கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

thumbs.db என்றால் என்ன தெரிந்து கொள்வோமா?

இதை கணணி பயன்படுத்துபவர்கள் ஒருதடவையேனும் உங்கள் கணனியில் கண்டிருப்பீர்கள்.கம்ப்யூட்டரில் thumbs.db என்ற பைல் உள்ளதே, அழித்தாலும் போக மாட்டேன்கிறது, இது என்ன வைரஸா, இல்லை ஸ்பைவேரா? என்று குழம்பியிருப்பீர்கள்.


இரண்டும் இல்லை, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 (SP4) விண்டோஸ் 2003 இவைகளில் சில டைரக்டரிகளில் இந்த பைல் தென்படும். இது அந்தந்த போல்டர்களில் படங்கள் இருந்தால் அதனை தம்ப்நெயிலாக(Thumbnail) கேச் செய்து வைத்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை.

இதன் மூலம் விண்டோஸ் அந்த போல்டரில் உள்ள பைலின் தம்ப்நெயில் வியூவை எக்ஸ்புளோரரில் ஒவ்வொருமுறையும் அந்த பைலை படித்து பின் காட்டுவதற்கு பதிலாக இந்த பைல் முலம் உடனே காட்டுகிறது. விஸ்டாவில் இப்படி தனித்தனியாக அந்தந்த போல்டரில் இல்லாமல் மொத்தமாக ஒரே பைலாக சிஸ்டம் போல்டரில் சேமித்து வைக்கப்படுகிறது.

இந்த பைலின் ஒரே பிரச்சினை வன்தட்டில் சிறிது இடத்தை எடுத்து கொள்வதே. இது மிகச்சிறிய அளவே ஆனாலும், நிறைய போல்டர்களில் இருப்பதை கணக்கிட்டால் ஒரளவு இடம் எடுத்திருப்பது தெரியவரும். இதனை குறைந்த வன்தட்டு இடம் கொண்டிருப்பவர்கள் நீக்க நினைத்தால் கீழே உள்ளதை செய்து பாருங்கள்.

முதலில் thumbs.db வருவதை தடுக்க

1) மை கம்ப்யூட்டடை கிளிக் செய்து அதில்

2) டூல்ஸ் என்பதை மெனுவில் தேர்ந்தெடுத்து

3) அதில் போல்டர் ஆப்சன் என்பதை சொடுக்கி

4) அதில் வியூ டேப் என்பதில்

5) “Do not cache thumbnails” என்பதை செக் செய்ய வேண்டும்.

6) பின்னர் ஒ.கே கொடுத்து

7) மை கம்ப்யூட்டரை கிளிக் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே உருவாக்கப்ப்ட்ட அனைத்தையும் நீக்க

1) ஸ்டார்ட் மெனு சென்று

2) அங்கு உள்ள சேர்ச் என்பதை கிளிக் செய்து

3) பின்வருவதில் All Files and Folders என்பதை தெரிவு செய்து

4) “all or part of the file name” என்பதில் thumbs.db என்று டைப் செய்து

5) Look in box, ல் Local Hard Drives என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

6) தேடலை ஆரம்பித்த பின் ஒரு பெரிய லிஸ்ட் வரும்

7) எடிட் மெனுவில் உள்ள செலக்ட் ஆல் பைல் என்பதை கிளிக் செய்து

8) பின்னர் பைல் என்பதில் டெலிட் கமண்ட்டை அழுத்தி, எல்லாவற்றையும் நீக்க வேண்டும்.

9) பின்னர் சேர்ச் விண்டோவை மூடி விடலாம்.

தரக்குறைவான விமர்சனங்கள் நிறுத்தப்பட வேண்டும்.




காலத்தின் தேவை கருதி மே மாத உண்மை உதயத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஆசிரியர் பக்கத்திலிருந்த கட்டுரையை பிரசுரம் செய்கிறோம்.
.........................................................................................................................................................
இலங்கை இஸ்லாமிய பிரசார வரலாற்றில் பல்வேறுபட்ட இன்னல்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் பிறந்ததே தவ்ஹீத் பிரச்சாரமாகும். ஆரம்ப கால தாஈக்கள் இஹ்லாஸ{டனும் தியாகத்துடனும் ஈமானிய உறுதியுடனும் மேற்கொண்ட போராட்டம் இந்த நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது. அப்போதைய அழைப்பாளர்கள் சகோதர அமைப்புக்களுடன் நாட்டில் சுமுகமான உறவைப் பேணி வந்த அதே நேரம், கொள்கையில் உறுதியுடனும் இருந்தனர். 1940களில் அன்சாரிஸ் ஸ{ன்னா, அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயர்களில் இரு அமைப்புக்கள் இருந்தாலும், இரண்டும் ஒன்று போல் இயங்கி வந்தன.



பின்னர் தஃவாவையும், சமூக சேவையையும் இலக்காகக் கொண்டு சில நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அந்த நிறுவனங்களும் நிர்வாக ரீதியாக தனித்தனியாக இயங்கினாலும் தஃவாக்களத்தில் ஒருவர் மற்றவருக்கு துணையாகச் செயற்பட்டனர். இதனால் தவ்ஹீத் பிரசாரம் நாட்டின் பல பகுதிகளிலும் வீரியமாக முன்னெடுக்கப்பட்டது.



இடையில் மழைக்காலனாய் உருவெடுத்த ஒரு அமைப்பு மற்ற எல்லா அமைப்புக்களையும் விமர்சித்து நிகழ்ச்சிகளை செய்து வந்தாலும் நல்லுள்ளம் கொண்ட தவ்ஹீத் சகோதரர்கள் அந்த அமைப்பைப் புறக்கணித்து அதன் வளர்ச்சியை தடுத்தனர்.



இதனைத் தொடர்ந்து ஏனைய தவ்ஹீத் அமைப்புக்கள் மீது வெறுப்புக் கொண்ட மனநிலையில் ஒரு அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. இதுதான் தவ்ஹீத் பிரச்சாரத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது ‘பிரிவினை மனம்’ கொண்ட பிரசார அமைப்பு எனலாம்.



இதன் எதிரொலியாலும் மற்றும் பல நல்ல நோக்கங்களுடனும் மற்றொரு அமைப்பு உதயம் பெற்றது. அதற்கு தவ்ஹீத் சகோதரர்கள் பேராதரவு அளித்தனர். எனினும் காலப்போக்கில் அது மங்கி மறைந்து செயலிழந்து போனது.



இதனைத் தொடர்ந்து தவ்ஹீத் பிரசாரத்தில் ஒருவித மந்தநிலை ஏற்பட்டு வருவதைக் கசப்பான உண்மையாக நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.



உள் முரண்பாடுகள், தனி நபர் தாக்குதல்கள், விதண்டாவாதங்கள், மார்க்கம் அங்கீகரிக்காத விமர்சனங்கள்…. இவ்வாறு வேண்டத்தகாத பல விபரீதங்களால் தஃவாக் களம் உற்சாகமிழந்து ஒரு உறக்க நிலைக்குச் சென்றுள்ளது.



இதேநேரம் மற்றைய அமைப்புகள் நேர்த்தியாகவும், ஒழுங்காகவும் தம்மை வளர்த்துக் கொண்டு வருகின்றன. இதை அந்த அமைப்புக்கள் மீது கொண்ட பொறாமையால் கூறவில்லை. எம்மில் சிலர் அடுத்த ஜமாஅத்களின் குறைகளைத் தேடித் திரிந்து பேசிக் களிப்பதில் அலாதிப் பிரியத்துடன் இருக்கின்றனர். அவர்களிடம் உள்ள நலவுகளைக் காண விரும்பாமல் கண்களை இறுக மூடிக்கொள்கின்றனர். ஏனைய அமைப்புக்கள் மீடியாத் துறையில் வளர்ந்து வருகின்றனர். தமது மாணவர், பெண்கள், சிறுவர்களுக்கான அமைப்புக்களைப் பலப்படுத்தி வருகின்றனர். கல்வித் துறையிலும் வளர்ச்சி தென்படுகிறது. அரசியலில் கால் வைத்தால் அதிலும் ஒரு முதிர்ச்சி தென்படுகிறது.



இவ்வாறு நான் எழுதுவதே சிலருக்கு எரிச்சலாக இருக்கலாம். இந்தப் பந்திக்காக என்னை அந்த அமைப்புக்களின் அங்கத்துவனாகக் கூடக் காட்டி விடலாம். ஆனால் இந்த வளர்ச்சி குறித்துப் பொறாமை உணர்வுடன் அல்லாமல் படிப்பினை உணர்வுடன் ஏன் நாம் சிந்திக்கக் கூடாது?



மாற்று அமைப்புக்கள் வளர்ந்துகொண்டிருக்கும் போது நமக்கள் இரண்டு பெரிய தோல்விகள் வெளிப்படையாகவே முகம் காட்டிக்கொண்டிருக்கின்றன.



ஒன்று : சோர்வு மனப்பான்மை அதன் விளைவு தஃவாவில் சலிப்பு நிலை. தவ்ஹீதுக்குப் பலரும் உரிமை கோருவதால் நான்தான் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற உணர்வு யாருக்கும் இல்லாது போய் விட்டது. இந்த மந்நத நிலைக்கும் மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கின்றது.



அதுதான் உள்முரண்பாடுகள்! கருத்து வேறுபாடுகள் என்றால் கூடப் பரவாயில்லை. தஃவா நிகழ்ச்சிகள் என்றாலே “நாம்தான் தவ்ஹீத்வாதிகள்! மற்றோர் தவ்ஹீத் இல்லை!” எனப் பட்டம் கொடுப்பதும், தம்மைத் தூய்மைப்படுத்திக் காட்டிக்கொள்வதற்காக அடுத்தவர் மீது சேற்றை வாரி இறைப்பதும் தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் பல தாஈகளின் உள்ளங்கள் புண்பட்டுப் போய் ஓரளவு உடைந்த மனநிலையுடன் இருக்கின்றனர். எனவே, களத்தை விட்டு ஒதுங்கிவிடும் மனநிலை இவர்களிடம் ஏற்பட்டுள்ளது. இவை உள்முரண்பாட்டின் நேரடி விளைவு!



இத்தகைய விமர்சனங்களைச் செய்யும் சகோதரர்கள் தமக்கு அல்லாஹ் வழங்கிய பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும் தவ்ஹீதை வளர்ப்பதற்குப் பயன்படுத்தலாம். தவ்ஹீத்வாதிகளைத் தரக்குறைவாகத் தாக்குவதை நிறுத்திக் குராபிகளுக்கு மத்தியில் தஃவாச் செய்து புதிய தவ்ஹீத்வாதிகளை உருவாக்க முயற்சிக்கலாம். அது ஆரோக்கியமாக இருக்கும்.



எனவே, முதலில் தரக்குறைவான விமர்சனங்கள் நிறுத்தப்பட வேண்டும். அவரவர் தாம் செய்யும் பணிகளைப்பற்றிப் பெருமை பேசிக்கொண்டாலும் பரவாயில்லை. அடுத்தோர் செய்த-செய்துவரும் பணிகளை வக்கிர புத்தியுடன் விமர்சிப்பதை நிறுத் வேண்டும். ஒன்றாக இல்லையென்றாலும் ஒரு முகப்பட்ட மனநிலையில் தஃவாக் களத்தில் பணி செய்ய வேண்டிய தேவையுள்ளதை உணர்ந்து செயற்பட வேண்டும்.



அத்துடன் பழைய தஃவா அமைப்புக்கள் தமது உடைந்த மனங்களுக்கு ஒத்தடம் போட்டுக் கொண்டு களத்தில் இறங்க வேண்டும். “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” என்பார்கள். உங்களை நம்பி வந்த தவ்ஹீத் சகோதரர்களை ஆரோக்கியமான மனநிலையோ, அனுபவமோ இல்லாத சிறுவர்கள் கையில் ஒப்படைத்து அவர்கள் அந்த மக்களை தவறான வழியில் வழி நடாத்துவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதும் நல்லதல்ல.



பொதுமக்களைப் பொறுத்தவரையில் வீணான விமர்சனங்களுக்கப் பலியாகாமல் தம்மைக் காத்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர். தனி நபர் தாக்குதல்களில் ஈடபடுவோரை அவர்கள் புறக்கணிக்க வேண்டும். பொய்யும், அவதூறும் கலந்த விமர்சனங்களுக்கு மக்கள் இடம் கொடுப்பதைக் கண்டுதான் தஈக்கள் மனம் உடைந்து போய் உறங்கும் மனோநிலைக்கு வருகின்றனர். .



விமர்சனங்களைவிட விமர்சனங்களிற்கு மக்கள் அளிக்கும் முக்கியத்தவம்தான் தஃவாக் களத்தின் முதுகெலும்பை முறித்து விடுகின்றது. எனவே ஒரு பிரசாரம் நடைபெறுகின்றது என்றால் அந்தப் பிரசாரத்தின் இலக்கு என்ன? இலட்சியம்? இந்தச் சாடல் விமர்சனங்களால் ஏற்படப் போகும் மாற்றம் என்ன? நல்லதா? கெட்டதா? என்ற தெளிவுடன் பொது மக்கள் இருக்கக் கடமைப்பட்டுள்ளனர்.



நாம் நமக்குள் இருக்கும் உள்முரண்பாடுகளை அசிங்கமான தொணியில் எழுதியும், பேசியும் வந்தால் போராடி நாம் பெற்ற சில படித்த நல்ல நாகரிகமான தவ்ஹீத் சகோதரர்களை இழக்க நேரிடும். இவர்களுடன் இருந்தால் மரியாதையையும் இழந்துவிடுவோம் என்ற மனநிலையில் இவர்கள் மாற்று அணிகளுக்கு மாறி விடலாம். அல்லது தமது மார்க்க ஈடுபாட்டைக் குறைத்து, தான் உண்டு! தன் வேலையுண்டு! என்ற உறக்க நிலைக்குச் சென்று விடுவர்.



தவ்ஹீத் மீது பற்றுக் கொண்டு மார்க்கத்தை அறியும் ஆர்வம் கொண்ட இளைஞர்களும் மாணவர்களும் இவர்களது பயானுக்குச் சென்றால் மாhக்கத்தைப் படிக்க முடியாது “புறம் பேசுவார்கள்! அவதூறு கூறுவார்கள்!” என்ற எண்ணி வேறு அமைப்புக்கள் மூலம் தமது அறிவுத் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள முற்படுவார்கள்.



நாம் போராடிப் பெற்ற மக்களை கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த அமைப்புக்களுடன் தாரை வார்த்து விடும் நிலைமை உருவாகியுள்ளதைச் சிந்தித்தால் இந்த உண்மையை உணர முடியும்.



எனவே வீணாண விமர்சனங்களையும், ஏச்சுப்பேச்சுக்களையும் தவிர்த்து இஹ்லாஸ{டனும், வீரியத்துடனும் தஃவாக்களத்தில் மீண்டும் நாம் நடை பயில வேண்டியுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு தாயிகளும், அமைப்புக்களும் செயற்பட வேண்டும். இதில் நாம் கவனக் குறைவாக இருந்தால் நாமே தவ்ஹீத் சமூகத்தை அழிப்பதாக அமைந்துவிடும்.



எனவே தாயிகளே!

அஃவா அமைப்புகளே!

திறந்த மனதுடனும், உண்மையான உள்ளத்துடனும் அல்லாஹ்வின் அன்பை எதிர்பார்த்துப் பணி செய்வோம் என உறுதி எடுங்கள்!

அல்லாஹ் இதற்கு நம்மனைவருக்கும் அருள் செய்வானாக!

-ஆசிரயர்-

சல்மான் ருஷ்தியின் நாவல் இலங்கையில் படமாகிறது!

ஸல்மான் ருஷ்தி எழுதிய 'Midnight's Children' என்ற நாவல் தற்போது இலங்கையின் கொழும்பு நகரில் படமாக்கப்படுகிறது.

கொழும்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, புதுக்கடை போன்ற பகுதிகளில் மேற்படி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் வாழைத்தோட்டம் மஸ்ஜிதுந் நஜ்மி பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள ஒழுங்கை டில்லி நகரின் சனநெருசல் உள்ள ஓர் ஒழுங்கையாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
மிகவும் பிரமாண்டமான முறையில் காட்சிகள் படமாக்கப்பட்டன.

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் ஸல்மான் ருஷ்தி, நபி (ஸல்) அவர்கள் பற்றி அவதூறாக பல நூல்களை எழுதியதால் முஸ்லிம்களின் கடுங்கோபத்திற்கு இலக்கானவர். அவரின் நாவல் ஒன்றுதான் இலங்கையில் தற்போது படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Winds of Change என்ற பெயரில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை இந்தியாவில் பிறந்து கனடாவில் வசித்து வரும் பிரபல தயாரிப்பாளரான தீபா மேத்தா தயாரிக்கின்றார்.

இவர் தயாரித்த Water என்ற திரைப்படம் இந்தியாவில் படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட எதிர்ப்பலையினால் இடைநிறுத்தப்பட்டு, பின்னர் இலங்கையில் படமாக்கப்பட்டது.

1990களில் சல்மான் ருஸ்தியின் 'Midnight's Children' என்ற இந்தக் கதையை பிபிஸி நிறுவனம் இலங்கையில் படமாக்க முயற்சி எடுத்தபோது முஸ்லிம்கள் காட்டிய எதிர்ப்பினால் அன்று இந்த முயற்சி கைவிடப்பட்டது.

இன்று தீபா மேத்தாவினால் கொழும்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளிலேயே இது வெற்றிகரமாக படமாக்கப்பட்டு வருகிறது.

Winds of Change என்ற திரைப்படம் இந்திய சுதந்திர காலத்தில் ஏற்பட்ட பிரிவினையை மையமாக வைத்து சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்தியால் எழுதப்பட்ட கதையை கருப்பொருளாக கொண்டிருக்கிறது.

கூகிளின் புதிய குரோம் லேப்டாப்


கணிணி மற்றும் மென்பொருள்கள் சந்தையின் முதல்வரான மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ்க்கு இது போதாத காலம் போல. கூகிள் நிறுவனத்தால் இணைய வர்த்தகம் மைக்ரோசாப்டுக்கு பெருமளவில் குறைந்து விட்ட நிலையில் மென்பொருள்கள் சந்தையிலும் அடிவிழப் போகிறது. கூகிளின் புதிய இயங்குதளமான குரோம் (Chrome OS Notebooks) இப்போது லேப்டாப்களில் பொதிந்து விற்பனைக்கு தயாராகிவிட்டன.


மேகக் கணிணியகம் என்று சொல்லப்படும் Cloud Computing முறையில் குரோம் இயங்குதளம் செயல்படப் போகிறது. சரி இதனால் மைக்ரோசாப்டுக்கு என்ன பாதிப்பு என்று பார்ப்போம். மைக்ரோசாப்டின் முக்கிய மென்பொருளான MS-Office விண்டோஸ் இயங்குதளத்தில் செயலபடக்கூடியது. உலகெங்கும் பல லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த ஆபிஸ் தொகுப்பால் மைக்ரோசாப்டுக்கு வருமானம் பல கோடிக்கணக்கில் கிடைக்கிறது.

MS-Office தொகுப்பைப் பயன்படுத்த விண்டோஸ் இயங்குதளம் வேண்டும். இதிலும் வருமானம் வருகிறது. ஆனால் குரோம் லேப்டாப்பில் இயங்குதளம் தேவையில்லை. தனிப்பட்ட மென்பொருள்கள் தேவையில்லை. குரோம் வலை உலவியின் பெயரால் வந்திருக்கும் குரோம் இயங்குதளம் ஒரு இணைய மேடையாக (Google Web Platform) செயல்படுகிறது.


”எப்போதும் இணையத்திலேயே இருங்கள்” இதைத்தான் கூகிள் சொல்கிறது. MS-Office தொகுப்புக்கு மாற்றாக இருக்கவே இருக்கிறது Google Docs. இதன் மூலம் ஆன்லைனில் எப்போதும் ஆபிஸ் தொகுப்புகளைப் பயன்படுத்த முடியும். சர்வர் பிரச்சினை எதுவுமே இருக்காது. மேலும் உங்களின் முக்கிய கோப்புகளை ஆன்லைனில் பயன்படுத்தும் போது அவற்றிற்கு பாதுகாப்பு அதிகம். வைரஸ் பிரச்சினை, கணிணி கிராஷ் போன்றவற்றால் உங்கள் கணிணியில் ஏற்படும் பிரச்சினைகள் ஆன்லைனில் இல்லை. முக்கியமான விசயம் என்னவென்றால் இதில் ஆண்டிவைரஸ் தேவையில்லை என்பதே.

மேலும் ஆபிஸ் தொகுப்பை மட்டும் வைத்து விட்டால் போதுமா? கணிணியில் பயன்படுத்தும் மின்னஞ்சல் போன்ற அனைத்து முக்கியமான மென்பொருள்களும் விளையாட்டுகளும் போட்டோ எடிட்டர் போன்ற பயன்பாடுகளும் கூகிளின் Chrome Store இல் வழங்கப்படுகின்றன.HTML5 மற்றும் WebGL போன்ற உயரதர தொழில்நுட்பத்தால் இணையத்தில் மேம்பட்ட வேலைகளை வேகமாக செய்யமுடியும். Adobe Flash Player இல்லாமலே WebGl தொழில்நுட்பத்தால் இணையத்தில் நன்றாக படங்களைப் பார்க்க முடியும்.

இதனால் பல பெரிய நிறுவனங்கள் இணைய இணைப்பை வைத்திருந்தால் போதும். அவை விண்டோஸ், MS-Office போன்றவை இல்லாமல் அந்த காரியங்களைச் செய்து கொள்ள முடியும். விண்டோஸ் மற்றும் ஆபிஸ் தொகுப்பை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை.

இண்டெல் நிறுவன புராசசரில் செயல்படும் குரோம் இயங்குதள லேப்டாப்களை ACER மற்றும் SAMSUNG நிறுவனங்கள் தயாரித்துள்ளன. வெறும் 8 வினாடிகளில் கணிணி பூட் ஆகி இயங்குதளத்தில் நுழைந்து இணையத்திற்கு கொண்டு செல்லும் என கூகிள் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனமும் இப்போது கலக்கத்தில் இருக்கின்றன. இதன் வளர்ச்சி எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதைப்பற்றிய கூகிளின் எளிமையான வீடியோ ஒன்று கீழே பாருங்கள்.

http://youtu.be/TVqe8ieqz10 

அல் குர்ஆன் ஸுன்னாவின் பெயரால் மூட்டப்படும் குரோதத் தீ…!



-உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி-


நேற்றுவரை சிரித்தார், கதைத்தார், அழைக்கும்போது வந்தார், நன்மைகளை வளர்ப்பதற்கு பரஸ்பரம் ஒத்துழைத்தார், செலவு செய்தார், உழைத்தார்.

இன்று அவரைப் பார்த்து பரிதாபப்படுவதா? அல்லது அவருக்கு நடந்ததை எண்ணிக் கவலைப்படுவதா? புரியவில்லை.

இன்று அவர் சிரிப்பதில்லை, கதைப்பதில்லை, அழைத்தால் வருவதில்லை சமூகத்தின் நிலை குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கோபப்படுவதாகவே உணர முடிகிறது. வெறுப்படைந்திருக்கிறார் முகத்தை திருப்பிக் கொள்கிறார் நாம் பேச முற்பட்டால் எரிச்சலடைகிறார். அவர் பேசத் துவங்கினால் விமர்சிக்கிறார் மனிதர்களை அவமதித்துப் பேசும் தொனியை இப்போது அவர் நன்கு கற்றிருக்கிறார். இவை யாவும் இப்போது அவருக்கு மிக உயர்ந்த நன்மைகளாகத் தெரிகின்றன.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?

காரணம் இப்போது அவர் இஸ்லாம்(?) படித்திருக்கிறார். யாரோ அவரை அழைத்துக் கொண்டு போய் இஸ்லாம்(?) சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதன் விளைவுதான் இந்த மாற்றம்.

நேற்று இவரிடம் இருந்த இஸ்லாம் நல்ல பல குணங்களை அவரிடம் வளர்த்து விட்டிருந்தது. அவர் பிற மனிதர்கள், அறிஞர்கள், இமாம்கள், இயக்கங்கள் மீது வெறுப்படைந்திருக்கவில்லை. மனிதர்களோடு நல்லவராக இருந்தார். இன்று அவருக்கு இஸ்லாம்(?) கிடைத்திருக்கிறது நேர்வழி பெற்றிருக்கிறார். அதனால் சமூகத்தின் பல்வேறு தரப்பினர்களையும் உலமாக்கள், அறிஞர் பெருமக்களையும் இவர் வெறுக்கிறார் விமர்சிக்கிறார்.

சகோதரர்களே, சகோதரிகளே! புரிகிறாதா? இன்று போதிக்கப்படும் இஸ்லாம்(?) எத்தகையதென்று?

எந்தக் காரணமும் இல்லாமல் நேற்றைய நற்குணங்களை இன்றைய இழி குணங்களாக மாற்றிவிடுகிறது இன்று பலரால் போதிக்கப்படுகின்ற இஸ்லாம். இது இஸ்லாத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் செய்யும் நன்மை என்று அந்த அழைப்பாளர்கள் நினைக்கிறார்கள்.

உண்மையில் என்ன நடக்கிறது தெரியுமா?

சீரான நடத்தையும் நேரிய ஒழுக்கமும் உள்ளவர்கள் பிறரைப் பற்றித் தப்பாக நினைப்பதில்லை. ஏதாவது ஒரு நன்மையான காரியத்திற்கு அழைத்தால் உடனே சென்று விடுகிறார்கள். அழைப்பவர்கள் வெறுப்பு, குரோதம் போன்ற விஷங்களை தங்களது உள்ளங்களில் நிறைத்து வைத்திருக்கிறார்கள் என்பது இந்தத் தூய்மையான உள்ளம் கொண்டவர்களுக்குத் தெரியாது. நல்லவற்றைக் கேட்போமே என்ற தூய்மையான எண்ணத்தில் இவர்கள் அந்த அழைப்பாளர்களிடம் செல்கிறார்கள்.

அங்கு சென்றவுடன் இவர்களது இஸ்லாமிய ஆர்வத்தை பிழையான வழியில் மெதுவாக திசை திருப்ப ஆரம்பிக்கிறார்கள் அந்த அழைப்பாளர்கள். அவர்கள் கூறுகிறார்கள்:

“இஸ்லாத்துக்கு பேராபத்து வந்திருக்கிறது. (யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலுமல்ல) எம்மத்தியில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புக்களாலும் அவர்கள் சார்ந்த அறிஞர்களாலும்தான்.”

-என்று கூறி, மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) முதல் கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி வரை இஸ்லாமிய உலகில் செல்வாக்குப் பெற்று விளங்கும் மாண்புமிகு அறிஞர்களையும் உலகளாவிய இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகப் பாடுபடும் அமைப்புக்களையும் இஸ்லாமிய மரபுகள் அனைத்துக்கும் அப்பால் நின்று விமர்சிக்கவும் தூற்றவும் துவங்குகின்றனர்.

இஸ்லாத்தின் பரம வைரிகளாக செயற்படும் யூத, ஸியோனிஸ ஆதரவு சக்திகள் மீதும் குறிப்பாக பலஸ்தீன், கஷ்மீர், ஆப்கானிஸ்தான், ஈராக் முஸ்லிம்களைக் கொன்றொழிக்கும் அரக்கர்கள் மீதும் அரபு, முஸ்லிம் சமூகத்தை மத்திய கிழக்கில் இஸ்லாத்தின் எதிரிகளது நலன்களுக்காக அடகு வைத்திருக்கும் அமெரிக்காவின் அடிதாங்கிகளான பொம்மைத் தலைவர்கள் மீதும் காட்டாத வெறுப்பையும் குரோதத்தையும் இஸ்லாத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்ட இந்த உத்தமர்கள் மீது கொட்டித் தீர்ப்பதுதான் இந்த அழைப்பாளர்கள் போதிக்கும் இஸ்லாமாகும்.

இவர்கள் இஸ்லாமிய அமைப்புக்களையும் அறிஞர்களையும் விமர்சிப்பதற்கும் தூற்றுவதற்கும் கையாளும் உத்திகள் பண்பாட்டு வீழ்ச்சியின் இறுதி எல்லைக்கே இவர்கள் சென்று விட்டார்கள் என்பதைக் காட்டுகின்றன.

இஸ்லாமிய அறிஞர்களின் எழுத்துக்களிலிருந்தும் பேச்சுக்களிலிருந்தும் சிறு சிறு துண்டுகளை வெட்டி எடுத்துக் கொள்கிறார்கள். அவற்றை எழுத்துருவிலோ வீடியோ ஓடியோ ‘கிளிப்ஸ்’ களியோ தொகுத்து வைத்துக் கொள்கிறார்கள். அல்லது இவ்வறிஞர்கள் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளின் நிழற்படங்களைத் தேடி வைத்துக் கொள்கிறார்கள்.

இஸ்லாத்துக்காகவே தம்மையும் தமது வாழ்வையும் அர்ப்பணித்த அந்த அறிஞர்களின் வார்த்தையிலிருந்தும் வாழ்விலிருந்தும் சிறு சிறு துண்டுகளை முன் பின் தொடர்புகளற்ற விதமாகவும் பின்னணிகள் மறைக்கப்பட்ட நிலையில் வெட்டி வைத்துக் கொண்டு அவ்வறிஞர்களை மிக மோசமாக விமர்சிக்கிறார்கள். இந்தக் கீழ்த்தரமான குணத்தை பண்பாட்டு வீழ்ச்சியின் எல்லை என்று சொல்லாமல் வேறு எப்படி வர்ணிக்க முடியும்?

இந்தக் கீழ்த்தரமான அணுகுமுறையினூடாகவே இவர்கள் தங்களது உள்ளங்களில் இருக்கின்ற வெறுப்பு, குரோதம் எனும் விஷத்தை அப்பாவி உள்ளங்களுக்கும் பாய்ச்சுகிறார்கள். நாளடைவில் அந்த உள்ளங்களும் வெறுப்பு, குரோதங்களால் நிறைந்து வழிகிறது. முஸ்லிம் சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களை இன்முகத்துடன் பார்க்கவோ சிரிக்கவோ ஸலாம் சொல்லவோ உறவாடவோ முடியாதளவு பாரிய இடைவெளியை உள்ளங்களிடையே ஏற்படுத்தி சாகசம் புரிவதுதான் இவர்கள் வளர்க்கும் இஸ்லாத்தின் சிறப்பம்சங்களாகும். பிஞ்சு உள்ளங்களில்கூட இந்த விஷத்தைப் பாய்ச்சி சிறு வயதிலேயே உள்ளங்களை நாசமாக்கும் கைங்கரியத்தில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்.

விஷம் பாய்ச்சும் இந்த அழைப்பாளர்கள் உண்மையில் அப்பாவிகளா? அல்லது இஸ்லாத்தின் எதிரிகளது ஏஜன்டுகளா? இவர்கள் யூத, ஸியோனிஸ சக்திகளுக்கு எதிராக தங்களது வெறுப்பைக் காட்டாமல் யூத, ஸியோனிஸ சக்திகள் உலகில் யாரை அதிகம் வெறுக்கின்றனவோ அவர்கள் மீதுதான் தமது வெறுப்பை அதிகம் காட்டுகிறார்கள். உண்மையில் யார் இவர்கள்?

இவர்கள் ஏஜன்டுகளுமல்ல, அப்பாவிகளுமல்ல. இவர்கள் நோயாளிகள். இவர்களது நோய் என்னவென்றால், யார் மீதாவது வெஞ்சத்தை வரவழைத்து கொட்டித் தீர்த்துக் கொண்டிருப்பதுதான். வெறுப்புக் காட்டாமல், பகை பாராட்டாமல் இவர்களால் வாழ முடியாது. போதைவஸ்துக்கு ஒரு மனிதன் அடிமையாவது போல பகைக்கும் வெறுப்புணர்வுகளுக்கும் இவர்கள் அடிமையாகி விட்டார்கள். தூரத்தில் இருப்பவர்கள் மீது எப்போதும் வெறுப்புக் காட்டி பகை பாராட்ட முடியாது என்பதால் இவர்கள் பகை பாராட்டுவதற்கு யாரையாவது எப்போதும் தேடிக் கொண்டிருப்பார்கள். சிறிய முரண்பாடுகள் எழுந்தாலே போதும், உடனே இவர்களது உள்ளத்திலிருக்கும் பகையும் குரோதமும் வெகுண்டெழுந்து விடும். நேற்று மிக நெருக்கமாக இருந்தவர்களை இன்று பரம வைரிகளாக இவர்கள் ஆக்கிக் கொள்வார்கள்.

இத்தகையோர் தங்களுக்குள்ளேயே முரண்பட்டு, முரண்பட்டு விலகிச் செல்வதும் அவ்வாறு விலகிச் சென்ற ஒருவர் அடுத்தவரை பரம எதிரியாகப் பார்ப்பதும் வெளிப்படையான உண்மைகள்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அணிகளையே உடைத்து தமக்குள் பிரிந்து எங்கனம் பரம வைரிகளாக மாறி இருக்கிறார்கள் என்பதை பெயர், ஊர்களோடு இங்கு சுட்டிக்காட்ட முடியும். எனினும், அதைத் தவிர்த்துக் கொள்கிறேன். காரணம் தஃவாக் களத்தில் உள்ள ஒரு நோயை சுட்டிக்காட்டவே நான் முயற்சித்துள்ளேன். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்தாம் என பெயர் குறிப்பிட்டுப் பேசி ஒரு சாரார் மீது வெறுப்பு, குரோதம் எனும் விஷம் ஏற்ற நான் முயற்சிக்கவில்லை.

தஃவாக் களத்தில் நாளாந்தம் பல நல்ல மனிதர்கள் வெறுப்பு, குரோதம் என்ற நோயால் பீடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அத்தகையோர் நேற்று வரை மிக அன்பாகவும் அந்நியோன்யமாகவும் இருந்தார்கள். இன்று அவர்கள் நல்லெண்ணத்துடனும் மலர்ந்த முகத்தோடும் மக்களை சந்திக்கத் திராணியற்றவர்களாக திசை மாறியிருக்கிறார்கள்.

இன்னும் சொன்னால், சிலர் தம்மை வளர்த்துக் கொள்வதற்கும் தமது அமைப்பு தொடர்ச்சியாக நிலைத்து நிற்பதற்கும் ஈமானின் அடித்தளமான அன்பை வளர்ப்பதற்குப் பதிலாக ஜாஹிலிய்யத்தின் அடித்தளமான பகையையும் குரோதத்தையும் வளர்க்கிறார்கள். அவர்கள் இந்தப் பகையையும் குரோதத்தையும் தமது வாரிசுச் சொத்தாக அடுத்த பரம்பரைக்கும் புதியவர்களுக்கும் கொடுத்துவிட்டே செல்கிறார்கள்.

மக்களிடம் இருக்கும் இஸ்லாமிய ஆர்வத்தைப் பிழையான வழியில் திசை திருப்புவதன் மூலமே இந்த அக்கிரமத்தை இவர்கள் அரங்கேற்றுகிறார்கள். இத்தகையோரிடம் கற்பதனைத்தும் இஸ்லாம் என நினைக்கிறார்கள் அப்பாவி நன்மக்கள். அவர்கள் தங்களது உள்ளங்களில் இதுவரை காலமில்லாத வெறுப்பும் குரோதத்தீயும் கொழுந்துவிட்டெரிவதைப் பிழையென உணருவதில்லை. மாறாக, அடுத்தவர்கள் மீது குறிப்பாக, இஸ்லாமிய அறிஞர்கள் மீதும் இஸ்லாமிய அமைப்புகள் மீதும் ஏற்பட்டுள்ள பகையும் வெறுப்பும் ஈமானிய வளர்ச்சி என்றே அவர்களுக்கு பாடம் புகட்டப்படுகிறது.

ஆக, ஈமானின் உச்ச கட்டத்துக்குத் தாம் சென்றுவிட்டதாக அவர்கள் நம்பவைக்கப்படுகிறார்கள். விஷம் பரப்பும் இந்த அழைப்பாளர்களிடம் இஸ்லாம் கற்கச் சென்றவர்கள் ஓரிரு மாதங்கள் செல்லும்போதே அடுத்தவர்களை கடுமையாக வெறுக்கத் துவங்குகிறார்கள். நாலு விடயங்களைக் கேட்டுப் படித்த தம்மைப் போன்றவர்கள் நேர்வழிக்கு வந்துவிட்டதாக நினைக்கிறார்கள். நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நூற்களை எழுதிய பேரறிஞர்களை வழிகேடர்கள் என்றும் நரகவாதிகள் என்றும் இவர்கள் முத்திரை குத்துகிறார்கள்.
இஸ்லாம் கற்கப் போன இடத்தில் வெறுப்பையும் பகையையும் குரோதத்தையும் வளர்த்துக் கொண்ட இது போன்ற அனுபவம் உங்களுக்குண்டா? சற்று சிந்தித்துப் பாருங்கள். அவ்வாறாயின் நீங்கள் கற்றது இஸ்லாம் அல்ல. மனிதர்களது உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தி சந்தேகத்தைப் படர விட்டு வெறுப்பு, குரோதத்தை வளர்க்கும் ஷைத்தானின் வழிமுறையையே நீங்கள் கற்றிருக்கிறீர்கள். மனிதர்களிலும் ஜின்களிலும் இருக்கும் இத்தகைய ஷைத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாப்புக் கோருமாறு அல்லாஹ் எங்களை அறிவுறுத்திக் கொண்டிருக்கிறான்.

இஸ்லாம் கற்கப் போன இந்தக் கசப்பான அனுபவத்தைத் துறந்து ஓர் இனிப்பான அனுபவத்தை நோக்கி நீங்கள் வர விரும்பினால் ஜமாஅத்தே இஸ்லாமி நடத்தும் இஸ்லாமியக் கற்கை நெறிகளில் ஒரு முறை வந்து அமர்ந்து பாருங்கள். இஸ்லாத்தின் மகோன்னதங்களை உணரவும் அவற்றிலிருந்து தூரமாகியிருக்கும் சமூகத்தை அன்போடும் அனுதாபத்தோடும் நோக்கவும் அந்த சமூகத்தின்பால் உங்களுக்குள்ள பொறுப்புக்களை விளங்கவும் அந்த நிகழ்ச்சிகள் உங்களுக்கும் வழிகாட்டும். உங்களது இஸ்லாமிய ஆர்வத்தைப் பிழையான திசைகளில் திருப்பி உங்களது வளமான உள்ளத்தை வெறுப்பு, குரோதங்களால் நிரப்பும் இழிவான உத்திகளையோ அணுமுறைகளையோ நீங்கள் அங்கு சிறிதளவேனும் காண மாட்டீர்கள், அல்ஹம்துலில்லாஹ்.

அல்லது ஒரு சிலர் செய்வது போல வெளிப்படையாக அன்பையும் சகோதரத்துவத்தையும் பேசிவிட்டு திரைக்குப் பின்னால் பகையையும் குரோதத்தையும் வளர்க்கும் குரூர மனப்பான்மையையும் நீங்கள் அங்கு காண மாட்டீர்கள்.

களத்தில் பகை வளர்க்கிறார்களே விஷம் பரப்பும் அழைப்பாளர்கள், அவர்கள் குர்ஆனையும் ஸுன்னாவையும் பயன்படுத்தி இஸ்லாத்தின் எழுச்சிக்காக தாம் மட்டுமே அயராது உழைப்பதாகக் கூறி இஸ்லாத்தின் பெயராலேயே குரோதத் தீயை மூட்டுகிறார்கள். அந்தத் தீயால் நிச்சயம் எரியப்போவது அவர்களே!

இப்போதும் அவர்கள் அந்தத் தீயில் வெந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சமூகத்தில் தீ மூட்ட வந்தவர்கள் தமக்குள்ளேயே அந்தக் குரோதத் தீ படர்ந்திருப்பதையும் அதனால் தங்களுக்குள் ஒருவர் மீது ஒருவர் தீராத பகை கொண்டவர்களாக மாறியிருப்பதனையும் உணராதவர்களாக இருக்கிறார்கள்.

நாமும் அவர்களுக்கெதிராக குரோதத் தீயை வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. அந்த நோய் எம்மைத் தொற்றாமல் பாதுகாத்துக் கொள்வதே எம்மீதுள்ள பொறுப்பும் கடமையுமாகும். அதனைச் சரியாக நிறைவேற்றி முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வெறுப்பு, பகை, குரோதம் போன்றன வளராதிருப்பதற்கு ஒத்துழைப்போமாக..
 
http://ourummah.org/

சற்று நேரத்தில் உரோமாபுரி அழிந்து விடுமா?




இன்னும் சற்று நேரங்களுக்கு பின் உரோமாபுரி பாரிய பூமி அதிர்வில் அழிந்து விடுமா? 

ஏனெனில் தலை சிறந்த வானியல் நிபுணர்களில் ஒருவரும், பூகம்பவியல் அறிஞரும், விஞ்ஞானியுமான Raffaele Bendandi உரோமாபுரி நகரம் 2011 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி பாரிய பூமி அதிர்வினால் முற்றாக அழிந்து விடும் என்று எதிர்வு கூறி உள்ளார். 

இவர் 1979 ஆம் ஆண்டு இறந்து விட்டார். 86 வருடங்கள் உயிர் வாழ்ந்து இருக்கின்றார். 

இவர் வாழ்நாளில் எதிர்வு கூறி இருந்த பூமி அதிர்வுகள் பல சொல்லி வைத்தபடி நடந்து இருக்கின்றன. 

கோள்கள், சூரியன், சந்திரன் ஆகியவற்றின் அசைவுகள் காரணமாகவே பூமி அதிர்வு ஏற்படுகின்றது என்பது இவரின் நம்பிக்கை.

ஜமாஅதே இஸ்லாமியின் பிராந்திய இஜ்திமா - 2011


தகவலை அனுப்பிய சகோதரருக்கு நன்றி ஜஸாகுமுல்லா
---------- Forwarded message ----------
From: azad mzm <azadmzm@gmail.com>
Date: Sun, May 8, 2011 at 10:42 AM
Subject: ijethima
To: kahatowita-watch@googlegroups.com
Cc: kahatow@gmail.com






















யார் இந்த உஸாமா?

1957-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் ரியாதில் பிறந்தார் உஸாமா பின் முஹம்மது பின் அவாத் பின் லேடன். உஸாமாவை இஸ்லாமிய தீவிரவாதத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக மேற்கத்திய உலகம் கருதுகிறது. உஸாமா சவூதி அரேபியாவின் மன்னர் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய கோடீஸ்வர வர்த்தகர் முஹம்மது பின் அவாத் பின் லேடனின் மகனாவார்.



இஸ்லாமிய நம்பிக்கைகளில் உறுதி கொண்டதாக அவருடைய இளமைப்பருவம் அமைந்திருந்தது. 1968ஆம் ஆண்டு முதல் 1976-ஆம் ஆண்டு வரை ரியாதில் அல் தாகர் மோடல் ஸ்கூலில் படித்த உஸாமா பின்னர் கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக் கழகத்திலிருந்து பொருளாதாரத்திலும், வர்த்தக நிர்வாகத்திலும் பட்டம் பெற்றார். 1979-ஆம் ஆண்டு உஸாமா சிவில் எஞ்சினீயரிங்கில் பட்டம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பட்டப்படிப்பை மேற்கொள்ளும்போது 3-வது ஆண்டு உஸாமா கல்லூரியிலிருந்து வெளியேறியதாகவும் தகவல் உண்டு. மார்க்கரீதியான காரியங்களில் உஸாமா மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஒரு கவிஞராகவும் உஸாமா திகழ்ந்தார். பல்கலைக்கழகத்தில் பயிலும் பொழுது உஸாமா எகிப்தை மையமாகக் கொண்டு செயல்படும் இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். இஸ்லாமிய சித்தாந்தங்கள் மற்றும் கலாச்சாரத்தில் மிகுதியான அறிவை அவர் இக்காலக்கட்டங்களில் பெற்றார்.

1979-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஆப்கானை ஆக்கிரமித்தது. சோவியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த போராளிகளுடன் உஸாமாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து அவர் ஆயுத போராட்டத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். சவூதி அரேபியாவின் ஜித்தா பல்கலைக் கழகத்தில் உஸாமாவின் பேராசிரியராக பணிபுரிந்த அப்துல்லாஹ் ஆஸம் அவர்கள்,பாகிஸ்தானின் பெஷாவரை மையமாகக் கொண்டு சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்காக ஆப்கான்

முன்னணி படைக்கான தந்திரங்களை தயாராக்கியிருந்தார்.

1979-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய உஸாமா, அப்துல்லாஹ் ஆஸத்துடன்இணைந்தார். 1984-ஆம் ஆண்டு ஆஸம்-லேடன் கூட்டணி மக்தப் அல் கதாமத் என்றதொரு இயக்கத்தின் மூலமாக இஸ்லாமிய போராட்டத்தை பிரகடனப்படுத்தினார்.

1980-ஆம் ஆண்டில் சோவியத் ரஷ்யாவை எதிர்த்து ஆப்கான் போராளிகள் நடத்திய தீரமிக்க போராட்டத்தில் உஸாமா உத்வேகத்துடன் ஈடுபட்டார். இவ்வேளையில் அமெரிக்கா சி.ஐ.ஏ மூலமாக உஸாமாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த சோவியத் ரஷ்யா என்ற எதிரியை எதிர்ப்பதற்கு ’எதிரிக்கு எதிரி நண்பன்’ பாலிசியை உஸாம கடைப்பிடித்திருக்கலாம்.

ஆப்கானிஸ்தான் போராட்டத்தில் உஸாமாவுக்கு உதவிய அமெரிக்கா பின்னர் அவரை தீவிரவாதியாக சித்தரிக்க ஆரம்பித்தது. 1988-ஆம் ஆண்டு உஸாமா அல்காயிதா இயக்கத்தை துவக்கியதாககூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உஸாமாவுக்கும், ஆப்கானை ஆட்சிபுரிந்த தாலிபான்களுக்கும் நெருக்கம் அதிகமானது. தாலிபானுக்கு தேவையான ராணுவ, பொருளாதார உதவிகளை உஸாமா அளித்தார்.

1997-ஆம் ஆண்டு எகிப்து கூட்டுப் படுகொலை, யெமனில் குண்டுவீச்சு ஆகியவற்றின் பின்னணியில் உஸாமா செயல்பட்டார் என அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது. 1998-ஆம் ஆண்டு அமெரிக்க தூதரகம் குண்டுவீசி தாக்கப்பட்டதற்கு உஸாமாவின் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இதனை தொடர்ந்து அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன. ஏவுகணை தாக்குதலுக்கும் அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் உத்தரவிட்டார்.

2001-ஆம் ஆண்டு உலகினை நடுங்கச்செய்த நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப்பட்டது.இத்தாக்குதலுக்கு உஸாமா பின் லேடன் காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இதனை தொர்ந்து உஸாமாவை பிடிப்பதற்காக ஆப்கானிஸ்தான் என்ற சுதந்திர தேசத்தை அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய படைகள் ஆக்கிரமித்தன. இன்றுவரை அந்நாட்டி அப்பாவி மக்களை

கொன்றொழித்ததை தவிர வேறு எதனையும் சாதிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

உஸாமாவுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்’ என பிரகடனப்படுத்தியது அமெரிக்கா. இறுதியாக உஸாமாவை பாகிஸ்தானில் வைத்து கொலை செய்ததாக அறிவித்துள்ளது.

உலக வல்லரசான அமெரிக்காவின் நெஞ்சை பிளந்த 2001 நியூயார்க் இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டது யார்? என்பது குறித்து தற்போதும் மர்மம் நீடிக்கும் வேளையில் உஸாமா பின் லேடன் இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டார். ஆம், சத்தியம் என்ன என்பது குறித்து வெளிக்கொணராமலேயே உஸாமாவின் இறுதி பயணம் அமைந்துவிட்டது.
http://www.thoothuonline.com/