கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

யோஷித்த ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் கடற்படை தலைமையகத்துக்கு நடந்த விசாரணைகளை அடுத்து, கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திஹாரியில் சகோதரர் அக்ரம் அவரக்ளின் ஜனாஸா அறிவிப்பு

நேற்று திஹாரியில் ஒரு கட்டிடத்தில் வயரிங் வேலைசெய்து கொண்டிருக்கும்போது கீழே விழுந்துபடுகாயம் அடைந்தநிலையில் "ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்று பின்னேரம் வபாத் ஆனார் .
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜியூன் .
(அல்கோபார் தஹ்வாசென்றர் சகோதரர் பவுஸானின் பெரியப்பாவின் மகன். )

"ஷீயாக்கள்" பற்றி அஷ்ஷெய்க் ரவூப் ஸய்ன், அஷ்ஷெய்க் M.P.M. இத்ரீஸ் ஆகியோர் சொல்ல வருவதுதான் என்ன?

நேற்றிரவு (23-01-2016) 9.30pm மணி முதல் "வசந்தம் டிவி"யில் "பள்ளிக்கூடம்" கலந்துரையாடல் நிகழ்ச்சியைக் காணக் கிடைத்தது. இதில், அஷ்ஷெய்க். S.H.M.பளீல், அஷ்ஷெய்க் ரவூப்ஸய்ன், அஷ்ஷெய்க். M.P.M.இத்ரீஸ் ஆகியோர் கலந்து கொண்டு "ஐஎஸ்ஐஎஸ்" ஐப் பற்றி கலந்துரையாடினர். அதில், நிகழ்ச்சியை நெறிப்படுத்தியவர் "ஷீயா + ஸுன்னி" பிரச்சினை பற்றி கேட்ட கேள்விக்கு அஷ்ஷெய்க் ரவூப் ஸய்ன், அஷ்ஷெய்க் M.P.M.இத்ரீஸ் ஆகியோர் மிகவும் அடர்த்தி குறைந்த அமைப்பினராகக் அவர்களைக் காண்பிக்க முற்பட்டனர்.
இன்று நாட்டில் ஷீயாக்கள் பற்றி ஏற்பட்டுவரும் விழிப்புணர்வை அழிப்பதற்கு முயல்வது போன்ற முயற்சியில் அறிவிப்பாளரும் ஈடுபடுவதுபோல் தெரிந்தது. அதற்கு உதவியாக அஷ்ஷெய்க் ரவூப் ஸய்ன், அஷ்ஷெய்க் M.P.M. இத்ரீஸ் ஆகியோர் தமது கருத்துக்களை சமூகமயப்படுத்திச் சென்றதைக் காணக் கூடியதாக இருந்தது. "வஹாபிஸத்தைப்" பற்றி மிகக் காரமாக விமர்சிக்கும் அஷ்ஷேய்க். ரவூப் ஸய்ன், அஹ்லுஸ் ஸுன்னா அகீதாவிலே முரண்பட்ட ஷீயாக்கள் பற்றி இவ்வாறான மிகவுமே இலகு நிலையில் கருத்துச் சொல்வதன் பின்னணி தான் என்ன?
எனவே, இவர்கள் யார்? எவர்களுக்காக செயல்படுகின்றார்கள்? என்ற கேள்வி எழுகின்றது.

குறிப்பாக ஈராக்கில் "ஷீயாக்களும் ஸுன்னிகளும்" திருமணத்தில் இணைந்து ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் இன்று இது பிரச்சினையாகி மக்கள் மத்தியில் அந்த அன்னியோன்னியம் மறைந்து விட்டதாகவும் கூறும் இவர்கள். அந்தந்த நாட்டுக்கு ஏற்றாற் போல செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இப்படியான கருத்துக்களை விதைப்பதன் நோக்கம் என்ன? இலங்கையில் ஷீயாக்கள் அன்னியோன்னியமாக வாழ்கிறார்களா? அல்லது அவர்கள் செய்கின்ற ஊடுருவல்களை சமூகத்துக்கு எடுத்துக் காட்டும் கடமை இவர்களுக்கு இல்லையா? அல்லது ஷீயாக்களையும் ஒரு தனிப்பட்ட இயக்கம் போல் காட்டி, மக்களால் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களுக்கு 'இது ஒரு சாதாரண இயக்கம், அகீதாவில் பிரச்சினையில்லை என்று சொல்லி' ஷீயா கருத்துக்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கின்றார்களா? இந்த அஷ்ஷெய்க் ரவூப் ஸய்ன், அஷ்ஷேய்க். M.P.M.இத்ரீஸ் ஆகியோர். இவை விடை தேட வேண்டிய முக்கிய கேள்விகளாகும். இவர்களில் யாரேனும் விளக்கம் தருவார்களா?
ஆக்கம்.
Sali Firdows

வசீம் தாஜூதீனின் கொலையில் நாமல் உள்ளிட்ட 6 சந்தேக நபர்கள், வெளிநாடு செல்ல தடை

 முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், சந்தேகநபர்களில் ஒருவராக கருதப்படும் நிலை உருவாகியுள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


 அந்த சந்தேகநபர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சவே என்று விசாரணையாளர்களை கோடிட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

 குறித்த கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் கடந்த வாரங்களில் ரக்பி வீரரை கொலை செய்ய உத்தரவிட்டது யார் என்பதை ஆராய்ந்து வந்தனர்.

 இதன்போது இராணுவ கெப்டன் திஸ்ஸ, நாமல் ராஜபக்ச உட்பட்ட 6 பேர் இந்த கொலையில் தொடர்பு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

 இந்தநிலையில் குறித்த 6 பேரும் வெளிநாடு செல்ல முடியாதபடி குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுள்ளனர்.

 கெப்டன் திஸ்ஸ, முன்னாள் முதல் பெண்மனி ஷிராந்தி ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, லெப்டினன்ட் யோசித்த ராஜபக்ச ஆகியோரின் மெய்பாதுகாவலராக செயற்பட்டு வந்துள்ளார்.

 இதேவேளை சந்தேகநபர்கள் 6 பேரும் இந்த மாத இறுதிக்குள் கைது செய்யப்படுவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 இதற்கிடையில் விசாரணைகள் தடையின்றி மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் நாமல் ராஜபக்சவை கைது செய்யும் போது தமக்கு அழுத்தங்கள் ஏற்படலாம் என்று விசாரணையாளர் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

JAFFNAMUSLIM

பெண்ணுக்கு உதவிய சோங்கா : பாராட்டும் இணைய உலகம்

பந்து எடுத்து கொடுக்கும் இளம்பெண்ணுக்கு செய்த உதவியால் சமூக வலைதளங்களில் புகழ்ந்து பேசப்படும் வீரராக டென்னிஸ் வீரர்  ஜோ-வில்பிரட் சோங்கா  காணப்படுகின்றார்.
டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 9ஆம் இடத்தில் உள்ள பிரெஞ்சு வீரர் ஜோ-வில்பிரட் சோங்காவுக்கும் அவுஸ்திரேலியா வீரர் ஒமர் ஜெசிகாவுக்கும் இடையேயான போட்டி அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்தது.
இந்த போட்டியின் போது, ‘போல் கேர்ள்’ என்று அழைக்கப்படும் வீரர்களுக்கு பந்தை எடுத்துக் கொடுக்கும் பணியில் உள்ள இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொண்ட ஜோ, அவருக்கு ஆறுதல் கூறி மைதானத்திற்கு வெளியே கொண்டு சென்று பணியாளர்களிடம் ஒப்படைத்துள்ளார். 
பரபரப்பான போட்டியின் போதும், சக மனிதருக்கு உதவிய ஜோவை பாராட்டும் வகையில் அரங்கில் இருந்த ரசிகர்கள் கை தட்டி ஆர்ப்பரித்தனர். 

சுய சிதைவை நோக்கி மனித இனம்: பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை

மனித இனம் தானே உருவாக்கிய தொடர்ச்சியான ஆபத்துக்களால் அழிவை சந்திக்கலாம் என்று பேராசிரியர் ஸ்டீபன் ஹாகிங் எச்சரித்திருக்கிறார்.
பேராசிரியர் ஸ்டீபன் ஹாகிங்
அணு ஆயுதப்போர், புவி வெப்பமாதல் மற்றும் மரபணு மாற்றி அமைக்கப்பட்ட வைரஸ்கள் ஆகிய மூன்று காரணிகளை அவர் குறிப்பான ஆபத்துக்களாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் ஏற்படக்கூடிய எதிர்கால முன்னேற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் தவறாகப் போவதற்கான புதிய வழிகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான பிபிசியின் ரீத் உரை நிகழ்த்தும்போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
அண்டவெளியின் black holes பற்றிய விரிவான ஆய்வுகள் குறித்து அவர் உரை நிகழ்த்தினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
அண்டவெளியின் black holes குறித்து அவர் உரை நிகழ்த்தினார்
மனித இனம் எதிர்காலத்தில் வேறு உலகங்களில் சென்று குடியேற்றங்களை அமைப்பது சாத்தியமானால் அழிவில் இருந்து தப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
“குறிப்பிட்ட ஒரு ஆண்டில் உலகம் ஒரு பேரழிவில் சிக்கி அழிந்துவிடும் என்பதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவானதுதான் என்றாலும், காலம் செல்லச் செல்ல, ஆண்டுகள் கூடக்கூட அதற்கான சாத்தியம் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கும். அடுத்த ஆயிரம் ஆண்டுகள் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி நடப்பதற்கான சாத்தியம் ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகிவிடும்”, என்றார் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.
"அப்படி நடப்பதற்கு முன்னர் மனிதர்கள் அண்டவெளியின் மற்ற இடங்களுக்கு, கோள்களுக்கு அல்லது நட்சத்திரங்களுக்கு பரவி வாழப்பழகியிருக்க வேண்டும். அப்படி நடந்தால் நாம் தற்போது வாழும் இந்த உலகத்துக்கு அழிவு ஏற்பட்டால் மனித இனமே அழிந்துவிடும் என்கிற நிலைமை உருவாகாது", என்றார் அவர்.

“அதேசமயம், பூமிக்கு வெளியே அண்டவெளியில் தன்னிறைவு பெற்ற தனி உலகமாக மனிதர்கள் குடியேறி வாழ்வது என்பது குறைந்தது அடுத்த நூறு ஆண்டுகளுக்கு சாத்தியமில்லை. அது நம்மால் முடியும் என்று தோன்றவில்லை. எனவே அடுத்த நூறாண்டு காலகட்டத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்”, என்று அவர் யோசனை தெரிவித்தார்.
பூமிக்கு வெளியே மனித குடியேற்றம் நடப்பதற்கு குறைந்தது நூறு ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார் ஸ்டீபன் ஹாகிங்
அறிவியல்துறையின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் ஸ்டீபன் ஹாகிங் அறிவியல் துறையின் முன்னேற்றங்களே மனித இனத்துக்கான புதிய ஆபத்துக்களை உருவாக்கக்கூடும் என்று கூறுவது சுயமுரணாக சிலரால் பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பே கூட Artificial intelligence (AI) என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் இயந்திர அறிவு மிகப்பெரிய அளவில் முன்னேற்றமடைந்து மனித இனத்தையே எதிர்காலத்தில் அழிக்கக்கூடும் என்றும் ஹாகிங் எச்சரித்திருந்தார்.
அதேசமயம் அதை எதிர்கொள்வதற்கான வழிகளும் கண்டுபிடிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
“அறிவியல் துறையில் நாம் முன்னேற்றங்களை நிறுத்தப் போவதில்லை. அறிவியலில் நாம் பின்னோக்கியும் செல்லப்போவதில்லை. எதிர்கால ஆபத்துக்களை இனம் கண்டு அதை கட்டுப்படுத்த வேண்டும். நான் ஒரு நம்பிக்கையாளன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். நம்மால் அதை செய்ய முடியும் என்றும் நம்புகிறேன்”, என்றார் ஸ்டீபன் ஹாகிங்.
அண்ட வெளியின் அற்புதங்களைக் கண்டு தாம் தொடர்ந்தும் ஆச்சரியமடைவதாக கூறுகிறார் ஹாகிங்
இளம் விஞ்ஞானிகளுக்கு என்ன ஆலோசனைகள் சொல்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, நாம் வாழும் பேரண்டம் “பரந்துபட்டது, சிக்கலானது என்பதை உணரும் பேராச்சரிய மனோநிலையை” அவர்கள் தொடர்ந்து தம்முள் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார்.
"என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை சொல்வதானால், உயிரோடு இருப்பதும் கோட்பாட்டுரீதியான இயற்பியல் துறையில் ஆய்வுகள் செய்வதும் என் வாழ்வின் உன்னதமான காலம் என்றே சொல்வேன். முன்பு யாருமே கண்டிராத ஒரு விஷயத்தை நாம் முதல்முறையாகக் கண்டுபிடிக்கும் அந்த அற்புதத் தருணத்தைப் போல வேறொரு தருணத்தை ஒப்பிட்டு சொல்லவே முடியாது. அப்படியானதொரு அற்புதத் தருணம் அது”, என்றார் பேராசிரியர் ஹாகிங்.
அதேசமயம், எதிர்கால ஆய்வாளர்கள் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றங்கள் உலகை எப்படி மாற்றியமைக்கின்றன என்பதை நன்கு உணர்ந்திருப்பது அவசியம் என்றும், பொதுமக்கள் அதை புரிந்துகொள்ள அவர்கள் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-BBC 

அரசியல் சாக்கடைகளுக்கு மத்தியில் ஒரு முன்மாதிரி மிக்க முஸ்லிம் - ஏ.ஆர்.ஏ ஹபீஸ் எம்.பி இராஜினாமா

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.ஏ ஹபீஸ், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தெரிவித்தார். - 

பெயர் சொல்லும் எல்லா முஸ்லிம் கட்சிகளிலும் கடந்தகாலங்களில்  கொடுத்த வாக்கை மீறுதல், நம்பிக்கைத்துரோகம், ....  போன்றன மறுமை பற்றியோ அல்லது அல்லாஹ் பற்றியோ எந்தவித பயமும் இன்றி நடைபெற்றதை நாம் கண்கூடாக கண்டுவந்தோம். அந்த சாக்கடையில் இப்படிப் பட்ட மனிதா்களைக் கானுவது அரிதே!

ஆட்சிமாற்றத்தில் முக்கிய பங்காற்றிய அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமானார்

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமாகியுள்ளார்.

கடுமையான சுகவீனமுற்றிருந்த அமைச்சர் அண்மையில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழக்கும் போது அவருக்கு 69 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

அல் குர்ஆன் கூறும் 4000 வருடங்களுக்குமுன் தமூத் கூட்டத்தினர் வாழ்ந்த இடம். படங்கள் இணைப்பு.!

மதீனாவில் இருந்து தபூக் செல்லும் வழியில் 500 கிலோ மீட்டர் தூரத்தில் “மதாயின் ஸாலிஹ்” என்ற கிராமம் உள்ளது. இங்கு 4000 வருடங்களுக்கு முன் (கி.மு 2ஆம் நூற்றாண்டு) பலசாலிகளான தமூத் கூட்டத்தினர் வாழ்ந்ததாகவும் அவர்கள் மலைகளை குடைந்து வீடு கட்டியதாகவும் அல் குர்ஆன் கூறுகிறது.

அதன் சுருக்கம் வருமாறு, அந்த மக்கள் மிகவும் பலசாலிகள், அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்து வாழ்ந்தனர். அதனால் கர்வம் படைத்தவர்களாகவும் இருந்தனர். அவர்களிடம் ஸாலிஹ் நபியை அல்லாஹ் தூதுவராக அனுப்பினான். அவரை நபியாக ஏற்க மறுத்து அவரின் போதனைகளையும் அவர்கள் நிரகாரித்தனர்.


மேலும் நபி என்பதற்கு ஆதாரமாக ஒரு அத்தாட்சியை கொண்டு வருமாறு அவர்கள் கேட்டதற்கு இணங்க அல்லாஹ் மலையைப் பிளந்து ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பினான். அல்லாஹ்வின் ஏற்பாட்டில் அந்த மலை அடிவாரத்தில் ஒரு கிணறும் உருவானது. அந்தக் கிணற்றில் இருந்து ஒரு நாளைக்கு ஒட்டகமும் ஒரு நாளைக்கு மக்களும் மாறி மாறி நீர் பெற வேண்டும் என ஸாலிஹ் நபி நிபந்தனை விதித்தனர்.


எனினும் அந்த மக்கள் அந்த அத்தாட்சியை புறக்கணித்து ஒட்டகத்தின் கால் நரம்பை துண்டித்து அதனை கொன்று விட்டனர். எனவே திருந்தாத அந்த மக்களை அல்லாஹ் அளித்து விட்டான்.

(பார்க்க : அல் குர்ஆன் 26:140-160, 11:61-65, 15:80-83)


ஒரு மலை அடிவாரத்தில் மட்டும் சுற்றிவர சுமார் 20 வீடுகள் அமைக்கப் பட்டுள்ளன. அதே போல ஆங்காங்கே தொலைவில் உள்ள பல மலைகளிலும் ஏராளமான வீடுகள் உள்ளன. அவற்றின் முகப்புத் தோற்றம் கவர்ச்சியாகவும் மிக நேர்த்தியாகவும் நேற்றுத்தான் கட்டி முடிக்கப் பட்டது போலவும் உள்ளது.


உள்ளே படுக்கை அறைகள், அலமாரிகள், மொட்டை மாடிகள், எனப் பல வசதிகள் உள்ளன. பாலைவன வெய்யில் வெப்பத்தில் இருந்து உள்ளே சென்றால் இதமான குளிர்மை கிடைக்கின்றது. இது தவிர அல் குர்ஆன் குறிப்பிடுகின்ற ஆழமான கிணற்றையும் பார்வை இடலாம்.


உயர்ந்த மலை அடி வாரத்தில் அப்படி ஒரு ஆழமான பெரிய கிணற்றை எந்தவொரு மனிதனும் தோண்டுவது என்பது சாத்தியமே இல்லாத விடயமாகும். ஈமானை அதிகரித்துக் கொள்ள இது நல்லதொரு அத்தாட்சி.


குறிப்பு : சனி தொடக்கம் வியாழன் வரை பார்வைக்காக திறந்து வைக்கப் பட்டுள்ளது.






















http://www.vkalathur.in/

கபூரியா அரபுக் கல்லூரியின் மற்றுமொரு பெருந்தன்மை.

இலங்கையில் அண்மைக் காலமாக ஷீயாக்களுக்கு எதிரான கோசங்கள் அதிகரித்திருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றன. இதற்க்கு முக்கிய காரணம், திரைமறைவில் இருந்து கொண்டு செயற்பட்டு வந்த ஷீயாக்கள், அண்மைக் காலமாக மட்டக்கிளப்பில் கல்குடா பிரதேசத்தில் அமைந்திருக்கும் மன்பவுல் ஹுதா என்ற அரபு மதரசாவில் பகிரங்கமாக ஷீயாக்களை உருவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இதற்க்கு ஊர் மக்கள்,,மஹல்லா வாசிகள், உலமா சபை கடும் எதிர்ப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இங்கே கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் , இது ஷீயா கருத்துக்களை போதிக்கும் மதரசா என அடையாளம் காணப்பட்டதும், தற்போது தமது பிள்ளைகளை அந்த மத்ரசாவில் தொடர்ந்து கற்பதை விட்டும் இடை நிறுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த பெற்றோரிகளின் நியாயமான ஆதங்கங்கள் :
• அந்த மதரசாவில் ஒரு வருடம் , இரு வருடம் , மூன்று வருடங்கள் அல்லது இதற்க்கு மேல் பல வருடங்கள் கல்விகற்று, இடை நிறுத்தப் பட்டிருக்கும் இந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கின்றது.
• இவர்கள் தமது கல்வியை எவ்வாறு தொடர்ந்து மேற்கொள்வது.
• இவர்களுக்கு ஷீயா முத்திரை குத்தப்பட்டுள்ளது அதை எவ்வாறு நீக்குவது
இது போன்ற மன உளைச்சல்களுக்கு அந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் தள்ளப் பட்டு இருக்கின்றார்கள்.
இவர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி
மகரகமையில் அமைந்திருக்கும் கபூரியா அரபுக் கல்லூரி இவர்களுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளது. இந்த மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு, இடையில் தமது கல்வியை நிறுத்திக் கொண்ட அந்த மாணவ செல்வங்கள் கல்வியை தொடர்வதற்கான வசதி வாய்ப்பினை செய்து கொடுப்பதற்கு அவர்கள் முன் வந்துள்ளார்கள்.
இதில் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
0777273177, 0772370016, 0772907803
இதனை share செய்வது அந்த பிள்ளைகளின் கல்விக்கு எங்களால் ஆன உதவியாகும்.
செய்தியை மஹரகம கபூரியா அரபுக் கல்லூரியின் ஆசிரியரிடம் உறுதிப்படுத்திய பின்னரே இங்கு பிரசுரிக்கிறேன்.

முஸ்லிம் தம்பதிக்கு நேற்று, பிறந்த 5 குழந்தைகள் - பெயர்கள் என்ன தெரியுமா..?

நேற்று (15.01.2016) பஜ்ர் தொழகை நேரத்தில், ஓரு முஸ்லிம்  சகோதாரிக்கு 5 ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளது!

 ஐந்து குழந்தைகளின் பெயர்கள்!

 1,முஹம்மது ரசூல்
 2,அபூபக்கர் சித்திக்
 3,உமர் கத்தாப்
 4,உஸ்மான்
 5,அலி

 என பெயரிட்டு உள்ளார்கள் வாருங்கள் வாழ்த்துவேம் துஆ செய்வேம்...!

 அல்ஹம்துலில்லாஹ்,,,,,!!

jaffnamuslim

சமூகப் பிரச்சினை பற்றிய இரு நண்பிகளுக்கிடையேயான ஒரு கருத்துப் பறிமாற்றம்.



அஸ்ஸலாமு அலைக்கும் மஹ்தியா, எப்படி சுகமாக இருக்கியா. வ அலைக்கும் முஸ்ஸலாம் நபீஸா, நல்ல சுகம், என்னடி விசேஷம். மபாஸ் எங்கடி. பெருசா ஒன்றும் இல்லடி வழமையப் போலதான் மச்சான் கடைக்குப் போயிட்டாங்க. மனசுக்கு கொஞ்சம் கஸ்டமா இருந்திச்சு அதான் உனக்கிட்ட பேசினா ஆறுதலாக இருக்குமே என்று கோல் எடுத்தேன்.



சொல்லுடி என்ன பிரச்சினை.
இல்லடி நம்மட கண்ணுக்கு முன்னால நம்மள விட சின்னச் சின்னப் பிள்ளைகள் எல்லாம் ஒன்றிரன்டு பிள்ளைகளோட புரிசன இழந்துட்டு தன்னந் தனியா வாழ வழி தெரியாமல் தவிச்சுட்டு இருக்கிறதப் பார்த்தா வேதனையா இருக்குடி. நேற்றும் வலீமா ஒன்றுக்கு ஊருக்கும் போயிருந்தேன் அங்கயும் ஒரு பிள்ளைய சந்திக்க நேரிட்டது. ஒரு மாதம்தான் வாழ்க்கையாம் பிரிஞ்சுட்டு பாவம்டி நினைச்சா கவலையா இருக்கு.
அதுக்கு நாம என்னடி செய்யுற அல்லாஹ் அவங்கட தலையில அப்படித்தான் எழுதி வச்சிருக்கான். இல்லடி அப்படி முழுசா சொல்லிட்டு நாம தப்பிக்க முடியுமா. அல்லாஹ் நமக்கிட்ட கேள்வி கேட்கமாட்டானா.
கிறுக்காடி உனக்கு அல்லாஹ் நமக்கிட்ட என்ன கேள்வி கேட்குற சும்மா உளரிட்டு இருக்காம இருக்கிற வேலயப் பாரு
இல்ல மஹ்தியா இந்த மறுமணம் சம்பந்தமாத்தான் எனக்கு ஒரே கொளப்பமா இருக்கு நாம நல்லாத்தான் வாழுரோம் புரிசன் பிள்ளை குட்டி என்று அல்லாஹ் அனுமதிச்சதும் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியதும்தானே இந்த மறுமணம் சஹாபிப் பெண்கள் எல்லாம் எப்படி கணவனைப் பகிர்ந்து விட்டுக் கொடுத்து என்னமா வாழ்ந்திருக்காங்க. ஏன் நம்மளுக்கு அப்படி பகிர்ந்துகொள்ள முடியுதில்ல. எவ்வளவுதான் அல்லாஹ் ரசு+ல் என்று வாழ்ந்தாலும் இந்த ஒரு விசயத்துல நம்மளால முழுசா ஏற்றுக் கொள்ள முடியல்லியே.
அது இப்படித்தானடி சஹாபிப் பெண்கள் தூய்மையா இஸ்லாத்தையும் நபியவங்களையும் ஏற்றுக்கொண்டவங்க. அவங்க மார்க்கத் தூய்மை நம்மளுக்கு வருமா? நாம எவளெவலுக்கு பொறந்தோம் என்று யாருக்குடி தெரியும் இவளுகள் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று புரிசன் செத்தா உடன்கட்டை ஏறினவளுகள் அவளுகள்ட ரெத்தம் கொஞ்சமாவது நம்மட ஒடம்புல ஓடாமலா இருக்கும்.
சரி நம்மளால முடிஞ்சளவுக்கு சின்னதா ஒரு பண உதவியாவது செய்வோம் என்று நினைத்தா அதுவும் போதாது என்று டாக்டர் ஷாகிர் நாயக் அடிச்சி சொல்லுரார்டி. பெண்ணுரிமை சம்பந்தமான அவருடைய சீ.டி. பார்த்தாயா நீங்க மாசம் முப்பது ஆயிரம் கொடுத்தாலும் அதையும் தாண்டி அவர்களது உடலியல் உழவியல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது இதற்று தீர்வு மறுமணம் ஒன்றேதான் என்று.
உண்மைதானடி அவர் சொல்றது நமக்குத் தெரியாதா? நம்மட மச்சான் ஒரு நாளுக்கு கொழும்புக்கு போனா அன்றைக்கு முழுக்கவே தூக்கம் வரமாட்டேங்குது. இத ஆயுளுக்கும் அனுபவிக்கிற பெண்கள நினைத்தா பாவமாத்தான்டி இருக்குது. அதான் இப்பெல்லாம் இந்த பேஸ்புக்ல நிறைய நல்ல சமூக சேவையெல்லாம் நடக்குதே மெதுவா வாழப்பழத்துல ஊசிய ஏத்துரமாதிரி இந்த மெஸேஜ சொல்லுவோம் என்று ஒன்றிரண்டு ஸ்டேட்டர்ஸ் போட்டேன்டி.
யா ரப்பு என்ன சோதனை உடனே கொமென்ஸ்சுலயும், இன்பொக்ஸ்லயும் ஒவ்வொருத்தனா வந்து ஒவ்வொன்றா சொல்லி என்ன பின்னி எடுத்துட்டானுவள்டி. போதாதற்கு ஒருத்தன் தனியா ஸ்டேட்டர் வேற போட்டுட்டான்டி. மார்க்க விடயங்களில் இளைஞர்களுடன் மல்லுக்கட்டும் நபீஸா எம். மபாசுக்கு இரங்கல் ஒன்றே தெரிவிக்க முடியும் என்று செத்தவளுக்கு போட்டாப் போல் போட்டு என்ன சாடிச்சிட்டுனுவள்டி.
ஆனாலும் அதில் பல கருத்துக்களை என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒவ்வொருத்தனும் ஒவ்வொன்றா சொன்னானுவள். பொருளாதரப் பிரச்சினை, சமூக அந்தஸ்த்து, ஒரு பெண்ணை சஞ்சலப்படுத்தி இன்னொரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்கிறதா நீங்க விட்டுக்கொடுப்பீங்களா இப்படியாக பல்வேறு கருத்துக்கள் அவர்களுடைய நியாயங்களை கொஞ்சம் ஏற்றுக்கொள்ளத்தான் வேணும்.
இருந்தாலும் ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் தாடனடி முடிவெடுக்கணும் அல்லாஹ் ரசூல் என்று வந்துட்டா உம்மா வாப்பா என்று கொள்கைய விட்டுக் கொடுக்க முடியாதுதானே. நாளை மறுமை நாளில் உம்மா வாப்பாவெல்லாம் பதில் சொல்லவாங்களா? அவரவர் பகுத்தறிவைக் கொண்டுதானே விசாரிக்கப்படும் அங்கு எதையும் மறைக்க முடியாதே. உதடுகளுக்கு முத்திரையிட்டு உள்ளங்களைப் பேச வைப்பேன் என்றுதானே அல்லாஹ் சொல்ரான். அப்ப என்னடி சொல்லுவாங்க இவங்களெல்லாம். சரி அதையும் ஏற்றுக் கொள்வோம் ஏன்டி இவங்கல்லாம் ஒரு பொன்டாட்டிய வச்சிட்டு இன்னொரு கல்யாணம் முடிக்கிறதாலதான் இப்படியெல்லாம் பிரச்சினை வரும் ஆனா புதிசா திருமணம் முடிக்கிற ஆண்கள் இப்படியான பிள்ளைகளை முடிச்சா இந்தப் பிரச்சினையெல்லாம் வராதுதானடி. நபி (ஸல்) அவர்களும் நபித்துவம் கிடைக்கிறதற்கு முன்னமாகவே விதவையைத்தானடி முடிச்சாங்க. இவ்வளவும் ஏன் நம்மட அன்சார் நாநாவத் தெரியும்தானேடி நம்மளோட வேலை செஞ்சாரு அழகிருந்தும் அறிவிருந்தும் அரசாங்க உத்தியோகம் இருந்தும் ஒரு பிள்ளைக்குத் தாயான பெண்ணைத்தானே திருமணம் முடிச்சாரு இப்ப அவருக்கு ரெண்டு பிள்ளைகள் மொத்தம் மூணு பிள்ளைகள் அவரு சந்தோஷமாக வாழல்லியா. உனக்குத் தெரியுமா பொண்டாட்டி ஏதோ டிக்கிரி செய்யணுமாம் என்று இப்ப வேலய நோ-பே போட்டுட்டு இந்தியாவுக்கு போய் அவவ கொலீஜூக்கு அனுப்பிட்டு வீட்டுல பிள்ளைகளப் பார்த்துட்டு இருக்கிறார்டி.
அவர் நல்ல மனுசன் தெரியாதா உனக்கு அல்லாஹ்வுக்கு பயந்தவரு, ஐந்து வக்தும் நேரத்துக் நேரம் என்னமா தொழுவாரு ஒருத்தருக்கும் மனசு நோவுறமாதிரி பேசமாட்டாரு எல்லாருக்கும் எப்படியெல்லாம் உதவி செய்வாரு அவரப்போல எல்லாரும் வருவாங்களாடி. ம்ஹ்ம் என்ன செய்யுற யாருக்கிட்டயும் எதும் பேச முடியல்ல அதான் சும்மா உனக்கிட்ட சொன்னா கொஞ்சம் பாரம் குறையும் என்று பேசிட்டேன். நீயும் யாருக்கிட்டயும் எதுவும் சொல்லாத. அல்லாஹ்தான் எல்லாருடைய உள்ளங்களிலும் தூய்மையான ஈமானை தர வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
சரி மஹ்தியா சமைக்கணும் வைக்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வ அலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ். ஜதாகுமுல்லாஹ்:- அபூ ஸுமையா

இவனைப் பற்றிய விபரம் தேவை? - வெளிநாட்டு வேலைவாய்ப்பின் பேரில் பாரிய பணத்திருட்டு

கீழுள்ள புகைப்படத்தில்  இருக்கும் கடவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ரிஸ்வான் என்ற நபர் ஒரு மோசடிக்காரன். வெளிநாட்டில் வேலைவாய்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளான். இவனின் மோசடிக்கு கஹடோவிடாவைச் சேர்ந்த  நான்கு நபர்கள் சுமார் 120000 பணத்தை  இழந்துள்ளனர். இது தவிர்ந்த மருத்துவப் பயிற்சிக்கான ஆவணங்களை தயாரிக்க வென தனக்கென 5000 வீதம் 25000 ஐ அறவிட்டுள்ளான்.. 

பணப் பரிமாற்றங்களுக்காக மற்றுமொருவருடைய வங்கிக்கணக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த கணக்கின் உரிமையாளர் ரமீஸ் இவர் ரிஸ்வானுடைய சகாவாக இருக்கலாம். இவர்களுடைய முகவரி மாவரம் மண்டிய ரோட், கெஸல்வத்தை எனக் கானப்படுவதாகவும் அறியக்கிடைக்கிறது. 

இவர்களைப் பற்றிய தகவல்கள் யாராவது அறிந்திருந்தாள், பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு நீங்களும் உதவலாம். இவனின் ஏமாற்றில் வேறுயாரும் சிக்கிவிடாமல் இருக்கவே நாம் இதனை பிரசுரிக்கிறோம். 

இவனைப் பற்றிய மேலதிக விபரங்களை ....  
புகைப்படம்,  
வங்கி கணக்கு, 
தொலைபேசி இலக்கம் (பணப்பறிமாற்றத்தின் பின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது) போன்றவற்றை நாம் வெகுவிரைவில் பிரசுரிக்கவுள்ளோம். 

