கஹட்டோவிட்ட மகளிர் கல்லூரி மாடிக்கட்டிட அடிக்கல் நாட்டு விழா
கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் நீண்ட நாள் குறையாக விளங்கும் மாடிக் கட்டிடமொன்றினைப் பெற்றுக் கொடுப்பதற்கு குவைத் தூதரகம் முன்வந்துள்ளது. மூன்று மாடிகளாக அமையவுள்ள இக்கட்டிட நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 19ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக குவைத் நாட்டின் தூதுவர் யாகூப் ய+சுப் அல் அகீகியும், கௌரவ அதிதிகளாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரசாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான அகில விராஜ் காரியவஸம், அர்ஜுன ரணதுங்க, கபீர் ஹாசிம் உட்பட மாகாண, பிரதேச சபை உறுப்பினர்களும், புத்திஜீவிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
தகவல்- எம். ஸஜஹான்.
0 comments:
Post a Comment