கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

துர்ப்பாக்கிய நிலையில் எமது முஸ்லிம் உம்மத்!!!

இன்று காலனித்துவ சக்திகளது பலம் ஓங்குவதில் எமது முஸ்லிம் தலைமைகள் அதீத அக்கறையுடன் செயற்படும் துர்ப்பாக்கிய நிலையில் எமது முஸ்லிம் உம்மத்!

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் நிறுவிய இஸ்லாமிய அரசும் அதனைத் தொடர்ந்து வந்த குலபாக்களது ஆட்சிமுறையும் முஸ்லிம்களது கண்ணியம் மற்றும் உடைமைகள் காக்கப்படவும் தீனுல் இஸ்லாம் உலகில் சகல துறைகளிலும் அமுலாக்கப்படவும் வழிவகுத்தது. மேலும் “ரோம்” மற்றும் “பாரசீகப் பேரரசுகளை” தம்வசப்படுத்தி இஸ்லாத்தை பரவலாக்கம் செய்ய வழிவகுத்தது. உலகில் மூன்றில் இரண்டுபகுதியை தம்வசப்படுத்தி உலக தலைமைத்துவத்தை வழங்கியது.

1924 உதுமானிய கிலபா வீழ்ச்சியுடன் முஸ்லிம்களுக்கான ஒரே தலைமை
அழிக்கப்பட்டதன் விளைவாக முஸ்லிம்கள் 57 தலைமைகளான பிரிந்து காலனித்துவ சக்திகளது அடிவருடிகளால் சர்வாதிகார முறையில் ஆட்சிசெய்யப்பட்டார்கள்.
இவர்கள் தேசிய எல்லைக்குள் முஸ்லிம்களது வளங்கள், இராணுவம் முடக்கப்பட்டு மதஒதுக்கல் சிந்தனை அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட முதலாளித்துவ நலன்களை காக்கும் ஜனநாயக ஆட்சிமுறைமூலமும் மன்னர் ஆட்சி முறைமூலமும் முஸ்லிம்கள் ஆட்சிசெய்யப்பட வழிவகுத்தார்கள்.

இவர்ளிடம் இஸ்லாம் மேலோங்கவேண்டும் குர்ஆன் சுன்னாவின்படி வாழ்வியல் விவகாரங்கள் ஒழுங்குபடுத்தப்படவேண்டும் எனும் சிந்தனைப் போக்கோ அல்லது முஸ்லிம்களது நலன்கள் பேணப்பட்டு அவர்களது கண்ணியம் பேணப்படவும் இஸ்லாத்தினது பொது எதிரிகள் உரிய முறையில் நடத்தப்பட்டு தீனுல் இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் எண்ணமோ இருக்கவில்லை.
இவர்கள் குப்பார்களான காலனித்துவ சக்திகளுடன் கைகோர்த்தபடி முஸ்லிம்கள் கருவறுக்கப்படுவதிலும் தங்கள் சுய நலன்களுக்காக முஸ்லிம் உம்மத்தை கூறுபோட்டு பலமிழக்கச்செய்வதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

இத்தகைய இழிநிலைகளின் விளைவாக இலட்ச்சக்கணக்கான எமது முஸ்லிம் சகோரதர சகோதரிகளது உயிர்கள், உடைமைகள் அழிக்கப்பட்டதனை நாம் ஈராக், ஆப்கானிஸ்தான், காசா, மாலி, பர்மா, எகிப்து சிரியா,கஷ்மீர் போன்ற நாடுகளில் காணக் கூடிதாக உள்ளது.
இன்று முஸ்லிம்களுக்கான ஒரே தலைமையான கிலாபா அரசு இல்லாததனாலும் “முஸ்லிம்களது பாதுகாப்பு அரணாகிய இராணுவம்” தேசிய எல்லைக்குள் முடக்கப்பட்டு கூறுபோடப்படடுள்ளதாலும் பலம் குன்றிய நிலையில் முஸ்லிம் உம்மத் காணப்படுகிறது.

அதிலும் நாம் கைசேதப்படும் துர்பார்க்கியமான நிலையாதெனில் எமது முஸ்லிம் இராணுவத்தினரையே எமது சிறுவர்களை, முதியோர்களை, சகோதர சகோதரிகளை கொன்று குவிக்குமளவுக்கு காலனித்துவ சகதிகள் திட்டமிட்டு இன்றைய முஸ்லிம் தலைமைகளை வழிநடாத்துவதனை காணமுடிகிறது.

அதன் ஒரு மெகா வடிவமாக இன்று அமெரிக்கா தலைமையில் காலனித்துவ சக்திகள் அணிதிரண்டு சிரியாவில் முஜாஹிதீன்களை கருவறுக்க களமிறங்கியுள்ள நிலையில் எமது முஸ்லிம் தலைமைகள் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து எகிப்தில் இஸ்லாம் வந்துவிடக்கூடாது என்பதற்கு “அல்-சிசியை” பயன்படுத்தி ஆட்சிகவிழ்ப்பை செய்தது போல் சிரியாவில் “முஜாஹிதீன்களது கை மேலோங்கி” அங்கு மக்கள் கோரும் ஆட்சிமுறையான கிலாபா அரசு நிறுபவப்பட்டுவிட்டால் தங்களது ஆட்சி
பீடங்களுக்கு கதிரைகளுக்கு பேராபத்து என்பதனை உணர்ந்து குப்பார்களது
அணியினைப் பலப்படுத்துவதனைக் காணலாம்.
ஆனால் அல்லாஹ் இவர்களது அனைத்து சதிகளையும் முறியடிக்கும் மிகப்பெரிய சதிகாரன் என்பதனை வெகுவிரைவில் இவர்கள் உணர்வார்கள்.
“முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தர விரும்புகிறீர்களா?” (4: 144)

“எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.” (5: 52)

“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். “(61:8)

0 comments:

Post a Comment