![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAP9CeKTpfVrQHuSI8_dfbxY8WHbKpP5Sd6d2EzpGPEmfUgx8bZ5BevRYtmqm48IMe8BsRb_3pJsTiAOcMgA0cpPtGLrmZLDdczCVELEC3On_cs4sJwuZ1OpmA7TY7ByYKBYNqLr5QluPV/s320/qwer.jpeg)
கஹட்டோவிட குரவலானப் பிரதேசத்தில் அமைந்துள்ள சார்லங்கா என அழைக்கப்படும் ”அஹ்மட் விலேஜ்” , வெள்ளவத்தை ரோஹினி வீதியில் அமைந்துள்ள
CIS நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்ற ஒரு திட்டமாகும். இத்திட்டத்தில் வசிக்கின்ற கஹட்டோவிடாவையும் ஏனைய பகுதிகளையும் சோ்ந்த மக்களின் நலன் கருதி CIS நிறுவனத்தின் வேண்டுகோளிற்கிணங்க கொழும்பு
SFRD நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்று காலை (01.07.2010) விஸ்தரிப்புப் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில்
CIS அஹ்மத் விலேஜிற்கான நிர்வாகி அஷ்ஷைக் நிஸாம் (நளீமி) , SFRD இன் பிரதிநிதி அஷ்ஷைக் பாயிஸ் (நளீமி), சார்லங்காப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி M.S.A றிபாய் உட்பட இப்பகுதி சகோதரர்கள் கலந்து கொண்டனர். இப்பள்ளிவாசலின் நிர்வாகப் பணி ஒரு சிலரின் தனிப்பட்ட நலனிற்காக நடைபெறுகிறது என எமதூரின் ஒரு சில இணையத்தளங்கள் விசமப் பிரசாரம் செய்துள்ள நிலையில்
CIS நிறுவனம் இப்பணியை நேரில் அவதானித்து உத்தியோகபுர்வமாக இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment