் ஒரு பெருங்கொண்ட கூட்டம் இறுதி நாளில் வெளியாகி மக்களுக்குத் தீங்கிழைப்பார்கள் என்ற உண்மையை குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன. இவர்கள் பூமியில் இன்றும் உயரமான மலைகள் சூழ்ந்த அரண்களுக்குள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் மொத்தமே மூன்று அடி உயரமான விசித்திர குள்ளர்கள்.
‘இவர்கள் உயரம் ஒரு சான் அல்லது இரு சான் அதிகபட்சம் மூன்று சான்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்’ என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாக ஹாக்கிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசித்திர குள்ளர்கள் இறுதி நாளின்போது வெளிக்கிளம்பி வந்து பெரும் அட்டூழியங்களில் ஈடுபடுவர்.
ஃபத்ஹுல்பாரி, நூல்: புகாரி 7ம் பாகம் பக்கம் 573.
இவர்கள் நம்மைப்போல ஆதம் (அலை) அவர்களின் சந்ததியில் வந்த மனிதர்களே. “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம்(அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்படால் மக்களின் வாழ்க்கையை பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை:” என்பது நபிமொழி.-
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி). நூல்: தப்ரானீ; இப்னு ஹஜர்.பத்ஹுல் பாரி.
இவர்கள் நூஹ்(அலை) அவர்களின் புதல்வர் ‘யாபிஸ்’ என்பாரின் வழித்தோன்றல்களாவர் என்று கூறப்படுகிறது. யஃஜுஜ், மஃஜுஜ் அரபி அல்லாத சொற்கள். மனித வர்க்கமும் ஜின் வர்க்கமும் நூறு சதம் என்றால் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் மட்டும் 90 சதம்.
அல்லாஹ்வின் அடியார் துல்கர்னைன் அவர்கள், சூரியன் உதிக்கும் கிழக்கு திசை பயணத்திலேயே யாஜுஜ்-மாஜுஜால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்கள். குழப்பமான பித்னாக்கள் புறப்படும் திசை கிழக்கு, பெரும் குழப்பவாதி தஜ்ஜால் கிழக்கு திசையிலிருந்துதான் புறப்பட்டு வருவான் என்பது நபிமொழி (புஹாரி 3279) கீழ் திசையில் இருக்கும் இந்தோனேசியா அடர்ந்த காட்டுத் தீவான  புளோரஸ் என்னும் இடத்தில்,7- செப்டெம்பர் 2003 ம் ஆண்டு மூன்றடி உயரமுள்ள சுமார் 30 வயதுடைய ஒரு பெண்ணின் எலும்புக்கூட்டை அமெரிக்கா ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.
museum exhibit of the hobbit, homo floresiensisஇந்த விசித்திர குள்ளர்கள் வியாதியின் காரணமாக குள்ளமாக உள்ளார்களா அல்லது புதுவித இனமா என்பது பற்றி கடந்த பத்து  வருடங்களாக பல்வேறு ஆய்வுகள் செய்து இறுதியில், இது மனித இனத்தை  சார்ந்த குள்ள இனம். பல ஆயிரம் ஆண்டுகள் அத்தீவிலேயே தனிமைப்பட்டு வாழ்ந்ததில் குள்ளமாக உள்ளனர். மனிதர்கள் மட்டும் அல்ல, அங்குள்ள யானை போன்ற விலங்குகளும் குள்ளம்மாக இருந்தது. இது அத்தீவின்  தனிப்பட்ட விஷேசம் என்பதை ஆய்வுகள் கூறின.
The scientists suggest that on isolated islands, the ancestors of the hobbit underwent dramatic dwarfism, with their bodies shrinking from about 5.4 feet (1.65 m) to 3.6 feet (1.1 m), and brains dwindling from about 52 cubic inches (860 cubic centimeters) to 26 cubic inches (426 cubic cm). “For me, this work will turn the tide about the question of evolutionary origin of H. floresiensis,” study lead author Yousuke Kaifu, a paleoanthropologist at Japan’s National Museum of Nature and Science in Tokyo, told Live Science.
