கணவன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தனது அண்ணன் முறையான நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவர் பள்ளிவாயல் பரிபாலன சபையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.
திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவௌ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தனது தாயின் ஒன்று அக்காவின் மகனுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில்புரிந்து வருபவர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர், தனது அண்ணன் முறையானவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததனால், கருவுற்றுள்ளாள்.
பின்னர் கருக் கலைப்பிற்காக தனியார் வைத்தியர் ஒருவரிடம் சென்று கருவை கலைத்துள்ளார். கருக்கலைப்பு காலத்தின் போது சிசு உருவாகியிருந்ததனால் அடுத்த நாள் குறித்த சிசு இறந்து பிறந்துள்ளது.
அதனை யாருக்கும் தெரியாமல், பானை ஒன்றினுள் போட்டு கள்ளத் தொடர்பு வைத்திருந்த தனது அண்ணனிடம் கொடுத்து கிராம மையவாடியில் புதைத்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த விடயம் குடும்ப உறுப்பினர்களால் அம்பலமாகியது. பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதி மன்றம் அப்பெண்ணை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
இதேவேளை, இது சம்பந்தமாக கிராமத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, புத்திஜீவிகள் குழு கிராம சட்ட விதிகளுக்கமைவாக பள்ளிவாயல் பரிபாலன சபையினரால் குறித்த பெண் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த பெண், தனக்குத் தெரியாமல் அண்ணன் கொத்து ரொட்டியில் மயக்கமருந்து கலந்து தந்து தன்னை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக தனது அண்ணன் மீது பழியைச் சுமத்தியுள்ளார்.
ஆனால், அதன் பின் நடைபெற்ற விடயங்களை கருத்தில் எடுத்து ஆராய்ந்து பார்த்த பள்ளிவாயல் பரிபாலன சபையினர், குறித்த பெண் கணவர் வெளிநாட்டில் இருக்கும் போது அவருக்கு துரோகம் செய்து, வேறு நபருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார் எனக் கருதியது.
இதனால் குறித்த பெண்ணுக்கு பள்ளிவாயல் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ரூபா 25 ஆயிரம் ரொக்கம் தண்டப்பணமாக அறிவிடுவது எனவும் வெள்ளிக் கிழமை கிராம மக்கள் முன்னிலையில் பிரம்படி வழங்குவது எனவும் தீர்ப்பளித்துள்ளது.