இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 33 பேர் காயம்
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பிரதேசத்தில் தனியார் பஸ் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் 33 பேர் படுகாயத்திற்குள்ளாகிய நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tf_F5PRoNqneLgQQzhM9gEnIyjf4Z96zsTi2IFuWwF1I-vFwhPpIVa_bs8G6cXOXUesg5IG2rY61XVRYCXf_ySVnrBEcVX0dxUqE50Z9XnqbXBBt9mbzU=s0-d)
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_t6hfJEdLesKG0ZBCbPdm5ZuRggjU0Hv5Bfa6e7pRRy1C-2yBTCC9HT11tndTJ3n-KPCH8PoZg6aRxtMvRZiv6u8beLauSZMMj_2J5WViEC7h8uofVcqwWz=s0-d)
ஓல்டனிலிருந்து அட்டன் நோக்கிச் சென்ற பஸ் ஒன்றும் அட்டனிலிருந்து டயகம நோக்கி சென்ற பஸ் ஒன்றும் டிக்கோயா பிரதேசத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த இரு பஸ்களிலும் பயணித்த 33 பேர் படுங்காயத்திற்குள்ளான நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு பஸ் சாரதிகளும் வேகமாக பஸ்சை செலுத்தியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment