![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEgbIzLz-2jVheDlVbNpM4quwO3g-IxLu8uc0Zq7lhqwTPs_2OXCUgQQjDAiyEkIBtZdcWtaGDOCR26zETp6vdIZAvD7lMWjVOt8doFe5d-YxHOzuP5BpoG9hs1-lZlzSfYsZkBkvCLv1B/s320/Younis_Khan_300.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjl09itKk4pNBjx1cyzlM9VKYnc3OkEs8O0gWktCDvohtRG6LExDX-n_udiTQFbGuwqj0meyfOZs-3qBERiMIDc1xyfD4wZ4P6bOt0VjMKmehhJcNGQsR7DocXBqZM2tp4PgnGG1Tb03uxI/s320/Mohammad_Yousuf_300.jpg)
பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆயுள் கால தடை முதல் பெரும் அபராதம் வரை பல்வேறு தண்டனைகளை வழங்கியுள்ளது.
அணியின் முன்னாள் தலைவர்களான யூசுப், யூனிஸ்கான் போன்றவர்களுக்கு விளையாட ஆயுள் கால தடையும், மாலிக் மற்றும் ராணா ஆகியோருக்கு ஓராண்டு தடையுடன் ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அதிரடி வீரர் அப்ரிடி மற்றும் கம்ரான் அக்மல், உமர் அக்மல் ஆகிய மூவருக்கும் தலா 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பந்தைச் சேதப்படுத்தியது, அணிக்கு எதிரான செயல்பாடு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment