கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சதாம் உசைனின் இறுதி நிமிடங்கள் – அமெரிக்க படை வீரர் வெளியிட்ட கடிதம்! சிக்கியது உண்மை.

மாவீரன் சதாம் உசைனின் நெகிழ வைக்கும் இறுதி நிமிடங்கள்
அமெரிக்க படைவீரர் வெளியிட்ட சிலிர்க்க வைக்கும் உண்மை
download
இராக் அதிபராக இருந்த சதாம் உசைனை அமெரிக்கா அனியாயமாக கொலை செய்த கொடுமையை உலகறியும் சதாமின் இறுதி நிமிடங்கள் பற்றி சில அழகான தகவல்களைஅந்த நேரத்தில்அவரின் அருகில் இருந்த மிக சிலர்களில் ஒருவரான அமெரிக்க படைவீரர் ஒருவர் வெளியிட்டுள்ளார் அநடத படை வீரர் தனது அந்த கால கட்டத்தில் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது
ஒரு முஸ்லிமின் வாழ்வு எப்படி இருந்தாலும் அவனது இறுதி கட்டம் சிறப்பானதாகவும் இறைவனுக்கு விருப்பமானதாகவும் இருப்பது முக்கியம்
அந்த அடிப்படையில் சதாமின் இறுதி நிமிடங்கள் ஒரு உண்மை முஸ்லிமின் நிலைகளை எதிரொலிப்பதாக அமைந்திருப்பதை அறியமுடிகிறது
சதாம் உசைன் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற படுவதற்கு முந்தைய இரவின் நடு பகுதியில் சதாம் அவரை சுற்றியிருந்த காவலர்களில் ஒருவரை அழைத்தார் தான் கைது செய்ய படும் போது அணிந்திருந்த குறிப்பிட்ட கனத்த அங்கியை தருமாறு வேண்டினார்
காவலர் காரணம் கேட்கவே
அதிகாலையில் எனது உயிரை பறிப்பதற்கான முயர்ச்சிகளில் நீங்கள் இருக்கின்றீர்கள் நான் மரணத்திற்காக அஞ்சுவுமு் இல்லை நடுங்கவும் இல்லை ஆனால் இராக்கின் அதிகாலை நேரம் நடுங்க வைக்கும் குளிரை கொண்டதாக இருக்கிறது
என்னை நீங்கள் தூக்கு மேடைக்கு அழைத்த செல்லும் போது குளிரினால் எனது உடல் நடுங்கலாம் அதை பார்ப்பவர்கள் சதாம் மரணத்திற்கு அஞ்சகுடியவன் என்று எண்ண கூடாது என்பதற்காகவே நான் மரண மேடையை நோக்கி நடந்து வரும் போது குளிரினால் கூட எனது உடல நடுங்க கூடாது என்று நான் எண்ணுவதால் குளிரில் இருந்து காக்கும் அந்த கனத்த ஆடையை அணிய விரும்புகிறேன் என கூறினார்
அவர் தூக்கு மேடையில் ஏற்ற படுவதற்கு முதல் நாள் இரவின் நடுபகுதியில் தனக்கு விருப்பமான கோழி இறச்சி மற்றும் மற்றும் சாதத்தை கேட்டு பெற்று மனமகிழ்வோடு சாப்பிட்டு விட்டு அவரின் குழந்தை பருவத்தில் இருந்தே வென்னீரோடு தேன் கலந்து குடிக்கும் வழமைக்கு ஏர்ப்ப வென்னீரில் தேன் கலந்து பல கோப்பைகளை அவர் அருந்தினார்
பிறகு ஒளு செய்துவிட்டு தனது கட்டிலில் அமர்ந்து திரு குர்ஆனை ஓதி கொண்டிருந்தார்அவர் தூக்கு மேடையில் ஏற்ற படுவதற்காக அவர் அழைத்து செல்ல பட்ட போது அவர் எந்த சலனமும் இல்ல அஞ்சா நெஞ்சனை போன்று மலர்ந்த முகத்தோடு மரண மேடையை நடை போட்டார்.
இறுதியில் ஏகத்துவ முழக்கமான ஷஹாதத்தை மொழிந்த நிலையிலேயே மலர்ந்த முகத்துடன் அவரின் உயிர் பிரிந்தது
இவ்வாறு அமெரிக்க இராணுவ விரர் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்

0 comments:

Post a Comment