While the human lineage generally evolved larger bodies and brains over time, the hobbit suggests that isolation on islands could substantially reverse this evolutionary trend, Kaifu said
இந்தக் குள்ளர்கள்  இன்றும் மலைப்பாங்கான அடர்ந்த காட்டு அரண்களுக்குள் வாழ்ந்து  வர வாய்ப்புள்ளது, என்று அமெரிக்கா ஆய்வாளர்கள் கூறினர். இவர்கள் மறைந்து வாழும் யாஜுஜ்-மாஜுஜ் கூட்டமாக இன்ஷாஅல்லாஹ் இருக்கலாம் என்று அன்றே ஒரு கட்டுரை எழுதினோம்.
யஃஜூஜ், மஃஜூஜ், தஜ்ஜால்? http://www.readislam.net/portal/archives/353
இந்த குள்ள மனிதர்களைப்பற்றிய கூடுதல் ஆய்வுச் சான்றுகள், புகழ்பெற்ற ஆராய்ச்சி இதழான நேச்சரில்(Nature-International weekly journal of science. 14. january-2016) இவ்வாரம் வெளியானது. குள்ள மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட புளோரஸ் தீவிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள சூலவேசி என்ற தீவில் நடந்த தொல்பொருள் அகழாய்வில், மனிதர்கள் வேட்டையாட பயன்படுத்திய பல்வேறு கூர்மையான கற்கருவிகளை கண்டெடுத்தனர்.
stone artifacts இந்தக் கற்கருவிகளின் வயதை, அதி நவீன ஆய்வு முறையில் சோதித்து பார்த்த போது, இவைகள் சுமார் 118,000 முதல் 194,000 வருடத்தில் வாழ்ந்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று ஆய்வு  முடிவுகள் கூறுகின்றன. இந்த உண்மை தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. காரணம்,சுமார் 60,000 வருடங்களுக்கு முன்புதான் படகு  மூலம் பயணம் செய்து, மனித இனம் ஆப்ரிக்காவில் இருந்து இந்தோனேசியா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்ததாக இதுவரை  நம்பப்பட்டு வந்ததே.
சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பே இவர்கள் எவ்வாறு கடலைக் கடந்தார்கள் என்பது ஆய்வாளர்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை பெரும் சுனாமி அலையின் தாக்கத்தினால் காட்டுமரங்களோடு மிதந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சூலவேசி தீவுகளில் மனிதர்கள் வாழ்ந்துள்ளதால், இவர்களுக்கும் இதற்கு அருகில் உள்ள புளோரஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட குள்ள மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
Gerrit van den Bergh of the University of Wollongong in Australia, the study’s lead author, says that the tools likely were made by Homo erectus, an ancient hominin that lived on nearby islands beginning at least 1.5 million years ago. It’s also possible that the toolmakers are yet-undiscovered relatives of Homo floresiensis, a “hobbit” hominin found on the island of Flores, just south of Sulawesi, between 18,000 and 95,000 years ago, if not earlier.
இந்தோனேசியா புளோரஸ் தீவு குகையில் கண்டெடுக்கப்பட்ட மூன்றடி குள்ள மனித எலும்புகூடு, யாஜுஜ்-மாஜுஜ் மனிதக்கூட்டத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. ஆனாலும் அல்லாஹ்  மட்டுமே உண்மையை அறிந்தவன்.
  1. நமது பூலோக ரீதியான கணக்கின்படி, அல்லாஹ்வின் அடியார் துல் கர்னைன் அவர்கள் பயணம் செய்த சூரியன் முதலில் உதிக்கும் கிழக்கு திசையில் உள்ள நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. இங்கு மலைகள் சூழ்ந்த அடர்ந்த காடுகளைக் கொண்ட தீவுகள் ஏராளம்.துல் கர்னைன் பயணம் செய்த வடக்கு பக்கம் சூலவேசி தீவு உள்ளது.தெற்கில் உள்ளது புளோரஸ் தீவு.இந்த புளோரஸ் தீவுகளில் இன்று வாழ்ந்து வரும் மக்கள், வழி வழியாக தங்கள் மூதாதையர்கள் கூறிய  குள்ள மனிதர்களைப் Ebu  Gogo பற்றிய கதைகள் அவர்கள் ஊருக்குள் புகுந்து மக்களின் வாழ்வாதாரங்களை நாசம் செய்து, கிடைக்கும் அனைத்தையையும் தின்று தீர்க்கும் குணம், இவை அனைத்தும் யாஜுஜ-மாஜுஜ் கூட்டத்தாருக்கு ஒத்துப் போகிறது. Ebu Gogo என்று தீவுவாசிகளால் அழைக்கப்படும் சொல், Gog-Magog சொல்லுடன் பொருந்துகிறது.
  2. யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் ஆதம் (அலை)  அவர்களின் வழித்தோன்றலில்   வந்த ஒரு  இனமே என ஹதீஸ் கூறுகிறது. புளோரஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட  மூன்றடி குள்ள எலும்புகூடும் மனித இனத்தின் உள்ள தனி இனம் என்று ஆய்வு முடிவுகள் கூறுவது கவனிக்கத்தக்கது.
  3. யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் வில் அம்பு கொண்டு வேட்டையாடுவதில் வல்லவர்கள் என்று  ஹதீஸ் கூறுவதை, புளோரஸ் தீவின் குகையில் கிடைத்த வேட்டை பிராணிகளின் எலும்பும், கூர்மையான கற்கருவிகளும், சூலவேசி தீவில் கண்டெடுத்த கல் ஆயுதங்களும் உறுதிப்படுத்துகின்றன.
  4. அல்லாஹ்வின் அடியார் துல் கர்னைன் அவர்கள் இந்தோனேசியா தீவுப்பகுதிகளுக்கு வந்து ஆட்சி செய்ததற்கு சான்றாக.இன்றும் இந்தோனேசியா சுமத்ரா தீவு அரச குடும்பத்தினர் தாங்கள் துல் கர்னைன் மன்னர் வழி  வந்தவர்கள் என்று கூறி வருவது குறிப்பிடதக்கது.
  5. ஹதீஸ்களில் கூறிய யாஜுஜ்-மாஜுஜ் முக அடையாளமும் குள்ள எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டை வைத்து கணினி வரைந்த முக அமைப்பும் முற்றாக பொருந்துகிறது.
“யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வரும்வரை நீங்கள் போராடிக்கொண்டே இருப்பீர்கள்; அவர்களின் முகம் அகன்றதாகவும், கேடயம் போல்(வட்டமாகவும்) கண்கள் சிறிதளவும், முடிகள் பட்டையாகவும் அமைந்திருப்பார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ் நூல்கள்: அஹ்மத் தப்ரானீ.
Forensic reconstruction of Homo floresiensisயாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் ரஷியா,காகாசிய-துருக்கி மலைப்பகுதிகளில் இருக்கலாம் என்று இன்றைய, சில குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுவது; பைபிளின் விளக்கமாகவே உள்ளது. குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்கத்தின் படி யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் விசித்திர குள்ளர்கள். இவர்கள் எதையும் விளங்கிக்கொள்ள முடியாத காட்டுமிராண்டி ஆதிவாசிகள். கொலை, கொள்ளை, அழிவு நாசம் செய்யும் கொடுரமானவர்கள். இவர்கள் நாகரீகம் சூழ்ந்த காகாசிய நாடுகளில் இருக்க வாய்ப்பில்லை.
ஆதம் (அலை) அவர்களைப் படைத்தலிருந்து, மறுமை நாள் ஏற்படுவதற்கும் இடைப்பட்ட நாளில் தஜ்ஜாலின் குழப்பத்தை விட பெரிய குழப்பம் ஏதுமில்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:இம்ரான் இப்னு ஹுசைன் (ரழி). முஸ்லிம்.2946.
ஆதம் (அலை) அவர்கள் காலத்திலிருந்து இறுதி நபி (ஸல்) அவர்கள் வரை வந்த அத்துணை நபிமார்களும் தங்கள் உம்மத்திற்கு செய்த எச்சரிக்கை ஒன்றுதான். மகா குழப்பவாதி தஜ்ஜாலின் தீங்கிலிருந்து பாதுகாப்பு தேடுவதுதான். இன்று நமது ஐவேளை தொழுகையில் கேட்கப்படும் துவாவும் இதுதான். இந்த குழப்பவாதி தஜ்ஜாலை ஈஸா (அலை) அவர்கள் மட்டுமே கொல்ல முடியும். வேறு எவராலும் கொல்ல முடியாது.
“தஜ்ஜாலை விட்டும் அல்லாஹ் காப்பாற்றிவிட்ட ஒரு  கூட்டத்தாரிடம் அடுத்து ஈஸா  (அலை) அவர்கள் வருவார்கள். அவர்களின் முகங்களை தடவி விடுவார்கள். அவர்களிடம் சொர்க்கத்தில் உள்ள அவர்களுக்குரிய  தகுதிகளைப்பற்றிப் ஈஸா நபி கூறுவார்கள். அந்த  சமயத்தில் ஈஸாவிடம் அல்லாஹ், “நான் என் அடியார்களை சிலரை வெளியாக்கி  உள்ளேன். அவர்களிடம் யாரும் சண்டை  செய்ய முடியாது. எனவே என் அடியார்களை தூர் மலைப்பக்கம் ஒன்று சேர்ப்பீராக!”  என்று அல்லாஹ் கூறுவான்.
அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி) –முஸ்லிம்.2937.
தஜ்ஜாலுக்கு அடுத்து வரும் யாஜுஜ்-மாஜுஜ் குழப்பக் கூட்டத்தை கொன்று குவிக்க ஈஸா (அலை) அவர்களாலும் முடியாது. அவர்கள் மிகப்பயங்கரமாக பூமியில் அட்டுழியம் செய்வார்கள். அவர்கள் வெளியாக்கப்படும் போது கண்ணில் படுவதை எல்லாம் தின்றும், ஓடும் ஆற்று நீர் வற்றிப்போகும் அளவு குடித்தும் பலம் பெருவார்கள். ஒரு யாஜுஜ்-மாஜுஜ் பெண்ணானவள் ஆயிரம் குழந்தைகளைப் பெறாமல் மரணிக்க  மாட்டாள் என்பது நபி மொழி.
எனவேதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,உலகிலுள்ள அத்துணை  மனு,ஜின் கூட்டத்தில் ஆயிரத்தில் ஒருவர் நரகம் சென்றால்,யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் 999  பேர் நரகம் செய்பவர்கள் என்று கூறினார்கள். இந்த விசித்திர குள்ளர்கள் இறுதி காலத்தில் வெளியாக்கப்படுவார்கள் என்று சொல்வதிலிருந்து, இவர்கள் நாம் வாழும் உலகத்தில் எதோ ஓர் இடத்தில் மறைந்து வாழ்கிறார்கள். மறைந்து வாழ்வதற்கு பொருத்தமான இடமாக, அடர்ந்த காடு, உயரமான மலைகள், 150 எரிமலைகள் நிறைந்ததாக  இந்தோனேசியா தீவு கூட்டம் உள்ளது.
இந்தோனேசியா மொத்த  நிலப்பரப்பில்  சுமார் 64% அடர்ந்த காடாக உள்ளது. மொத்தம் உள்ள 18,307  தீவுகளில் சுமார்  8,844 தீவுகளுக்கு மட்டுமே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 6000 தீவுகளில் மனிதர்கள் பரவலாக வசிக்கிறார்கள். 922 தீவுகளில் மனிதர் யாரும் இல்லா அடர்ந்த காடாக உள்ளன. யாஜுஜ்-மாஜுஜ் குள்ளர்கள் வசிப்பதற்கு உகந்த இடமாக இவைகள் இருக்கலாம்.அல்லாஹ் அறிந்தவன்!
தொல்பொருள் ஆய்வாளர்கள் தொடர்ந்து இங்கு அகழாய்வு செய்து வருகின்றனர். குள்ள மனிதர்களைப்பற்றிய புதிய செய்திகள் இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் கிடைக்கலாம். எனினும் அல்லாஹ் யாஜுஜ-மாஜுஜ் கூட்டத்தாருக்கு அனுமதி கொடுக்கும் போதுதான், அவர்களைப்பற்றி உலகம் அறிந்து கொள்ள  முடியும். அதுவரை எந்த ஆய்வாளர்களாலும் அவர்களை உயிருடன் காண முடியாது. காரணம் அவர்கள் மலை  சூழ்ந்த அரணுக்குள் அகப்பட்டுள்ளார்கள்.
2003 ம் வருடம் Lia  Buang எனும் குகையில் கண்டெடுக்கப்பட்ட  பெண் எலும்புக்கூடு வாழ்ந்த காலம் சுமார் 12,000 வருடங்களுக்கு முன்பு.ஒரு வேளை துல்கர்ணைன்(அலை) அவர்கள் இப்பிரதேசத்திற்கு வருவதற்கு முன்பு மரணித்த பெண்ணாக இருக்கலாம். அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். அல்குர்ஆன் வசனங்களை இன்றைய நவீன ஆய்வுகள் தொடர்ந்து உண்மைப்படுத்தி வருவது ஆச்சரியமல்ல.
அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப்  பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதைத் தங்கள் கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்.     அல் குர்ஆன். 20:110.

குப்பை அள்ளும் தொழிலாளியான தந்தை ... பெருமை கொள்ளும் ‪மகள்‬ ..

முகநூல் வழியாக வெளியிட்ட செல்பி
இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானவர்கள் தனது தந்தை பார்க்கும் சில தொழில்களை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு கௌரவமாக கருதும் மக்கள் மத்தியில்..
அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இளம்பெண் குப்பை அள்ளும் தொழிலாளியான தனது தந்தை உடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக ஊடக மற்றும் பல்வேறு செய்தி இணையதளங்கள் ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.
இது பற்றி அவர் "தந்தை செய்வது எந்த தொழிலாக இருந்தால் என்ன அது ஹலாலா‬ என்பதை மட்டுமே நாம் பார்க்க வேண்டும் ..என்னை பொறுத்த வரை என் தந்தைதான் என் உண்மையான கதாநாயகன்‬

யார் இந்த ஷீஆக்கள்?

~தோற்றமும்  வளர்ச்சியும்~
"""""""""""""""""""""""""""""""""""""""""""
ஷீஆக்கள் எப்போது தோற்றம் பெற்றார்கள்? என்பதில் மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன

1) நபி(ஸல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு முன்பிருந்தே ஷீஆக்கள் இருக்கிறார்கள். இது தவறான கருத்து என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.

2) நபி(ஸல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வருகையுடன் ஷீஆக்களின் தோற்றமும் ஆரம்பிக்கிறது. இதுவும் தவறான கருத்தாகும். ஏனெனில் நபி(ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டார்களே தவிர ஆபாசங்களும், அசிங்கங்களும் நிறைந்த ஷீஆ மதத்தை அல்ல.
இந்த இரண்டு கருத்துக்களும் வரலாற்று அடிப்படையில் மற்றவர்களிடம் நற்பெயரை வளர்ப்பதற்காக ஷீஆக்கள் உருவாக்கிக் கொண்ட கருத்துக்களாகும்.

3) அலி (ரலியல்லாஹு அன்ஹு) மற்றும் முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிளவின்போது இப்பெயர் தோற்றம் பெற்றது.

இது ஒரு சாராரில் இருந்து மற்ற சாராரை இனங்காட்டுவதற்கான ஒரு அடையாளமாகவே இருந்தது. கொள்கை, சிந்தனை, வணக்கவழிபாடுகளில் எந்த வித்தியாசமும் அவர்களிடம் இருக்கவில்லை. எல்லோரும் மற்ற சாராரை சகோதரர்களாகவே கருதினர். சகோதரத்துவ வாஞ்சையுடன் தங்கள் தொடர்பாடல்களை அமைத்துக்கொண்டனர்.
உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொலை செய்த கும்பலுக்கு உடனுக்குடன் பழி தீர்ப்பதா? இல்லையா? என்பதில்தான் கருத்து முரண்பாடு கண்டார்கள்.

மற்ற மார்க்க ரீதியான எந்த விடயங்களிலும் அவர்களிடம் கருத்து முரண்பாடு இருக்கவில்லை என்பது முக்கியமான ஒரு விடயமாகும். இதனால்தான், பிற்பட்ட காலத்தில் அவர்கள் பிரச்சினையை மறந்தார்கள். ஒருவருக்கொருவர் மற்ற தரப்பாருடன் திருமணம் செய்துகொண்டனர். ஒரு சாரார் மற்றவர்களை காபிர்கள் என்று நினைத்திருந்தால் இவ்வாறு திருமணம் செய்வது சாத்தியமாகி இருக்காது.
அதுபோலவே, அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மரணத்தின் பின்பு முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சியில் உமைய்யாக்களின் தலைமையின் கீழ் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஓரணியாகினர். இவர்கள் அனைவருமாகச் சேர்ந்து இஸ்லாமிய உலகில் பல வெற்றிகளைக் கண்டனர். நிச்சயமாக கொள்கை அடிப்படையில் பிரிந்திருக்கும் இரு சாராரினால் இவ்வாறான வெற்றிகளை ஈட்டுவது கடினம்

உமைய்யாக்களுக்கும் நபியவர்களின் குடும்பத்தினருக்கும் இடையில் நெருக்கமான ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. நபியவர்களின் குடும்பத்திற்கு அதிகம் நன்கொடை வழங்குபவர் களாக உமைய்யாக்கள் இருந்திருக்கிறார்கள். இதை ஏற்றுக் கொள்பவர்களாக அஹ்லுல் பைத்தினர் இருந்தனர். நிச்சயமாக பெரும் பிளவுள்ள இரு சாரார் இவ்வாறு நடந்துகொள்வது கடினமானது.

நபியவர்களின் குடும்பத்தினர் ஸஹாபாக்களைத் திட்டவில்லை. மாறாக அவர்களை திட்டுபவர்களுக்குத் தண்டனை வழங்குபவர்களாக இருந்தார்கள். ஸஹாபாக்களின் பெயர்களைத் தங்கள் செல்லக் குழந்தைகளுக்கு சூட்டுவதில் மகிழ்ச்சி கண்டனர்.
அலி(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு அபூபக்கர், உமர், உஸ்மான் என்ற பெயரில் குழந்தைகள் இருந்திருக்கின்றனர். அதுபோல் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் தனது பிள்ளைகளில் இருவருக்கு அபூபக்கர்உமர் என்று பெயர் சூட்ட ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் தனது மக்களில் ஒருவருக்கு அபூபக்கர் என்று பெயர்  வைத்திருந்தார்கள்.

இது நபியவர்களின் குடும்பத்தின் பாரம்பரியங்களில் ஒன்றாக பின்வந்தோரால் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. நிச்சயமாக நபியவர்களின் குடும்பத்தினர் ஸஹாபாக்களை நேசிக்காதிருந்தால் இவ்வாறு பெயர் வைத்திருக்க முடியாது.

தனியான சிந்தனைகளைக்கொண்ட பிரிவாக எப்படி மாற்றம் பெற்றது?
உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொன்றவர்களைப் பழிதீர்ப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. பிறகு அது முடிவுற்று சுமூகமான நிலையில் பேணப்பட்ட இந்த உறவு முறை, பிற்பட்ட காலத்தில் எவ்வாறு தனியான கொள்கைகள் கோட்பாடுகளைக் கொண்ட பிரிவாகத் தோற்றம் பெற்றது? என்பது முக்கியமான ஒரு விடயமாகும்.
யூதர்கள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் ஆயுத ரீதியாக முஸ்லிம்களை எதிர்க்க முடியாது என்று கண்டபோது, சிந்தனை ரீதியாக முஸ்லிம்களை பலவீனப்படுத்தவும், குர்ஆன், சுன்னாவை விட்டும் அவர்களைத் தூரமாக்கவும் முனைந்தனர்.

