கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பிரபல நடிகை மோனிகா இஸ்லாத்தை தழுவியுள்ளார். (வீடியோ)

'அழகி', 'பகவதி', 'சண்டக்கோழி', 'சிலந்தி', 'முத்துக்கு முத்தாக' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மோனிகா.
 
இவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். தன் பெயரை ரஹிமா என மாற்றிக் கொண்டார்.
 
இனி, சினிமாவில் நடிப்பதில்லை என்றும் மோனிகா முடிவு செய்திருக்கிறாராம்.
 


இஸ்லாம் மதம் அல்ல அது ஒரு அழகிய மார்க்கம்.
என் அருமை சகோதரி மோனிகா என்கிற ரகிமா.
உங்களை வரவேற்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி
அடைகிறேன்....!
...
நிச்சியமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு
நேர்வழி காட்டுகிறான்.......!
உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்.
உங்களுக்கு இந்த உடை எவ்வளவு அழகாக
கண்ணியமாக இருக்கிறது பார்த்தீர்களா.............!
அருமை சகோதரி மோனிகா என்கிற ரகிமா......!
நீங்கள் இன்று எங்களை விட புனிதமானவர் நபியவர்கள்
சொன்னார்கள் யார் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்களே
அவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு பிறந்த
குழந்தை போன்று பாவமாற்று புனிதமாகிறார் என்று.
இன்று நீங்கள் எங்களை விட புனிதமடைந்து விட்டீர்கள்.
அல்ஹம்துலில்லாஹ்............!

முகநுால்.

முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு எப்போதும் விசுவாசமாக நடந்து கொண்டார்கள் - சோமவங்ச அமரசிங்க

நாட்டில் வாழும் எல்லா சமூகத்தினருக்கும் அவர் அவர் சமயத்தைப் பின்பற்றவும் சமயக் கிரியைகளில் சுதந்திரமாக ஈடுபடவும் உரிமையுண்டு. அதனை யாரும் தடுக்கவோ அல்லது தடை விதிக்கவோ முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த நாடு பல்லினமக்கள் வாழும் ஒரு நாடாகும். ஆகையினால் ஒவ்வொரு சமயத்தவரும் தமது சமயங்களை சுதந்திரமாக பின்பற்ற எவ்விதத் தடைகளையும் இடையூறுகளையும் விதிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை.

முஸ்லிம்கள் இந்த நாட்டின் அபிவிருத்தியின் பங்காளிகள். அவர்கள் இந்த நாட்டுக்கு வியாபார நோக்கத்துக்கு வந்தவர்கள். அந்த நோக்கத்தை நிறைவேற்ற அவர்களுக்கு பூரண சுதந்திரமுண்டு. அதனைத் தடுக்கவோ, அதை மறைக்கவோ யாருக்கும் முடியாது. நாட்டின் அபிவிருத்திக்கு வர்த்தகம் மிக முக்கியமானது.

முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு எப்போதும் விசுவாசமாக நடந்து கொண்டார்கள். ஆகையினால் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும் அதனை முறியடிக்கவும் யாருக்கும் இடமளிக்க முடியாது.

எமது ஆட்சியில் நாம் அனைத்து சமயங்ளுக்கும் கௌரவமளிப்போம். சமய அனுட்டானங்களை மேற்கொள்ள பூரண சுதந்திரம் வழங்குவோம் என்றார்.
 
jaffnamuslim

இஸ்லாத்தை தழுவிய முன்னாள் பௌத்த குரு கடத்தப்பட்டார் - கண்டியில் சம்பவம்

இஸ்லாத்தை கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டு,  முஸ்லிமாக வாழந்துவந்த முன்னாள் பௌத்த குரு ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை கண்டியில் வைத்து அடையாளம் தெரியாத குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, முஸ்லிம் சகோதரியை திருமணம் செய்துள்ளதுடன், அதன் மூலம் 2 குழந்தைகளும் உள்ளன. 

கம்பளை நகர சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த இவருக்கு தொலைபேசி அழைப்பொன்று  கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய அவர் முச்சக்கர வண்டியில் கண்டிக்கு சென்றுள்ளார். அங்குவைத்தே அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதி இதுகுறித்து சம்பந்தப்பட்டவரின் மனைவிக்கு அறிவித்துள்ளார். இதுகுறித்து மனைவி உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 
jaffnamuslim

இந்து அமைப்பும் பொது பல சேனாவும் இணைத்து கொழும்பில்ஆர்பாட்டம் !

கிறிஸ்தவ, முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து இந்து, பௌத்த மதங்களையும் கலை,கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. எனவே, இன்றே
ஒன்றுப்படுவோம், மதமாற்றத்திற்கு எதிராக போராடுவோம் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார் .
 
hindu_protest
 
மதமாற்ற தடைச்சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைநிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம், அன்றாடம் தமிழ் பத்திரிகைகளை பார்க்கும்போது இந்துக்கள் குடும்பம் குடும்பமாக மதம் மாறுவதை காணக்கூடியதாகவுள்ளது. அதற்கான விளம்பரங்கள் நாளுக்கு நாள் பத்திரிகைகளில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இது எமக்கு மட்டுமல்ல, கத்தோலிக்க திருச்சபைக்கும் சம்பிரதாயமாக அமைதியாக வாழும் முஸ்லிம்களுக்கும் வரும் பிரச்சினையாக அமைந்துள்ளது என்றும் தேரர் தெரிவித்துள்ளார் .
இந்துக்களை மதமாற்றம் செய்வதற்கு எதிராக இந்து சம்மேளனம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கடந்த 24 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.இதில் ஜனாதிபதியின் இந்து மத ஆலோசகர் பாபுசர்மா, ஐயப்பதாச குருக்கள் , பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட பல குருமாரும் சுமார் 500க்கு மேற்பட்ட இந்து பக்தர்களும் கலந்துகொண்டனர்.
 
lankamuslim

ஈரானில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வர தொழிலதிபரான மஹஃபரிட் அமிர் கொஸ்ராவி, கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டின் வங்கிகளில் போலி ஆவணங்களை காட்டி சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு கடன் பெற்றார்.


அந்த தொகையைக் கொண்டு அரசுக்கு சொந்தமான இரும்பு ஆலை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை, இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை வாங்கி நிர்வகித்து வந்த அவரது ஊழல், நாளடைவில் வெட்டவெளிச்சமானது. 

இதனையடுத்து, இந்த ஊழல் தொடர்பாக வங்கி அதிகாரிகள், அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்பட 39 பேர் குற்றவாளிகள் என்பது நிரூபணமாகி தண்டனை விதிக்கப்பட்டது.
 
இதில், முக்கிய குற்றவாளியான மஹஃபரிட் அமிர் கொஸ்ராவி உள்பட 4 பேருக்கு மரண தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்ற 33 பேருக்கு தலா 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
 
ஈரான் உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனையை எதிர்த்து மஹஃபரிட் அமிர் கொஸ்ராவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், எவின் சிறைச்சாலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
jaffnamuslim

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசிய முகவர் தேசம் இந்தியாவா?

இந்திய தேர்தல்களுக்குப் பின்னர்,அமெரிக்கா "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பிற்கானபெரும் ஆதரவிற்கு அழுத்தம் அளிக்க உள்ளது
கடந்து சென்ற திங்களன்று முடிந்த இந்திய பொது தேர்தலின் கடைசி கட்ட வாக்கெடுப்புகள் முடிந்த உடனேயேஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும்,அமெரிக்க வெளியுறவுத் துறையும் இந்தியாவை உலகின் அதிக மக்கள்தொகை  கொண்ட "ஜனநாயகமாகபுகழ்ந்ததோடு
இந்தியாவின் புதிய அரசாங்கத்தோடு நெருக்கமாக வேலை செய்ய வாஷிங்டனின் விருப்பத்தையும் வலியுறுத்தி உள்ளனர்.





திட்டமிட்ட அந்த திங்கட்கிழமை அறிக்கைகள்இந்தியாவுடனான உறவுகளை"மீட்டமைக்கும்மற்றும் (சீனாவை தனிமைப்படுத்தசுற்றி வளைக்க,மற்றும்தேவைப்பட்டால் அதன் மீது தாக்குதல் நடத்துவதற்கான உந்துதல் கொண்டதானஅதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்போடுஅதை இன்னும் இறுக்கமாக கட்டி வைப்பதற்கான அமெரிக்க உந்துதலின் பாகமாகும்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின்படி அவரது வலதுசாரி பாரதீய ஜனதா கட்சி (பிஜேபிமற்றும் அதன் தேசிய ஜனநாயக கூட்டணியை புது டெல்லியின் அதிகாரத்திற்கு தலைமை ஏற்று செல்ல இருக்கின்ற நரேந்திர மோடியை எந்தவொரு அறிக்கையும் நேரடியாக குறிப்பிடவில்லைஇருந்த போதினும்மோடி இந்தியாவின் பிரதம மந்திரியானால்அவர் வாஷிங்டனால் வரவேற்கப்படுவார் என்பதை ஒரு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பின்னர் எடுத்துரைத்தார்.
2002 குஜராத் முஸ்லீம்-விரோத படுகொலையைத் தூண்டியதில் அவர் வகித்த பாத்திரத்திற்காக அமெரிக்கா 2005இல் மோடியின் விசாவை இரத்து செய்தது.அதற்கடுத்த எட்டு ஆண்டுகளில்அதன் இராஜாங்க அதிகாரிகள் குஜராத் முதல் மந்திரியைத் தவிர்த்து வந்தனர்ஆனால் 2014இன் தொடக்கத்தில்,இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் நான்சி பவெல் மோடியைச் சந்திக்க குஜராத்திற்கு பகிரங்கமான ஒரு விஜயம் மேற்கொண்டார்அது அமெரிக்கா அவருடன் வேலை செய்ய தயாராக இருப்பதை சமிக்ஞை காட்டியது.
அதற்கு பின்னர் நீண்ட காலம் ஆகவில்லைதொழில்ரீதியில் ஒரு இராஜாங்க அதிகாரியான பவெல்ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இந்த நகர்வு வாஷிங்டன் மோடி உடன் மட்டுமல்லமாறாக மிக பொதுவாக இந்தியா உடனேயே அதன் உறவுகளை "மீட்டமைக்கஅனுமதிப்பதாக பரவலாக இந்திய மற்றும் அமெரிக்க பத்திரிகைகளால் விளக்கம் அளிக்கப்பட்டன.
ஒபாமா நிர்வாகம் பாவெலுக்கு அடுத்ததாக அடுத்தவரின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லைஆனால் பெயர் அடிபடுபவர்களின் மத்தியில் அஷ்டோன் கார்டரின் (Ashton Carter) பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.தொழில்ரீதியில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரியான கார்டர் டிசம்பர்2013 வரையில் இரண்டு ஆண்டுகள் அமெரிக்க துணை பாதுகாப்பு செயலராக சேவை செய்தார்அவர் ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பைஅபிவிருத்தி செய்வதிலும்நடைமுறைப்படுத்துவதிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார்.
அவர் அவரது பெண்டகன் வேலையை விடுத்ததும்Foreign Policy இணைய இதழில், “இமயத்தில் இருக்கும் வீரதீர ஹெர்குலஸ்அமெரிக்கா இந்தியாவுடன் எவ்வாறு பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்த இருக்கிறது,”என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்அதில் அவர் அரும்பி வரும் இந்தோ-அமெரிக்க இராணுவ உறவுகள் மற்றும் ஆசியா "முன்னெடுப்பில்"இந்தியாவின் முக்கியத்துவத்தை ஜம்பமடித்து எழுதி இருந்தார்.
கார்டர் எழுதினார், “நமது புதிய மூலோபாயத்தின் கருத்துருவில் இருந்து,அமெரிக்கா இந்தியாவை வெறுமனே ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்குள் மட்டுமல்லமாறாக அந்த முழு பிராந்தியம் முழுவதற்கும்" — வடகிழக்கு ஆசியாவிலிருந்து ஆசியான் நாடுகள்தெற்காசியா மற்றும் இந்திய பெருங்கடல் வரையில் (இந்த பாதை வழியாக தான் சீனாவின் பொருளாதார பாய்விற்கு தேவையான எண்ணெய் மற்றும் ஏனைய முக்கிய ஆதார வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றனஅதை மறுசமப்படுத்தலுக்கான ஓர் உள்காரணியாக பார்க்கிறது.
கார்டரின் கட்டுரைஅமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்"இந்தியாவின் முக்கியத்துவத்தை உயர்த்தி காட்டியதோடு — இந்த மூலாபாய மாற்றத்தை ஒபாமா நிர்வாகமும்பெண்டகனும் இப்போது "மறுசமப்படுத்தல்"என்றழைக்கின்றன  "பார்வைக்கு தெரியாதநிகழ்முறையில் வாஷிங்டனின் மூலோபாய நோக்கத்தோடு இந்தியாவை இணைப்பதில் அது செய்திருந்த வேலைகளை உயர்த்தி காட்டியது. “அமெரிக்க-இந்திய பாதுகாப்பு கூட்டுறவை ஆழப்படுத்துவதுஎங்களின் ஏனைய ஆசிய-பசிபிக் முயற்சிகளில் சிலவற்றை போலவே பார்வைக்குத் தெரியாமல் இருக்கலாம்ஆனால் செயலர் சக் ஹாகெலின் கீழ் பாதுகாப்பு துறை எவ்வாறு மறுசமப்படுத்தலில் நமது பாத்திரத்தை செயல்படுத்தி வருகிறது என்பதற்கு அந்த நடவடிக்கை ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும்,” என்று கார்டர் எழுதினார்.
கார்டர் இராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் ஒரு நிபுணர் ஆவார்அவர் இராணுவ தளவாடங்கள் வாங்குதல்தொழில்நுட்பம் மற்றும் சரக்கு கையாள்கை துறையின் துணை செயலராக சேவை செய்துள்ளார்இதிலும் மற்றும் அதற்கடுத்த துணை பாதுகாப்பு செயலர் வேலையிலும் அவர் இருந்தபோதுநவீன ஆயுத தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு கைமாற்றுவதை அனுமதிப்பதில் மற்றும் இந்தோ-அமெரிக்க கூட்டு-உற்பத்திக்கான பரிந்துரைகளை அபிவிருத்தி செய்வதில் மற்றும் இறுதியாக ஆயுத எந்திரமுறைகளின் கூட்டு-அபிவிருத்தியை செய்வது மீதான அமெரிக்க கொள்கையில் மாற்றங்களைச் செய்யும் பேரத்தில் உதவினார்.
கார்டர் இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பெயரிடப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்ஆனால் இந்தியாவின் புதிய அரசாங்கத்தின் கவனத்தை கவர ஓர் உயர்மட்ட நியமனத்தை ஒபாமா நிர்வாகம் செய்யும் எனவாஷிங்டன் மற்றும் புது டெல்லி இரண்டு இடங்களிலும் கருதப்படுகிறது.
அமெரிக்க இராஜாங்க அலுவலகங்களுக்கு வெளியே இந்தியா பாதுகாப்பைக் குறைத்துஅமெரிக்க இராஜாங்க அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான சிறப்பு விலக்குரிமைகளை திரும்ப பெற்றபோதுகடந்த டிசம்பர் மற்றும் ஜனவரியில்பவெல் தாம் ஒரு இராஜாங்க சர்ச்சையின் மையத்தில் இருப்பதைக் கண்டார்அது நியூ யோர்க்கில் இருந்த ஒரு இந்திய தூதர் தேவயானி கோப்ரகாடேயைகுறைந்தபட்ச ஊதிய சட்டங்களை மீறியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவரைஅமெரிக்க அதிகாரிகள் கைது செய்தமை மற்றும் தரக்குறைவாக நடத்தியமை மீது எடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையாக இருந்தது.
வாஷிங்டனுடன் தன்னைத்தானே இந்தியா வெளிப்படையாக மேலதிகமாக இணைத்துக் கொள்ளவில்லை என்ற அதிருப்தி மற்றும் கோபம்,அமெரிக்காவின் தரப்பில்அங்கே இருக்கிறதுவாஷிங்டனின் பீதி ஊட்டும் நடவடிக்கைகளால்அமெரிக்காஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான நாற்கர இராணுவ ஒத்திகைகளில் சேர இந்தியா தயங்கி உள்ளது.
அமெரிக்க சிந்தனை கூடங்களின் கொள்கை ஆய்வறிக்கைகளில், “மூலோபாய சிந்தனைஇல்லாமை, “அணி சேராமைமற்றும் "மூலோபாய சுயஅதிகாரம்"போன்ற காலங்கடந்த கருத்துருக்களை பிடித்துக் கொண்டிருப்பதற்காக இந்தியாவின் வெளியேற இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரம்பி உள்ளன.
இதற்கிடையில்அமெரிக்க பெரு வணிகங்கள் இந்தியா மீது கடுப்பாகி உள்ளனஇந்தியாவின் மருந்து பொருள் காப்புரிமை சட்டங்கள் மற்றும் அன்னிய முதலீடு மீதான கட்டுப்பாடுகள் குறித்து அவை குறை கூறி வருகின்றன. 2008 இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கை இந்தோ-அமெரிக்க "மூலோபாய கூட்டுறவைபலப்படுத்துவதற்காக மட்டுமல்லஅது அமெரிக்க அணுசக்தி தொழில்துறைக்கு ஆதாயமளிக்கும் ஒப்பந்தங்களைப் பாதுகாப்பதற்கான முன்நடவடிக்கையாகவும் இருந்ததுஆனால் அமெரிக்க அணுசக்தி தொழில்துறைக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கும் விதத்தில், 1984போபால் பேரழிவில் எந்தவொரு இழப்பீடும் வழங்காமல் யூனியன் கார்பைடின் அமெரிக்க உரிமையாளர்கள் எவ்வாறு தப்பித்து கொண்டார்கள் என்ற நினைவூட்டலால் உந்தப்பட்ட போராட்டங்களுக்குப் பின்னர்இந்தியா அமெரிக்க உடன்படிக்கைகளோடு ஒரு இழப்பீட்டு சட்டத்தை ஒட்டு போட மறுத்துவிட்டது.
ஈரானை நெருக்கும் யுத்த அச்சுறுத்தல்கள் மற்றும் அதற்கு எதிரான அமெரிக்க தடைகள் உட்பட அதன் சொந்த கருத்துக்களோடு ஒத்து போனால் ஒழியஇந்தியாவின் கருத்துக்களை ஏற்க அமெரிக்கா காட்டும் மறுப்பால்,இந்தியாவின் ஆளும் மேற்தட்டு அதன் பங்கிற்குநசுங்கி போயுள்ளது.அதேபோல அது பாகிஸ்தான் உடனான அமெரிக்காவின் உறவுகள் மீதும் எச்சரிக்கையோடு இருக்கிறதுபனிப்போரின் போது இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா பாகிஸ்தானை ஆதரித்ததுமற்றும் ஆப்கானிஸ்தானில் அதன் யுத்த ஆதரவுக்கு அதே அடிப்படையில் அது பாகிஸ்தானைத் தொடர்ந்து சார்ந்துள்ளது.
இருப்பினும்இந்தியா இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்காவை நோக்கி சாய்ந்ததுஇந்திய தரப்பில் பெரும்-வெளிப்படையான சந்தேகங்களுக்கும் மற்றும் இந்தியா போதுமான அளவிற்கு ஒத்துழைக்கவில்லை என்ற வாஷிங்டனிடம் இருந்து வரும் குறைகூறல்களுக்கும் இடையேஅமெரிக்கா இன்னும் மேலதிகமாக மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் அதன் மேலாதிக்கத்தைப் பலப்படுத்த ஆக்ரோஷத்தோடும்கொடூரத்தோடும் நகர்ந்துள்ள நிலையில்அந்த சாய்வு முன்பில்லாத அளவிற்கு கூர்மையாக வளர்ந்துள்ளது.
2013இல்அமெரிக்க ஆயுதங்களை உலகில் மிக அதிகளவில் வாங்கிய நாடு இந்தியாவாகும்மேலும் பல ஆண்டுகள் ஓட்டத்தில்வேறெந்த நாட்டின் இராணுவ படைகளும் இந்தியா அளவிற்கு பெண்டகனுடன் அதிக இராணுவ ஒத்திகைகளை நடத்தி இருக்கவில்லைஇந்தியா அமெரிக்காவுடன் உத்தியோகபூர்வமாக அணி சேரவில்லை என்ற போதினும்வாஷிங்டன் அதை சீனாவிற்கு ஒரு மூலோபாய எதிர்பலமாக பயன்படுத்த நோக்கம் கொண்டுள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தும்புது டெல்லி பாரியளவில் அதன் இராணுவ மற்றும் மூலோபாய உறவுகளை அமெரிக்காவுடன் விரிவாக்கி உள்ளது.
சமீபத்திய காலகட்டத்தில்புது டெல்லி தென் சீன கடலில் சீனாவிற்கு எதிரான அமெரிக்க கண்டனங்களை எதிரொலித்து உள்ளதோடு,ஜப்பானுடனான அதன் உறவுகளை வேகமாக அதிகரித்ததுஜப்பானிய ஏகாதிபத்தியம் இப்போது சீனாவை மையப்படுத்தியுள்ள அதன் மலிவு உழைப்பு வினியோக வலையத்திற்கு ஒரு மாற்றீடாக இந்தியாவை அபிவிருத்தி செய்து அதை பயன்படுத்திக் கொள்வதற்கான தனது சொந்த நோக்கங்களை கொண்டுள்ளது.
தற்போதைய புவிசார் அரசியல் உள்ளடக்கத்தில்ஜப்பான் ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்முக்கிய அமெரிக்க பங்காளியாக உள்ளதோடு வாஷிங்டன் ஆசிர்வாதத்தில் மீண்டும் ஆயுதமேந்தி வருகின்ற நிலையில்,ஜப்பானுடனான இந்தியாவின் கூட்டணி நடைமுறையில் வாஷிங்டன் உடனான அதன் கூட்டணியை பலப்படுத்துவதாக உள்ளது.
வாஷிங்டன் அதன் இந்திய கொள்கை மூலமாக தீர்க்கமான ஆதாயங்களைப் பெற்றிருப்பதாக வாதிட்ட ஒரு சமீபத்திய கட்டுரையில்ஒரு அமெரிக்க ஆலோசகர் இவ்வாறு வாதிட்டார்: “அந்த கூட்டணி ஆசியாவில் அமெரிக்காவின் நலன்களைப் பாதிக்குமாநிச்சயமாக அதற்கு எதிர்விதமாக தான் இருக்கும்அதாவதுஅப்பிராந்தியத்தில் சீனாவின் விரிவாக்கவாதத்திற்கான எதிர்ப்பில் இந்தியா ஆர்வம் காட்டி உள்ளதோடு,தெற்கு சீன கடலில் சுதந்திர போக்குவரத்தை ஊக்குவித்து வருகிறதுஅது ஆப்கான் அரசாங்கத்தின் ஒரு வலுவான அரசியல் மற்றும் நிதியியல் ஆதரவாளராக இருப்பதோடுஇந்தோ-பசிபிக்கில் அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் தன்னைத்தானே ஒருங்கிணைக்க தொடங்கி உள்ளது,”என்று எழுதுகிறார்.
இந்தியாவை இன்னும் இறுக்கமாக அமெரிக்க சுற்றுவட்டத்திற்குள் கொண்டு வரும் முயற்சியில்ஒபாமா நிர்வாகம் இந்திய ஆளும் வர்க்கத்தின் சக்தி வாய்ந்த கன்னைகளிடம் இருந்து ஆதரவைப் பெற நோக்குகிறது.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் பொறிவால் மற்றும் பூகோள நிதியியல் ஓட்டத்திற்கு ஏற்ப அதன் நிலையற்ற தன்மையால் அதிர செய்யப்பட்ட (இது கடந்த ஆண்டின் ரூபாய் நெருக்கடியில் எடுத்துக்காட்டப்பட்டதுபெரும்பாலான இந்திய பெருநிறுவன மேற்தட்டு,இன்னும் அதிகப்படியான மூலதனத்தைப் பெற இட்டு செல்லும் என்ற கொடுக்கல்-வாங்கல் கணக்கீட்டின் அடிப்படையில்அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் நெருக்கமான உறவுகளுக்கு அழுத்தம் அளித்து வருகிறது.
-கைபர்தளம்-

கையடக்கத்தொலைபேசி இணைப்புகளை சொந்தப்பெயர், முகவரியில் பதிவு செய்யவும் : தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு

கையடக்கத் தொலைபேசி இணைப்புகளை சொந்தப் பெயர்,முகவரியில் பதிவுசெய்து கொள்ளுமாறு சகல கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களையும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.


 
 
கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் பயன்படுத்தும் கையடக்கத் தொலைபேசி இணைப்புகள் தங்களது சொந்தப்பெயர், முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக #131# என பதிவு செய்து பயன்படுத்தும் இணைப்பு தமது சொந்தப்பெயர் மற்றும் முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியும். 
 
பதிவு செய்யப்பட்டுள்ள பெயர் மற்றும் ஏனைய விபரங்களில் ஏதாவது பிழையிருப்பின் அருகாமையிலுள்ள தமது இணைப்புக்குரிய முகவர் நிலையங்களுக்குச் சென்று அவற்றை சரி செய்து கொள்ளுமாறும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 
 
மேலும், கையடக்கத்தொலைபேசி இணைப்புக்குரிய உரிமையாளரின் விபரங்களில் ஏதாவது பிழையிருப்பின் இணைப்பு துண்டிக்கப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அரசாங்கம் 8 வெப்தளங்களை இலங்கைக்குள் பொதுமக்கள் பார்வையிடாமல் வலுக்கட்டாயமாக நிறுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கம் 8 வெப்தளங்களை இலங்கைக்குள் பொதுமக்கள் பார்வையிடாமல் வலுக்கட்டாயமாக  நிறுத்தியுள்ளது. இவ் விடயம் சம்பந்தமாக வெப்தள ஊடகவியாளர்கள் சங்கம் இன்று பொரளையில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவிடம் அடிப்படை மனித உரிமை மீறல் சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பித்துள்ளதுடன்  வழக்கு தாக்கலும்  செய்யவுள்ளது.
 
மேற்படி மனித உரிமை மீறல் ஆட்சேபனையை ஜ.தே.கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தனநாயக்க மற்றும் சிவில் அமைப்புக்களின் தலைமையில் வெப்தள ஊடக சங்க உறுப்பினர்கள்  சென்று ஆணையாளரிடம் அறிக்கையை கையளித்தார்.
 
இலங்கையில் நாளாந்தம் 30 ஆயிரம் மேற்பட்ட வாசகர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா மீரர்,  இடைநிறுத்தியதால் தனக்கு விளம்பரம் மற்றும் வருமானம் இலட்சகணக்கில்  மாதாந்தம் இழந்துள்ளதாகத் அதன் ஆசிரியர் கெழும் தெரிவித்தார்.
 
மக்களுக்கு செய்திகள் தொடர்பாடல்களை அறியும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தான் விரும்பும் தொழிலொன்றை எனக்கு செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது. எனது வெப்தளம் மூலம் இலங்கைக்கு வெளியே வாழும் இலட்சக்கணக்கான மக்கள் இலங்கை பற்றிய செய்திகளை அறியாமல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் நானும் எனது ஏனைய உழியர்களும் தொழிலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் படி  13-1, 14-1ஏ, 14-1 ஜீ ஆகிய சர்த்தின்படி மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. அவர்களது அறிக்கையில் பின்வரும் 8 வெப்தளங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
 
தமிழ்வின்,
கொழும்பு டெலிகிராப் ,
லங்கா நியுஸ்வெப்,
லங்கா ஈ நியுஸ்,
லங்கா காடியன்,
ஸ்ரீலங்கா மிரர்,
யப்னா முஸ்லீம்,
த இன்டிபெண்டன்ட்,
 
ஆகிய 8 வெப்தளங்களை அரசு இலங்கை மக்களுக்கு பார்க்கமுடியாமலும் இலங்கையில் இருந்து வெப்தளங்களை இயக்க முடியாமலும் தடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் தலைவர் லலித் வீரதுங்க,அனுஸ்ட பல்பிட்ட,தொலைத்தொடர்பு திணைக்களத்தின் பணிப்பாளர்,ஊடக அமைச்சர். செயலாளர், இலங்கை டெலிகொம்,  மொபிட்டல், டயலொக் ஆகியவற்றின் நிறைவேற்று அதிகாரிகளுக்கு எதிராக இவ் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெப்தள ஊடகவியளாலர்களின் சங்கத்தின் தலைவர் கெழும் தெரிவித்தார்.
 
அரசாங்கத்தினுள் உள்ள அமைச்சர்கள் அரச குடும்பஸ்த்தினர்கள், அவர்களது அதிகாரிகளது  பண்டவாளங்கள் அரச சொத்துக்களை சூறையாடுதல்   மற்றும் ஊழல்கள் போன்ற செய்திகளை இந்த வெப்தளங்கள் மக்களுக்கு கொண்டு சென்றதானலேயே இதனை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. ஆகவே இந்த நாட்டில் ஊடகச் சுதந்திரம் மற்றும்  இந்த நாட்டின் வாழும் பிரஜைக்கு தாம் விரும்பியதை வாசித்தறிவதற்கும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
 
அஸ்ரப் ஏ சமத்:
 

சீனாவில் மார்க்கெட்டில் தொடர் குண்டு வெடிப்பு: 31 பேர் பலி (photos)

சீனாவில் மார்க்கெட்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலர் பலியானார்கள்.
சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் உரும்கி என்ற இடத்தில் திறந்த வெளி மார்க்கெட் உள்ளது. இன்று காலை 7.50 மணி அளவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அப்போது 2 வாகனங்கள் வேகமாக வந்து மார்க்கெட்டுக்குள் புகுந்தது. உடனே அதில் இருந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. 12 முறை அடுத்தடுத்து தொடர்ச்சியாக குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது.

குண்டு வெடிப்பில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டன. மார்க்கெட்டுக்கு வந்திருந்த மக்கள் குண்டு வெடிப்பில் சிக்கிக் கொண்டனர். உடனே ஆம்புலன்ஸ்களும் பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
Smoke in Urumqi (photo from Weibo user "Manga"), 22 May
இதில் ஏராளமானோர் பலியானதாக சீனா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை உறுதியாக தெரியவில்லை. ஏராளமானவர்கள் கவலைக்கிடமான நிலையில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாகாணத்தில் முஸ்லிம்களில் உய்குர்ஸ் பிரிவினர் அதிகம் வசிக்கிறார்கள். அங்கு காலம் காலமாக வசிப்பவர்களுக்கும் புதிதாக குடியேறியவர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்தன. துர்கிஸ்தான் இஸ்லாமிக் அமைப்பும், அல்கொய்தா இயக்கமும் தான் கலவரத்துக்கு காரணம் என்று சீனா குற்றம் சாட்டியது.

கடந்த மாதம் ஷின்ஜியாங் மாகாணத்தில் ஒரு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 3 பேர் பலியானார்கள். 79 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த மாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக சீன அரசு தெரிவித்து இருந்தது. தற்போது மார்க்கெட்டில் குண்டு வெடித்து இருப்பது சீன அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
Image from weibo.com
View image on Twitter
View image on Twitter
View image on Twitter
 

முழு தெற்காசியாவிழும் யுத்த மேகங்கள் சூழும் காலம் வெகு தொலைவில் இல்லை

சீனாவுடனான இலங்கையின் நட்புறவை நரேந்திர மோடி ஒருபோதும் விரும்பப்போவதில்லை. எனவே, எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிரான மோடியின் அரசியல் காய் நகர்த்தல்கள் அதிகரிக்கும் மோடி இன்னும் 
கொஞ்ச நாட்களில் பாகிஸ்தானுக்கு எதிராக போரை ஆரம்பிப்பது நிச்சயமாகும். எனவே, முழு தெற்காசியாவில் யுத்த மேகங்கள் சூழும் காலம் வெகு தொலைவில் இல்லை. தீவிரவாத இந்துத்துவ கொள்கை கொண்ட மோடி தெற்காசியாவை மோதல்கள் வலயமாக மாற்றுவார் என  தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரித்துள்ளது .
 
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார் . மேற்படி எச்சரித்துள்ளார் .
 
மேலும் அவர் தகவல் வெளியிடுகையில்,  சீனாவுடனான இலங்கையின் நட்புறவை நரேந்திர மோடி ஒருபோதும் விரும்பப்போவதில்லை. எனவே, எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிரான மோடியின் அரசியல் காய் நகர்த்தல்கள் அதிகரிக்கும் என  மேலும் அவர் , அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலையே தெற்காசியாவில் மோடியின் அரசாங்கம் முன்னெடுக்குமென்றும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தனிப் பெரும்பான்மை பலமிருப்பதனால் ஜெயலலிதாவின் அழுத்தங்கள் எடுபடப் போவதில்லையென்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு பிழையானது. ஏனென்றால் இதற்கு முன்பிருந்த காங்கிரஸ் அரசும் ஜெயலலிதாவும் இலங்கையின் பிரிவினையை ஏற்படுத்தும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கே துணை போனார்கள்.
 
எனவே, இந்தியாவின் மோடியின் அரசாங்கமும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கும். அதற்கு ஜெயலலிதாவும் துணைபோவார். இதனை புரியாது அரசு தப்புக் கணக்கு போடுகிறது. அத்தோடு தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் அமெரிக்கா அதற்காக மோடியைப் பயன்படுத்தும். ஏனென்றால் மோடியும் சீனாவுக்கு எதிரானவர். இதனால் இலங்கை சீனாவுடன் கொண்டுள்ள நட்புறவை தகர்ப்பதற்கு இலங்கைக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் மோடி அரசு மேற்கொள்ளும்.
 
இங்கு பிரிவினையை ஏற்படுத்துவதற்காக முயற்சிக்கும் சக்திகளுக்கு இந்தியாவும் சீனா வும் துணைபோகும். இது ஒருபுறமிருக்க மோடி இன்னும் கொஞ்ச நாட்களில் பாகிஸ்தானுக்கு எதிராக போரை ஆரம்பிப்பது நிச்சயமாகும். எனவே, முழு தெற்காசியாவில் யுத்த மேகங்கள் சூழும் காலம் வெகு தொலைவில் இல்லை. தீவிரவாத இந்துத்துவ கொள்கை கொண்ட மோடி தெற்காசியாவை மோதல்கள் வலயமாக மாற்றுவார். விடுதலைப் புலி ஆதரவாளரான வைகோவுக்கும் மோடிக்கும் தொடர்புள்ளது. இதுவும் இங்கு பிரிவினைவாத சக்திகளுக்கு உதவும் நிலைமையை அதிகரிக்கும். எதிர்காலத்தில் எமது நாட்டில் பயங்கரமான சூழல்களை உருவாக்கும். எனவே, அரசாங்கம் சீனாவுடனான தொடர்புகளைகவனமாக கையாள வேண்டும். அதைவிடுத்து இந்தியாவையும் சந்தோஷப்படுத்திக் கொண்டு சீனா வையும் சந்தோஷப்படுத்திக் கொண்டு நடு நிலை போக்கில், நழுவல்போக்கை கடைப் பிடிக்கலாம்எனஅரசு நினைக்குமானால் அது பிழையானதாகும் என்றும் வசந்த பண்டார தெரிவித்துள்ளார் .
 
Lankamuslim web

இஸ்லாத்தை ஏற்ற இளம்பெண் 'ஆப்ரீன் அலி' இந்தியாவின் எம்.பி'யானார்

மேற்கு வங்கத்தை சேர்ந்த 'அபரூபா பொட்டார்' என்ற 28 வயது இளம்பெண், சமீபத்தில் தனது பெயரை 'ஆப்ரீன் அலி' என மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தழுவிய நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். இந்த தொகுதியானது தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட ரிசர்வ் தொகுதியாகும். இவர் பிறப்பால் தலித் என்பதால் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.
 
BSC பட்டதாரிப் பெண்ணான ஆப்ரீன் அலி'யின், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களில் பழைய (APARUPA PODDAAR) பெயரே இருந்தபடியால், அதே பெயரில் தேர்தலை சந்தித்தார்.
 
திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹூக்ளி மாவட்டத்தில் அரம்பாக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆப்ரீன் அலி என்ற தனது இஸ்லாமிய பெயரை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டு தேர்தலை சந்தித்தார்.
 
ஆரம்பாக் தொகுதியில், 7,48,764 வாக்குகளைப் பெற்ற ஆப்ரீன் அலி, சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக வேட்பாளர்களை தோற்கடித்தார்.
 
28 வயது ஆப்ரீன் அலி, BSC யுடன், சட்டப்படிப்பையும் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பொதுவாகவே பழைய முஸ்லிம்களை விட புதிதாக இஸ்லாத்துக்குள் நுழைபவர்கள் இஸ்லாமிய கடமைகளை பேணுவதில் அதிக அக்கறையுடன் இருப்பார்கள். நாடாளுமன்றத்தில் இவரின் குரல் உவைசியின் குரலோடு சேர்ந்து இனி கம்பீரமாக ஒலிக்கும். சட்டம் வேறு பயின்றவர். இவரை போன்ற கல்வியாளர்கள் நாடாளுமன்றத்தை நிறைக்க வேண்டும். 
 
இவருடைய ஈமெயிலுக்கு சென்று உங்களின் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்.
 
Aparupa Poddar (Afreen Ali)
Constituency: Arambagh
Date of Birth: 8 January 1986
Educational Qualifications: BSc, LL.B
Positions held in the past:
Vice-Chairman, Rishra Municipality.
Additional Information:
Ms. Ali has been associated with Trinamool Chhatra Parishad and is a Law Practioner.
 
(சுவனப்பிரியன்)

சட்டத்தை கையிலெடுக்கும் இனவாதிகளை தடுத்து நிறுத்துங்கள் : மேல்மாகாணசபையில் மனோ கணேசன்

13ஆம் திருத்தத்தின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த மாகாணசபைக்கு சட்டம், ஒழுங்கு தொடர்பான அதிகாரம் சட்டப்படி இருக்கிறது. முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க நிதி, கல்வி, உள்ளூராட்சி ஆகிய துறைகளுடன் சட்டம், ஒழுங்கு ஆகிய விடயங்களையும் கொண்டாழ்கிறார் என்று அவரது அமைச்சு பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் பற்றிய அதிகாரபூர்வ பிரகடனம் கூறுகிறது. அரசியல் சட்டத்தில் இடமிருந்தாலும், சட்டம், ஒழுங்கு  தொடர்பான அதிகாரங்களை நீங்கள் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவது இல்லை. அதுபற்றி இங்கே நான் பேசப்போவது இல்லை. இது பற்றி பேசும் சந்தர்ப்பம் எதிர்காலத்தில் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
 
 
பொலிஸ் அதிகாரங்களை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், சட்டம் ஒழுங்கு தொடர்பான பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது. சட்டம், ஒழுங்கு சீர்குலைவு தொடர்பான கவலை எங்களுக்கு இருக்கிறது. இந்த அதிகாரங்களை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், அந்த அதிகாரங்களை  பயன்படுத்துகின்றவர்களிடம் இந்த சபையின் கவலையை நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் என நான் பிரேரிக்கின்றேன். 
சிறுபான்மையினருக்கு எதிராக சட்டத்தை கையில் எடுக்கும் இனவாதிகளை தடுத்து நிறுத்தாமல், ஆளுநர் அலவி மௌலானவின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள எந்த ஒரு பொருளாதார அபிவிருத்தி இலக்கையும் அடைய முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
 
மேல்மாகாணசபையில் இன்று ஆளுநரின் கொள்கை பிரகடனம் தொடர்பான விவாதம் நடைபெற்ற போது உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 
 
இந்த நாட்டில் இன்று சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துகொண்டு செயற்படலாம் என ஒரு சாரார் நினைக்கின்றார்கள். அந்த சட்ட விரோத எண்ணத்தை பகிரங்கமாக சொல்கிறார்கள். அமைதியை போதிக்கும் பௌத்தத்தையும், தேசத்தையும் காப்பாற்ற வந்த மகா பலசேனை என தங்களை தாங்களே அறிவித்துகொள்கிறார்கள். சட்டத்துக்கு வெளியில் தாங்கள் ஒரு தனி பொலிஸ் படையை அமைத்து நடத்தலாம் என நினைத்து அதை செயற்படுத்துகிறார்கள். இவை அனைத்தும் மேல்மாகாணத்தில் தான் ஆரம்பித்து முழு நாட்டுக்கும் பரவுகிறது. 
 
அரசியல் யாப்பின்படி சட்டம் ஒழுங்கு பொறுப்புகளை பயன்படுத்தும் அதிகாரம் கொண்ட நீங்கள் அவற்றை  பயன்படுத்துவது இல்லை. ஆனால், இந்தகைய எந்த ஒரு அதிகாரமும் கொண்டிராத சில நபர்கள், சட்டம், ஒழுங்கை கைகளில் எடுத்து கொண்டு தங்கள் சட்டவிரோத நோக்கங்களை பகிரங்கமாக அறிவித்துகொண்டு  பயன்படுத்துகிறார்கள். இது வேடிக்கையா, வினோதமா, பயங்கரவாதமா என்ற தீர்மானத்தை  நீங்களே எடுங்கள். 
 
ஆனால், ஒன்றை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த ஆறாவது மேல்மாகாணசபைக்கான கொள்கை  உரையில் சொல்லப்பட்டு, இன்று இங்கே நீங்கள் பிரேரித்துள்ள நன்றி தெரிவிக்கும் பிரேரணையிலும் சொல்லப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை, இந்த  சட்டம், ஒழுங்கை  சீர்குலைவுகளை சீர் செய்யாமல் ஒருபோதும் அடைய முடியாது.சட்ட ஒழுங்கு சீர்குலைவுடன் பொருளாதார அபிவிருத்தி என்பது ஒரு கனவு மாத்திரமே.
 
பழைய விடயங்களை கடந்து, இந்த ஆறாவது சபை அமைக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்றுள்ள சில சம்பவங்களை நீங்கள் பாருங்கள். மேல்மாகாணத்தின் அழுத்கம நகரில் 10ஆம் திகதி ஒரு வர்த்தக நிறுவனம் எரித்து அழிக்கப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், இந்த நிறுவனத்தை "எரிப்போம்-உடைப்போம்- அழிப்போம்" என சில மணி நேரத்துக்கு முன்னர் ஒரு கூட்டம் பகிரங்கமாக அந்த வர்த்தக நிறுவனத்துக்கு எதிரே வந்து கூக்குரல் இட்டது. இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், அந்த பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரோஷன் பெரேராவிடம் நேரிடையாக புகார் செய்து பாதுகாப்பு கோரியுள்ளார்.  ஆனாலும், அன்று இரவு அந்த நிறுவனம் எரிக்கப்பட்டு பலகோடி ரூபாய் பெறுமதியான கட்டிடமும், பொருட்களும் அழிக்கப்பட்டுள்ளன.
 
இதற்கு காரணம் என்ன? அந்த நிறுவனத்துக்கு வாடிக்கையாளராக வந்த ஒரு பெண்ணிடம் அந்த நிறுவனத்தை  சார்ந்த ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்டார் என்பதாகும். இது போலிஸ் புகாராகும். இது பற்றி போலிஸ் விசாரணை நடந்தது. நீதிமன்றம் சென்றது. அதற்குதான் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய போலிசார் உள்ளனர். எவரும் தவறு செய்திருந்தால் அவருக்கு தண்டனையை நீதிமன்றம் மூலம் பெற்று தருவது அவர்களது கடமை.
 
ஆனால், குறிப்பட்ட நிறுவனம் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு வர்த்தகருக்கு சொந்தமானது என்றவுடன் நான் மேலே சொன்ன கூட்டம் சட்டத்தை கைகளில் எடுத்துகொண்டு ஊர்வலம் வந்து தீ வைத்துள்ளது. இதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்? அந்த நிறுவனத்துக்கு சொந்தகாரரை எனக்கு தெரியாது.  ஆனால், அவர் நடைபாதை வியாபாரியாக தொழிலை ஆரம்பித்து, உழைப்பின்  மூலம் முன்னேறியவர் என்று அறிந்துள்ளேன். அவரது வளர்ச்சி மீது பொறாமை கொண்டுள்ள நபர்கள் இந்த சம்பவத்தை காரணமாக கொண்டு அவரது நிறுவனத்தை அழித்துள்ளனர். இது அப்பட்டமான இனவாதம். அப்பட்டமான மதவாதம். அப்பட்டமான தீவிரவாதம். இதில் இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. 
 
இதில் இன்னொரு விசேடம் என்னவென்றால், இதே கட்டிடத்தில் 1980 களில் ஒரு தமிழர் ஒரு வர்த்தக நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வந்ததாகவும், அந்த நிறுவனமும் 1983 இனக்கலவரத்தின் போது எரிக்கப்பட்டதாகவும் நான் அறிகிறேன்.  1983ம் வருட கருப்பு ஜூலை கலவரத்தின் பிறகு இந்த நாடு தேசிய ரீதியாகவும், சர்வதேசரீதியாகவும் கண்ட அனுபவங்களை நாம் மறக்க முடியுமா? 
 
அந்த பாதிப்புகளில் இருந்து நாம் இன்னமும் மீளவில்லை என்பது உண்மை. இன்று சர்வதேசத்துடன் ஒரு நாடு என்ற நிலையில் நாம் பெரும் கண்டனங்களை எதிர்கொள்கிறோம். இன்று நமது நாடு, ஐநா மனித உரிமை பேரவையில் பிரசித்தமான ஒரு நாடாக மாறியுள்ளது. அடுத்த சில வாரங்களில் நமது நாடு தொடர்பான ஒரு விசாரணை ஆணைகுழுவின் அங்கத்தவர்களின் பெயர் பட்டியல்அறிவிக்கப்பட உள்ளது. ஒரு நாடு என்ற  முறையில் இந்த சர்வதேச கண்டனம், துர்பாக்கியமானது. ஆனால், இவை தானாக வரவில்லை. இவற்றை நாம் கேட்டு பெற்றுக்கொண்டுள்ளோம்.  இந்த நாட்டில் சிங்களம் பேசும் மக்களும், தமிழ் பேசும் மக்களும், பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மக்கள் வாழ்கிறார்கள் என்பதையும், நாம் அனைவரும் சம உரிமை கொண்ட இலங்கையர்கள் என்பதையும் நாம் மறந்து விட்டோம்.
 
இவை அனைத்துக்கும் ஆரம்பம், இந்த நாட்டில் நடைபெற்ற இனக்கலவரங்கள்தான். சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகள்தான். இவை அனைத்தும் பெரும்பாலும் மேல்மாகாணசபை நிலபரப்புக்குள்தான் ஆரம்பிகின்றன. ஆகவே  போலிஸ் அதிகாரங்களை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், சட்டம் ஒழுங்கு தொடர்பான பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது. சட்டம், ஒழுங்கு சீர்குலைவு தொடர்பான கவலை எங்களுக்கு இருக்கிறது. இந்த அதிகாரங்களை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், அந்த அதிகாரங்களை  பயன்படுத்துகின்றவர்களிடம் இந்த சபையின் கவலையை நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் என நான் பிரேரிக்கின்றேன்.

மோடி அலை என்பது உண்மையா..?

இந்தியா முழுவதும் உள்ள நாட்டு மக்கள் அளித்த ஓட்டில் வெறும் 31 சதவிகத ஓட்டுக்கள் தான் மோடியின் பி.ஜே.பிக்கு கிடைத்துள்ளது. கிட்ட தட்ட 70 சதவித மக்கள் மோடியின் ஆட்சியை விரும்பவில்லை. மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மோடி அலை உண்மையாக இருந்தால் குறைந்த பட்சம் 60 சதவிகத ஓட்டுக்களையாவது மோடியின் பி.ஜே.பி பெற்றிருக்க வேண்டும். நமது நாட்டு தேர்தல் முறையில் உள்ள பலவீனங்களே இது போன்ற நபர்கள் பிரதமராகும் வாய்ப்பை தந்து விடுகிறது. விகிதாச்சார முறைப்படி தேர்தலை திருத்தி அமைத்தால்தான் சிறுபான்மை இன மக்கள், பிறபடுத்தப்ட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் உண்மையான பிரதிநிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப முடியும். வெறும் 30 சதவீத மக்களின் ஆதரவை பெற்று இன்று இந்தியாவையே நான் புரட்டிப் போட்டு விடுகிறேன் என்ற கூப்பாட்டோடு மோடி புறப்பட்டு விட்டார்.
 
எண்ணிக்கையே தர்மம்
 என்று ஆகிவிட்ட
 குருசேத்திரத்தில்
 வெற்றிகள் எல்லாம்
 கௌரவர்களுக்கே போகின்றன.... 
 
என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் வரிகள்தான் தற்போது ஞாபகத்துக்கு வருகிறது.
 
நேற்று ஒரு டி.வி விவாதத்தில் அருண் ஷோரி ( முந்தைய பா.ஜ.க ஆட்சியில் பொதுத்த் துறை நிறுவனங்களைத் தனியார்களுக்கு விற்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்), பதவி ஏற்கவுள்ள பா.ஜ.க அரசு எல்லா அரசியல் முடிவுகளுக்கும் பாராளுமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும் என்கிற நிலையை ஒழித்து வெறும் நிர்வாக ஆணையின் அடிப்படையிலேயே (Executive Order) ஆணைகளை இட்டு நடைமுறைப் படுத்த வேண்டும் எனச் சொன்னார். நிர்வாகத்தின் அதிகாரம் சர்வாதிகாரம் என்கிற நிலையை எட்டாமல் தடுப்பதற்கு ஒரு ஜனநாயக அமைப்பில் உள்ள இரு நிறுவனங்கள்தான் பாராளுமன்றமும் நீதிமன்றமும். பாராளுமன்றத்தின் இந்த அதிகாரத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிறார் அருண்ஷோரி. வருங்காலங்களில் இன்னும் எத்தனை தமாஷாக்கள் அரங்கேறப் போகின்றன என்பதனையும் பார்ப்போம்.
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் இந்துத்வா இனி இந்திய மக்களுக்கு பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்பதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாம். இதில் ஏன் இவர்கள் இந்த அளவு உறுதியாக உள்ளார்கள்? 
இன்று இஸ்லாமிய வாழ்வு முறை இந்த இந்தியாவில் எந்த தடையுமின்றி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த அழகிய வாழ்வு முறையை பார்த்து பல இந்துக்கள் தங்கள் மதத்தை துறந்து இஸ்லாத்தில் கூட்டம் கூட்டமாக இணைந்த வண்ணம் இருக்கிறார்கள். இன்னும் இருபது ஆண்டுகளில் பார்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் இஸ்லாத்தில் ஐக்கியமாகி விடும் நிலைமையை நோக்கி இந்து மதம் சென்று கொண்டிருக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என்றால் இஸ்லாத்துக்கு உள்ள சிறப்பு அந்தஸ்துகளான வணக்க வழிபாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். 
 
எப்படி பவுத்த மதத்தையும், சமண மதத்தையும், அதன் சட்டங்களை எல்லாம் பார்பன மயமாக்கி இந்து மதத்தின் ஒரு பிரிவாக ஆக்கினார்களோ அது போன்ற ஒரு சூழலை இஸ்லாத்திலும் கொண்டு வர எத்தனிக்கிறார்கள். அல்லாஹ்வையும் வணங்கிக் கொள், அருகில் ராமனையும் கிருஷ்ணனையும் வைத்துக் கொள். குர்ஆனையும் படி: அதோடு ராமாயணத்தையும் படி: அதன் கருத்துக்களை உள் வாங்கி அதற்கு மதிப்பு கொடு. திருமண ஒப்பந்தம், சொத்து பாகப்பிரிவினை, போன்ற அனைத்திலும் பார்பனிய சட்டங்களை முஸ்லிம்களாகிய நீ பின்பற்று: என்று இதை நோக்கி தற்போது செல்ல ஆரம்பிப்பார்கள். 
 
இதற்கு இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே முதலில் எதிர்க்க ஆரம்பிப்பார்கள். ஏனெனில் இந்துக்களில் பலர் இறந்த உடலை எரிக்கிறார்கள்: சிலர் புதைக்கிறார்கள்: பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் சாதி வழக்கத்திற்கு ஒப்ப பல கடவுள்களை வணங்குகின்றனர். பார்பனர்கள் ராமன், கிருஷ்ணன், போன்ற கடவுள்களை மட்டுமே வணங்குவர். சுடலை மாடன், போன்ற கிராமிய கடவுள்களை பார்பனர்கள் கடவுளாக மதிப்பதில்லை. தங்கள் கோவில்களில் அதற்கு இடமும் தர மாட்டார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் கோவில்களில் ராமனும், கிருஷ்ணனும் தெய்வங்களாக வீற்றிருக்கும். பொது சிவில் சட்டத்தில் அரசு எதனை கடவுளாக்க வேண்டும், எப்படி வழிபட வேண்டும், எப்படி திருமணம் செய்ய வெண்டும் என்பது வரை சட்டங்களாக்கி அதனை பொதுவாக்கி விடுவர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே! கிராமிய கோவில்களில் ஆடு, கோழி, மாடு போன்றவற்றை பொது சிவில் சட்டத்தில் பலி கொடுக்க முடியாது. பார்பனர்களுக்கு காளை மாடு, பசு மாடு போன்றவை தெய்வங்கள். எனவே அதனை பலி கொடுப்பதற்கும் தடை விதிக்கப்படும். 
இதனை சட்டமாக்க ஆட்சியில் அமர்ந்துள்ள மோடி தயங்குவார். ஆனால் ஆர்எஸ்எஸ் இதனை சட்டமாக்கு என்று நிர்பந்திக்கும். சட்டமாக்காது விட்டால் ஆர்எஸ்எஸ் மோடியை உயிரோடு விட்டு வைக்காது என்பதும் தெரியும் . மஹாத்மா காந்தியையே கொலை செய்தவர்களுக்கு மோடி எம்மாத்திரம். எனவே பொது சிவில் சட்டம் அமுலாக்கப்பட்டால் நாட்டில் பல இடங்களில் கலவரம் வெடிக்கும். ஒருகால் அவசர நிலை கூட கொண்டு வரப்படலாம். சட்டம் ஒழுங்கை காரணமாக்கி மோடி அரசு கலைக்கவும் படலாம். இனி வருங்கால இந்தியாவை நமது ஆட்சியாளர்கள் எவ்வாறு கைகொள்ளப் போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
“இறைவா!! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” 
குர்ஆன்:3:26
 
குர்ஆனின் இந்த வசனத்தின் படி மோடியை இழிவுபடுத்துவதற்காகவே இத்தனை மெஜாரிட்டியோடு ஆட்சியை வல்ல இறைவன் கொடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன். அந்த இழிவை இன்னும் ஒரு வருடத்தில் நாம் எதிர்பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்!
 
இது சம்பந்தமாக சம்சுதீன் காசிமியின் உரையும் மிக அழகாக உள்ளது அதனையும் பார்த்து தெளிவுறுங்கள். முஸ்லிம்கள் எந்த அச்சமும் படாமல் நமது பிரார்த்தனையை ஐந்து நேரமும் நமது தொழுகையில் நமது இறைவனின் முன்னால் வைப்போமாக!

அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா விடுக்கும் அறிவித்தல்


மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) தொடர்பாக பொது மக்களுக்கு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, மற்றும்  பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இணைந்து முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான ‘வஹ்ததுல் வுஜூத்;;’ கொள்ளை தொடர்பில்-பொது மக்களுக்கு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும் ,காத்தான்குடி பள்ளிவால்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனமும் இணைந்து  இன்று வெள்ளிக்கிழமை (16-05-2014 ) காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஜூம்மா பள்ளிவாயல்களில் ஜூம்மா தொழுகையின் பின்னர் ஒரு  முக்கிய அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
அவ் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1979ம் ஆண்டு நமதூரைச் சேர்ந்த மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) அவர்களால் முன்வைக்கப்பட்ட இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான ‘வஹ்ததுல் வுஜூத்;;’  எல்லாம்  அவனே என்ற கொள்ளை தொடர்பான விவகாரத்தினை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு ,அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ,முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் அமைச்சு,காத்தான்;குடி ஜம்இய்யதுல் உலமா ,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ,உள்ளுர் மற்றும் தேசிய ரீதியான கல்விமான்கள்,தலைவர்கள்,அரசியல் பிரமுகர்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் பல்வேறு கலந்துரையாடல்கள்,மாநாடுகள்,உடன்படிக்கைகள் போன்ற விடயங்கள் நடைபெற்றதை பொது மக்களாகிய தாங்கள் நன்கறிவீர்கள்.
இந்த வகையில் இறுதியாக கடந்த 2007-08-30ம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும், மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களுக்குமிடையில் வஹ்ததுல் வுஜூத்’  கொள்கையை விட்டு நீங்குவது தொடர்பில் உடன்பாடு காணப்பட்டது.

அதில் மௌலவி அப்துர் ரஊப் அவர்கள் தான் கொண்டிருக்கும் எல்லாம் அவனே என்ற கொள்கை பிழையானது என்றும் இதன் பின்னர் வஹ்ததுல் வுஜூத்;;’   கொள்கையை எண்ணத்தாலோ,சொல்லாலோ, செயலாலோ, கொள்கையாக ஆக்கிக் கொள்ள மாட்டேன் என்றும் உடன்படிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 2007ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு அவர் வழங்கி இருந்த எழுத்து மூலமான உடன்படிக்கையை மீறும் வகையில் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி மேற்படி கொள்ளை சம்மந்தமாக அண்மைக்காலமாக ஆற்றிவரும் உரைகள் மூலம் அறியக் கிடைக்கின்றது.
இவ்விடயத்தினை அகில இலங்கை ஜமஇய்யதுல் உலமாவின் கவனத்திற்கு தகுந்த ஆதாரங்களுடன் கொண்டு சென்ற போது ,அவற்றைப் பரிசீலித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இவ்விடயம் தொடர்பில் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களையும் அவரது தரப்பினரையும் அழைத்து பேசி தீர்வு காண்பதென கூறியுள்ளது.
 
எனவே நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு பொது மக்களாகிய நீங்கள் பொறுப்புணர்வுடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் என அவ் அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரதி வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றப் படுகின்றது.

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

இந்தியாவின் 15வது பிரதமராக மோடி எதிர்வரும் 21ம் திகதி பதவியேற்பு - 160 தொகுதிகளை பறிகொடுத்த காங்கிரஸ்.

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி எதிர்வரும் 21ம் திகதி பதவியேற்கவுள்ளார் என பாரதீய ஜனதா கட்சித் தலைமையகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் 300 இற்கும் அதிகமான ஆசனங்களை பாஜக கூட்டணி கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. 

பாஜக 278இற்கும் அதிகமாக தொகுதிகளை தனித்துக், கைப்பற்றும் நிலையில் உள்ளது. இது அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 272 ஆசனங்களை விட அதிகமாகும்.

இந்தநிலையில், பாஜகவின் நரேந்திர மோடி இந்தியாவின் 15வது பிரதமராக வரும் 21ம் நாள் பதவியேற்கவுள்ளார்.

 நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய தொகுதிகளில் இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

160 தொகுதிகளை பறிகொடுத்த காங்கிரஸ்

பாராளுமன்ற தேர்தலில் மோடி அலையால் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவும் என்று கூறப்பட்டது. மக்கள் மனதிலும் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்ததால், காங்கிரஸ் தோற்கும் என்று நாடெங்கும் பேசப்பட்டு வந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் இருந்து அடிமட்டத்து தொண்டர் வரை காங்கிரசில் எல்லாருமே தோல்வியை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏதோ கொஞ்சம் தோல்வி அடைவோம் என்றே காங்கிரசில் பெரும்பாலானவர்கள் நினைத்தனர். சில காங்கிரஸ் தலைவர்கள் தோற்றாலும் 3–வது அணியில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் பெற்று மீண்டும் அரியணையில் அமர்ந்து விடலாம் என்று கனவு கொண்டிருந்தனர். ஆனால் அந்த கனவை தகர்த்து தவிடு பொடியாக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி படுபாதாள வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணி இந்த தடவை சுமார் 100 இடங்களை பெறும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டிருந்தது. ஆனால் காங்கிரசுக்கு அந்த அளவுக்கு கூட வெற்றி கிடைக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணிக்கு 75 இடங்களே கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இவ்வளவு பலத்த அடி விழும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

கடந்த 2009–ம் ஆண்டு நாடெங்கும் வெற்றி பெற்றிருந்த தொகுதிகளில் 163 தொகுதிகளில் இந்த தடவை காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் இந்த அளவுக்கு மோசமாக தோற்கும் என்று சோனியா, ராகுல் இருவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். காங்கிரசுக்கு பலத்த அடியை கொடுத்து பா.ஜ.க. இந்த தடவை ‘சூப்பர்’ வெற்றியை ருசித்துள்ளது. 300 இடங்களை தாண்டி இப்போதுதான் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2009–ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை நாடெங்கும் பா.ஜ.க. 175 தொகுதிகளை அதிகம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க.வுக்கு இது இமாலய வெற்றியாகும்.

 

கம்பொல சாஹிராவில் நடந்தது என்ன? அதிபரின் விளக்கம் (Audio)

கம்பொல சாஹிரா கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்பட்ட சம்பவம் ஒன்றின் அடிப்படையில் கம்பொல நகரில் இனவாதிகளால் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் கல்லூரி அதிபர் திரு. நிலாமுதீன் முஸ்லிம்குரலுக்கு வழங்கியுள்ள விளக்கம்.
 


இனவாதிகளுக்கு எதிராக ஆட்டோவில் ஒலிபெருக்கியைக் கட்டிக்கொண்டு பிரதமர் கோசம் (படங்கள்)

கம்பளை சாஹிரா கல்லூரி அதிபரின் பௌத்த விரோத அடிப்படைவாத நடவடிக்கைகளுக்கு கண்டணம் என்று தெரிவித்து கம்பளை நகரில் நடாத்தப்பட்ட சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டமும். அதற்கெதிராக பிரதமர் தி.மு.ஜயரத்ன களத்தில் இறங்கி சிங்கள முஸ்லிம் ஐக்கியத்திற்காக நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பான புகைப்படங்கள் இவை.
 
ஒருகட்டத்தில் பிரதமர் முச்சக்கர வண்டியொன்றில் ஒலிபெருக்கியைக் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிராக தானே முன்நின்று கோசங்களை எழுப்பினார் என்பதும் குறிப்படத்தக்கது. -
 
(நஜீப் பின் கபூர்)
Jaffnamuslim
 
 

இலங்கை முஸ்லிம்களின் பொறுமைக்கு நன்றி தெரிவிக்கிறேன் - JVP தலைவர் புகழாரம்

அன்மைக்காலமாக முஸ்லீம்களது உணவு,உடை,அவர்களது வாழ்விடம் வியாபாரம், மத ஸ்தாபணங்களினை தாக்குவதற்கு இந்த அரசின் அனுசரனையில் ஒரு பௌத்த இயக்கம் இயங்கி வருகின்றது.  அவர்கள் சொல்லுகின்றனர் நாங்கள் சீருடையற்ற பொலிஸ்காரர்கள். ஆனால் இந்த பௌத்த இயக்கம் அத்தனைக்கும் முஸ்லீம்கள் மிகவும் பொருமை காத்து வருகின்றார்கள். அதற்காக முஸ்லீம்களிடம் நான் ஜே.வி.பி கட்சியின் தலைவன் என்ற ரீதியில் நன்றி தெரிவிக்கின்றேன். ஏன ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நேற்று கொழும்பு 10 ல் உள்ள தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்ணனியின் ஸ்தபாகர் தினத்தில் பிரதான உரையை நிகழ்த்துவதற்காக ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் 'தேசிய ஜக்கியத்தினை கட்டியெழுப்புவதற்கு எதிர் நோக்கும் சவால்' என்ற தலைப்பில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வு முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது. கௌரவ அதிதியாக ஈராக் நாட்டின் தூதுவர் கத்த்hன் தாகா கலந்து சிறப்பித்தார்கள்.  அமைச்சர் ரவுப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய அனுகுமார திசாநாயக்கா மேலும் தெரிவித்தாவது,

நான் இந்த கூட்டத்திற்கு வரும்போது பத்தரமுல்லையில் இருந்து புறப்பட்டு வந்தேன். பத்தரமுல்லையை வெசாக் வலயம் அங்கு பிரகடணப்படுத்தப்பட்டிருந்தது. அந்தப் பிரதேசத்தில் பௌத்த மத கலாச்சாரம், அதே போன்று மருதாணை சாஹிரா வித்தியலயத்தை நான் தண்டி வரும்போது அங்கு தொழுகைக்கு அழைக்கும பாங்கு ஓதப்படுகின்றது. கொம்பணிவீதியில் வரும்போது அங்கு கிரிஸ்த்துவ தேவலாய தேவார நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதே போன்று சிலேவ் ஜலண்டிக் கருகில் வரும்போது அங்கு ஹிந்துக்கோவில் மணி ஒலித்தல் கேட்டது. இதுதான் இந்த இலங்கை நாட்டின் சகல சமுகங்களும் ஜக்கியமாக தத்தமது மத அனுஸ்டானங்களை செய்வதற்கு ஏகுவாக இலங்கை திருநாடு இருக்க வேண்டும்.  எல்லோரும் ஒரு இனம்தான் இருக்க வேண்டும். அல்லது பௌத்த மத கலாச்சார கொடி மட்டுமே பறக்க வேண்டும் எனச் சொல்வது மடைமை. 
 
முஸ்லீம் பெண்களது அபாயா பர்தா அணிந்தவர்கள் தமிழ் பெண்கள் பொட்டுவைத்து முக்கில் கொலிசு அணிந்தவர்களாகவும் அதே போன்ற கிரிஸ்த்துவ பொள்த்த கலை கலாச்சார ரீதியில் இந்த நாட்டில் பிறந்த மணிதன் தான் வாழும் உரிமை உண்டு. அதனை யாராளும் தடுக்க முடியாது.  கடந்த காலத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த கேரத் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக இருந்த போது அந்நேரத்தில் தான் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கு பாடசாலை சீருடையில் முஸ்லீம்பெண்களுக்கு மேலதிக துணி ஒன்று அவர்களது கலை கலாச்சாரத்திற்கு ஏற்ப வழங்கவேண்டும் என்ற அரச மட்டத்தில் தீர்மாணத்தை வழங்கியவர்.

வில்பத்து வணபிரதேசத்தில் முஸ்லீம்களை குடியேற்றியதாகச் சொல்கின்றார்கள். ஆனால் இவர்கள் ஒருபோதும். அமேரிக்க கொம்பணி ஒன்றுக்கு அவ்விடத்தில் வாழை தோட்டச் செய்கை 2000 ஏக்கரை அரசு வழங்கியிருக்கின்றது. அதே போன்று கந்தலாய் பெலவத்தை போன்ற இடங்களில் எல்லாம் 4000 ஏக்கரை வழங்கியிருப்பது பற்றி யாரும் இங்கு பேசப்படுவதில்லை. அரசியல் நோக்கங்களுக்காக வணவல திணைக்களத்தின் பணிப்பளர் வில்பத்து பகுதியில் முஸ்லீம்களை மீளக் குடியேற்றுத்தல் என்றே அவர் அனுமதி அளித்த கடிதத்திற்கு தலைப்பிட்டுள்ளார். அதிகாரிகளே ஒரு இனத்தின்பெயரைக் குறிப்பிட்டு அங்கு இனங்கடையே பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். எனவும் தெரிவித்தார்.
 
(அஸ்ரப் ஏ சமத்)
Jaffnamuslim

தம்புள்ள , அளுத்கம பிரச்சினைகளை எடுத்துரைத்தார் அமைச்சர் ஹக்கீம் ??? (ஜனாதிபதியிடம்)

அஸ்லம் அலி:  தம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் அங்கு தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நிறுத்துவதாகவும், அது தொடர்பில் தாம் முஸ்லிம் அமைச்சர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளார்.
தம்புள்ளை பள்ளிவாசல் மற்றும் அளுத்கமை முஸ்லிம் வர்த்தக நிலையம் தீக்கிரை, ஜனாதிபதி ரவுப் ஹகீமிடம் இன்று அளித்த உறுதிகள்.

மேலும் வாசிக்க.. http://madawalanews.com/news/miscnews/12835
அத்துடன், அளுத்கமையில் முஸ்லிம் வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதன் பின்னணியையும், சூத்திரதாரிகளையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக முழுமையான விசாரணை நடாத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு தாம் பணிப்புரை விடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி அமைச்சர் ஹக்கீமிடம் கூறியுள்ளார்.
 
அமைச்சர் ஹக்கீம், இன்று திங்கள் கிழமை  முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பின் பொழுது நிலைமையை விரிவாக எடுத்துக்கூறிய அமைச்சர் ஹக்கீம், இவ்விரு விடயங்கள் தொடர்பிலும் முஸ்லிம்கள் மத்தியில் பலத்த அதிருப்தி நிலவுவதையும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்துள்ளார்.
 
தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கும், முஸ்லிம் அமைச்சர்களுடன் அது பற்றி கலந்தாலோசிப்பதற்கும் இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி, அளுத்கமை சம்பவத்திற்கு வழிகோலியதாக கூறப்படும் காரணிகள் புனைந்துரைக்கப்பட்டதாகவே தமக்கும் புலப்படுவதாகவும், எவ்வாறாயினும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை நிலைமையைக் கண்டறிந்து அந்த விடயத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறியுள்ளார்.
அளுத்கமை வர்த்தக நிலைய எரியூட்டல் சம்பவத்தைப் பொறுத்த வரையில் அது மிகவும் பாரதூரமானதென்றும் அங்கு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிஸாரும், பாதுகாப்பை பலப்படுத்த படையினரும் தவறி விட்டனர் என்றும் அமைச்சர் ஹக்கீம் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார்.  
 
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஸ்ரீ.ல.மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின்
ஊடக ஆலோசகர்

Offline Publishing வசதியுடன் கூடிய FACEBOOK அப்பிளிக்கேஷனின் வெளியீடு



கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய பேஸ்புக் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இப்புதிய பதிப்பில் முன்னர் எப்போதும் இல்லாதவாறு இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட போதிலும் டெக்ஸ்ட் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.

Facebook - screenshotஇதனால் செல்பேசிகளுக்கான சமிக்ஞைகள் கிடைக்காத போதிலும் பேஸ்புக்கில் படங்களை பதிவேற்றம் செய்ய முடியும்.

இவ்வசதி Offline Publishing என அழைக்கப்படுகின்றது.

இந்த அப்பிளிக்கேஷனை கூகுளின் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து தவிரறக்கம் செய்துகொள்ள முடியும்.
                                          தரவிறக்கச் சுட்டி

நோய் எதிர்ப்பு சக்தி(Immunity)என்றால் என்ன?

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.
ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.

எதிர்ப்பு சக்தி வகைகள்:
நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity),
உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity)
என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity)
இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றன. இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்கூடியவை.
அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் (Neutrophils, Bosophils, Eosinophils) தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.

தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்த (Adaptive Immunity)இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது Lymphocytes என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.
உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity)மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும்போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.

எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது? நோய்க் கிருமிகள் நுழையும்போது, அதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறது. இந்த செயல்பாட்டின்போது உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்துழைப்போடு விரைந்து செயல்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும், சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணையாக இருக்கின்றன. இவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்து, நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கின்றன.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலே நிகழ்கின்றன. சில நேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வியடையும் போதுதான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றன. காய்ச்சல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் இவையெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்களே ஆகும். அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப்படுகிறது. சளியின் வழியாக கிருமிகள் அப்போது வெளியேற்றப் படுகின்றன.

புண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும்போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இவை, அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.
வெள்ளை அணுக்களில் (Neutrophils, Bosophils, Eosinophils ), ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன.
நோய் எப்போது ஏற்படுகிறது?உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன.
நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில:

1. பலகீனமான உடலமைப்பு
2. மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்
3. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது
4. மது, போதைப்பொருள் பழக்கம்
5. புகைப்பழக்கம்
6. தூக்கமின்மை
7. சர்க்கரை நோய் ,

இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.

நோய் தொற்றைத் தவிர்க்கசாக்கடை, கழிவு நீர் தேங்குதல், சாலையோரத்தில் கொட்டப்படும் காய்கறி மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் தங்குமிடத்தை சுகாதாரமாக வைத்திருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும்.

கை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. இந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.
கையுறைகள் போன்றவற்றை அணியும்முன் அவை முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
புகை பிடிக்கும் பழக்ம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்.
மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். நெகிழ்வாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும். தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டுஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

நோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவாகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அனைத்து பழங்களும், காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இவற்றில் Anti oxidants அதிகமாக உள்ளது. கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.

வேதிப்பொருள்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது.
காபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு (Healthy life style) வாழ்வதே.

http://www.readislam.net/portal/archives/2345

தம்புள்ள பள்ளிவாயல் நிருவாகிகளின் கவனத்துக்கு...!

அன்புடையீர்
 
அஸ்ஸலாமு அலைக்கும்
 
தம்புள்ள பள்ளிவாயலை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்க்கு பள்ளி நிருவாக சபை அல்லது நிருவாக சபைத் தலைவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இணைய தள மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனவே தாங்களது இந்த ஒரு தலைப்பட்ச்சமான முடிவானது அவ்வளவு தூரம் ஆரோக்கியமானதாக இருக்க முடியாது என்றே கருதுகின்றேன். ஏனெனில் தினமும் பிரச்சினைப்பட்டுக் கொண்டு இருப்பதை விட விட்டுக் கொடுத்து நிம்மதி அடைவோம் என்று நீங்கள் நினைக்கலாம் என்றாலும் இது உங்களுக்கு தற்காலிகமானதொர நிம்மதியாகத்தான் இருக்குமே தவிர அது நிரந்தர நிம்திக்கானத் தீர்வாக ஒரு நாளும் இருக்கமுடியாது என்பது யதார்த்தம். 
 
ஏனெனில் பொளன்னறுவ அனுராதபுர பளய நகரம் மிஹிந்தலை தம்புள்ள உட்பட இது போன்ற இன்னும் பல வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த நகரங்கள் எங்கெல்லாம் பௌத்தர்களின் புனித நகரங்களாக அடையாளப்படுத்தப்;பட்டுள்ளதோ அவைகள் அனைத்தும் பௌத்த மயமாக்கப்பட்டு தனி பௌத்தரகளைக் கொண்ட நகரமாகவும் ஆக்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்கு. 
 
இந்த அவர்களின் இலக்கின் முதற்கட்ட கட்ட நடவடிக்கை பொளன்னறுவ தனி பொத்தமயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறே அனுராதபுர பளய நகரில் முஸ்லிம்களின் பூர்விகத்தைப் பறைசாட்டிக் கொண்டிருந்த பள்ளி வாயல் அண்மையில் டோசர் இயந்திரம் மூலம் தரை மட்டமாக்கப்பட்டது அத்துடன் அந்த இடத்தில் வசித்து வந்த முஸ்லிம் குடும்பங்கள் அனைத்தும் நீராவி என்ற இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆதலால் அந்த நகரமும் இன்று பௌத்த மயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டு விட்டது இந்த விடயத்திற்கு ஊடகங்கள் எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுத்ததாகத் தெரியவில்லை காரணம் அது சிநுக சிநுக திட்மிட்ட அடிப்படையில் பல ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஒரு செயற்திட்டமாகும்.
 
இந்த நிலை தம்புள்ளைக்கும் வந்து விடக்கூடாது என்றே விரும்புகின்றேன் எனவே தாங்களின் முடிவை மீண்டும் ஒரு முறை மீழ் பரிசீலனைக்கு உட்படுத்தி நம் சமூத்தின் ஆண்மீக மற்று அரசியல் தலைமைகளுடன் ஆளமானதொரு ஆலோசனை நடாத்தப்படுதல் மிகவும் சிறந்ததும் அவசியமானதும் எனக்கருதுகின்றேன்.
 
அத்துடன் தாங்களின் இந்த அவசர முடிவு தொடர்பாக பின்வரும் சில கேள்விகளை உங்கள் சிந்தனைக்;கு முன் வைக்கலாம் என்று விரும்புகின்றேன்.
 
1. நிருவாக சபையோ அல்லது தலைவரோ நீங்கள் நினைத்த மாத்திரத்தில் ஒருதலைப்பட்ச்சமாக இவ்வாறானதொரு முடிவை அவசர அவசரமாக எடுத்திருப்பது சரியானதுதானா? 
 
ஏனெனில் இது ஒன்றும் தம்புள்ள வாழ் உங்களுக்கு மட்டும் சொந்தமான ஒரு பிரச்சினை அல்ல மாறாக நாட்டில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களுடையவும் பொதுவான பிரச்சினையாகத்தான் அன்று முதல் இந்த நிமிடம் வரைக்கும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நீங்கள் ஒரு போதும் தனித்து விடப்படவில்லை.
2. குறைந்த பட்ச்சம் தகவல் கிடைத்த நிமிடத்திலிருந்து இந்த நிமிடம் வரை களமிறங்கி உங்களோடு அவசர அவசரமாச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களான அமைச்சர்களான ரிஷாட் பதிய்யுத்தீன்  பைசர் முஸ்தபா ஹரீஸ் தௌபீக் மற்றும் மாகான சபை உறுப்பினரான அஷாட் சாலி ஆகியோர்களது ஆலோசனைகளாவது இந்த உங்களது தீர்மானம் பற்றிய விடயத்தில் பெறப்பட்டதா?
 
3. அரசால் மாற்றீடாக வழங்கப்படவுள்ள இடத்திற்கும் எதிர்காலத்தில் இப்படியானதொரு நெருக்கடி வரமாட்டாது என்பதற்கு உத்தரவாதம்தான் என்ன? அவர்கள் ஆயிரம் ஆயிரம் உறுதி மொழிகளையும் உத்தரவாதங்களையும் கொடுத்த போதிலும் அவற்றை நம்ப முடியுமா?
4. இன்று புனித பூமி எனும் போர்வையில் அதி புன்னியம் வாய்ந்த பள்ளியையே அகற்றுபவர்கள் நாளை தம்புள்ள சிங்களவர்களின் பூர்வீகப் பூமி எனவே முஸ்லிம்கள் யாரும் இங்கே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது வெளியேற வேண்டும் என்று விரட்டியடிக்கப்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
 
5. தம்புள்ளையில் முஸ்லிம்கள் பல தசாப்த்தங்களாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்பதற்க்கு உள்ள ஒரேயொரு அத்தாட்ச்சி இந்த பள்ளிவாயல் ஒன்று மட்டுமே. இதனையும் தாரவாத்துக் கொடுப்பதனால் அங்கு முஸ்லிம்களின் இருப்புக்கே அது அச்சுறுத்தலாக அமைந்து விடாதா?
6. இந்த விட்டுக் கொடுப்பானது பல தசாப்தமாக இதேவிதமான பிரச்சினையில் இருந்து கொண்டிருக்கும் மிஹிந்தலை பள்ளிவாயல் போன்று நாட்டின் பல பாகங்களிலும் இருக்கும் இன்னும் ஏராளமான பள்ளிவாயிற்க்கள் மத்ரஸாக்கள் போன்றவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா?
எனவே தாங்கள் தீர்மானம் எடுப்பதற்கு முன் மேற்படி கேள்விகளுக்கு விடையைக் கண்டு கொண்டு அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்வதுதான் ஆரோக்கியமானதும் ஆக்கபூர்வமானதும் மற்றும் நமக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றத்தரக் கூடியதாகவும் இருக்கும்.
 
தற்காலிக விடிவுக்காக ஒவ்வொன்றாகப் பறி கொடுத்து இறுதியில் நமது இருப்பையே பறி கொடுப்பதை விட போராட்டத்துடனாவது நமது இருப்பைத் தக்க வைத்தக் கொள்தல் சிறந்ததல்லவா.
 
சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்ää பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.(அல்-குர்ஆன்: 3: 159)
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது ஈருலக வாழ்விற்க்கும் பாதிப்பேது ஏற்பட்டு விடாத வகையிலான முடிவுகளையும்  தீர்மானங்களையும் எட்டச் செய்வானாக.
முனாப் நுபார்தீன்.
 
Jaffnamuslim