ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரசார மேடையில் தோன்றமாட்டேன்:சந்திரிக்கா
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEies5bPDnSZYnEBL2YdK9EPRBd1TdKFd0t3EbfDUJSKDZqrYAetWkcl70IiayevLyjeJvThO1Ao4JYOxcptO03L61kWNF_IT1EtXsL2LV8kCYDpQuRrYrVZthEbFF5SuiHZAnpIqEnkWUOT/s320/chandrikamahinda.jpg)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அத்தனகல தேர்தல் பிரசார மேடையில் தாம் தோன்றப் போவதாக வெளியான வதந்திகளில் எவ்வித உண்மையுமில்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அத்தனகலத் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இக்கருத்தை தெரிவித்ததாக சந்திரிக்கா குமாரதுங்க கூறியுள்ளார்.
அவ்வாறான எதுவித எண்ணமும் தம்மிடமில்லையென்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மேடையில் தாம் பேசப் போவதில்லையென்றும், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் தாம் இணையவில்லையென்றும் கூறிய அவர், எதிர்காலத்தில்கூட அவ்வாறு இணையும் எண்ணமும் தம்மிடமில்லையென்றும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அத்தனகலத் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இக்கருத்தை தெரிவித்ததாக சந்திரிக்கா குமாரதுங்க கூறியுள்ளார்.
அவ்வாறான எதுவித எண்ணமும் தம்மிடமில்லையென்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மேடையில் தாம் பேசப் போவதில்லையென்றும், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் தாம் இணையவில்லையென்றும் கூறிய அவர், எதிர்காலத்தில்கூட அவ்வாறு இணையும் எண்ணமும் தம்மிடமில்லையென்றும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment