கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பொலிஸார், இராணுவம் வேடிக்கைபார்க்க அல்லாவின் இல்லம் உடைக்கப்பட்டது.


கடந்த 1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் இன்று நண்பாகல் பௌத்த  தேரர்களினால் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் புனித ஜூம்ஆத்தொழுகைக்காக முஸ்லிம்கள் ஒன்றுசேர்ந்திருந்த நேரத்தில் பெருமளிவலான பௌத்த தேரர்களும் அவர்களுக்கு  ஆதரவான பெரும்பான்மையினத்தவர்களும் பள்ளியினுள் கூடியிருந்தவர்களை  அப்புறப்படுத்திவிட்டு பள்ளிவாயிலை இடித்து நொறுக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்’தினராலும் பொலிசாராலும் குறித்த கும்பலைக்கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளிவாயில் 2002ம் ஆண்டு முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககது.
புனித பிரதேசத்திற்குள் இப்பள்ளிவாயில் இருப்பதாக கூறியே தேரர்கள் இப்பள்ளிவாயிலை உடைத்ததாக தெரிவிக்கப்பாடுகின்றது.
பொலிஸார், இராணுவம் வேடிக்கைபார்க்க அல்லாவின் இல்லம் உடைக்கப்பட்டது. பள்ளிவாயல் உடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக சிங்கள இணையம் பிரசுரித்த படங்களை இங்கே பிரசுரிக்கின்றோம்.








0 comments:

Post a Comment