கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

J.R. ஜெயவர்தனவினால் இரட்டைப் பொறியியலாளர் பதவியும் பட்டமும் பறிக்கப்பட்ட கலாநிதி விக்கிரமபாகுவிற்கு கிடைக்கப்போகும் அதிஷ்டம்!

நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக கறுப்புக்கொடி உயர்த்திய காரணத்தால் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் இரட்டைப் பொறியியலாளர் பதவியும் பட்டமும் பறிக்கப்பட்ட கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவிற்கு உரிய நட்ட ஈட்டினைப்பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சித்து வருவதாக டாக்டர் ராஜித்த சேனாரத்ன இன்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 19 ஆவது திருத்தச் சட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக இடதுசாரியான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன செயற்பட்டவர். அவர் இரட்டை பொறியியலாளராக பதவி வகிகத்தவராவார். அவர் நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிராக கண்டியில் கறுப்பு கொடி ஏற்றினார் என்பதற்காக அவரின் இரட்டை பொறியியலாளர் பதவி பறிக்கப்பட்டதுடன் பட்டங்களும் பறிக்கப்பட்டன. அவருக்கு இதுவரையில் அந்த பதவி வழங்கப்படவில்லை.
ஆகவே அவருக்கான நஷ்டஈட்டினை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். அதன்படி தற்போது அதற்கு ஏற்ற ஆவணங்களை திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் 215 வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலம் மீது மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்துவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஒருமணிநேரம் ஒத்திவைக்கப்பட்டு கட்சித்தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் அவை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் மாலை 18.58க்கு கூடியது.  பின்னர், பெயர் கூப்பிட்டு வாக்கெடுக்கப்பு நடத்தப்பட்டது. அதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 215 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.


எதிராக ஒருவரும் , ஏழு பேர் சமூகமளிக்காமலும் , ஒருவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாமலும் இந்த வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது.
இன்றைய வாக்கெடுப்பின் போது ஜானக பண்டார, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பசில் ராஜபக்‌ஷ, விநாயகமூர்த்தி, பிரேமலால் ஜயசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.

இதேவளை டொக்டர். சரத் வீரசேகர 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார். பாராளுமன்ற உறப்பினர் அஜித் குமார வாக்களிக்கவில்லை.

தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் தாண்டி நேற்றைய தினம் 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் பாராளுமன்றில் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்.

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர்ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார்.

பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், "எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்' என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். "ஆண் மருத்துவரா எனக்குப் பிரசவம் பார்க்கப் போகின்றார்? வேண்டாம். ஆண் மருத்துவர் வேண்டவே வேண்டாம்' என்ற கதறல் அவரிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
அந்தப் பெண்ணின் இந்த விவகாரம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது ஒரு புரியாத புதிராக எனக்குப் பட்டது.
"இத்தனை ஆண்டு காலமாக எனது மனைவியை, தனது வாழ்நாளில் தன்னுடைய தகப்பனார், தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், ஒன்று விட்ட சகோதர, சகோதரிகள், சிறிய, பெரிய தந்தையர் போன்றோர் தவிர வேறு எந்த அந்நிய ஆடவரும் பார்த்தது கிடையாது' என்று அப்பெண்ணின் கணவர் விளக்கம் சொன்னார். மிகக் கடுமையான ஆச்சரியத்தில் நான் சிரித்தேன்.
"என் முகத்தைப் பார்க்காத ஓர் ஆடவர் உண்டா?' என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
அவ்விருவரின் கோரிக்கையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அதனால் அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்தேன்; இணங்கினேன்.
குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற அவருக்கு ஆறுதல் அளிப்பதற்கு, அமைதியளிப்பதற்கு இரண்டாம் நாள் அவரிடம் வந்தேன்.
"பிரசவத்திற்குப் பின்னால் பெண்களுக்கு நாற்பது நாட்கள் அளவுக்கு இரத்தப்போக்கு இருக்கும். அமெரிக்க தம்பதியர்கள் இக்கால கட்டத்தில் காக்க வேண்டிய தடை, தடுப்புகளைத் தகர்த்தெறிந்து விட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி விடுகின்றனர்.
எனவே குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு தம்பதியர் பத்தியம் காக்க வேண்டும். உடலுறவுக்கு விடை கொடுத்து விடவேண்டும். இந்த 40 நாட்களுக்கு இடையே பாதுகாப்பான உணவு சாப்பிட வேண்டும். பாரமான, பளுவான பணிகள் எதையும் செய்யாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து நடைபெற்று வரும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் தான் இதைத் தெரிவிக்கிறேன்'' என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்தேன்.
அந்த அரபியப் பெண் ஆசுவாசமாக, அமைதியாக, எவ்வித பரபரப்புமின்றி, "பிரசவமான பெண்ணின் இரத்தம் நிற்கின்ற வரையில் தாம்பத்தியத்திற்கு இஸ்லாம் தடை விதித்திருக்கின்றது'' என்று தெரிவித்தார்.
"அத்துடன் மட்டுமல்லாமல் இக்கால கட்டத்தில் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களையும் இத்தகைய பெண்களுக்கு இஸ்லாம் ரத்து செய்துவிடுகின்றது'' என்று அவர் தெரிவித்தது தான் தாமதம்! அவரது இந்த யதார்த்தமான பதில் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நீண்ட, நெடிய ஆய்வுக்கூட அறிஞர்களின் ஆய்வை இஸ்லாம் தன் வாழ்க்கை நெறியில் சர்வ சாதாரணமாக இழையோடச் செய்திருக்கின்றது என்று எண்ணி பிரமித்துப் போய்விட்டேன்.
இந்த நேரத்தில் குழந்தைகள் நல பெண் மருத்துவர் வருகை தந்தார். குழந்தை நலன் தொடர்பான மருத்துவ அறிவுரைகளை மணிக்கணக்காக விவரிக்க ஆரம்பித்தார்.
"குழந்தைகளை அதன் வலது பக்கமாக உறங்க வைக்க வேண்டும். இதன் மூலம் அதனுடைய இதயத் துடிப்புகள் சீராக அடிக்கின்றன, அமைகின்றன'' என்று சொன்னதும் குழந்தையின் தகப்பனார், "நல்ல காரியங்கள் அனைத்திலும் வலது பக்கம் தான் என்று நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி வலது பக்கமாகவே நாங்கள் உறங்க வைக்கின்றோம்'' என்று சொன்னதும் மீண்டும் என்னுடைய உடலில் நாடி நரம்புகளில் அதிகமான அதிர்வலைகளைப் பாய்ச்சியது.
அவ்வளவு தான். மருத்துவமனைக்கு ஒரு மாதம் விடுப்பு போட்டேன். அருகில் உள்ள நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் இஸ்லாமிய மையத்திற்குச் சென்று விடை தேடினேன். ஏற்கனவே இருந்த மார்க்கத்திலிருந்து விடுதலையானேன். என்னை நான் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டேன்.

நன்றி: அல்ஆலமுல் இஸ்லாம், அரபி வார இதழ்...

காத்தான்குடி உருவச் சிலைகள் பின்நாளில் “வணங்கு’ பொருளாகும்: கோவை எஸ். ஐயூப்"

இறைவனுக்கு இணை வைக்கும் சிலை வணக்கத்தில் ஈடுபடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைதான் உருவச்சிலைகளை நினைவுச் சின்னங்களாக வைப்பதாகும். இவ்வாறுதான் உலகில் சிலை வணக்க வழிபாடு தோன்றியது என அல்குர்ஆனும் எடுத்தியம்புகின்றது. எனவே காத்தான்குடியிலும் இன்று நினைவுச் சின்னங்களாக வைக்கப்பட்டுள்ள உருவச்சலைகள் பின்னொரு காலத்தில் வணங்கப்படத்தக்கதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினரும் இங்கு வைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகள் தொடர்பாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என தமிழகத்தின் பிரபல மார்க்க அறிஞரான கோவை எஸ். ஐயூப் தெரிவித்தார்.

காத்தான்குடி 6ம் குறிச்சி மார்க்கட் வீதியில் நேற்றிரவு (26.04.2015) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பிரச்சாரக்கூட்டமொன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் என்பது மிகப்பெரும் அநீதியும், கொடிய பாவச் செயலுமாகும். அந்த இணை வைத்தலில் மிகக் கொடியது சிலை வணக்கமாகும். இஸ்லாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிலை வணக்கத்தையோ, சிலைகளை நினைவுச் சின்னங்களாக வைத்துக் கொள்வதையோ ஆதரிக்கவில்லை. உருவச்சிலைகளை இறைதூதர் முகம்மத் (ஸல்) அவர்களே உடைத்தழித்து இஸ்லாம் எனும் ஏகத்துவ மார்க்கத்தை நிலைப்படுத்தியுள்ளார்கள்.

உலகில் சிலை வணக்கம் உருவானது நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்திலேயாகும். அக்காலத்தில் அல்லாஹ்வை வணங்கி வாழ்ந்து வந்த ஐந்து நல்ல மனிதர்கள் இறந்த பின்னர், அவர்களை நினைவுபடுத்துவதற்காக அவர்களுடைய உருவச்சிலைகளைச் செய்து வீடுகளில் வைத்துக் கொண்டு நினைவுபடுத்துமாறு சாத்தான் கூறியதற்கிணங்க, அந்த மக்கள் முதன் முதலாக அவர்களின் உருவச் சிலைகளைச் செய்து தமது வீடுகளில் வைத்துக் கொண்டு தமது முன்னோர்களை நினைவுபடுத்தி வந்தனர்.

சில காலத்தின் பின்னர் வீடுகளில் இருந்த அந்தச் சிலைகளை அவர்களின் இறையில்லங்களில் வைத்தால்தான் அங்கு வருகின்ற பல நாட்டவர்களும் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வழி பிறக்கும் என மீண்டும் சாத்தான் வேதமோதியதற்கமைய, அந்தச் சிலைகள் அவர்களின் வணக்கத்தலங்களுக்கு எடுத்து வரப்பட்டு ஒரு பக்கமாக வைக்கப்பட்டன. அந்த மக்கள் அவற்றை அப்போது வணங்கி வழிபடவில்லை. ஏக இறைவனாகிய அழ்ழாஹ்வையே அவர்கள் வணங்கி வழிபட்டு வந்தனர். இந்தச் சிலைகளை மரியாதையுடன் நினைவு கூர்ந்தனர் அவர்களின் நல்ல செயற்பாடுகளை பலரிடமும் எடுத்துக்கூறினர்.

இவ்வாறு வாழ்ந்த அந்த மக்கள் சமூகம் மரணித்த பின்னர் அவர்களின் சந்ததியினர் அச்சிலைகளை மிகவும் கண்ணியப்படுத்தி வந்தனர். இந்த கண்ணியம் பின்னர் படிப்படியாக அச்சிலைகளை வணங்கவும், அவற்றிடம் உதவிகள் தேடிப் பிரார்த்திக்கவும் வழிவகுத்தது. இவ்வாறுதான் உலகில் சிலை வணக்கம் எனும் மிகக் கொடிய இணை வைப்பு ஏற்பட்டது.

இன்று எமது முன்னோர்களின் சிலைகளை வணங்குவதற்காக நாம் வைக்கவில்லை, அவர்களை நினைவுபடுத்துவதற்காகத்தான் நாம் வைத்திருக்கின்றோம் என்று கூறிக் கொண்டாலும், காலப்போக்கில் எமது சந்ததியினரால் இச்சிலைகளுக்கு மதிப்பும், மரியாதையும், கண்ணியமும், கௌரவமும் வழங்கப்பட்டு அவற்றை வணங்கி வழிபட்டு, அவற்றிடம் உதவிகோரிப் பிரார்த்திக்கும் நிலைமை நிச்சயம் ஏற்படும் என்பதற்கு அல்குர்ஆனே நமது முன்னோர்களின் வரலாற்றை எடுத்துச் சொல்லி அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றது.

உலகத்தில் மூன்றாவது நபியாக அனுப்பப்பட்ட நூஹ் நபி அவர்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட, அல்குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட இந்த ஐந்து நல்ல மனிதர்களின் உருவச் சிலைகளும் காலங்காலமாகக் கடத்தப்பட்டு வந்து எம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் புனித கஃபா எனும் இறை ஆலயத்திலும் அவை கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்து சிலைகளையும் மக்காவில் வாழ்ந்த ஐந்து கோத்திரத்தார் தினமும் வணங்கி வழிபட்டு, அவற்றிடம் தமது தேவைகளை முன்வைத்து நேர்ச்சைகள் செய்து, அவற்றுக்கு மிருகங்களைப் பலியிட்டு வந்துள்ளனர் என்பதையும் அல்குர்ஆன் எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றது.

மக்கா வெற்றியின் பின் புனித கஃபா ஆலயத்திற்குள் நபியவர்களும், தோழர்களும் பிரவேசித்தபோது அங்கே நூற்றுக்கணக்கான உருவச் சிலைகள் இருந்தன. அவற்றுள் இறைத்தூதர்களான இப்ராஹீம், இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் சிலைகளும் இருந்தன. அவற்றை நாம் வணங்கவில்லை, நினைவுபடுத்தவே வைத்திருக்கிறோம் என்று மக்காவாசிகள் கூறிய போதிலும் நபியவர்கள் அவற்றையும் உடைத்தழித்த வரலாற்றை நாம் மறந்துவிட முடியாது.

இணைவைப்பு என்பது இன்று எத்தனையோ வடிவங்களில் நம்மிடையே நிகழ்ந்து கொண்டிருந்தாலும் அவையனைத்திலும் மிகக் கொடியது சிலை வணக்கமாகும். சிலை வணக்கத்திற்கான அத்திவாரம்தான் எமது முன்னோர்களான நல்ல மனிதர்களுக்கு நாம் சிலைகள் உருவாக்கி அவற்றை நினைவுச்சின்னங்களாக வைத்துக் கொள்வதாகும். இதனை இஸ்லாம் முற்றாக வெறுக்கின்றது. தடைசெய்துள்ளது எனத் தெரிவித்தார்.

– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் – காத்தான்குடி

நேபாள நில நடுக்கம்: மெய்சிலிர்க்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகின

நேபாளத்தில் இடம்பெற்ற நில நடுக்கத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இக்காட்சிகள் அமைந்துள்ள.

நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகொண்ட பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் காத்மண்டு தொடங்கி போக்ரா, லோம்ஜங், கீர்த்தி நகர் என அந்த நாடு முழுவதும் பரவியது. இதில்  பலியானவர்கள் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 7.5 ஆக இது பதிவாகியுள்ளது. 

இந்தியாவின் டில்லி, பீகார், மேற்குவங்கம், தமிழகம் , உத்தரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நில அதிர்வும், நடுக்கமும் உணரப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் வீழ்ந்துள்ளதாகவும் பலர் காயமுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

இன்று காலை நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.









இந்திய அரசியலில் முஸ்லிம்களின் வரலாறு திரும்புகிறது :

இந்திய அரசியலில் முஸ்லிம்களின் வரலாறு திரும்புகிறது : அவுரங்காபாத் தேர்தல் - காங்கிரஸை பின்னுக்கு தள்ளி மராத்திய மண்ணில் மஜ்லீஸ் கட்சி முத்திரை....!!
மராத்தியர்களின் மாநிலமான மகாராஷ்டிரா அவுரங்காபாத்தில் நடைபெற்ற முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் சிவசேனா பாஜக கூட்டணிக்கும் அடுத்த இடத்தில் தனித்து நின்ற மஜ்லீஸ் கட்சி முத்திரை பதித்துள்ளது.
மொத்த இடங்கள் : 113
சிவசேனா + பிஜேபி = 57
மஜ்லீஸ் கட்சி = 23
காங்கிரஸ் = 10
என்.சி.பி = 3
சுயோட்சைகள் = 19
இந்தியாவை ஆளும் தேசிய கட்சியான பாஜகவும், மராத்திய மாநில கட்சியான சிவசேனாவும் இணைந்து பெற்ற 57 தொகுதிகளை மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக கால் பதித்த அசத்துத்தின் உவைஸி அவர்களின் மஜ்லீஸ் கட்சி 23 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸை பின்னுக்கு தள்ளி இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது இந்திய அரசியலில் முஸ்லிம்களின் வரலாற்றை திரும்ப செய்கிறது.
இறைவனுக்கே புகழ் அனைத்தும்....
நன்றி : சேலம் ஹுசைன் & செங்கிஸ்கான்

தெரிந்து கொள்வோம் ( 2G, E , 3G , H ,H+, 4G......... பற்றிய சில தகவல்கள்)

தெரிந்து கொள்வோம்
நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன்
2G, E , 3G , H ,H+
Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.

➖➖➖➖➖
1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.
இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம்.
இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.
➖➖➖➖➖
2). "E" இதுவும் 2G(2.5G)
EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும்.
2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.
இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும்.
இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
➖➖➖➖➖
3). "3G" இது 3G மொபைல் இன்டர்நெட்
UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
4. Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட்
HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்
இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
5). "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட்
(Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும்,
1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
6). "4G" இச்சேவை 4G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது.
இதன் வேகம் மிகவும் அதிகம்.
இதை இயங்க அவசியம் 4G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம்.
அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என எதிர்பார்க்க படுகிறது.
அன்புடன்... பத்மநாபன்

தில்ருக்ஷியின்யின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்த கோத்தா திட்டம் - இரகசிய தகவல் கசிந்தது

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலைவி தில்ருக்ஷியின்யின் வீட்டை முற்றுகையிட திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் தொடர்பும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக இடம்பெறவுள்ள விசாரணையை தடுக்கும் வரையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலைவியின் வீட்டை முற்றுகையிட்டு தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இன்று 6 மணியளவில் மேஜர் ஜெனரால் எம்.ஆர்.டப்ளியூ.சொய்சா வீட்டில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேல் மாகாண சபை மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் மேஜர் பிரதீப் உதுகொட உட்பட முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் ஆதரவாளர் சிலர் இக்கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக மேஜர் பிரதீப் உதுகொட தனது தொலைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பி அவசியமானவர்களை அழைத்துக்கொள்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு சூழ்ச்சிகள் மேற்கொள்வதன் மூலம் எப்படியாவது விசாரணைகளை தடுத்து விடலாம் என கோத்தபாய ஆதரவாளர்கள் கற்பனை கோட்டை கட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தமையால் தாங்கள் விரும்பியது போன்று செயற்பட்டார்கள் எனினும் தற்பொழுது அவ்வாறு மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

jaffnamuslim

தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்தகுத் தெரிந்த அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளவும்

இலங்கையிலுல்ல அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒருஅறிவிப்பு...

சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,தங்களின் பார்வையில் பட்டால்,
உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற
வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை.


இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத....


முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்...
தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....
அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...ஏன்...
நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்..


Please... Share

செங்கலடியில் நடைபெற்று வரும் கலப்புத்திருமணங்கள்-பின்னணி என்ன?

இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் உண்மை நிலை பற்றிய விடயங்களைச் சரி வர அறிந்து கொண்டதன் காரணமாக மேற்கத்தேய உலகமே இன்று இஸ்லாத்தை நோக்கி வீறுநடை போட்டு வரும் இக்காலச் சூழ்நிலையில், தங்களை இஸ்லாமியர்கள் என்றும் தாங்கள் முஸ்லிம்கள் என்றும் மூச்சுக்கு முன்னூறு தடவைகள் கூறிக்கொள்கின்ற எமது பெயர் தாங்கிகள் சிலர் தங்களுக்கு ஓர் வாழ்வியல் அடிப்படையையே போதித்துத் தந்த புனித மார்க்கத்தை, பெற்று வளர்த்த தாய்தந்தையர்களை மற்றும் பல இரத்த பந்தங்களையும் உறவுகளையும் மறந்து எங்கோ ஒரு மூலையில் மனித நாகரிகத்தின் அடிப்படையை மருந்துக்கூட கற்றிராத ஓர் மாற்று மதப் பெண்ணை மதம் மாறித் திருமணம் செய்து கொள்கின்ற நடைமுறை இப்போது நாம் அடிக்கடி கேள்விப்படுகின்ற ஓர் விடயமாக போய் விட்டது. 

உண்மையில் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான அடிப்படையறிவும் இஸ்லாமிய மார்க்கச்சூழலும் இறைவனுக்கு நன்றி செலுத்தக்கூடிய ஐங்காலத் தொழுகையையும் தன்னகத்தே கொண்டுள்ள எந்தவொரு முஸ்லிமும் இவ்வாறான ஓர் இழிசெயலுக்கு ஆளாகமாட்டான் என்பது அல் குர்ஆன் கூறும் உண்மையாகும்.إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்.(அல் குர்ஆன்.29:45)இவ்வாறான மானக்கேடான விடயங்களைப்பற்றி எச்சரிக்கின்ற அதிகமான அல் குர்ஆனிய வசனங்களும் நபிகளாரின் பொன்மொழிகளும் நம்முன்னே அரண் இட்டிருக்க அவற்றையெல்லாம் தாண்டி மாற்று மதத்தவர்களுடன் கள்ளத்தொடர்புகளை ஏற்படுத்தி அவை இறுதியில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் தலைகுனிகின்ற அளவிற்கு மிகப்பாரதூரமான விடயங்களாக மாறுவதை ஏனோ நம்மத்தியில் உலாவருகின்ற சில நயவஞ்சகர்கள் உணரமறுத்துவிடுகின்றார்கள். 

பின்னணியில் இஸ்லாத்தின் விரோதிகள். 

இது இவ்வாறிருக்க மிகவும் தத்ரூபமான முறையில் திட்டமிட்டு முஸ்லிம்களை இம்மாயவலையில் சிக்கவைத்து இஸ்லாமிய சமூகத்தை சந்திசிரிக்க வைக்கின்ற கைங்கர்யத்தையும் சில விசமிகள் மேற்கொண்டு வருவதும் தற்போது சில இடங்களில் நிரூபணமாகியுள்ளது. 

அந்தவகையில் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கல்லடிப் பிரதேசத்தில் நடைபெற்ற இரண்டு கலப்புத்திருமணங்கள் இதற்கு பெரும் சான்றுகளாகும். 

பொதுவாக இறுதி யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் வடகிழக்கிலுள்ள பின்தங்கிய நிலையிலுள்ள தமிழ் மக்களின் தற்போதைய குடும்ப மற்றும் சமூகரீதியான சூழ் நிலையினை நாம் எடுத்துநோக்கினால், அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகிறது. குறிப்பாக விடுதலைப்புலிகள் ஒழித்துக்கட்டப்பட்டதன் பின்னர் தமிழ் சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு தற்போது கலாச்சார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலைக்கு வடகிழக்கில் வாழ்கின்ற தமிழர்களின் நிலை மாறிப்போயுள்ளது. 

இந்நிலை உருவானதற்கு மிகவும் வலுவான காரணங்களும் உண்டு.யுத்த காலங்களில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புவைத்திருந்ததற்காக கணிசமான ஆண்கள் அரசபடையினரால் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக குடும்பங்களுடன் தொடர்பின்றி இருந்தமை, அதேபோன்று யுத்த காலத்தில் குடும்பப் பொறுப்புக்களை சுமந்திருந்த ஆண்கள் அதிகமாகக் கொல்லப்பட்டு  குடும்பங்கள் இன்றுவரைக்கும் அநாதரவான நிலையில் வறுமையில் வாடிவருகின்றமை மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பில்  செயற்பட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைய வந்தவர்களை தமிழ் சமூகம் இன்று ஓர் பயம் கலந்த கண்ணோடு பார்ப்பதால் அவர்களின் தொழில் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்கு மிகவும் அல்லல் படுவது போன்ற காரணங்களை வகைப்படுத்த முடியும். 

இவ்வாறு பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான பின்தங்கிய நிலையிலுள்ள இம்மக்கள் அன்றாட வாழ்வாதாரம், பிள்ளைகளின் படிப்பு போன்றவற்றுக்காக விபச்சாரத்தை தொழிலாக செய்யக்கூடிய ஓர் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தவிடயம் நானாக இட்டுக்கட்டியோ அல்லது வெறும் ஊகத்தின் அடிப்படையிலோ சொல்கின்ற தகவல் அல்ல.இன்று தங்களை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்றும் தாங்கள்தான் தமிழர்களுக்கு மறுவாழ்வு பெற்றுக்கொடுக்கப்போகிறோம் என்றும் வெளிநாடுகளில் போர்க்கொடி தூக்கிக்கொண்டு தமிழர்களின் அழிவில் வயிற்றுப்பிழைப்பு நடாத்துகின்றவர்களின் இணையத்தளங்களிலும் அச்சூடகங்களிலும் வெளியாகின்ற செய்திகளை ஆதரமாகக்கொண்டே நான்  இவ்விடயத்தை சுட்டிக்காட்டுகிறேன். இன்னும் தமிழர்களின் கலாச்சார மரபுரிமை நகரம் என்று முற்காலத்தில் பெயர்பெற்றிருந்த யாழ்குடா நாட்டில் அவ்வப்போது முற்றுகை இடப்படுகின்ற விபச்சார விடுதிகளும் இதற்குப் பெரும் சான்றுகளாகும். 

கிட்டத்தட்ட அவ்வாறே மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமையும் காணப்படுகிறது. அண்மையில் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை அதனை உண்மைப்படுத்துகிறது. ”திருமணத்திற்கு முன்னரான இளம் வயதில் கர்ப்பம் தரிக்கின்ற பெண்களின் எண்ணிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துக் காணப்படுகிறது.” என்பதே அவ்வறிக்கையாகும். 

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் குடும்பத்தலைவர்கள் இன்றி செலவீனங்களை எதிர்கொள்ள முடியாமல் துர்நடத்தைகளுக்கு செல்ல எத்தனிக்கின்ற இளம் பெண்களை இனங்கண்டு அவர்களோடு தொடர்பு வைத்திருக்கூடிய இளைஞர்களின் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களின் விபரங்களை திரட்டி காதல் வலையில் சிக்கவைத்து இறுதியில் கல்யாணம் செய்து வைக்கின்ற சமூகசேவை(?)யினை செங்கல்லடிப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்வும் துவேஷ எண்ணமும் கொண்ட ஓர் இனவாதியான செல்லம் திரைப்பட மாளிகை உரிமையாளரும் செங்கல்லடி வர்த்தக சங்கத் தலைவருமான திரு.மோகன் மேற்கொண்டுவருகிறார். 

இந்த மோகன் என்பவரைபற்றித் தெரியாதவர்களுக்கு ஓர் சிறு அறிமுகம். 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்றொரு இயக்கத்தை ஆரம்பித்து அதன்பிறகு அவ்வியக்கத்திலிருந்து பிரிந்து திராவிடன் சேனை என்றொரு இயக்கம் உருவானது. தற்போது அவ்வியக்கத்திற்கு தலைமை தாங்கி வருபவர்தான் இந்த தியேட்டர் மோகன் என்பவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அன்று தொடக்கம் முஸ்லிம்களை கருவறுப்பதையே தனது தலையாய கடமையாக கொண்டிருந்த இந்த புலிப்பினாமியின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் பலவகையானவை. 

அதில் ஒருசிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் உறுகாமத்திலுள்ள இந்திய வீட்டுத்திட்ட திறப்புவிழா நிகழ்ச்சியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய உயர் அதிகாரிகள் முன்னிலையிலேயே முஸ்லிம்கள் மீதான தனது இனத்துவேஷத்தை வெளிப்படுத்துகின்ற துண்டுப்பிரசுரம் ஒன்றை மிகவும் பகிரங்கமாகவே வெளியிட்டார். 

அத்தோடு அந்நிகழ்வில் இருந்து சில மாதங்கள் கடந்த நிலையில் உறுகாமத்திலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் கடைத்தொகுதியும் முச்சக்கர வண்டியும் தீக்கிரையாக்கப்பட்டது.இச்சம்பவத்தில் முக்கிய சூத்திரதாரியாக தியேட்டர் மோகனே இருக்கலாம் என பலமான சந்தேகம் நிலவிவருகிறது.காரணம், ஆரம்பகாலம் தொட்டே உறுகாமம் வாழ் முஸ்லிம்களுக்கு தியேட்டர் மோகனால் பலவழிகளில் அச்சுறுத்தல் இருந்தே வந்திருக்கிறது. 

மேலும் 2012ம் ஆண்டு புனித ரமழான் மாதம் இறுதிப்பகுதியில் உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் ஓர் இரவு நேரத்தில் முஸ்லிம் பெண்ணொருவர் கோடாலியால் வெட்டப்பட்டு படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அதே இரவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் ஐந்து வீடுகளும் ஒரு வியாபார நிலையமும் உட்பட ஜும்மா பள்ளிவாயில் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டது.இச்சம்பவத்திலும் மேற்குறித்த இனவாதி மோகனே சம்பந்தப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. 

இவ்வாறு முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் பொருளாதாரம், கலாச்சாரம், இருப்பிடங்கள் போன்றவற்றை சூறையாடுவதில் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்ற ஓர் இழிபிறவியான இந்த மோகனே தற்போது நடைபெற்றுவருகின்ற கலப்புத் திருமணங்களையும் முன்னின்று நடத்திவைப்பதை யதார்த்தமாகவே அவதானிக்கமுடிகிறது. 

இவ்வினவாதியின் சதிவலையில் இஸ்லாமியப்பெயர் தாங்கிகளேதான் விழுந்தாலும் இதை வைத்து முஸ்லிம்களை எள்ளிநகையாடி ஆத்திரமூட்டி மீண்டும் ஓர் இனக்கலவரத்திற்குத் தூபமிடுவதே இதன் முக்கியநோக்கமாகும்.ஏனெனில் செங்கல்லடியில் அதிகமாக வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் காத்தான்குடி, ஏறாவூர் போன்ற ஊர்களிலிருந்து வருகின்ற முஸ்லிம் வியாபாரிகளே.ஏற்கனவே ஓர் தடவை முஸ்லிம் வியாபாரிகளிடம் தமிழ் மக்கள் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம் எனப்பிரச்சாரம் செய்ததும் இவ்வினவாதி மோகன்தான் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும். 

அதுமாத்திரமல்லாது செங்கல்லடியில் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்ற முஸ்லிம்வியாபாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும்விதமாக அவர்களையும் தனது வலையில் சிக்கவைத்து திருமணம் (?) முடித்து வைக்கின்ற புதிய திட்டம் ஒன்றையும் தீட்டிவருவதாக சிலதகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதில் ஒன்றுதான் முஸ்லிம் வியாபரிகளிடத்தில் கடனாக பொருட்களை கொள்வனவு செய்கின்ற தமிழ்ப்பெண்கள் அவ்வியாபாரிகளை கடனை வசூலிப்பதற்காக தமது வீடுகளுக்கு வரவைத்து அவர்களுடன் தமக்கு தொடர்பிருப்பதாகக் கூறி பொறியில் சிக்கவைக்கும் ஓர் நூதனமான திட்டமாகும்.இவ்விடயத்தில் செங்கல்லடி மட்டுமல்ல மாற்றுமதத்தவர்களின் பிரதேசங்களில் தொழில் புரிகின்ற ஒவ்வொரு முஸ்லிம் வர்த்தகர்களும் தொழிலாளர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும். 

இதுவே தற்போது செங்கல்லடியில் நடந்துவருகின்ற கலப்புத் திருமணங்களின் பின்னணியில் இருக்கின்ற உண்மை நிலவரமாகும். 

இதற்கும் மேலாக, முஸ்லிம் இளைஞர்கள் மதம்மாறி திருமணம் முடிப்பதனால் அவர்கள் செங்கல்லடிக்கு வந்துதான் திருமணம் முடிக்க வேண்டுமா? 
முஸ்லிம் இளைஞர்கள் திருமணம் முடிப்பதற்கேற்ற அழகும் குடும்ப ஒழுக்கமும் நிறைந்த (?) பெண்கள் செங்கல்லடியிலேதான் இருக்கிறார்களா? 
அதுவும் அவ்வாறு திருமணம் முடிப்பவர்கள் அனைவரும் தியேட்டர் மோகனின் காலடியில்தான் தங்களுக்குத் திருமணம் முடித்துத் தரும்படி வேண்டி இறைஞ்சுகிறார்களா? 
என்பன போன்ற கேள்விகளும் தொக்கிநிற்கின்றன. 

நம்மிடமும் கடப்பாடுகள் உள்ளன.

 وَلَا تَقْرَبُوا الزِّنَا  ۖ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (அல் குர்ஆன்.17:32) 

இன்றைய நாட்களில் விபச்சாரம் என்பது ஒரு பேஷனாகவே மாறிவிட்டது.அதிலும் நமது முஸ்லிம் இளைஞர்களின் நிலைமையை பார்த்தால் அது ஏனைய மதத்தவர்களுடன் போட்டி போடக்கூடிய அளவிற்கு முன்னேற்றமடைந்துள்ளது. ஒரு இளைஞன் தனக்கு ஒரு பெண்ணுடனான தொடர்பு இருப்பதை கௌரவமாக நினைக்கிறான்.பெண்களோடு தொடர்பு இல்லாத இளைஞர்களை நண்பர்கள் தங்களின் வட்டத்தில் சேர்ப்பதில்லை என்ற நிலைக்கு ஆண்பெண் தொடர்பு இன்று ஒரு அதிகப்படியான தகுதியாக காணப்படுகிறது.அதில் இன்னும் விசேஷம் என்னவென்றால் முஸ்லிம் இளைஞர்கள் மாற்றுமதப் பெண்களுடனான தொடர்புகளையே அதிகம் விரும்புவதாக அறியக்கிடைக்கிறது. காரணம் என்னவென்று அறியமுடியவில்லை. 

உண்மையில் அல்லாஹ்தஆலா ஒருமுஸ்லிம் தனது உடலில் ஏற்படுகின்ற பாலியல் வேட்கையினை தீர்த்துக்கொள்வதற்காக மிக அழகான பல வழிகாட்டுதல்களை ஏவியிருக்க அவற்றைப் புறக்கணித்து ஷைத்தானிய சிந்தனைகளுக்கு ஆட்பட்டு சமூகத்தின் மானத்தை சந்தி சிரிக்க வைக்கின்ற இந்நயவஞ்சகர்கள் முதலில் அல்லாஹ்வையும் அவனது இறுதிநாளையும் சற்று ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும். 

வெறுமனே ஒருசில மாதங்களில் தணிந்து போகக்கூடிய அற்பத்தனமான உடல்தேவைக்காக ஒட்டுமொத்த இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்துகின்ற இக்கயவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் எவ்வாறு முகம்கொடுக்கப் போகிறார்கள்? 

ஒருபக்கம் இஸ்லாத்தை நோக்கிய இனவாத யுத்தத்திற்கு முகம் கொடுக்கமுடியாமல் திண்டாடிகொண்டிருகின்ற சமூகத்திற்குள் கூடவே இருந்து செல்லரிக்கின்ற இப்புற்றீசல்களுக்கு முதலில் ஒரு முடிவை ஏற்படுத்தவேண்டும். இவர்களால் இஸ்லாமிய மார்க்கத்திற்கு நற்பெயர் வராவிட்டாலும் பரவாயில்லை இக்கயவர்கள் அவப்பெயரை ஏற்படுத்தாமல் இருந்தால் அதுவே போதுமானது. 

இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொள்ளக்கூடிய அவ்வப்பிரதேசங்களில் பலம்பொருந்திய தஃவா அமைப்புக்கள் இவ்வாறான மார்க்க அறிவில் வங்குரோத்து நிலையிலுள்ள இளைஞர்களை துல்லியமாக இனங்காண்பதற்கு தனியாக பிரிவுகளை உருவாக்கி அவர்களுக்கு உரியமுறையில் பயிற்சியளித்து சமூக நீரோட்டத்தில் கலந்து வாழ்வதற்கு உறுதுணைபுரிவது காலத்தின் தேவைகளில்  உணரபடுகிறது. 

எது எவ்வாறு இருப்பினும் ஒருமனிதனின் வாழ்க்கையின் எப்படி இறுதிநேரம் இருக்கவேண்டும் எனத்தீர்மானிக்கும் ஆற்றலையுடையவன் வல்ல அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. அவனது சித்தப்படியே ஒவ்வொரு ஆத்மாவினதும் இறுதிநேரம் தீர்மானிக்கப்படுகிறது. எனவே நாம் எவ்வளவுதான் உபதேசங்களை அள்ளிவீசினாலும் ஒருமனிதனுடைய முடிவு எவ்வாறிருக்கும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். 

இருப்பினும் அல்லாஹ் தனது திருமறையிலே இவ்வாறு எச்சரிக்கிறான்.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ 
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.(அல் குர்ஆன்.03:102)

அந்தவகையில் அல்லாஹ்வை அஞ்சி வாழக்கூடிய முஸ்லிம்களாக நாம் ஒவ்வொருவரும் மாறவேண்டும்.அத்தோடு நமது வாழ்க்கையின் இறுதிநேரம்  இறைவனுக்குப் பொருத்தமானதாக இருக்கவேண்டும் என்பதோடு இவ்வாறான மானக்கேடான காரியங்களிலிருந்து நம் அனைவரும் விலகியிருக்க எலாம் வல்ல அல்லாஹ்வை இருகரமேந்திப்பிரார்த்திப்போம். 

முஹம்மது நியாஸ் 

காத்தான்குடி இஸ்லாமிய நூதனசாலை தொடர்பில், ஜம்மியத்துல் உலமா பத்வாக் குழுவின் கடிதம்..!

காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்ட 'இஸ்லாமிய நூதனசாலை' தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ஹாரிஸ் ரஷாதி, காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பருக்கு நேற்றைய தினம் (15.04.2015) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் பிரதியடப்பட்டுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

காத்தான்குடி முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊராகும். அறிஞர்கள், துறைசார்ந்தவர்கள் அங்கு நிறைந்து காணப்படுவது சிறப்பம்சமாகும். கிழக்கிலங்கையில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் இவ்வூர் விஷேடமாகக் கருதப்படுவது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்நிலையில் மனிதர்களை ஒத்த உருவச்சிலைகளை உள்ளடக்கியதான நூதனசாலையொன்று அங்கு ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், அது சம்பந்தமான மார்க்கத் தீர்;ப்பைக் கோரியும் ஜம்இய்யாவின் காத்தான்குடிக் கிளை 21.03.2015ஆம் திகதியில் கடிதமொன்றை தலைமையகத்துக்கு அனுப்பி வைத்திருந்தது.

மேற்படி கடிதம் தொடர்பாக ஆராய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு கடந்த 26.03.2015 வியாழக்கிழமை ஒன்று கூடியது. அக்கூட்டத்தில் மேற்படி விடயம் ஆழமாக ஆராயப்பட்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சருமான அல்ஹாஜ் ஆ.டு.யு.ஆ ஹிஸ்புல்லா அவர்களுக்கு இதனது விபரீதங்களை விளக்கி கடிதமொன்றை அனுப்பி வைப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த கடிதம் தயார் செய்யப்பட்டு அனுப்பும் தருவாயில் 30.03.2015 ஆந் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை நகர முதல்வராகிய தாங்கள் அனுப்பி வைத்திருந்தீர்கள். அக்கடிதத்தில் குறித்த நூதனசாலையை அவசரமாகத் திறக்க வேண்டியுள்ளதால் இதனை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு காத்தான்குடிப் பிரதேசத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஷரீஆ அடிப்படையில் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டிருந்தீர்கள்.

தங்களையும் தங்களது வேண்டுகோளையும் மதித்து, தயாரிக்கப்பட்ட கடிதத்தை அனுப்பி வைப்பதைப் பிற்படுத்தியதுடன் கடந்த 08.04.2015 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக் குழுவினர் பல்வேறு வேலைப்பழுக்களுக்கும் மத்தியில் தங்களது வேண்டுகோளை மதித்து நூதனசாலையை நேரில் வந்து பார்வையிடுவதற்குத் தயாரான பொழுது, தாங்கள் அவசரமாக இந்தியா செல்லவிருப்பதாகவும், 12.04.2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவதாகவும், அதற்குப் பின்னால் குறித்த நூதனசாலையைப் பார்வையிட ஏற்பாடு செய்வதாகவும் கூறியிருந்தீர்கள்.

தாங்கள் இந்தியாவுக்குச் சென்றாலும் பிறிதொரு நபர் மூலமாவது நூதனசாலையைத் திறந்து காட்டுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மறுத்த தாங்கள், ஜம்இய்யாவின் பத்வாக் குழுவினர் பார்வையிடுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படாத நிலையில் இன்று 15.04.2015 ஆம் திகதி புதன்கிழமை நூதனசாலையை மக்கள் பார்வைக்குத் திறந்து விட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி போன்ற நகரில் மேற்படி நிகழ்வு வருத்தத்தையும், ஏமாற்றத்தையுமே தருகின்றது என்பதை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.

பொதுவாக முஸ்லிம்கள் உருவச் சிலைகளை வணங்கவோ, அவற்றைக் கண்ணியப்படுத்தவோ அல்லது ஞாபகச் சின்னங்களாக வைத்திருக்கவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இது விடயத்தில் ஹதீஸ்களில் மிகக் கடினமான எச்சரிக்கைகள் வந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒவ்வொருவரும் மறுமை வாழ்வை முன்னிறுத்திச் செயல்படுவது அவசியம் என்பதை ஞாபகமூட்டிக் கொள்கிறோம்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுலலாஹி வபரகாத்துஹு
(ஒப்பம்) எம்.ஏ.எம். ஹாரிஸ் ரஷாதி
இணைப்பாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

பிரதி: காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா

"இலட்சியப்பாதையில் மாணவர்களுக்கான சவால்கள்" என்ற தலைப்பில் அல்பத்ரியா ம.வி. நடைபெற்ற கருத்தரங்கம்.

அல்ஹம்துலில்லாஹ். KES - Kahatowita Educational Societyஇனால் ஏற்பாடு செய்யப்பட்ட "இலட்சியப்பாதையில் மாணவர்களுக்கான சவால்கள்" எனும் தொனியிலான விழிப்புணர்வு கருத்தரங்கு மிகவும் வெற்றிகரமான முறையில் நடந்து முடிந்தது.
பல்வேறு வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று எமது ஊருக்கு வருகை தந்து நிகழ்வை மிகவும் சிறந்த முறையில் நடாத்திய இலங்கை உளவள ஆலோசக நிபுணர்களின் சங்கத்தின் துணைத்தலைவரும்
இங்கிலாந்தின் பொதுச்சுகாதாரத்திற்கான றோயல் கழகத்தின் புலமையாளரும் சிரேஷ்ட மனநல விருத்தி ஆலோசனை நிபுணருமான அஸ்ஹர் அன்ஸார் M.S Psych.C (Ind), A.D.Psycho.C (SL), D.Psy.C (SL), D.Y.T (Ind), FRSPH (UK) அவர்களுக்கு எமது ஊர் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அல்லாஹ் அவர்களுக்கு மேலும் அருள் புரிவானாக.

Rihmy Mohamed -facebook

பாடகர் நாகூர் ஹனீபா அவர்கள் இன்று காலமானாா்.

நாகூர் ஹாஜி .இஂஎம்.ஹனீபா அவர்கள் இன்று வபாத்தானார்கள்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் நல்லடக்கம் நாளை நாகூரில் நடைபெறும்
1560458_3812132679690_363324455_n

அனைத்து சமூக மக்களோடும் நல்லுறவோடு வாழ்ந்த நாகூர் ஹனீபா அவர்களின்
மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஆ செய்யுங்கள்...

முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் நேற்றைய தினம் எமது ஊர்மக்களோடு பகிர்ந்துகொண்டவை..

சுதந்திர கட்சியின் புனர் நிர்மானப் பணிக்காக நேற்றைய தினம் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மற்றும் அத்தனகல்ல தேர்தல் தொகுதி பிரதம அமைப்பாளறும், கப்பல் துறைமுகங்கள் அமைச்சறுமான அரஜுனா ரனதுங்க ஆகியோர் எமது ஊருக்கு சமூகம் அளிந்திருந்தனர். 

பிரமுகர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, கடந்த தேர்தலில் ஆட்சிமாற்றத்திற்காக எமது ஊர்மக்களில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்களாகள் ஆதரவு நல்கியதை சுட்டிக்காட்டியதோடு அதற்கு நன்றியைத் தொிவித்துக்கொள்ளுமுகமாக அவர்களுடைய இந்த ஒன்றுகூடலை ஹொரகொள்ளை சமாதியில் கூடி அதன்பின்னர் கஹடோவிடாவினுடாகவே ஆரம்பிக்கவேண்டும் என சந்திரிக்கா அம்மையார் விரும்பியதற்குணங்க  இங்கு ஆரம்பிக்கப்பட்டதாக கருத்துத்தெரிவித்தததை காணக்கூடியதாக இருந்தது. 
முன்னால் ஜனாதிபதி சந்திரிகா அவாகள் கருத்துத் தெரிவிக்கும் போது பல விடயங்களை ஊர்மக்களுடன் பகிர்ந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது. ஆவரது உரையில் கடந்தகாலங்களில் எமது ஊருடன் இருந்த தொடர்புகள் பற்றி சிலவிடயங்களை நினைவுபடுத்தினார். அதில் ”புரியானி“ என்றபதத்தை சுவாரசியமாக நினைவுபடுத்த தவரவில்லை. 

மேலும் அவா் கருத்துத் தெரிவிக்கையில் 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மூன்றாவது தடவையாக மஹிந்த ராஜபக்ஸ அழிக்க முயற்சிக்கின்றார் என அவர் குற்றம் சுமத்தினாா்.

முதல் தடவையாக சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜாவுரிமை பறிக்பக்கப்பட்ட போது, பிரஜா உரிமை பறிக்கப்பட்ட பெண் ஒருவரை கட்சியின் தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது என நாடு முழுவதிலும் மஹிந்த கூட்டங்களை நடத்தினார் என அவர் குறிப்பிட்டார்.

தற்போது எவ்வாறு கூட்டங்களை நடத்துகின்றாரோ அதே போன்று கட்சி உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு சிறிமாவோவை விரட்டியடிக்க முயற்சித்தார் என அவர் தெரிவித்தார்.

2001ம் ஆண்டிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சிக்கவிக்கப்பட்டது.

தற்போது மூன்றாவது தடவையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுமாறு பலர் தம்மை வற்புறுத்திய போதிலும் ஜனநாயக ரீதியில் தாம் நடந்து கொண்டதாகவம், மஹிந்த ராஜபக்ஸவை கையில் பிடித்துக் கொண்டு சென்று பதவியில் அமர்த்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஸக்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டாார்.

நீதிமன்றில் சாட்சியங்கள் நிரூபிக்கும் வரையில் காத்திருப்பதாகவும் வெறுமனே குற்றச்சாட்டுக்களை சுமத்தப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டுக்காக ஏற்கனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் ஓய்வு பெற்றுக ;கொண்டதன் பின்னர் நடந்து கொண்டதனைப் போன்று மஹிந்த ராஜபக்ஸவும் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

தாம் ஆட்சி செய்த காலத்தில் 283 பேராக இருந்த ஜனாதிபதி செயலகத்தின் பணியாளர் எண்ணிக்கை 1600 பேராக உயர்த்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

மஹிந்த, அவரது சகோதரர்கள், மகன்மார், மனைவி, மனைவியின் உறவினர்கள் மற்றும் ஏனைய நண்பர்கள் உறவினர்கள் ஆட்சி நிர்வாகப் பணிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

தோல்வியைத் தழுவினால் ஒரமாக சென்று ஒய்வு எடுக்க வேண்டுமே தவிர, நாட்டை அழிக்க முயற்சிக்கக் கூடாது என சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரினார்.

இறுதியாக எமது பிரதான பாதை புணர் நிா்மானம் சம்பந்தமாக அவரிடம் மகஜர் ஒன்று கையலிக்கப்பட்டது. அதற்கு அவா் பதில் அளிக்கும் போது நான் இந்த பாதையை செய்துதருவதாக வாக்குறிதி அளிக்கமாட்டேன். ஆனால் என்னால் இயன்ற அளவு அதற்காக முயற்சி எடுப்பதாக கருத்துக் கூறியதை காணக்கூடியதாக இருந்தது. 

மேர்வின் சில்வாவின், பரபரப்பு பேட்டி..!

தற்போதய அரசியல் நிலமை தொடர்பாக வேண்டுமானால் என்னுடன் கோட்டா குழந்தை விவாதத்திற்கு வந்து பங்கு கொள்ளுமாறு அவருக்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் என்று ஒரு போடு போட்டார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.    31.03.2015 இரவு நடந்த ஒரு நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியல். 
நள்ளிரவு வரை நீண்ட இந்த விவாதத்தில் பல அதிர்ச்சியான தகவல்களை அவர் வெளியிட்டார் இதில் இந்தக் குறிப்பை முன்வைக்கின்றவனுக்கு ஒரு சின்னச் சந்தேகம். அவரின் இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிவடைகின்ற போது ஏப்ரல் முதலாம் திகதி பிறந்திருந்தது. 

எனவே ஒரு வேலை நான் அப்படியெல்லாம் பேசியது உண்மைதான் என்றாலும் அன்று முட்டள்களின் தினம் என்பது உங்களுக்குத் தெரியாதா என்று இந்த மனிதன் என்றாவது ஒரு நாள் எங்களிடத்தில் திருப்பிக்கேட்கவும் நிறையவே வாய்ப்புக்கள் இருப்பதால் எட்வான்சாக இந்தக் குறிப்பை இங்கு பதிந்து விடுகின்றோம்.

ஒரு காலத்தில் ராஜபக்ஷக்களின் மிகப் பெரிய அடியாளாகவும் நம்பிக்கைக்குரிய மனிதனாகவும் இருந்தவர்தான் இந்த மேர்வின் சில்வா. ராஜபக்ஷ தோல்வியைத் தொடர்ந்து மனிதன் ராஜபக்ஷ காலத்தில் பார்த்த அடாவடித்தனங்கள் பற்றி தற்போது வாந்தி எடுக்கத் துவங்கி இருக்கின்றார்.

இது ராஜபக்ஷக்களுக்கும் வேண்டிய ஒரு விடயம் மட்டுமல்ல மேர்வினுக்கும் தேவையான ஒரு விடயம்தான். இது மேர்வினே சொல்கின்ற படி இயற்கையின் பரிசு என்று தான் நாம் இந்தக் கூத்துக்களைப் பார்க்க வேண்டும்.
இப்போது மனிதன் மைத்திரி விசுவாசியாக மாறி அவர் புகழ்பாடத் துவங்கி இருப்பதுடன் தான் அடுத்து வருகின்ற தேர்தலில் மைத்திரி தலைமையிலான சுதந்திரக்கட்சி வேட்பாளராக நிச்சயம் களனித் தொகுதியில் இருந்து நான்  தேர்தல் களத்திற்கு வருவேன் என்றும் சவால் விடுத்திருக்கின்றார் அவர்.

நான் களணிப் பிரதேசத்தில் கப்பம் வாங்கினேன் என்று குற்றம் சாட்டப்படுகின்றது. அப்படியாக இருந்தால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் பொலிஸ் மா அதிபரும் ஏன் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

கோட்டாக் குழந்தையும் மெத்தப்படித்த  பசில் பண்டிதரும் பிற்காலத்தில் என்னுடன் பகையாளிகளாக மாறி இருந்தார்கள். இதனை நான் பெரியவரிடத்தில் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அப்போது என்ன உனக்குப் பைத்தியமா என்று அவர் என்னிடத்தில் திருப்பிக் கேட்டதுடன் உனக்கு எதிராக அவர்கள் செயலாற்ற மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தையும் அன்று வழங்கினார் மஹிந்த ராஜபக்ஷ.

என்ன நடந்தது அவர்களின் தொந்தரவுக்கு நான் இலக்கானேன் அவர்கள் புரிந்த அட்டகாசங்களை நாட்டுக்குச் சொல்ல எனக்கு ஒரு சந்தர்ப்பம் வரும் அது வரைக்கும் பொறுமை காப்பது என்று தெய்வத்தை நம்பி நின்றிருந்தேன். அதனால்தான் இப்போது அவற்றைப் பகிரங்கமாகக் குறிப்பிடுகின்றேன்.

என்னுடைய மகன்; மலக்கவை அடித்தது ராஜபக்ஷ மகன் யோசித்தவின் ஆட்கள். யோசித்தவின் காதலி கொடுத்த ஒரு முறைப்பாட்டுக்காகத்தான் எனது மகன் மீது அநியாயமாகத் தாக்கி அவர்கள் காயப்படுத்தி இருக்கின்றார்கள். இவற்றிக்கு எல்லாம் சேர்த்துத்தான் இப்போது தண்டனை அனுபவிக்கின்றார்கள்.

அவர்கள் பார்த்த வேலைகள் பற்றி நிறைய விடயங்கள் இருக்கின்றது. பொறுத்திருந்து பாருங்கள் நாளை என்ன நடைபெறுகின்றது என்பதனை. ஏற்கெனவே ரவிராஜ், லசந்த விக்கிரமதுங்ஹ ஆகியோரின் கொலைகளில் இவர் கோட்டாவுக்கு சம்பந்தம் என்ற முறைப்பாட்டைக் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ஷ இப்போது பௌத்த பீடங்களையும் பிளவு படுத்தத் துவங்கி இருக்கின்றார். பதவி ஆசைபிடித்து கட்சியையும் அவர் தற்போது துண்டாட முனைந்திருக்கின்றார். இனிவரும் காலங்களில் ராஜபக்ஷ அரசியல் அதிகாரமுள்ள பதவிகளுக்கு வர முடியாது என்று நான் உறுதியாகக் கூறுகின்றேன்.

ராஜபக்ஷக்களுக்கு டுபாயில் ஹோட்டல்கள் இருக்கின்றது. அதேபோன்ற உலகில் பல நாடுகளில் அவர்கள் சொத்துக் குவித்து வைத்திருக்கின்றார்கள். பசில் ராஜபக்ஷ மல்வானையில் தனது டுபாயில் இருக்கின்ற புதல்விக்காக ஒரு பாரிய மாளிகையைக் கட்டி இருக்கின்றார். 

அந்த இடத்தின் பரப்பு 16 ஏக்கர் 45பேர்ச். வீடுகட்ட 15 கோடி செலவு செய்யப்பட்டிருக்கின்றது. வேடிக்கை என்ன வென்றால் இந்த வீட்டைக்கட்டி முடித்தாலும் கட்டிடக் கொந்தரத்துக்காரருக்கு இன்னும் ஒரு சதம் கூட பசில் கொடுக்கவில்லை.

இப்படியெல்லாம் ஊடகங்கள் முன் நான் பேசுவது எனக்கு ஆபத்து என்பது தெரியும் என்றாலும் நான் இவற்றை மறைத்து வைத்திருப்பதைவிட பகிரங்கப் படுத்துவது சமூகத்திற்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்பதால் இப்போது கூறுகின்றேன்.

எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஏதும் உயிராபத்துக்கள் வருமானால் அதற்கு முழுப் பொறுப்பையும் ராஜபக்ஷக்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த நிகழ்ச்சியில் மேர்வின் குறிப்பட்டார்.

கோழையாகவல்ல வீரனாகவே இந்த மோவின் சில்வா ஒருநாள் மரணிப்பான் என்று அவர் அங்கு குறிப்பிட்டார். இன்னும் பல தகவல்கள் தன்னிடம் இருக்கின்றது சந்தர்ப்பம் வரும்போது அவற்றை நான் மக்களுக்கு பகிரங்கப்படுத்துவேன் என்றும் அவர் ராஜபக்ஷக்களை எச்சரித்திருக்கின்றார்.
-நஜீப் பின் கபூர்-

jaffnamuslim

ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா மஸ்ஜித் கட்டுமானப்பணிக்காக நீங்களும் உதவலாம்.

"அல்லாஹ்வின் முகம் நாடி யார் ஒரு மஸ்ஜிதைக் கட்டுகிறாரோ.. அவருக்காக அதைப்போன்றதொன்ரை சுவனத்தில் அல்லாஹ் கட்டுகிறான்."
 நூல் புகாரி.

அன்புச் சொந்தங்களே..!!
இஸ்லாமிய பிரச்சாரத்தின் பிரதான ஸ்தலமாக பள்ளிவாயல்கள் திகழ்கின்றன. அந்த வகையில், எமது குக்கிராமத்தில் அல் குர்ஆன், அல் ஹதீஸ் வழியில் சீர்திருத்தம் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட இப்பள்ளிவாயல், அல்லாஹ்வின் உதவியால் தம் பணியை முடிந்த அளவுக்கு செய்து கொண்டுவருகிறது. இரண்டு மாடிகளுடன் இயங்கும் எமது பள்ளிவாயல் மக்களது இட வசதி கருதி மூன்றாம் மாடியை கட்ட முடிவு செய்திருக்கிறது. இங்கே நடக்கும் மார்க்க நிகழ்ச்சிகளுக்கு பள்ளிவாயலின் விஸ்தரிப்பு பெரும் தேவையாக இருக்கிறது.
அந்த வகையில்,
எமது பள்ளிவாயலின் மூன்றாம் மாடியை முழுதும் செய்து முடிப்பதற்காக சுமார் பத்து இலட்சங்கள் (10,00,000Rs) தேவைப்படும் என்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதனை ஜமாத்தார்களாகிய தங்களிடம் இருந்தும் நலன் விரும்பிகளிடமிருந்தும் வசூலிக்க முடியுமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனை ஐநூறு (500) பங்குகளாகப் பிரித்து, ஒன்றின் விலை இரண்டாயிரம் (2,000Rs) ரூபாய்களாக விற்கப்படுகிறது. எனவே, ஒரு பங்கை தனியாகவோ.. குழுவாகவோ சேர்ந்து வாங்கி எமது பள்ளியின் விஸ்தரிப்புக்கு உதவுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
Total Estimation - 10, 00,000 Rs
Total Shares - 500
Cost of 1 Share - 2,000 Rs
இந்தச் சிறு உதவி அல்லாஹ்விடத்தில் பெரும் பரிசாக திரும்பப்பெறக் கூடியது என்பதை மனதில் கொள்வோமாக..!!
மேலதிக தொடர்புகளுக்கு,,
077 655 4946
077 622 8889