கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிட முஸ்லிம் பாலிகாவிற்கான காணி கொள்வனவுக்கான நிதி சேகரிப்புப் பணிகள் ஆரம்பம்! ஆரம்ப நிகழ்வில் தன் தங்க மாலையை வழங்கி ஒரு தாய் முன்மாதிரி.

24.08.2010அன்று கஹட்டோவிட முஸ்லிம் பாலிகாவின் விசேட கூட்டம் வித்தியாலய அதிபர் உடையார் தலைமையில் நடைபெற்றது. தற்போது பாடசாலை குறிப்பிடத்தக்க சில வசதிகளை பெற்றிருந்தாலும் தொடர்ந்து வருகின்ற மாணவிகளின் வசதிக்காகவும் கேட்போர் கூடம், நூல்நிலையம், கணிணி அறை மற்றும் ஆய்வு கூடம் என்பனவற்றை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும் ஏற்ற வகையில் மூன்று மாடிக் கட்டிடமொன்றை கட்டுவதற்கான முயற்சியில் பாடசாலை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கான நிதியை மேல்மாகாண முதலமைச்சர் இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு முன்வந்துள்ள நிலையில் மேற்படி கட்டிடத்ததை நிர்மாணிப்பதற்கான காணியின் அவசியம் தீவிரமாக உணரப்பட்டதாலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. விடுமுறை நாள் என்பதாலும் றமழான் காலம் என்பதாலும் இக்கூட்டத்திற்கு பெற்றோர் திரளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் வருகை தந்தோரின் தொகை மிகவும் குறைவாகவே இருந்தது. இருப்பினும் இக்கூட்டம் நம்பிக்கையூட்டும் வகையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதன் தேவை குறித்து பல கோணங்களில் உணர்வு பூர்வமாக மௌலவி முஜீப் உரையாற்றியதைத் தொடர்ந்து ஒரு தாய் தனது தங்க மாலையை வழங்கி நிதி சேகரிப்புக்கு ஒரு சிறந்த முன்மாதிரியை ஏற்படுத்தினார். அத்துடன் பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றிய ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தனது ஒரு மாதத்துக்குரிய சம்பளப் பணத்தை இப்பணிக்காக வழங்கியமையும் மற்றொரு முன்மாதிரியாகும். மொத்தமாக 30பேரளவில் கலந்து கொண்ட இந்த ஆரம்பக் கூட்டத்தில் சுமார் 50,000 ரூபா சேகரிக்கப்பட்டமை விசேடமாக குறிப்பிடல் வேண்டும்.
மேற்படி காணிக் கொள்வனவிற்காக சுமார் பத்து இலட்சம் ரூபா தேவைப்படுகிறது. இதில் அயலவரான செய்க் றிஸ்வானுர் ரஹீம் அவர்கள் பாடசாலையின் சில நிலப்பகுதிகள் தனது வீட்டு வளவுக்குள் வந்திருப்பதற்குப் பதிலாக வழங்கும் ரூபா மூன்று இலட்சம் கையிருப்பில் இருப்பதாகவும் மீதி ஏழு இலட்சத்தையும் பெற்றோர் மற்றும் பரோபகாரிகளின் உதவியால் திரட்டுவதாகவும் இதற்கான நிதி சேகரிப்புக்குழு தீர்மாணித்துள்ளது.
நன்மைகள் அள்ளி வழங்கப்படுகின்ற இந்த றமழானில் எமது பெண்களின் கல்விக்காக வாரி வழங்க வேண்டும் என்பது எமதும் எதிர்பார்ப்பாகும்.



   

பள்ளிவாசல் சம்மேளனத்தின் கவனத்திற்கு!

07.08.2010 அன்று அல்பத்ரியாவில் இடம்பெற்ற இச்சம்மேளனத்தின் அங்குரார்பனக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றதை நாம் ஏளவே உங்களுக்கு அறியத்தந்திருந்தோம். அந்தக் கூட்டத்தின் சபையோர் கருத்துப் பரிமாற்றத்தின் போது ஒரு பிரதர் இந்த முயற்ச்சியைப் பாராட்டிப்பேசியதோடு இந்த சம்மேளனத்திடம் சிகரட் சம்பந்தமாக ஒரு வேளைத்திட்டத்தையும் சுட்டிக்காட்டிச்  சென்றார். எமது பள்ளி வாசல் சம்மேளனமும் இதனை முன்னுதாரணமாகக் கொண்டு இவ்வாறான ஒரு வேளைத்திட்டத்தில் களமிறங்குவார்களா என்று பொருத்திருந்து பார்ப்போம்.


அங்குரார்பனக் கூட்டம்

ஜனாஸா அறிவித்தல்

மீவளையைச் சேர்ந்த M.I. உம்மு ஸவ்தா காலமானார்.இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

அன்னார், ஸபீகுல் பாயிஸ் அவர்களின் மனைவியும், உம்மு ஸஹ்ரா, அப்துல் நஸார், உம்மு சகீலா, முஹம்மத் நளீர் ஆகியோரின் தாயாரும் தாஸிம் அய்னதுஸ்ஸஹ்ரா,ஹம்ஸதுல் இனாயா, ஆகியோரின் சகோதரியும், முஹம்மத் நவ்பர் ஆகியோரின் மாமியும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று(2010.08.19) மாலை 3.00மணிக்கு கஹடோவிட ஹொஹீத் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தீமைகளின் கிளையுதிர் காலம்

அல் ஹஸனாத்தில் வெளிவந்த கவிதையிலிருந்து சில பகுதிகள்.


*தீமைகளின் கிளையுதிர் காலம்*

அதோ...நோன்பு வருகிறது என் கல்பு நோக்கி கலிமா வருகிறது

மண்ணிலோ மண்ணுக்கு அடியிலோ அடுத்த ஆண்டிற்கான பயிற்சி பாசறை‍ வருகிறது.

ஓ...ரமலான் நீ எங்கள் இரத்தத்தை இனிப்பாக்க வருகிறாய் எங்கள் ஆன்மாவின்

அழுக்கெடுக்க வருகிறாய்...

வா...அருகில் வா,

இனி எங்கள் வீட்டுத் தீமைகள் நெருப்பின் வாடை நுகரும்..

இனி என் தொழுகையின் அறுந்து போன ஆத்மிக நரம்புகள் உயிர் கொள்ளும்..

நடு இரவில் வியர்வையோடு விழிக்கிறேன் ஓ..ரமலான் வருகிறது. என் இதயத்தையும்

வீட்டுக் கதவையும் நட்சத்திரங்களையும் அலங்கரிக்கின்றேன்.

நாளைய ஸஹருக்கு தயாராகின்றேன். தக்வா குத்பா ஓதுகின்றது, தாகமும் பசியும்

யாருக்கு வேண்டும்?

நெற்றிகள் ஸூஜூதில்‍‍‍_கிடக்குமே கால்கள் கண்ணீரில் தேர் விடுமே, கொஞ்சக்கூடிய

பிஞ்சுக் கால்களும் தராவீஹில் வீங்குமே

இடக்கை அறியாமல் ‍_ சிலரின் வலக்கையில் இதயங்கள் முளைக்குமே _அவை நோன்பு கால உயிரோவியங்கள்

நோன்பு ஒன்றும் காலையில் தூங்கி மாலையில் எழுந்து ஈத்தம் பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல.

நோன்பு – மரம், இந்த மரம் மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்

நோன்பு - குழந்தை இந்தக் குழந்தை தாய்க்கும் பாலூட்டும்

நோன்பு -சுவனத்து வாகனம் இது மனிதனின் இதயத்திற்கும் பெட்ரோல் ஊற்றும் திரும்பிப் பாருங்கள் வரலாற்றுப் பார்வையில் நோன்பு சாதனை

இஸ்லாத்தின் ஜீவ மரண போராட்டம் ‍_ பத்ர் நோன்பு 17ல் தான் முன்னூற்றுப் பதினேழு முஹம்மத்கள், ஆயிரம் அபூஜஹ்ல்களின் கதை முடிந்தது.

ரமலான் 10ல் தான் ஏழை வயிற்றுக்குள் ஸகாத்துல் ஃபித்ராவின் சரித்திரம் புகுந்தது.

நோன்பு 9‍ல் தான் அஹ்ஸாப் யுத்தத்தின் அடி மண்ணிலே வீர மறவர்களின் வியர்வை விழுந்தது.

ரமலான் 21 ல் தான் தபூக் யுத்தத்தின் தடயங்களில் உரோமர்களின் உரோமங்களும் விழுந்தது.

ரமலான் 8 ல் தான் ஃபத்ஹ் மக்கா‍_ மக்கா வெற்றியில் மானுட இருள் மண்டியிட்டு ஓய்ந்தது.

தாரிக் பின் ஸியாத் கடலின் கரையடைந்து வந்த கப்பலை கொளுத்தி வெற்றி அல்லது வீர மரணம் என்று களம் புகுந்தபோது..ஸ்பெயினை இஸ்லாம் தழுவிக் கழுவிய போது ரமலான் 19!

ஸலாஹீத்தீன் அய்யூபி சிலுவை யுத்தத்தில் திருச்சபையை சிலுவையில் அறைந்து விட்டு வியர்வை துடைத்த போது நோன்பு 29!

ஐன் ஜாலூத்தில் தாத்தாரியர்கள் வியர்த்தோடிய போது நோன்பிற்கு வயது 7!

என் இனிய நண்பனே! தயாராகு இது இலையுதிர் காலமல்ல! தீமையின் கிளையுதிர் காலம்.

இந்த ரமலானை நாம் கைநீட்டி வரவேற்போம்.

"மரிக்கார்" அல் ஹஸனாத் ஆகஸ்ட் 2009, ரமலான் 1430

ரமழானை வரவேற்போம்/பயன்படுத்துவோம்.

நேற்றைய தினம் தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து மௌலவி ஹஸன் பாரிஸ் அவர்களினால் கஹடோவிட தௌஹீத் பள்ளியில் ஆற்றப்பட்ட உரை

நன்றி http://www.abuhafee.blogspot.com/

வருடா வருடம் எம்மைத் தரிசித்துச் செல்லும் விருந்தாளியே ரமழான் ஆகும். அது இவ்வருடமும் எம்மைத் தரிசித்துள்ளது. இம்மாதம் ஏனைய மாதங்களைப் போன்று சாதாரணமாக எம்மைக் கடந்து செல்ல முடியாது. அதற்கு நாம் அனுமதிக்கவும் கூடாது. இது நன்மைக்குரிய மாதம், அருளுக்குரிய மாதம், இறைத்திருப்திக்கான மாதம், கண்ணியமான மாதம், சங்கைக்குரய மாதம், தௌபாவின் மாதம், அல்லாஹ்வை நெருங்குவதற்கான மாதம், நோன்பின் மாதம், இரவுத் தொழுகையின் மாதம், வணக்கத்தின் மாதம், அல்குர்ஆனின் மாதம், பாவமன்னிப்பின் மாதமுமாகும். இதற்குச் சிறப்பே இதில் அல்குர்ஆன் இறங்கியதனாலே ஆகும். “ரமழான் மாதம் எத்தகையதெனில் மக்களுக்கு நேர்வழிகாட்டியாக சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துத் தெளிவுபடுத்தக்கூடியதுமான அல்குர்ஆன் இதில்தான் இறக்கியருளப்பட்டது. எனவே, உங்களில் யார் அதையடைகின்றாரோ அவர் நோன்பு நோற்கட்டும்”


(அல்பகரா-185)



நபியவர்கள் இம்மாதத்தில் 03 சந்தர்ப்பங்களை எமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

1। “யார் ரமழானில் ஈமானோடும் கூலியை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவரது முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்”

2. “யார் ரமழானில் ஈமானோடும் கூலியை எதிர்பார்த்தும் நின்று வணங்குகின்றாரோ அவரது முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்”

3. “யார் லைலதுல் கத்ர் இரவில் ஈமானோடும் கூலியை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவரது முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்”



இம்மாதத்தை அடைந்த ஒருவன் தான் சந்திக்கும் இறுதி ரமழானாக இதை நோக்கி வணக்கங்களை அதிகரிக்க வேண்டும். இம்மாதத்தில் அல்லாஹ் ஒரு செயலுக்குரிய கூலியை பண்மடங்ககாக்கி அதை 700 மடங்காக்கித் தருவதற்குத் தயாராக உள்ளான். தினமும் தன் அடியார்களை நரகவிடுதலை செய்கின்றான். நன்மைகளை அள்ளிக் கொடுக்கின்றான், நன்மை செய்யும் உள்ளத்தை ஊக்கப்படுத்துகின்றான். தீமை செய்யும் உள்ளத்தை கண்டிக்கின்றான். இத்தனை சிறப்புக்களைக் கொண்ட இம்மாதத்தில் நாம் இறை மன்னிப்பைப் பெறாவிட்டால் நரகில் இருந்து விடுதலை பெறாவிட்டால் நிச்சயமாக எம்மை விடவும் பாக்கியம் கெட்டவர்கள் வேறு யாராவும் இருக்க முடியாது. சுவனத்தின் கதவு திறக்கப்பட்டு நரகின் வாயில்கள் மூடப்பட்டு ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு நன்மைகளை மாத்திரம் செய்வதற்கான சூழல் ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கும் போது நாம் இம்மாதத்தை இலகுவாகக் கருதவே முடியாது. ரமழானில் நாம் பெறும் பயிற்சி எமது முழுவாழ்விலும் பயனளிக்க வேண்டும். ரமழானில் வணங்கும் சமூகமாகவன்றி ரப்பை வணங்கும் சமூகமாக மாறவேண்டும். வேலைகளைக் குறைத்து, வணக்கங்களை அதிகரித்து, நோன்பு நோற்று, இரவு வணக்கம் புரிந்து, அல்குர்ஆனோடு நெருங்கி உறவாடி அதனை ஓதி சிந்தித்து நடைமுறைப்படுத்தி பிறருக்கு எடுத்துச் சொல்லி இறைவனைச் சார்ந்த சமூகமாக மாற முயற்சிப்போம். நோன்பும் அல்குர்ஆனும் மறுமையில் சிபாரிசு செய்யும் கூட்டத்தில் அங்கத்துவம் பெறுவோம். அநியாயங்களிலிருந்து ஒதிங்கிக்கொள்வோம். மன்னிக்கும் உணர்வை ஏற்படுத்திக் கொள்வோம். எமக்கும் இறைவனுக்கும் இடையில் உள்ள உறவை வலுப்படுத்திக் கொள்வோம். உண்மையான இறையச்சவான்களாக மாறுவதற்கும் இம்மாதத்தை முழுமையாகவும் யாதார்த்தமாகவும் ஆன்மீகரீதியாகவும் வணக்கங்களால் அலங்கரிப்பதற்குரிய வாய்ப்பை வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் ஏற்படுத்தித் தருவானாக!

வாசித்ததில் பிடித்தது - நன்றி Muslimwatch.

சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"
வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"
அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...."
"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?"
"அதில்லை..."
"இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?"
"இல்லை"
"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?"
"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.
"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று
சாக்ரடீஸ்
சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.
மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா?
மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.
எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.
சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா".
சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?"
"ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?"
அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.
நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?"
நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா?
இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்துவிடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்

புனித றமழான் ஆரம்பம்

இன்று 11.08.2010 புதன்கிழமை உலகின் பல இடங்களிலும் நேற்றிரவு ரமழான் மாதத்திற்குரிய தலைப்பிறை தென்பட்டதானால் நோன்பு நோற்றுள்ளனா்.இது சம்பந்தமான சரியான தகவலிற்கு  http://www.moonsighting.com) என்ற இணையத் தளத்தினை பார்க்கவும். எமதூரிலும் வழமைபோன்று பிறையைக் கணக்கிட்டு நோன்பு நோற்கும் குழுவினர் தமது முதல் நோன்பை ஆரம்பித்துள்ளனர். எனினும் இலங்கை நாட்டைப் பொருத்தவரை பிறையைத் தீர்மாணிக்கும் அதிகாரம் ஜம்இய்யதுல் உலமாவிற்கே உரியதால் ஜம்இய்யதுல் உலமாவின் தீர்மானத்திற்கு ஏற்ப இன்றிரவு அல்லது நாளையே பெரும்பான்மையானவர்கள் நோன்பு நோற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் இப்புனித றமாழானை சிறந்த முறையில் கழிக்க எமக்குத் தௌபீக் செய்வானாக!

இதய நோயாளிகளுக்கு பப்பாளி!




கடுமையான காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் பப்பாளி இலை கஷாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது. முக்கியமாக அடிக்கடி இதயத் துடிப்பு அதிகரிப்பதால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பப்பாளி இலை கஷாயம் சிறந்த பலனளிக்கும்.

பப்பாளி இலை கஷாயம் நோயாளியை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது. இதய நோயாளிகளுக்கு நன்றாக முற்றி பழுத்த பப்பாளிப் பழம் மிகச் சிறந்த உணவாகும்.

பப்பாளிப் பழம் ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவைக் குறைத்து, ரத்தக் குழாய்களை நெகிழக் கூடியவையாக ஆக்குவதால், இதய நோயாளிகள் பப்பாளிப் பழத்தைத் தவறாமல் கண்டிப்பாக அவர்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

காலை உணவாக பப்பாளிப் பழத்தை மட்டுமே சாப்பிடலாம். மாலையில் தேநீர் வேளையிலும் பப்பாளிப் பழம் சாப்பிடலாம். ஆனால் இரவில் பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது.

தயாரிப்பது எப்படி?

நிழலில் உலர்த்தப்பட்ட பப்பாளி இலையில் சுமார் 5 கிராம் முதல் 10 கிராம் வரை எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு கோப்பை வெந்நீரில் போட்டு 5 நிமிடங்களுக்கு நன்றாக ஊற விடவும். பின்னர் வடிகட்டி அந்த கஷாயத்தை நோயாளிகளுக்குக் குடிக்க கொடுக்கவும்.

இந்த சிகிச்சையினால் நோயாளியின் உடல் வெப்ப நிலை தணியும். நாடித் துடிப்பின் வேகமும் குறையும்.

பள்ளிவாசல் சம்மேளனம் மக்களின் எதிர்பார்பை மனக்கோட்டையாக்கிட கூடாது!



ஒழுக்கத்தை புறக்கணித்து விட்டு கல்வி பெற முனைந்ததனாலே உலகம் இன்று சமாதனத்தை தொலைத்துள்ளது. ஒழுக்கமும் கல்வியும் எமது இரு கண்களைப்போன்றது என கலாநிதி நபீஸ் நளீமி தெரிவித்தார்.


கஹடோவிட ஓகடபொல பபள்ளிவாசல் சம்மேளனத்தின் அங்குராப்பணக் கூட்டம் நேற்று அல்பத்ரியா ம.வி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முஸ்லிம் உலகு இன்று கல்வியிலே பின்தள்ளப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அமேரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை விட மிகவும் குறைந்ததாகவே முழு முஸ்லிம் உலகிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன.

கல்வி இன்று பொருளதாப் பண்டமாக மாறியுள்ளது. சில முஸ்ஸிம் நாடுகளில் தரமான பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இருந்தும் முஸ்லிம்கள் தமது உயர்படிப்புக்காக ஐரோப்பிய பல்கலைக் கழகங்களையே நாடுகின்றனர். இதன்மூலம் அந்தநாடுகளில் பெரும்தொகையான பணத்தை முதலீடு செய்கின்றனர். அந்தப்பல்கலைக் கழகங்கள் வழங்கும் கல்வியில் ஒழுக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, இப்பல்கலைக் கழகங்களால் உருவாக்கப்படும் புத்திஜீவிகளால் உலக அமைதிக்கு இன்றும் தீர்வுகான முடியாமல் இருப்பது இதற்கான சிறந்த உதாரணமாகும் எனவும் அவர்மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து சம்மேளன உருப்பினர் அல்ஹாஜ் ஜவுஸி அவர்களினால் சம்மேளனத்தின் உருவாக்கம், அதன் எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பவற்றை தமிழ், சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் சிறப்பாக விவரித்தார். பின்னர் இக்கூட்டத்தை சிறப்பிக்க வந்திருந்த நிட்டம்புவ, வீரங்கொல்ல போலிஸ் அதிகாரிகளின் உரை இடப்பெற்றன. இந்த முயற்சியைப் பாரட்டிப்பேசிய அதிகாரி ஓருவர் ஏன் சமூகமளித்த மக்களின் தொகை மிககுறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டத் தவரவில்லை. குறிப்பாக வீரங்கொல்லையில் இருந்து வந்திருந்த பொலிஸ் அதிகாரி அவரது உரையை அவர் மிகவும் இஸ்லாத்துக்கு பரீட்சயமானவரைப் போன்று எமது வரலாரையும் குர்ஆனையும் தொட்டுப் பேசியதை வருகை தந்திருந்த ஊர்மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்ததை அவதானிக்க்கூடியதாக இருந்தது.

அதனைத்தோடர்ந்து எமது ஊரைப்பிரப்பிடமாகவும், ஆரப்பக்கல்வியை எமது பாடசாலையில் பயின்று இப்போது கம்பஹா மாவட்ட தேர்தல் ஆணையாளராக கடமையாற்றிக்கொண்டிருக்கின்ற மொஹமட் (நளீமி) அவர்களின் உரை இடப்பெற்றது. அவர் எமது ஊரின் ஆரம்பகால நிலமைகளையும் இப்பொழுது எமது மக்களிடையேயுள்ள மார்க்கரீதியான பிளவுகளையும் சுட்டிக்காட்டிய அதேவேளை மார்க்கரீதியான ஓருசில விடயங்களுக்காக பள்ளிவாசல்களின் பிரிவுகளையும் நியாயப்படித்தியதோடு  இந்தபிரிவுகள் எமது மாணவர்களை ஒழுக்கவீழ்சியில் தடம்புரல வழியமைக்கக் கூடாது. முக்கியமாக இவ்வாறான விடயங்களில் மாத்திரமாவது ஒன்றினைந்து “வேற்றுமையில் ஒற்றுமைகான்போம்” என்றகருத்துப்படபேசினார்.

பள்ளிவாசல் சம்மேளனம் மக்களின் எதிர்பார்பை மனக்கோட்டையாக்கிட கூடாது!
எமது ஊரின் ஒழுக்கமும் கல்விமேம்பாடும் வெரும் பேச்சுப்பொருளாக காணப்படுகின்றன. எமது சமூகத்தின் உறுப்புக்களை ஒன்றுசேர்பது தவளை நிறுக்கும் கதை என்று கூறப்படுகின்றது.

ஆனால், எமது பள்ளிவாசல் சம்மேளனம் அதனைப் பொய்ப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. இருப்பினும் ஒழுக்கம், கல்விமேம்பாடு ஆகிய இரு கருப்பொருள்களை மையாமாகவைத்து உருவாகிய இச்சம்மேளனம் அதனை வெறும் பேச்சிலேயே இன்னும் இழுத்தடித்து வருகின்றது. இத்தனை மாதங்களாகியும் எந்தச் செயற்பாட்டையும் காணவில்லை.

நேற்று அல்பத்ரியாவில் இடம்பெற்ற இச்சம்மேலனத்தின் அங்குரார்பனக் கூட்டத்திலும் பேச்சைத் தவிரவேறு எந்த செயற்பாடுகளும் காணப்படவில்லை. இக்கூட்டத்தில் சம்மேலனத்தின் திட்டங்கள், மற்றும் அதன் செயற்பாடுகள் என்பவற்றை தெழிவுபடுத்தி மக்களிடம் அதற்கான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பார்கள் என்றுதான் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், யாப்பு இன்றும் எழுத்தில் இருப்பாதாக கூறப்பட்டது. அப்படியானால் நேற்றைய கூட்டம் எதற்கு என்ற கேள்வியும் மக்களிடம் எழுந்துள்ளது?

அனைத்துப் பள்ளிவாசல்களும் ஒன்று சேர்ந்தமையை சகல மக்களும் உள்ளுர வரவேற்கின்றனர். இதில் சந்தேகமில்லை. இந்த வரவேற்பு குறித்தேபசி நேரத்தைக் கழிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. நேற்றைய கூட்டத்தில் ஒரு பொதுமகன் பாடசாலைக்கு அருகாமையில் நடக்கின்ற குற்றச்செயலைக் கூறி கவலைப்பட்டார். இச்சம்மேளனம் எதனையாவது செய்யும் என்ற எதிர்பார்ப்புதான் அந்த பொதுமகனின் கருத்துக்கு அர்த்தமாக கானப்பட்டது. தொடர்ந்தும் இச்சம்மேளனம் பேச்சிலேயே காலத்தை இழுத்தடித்தால் இச்சம்மேளனத்தின் மீது வைத்துள்ள மக்களின் எதிர்பார்ப்பும் மன்கோட்டையாகிவிடும் என்பது ஊர் மக்களின் கருத்தது.

ஹிஜ்ரி 1431 றமழான் ஆரம்பம் – ஒரு கள நிலவர ஆய்வு.

ஹிஜ்ரி 1431 றமழான் ஆரம்பம் ஒரு கள நிலவர ஆய்வு. - Thanks Muslim watch
 
நாம் புனித றமழான் மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். அல்லாஹுத் தஆலாவின் நாட்டம் நம்மைச் சேருமாக இருந்தால் அந்த மாதத்தின் பாக்கியங்கள் நம்மைச் சேரும்.
 
புனித றமழானை எதிர்பார்த்து ஷஃபானின் இறுதி நாட்களை நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
 
இந்த ஷஃபான் மாதம் தலைப்பிறை பார்த்தலின் படி இரு ஆங்கில கிறிகோறியன் நாட்காட்டித் தினங்களில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த ஜூலை 12ம் திகதி மாலை ஐக்கிய அரபு இராச்சியம் தொட்டு மேற்காக உற்ற நிலப்பிரதேசங்களில் தலைப்பிறை தென்பட்டதனால் மத்திய கிழக்கு, ஐரோப்பிய, ஆபிரிக்க மற்றும் அமெரிக்கக் கண்ட நாடுகளில் ஜூலை 13ம் திகதி ஷஃபான் முதலாம் நாளாக அமைந்தது.
 
இலங்கை அடங்கலான ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு கிழக்காக உள்ள நாடுகளில் ஜூலை 14ம் திகதி ஷஃபான் முதல் நாளாக அமைந்தது.
 
