தொழச்சென்ற இளைஞன் பள்ளியிலிருந்து விரட்டப்பட்டார்.
நேற்றைய முன்தினம் மாலை அஸர்; தொழுகைக்காக கஹடோவிட நூர் பள்ளிக்கு வழமைபோன்று இளைஞர் ஒருவர் சென்றிருக்கிறார். அப்போது பள்ளியிலிருந்த ஒரு நபர் குறித்த இளைஞரை தொப்பியணிந்து தொழுமாறு பலவந்தப்படுத்தியிருக்கிறார். அத்தோடு மிக முறைகேடாகவும் நடந்துள்ளார். ஆத்திரமடைந்த அவ்விளைஞரும் தன்னால் முடிந்தளவு போராடியிருக்கிறார் இருந்தாலும் அந்த நபர் விட்டபாடில்லை. ஈற்றில் குறித்த அவ்விளைஞர் தொழமுடியாமல் பள்ளியிலிருந்து திருப்பியிருக்கிறார். செல்வந்தர்கள், சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் அப்பள்ளியில் தொப்பி அணியாமல் தொழும்போது பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நபர் திடீர்ரென்று ஏன் அவ்விளைஞனுடன் மாத்திரம் இவ்வாறு நடந்துகொண்டார் என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது. தடுக்கவேண்டும் பள்ளிவாசல்கள் பொது இடங்களாகும் அவை அல்லஹ்வுக்குரியவையாகும். அவற்றில் யாருக்கும் உரிமைகொண்டாட முடியாது. எத்தனையோ இளைஞர்கள் தொழுகையே இல்லாமல் வீதியளந்து திரியும் போது இந்த இளைஞர் பள்ளிக்கு தொழ வந்ததை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய செயற்பாடுகள் இளைஞர்கள் மனதி;ல் பலபாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அவை காலப்போக்கில் அவர்களை விரக்தி நிலைக்குக் கூட கொண்டு செல்லலாம். ஆகவே பள்ளிவாசல் நிருவாகங்கள் இவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒருசில நபர்களின் அறிவீனமான செயல்கள் பள்ளிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகின்றன. ஆகவே மக்களுடன் அன்பாக பன்பாக நடந்துகொள்ளும் பக்குவம் வளர்ந்தோரிடம் கட்டாயம் இருக்கவேண்டும்.
இந்த தகவலை உங்களது தளத்தில் பிரசுரிப்பீர்கள் என்று எதிர்பார்கின்றோம்.
ஊர்வாசி