அத்தகைய முயற்சிகள் ஆரம்பகாலத்திலிருந்தே எடுக்கப்பட்டன. ஸஹாபாக்களின் காலத்தில் இவ்வாறானதொரு பிரிவு ஏற்பட்டபோது இஸ்லாத்தின் எதிரிகள் அதை நாசூக்காகப் பயன்படுத்திக்கொள்வதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுத்தனர். இதன்படி அலி (ரலியல்லாஹு அன்ஹு) மற்றும் முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) இருவரின் தரப்பிலும் நுழைந்தனர். இரண்டு சாராரையும் மூட்டி விடுவதற்கும், பரஸ்பரம் மோசமான கருத்துக்களை உருவாக்கவும் முனைந்தனர். முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தரப்பில் இருந்தவர்களிடம் இந்த எதிரிகளின் பிரச்சாரம் பெரிதாக எடுபடவில்லை. காரணம், அவர்கள் இஸ்லாத்தில் உறுதியுடையவர்களாகவும், தலைமைத்துவக் கட்டுப்பாடு மற்றும் வாக்குறுதியை நிறைவேற்றும் பண்பு போன்றவற்றைப் பெற்றவர்களாகவும் இருந்தனர்.

ஆனால் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தரப்பில் நிலைமை இதற்கு முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது ஆட்சியின் தலைமையகமாக கூபாவை தேர்வு செய்திருந்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் கூபா வாசிகள் உறுதியான ஒரு கொள்கை உடையவர்களாக இருந்ததில்லை. தலைமைத்துவக் கட்டுப்பாட்டை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. "கூபாவாசி" என்றால் அவன் வாக்குறுதியை நிறைவேற்றமாட்டான் என்பது பிரபல்யமான ஒரு விடயம்.

அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தரப்பில் ஷீஆக்களின் ஸ்தாபகராகக் கருதப்படும் "அப்துல்லாஹ் பின் ஸபஃ" இருந்தான். இதனால் அவனது அணி பலம் பொருந்தியதாக இருந்தது. எனவே, இவ்வாறான நிலையில் இருக்கும் ஒரு கூட்டத்தில் மாற்றுத் தரப்பார் நுழைந்து வேலை செய்வதும் அவர்களின் இலட்சியங்களை அடைந்து கொள்வதும் இலகுவான ஒரு விடயம். இதன் காரணமாக அலி(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தரப்பில் இருந்தவர்களிடம் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் படிப்படியாக திட்டமிட்ட அடிப்படையில் பரப்பப்பட்டன. இதன் விளைவாக அந்த சிந்தனைகள் காலப்போக்கில் தனியொரு மதமாகப் பரிணமித்தது.
ஷீஆக்களின் ஸ்தாபகராக ஷீஆ அறிஞர்கள், ஏனைய அறிஞர்களால் இனங்காட்டப்படுபவன் அப்துல்லாஹ் பின் ஸபஃ எனும் யூதனாவான். இவன் யெமன் பிரதேசத்தைச் சேர்ந்தவன். உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்தில் தன்னை ஒரு முஸ்லிமாக இனங்காட்டிக்கொண்டான்.
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சதிசெய்வதை தனது முழுப்பணியாகக் கொண்டிருந்தான். இவனே இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக
"அலி(ரலியல்லாஹு அன்ஹு) தான் எல்லோரைவிடவும் சிறந்தவர்அவரே ஆட்சிப்பதவிக்குத் தகுதியானவர்மற்றவர்கள் எல்லோரும் அவருக்கு அநியாயம் செய்துவிட்டனர்" என்ற கருத்தைச் சொன்னான்.
அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்
"கடவுள் தன்மை பொருந்தியவர்" என்று வாதிட்டான். மேலும், அவருக்கு முந்தைய கலீபாக்களை சபிப்பதையும், ஸஹாபாக்களுக்கு எதிரான  விரோதத்தையும் பிரச்சாரம் செய்தான் என ஷீஆக்களின் முக்கிய அறிஞர்களில் ஒருவரான கிஷ்ஷி என்பவர் தனது ரிஜால் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இதை அறிந்துகொண்ட அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவனுக்கும் அவனைப் பின்பற்றியவர்களுக்கும் தண்டனை வழங்கினார்கள். இவ்வாறு ஸஹாபாக்களின் காலத்தில் ஆரம்பித்த இக்குழுவே இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்களுக்குள் உருவான முதல் பிரிவினையாகும்.
எனவே, அவனால் உருவாக்கப்பட்ட இந்த சிந்தனைகள் அவனது மரணத்தின் பின்பு ஏனைய இஸ்லாத்தின் எதிரிகளால் முன்னெடுக்கப்பட்டது. இஸ்லாத்திற்க்கு முரணான பல கொள்கைகளும் சிந்தனைகளும் அஹ்லுல் பைத்தின் பெயரில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதனால்தான் இமாம் ஜஃபர் சாதிக் (ரஹ்மாஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

"நாம் அஹ்லுல் பைத்தினர், எம் ஒவ்வொருவர் மீதும் பொய் சொல்லும் ஒருவர் இருந்துகொண்டே இருக்கிறார். அவர் எம்மீது பொய்யை   இட்டுக்கட்டுகிறார். இதனால் நாம் சொல்லும் உண்மையான செய்திகள் மக்களிடம் வீழ்த்தப்படுகின்றன. (ரிஜாலுள் கிஷ்ஷி)
இவ்வாறு தோற்றம் பெற்ற ஆரம்ப கால ஷீஆக்கள் "சபஇய்யா" என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். அனாலும் பல குழுக்களாக பிரிவதை தங்கள் வழமையாக்கிக் கொண்டனர். ஒவ்வொருவரும் தாங்கள் மதிப்பவர்களை இமாம் என்று வாதிட்டு பிரிந்தனர். ஒவ்வொரு இமாம் மரணித்த பின்பும் அடுத்த இமாமைத் தீர்மானிப்பதில் அவர்களுக்கு மத்தியில் முரண்பாடு தோன்றுவது வழமையாக இருந்தது. இவ்வாறு தோற்றம் பெரும் குழுக்கள் அடுத்த குழுவை கடுமையாக விமர்சிப்பவர்களாகவும் காபிர் என்று சொல்பவர்களாகவும் இருந்தன

அல்லாஹ் சொல்கிறான்:
அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)
இவ்வாறு பல குழுக்களாகப் பிரிந்த போதிலும் அஹ்லுல் பைத்தைக் கேடயமாக பயன்படுத்தி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பது என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதை நிறைவேற்றுவற்கு அவர்கள் தயங்கவில்லை.
தற்போது ஈரானின் ஆட்சிக்குரிய மதமாக ஷீஆ காணப்படுவதுடன் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானின் ஆட்சியையும் அது கையகப்படுத்தியுள்ளது. பஹ்ரைனில் பெரும்பான்மையாக ஷீஆக்கள்  வாழ்ந்து வருவதுடன் மத்திய கிழக்கின் எல்லா நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். பாகிஸ்தான், இந்தியா, போன்ற ஏனைய நாடுகளிலும் தங்களின் இருப்பை ஸ்தீரப்படுத்துவதற்கான அதிகார ரீதியான முயற்சிகளும் பிரச்சாரங்களும் மேட்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு எவ்வளவு பரவலாக்கம் மேற்கொள்ளப்பட்டாலும் இஸ்லாத்தை பாதுகாக்கும் பொறுப்பை அல்லா ஏற்றிருக்கிறான். யார் சூழ்ச்சிகள் செய்தாலும் அவனது மார்க்கத்தை   அவன் பாதுகாத்தே தீருவான். அல்ஹம்துலில்லாஹ்!

இன் ஷா அல்லாஹ்!
தொடர்ந்து,
"ஷீஆக்களின் சேவைகளும் சாதனைகளும்"
அடுத்த பதிவில் வாசிப்போம்.