13ம், 14ம் திகதிகள் கிறிகோறியன் நாட்காட்டியின் படி இரண்டு வேறுபட்ட நாட்களாக இருந்தாலும், உலகில் முதலில் தலைப்பிறை தென்பட்டதிலிருந்து 24 மணித்தியாலங்களுக்குள்ளாக உலகின் அனைத்துப் பிரதேசங்களிலும் ஒரே சந்திர நாளில் ஷஃபான் ஆரம்பமானது.
 
இதற்கு அமைவாக ஜூலை 13ம் திகதி ஷஃபானை ஆரம்பித்த நாடுகளில் ஆகஸ்ட் 10 ம் திகதியும், ஜூலை 14ம் திகதி ஷஃபானை ஆரம்பித்த நாடுகளில் ஆகஸ்ட் 11ம் திகதியும் ஷஃபான் 29ம் நாளாக அமையும். இந்த நாட்கள் குறித்த பிராந்தியங்களில் றமழான் தலைப்பிறை பார்க்க வேண்டிய நாட்களாகும்.
 
ஆகஸ்ட் 10ம், 11ம் திகதிகள் கிறிகோறியன் நாட்காட்டியின் பிரகாரம் 2 நாட்களாக இருந்த போதிலும் தலைப்பிறை பார்த்தலின் பிரகாரம் 24 மணித்தியாலங்கள் கொண்ட ஒரு சந்திர நாட்காட்டி நாளேயாகும்.
 
இவ்வருடத்தின் றமழானுக்கு முந்திய புவி மைய அமாவாசை ஆகஸ்ட் 10ம் திகதி நேரம் GMT 03.08க்கு இடம் பெறுகின்றது. ஆனால் இலங்கை கொழும்புக்கான புவிப்பரப்பு அமாவாசை ஆகஸ்ட் 10ம் திகதி காலை 7 மணிக்கு இடம் பெறுகின்றது. இத்தினம் சூரியன் கொழும்பில் அஸ்த்தமிக்கின்ற போது, அமாவாசைக்குப் பின் 11 மணித்தியாலம் 27 நிமிடம் மட்டுமே வயதுடைய சந்திரன் மேற்குவானில் இருக்கும். இந்தச் சந்திரன் சூரியன் அஸ்த்தமித்து 12 நிமிடங்களில் தானும் அஸ்த்தமித்து விடும்.
 
சந்திரனின் விலகல் 6 பாகை 19 கலை 12 விகலை ஆக இருக்கும். சூரியன் அஸ்த்தமிக்கின்ற போது சூரியனுக்கும் சந்திரனுக்குமான சார்பு உயரம் 2 பாகை 44 கலை 37 விகலை ஆக இருக்கும்.
 
சந்திரன் சூரியனுக்கு மிக அண்மித்தாக இருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் சந்திரனின் பிரகாசம் பௌர்ணமியின் பிரகாசத்தின் 0.31 வீதமாக மட்டுமே இருக்கும்.
 
-          அமாவாசைக்குப்பின்னான சந்திரனின் குறைந்த வயது
-          சூரியன் மறைந்ததன் பின்னர் குறுகிய நேரம் மட்டுமே வானில் தரிதிருத்தல்.
-          9.2 பாகைக்கும் குறைவான விலகல்
-          சூரியனுக்கு மிக நெருக்கமாக இருத்தல்.
-          புறக்கணிக்கத் தக்க பிரகாசம்
 
மற்றும் ஏனைய அனைத்துக் காரணிகளின் சாதகமற்ற நிலைமைகளின் பேறாக ஆகஸ்ட் 10ம் திகதி இலங்கையின் எப்பிரதேசத்திலும் வெற்றுக் கண்களுக்கு பிறை தென்படாது. வெற்றுக் கண்களுக்கு மட்டுமல் தொலை நோக்கிகளுக்குகூடாகக் கூட அது புலப்படாது.
 
உலகில் முதலில் இம்முறை றமழான் தலைப்பிறை ஆகஸ்ட் 10ம் திகதி தோற்றம் தரக்கூடிய ஆரம்பப் பிரதேரம் தென்னாபிரிக்காவாகும். அதுவும் தொலை தொலைநோக்கிகள் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
 
அதனைத் தொடர்ந்து தென்னமெரிக்க நிலப் பிரதேசத்தில் தலைப்பிறை வெற்றுக் கண்களுக்குத் தென்படும் சாத்தியம் உண்டு. Chile நாட்டிலிருந்து 10ம் திகதி வெற்றுக்கண்களுக்கு தலைப்பிறை தென்பட்டதற்கான அறிவித்தல்கள் கிடைக்கலாம். இன்ஷா அல்லாஹ்.
 
இந்தச் சாத்தியங்களை வைத்துப் பார்க்கும் போது சில முஸ்லிம் நாடுகளில் ஆகஸ்ட் 11ம் திகதி றமழான் முதல் நாளாகக் கொள்ளப்படும் சாத்தியம் இருக்கின்றது.
 
சஊதி அரேபியா கடைப்பிடித்து வரும் உம்முல் குறா நாட்காட்டி முறையின் படி ஆகஸ்ட் 11ம் திகதி றமழான் முதல் நாள் எனத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் 10ம் திகதி சஊதி அரேபியா மக்கா நகரில் தொலை நோக்கிகள் மூலமாகவேனும் தலைப்பிறையைக் காண முடியாது.
 
உம்முல் குறா நாட்காட்டியானது தலைப்பிறை பார்த்தலை அன்றி அமாவாசை மற்றும் சந்திர சூரிய அஸ்த்தமன நேரங்களை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியாகும் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
 
தென்னமெரிக்காவில் (GMT  -5)ஆகஸ்ட் 10ம் திகதி அங்கே சூரிய அஸ்த்தமனத்தில் அவர்களுக்குத் தலைப்பிறை தென்படும் போது இங்கே இலங்கையில் (GMT  +5.30) ஆகஸ்ட் 11ம் திகதி ஸுப்ஹ் தொழுகைக்கான அதான் ஒலித்திருக்கும்.
 
எனவே அங்கே தலைப்பிறை தென்படக் கூடும் என்பதனை இங்கிருந்து கணிப்பிட்டு அங்கே தலைப்பிறை தென்படுவதற்கு முன்னரே இங்கிருந்து நோன்பு நோற்பது அறிவுடைமையாகாது.
 
மேலும், தலைப்பிறையைக் காணாத நாம் அதனை முதன் முதலில் கண்டவர்களையும் முந்திக் கொண்டு அவர்களுக்கு பத்தரை மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே ஸஹர் செய்வதும் அறிவுடைமையானது அல்ல.
 
எனவே தலைநோன்பு நோற்க தொடர்ந்து வரும் ஸஹருக்காகக் காத்திருக்க வேண்டியதுதான்.
 
ஆகஸ்ட் 11ம் திகதி இலங்கையில் ஷஃபான் 30ம் நாளாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்.
 
அதேவேளை ஆகஸ்ட் 11ம் திகதி இலங்கையில் தென்படும் பிறையானது சூரியன் அஸ்த்மித்ததிலிருந்து சுமார் ஒரு மணிநேரம் (இஷா) வரை வானில் தரித்திருக்கும்.
 
சூரிய அஸ்த்தமனத்தின்போது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையிலான இடைக் கோணம் சுமார் 15 பாகை ஆக இருக்கும். மேலும் அமாவாசையின் பின்னான சந்திரனின் வயது 35 மணித்தியாலம் 55 நிமிடமாகவும்,
சந்திரனின் பிரகாசம் பௌர்ணமியின் பிரகாசத்தின் 3 வீதம் அளவானதாகவும் இருக்கும்.
 
எனவே இந்தப்பிறை அதிக பிரகாசத்துடன் அதிகளவு நேரம் வானில் தோற்றம் தருவதனால் அதனை இரண்டாம் நாள் பிறையாகக் கருத இடமுண்டு. ஆனால் இது தவறானதாகும். 11ம் திகதி தென்படும் பிறையே இலங்கைக்கு தலைப்பிறையாகும்.
 
உலகின் முதல் தலைப்பிறை ஆகஸ்ட் 10ம் திகதி தென்னமெரிக்காவில் தோற்றம் தந்ததன் பின்னர் அது இலங்கையில் தோற்றம் தருவதற்கு எடுக்கும் காலம் பதின் மூன்றரை மணித்தியாலங்கள் மாத்திரமே.
 
பதின் மூன்றரை மணித்திலயாலங்கள் என்பது ஒரு நாளின் அரைவாசியிலும் பார்க்கச் சற்று அதிகமான காலமாகும்.
 
எனவே தென்னமெரிக்காவில் 11ம் திகதி நோன்பை ஆரம்பிப்பதுவும் இலங்கையில் 12ம் திகதி நோன்பை ஆரம்பிப்பதுவும் இரு கிறிகோறியன் நாட்களாக இருந்தாலும் சந்திர நாட்காட்டியின் படி ஒரே நாளாகும்.
 
எனவே தேசியப்பிறையைப் பின்பற்றுவதுவும், சர்வதேசப்பிறையை சரியான முறையில் பின்பற்றுவதுவும் ஒரே விடயம்தான்.
 
றமழான் முபாறக்

ஆகில் அஹ்மத்