மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று காலை 7.00மணி முதல் வாக்கெடுப்பு
தென் மற்றும் மேல் மாகாகண சபைகளுக்கான தோ்தலுக்கான வாக்கெடுப்புகள் இன்று காலை 7.00 மணிமுதல் மாலை 4.00மணி வரை நடைபெறும் என தோ்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இவ்விரு மாகாகணங்களுக்குமான வாக்கெடுப்பையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 25035 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது. • இவ்விரு மாகாணங்களிலும் உள்ள மாவட்டங்களின் வாக்காளா் தொகை விபரமாவது
கம்பஹா மாவட்டம் 16 இலட்சம், கொழும்பு மாவட்டம் 15 இலட்சம், களுத்துறை மாவட்டம் 9 இலட்சம், மாத்தறை மாவட்டம் 6 இலட்சம், காலி மாவட்டம் 8 இலட்சம், ஹம்பாந்தோட்டை மாவட்டம் 4.5 இலட்சம் ஆகும். 102 உறுப்பினா்கள் தெரிவு செய்யப்படும் மேல் மாகாண சபைக்கு 2743 வேட்பாளர்களும், 53 போ் தெரிவு செய்யப்படும் தெண்மாகான சபைக்கு 1051 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மேலும் இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் 25உம் சுயாதீனக்குழுக்கள் 15 உம் களமிறங்கியுள்ளது.
0 comments:
Post a Comment