கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அல்லாஹ்வுக்கு நன்றி கூறியவனாக, இஸ்லாமிய சட்டம் நடைமுறைக்கு வரும் - புரூணை சுல்தான்

புரூணையில் ஒரு கடுமையான இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அறி முகப்படுத்துவதை அந்நாட்டு தலை வர் அறிவித்துள்ளார். திருட்டுக் குற றத்திற்கு உடல் உறுப்புகளை துண் டிப்பது மற்றும் விபசாரத்திற்கு கல் லெறிந்து கொல்வது போன்ற ஷரீஆ தண்டனைகள் அடுத்த மூன்று ஆண் டுகளில் கொண்டுவரப்படவுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டிருந்தது.

புரூணை அயல் நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேசியாவைப் போலல்லாமல் ஏற்கனவே இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக கடை பிடித்து வருகிறது. அங்கு மதுபானம் விற்கவோ, வாங்கவோ தடையுள்ளது. 
சுல்தான் பொல்கியாவினால் ஆட்சி செய்யப்படும் சிறிய நாடான புரூ ணையில்; எண்ணெய் மற்றும் எரி வாயு ஏற்றுமதியால் செல்வம் கொழிக்கிறது. இங்கு முக்கால் பங்கினர் மலே முஸ்லிம்கள் என்பதோடு குறிப்பிடத்தக்க அளவில் பௌத்த, கிறிஸ்தவ சமூகங்களும் வாழ்கின்றனர்.
 
"எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி கூறியவனாக நாளை (இன்று) மே முதலாம் திகதி முதல் ஷரிஆ சட்டத்தின் முதலாவது கட்டம் நடை முறைக்கு வரும் என்பதை நான் அறிவித்துக்கொள்கிறேன். அடுத்த கட்டங்கள் தொடர்ந்து அமுல்படுத்தப்படும்" என்று புரூணை சுல்தான் நேற்று அறிவித்தார்.
 
எதிர்வரும் 3 ஆண்டுகளில் படிப்படியாக அமுலுக்கு வரும் இந்த குற்றவியல் சட்டத்தில் முதல் கட்டத் தில் அபராதம் மற்றும் சிறைத்தண்ட தண்டனைகளே அமுலுக்கு வருகிறது. தொடர்ந்து இரண்டாவது கட்டத்தில் உறுப்புகளை துண்டிக்கும் தண்டனைகள் அமுலுக்கு வரவுள்ளன. தொடர் ந்து மூன்றாவது கட்டமாக விபசாரம், ஒருபால் உறவு போன்ற குற்றச் செயல்களுக்கான கல்லெறி யும் தண்டனை அமுலுக்கு வரும். 
 
புரூணையின் சிவில் நீதிமன்றங்கள் பிரிட்டன் சட்டங்களுக்கு அமைய இதுவரை காலமும் இயங்கிவந்தது. திருமணம், வாரிசுரிமை போன்ற குடும்ப விவகாரங்களுக்கே ஷரிஆ நீதிமன்றம் இயங்கி வந்தது.
 
jaffnamuslim

0 comments:

Post a Comment