அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்துள்ளதனால் கஹட்டோவிட்டாவின் பிரதான பாதை நீரில் மூழ்கியுள்ளது
அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்துள்ளதனால் கஹட்டோவிட்டாவின் பிரதான பாதை நீரில் மூழ்கியுள்ளது.
இதனால், கஹட்டோவிட்டா ஊடாகச் செல்லும் வேயாங்கொட – கிரிந்திவெல பிரதான பாதையின் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து பெய்து வரும் அடைமழையினால் நேற்றிரவு இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கஹட்டோவிட்டாவின் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் சுமார் ஐம்பது குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, உடுகொட, ஓகொடபொல, திஹாரிய பிரதேசங்களிலும் தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Dailycelyon.
0 comments:
Post a Comment