 இந்த தகவலை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் வெளிநாட்டு செல்ல எந்தனிக்கும் உறவுகள் யாராவது இவனைபோன்ற மோசடிக்காரனின் கையில் சிக்கிவிடாமல் பாதுகாக்கலாம். 

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற இஸ்லாமிய தினப்போட்டியில் அல்பத்ரியா மாணவி "அம்னா அஸ்மி" முதலாம் இடம்.

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற இஸ்லாமிய தினப்போட்டியில் ஆங்கில மொழிமூலக்கட்டுரைப்போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி "அம்னா அஸ்மி" முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
- கஹட்டோவிட்ட ரிஹ்மி -

சதாம் உசைனின் இறுதி நிமிடங்கள் – அமெரிக்க படை வீரர் வெளியிட்ட கடிதம்! சிக்கியது உண்மை.

மாவீரன் சதாம் உசைனின் நெகிழ வைக்கும் இறுதி நிமிடங்கள்
அமெரிக்க படைவீரர் வெளியிட்ட சிலிர்க்க வைக்கும் உண்மை
download
இராக் அதிபராக இருந்த சதாம் உசைனை அமெரிக்கா அனியாயமாக கொலை செய்த கொடுமையை உலகறியும் சதாமின் இறுதி நிமிடங்கள் பற்றி சில அழகான தகவல்களைஅந்த நேரத்தில்அவரின் அருகில் இருந்த மிக சிலர்களில் ஒருவரான அமெரிக்க படைவீரர் ஒருவர் வெளியிட்டுள்ளார் அநடத படை வீரர் தனது அந்த கால கட்டத்தில் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது
ஒரு முஸ்லிமின் வாழ்வு எப்படி இருந்தாலும் அவனது இறுதி கட்டம் சிறப்பானதாகவும் இறைவனுக்கு விருப்பமானதாகவும் இருப்பது முக்கியம்
அந்த அடிப்படையில் சதாமின் இறுதி நிமிடங்கள் ஒரு உண்மை முஸ்லிமின் நிலைகளை எதிரொலிப்பதாக அமைந்திருப்பதை அறியமுடிகிறது
சதாம் உசைன் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற படுவதற்கு முந்தைய இரவின் நடு பகுதியில் சதாம் அவரை சுற்றியிருந்த காவலர்களில் ஒருவரை அழைத்தார் தான் கைது செய்ய படும் போது அணிந்திருந்த குறிப்பிட்ட கனத்த அங்கியை தருமாறு வேண்டினார்
காவலர் காரணம் கேட்கவே
அதிகாலையில் எனது உயிரை பறிப்பதற்கான முயர்ச்சிகளில் நீங்கள் இருக்கின்றீர்கள் நான் மரணத்திற்காக அஞ்சுவுமு் இல்லை நடுங்கவும் இல்லை ஆனால் இராக்கின் அதிகாலை நேரம் நடுங்க வைக்கும் குளிரை கொண்டதாக இருக்கிறது
என்னை நீங்கள் தூக்கு மேடைக்கு அழைத்த செல்லும் போது குளிரினால் எனது உடல் நடுங்கலாம் அதை பார்ப்பவர்கள் சதாம் மரணத்திற்கு அஞ்சகுடியவன் என்று எண்ண கூடாது என்பதற்காகவே நான் மரண மேடையை நோக்கி நடந்து வரும் போது குளிரினால் கூட எனது உடல நடுங்க கூடாது என்று நான் எண்ணுவதால் குளிரில் இருந்து காக்கும் அந்த கனத்த ஆடையை அணிய விரும்புகிறேன் என கூறினார்
அவர் தூக்கு மேடையில் ஏற்ற படுவதற்கு முதல் நாள் இரவின் நடுபகுதியில் தனக்கு விருப்பமான கோழி இறச்சி மற்றும் மற்றும் சாதத்தை கேட்டு பெற்று மனமகிழ்வோடு சாப்பிட்டு விட்டு அவரின் குழந்தை பருவத்தில் இருந்தே வென்னீரோடு தேன் கலந்து குடிக்கும் வழமைக்கு ஏர்ப்ப வென்னீரில் தேன் கலந்து பல கோப்பைகளை அவர் அருந்தினார்
பிறகு ஒளு செய்துவிட்டு தனது கட்டிலில் அமர்ந்து திரு குர்ஆனை ஓதி கொண்டிருந்தார்அவர் தூக்கு மேடையில் ஏற்ற படுவதற்காக அவர் அழைத்து செல்ல பட்ட போது அவர் எந்த சலனமும் இல்ல அஞ்சா நெஞ்சனை போன்று மலர்ந்த முகத்தோடு மரண மேடையை நடை போட்டார்.
இறுதியில் ஏகத்துவ முழக்கமான ஷஹாதத்தை மொழிந்த நிலையிலேயே மலர்ந்த முகத்துடன் அவரின் உயிர் பிரிந்தது
இவ்வாறு அமெரிக்க இராணுவ விரர் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்