கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பொன்சேகாவுக்கு இன்று பதவியுயர்வு

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ஃபீல்ட் மார்ஷல் தரத்துக்கு இன்று 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பதவி உயர்த்தப்படவுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் மற்றும் முப்படை பிரதானிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜெனரல் சரத் பொன்சேகா, ஃபீல்ட் மார்ஷல் தரத்துக்கு பதவியுயர்த்தப்படவுள்ளார்.
உலகில் இராணுவ அதிகாரி ஒருவரின் மிக உயர்ந்த பதவியாக ஃபீல்ட் மார்ஷல் காணப்படுகின்றது.

இந்தியா, பாகிஸ்தான் உட்பட சில் நாடுகளில் மாத்திரமே இந்த பதவி காணப்படுவதுடன் இந்த பதவிக்கு தெரிவாகும் முதலாவது இலங்கையர் சரத்பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment