கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

முதலில், கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கி, nhm writer என்னும் மென்பொருளை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யுங்கள்:
http://software.nhm.in/products/writer
அதன்பின், உங்கள் கணினியில் அந்த மென்பொருளை நிறுவுங்கள். நிறுவும்பொழுது தமிழ் மொழியைத் தேர்ந்தெடுங்கள்.

அதன்பிறகு, Alt 2 அடித்தால் தமிழ். மறுபடியும் Alt 2 அடித்தால் ஆங்கிலம்.
அவ்வளவு தான். இப்பொழுது நீங்கள் தமிழாங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டும். என்னென்ன தமிழ் எழுத்துக்கு என்னென்ன ஆங்கில எழுத்தைத் தட்டச்சு செய்ய வேண்டும் என்ற விவரம் கீழே உள்ளது:

உயிர் எழுத்துக்கள்
அ a
ஆ aa or A
இ i
ஈ ii or I
உ u
ஊ uu or U
எ e
ஏ ee or E
ஐ ai
ஒ o
ஓ oo or O
ஔ au
ஃ q

மெய் எழுத்துக்கள்
1. க் k
2. ங் ng
3. ச் s or c
4. ஞ் nj
5. ட் d or t
6. ண் N (capital)
7. த் dh or th
8. ந் w
9. ப் p
10. ம் m
11. ய் y
12. ர் r
13. ல் l
14. வ் v
15. ள் L (capital)
16. ழ் z
17. ற் R (capital)
18. ன் n

வட மொழி எழுத்துக்கள்
ஸ் S (capital)
ஜ் j
ஷ் sh
ஸ்ரீ sri
க்ஷ் x
ஹ ha
ஃப் f

உயிர்மெய் எழுத்துக்கள்
மெய் எழுத்தும், உயிர் எழுத்தும் சேர்ந்தால், உயிர்மெய் எழுத்து கிடைக்கும்.
முதலில் மெய் எழுத்தையும் பிறகு உயிர் எழுத்தையும் தட்டச்ச வேண்டும். உதாரணமாக
“க” என்ற எழுத்து வேண்டுமென்றால், ka இந்த இரண்டு எழுத்தையும் தட்டச்சு செய்யவேண்டும்.

தமிழ் விசைப்பலகை (Key Board) தெறிந்தவர்கள் Alt 4 அழுத்தி இணையத்திலேயே உங்களது கருத்துக்களைப் தமிழில் பதியலாம்.

தமிழில் இனிதே தட்டச்சு செய்ய வாழ்த்துகள்.

சிலியில் பயங்கர நில நடுக்கம்; சுனாமி அறிவிப்பு


அமெரிக்க � சிலியின் கிழக்கு பகுதியில் சுனாமி ஏற்படக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த பகுதியின் கடற்கரைகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவுஸ்திரேலிய, நியூசிலாந்து, மத்திய அமெரிக்கா மற்றும் பசுபிக் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் சிலியில் ஏற்பட்ட 8.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் 78 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீலாது விழா கொண்டாடலாமா?

வாசிப்பதற்கு முன்:
இந்த ஆக்கத்தை நமது தளத்தில் பிரசுரிப்பதா இல்லையா என்பது ஒருபுறமிருக்க 70க்கும் மேற்பட்ட நமது வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே நாம் இதை பிரசுரிக்கின்றோம். மாற்றுக் கருத்துள்ளவர்கள் நாகரிகமான முறையில் தமது கருத்துக்களைக் கூறலாம்.

மீலாது விழா கொண்டாடலாமா?
فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ
”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.
(அல்குர்ஆன் 24:63)

நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் விழா
ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமையவேண்டுமல்லவா? எனவே இம்மாதத்தில் நாம் செய்யும் செயல்களை அல்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஒளியில் ஆராய்வோமே!

மீலாது விழா ஆரம்பமானது எப்போது?
நபி(ஸல்) அவர்களோ, நாற்பெரும் கலீஃபாக்களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ, அல்லது நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 – பக்கம் 172)

ஆக இவ்விழா ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.

மீலாது விழாவும் சஹாபாக்களும்
நாற்பெரும் கலீஃபாக்களும் மற்ற நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களும் மார்க்கத்தை நன்கறிந்தவர்கள். நபி(ஸல்) அவர்களை மிக அதிகமாக நேசித்து மார்க்க அடிப்படையிலேயே தம் முழு வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முழுமையாக பாடுபட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுள்ளோம், மீலாது விழா கொண்டாடுவது நன்மையான செயல் என்றோ, அது நபி(ஸல்) அவர்களுக்கு புகழ் சேர்க்குமென்றோ எண்ணியிருந்தால் அவர்கள் பலவிழாக்களை கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளுக்கென எந்த விழாவும் கொண்டாடவில்லை.

மீலாது விழாவும் கிரிஸ்மஸும்
ஈஸா(அலை) அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவது போன்று முஸ்லிம்களான நாம் நபி(ஸல்) அவர்களுக்கு விழாக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஒப்பீடு சரிதானா?

பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: அபூதாவூத்)

கிருத்துவர்கள் பிறந்த நாளை விழா நாளாக கருதுவது போன்று நாமும் கருதினால் இவ்விஷயத்தில் நாம் கிருத்துவ மதத்தை சார்ந்துள்ளோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது. எனவே நபிகளாரின் எச்சரிக்கைக்குப் பயந்து பிறந்த நாள் விழா மற்றும் இதுபோன்ற பிறமதக் கலாச்சாரங்களை விட்டும் முற்றிலும் விலகி, முழுமையான இஸ்லாமியராக வாழ முயற்சிக்க வேண்டும்.

அரபுக் கவிதைகள்
பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல விசேஷ வழிபாடுகள் நம் சமுதாயத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளன. அதில் இன்றியமையாததாகக் கருதப்படுவது மவ்லிது என்ற பெயரால் பாடப்படும் அரபுக் கவிதைகள்தான். இக்கவிதைகளுக்கு நம் சமுதாயத்தில் மகத்தான மதிப்பிருக்கிறது. ஆனால் இஸ்லாத்தில் இதற்கெதிரான எச்சரிக்கைதான் இருக்கிறது. ஆனால் அவை பள்ளிவாசலிலும் கூட கூட்டம் கூடி, புனித வழிபாடாகக் கருதிப்பாடப்படுகிறது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதற்காக இயற்றப்பட்ட இப்பாடல்களின் பல வரிகள் புகழ்ச்சியில் வரம்புமீறி நபி(ஸல்) அவர்களுக்கு இறைத்தன்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நபி(ஸல்) அவர்களிடம் உதவிதேடுவது, அவர்களிடம் பாதுகாப்புத் தேடுவது, அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்புவது போன்ற ஷிர்க்கான (இறைவனுக்கு இணைவைக்கும்) கருத்துக்களை இப்பாடல்கள் தன்னுள் கொண்டுள்ளன.

எந்தக் கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே கொள்கையைக் கொண்ட பாடல்களை அவர்களை புகழ்வதற்கே பாடப்படுகிறது. இது மிகப்பெரிய அநீதி இல்லையா? அதைவிடக் கொடுமை என்னவெனில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கப்படவேண்டிய பள்ளிவாயிலிலேயே அவனுக்கு இணைவைக்கும் இக்கவிதைகள் மிகவும் பக்திப்பரவசத்தோடு பாடப்படுவதுதான். அல்லாஹ்வின் தண்டனைக்கு பயப்படக்கூடிய மக்களாக இருந்தால் தவ்பாச் செய்து உடனே இச்செயலை விட்டும் விலகிவிட வேண்டும்.

பிறந்த நாள் விழாவா? இறந்த நாள் விழாவா?
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில் எந்த நாளில் நபி(ஸல்)அவர்கள் பிறந்தார்கள் என்று கூறுகின்றார்களோ அதே நாளில்தான் நபி(ஸல்)அவர்கள் இறந்தும் உள்ளார்கள். இவ்வாறிருக்க இவர்களின் விழாக்களும் வழிபாடுகளும் நபி(ஸல்)அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா?

இது சரியான காரணம்தானா?
மீலாது விழாவிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் நபிகளாரை கண்ணியப்படுத்தும் விதமாக நாமாகக் கொண்டாட வேண்டும் என்று சிலர் காரணம் கூறுவர்.
வெளிப்படையாகப் பார்த்தால் இக்கருத்து நபி(ஸல்) அவர்களை போற்றுவது போன்று தோன்றினாலும் உண்மையில் இது நபி(ஸல்) அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் வார்த்தையாகும். இதனடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சில நல்லறங்களை இச்சமுதாயத்திற்கு சொல்லவில்லை, மறைத்துவிட்டார்கள் என்று கூற வேண்டிவரும். நபித்தோழர்களும் இந்நல்லறங்களை செய்யவில்லை என்று அவர்கள் மீதும் குறை கூறவேண்டிவரும். -நவூது பில்லாஹ்- இந்நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
நல்லறங்கள் அனைத்தையும் தத்தமது சமுதாயத்திற்கு அறிவித்துவிடுமாறு அல்லாஹ் அனைத்து நபிமார்களுக்கும் கட்டளையிட்டுள்ளான். (ஹதீஸின் சுருக்கம் – முஸ்லிம்)

நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தூதுப்பணியை முழுமையாக நிறைவேற்றியவர்களும் இறுதி நபியும் ஆவார்கள். அவர்கள் இச்சமுதாயத்திற்கு தேவையான எந்தச் சட்டத்தையும் உபதேசத்தையும் கூறாமல் விட்டுவிடவில்லை. மீலாது விழாக் கொண்டாடுவது மார்க்கத்தில் ஒரு அங்கமாக இருக்குமேயானால் நிச்சயம் அதனையும் சொல்லியிருப்பார்கள். செய்திருப்பார்கள். அதனை நபித்தோழர்களும் பின்பற்றியிருப்பார்கள்.

நபி(ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி?
வருடத்தில் இது போன்ற ஓரிரு விழாக்களை கொண்டாடிவிட்டு, அதன் பிறகு நாம் நினைத்தது போன்று வாழ்ந்து கொள்வது நபி(ஸல்)அவர்களை நேசிப்பதாகாது. நம் வாழ்வின் அனைத்துத்துறைகளையும் அனைத்துச் செயல்களையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளவேண்டும். அவர்களை முழுமையாக பின்பற்றவேண்டும்.

இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمْ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்! அப்போது தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான் என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)

உங்களில் ஒவ்வொருவரும் சொர்க்கத்தில் நுழைந்து விடுவீர்கள் மறுப்பவரைத் தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! மறுப்பவர் என்றால் யார்? என்று தோழர்கள் கேட்டனர். என்னைப் பின்பற்றுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார். எனக்கு மாறுசெய்பவர் நிச்சயமாக என்னை மறுத்தவராவார் -அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்- என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)

எனவே நபி(ஸல்)அவர்களை பின்பற்றி நடப்பதே அவர்களை மதிப்பதின் அடையாளமாகும்.
மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது. அல்லாஹ் நபி(ஸல்)அவர்களோடு இம்மார்க்கத்ததை முழுமையாக்கிவிட்டதாக குர்ஆனில் அறிவித்துவிட்டான்.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا
இன்றய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக நாம் முழுமையாக்கி விட்டேன். நம்முடைய அருட்கொடையை உங்கள் மீது பரிபூரணப்படுத்தி விட்டேன். உங்களுடைய மார்க்கமாக நான் இஸ்லாத்தைப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)

இந்த வசனம் ஹஜ்ஜத்துல் விதாவில் (விடைபெரும் ஹஜ்ஜில்) அரஃபா தினத்தன்று இறங்குகிறது. நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதே மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது எனும்போது, நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் கற்றுத்தராத ஒன்றை மார்க்கத்தில் இணைக்கவோ, அவர்கள் கட்டளையிட்டவற்றை நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. இதனடிப்படையில் மீலாது விழா என்பது நபி(ஸல்) அவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது எனும்போது அதற்கு மார்க்க சாயம் பூசுவது இறைவனுடைய அதிகாரத்தில் நமது கரங்களை நுழைப்பதாகும். இதுபோன்று மார்க்க விஷயத்தில் விளையாடிய யூத, கிருத்துவர்களுக்கு கிடைத்த தண்டனைகளையும் கிடைக்கவிருக்கும் மறுமை வேதனைகளையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். எனவே நாம் இதுபோன்று மார்க்கத்தில் புதிய செயல்களை உறுவாக்குவதை விட்டும் முற்றிலும் தூரமாகி விடவேண்டும்.

மார்க்கத்தில் நூதனச் செயல்
மார்க்கத்தில் புதிதாக உறுவாக்கப்படுபவை அனைத்தும் பித்அத் (மார்க்கத்தில் நூதனச்) செயலாகும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் கற்றுதராதவற்றை மார்க்கத்தின் அங்கமாக நினைத்து செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக அது வழிகேடாகும். அது மறுமையில் நிராகரிக்கப்பட்டுவிடும். அதற்குரிய தண்டனையும் கிடைக்கும்.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைத்தும் வழிகேடாகும். (நூல்: புகாரி)
யார் நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உறுவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும். (நூல்: முஸ்லிம்)

மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை தண்ணீர் அருந்த விடாமல் மலக்குகள் இழுத்துச் சென்று விடுவார்கள். (ஹதீஸின் சுருக்கம்: புகாரி)

எனவே மீலாது விழாவும் மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவையே! இதற்காக செலவிடப்படும் பணத்திற்கோ, உழைப்பிற்கோ அல்லாஹ்விடத்தில் எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக மஹ்ஷரில் நபி(ஸல்)அவர்கள் புகட்டும் தண்ணீரை அருந்தும் வாய்ப்பை இழந்து கொடிய வெப்பத்தில் தாகத்தால் பரிதவிக்க நேரிடும்.

எனவே அன்பிற்கினிய சகோதரர்களே! மீலாது விழா உட்பட மார்க்கத்தில் முரணான எந்தச் செயலுக்கும் பொருளாலோ, உழைப்பாலோ, ஆலோசனையாலோ வேறு எந்த விதத்திலும் உதவவேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம்.

வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் சுடப்பட்டது ஏன்? - கோத்தபாய கூறும் விளக்கம்!


'வி.புலிகளை சரணடையுமாறு உத்தரவிட்டதன் மூலம், சிறீலங்கா அரசு அவர்களை பாதுகாக்க முயல்வதாக முன்னர் கூறியவர் சரத் பொன்சேகவே' என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து வெளிவரும் புலனாய்வு பத்திரிகையான தெஹெல்காவுக்கு வழங்கிய செவ்வியில்யே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

உச்சகட்ட போர் நடைபெற்றுக்கொண்டிருந்த மே 18 ம் திகதி நடந்தது என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த கோத்தபாய

'மிகச்சிறிய பகுதிக்குள் விடுதலைப்புலிகள் எம்மிடம் அகப்பட்டுக்கொண்டனர். இவர்களில் 200 பேர் இராணுவத்திடம் சரணடைந்தனர். நள்ளிரவுக்கு பின்னரே இது இடம்பெற்றது. அடந்த காடுகளுக்குள், கடும் இருட்டில் இருந்து கொண்டு சில வி.புலிகள் பதில் தாக்குதல்களை மேற்கொள்ள, ஒரு பக்கமாக பிரபாகரன் சுற்றிவளைப்பினை உடைத்துக்கொண்டு தப்ப முயன்றார். அவரின் மகன் வேறு திசையில் சென்றார். சரணடைந்த 10 ஆயிரம் உறுப்பினர்கள் வேறு திசையில் இருந்து வந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில், இளம் இராணுவ வீரர் ஒருவரால், வி.புலிகளின் மூத்த உறுப்பினர்களை இணங்கண்டு அவரை சுட்டுக்கொல்லும், அல்லது உயிருடன் விடும் முடிவை எவ்வாறூ எடுக்க முடியும்?

என பதில் அளித்துள்ளார்.

மேலும், தடுப்பு முகாம்களில் இருந்தவர்களை அவர்களது சொந்த நிலங்களுக்கு மீள் குடியமர்த்த அரசு எப்போதோ தயாராக இருந்ததாகவும், சரத் பொன்சேகாதான் தடுப்பு முகாம் மக்களினை மீள் குடியமர்த்துவதற்கு அனுமதிக்கவில்லை என்வும், அவ்வாறு மீள்குடியேற்றப்பட்டவர்களையும், மீண்டும் இழுத்து வந்து முகாம்களில் அடைத்த்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

இணையத்தளத்துக்கு பல்வேறு கோணங்களில் சதி

அண்மைக்காலமாக நமது இணையத்தளத்துக்கு சிலரால் சதி செய்யப்படுவது தெரியவந்துள்ளது. கருத்துக்களை கருத்துக்களால் வெல்வதே நாகரிகமாகும். வன்முறையில் எதையும் சாதிக்க நினைப்பது அழிவையும், இழிவையுமே பெற்றுத் தரும். நாம் சுதந்திரமாக நமது கருத்துக்களை சொல்லி வருகிறோம். எவருக்கும் சேரு புசுவதோ, பக்க சார்பான செய்திகளை வெளியிடுவதோ, யாரையும் பாதுகாப்பதோ நமது நோக்கமல்ல. நமது கருத்துக்களை நாகரிகமான முறையில் மறுதளிக்கும் பட்சத்தில் தகுந்த பதில்களை நாம் வழங்கத்தயாராகவுள்ளோம்

“ஒழுக்க வீழ்ச்சியை சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டுமாயின் அவை உருவாகும் மூலத்தைக்கண்டு பிடித்து அழிக்க வேண்டும்” -மௌலவி முஜாஹித்-

வழமாயக இருவாரங்களுக்கொரு முறை தவ்ஹீத் பள்ளியில் இடம் பெற்று வரும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றிய முஜாஹித் மொளவி தற்போது சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் ஒழுக்கச் சீர்கேடுகள் பற்றிப் பேசினார். அண்மைக் காலமாக பத்ரியா மகாவித்தியாலயத்தில் நடைபெறுகின்ற சில சம்பவங்களே இவ்வுரைக்குக் காரணமாகும். மாணவர்கள் சிறந்தவர்களாக உருவாக சமூக சூழல், வீட்டுச் சூழல்,சிறந்த முன்மாதிரிகள் போன்றன பிரதான காரணிகளாகவிருக்கின்றன என்று பேசிய அவர் தற்போதைய தொழிநுட்ப வளர்ச்சியும் மாணவர்களின் ஒழுக்க வீழ்ச்சிக்கு பெரும் பங்குவகிப்பதாகக் கூறினார். ஆசிரியர் பகுதியும் மானவர் பகுதியும் ஒழுங்குறவிருந்தாலேயே கல்வி நடவடிக்கைகள் திறன்படவிளங்கும் என்பதையும் சுட்டிக்காட்டினார். ஒழுக்க வீழ்ச்சியை சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டுமாயின் அவை உருவாகும் மூலத்தைக்கண்டு பிடித்து அழிக்க வேண்டும் என்பதை விளக்கினார். இந்த விடயத்தில் அனைத்து இயக்கங்களும் ஒன்றுபட்டு திட்டமிட்டு செயல்படவேண்டும் என்பதை வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் இன்றய இளைஞர்கள் தமக்கு முன்மாதிரிகளாக இப்றாஹீம் (அலை), மூஸா (அலை) , யுஸுப்(அலை), குகை வாசிகள் போன்றோரை எடுத்துக்கொள்ள வேண்டும் எனபதை தகுந்த வரலாற்றுச் சான்றுகள் மூலம் உணர்த்தினார்.

கஹட்டோவிட - வெயன்கொட புதிய பஸ் சேவை

ஓகடபொளை வேயன்கொடை பஸ்சேவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கஹட்டோவிட பிரதான பாதையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இச்சேவை கஹட்டோவிடாவிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு ஓகடபொளை-திஹாரியினூடாக வெயான்கொடையைச் சென்றடையும். இச்சேவையை ஆரம்பிப்பதற்காக அயராது பாடுபட்ட கஹட்டோவிட முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி ஸேக்கிள் அங்கத்தவர்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஓகடப்பொளைக் கிளையின் அங்கத்தவர்களுக்கும் ஊர் மக்கள் சார்பாக எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்சேவை எமதூர் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் பக்கத்து ஊரான ஓகடபொளைஇ உடுகொடை மற்றும் திஹாரிய ஆகிய ஊர்களுக்குச் செல்வதென்றாலும் முச்சக்கர வண்டியையே நாடவேண்டியுள்ளது. இச்சேவை மூலம் எமுதூர் மக்களின் பிரயாணச் சிரமம் பாரியளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லாஹ் இவர்களது பணியைப் பொருந்திக் கொள்வானாக!

இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி?

தற்போது நாம் முன்னொருபோதும் இல்லாதவாறு ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்த ஓர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக கணினிகள் மாறி விட்டதைத் தொடந்து மக்களுக்கியேயான தொடர்பாடல் முறைகளும் மாறியிருப்பதைக் காண் கிறோம்..

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கப் பட்டிருப்பின் அதனை ஒரு கணினி வலையமைப்பு (Computer Network) எனப்படும். கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதிலும் பல்வேறு முறைகள் பயன் பாட்டிலுள்ளன. வலையமைப்பின் அளவைப் பொருத்து இந்த ஒவ்வொரு முறையும் அதற்கேயுரிய சாதக பாதகங்களையும் கொண்டுள்ளன.
எந்த வகையிலான கணினி வலையமைப்பை உருவாக்கும் போதும் சில அடிப்படை விடயங்களைக் கருத்தில் கொள்ள் வேண்டியுள்ளது, உதாரணமாக் வலையமைப்பு உருவாக்கப் போவது கம்பியூடா (wired) அல்லது கம்பியில்லாமலா (wireless) என்பது. அதேபோன்று ஒரு வலையமைப்பில் முகிய பங்காற்றுவது ப்ரொட்டகோல் (Protocol) எனப்படும் தொடர்பாடல் விதி முறைகளாகும். இரு வேறு பட்ட கணினிகள் தொடர்பாடும் போது இணைப்பு மொழியாக் இந்த ப்ரொட்ட்கோல் தொழிற்படுகிறது. தற்போது கணினி வலையமைப்பில் TCP/IP எனும் தொடர்பாடல் விதிமுறையே பயன் பாட்டிலுள்ள்து.. இந்த விதி முறையே உலகலாவிய கணினி வலையமைப்பான இணையத்திலும் பயன் படுத்தப்படுகிறது.
பைல் மற்றும் வளங்களைப் பாரிமாறிக் கொள்ளும் வசதி, மின்னஞ்சல், கணினி வழி உரையாடல், பேஸ் புக் போன்ற சோஷியல் நெட் வொர்க் (Social Networking) சேவைகள் போன்றன் இன்றைய கணினிகளால் இணைந்து விட்ட உலகின் வியக்கத் தக்க பயன்பாடுகளாக்ப் பரபரப்பாகப் பேச்ப்படுகிறது. உலகம் முழுதுமுள்ள கணினிகளின் வலையமைப்பே இதனைச் சாத்தியமாக்கியது.

இனி விடயத்திற்கு வருவோம். வீட்டிலோ அலுவலகத்திலோ கணினிகளை ஓர் அறையின் மூலையில் வெளியுலக் தொடர்பேதுமில்லால் (Stand alone) தனியாக வைத்துப் பாவிக்கும் காலம் எப்போதோ மலையேறி விட்டது இருப்பது இரண்டே இரண்டு கணினிகளாயினும் அவற்றை ஒன்றோடொன்று இணைத்துப் பயன் படுத்துவதில் பல அனுகூலங்கள் உள்ளன. இரண்டு கணினிகளை இணைத்து ஒரு சிறிய கணினி வலயமைப்பை உருவாக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழி முறைகளும் உள்ளன. அவற்றுள் அதிக செலவில்லாமல் இணைக்கக் கூடியது க்ரொஸ் ஒவர் (cross-over) கேபல் கொண்டு இணைப்பதாகும். அதன் மூலம் இரண்டு கணினிகளுக்கிடையே பைல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இணைய இணைப்பு மற்றும் ப்ரிண்டர்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்..இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்வதாயின் ஒரு கணினியில் இரண்டு நெட்வர்க் கார்டுகளை (Network Interface Card) பொருத்த வேண்டி யிருக்கும். ஒரு கார்டை ப்ரோட்பேண்ட் (Broadband) இணைப்புக்கான ரூட்டரிலும் (Router) மற்றொரு கார்ட் அடுத்த கணினியை இணைக்கவும் பயன் படுத்தப்படும்.

ப்ரோட்பேண்ட் இணைய இணைப்பைப் ப்கிர வேண்டிய அவசியமில்லை அல்லது நீங்கள் பயன் படுத்துவது டயல் அப் (Dial up) இணைப்பு எனின் ஒரு கணீனியில் இரண்டு நெட்வர்க் கார்டுகள் தேவைப் படாது.. இரண்டு கணினிகளை இணைப்பது பைல்களைப் பரிமாற மட்டுமே எனின் இரண்டு கணினிக்ளிலும் ஒவ்வொரு நெட்வர்க் கார்ட்இருந்தாலே போதுமானது
எனினும் இவ்வாறு இரண்டு கணினிகளை இணைக்கும் போது சில வரையறைகளும் உள்ள்ன என்பதைக் கவனத்திற் கொள்ள் வேண்டும். உதாரணமாக் இணைய இணைப்பையோ அல்லது ப்ரிண்டரையோ பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு கணிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்,.

இடையில் ஹப் (Hub) , ஸ்விச் (Switch) போன்ற வேறு எந்த சாதனங்களும் இல்லாமல் நெட்வர்க் கார்ட் ஊடாக மட்டுமே இணைப்பதற்கு இரண்டு கணினிகளையும் விசேட cross-over கேபல் பயன் படுத்தப்படுகிறது.. இந்த க்ரொஸ் ஓவர் கேபல் வழமையான (Ethernet) ஈதர்நெட் கேபலிலிருந்து வேறுபட்டது. இத்னை நாமாகவே த்யாரித்துக் கொள்ளவும் முடியும்.
இரண்டு கணினிகளையும் கேபல் கொண்டு இணைத்து விட்டால் மாத்திரம் அவற்றிற்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள் முடியாது. அடுத்த வேலையாக இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரிகளை கீழுள்ளவாறு மாற்றியமைக்க வேண்டும்.

விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் முதல் கணினியில் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்யுங்கள். அப்போது திறக்கும் விண்டோவில் Local Area Network என்பதன் கீழ் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனை மஞ்சள் நிறத்தில் விழிப்புக் குறியுடனும் “Limited or No Connectivity” எனும் செய்தியுடனும் காண்பிக்கும். அதாவது கணினிகளுக்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள இரண்டு கணினிகளும் இன்னும் தயாராயில்லை என்பதையே இது காட்டுகிறது அடுத்து அந்த ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள்., அப்போது தோன்றும் Local Area Connection Properties டயலொக் பொக்ஸில் General டேபின் கீழ் Internet Protocol (TCP/IP) என்பதைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள் Properties பட்டனில் க்ளிக் செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Use the following IP address என்பதைத் தெரிவு செய்து கீழுள்ள்வாறு அதன் ஐபி முகவரியை மற்றியமையுங்கள்..

முதல் கணினியில் (PC-1) ஐபி முகவரியாக 192.168.0.1 எனவும் இரண்டாவது கணினியில் (PC-2) 192.168.0.2 எனவும் வழங்குங்கள். இப்போது இரண்டு கணினிகளையும் இணைத்தாயிற்று, இதனை உறுதி செய்து கொள்ள வேண்டுமானால் மறு படியும் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்ய் வரும் விண்டோவில் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனில் ம்ஞ்சல் நிற விழிப்புக் குறி மறைந்திருப்பதைக் காணலாம்.

சில வேளை அந்த ஐக்கன் மேல் பூட்டு வடிவில் ஒரு ஐக்கன் இருப்பதை அவதானித்தால் Firewall இயக்க நிலையிலுள்ளது என்பதையே காட்டுகிறது. அவ்வாறிருந்தால் பைல் பரிமாறம் செய்வதை விண்டொஸ் அனுமதிக்காது. அதனை இடப்பக்கம் Network Task என்பதன் கீழ் Change Windows Firewall Settings என்பதைக் க்ளிக், செய்து தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுங்கள்.. தற்போது இந்த சிறிய வலையமைப்பில் பைல், போல்டர் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாயிருக்கும்.

IP Address: 192.168.0.1
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1

படங்கள் பிரசுரமாகுமாயிருந்தால்
நிழற் படுத்தப் பட்ட பகுதி அவசியமில்லை இரண்டாவது கணினியிலும் கீழே காட்டியுள்ளது போன்று ஐபி முகவரியை மாற்றி அமையுங்கள்.

IP Address: 192.168.0.2
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1

அதி வேக ப்ரோடபேண்ட் இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரியை மாற்றியமைக்கும் இடத்தில் “Obtain an IP address automatically” என்பதைத் தெரிவு செய்ய் வேண்டும்.
எனினும் அதிவேக இணைய இணைப்பை இரண்டு கணினிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் நேரடியாக் க்ரொஸ் ஓவர் கேபல் கொண்டு இணைப்பதை விட இடையில் இரண்டு அல்லது நான்கு போர்டுக்ள் (Ports) கொண்ட ரூட்டர் மூலம் இணைப்பதே சிறந்த வழி முறையாகும். எனினும் அதற்கு க்ரொஸ் ஓவர் கேபலை விட செலவு சற்று அதிகமாயிருக்கும். .என்பதை நினைவில் கொள்ளவும்.

நன்றி் தமிழ் கம்ப்யூட்டர்

கிசு கிசு கடிதம் - கைகலப்புடன் முடிவு


கிசு கிசு கடிதம் தொடர்பில் விசாரணைக்காக பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள மாணவர்கள் தமது பெற்றோர்களுடன் இன்று பாடசாலைக்கு வந்துள்ளனர். இதன்போது ஒரு பெற்றார் ஒரு மாணவனைத் தாக்கியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் வரவழைக்கப் பட்டிருந்தனர். பின்னர் நிலைமை சீருக்கு வந்ததாகவும் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகள் பாடசாலையில் நடைபெறுவதாகவும் நமக்குத் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

மாணவர்களுக்குப் பிண்ணணியில் சில வெளிச்சக்திகள் இருப்பதாகவும் அறிய முடிகின்றது. அலுவலகத்திலிருந்து பணம் திருடப்பட்ட கதை பொய்யென்பதை பாடசாலை வட்டாரம் ஏற்றுக் கொண்டுள்ளதாம். ஆனாலும் இக்காரணத்தை மையமாக வைத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை விசாரிப்பதற்காக ஆசிரியர்கள் இரவோடிரவாக அம்மாணவர்களின் வீடுகளிற்கு சென்றிருந்ததாகவும் சொல்லப்படுகின்றது. திஹாரிய மாணவனின் வீட்டிற்கு இரவு பன்னிரண்டு மணிக்குப் போய் அம்மாணவனின் பெற்றோரை சந்தித்ததாக சில மாணவாக்ள் சொல்லியுள்ளனர். அதாவது பணத்திருட்டு விவகாரம் பொய்யென ஆசிரியர் தரப்பு தற்போது ஏற்றுக் கொண்டாலும் பணத்தொகை காணாமல் போனதை மையப்படுத்தியே சில மாணவர்களை ஆசிரியர்கள் விசாரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர்களே இவ்வாறு மாணவர்கள் மீது பொய்க் குற்றச் சாட்டுக் கூறுவது அதிர்ச்சியான விடயம் என பலர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். எது எவ்வாறாயினும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கட்டுப்படாமல் எல்லைமீறிச் சென்றுள்ளதாகப் பலர் அதிருப்தியடைந்துள்ளனர். இதுவரை இப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வும் பெறப்படவில்லை.

என்ன நடக்குதென்னு ஒன்னுமே புரயுதுல்லப்பா…
கிசு-கிசு கடிதம் இணைப்பு 01

பாலிகா வித்யாலயத்தில் அடிக்கல் நாட்டு விழா

பாலிகாவித்தியாலயத்தின் புதிய கட்டித்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை அதிபர் புஹாரி உடையாரின் தலைமையில் இடம்பெற்றது. கட்டிடத்திற்கான முதலாவது கல் மௌலவி எம்.என்.எம் இஜ்லான் (காஸிம்) அவர்களால் வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினதும், நலன்புரி சங்கத்தினதும் உறுப்பினர்களளோடு ஊர்ப்பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இரண்டு மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தில் கீழ்மாடியில் வகுப்பறையும் மேல்மாடியில் பள்ளிவாசலும் அமையப்பெறவுள்ளது.

கிசு-கிசு கடிதத்தால் அல் பத்ரியாவில் பெரும் பரபரப்பாம்..


சில நாட்களுக்கு முன்னர் அல் பத்ரியா மகா வித்தியாலயத்துக்கு ஒரு மொட்டைக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தற்போதைய உயர்தர வகுப்பு மாணவ, மாணவிகளின் கிசு-கிசுக்கள் அம்பலப்படுத்தப்பட்டள்ளது.

பாடசாலை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இக்கடிதம் திடீரென்று காணாமற் போயுள்ளது. இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் சூடு பிடித்திருக்கின்றது. கடிதம் காணாமல் போனமைக்கு ஆசிரியர்கள் தரப்பால் மாணவர்கள் குற்றம் காட்டப்பட, மாணவர் தரப்போ சில ஆசிரியர்களே இக்கடிதத்துக்கு பின்னனி என சந்தேகிப்பதாக தெரிகின்றது.

இக்கடிதம் யாரால் அனுப்பப்பட்டுள்ளது என்பது தொடர்பாக ஆசிரியர்கள் ஆராயாது அலுவலகத்திலிருந்த பணத்தொகை காணாமற் போயிருப்பதாகவும் அதற்கு மாணவர்களே காரணமென்றும் இதைச்சாட்டாக வைத்து கடித விவகாரத்தை ஆசிரியர் தரப்பு மரைக்க முற்படுவதாகவும் மாணவர்களால் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சில மாணவர்களும், மாணவிகளும் பாடசாலையை விட்டு இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட மாணவியொருவரின் தந்தை பாடசாலை அதிபரிடம் போய் நடந்ததை விசாரித்ததாகவும், அதிபர் அவர்கள் வழமையான அவர் தோனியி்ல் கடுகடுப்பாக நடந்துகொண்டதாகவும் நேரில் கண்டோர் தெரிவிக்கின்றனர்.

நடுநிலையாக நன்று இவ்விடயத்தை விசாரிக்கவேண்டிய SDS குழுவினரும் சற்று ஆசிரியர் தரப்புக்கு ஆதரவாக நிற்பதாகவும், முழுப்பழியையும் மாணவர்கள் மீது சுமத்தப்பார்ப்பதாகவும் மாணவர்கள் தரப்பு ஆதங்கப்படுகிறது. எது எப்படியிருப்பினும் அல் பத்ரியாவின் தற்போதைய நிலையானது படு பயங்கரமானதாகவே தெரிகிறது. ஒழுக்க விடயத்தில் மாணவர்களின் நிலை கவலைக்கிடமாகவே இருப்பதாக அண்மையில் பாடசாலைக்கு வந்த வட்டாரக் கல்வியதிகாரி கூட கூறியிருந்தார். ஆகவே மாணவர்களை வழிநடாத்தும் ஆசிரியர் குழாம் முன்மாதிரியானவர்களாக, நன் நடத்தையுள்ளோராக இருந்தால் மட்டுமே மாணவர்களை அவர்களால் திரன்பட வழிநடாத்த முடியும். இல்லாதபோது நிலைமை மென்மேலும் மோசமடையவே வழிசெய்யும்.

இது பற்றிய மேலதிக விபரங்கள் தகவல்கள் கிடைக்கின்றபோது பக்க சார்பற்றமுறையில் பின்னர் அறியத் தருகின்றோம்.

வண்ண விளக்குகளால் மூளைக்கு ஆபத்து


வண்ண விளக்குகள் வசீகரமானவை. கண்களை கவர்ந்திழுக்கும். பலரும் விரும்புவதால் வண்ணவிளக்குகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக பூஜையறை, படுக்கை அறை மற்றும் பெரியவர்களின் படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் `ஜீரோ வாட்ஸ்’ பல்புகளாவது ஒவ்வொரு வீடுகளிலும் ஒளிரும்.

அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக நரம்பியல் வல்லுனர்கள், விளக்கு ஒளியால் ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்கள். இதில் வண்ண விளக்குகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிப்பது தெரியவந்துள்ளது.

இதற்காக ஆய்வகத்தில் பல வண்ண விளக்குகளுக்கு இடையே எலிகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. ஆய்வில் விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் எலக்ட்ரிக் கதிர்வீச்சு மூளை செல்களான நிரான்களைப் பாதிக்கின்றன. அவற்றின் செயல்பாட்டை தடுப்பதால் பல விபரீத வியாதிகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக உடல் வலி, பார்கின்சன் என்னும் ஞாபகமறதி வியாதி, மூளை முடக்கம், இதயக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு அமைப்பு (இம்ன் சிஸ்டம்) செயல்களில் பாதிப்பு மற்றும் இன்னும் பல வியாதிகளுக்கு வழி வகுக்கிறது.

ஒவ்வொரு வண்ண விளக்கும் வேறுவேறு பாதிப்புகளை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. சிவப்பு வண்ண விளக்கு நிரான்களை செயலிழக்கச் செய்கிறது. நீல வண்ண விளக்குகள் ஒரு வகை ஜீன்களைப் பாதிக்கிறது. மஞ்சள் விளக்குகள் வேறுவகை ஜீன்களைப் பாதிக்கிறது.

உடலியக்கம் பல மின்தூண்டல்களால்தான் நடைபெறுகிறது. இதற்கிடையே விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் மின் அதிர்வுகள், மூளையை பாதிக்கிறது என்கிறது ஆய்வு.

யார் அந்தப் பெண் ஷெய்த்தான்

கஹட்டோவிட்ட தஃவாப்பள்ளியில் முஜாஹித் மௌலவியால் நடாத்தப்பட்ட பயானுக்கு முன்னர் பேசியவர் கஹட்டோவிட்டவில் பெண் ஷெய்த்;தான் ஒன்று உருவாகியிருப்பதாகவும், அதனால் புதிய புதிய அனாச்சாரங்கள் பரப்பப்படுவதாகவும் கூறினார். இது ஊரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மூன்று வருடம் படித்த பெண்ணொருவர் சில பெண்பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பூத்தூவி மங்களகரமாக ஆன்மீகத்தின் பெயரால் அட்டகாசம் பண்ணுவதாக தஃவாக்காரர்களால் விமர்சிக்கப்படுகிறார். இவ்வதந்திகளை மறுதளித்து விளக்கமளிப்பதற்காக 14.2.2010 ல் அந்த பெண்கள் மத்ரஸாவில் விஷேட அமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்தன.
எது எப்படி இருந்தாலும் பெண் ஷெய்தான் என்று தஃவாக்காரர்கள் பகிரங்கமாக சொல்லியிருப்பதானது கொஞ்சம் மனசுக்குக் கஷ்டமாகத்தான் இருக்குது. ஆன்மீகத்தொண்டு புரிபவங்களை இவ்வாறு அநாகரிகமாத் தூசிக்கக் கூடாதப்பா. ஆந்த மத்ரஸாவுக்குப் போற பிள்ளைகள் முகத்தையெல்லாம் மூடிக்கிட்டுப் போறாங்க. இது எவ்வளவு நல்ல விஷயம். இது இந்த தஃவாக்காரர்களுக்குப் பிடிக்கவில்லை போலும். நல்லத யார் செய்தாலும் அதை எடுத்துக்கனும் என்பதை தஃவாக்காரர்கள் நன்கு புரிந்து கொள்ளனும்.
ஆனாலும் இந்த பூத்தூவல் விவகாரம் என்னவென்று நமக்குக் கொஞ்சம் குழப்பமாகவே இருக்கு. தஃவாக்காரர்கள் சும்மா எதையும் சொல்லமாட்டாங்களே. புகிரங்கமாக ஊர் முழுக்கக்கேட்கச் சொன்ன குற்றசாட்டுக்கு நாலு செவருக்கு மத்தியில ஆறுபேர் கேட்பதற்கு மறுப்புச் சொன்னா அது பொருத்தமில்ல. மத்ரஸாதான் ஊருக்கு உயரத்துலதான இருக்கு அங்கிருந்து ஓரு சின்ன ஸ்பீக்கர்ல சொன்னா கூட ஊர் முழுக்கக் கேட்டிடும். இத மிக அவசரமாகவே நம்ம மவ்லவியா தரப்பு செய்யனும் அப்பதான் இந்த தஃவாக்காரர்கள்ட வாய அடைக்கலாம்.
இதுல இன்னொரு பிரச்சிண இருக்கு மவ்லவியா தரப்புல பதிலடி கொடுப்பதற்கு தரமான மௌலவியில்ல என்பதுதான் அது. அதக்கெல்லாம் கவலப்படக்கூடாது அதுக்குத்தான் நம்ம தரீக்காக்களின் மௌலவிமார் இருக்கிறாங்களே கூட்டிவரவேண்டியதுதான். ஆனா கட்டாயம் இத மிக அவசரமாகவே செய்யனும். நாங்க நடுநிலையாக இருப்பவங்க எங்களுக்கு இதன் உண்மை என்னவென்பது புரியனும். மௌலவியாத் தரப்பு தகுந்த நடவடிக்கைகள முன்னெடுக்கனும். எங்களுக்கு இந்த மார்க்க விஷயங்கள் அவ்வளவு ஓடாது. ஆனா எங்கட ரத்தம் கொதிக்குது யாரையாலும் கூட்டிவந்து இந்த தஃவாக்காரர்களுக்கு பதிலடி கொடுங்கனு சொல்லி பணிவா கேட்டுக் கொள்கிறோம்.

சோனக அடையாளங்களை படிப்படியாய் இழந்து வரும் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகாவித்தியாலயம்


கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகாவித்தியாலயத்தில் கடந்த 11.02.2010 அன்று நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி தொடர்பில் சில விடயங்களை இங்கே அவதானிப்புக்காய் விடுவது பொருத்தமாகவிருக்கும் என நினைக்கின்றேன்.

இஸ்லாத்தை முழுமையாகப்பிரதிபலிக்கும் ஒரு முஸ்லிம் பாடசாலையை நோக்கமாகக் கொண்டுதான் நாம் இதை எழுதுகின்றோம் என்றாலும் ஓருபடி கீழிறங்கி குறைந்த பட்சமேனும் ஒரு முஸ்லிம் பாடசாலையொன்றில் காணப்படவேண்டிய சில இலட்சணங்களை நமது பாடசாலைகள் இழந்து வருகின்றன என்ற கவலையினை கருத்தாக வடிப்பதன் மூலம் உணரும் உள்ளங்களைத் தட்டிவிடலாம் என்றெண்கின்றோம்.

கடந்த விளையாட்டுப் போட்டியில் அஸர் தொழுகைக்காக நேரம் வழங்கப்படவில்லையென்பது மிகப்பெரும் தவறென்பதற்கு அப்பால் சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள சலுகைகளையும் மீறுவதாகின்றது. விளையாட்டுப் போட்டியை நிறுத்திவிட்டு எல்லோரும் மைதானத்தில் தொழுதிருக்க வேண்டும் என்று கூட நாம் கூறவரவில்லை. தொழவிருப்பவர்கள் எங்காவது தொழுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையே கூறவிளைகின்றோம்.

யுத்த களத்திலும் கூட தொழுகையைக்கடைபிடிக்கச் சொல்லும் மார்க்கம் இஸ்லாமாகும். பொதுவாக நமது பாடசாலைகளில் தொழுகைக்காக பிரத்தியேகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாடநேரங்களில் தொழுகைக்காக நேரமொதுக்கப்படுகின்றன. கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகாவித்தியாலயத்தில் அண்மையில்தான் புதிதாக ஒரு பள்ளியொன்றும் கட்டிக்கொடுக்கப்பட்டது. ஏற்கனவே இன்னொரு பள்ளியும் இருக்கின்றது. ஆகவே தொழுகைக்காக நேரமொதுக்குவதால் விiயாட்டுப்போட்டிக்கு பாதிப்பேதும் ஏற்பட்டிருக்காது. இன்னும் சொல்லப்போனால், இந்த விளையாட்டுப்போட்டிக்கு நடுவர்களாக இருந்தவர்களுல், இலங்கையில் பிரபலமான இஸ்லாமியப் பல்கலைக் கழகங்களில் பட்டம்பெற்ற சிலரும் இருந்திருக்கிறார்கள். பாடசலை ஆசிரியர்களில் சிலர் மௌலவிமார்களாகும். அத்துடன் பிரதம அதிதிகளாகவிருந்தவர்களில் மௌலவிமார்களுமிருந்துள்ளனர் பள்ளிவாசல்களின் நிருவாகத் தலைவர்களும் இவர்களில் அடங்குகின்றனர். இத்துனை பேருக்கும் அஸர் தொழுகைக்காக நான்கு திசைகளிலிருந்தும் ஒலித்த அதான் ஓசைகள் கேட்கவில்லையோ தெரியவில்லை.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

இலங்கைக்கு 104 பதக்கம்

தெற்காசிய விளையாட்டில் வழக்கம் போல் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. மொத்தம் 175 பதக்கங்களுடன் முதலிடத்தை கைப்பற்றி அசத்தியது.

"சார்க்' அமைப்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் நேபாளம், பூடான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகள் பங்கேற்கும், 11வது தெற்காசிய விளையாட்டு போட்டி தாகாவில் நடந்தது. கடந்த 12 நாட்களாக நடந்த இப்போட்டிகள், நேற்று நிறைவு பெற்றன.

இந்தியா முதலிடம்:
தெற்காசிய போட்டிகளில் இந்திய அணி 175 (90 தங்கம், 55 வெள்ளி, 30 வெண்கலம்) பதக்கங்களுடன் முதலிடத்தை பெற்றது. 80 பதக்கங்களுடன் (19 தங்கம், 25 வெள்ளி, 36 வெண்கலம்) இரண்டாவது இடத்தை பாகிஸ்தானும், 97 பதக்கங்களுடன் (18 தங்கம், 23 வெள்ளி, 56 வெண்கலம்) வங்கதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.


பதக்கப்பட்டியல்

நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
இந்தியா 90 55 30 175
பாகிஸ்தான் 19 25 36 80
வங்கதேசம் 18 23 56 97
இலங்கை 16 34 54 104
நேபாள் 7 9 19 35
ஆப்கானிஸ்தான் 7 9 16 32
பூடான் 0 2 3 5
மாலத்தீவு 0 0 2 2
மொத்தம் 157 157 214 528
------------


கோலாகல நிறைவு
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. வண்ணமயமான விழாவில் வங்கதேச அதிபர் ஜில்லர் ரஹ்மான், ராணுவ தலைவர் அப்துல் முபின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் 12 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் விழாவில் பங்கேற்று, கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகசங்களை நிகழ்த்தினர். பாரம்பரிய முறைப்படி தெற்காசிய விளையாட்டின் கொடியிறக்கப்பட்டு, அடுத்து தொடரை நடத்த உள்ள இந்தியாவிடம் (2012) வழங்கப்பட்டது.

வங்கதேச ஒலிம்பிக் சங்க தலைவர் ஜென் முபின், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் கொடியை வழங்கினார். சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த நிறைவு விழா, மேளதாளங்கள் முழங்க இனிதே முடிந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்திய வீரர், வீராங்கனைகள், பங்கபந்து மைதானத்தில் நடந்த இவ்விழாவில், முழுமையாக பங்கேற்க முடியவில்லை. இறுதி அணிவகுப்பில் பெரும்பாலான அணிகளின் வீரர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இல்ல விளையாட்டுப் போட்டியின் முடிவுகள்

கஹட்டோவிட அல்பத்ரியா ம.வியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று மாலை இரண்டு மணிக்கு ஆரம்பமாகி மாலை ஏழு மணியளவில் நிறைவுபெற்றது. போட்டி நிகழ்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. பழைய மாணவர்கள் பலரும் போட்டி நிகழ்ச்சிகளைப் பார்வையிட ஆர்வத்துடன் வந்திருந்தனர். இவர்கள் தங்களது கடந்த கால நிகழ்வுகளை மீட்டிய வண்ணம் இந்நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.
கமர் இல்லம் 307
ஷம்ஸ் இல்லம் 304
நஜ்ம் இல்லம் 280

கைதும், கண்ணீர் புகையும், கண் கலங்கும் நமது தேசம் !

வன்னிப் போர் முடித்தபோது, சரத்பொன்சேகா , இப்படியொரு நிலை தனக்காகுமென எண்ணிப் பார்த்திருக்கமாட்டார். கைதும், கலகமும், கண்ணீர் புகையும், காணத் தொடங்கியிருக்கும் சிங்களமும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டாது.

அவசரகாலச்சட்டடப் பிரேரணைகளின் போது, ஆக்ரோசமாகப் பேசி ஆதரித்த சோமவன்ச, அதே அவசரகாலச்சட்டத்தின் பேரில் கைதாகலாம் என கதிகலங்கிப் போவதைப் பற்றி கனவும் கண்டிருக்கமாட்டார்.





















மூளைக்கு பலம் சேர்க்கும் 'ஜாகிங்'


ஓட்டப் பயிற்சி உடலுக்கு நல்லது என்பது நமக்குத் தெரியும். ஓடும்போது உடலின் அனைத்து பாகங்களும் இயங்குவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
`ஜாகிங்’ (மெல்லோட்டம்) செய்வதும் சிறந்த பயிற்சிதான். இதனால் முளை பலம்பெறுகிறது என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தினமும் ஜாகிங் செல்வதால் அதிகளவில் புதிதாக மூளை செல்கள் உற்பத்தி ஆகிறது என்கிறார்கள்.

சுவாசப் பயிற்சியால் மூளையின் கார்டெக்ஸ் பகுதி தூண்டப்படுகிறது. ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. ஹார்மோன்களும் சுறுசுறுப்பாகின்றன. ஜாகிங் செய்யும்போதும் இதே மாற்றங்கள் நிகழ்கின்றன.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். எலிகளை நகரும் சக்கரத்தில் ஓட்டப் பயிற்சியில் ஈடு படுத்தினார்கள். தொடர்ந்து சில நாட்கள் பயிற்சி பெற்றதும் அந்த எலிகளில் சில மாற்றங்களை கண்டறிந்தனர்.

பயிற்சியில் ஈடுபட்ட எலி, பயிற்சி செய்யாத எலி இரண்டிற்குமான முளைப் பதிவுகள் கணினி முலம் பரிசோதிக்கப்பட்டது. இதில் பயிற்சி செய்த எலிகளுக்கு புதிதாக மூளை செல்கள் உருவாகி இருந்தன.

எலிகள் சுமாராக ஒரு நாளைக்கு 15 மைல் அளவுக்கு ஓடி இரை தேடுகின்றன. இதனால் ஒரு சில நாட்களில் ஆயிரக்கணக்கில் புதிய முளை செல்கள் உருவாகின்றன. ஆய்வுக்கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்ட எலிகளுக்கு சுமார் 6 ஆயிரம் மூளை செல்கள் புதிதாக உற்பத்தி ஆகி இருந்தன.

ஜாகிங் செய்வது, சுவாசத்தை துரிதப்படுத்துவதன் முலம் கார்டிசோல் என்னும் ஹார்மோன் செயல்பட்டு அதிகப்படியான மூளை செல்கள் உற்பத்தியாக துணைபுரிகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகா கைது (3ம் இணைப்பு)


சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையின் தலைநகர் கொழும்பில் வைத்து திங்களன்று இரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினரால் திடிரென சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் இராணுவ பொலிசாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சரத்பொன்சேகாவை பிடரியில் பிடித்து மிகக்கேவலமான முறையில் இழுத்துச்சென்றதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தானும் ஏனையோரும் பார்த்திருக்க மிக மோசமான முறையில் இந்த கைது இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என அவர் திங்கட்கிழமை பகல் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில் அன்று இரவே இந்த கைது இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே திங்களன்று போர்க்குற்றங்கள் தொடர்பாக அரசாங்கம் தனது மறுப்பினை தெரிவிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகத்துக்கு உயர் மட்டக்குழு ஒன்றினை அனுப்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.

போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும், இது தொடர்பில் எனக்கு தெரிந்த உண்மைகளை நான் வெளியிட வுள்ளேன் என சரத்பொன்சேகா கூறியிருந்தார்.

அத்தோடு தன்னை துரோகி எனக்கூறுவதையும் அவர் கண்டித்ததுடன் உண்மையை சொல்பவர் துரோகி அல்ல என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அவர் கைது செய்யப்படுவார் என எமது தளம் உட்பட பல இணைய மற்றும் செய்தி தளங்கள் ஏற்கனவே கூறியிருந்தன. இந்த நிலையில் இராணுவ இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இராணுவ சட்டங்களுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தின் துணையுடன் ஆட்சியை கவிழ்க்க சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவுள்ளதாக எதிர்கட்சிகள் சில நாட்களாக கூறி வந்திருந்தன. எனினும் மகிந்தவின் அன்புத்தம்பி கோதாபே ராஜபக்ஷ சரத் பொன்சேகா கைது செய்யப்பட மாட்டார் என கூறிய சூடு ஆறுமுன்னரே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாக சும்மா இருந்த சரத்பொன்சேகாவை வம்புக்கு இழுத்து, பிறகு அதனால் பெரும் துன்பப்பட்டார் மகிந்த. இலகுவாக வெல்ல வேண்டிய ஜனாதிபதி தேர்தலில் , பெரும் தில்லு முல்லுகளை செய்து ஒருவாறு வெற்றி பெற நேர்ந்தது. பாராளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், சரத்பொன்சேகா மீது மக்கள் அபிமானம் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த கைது மேலும் சிக்கலை மகிந்தவிற்கு ஏற்படுத்த கூடும்.


................

முன்னாள் இரானுவ தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான சரத்பொன்சேகாவை,சற்று முன் இரானுவ பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக தகவல் கிடைத்தவுடன் அறிய தருகிறோம்

.........

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரச்பொன், இலங்கை அதிபர் சேகாராஜபக்சேவை கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது சரத்பொன்சேகா தரக்குறைவாக நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா, இலங்கை அதிபர் ராஜபக்சேவை கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள அவர் மிகவும் தரக்குறைவாக நடத்தப்பட்டார் பொன்சேகா என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ராணுவத்தினரால் தர தரவென இழுத்து செல்லப்பட்ட பொன்சேகாவை ரகசிய இடத்தில் வைத்து ராணுவ போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக வர்த்தக மைய தாக்குதல் ரகசிய திட்டம் : புதிய தகவலால் பரபரப்பு


அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு முன்னதாகவே அப்போதைய ஈராக் ஜனாதிபதி சதாம் உசேனை பதவியில் இருந்து அகற்றுவதற்குஇ பிரிட்டன் ரகசிய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது கடந்த 2001 செப்டம்பரில் அல்-குவைதா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர்.

இதில் அந்த கட்டடம் தரை மட்டமாகியது. இதைத் தொடர்ந்து ஈராக் மீது அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் தாக்குதல் நடத்தின. தலைமறைவான அப்போதைய ஈராக் ஜனாதிபதி சதாம் உசேனை அமெரிக்க ராணுவம் கைது செய்தது. இதையடுத்து அவர் மீது ஈராக் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தூக்கில் போடப்பட்டார்.

ஆனால் அமெரிக்க உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு முன்னதாகவே ஈராக் ஜனாதிபதி பதவியில் இருந்து சதாம் உசேனை அகற்றுவதற்கு பிரிட்டன் அரசு ரகசிய திட்டமிட்டதும் இது தொடர்பாக ஈராக்கில் உள்ள சதாம் எதிர்ப்பாளர்களுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டதும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த உடன்படிக்கையின் நகல் ஒன்று தற்போது கைப்பற்றப்பட்டு வெளி உலகிற்கு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அப்போதைய அமெரிக்க பிரதமர் டோனி பிளேருக்கும் சதாம் உசேன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே இந்த உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஈராக் நாட்டுக்கும் மக்களுக்கும் பிரிட்டன் எப்போதும் ஆதரவாக இருக்கும். ஈராக் மக்களுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது.

ஈராக் மக்களின் உரிமைகளை காக்கவும் அங்கு நிரந்தர அமைதி ஏற்படவும் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை ஏற்படுத்துவதற்கும் பிரிட்டன் உதவும். அடக்கு முறையில் இருந்தும் அநியாயமாக கைது செய்யப்படுவதில் இருந்தும் ஈராக் மக்களை காப்போம்.

இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி சதாம் உசேன் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால் ஈராக்குடன் எண்ணெய் கிணறு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்படும்.

ஈராக் சார்பில் வாங்கப்பட்ட கடன் ரத்து செய்யப்படும். வர்த்தக உடன்படிக்கைகளும் மேற்கொள்ளப்படும். உலக வங்கிஇ சர்வதேச நிதியகம் ஐரோப்பியயூனியன் ஆகியவற்றிடம் இருந்து நிதி உதவி பெற்றுத் தரப்படும்.இவ்வாறு அந்த ஒப்பந்ததில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டோனி பிளேர் தற்போது கூறுகையில் "அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பின்னரே சதாம் உசேனை ஆட்சியில் இருந்து அகற்றும் விஷயத்தில் கவனம் செலுத்தப்பட்டது' என்றார்.இந்த விவகாரம் பிரிட்டனில் மட்டுமல்லாமல்இ சர்வதேச அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நாளை பாராளுமன்றம் கலைப்பு, எப்பிரல் 8ல் பொதுத் தேர்தல் ?


பாராளுமன்றம் நாளை 9 ஆம் திகதி கலைக்கப்படும். பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியமுள்ளது என்று பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை தேர்தலில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும்.

ஜனாதிபதி தேர்தலில் போன்றே பொதுத் தேர்தலிலும் நாங்கள் வெற்றியடைவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் ராஜித சேனாரட்ண இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மகத்தான வெற்றியை பெற்றது. மக்கள் எமது வேலைத்திட்டங்களை அங்கீகரித்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதிலும் மக்கள் எங்களை அமோக வெற்றியடையச் செய்வார்கள் என்று நம்புகின்றோம். அந்தவகையில் பாராளுமன்றம் நாளை மறுதினம் 9 ஆம் திகதி கலைக்கப்படும். இது நம்பகரமான தகவலாக உள்ளது. அதேபோன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் அதிகமுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும். மேலும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட எதிர்பார்க்கின்றோம். இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்கால திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயார் நிலையில் இருப்பதாகத் தெரிகின்றது. எனவே இந்த தேர்தலில் கூட்டமைப்பு சிந்தித்து செயற்படும் என்று நம்புகின்றோம்.

வடக்கு கிழக்கு மக்கள் நாட்டின் தேசிய அரசியல் செயற்பாட்டில் இணைந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எனவே வடக்கு கிழக்கு மக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்றார் அமைச்சர்.

சோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் கடந்த ஜனவரி 26ல் ஜனாதிபதித் தேர்தலை வைத்துக்கொண்ட மகிந்த ராஜபக்ச, பாராளுமன்றத் தேர்தலை ஏப்பிரல் 8ல் நடத்த எண்ணம் கொண்டிருப்பது , சோதிடத்தின் அடிப்படையில் என்றும், 8ம் இலக்கம் ராஜபக்சவுக்கு வெற்றி தரும் என நம்புவதாகவும், விடயமறிந்த ாரப்புக்கள் தெரிவிக்கின்றன.

அல்பத்திரியா ம.வி. இல்ல விளையாட்டுப் போட்டி இறுதிநிகழ்வுகள்.

கஹடோவிட அல் பத்ரியா ம।வி இன் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் நாளை செவ்வாய் ஆரம்பமாகி புதன், வியாழன் ஆகிய இரு தினங்களும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன।

கடந்த மாதம் நடைபெற்ற Cricket, Football, Volly ball ஆகிய போட்டி முடிவுகளின் படி கமர் இல்லம் முதலாம் இடத்தையும், சம்ஸ் இல்லம் இரண்டாம் இடத்தையும், நஜ்ம் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது।

போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் பாடசாலை அதிபர் M.I.M Rishan அவர்களின் தலைமையில் கோளாகலமாக நடைபெறவுள்ளன। இன்நிகழ்வில் பல அதிதிகள், ஊர் பிரமுகர்கள் கழந்துகொள்ளவுள்ளனர்। வழமைபோன்று இறுதிநாள் நிகழ்வுகள் கலைகட்டுமென் எதிர்பார்க்கப்படுகின்றன।

மேலும் உடுகொட அரபா முஸ்லிம் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் எதர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தேர்தல் : மகிந்தா வெற்றியின் மர்மம்


வெற்றிக்கு வருத்தமும் இல்லை. தோல்விக்கு மகிழ்ச்சியும் இல்லை. இலங்கையின் அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மகிந்தா ராஜபக்ஷே மீண் டும் குடியரசுத் தலைவராகத் தொடரலாம் என்று பெரும்பான்மைச் சிங்களவர்கள் தங்களது சிலிர்ப்பைச் சொல்லியிருக்கிறார்கள். ''நாட்டு மக்கள் தங்கள் நன்றியை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பயங்கரவாதம் இல்லாது ஒழிந்த பின் நடத்தப் படும் முதலாவது தேர்தலில் எனக்குத்தான் மக்கள் வெற்றியை வழங்கியிருக்கிறார்கள்'' என்று மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தியிருக்கிறார் மகிந்தா.

'தோல்வி உறுதி' என்றுதான் மகிந்தா நினைத்தார். சிங்களத்தில் இருந்த சில பத்திரி கைகளும் இப்படித்தான் உறுதியாகச் சொல்லின. கருத்துக்கணிப்பு நடத்தியவர்கள் அதிகமான சதவிகிதத்தை சரத் ஃபொன்சேகாவுக்குதான் அளித்தார்கள். 'தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன், மனவருத்தம் தோய்ந்த நிலையில் அழுத முகத்துடன் புத்தக் கோயிலுக்கு வந்து பிட்சுகளிடம் வேண்டினார் மகிந்தா. 'என்னுடைய அரசியல் வாழ்க்கையை என்னுடைய தம்பிகள் கெடுத்துவிட்டார்கள். நான் தோற்கப்போகிறேன்' என்றுவருத்தப்பட்டார். புத்தபிட்சுக்கள்தான் நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி அவரை அனுப்பி வைத்தார்கள்' என்று சிங்களப் பத்திரிகைகள் கிசுகிசு வெளியிடும் அளவுக்குத்தான் நிலைமை இருந்திருக்கிறது. மகிந்தாவின் சகோதரரான கோத்தபயவுக்குத் திடீர் நெஞ்சு வலி வந்ததாகவும், சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்ல இருப்ப தாகவும் செய்திகள். அரசியல் சவால்கள்விடும் இன்னொரு சகோதரர் பசில், பெரிய அளவு பிரசாரங்கள் இல்லாமல் பதுங்கிவிட்டார். மகிந்தா - கோத்தபய - பசில் ஆகிய மூவர் அணியே முடங்கிப்போனதற்குப் பிறகு, உற்சாகமாக இயங்க வேறு யார்?

ஆனால், எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவுக்குத் திரும்பிய பக்கமெல்லாம் ஆதரவுச் சக்திகள் குவிந்திருந்தன. இலங்கையின் பிரதானக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினரின் செல்வாக்கு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் நன்மதிப்பு, தீவிர சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பி-யின் ஆதரவு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஒத்துழைப்பு, ஆளுங்கட்சி மீதான அதிருப்தி என ஃபொன்சேகா பலமான படையணிகளைவைத்திருந்தார். அவருக்குத் தோல்வி குறித்த பயமே இல்லை. வெற்றிக்குப்பிறகு தாம் என்ன செய்யப்போகிறோம் என்பதையே தனது வாக்குறுதியாகச்சொல்லி வந்தார். இவ்வளவும் போதாது என்று மகிந்தாவின் கட்சியைச் சேர்ந்தவரும்அந்த நாட்டின் முக்கிய சக்தியுமான சந்திரிகா, சரத் ஃபொன்சேகாவைச் சந்தித்துக் கை கொடுத்து, 'என்னுடைய ஆதரவும் உங்களுக்குத்தான்!' என்றார். அவரது அப்பா பண்டாரநாயகா குடும்பத்துக்கு இருக்கும் செல்வாக்கு, சரத்துக்கு இன்னொரு பலமானது. மாட்சிமை தங்கிய மனிதராக தான் ஆகிவிட்டதாகவே நினைத்தார் ஃபொன்சேகா.

ஆனால், முடிவுகள் மகிந்தாவின் மகுடத்துக்குச் சிக்கல் இல்லாமல் ஆக்கிவிட் டன. சிங்களவர்கள் மனச் சஞ்சலம் இல்லாமல் தங்களது முடிவை எடுத்தார்கள். ''தமிழனைக் கொன்று குவிப்பதில் யார் சமரசம் இல்லாமல், தயவுதாட்சண்யம் பார்க்காமல் இருப்பார்களோ, அவர்களுக்குத்தான் தங்களது வாக்கு என்றுசிங்க ளவர்கள் நினைத்தார்கள். அவர்களது சிந்தனை இந்த ஒற்றை வரியில்தான் அடங்கி இருந்தது. ஃபொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்ததும், சிங்களவர்கள் மத்தியில் இந்த எண்ணம் எழுந்துவிட்டது. ஒருவேளை ஃபொன்சேகாவையும் தமிழ் எம்.பி-க்கள் எதிர்த்திருந்தால், சிங்களவர் வாக்குகள் இன்னமும்சிதறி இருக்கும். சரத் ஃபொன்சேகா கூடுதலாக வாங்கியிருக்க முடியும். தமிழர்கள் முழுமையாக ஃபொன்சேகாவையும் ஆதரிக்கவில்லை. எனவே, அந்த வாக்குகளும் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, பெரும்பான்மை வாக்குகளை மகிந்தாவால் பெற முடிந்தது'' என்கிறார்கள் கொழும்புப் பத்திரிகையாளர்கள்.

ஜனதா விமுக்தி பெரமுனா போன்ற அமைப்புக்கள் எந்த இனவாதத்தை அந்த மண்ணில் விதைத்ததோ, அதன் அசைக்க முடியாத பிரதிநிதியாக மகிந்தா இன்று நினைக்கப்படுகிறார். எனவேதான் சிங்களவர் பெரும்பான்மை இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் மகிந்தாவுக்கே வாக்குகள் விழுந்திருக்கின்றன.

ஆனால், சிறுபான்மை இனங்களான தமிழர், முஸ்லிம், மலையகத்தவர் ஆகிய மூவரும் மகிந்தாவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி, திரிகோணமலை எனத் தமிழர் வாழும் இடமெல்லாம் ஃபொன்சேகாதான் அதிகம் வாங்கியிருக்கிறார். மனித உரிமை, மக்கள் ஜனநாயகம் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு மகிந்தாவை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் பல இறக்குமதி அமைப்புகள் பிரசாரம் செய்தன. ஊர்க்காவல் துறை தவிர, வேறு எங்கும் இவர்களால் தமிழர் மனதை மாற்ற முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் அதிகம் வாழும் சேருவில் தொகுதி தவிர, மற்ற இடங்களில் மகிந்தா பெற்ற வாக்குகள் குறைவு. முஸ்லிம்கள் அதிகம் இருக் கும் மூதூரிலும் இதே நிலைமைதான். கருணா தன்னுடைய கோட்டையாகச் சொல்லும்மட்டக்களப்பு மாவட்டத்து மூன்று தொகுதியிலும் தோல்வியே! சிங்களவர் அதிகம் வாழும் அம்பாறையில் மட்டும் மகிந்தா வெற்றிபெற்றுள்ளார். மலையகத்தை எடுத்துக்கொண்டால், அங்குள்ள முக்கியக் கட்சிகளான இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி இரண்டுமே மகிந்தாவை ஆதரித்தன. ஆனால், தமிழர்கள் வாழும் நுவரெலியா - மஸ்கெலியா, தொத்மலையில்ஃபொன் சேகா அதிக வாக்குகள் வாங்கியுள்ளார். அதாவது, சிங்களவர் மகிந்தாவுக்கும், சிறுபான்மை தமிழர், முஸ்லிம், மலையகத்தவர் அவரை நிராகரித்தும் வாக்களித்து உள்ளார்கள். ''இங்கு இரண்டு இனங்கள் இல்லை. ஒரே இனம்தான் இருக்கிறது'' என்று மகிந்தா அடிக்கடிசொல்வார். அதை மக்கள் தங்களது வாக்குகள் மூலமாகத் தோல்வி அடையவைத்திருக்கிறார்கள்.

மகிந்தாவின் இந்த வெற்றியே மோசடியானது என்று ஃபொன்சேகா சொல்லியிருக்கிறார். பாம்பின் கால் பாம்பறியும். ''நான் 14 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டேன். ஆனால், அதை மாற்றித் திருத்தி, தான் வென்றதாக மகிந்தா அறிவித்துவிட்டார்'' என்கிறார் ஃபொன்சேகா. ''தேர்தல் ஆணையரால் எதிர்பார்த்த அளவுக்குப் பணிகளை முன்னெடுக்க முடியவில்லை. உண்மையில், அவருக்கு ஏதோ நெருக்கடி ஏற்பட்டு உள்ளது'' என்கிறார், முன்னாள் பிரதமர் ரணில். மகிந்தாவின் பழைய நண்பர் மங்கள சமரவீரா, ''தேர்தல் ஆணையரைத் துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார். ஃபொன்சேகாவுக்குத் தேர்தல் வேலை பார்த்த பலரும் மதியத்துக்குப் பிறகு மிரட்டித் துரத்தப்பட்டுள்ளனர்'' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க பதவி விலகப்போவதாக வதந்தி கிளம்பியிருக்கிறது. உச்ச நீதிமன்றத் தின் அனுமதி இல்லாமல்அவரால் பதவி விலக முடியாது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு மாதத்தில் நடக்க இருப்பதால், தேர்தல் ஆணையரைப் பதவி விலகவிட மாட்டார்கள். இந்தக் குழப்பங்கள் கொழும்புபத்திரிகைகளில் முக்கிய இடங்களைப் பிடித்து வருவதால், தேர்தல் முடிவுகளில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இதனால், மகிந்தாவுக்கு எந்த இழப்பும் இல்லை. தேர்தல், ஜனநாயகம் என்று எதைப் பேசினாலும் அங்கு நடப்பது ராணுவ ஆட்சிக்குக் கொஞ்சம் கீழே என்று மட்டும்தான் சொல்ல முடியும். எல்லாமே ஒற்றை மனிதரால் தீர்மானிக்கப்படும் நாட்டுக்கு அதுதான் பெயர். ''தமிழர்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லையே, ஏன்?'' என்று மகிந்தாவிடம் கேட்டபோது, ''ஏன் என்று எனக்கும் தெரியவில்லை'' என்று அப்பாவி முகத்துடன் பதிலளித்திருக்கிறார். தேர்தல் நாளன்று அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் மட்டும் 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. செல் தாக்குதலும் நடந்துள்ளது. பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லை என்றாலும், யார் அதைச் செய்தது என்ற தகவலும் இல்லை. 'தமிழர்கள் வெளியே வந்து வாக்களித்தால், அது ஃபொன்சேகாவுக்குச் சாதகமாகிவிடும் என்பதற்காகவே ஆளுங்கட்சி இதைச் செய் தது' என்று தகவல் பரவியது. அங்கு ராணுவம் நினைத் தால் எதையும் செய்யலாம், தட்டிக்கேட்க யாருமில்லை என்பதுதான் இதன் மூலம் தெரிகிறது.

கடந்த முறை தமிழர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்தபோது, 'சிங்கள தேசம் தனக்கான ஜனாதிபதியைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்ள தேர்தலை நடத்துகிறது. இதில் தமிழர்களுக்கு என்ன வந்தது?' என்று பதில் சொல்லப்பட்டது. இன்றைய முடிவுகளும் அதைத்தான் காட்டுகின்றன. முன்பாவது தமிழர்களின் வாக்குகளையும் வாங்கி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. இப்போது அதற்கு அவசியம் இல்லாமல் சிங்களவர் வாக்குகள் மட்டுமே போதும் என்றாகிவிட்டது.

யோசித்துப்பார்த்தால், தமிழர்களின் வாழ்க்கைக்கான எந்த நம்பிக்கையும் தெரியவில்லை. சூன்யம் சூழ்ந்த வாழ்க்கையே வரிக்கப்பட்டுள்ளது!

இலவச கத்னா வைபவம் - விண்ணப்பம் கோறல்

கஹட்டோவிட முஸ்லிம் லேடீஸ் ஸடடி சேகிள் (KAHATOWITA MUSLIM STUDY CIRCLE) இரண்டாவது தடவையாக நடாத்தும் இலவச கத்னா வைபவம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெவுள்ளது. இந்நிகழ்வில் தங்களது பிள்ளைகளிற்கு கத்னா செய்துகொள்ள விரும்பும் பெற்றோர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தை நிரப்பி எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் கஹட்டோவிட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேக்கிளின் அலுவலகத்தில் கையளிக்குமாறு வேண்டப்படுகின்றனர். இம்முறை 30பிள்ளைகள் மாத்திரமே கத்னா செய்யப்படவுள்ளனர்.

இணைய பாவனைக்கும் மன உலைச்சலுக்கு தொடர்பு : பிரித்தானிய ஆய்வாளர்கள்

நீண்ட நேரம் இணையத்தை பயன்படுத்துவோருக்கு அதிக மன உலைச்சல் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக பிரித்தானிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.அதிக நேரம் இணையத்தைப் பயன்படுத்தும் நபர்கள் மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளமை அண்மைய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அநேகமான இணைய பாவனையாளர்கள் மன நோய்களினால் பீடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இணையத்தின் ஊடாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்களின் மூலமும் இந்த விடயம் தெளிவாகியுள்ளது. 16 வயது முதல் 51 வயது வரையிலான நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பாலியல், சூதாட்டம் மற்றும் சமூக வலைப்பூக்களில் அதிக நாட்டம் கொண்டவர்களுக்கு இவ்வாறான பாதிப்பு;ககள் அதிகம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இணைய பாவனைக்கு அடிமையானவர்களே அதிகளவில் மன உலைச்சளினால் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மன உலைச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் இணையத்தை பயன்படுத்துகின்றார்களா? அல்லது இணையத்தை நீண்ட நேரம் பயன்படுத்துபவர்கள் மன உலைச்சலினால் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற கேள்விக்கு இன்னமும் சரியான பதில் கிட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது

மோசடித் தேர்தலுக்காக ஜனாதிபதிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்: மனோ கணேசன்


இலங்கை வரலாற்றிலேயே எப்போதும் இடம்பெற்றிராத வகையில் மிக மோசமான தேர்தலை நடத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மோசடித் தேர்தலுக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைப் பகிஷ்கரிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் நடத்தியா ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அவர் தொடர்ந்து கூறுகையில், “வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிடப்பட்ட வாக்களிப்பு வீதங்களுக்கு மாறாகவே மறுநாள் கூறப்பட்டன. முதல்நாள் 70 வீதமாக இருந்த வாக்களிப்புகள் மறுநாள் 80 வீதமாக மாறியது எவ்வாறு?தேர்தல் தினத்தன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை சிறுசிறு செயல்களில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி அன்றைய தினம் இரவு பாரிய வேலைகளில் ஈடுபட்டு நாட்டு மக்களின் தீர்மானத்தை மாற்றியமைத்துள்ளார்.இது நமக்குக் கிடைத்த வெற்றி. அது பறிக்கப்பட்டமைக்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்கிறோம். இதற்கு உரிய பாடத்தை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாம் கற்பிப்போம்." என்றார்.மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க உரையாற்றுகையில், "நாம் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். வெவ்வேறு கொள்கைகளையுடையவர்கள். நாட்டில் அராஜகத்தை ஒழித்து ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒன்று சேர்ந்திருக்கின்றோம்" என்றார். என்றார்.ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்ட புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்

நட்சத்திரம் - விண்வெளியில் மின்மினிபோல் மின்னுவது ஏன்?


நம்மில் பலருக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே தெரிந்த ஒரு பாட்டு' ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்(Twinkle Twinkle Little Star)' .
நான் பல தடவை நட்சத்திரத்தை ரசித்திருக்கிறேன் .. ஆனால் அது ஏன் மின்னுகிறது என்று எனக்கு இது வரை தெரியாது. இரவு வானில் தெறித்து விழுந்த முத்துக்கள் போல பல ஒளி புள்ளிகள் இருந்தாலும், அது எல்லாமே நட்சத்திரம் அல்ல. மின்னுபவைகள் மட்டுமே நட்சத்திரம். மற்றவை எல்லாம் கிரகங்கள்.
அப்படியானால் நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன?
அவை பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் சிறு புள்ளிகளாக கறுத்த வானத்தில் தெரிகிறது. அவற்றில் இருந்து வெளிப்படும் ஒளியில் ஒரு பகுதி பூமியை சுற்றியுள்ள காற்று உள்வாங்கிகொள்வதால் நட்சத்திரம் மின்னுகிறது.
ஆனால் கிரகங்கள், பூமிக்கு மிக அருகில் இருப்பதால் அவை நட்சத்திரங்களை விட பெரிதாக தெரிகின்றன.
இது உங்களுக்கு முன்னாடியே தெரியுமோ!!

பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்கு அட்டைகள் குப்பைத் தொட்டிகளில் கண்டுபிடிப்பு

நடைபெற்று முடிந்த சிறீலங்காவின் அரச தலைவருக்கான தேர்தலில் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்கு அட்டைகள் பெரும் குவியல்களாக இரத்தினபுரி பகுதியில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மையாக உள்ள குப்பைத் தொட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான தகவல்களை ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கொரல தெரிவித்துள்ளார். எரிந்த நிலையில் பெருமளவான பயன்படுத்தப்பட்ட வாக்காளர் அட்டைகள் அங்கு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரால் கைப்பற்றப்பட்ட வாக்காளர் அட்டைகளில் 60 வீதத்திற்கும் மேலானவை பொன்சேகாவுக்கு ஆரவாக புள்ளடியிடப்பட்டவை. அவை தேர்தல் அதிகாரிகளால் முத்திரை குத்தப்பட்டு, கையொப்பம் இடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவுக்கு ஆதரவான வாக்கு அட்டைகளை செல்லுபடியற்றவை என நிராகரித்துள்ள தேர்தல் அதிகாரிகள், அவற்றை 65 அட்டைகள் கொண்ட கட்டுக்களாக அகற்றியுள்ளனர். பொதுவாக ஒரு தொகுதியில் 50 அட்டைகள் கட்டப்படுவதுண்டு. எனவே 65 வாக்காளர் அட்டைகளை 50 ஆக அவர்கள் கணக்கிட்டுள்ளனர்.
இந்த ஆதரங்களை சமர்ப்பிப்பதற்காக ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துக்கொரல, பிரதி தலைவர் கரு ஜெயசூரியா உட்பட பல உறுப்பினர்கள் அஸ்கிரிய, மல்வத்த, அமரபுர ஆகிய பீடங்களை சேர்ந்த பிரதம மதகுருக்களை சந்திப்பதற்கு சென்றுள்ளனர்.
எனினும் தமக்கு இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என தெரிவித்தள்ள தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் அட்டைகளை ஆறு மாதங்களுக்கு முன்னர் அழிப்பது குற்றமாகும் என தெரிவித்துள்ளனர்.
சிறீலங்காவில் நடைபெற்ற மிகப்பெரும் தேர்தல் மோசடிகள் தொடர்பில் கிடைத்துள்ள இந்த ஆதாரங்களை வெளிநாட்டு தூதுவர்களுக்கு காண்பிக்கப்போதவாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீயில் கருகி மரணம் : சியம்பலாகொடையில் சம்பவம்

சியம்பலாகொடை கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்ஹேன தோட்டத்தில் ஒன்பது வயதுச் சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீக்காயங்களுடன் இன்று செவ்வாய்கிழமை காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.குமாரகே தசநாயக்க (வயது 45), சஹன் திசந்த (வயது 9), குமாரகே செவ்வந்தி (வயது 19) குமாரகே மதுஷானி (வயது 15) ஆகிய தந்தை உட்பட மூன்று மகள்மாரும் மகனுமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.மத வேறுபாடுகளினால் தாயுடன் வாக்குவாதப்பட்ட தந்தை, தமது குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்த வேளை, அவர்கள் மீது பெற்றோலைக் கொட்டியுள்ளார். அதன் பின்னர் தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டு அவர்கள் மீது பாய்ந்து கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான மனைவி களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் பேசும் மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்காக சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் பரப்பப்படுகிறது- ஜெனரல் பொன்சேகா குற்றச்சாட்டு


வடக்கு கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் என்பதை மாத்திரமே காரணம் காட்டி, நாட்டில் அரசாங்கம் இனவாதத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறது.வடக்கு கிழக்குப் பிரிவினைக்காக பிரபாகரன் நடவடிக்கைகளை மேற்கொண்டதைப் போன்று, தற்போது தெற்கில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு துரோகத்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமையதிகாரியும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.தேர்தலில் தோல்வியடைந்தமை குறித்து நாம் கவலை அடையவில்லை. ஆனால், உண்மையான மாற்றத்திற்காகவும், நிரந்தரமான சுதந்திரத்திற்காகவும் அளிக்கப்பட்ட வாக்குகள் அப்பட்டமான முறையில் பறித்தெடுக்கப்பட்டுள்ளன. எம்மீது மக்கள் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றமுடியாமல் போனதையிட்டே நாம் கவலை அடைகிறோம்.இன்று நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை. தேர்தலுக்கு முன்னர் இருந்த சிறிதளவான ஜனநாயகம் கூட அற்றுப்போயுள்ளது. இருப்பினும், மக்களின் வெற்றியை அவர்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுப்போம் என்றும் அவர் கூறினார்.மோசடியான தேர்தலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம் எனும் தலைப்பின் கீழ், எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை கோட்டே சோலிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஜெனரல் பொன்சேகா மேற்கண்ட வாறு தெரிவித்தார்.இந்தச் செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மற்றும் ஸ்ரீல.சு.கட்சி மக்கள் பிரிவு ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர ஆகியோரும் சமுகமளித்திருந்தனர். இங்கு ஜெனரல் பொன்சேகா தொடர்ந்தும் கூறுகையில்,நாம் எமது வெற்றியை மக்களின் வெற்றியாகவே கருதுகிறோம். நடந்து முடிந்த தேர்தல் தொடர்பிலான முடிவுகளை மக்கள் நம்புவதற்குத் தயாரில்லை. மக்களின் வெற்றி மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாகவே இவ்வாறான மக்கள் எதிர்ப்பு எழுந்துள்ளது. அத்துடன், இந்த வெற்றி கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாகவும் மக்களால் கருதப்படுகின்றது. மக்கள் எம்மை நிராகரித்து, அதன்மூலம் நாம் தோற்கடிக்கப்பட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால், இங்கு நடந்திருப்பது தலைகீழானதாகும். மக்கள் பாரிய எதிர் பார்ப்புகளைக் கொண்டிருந்தனர். மாற்றம் ஒன்று வேண்டுமென முழுநாடும் காத்துக்கொண்டிருந்தது. அந்த மாற்றம் நிகழவில்லையே என்று மக்கள் கவலை தோய்ந்த வண்ணம் வேதனையுடன் உள்ளனர். இந்தத் தேர்தல் முடிவு தொடர்பில் நாம் கருத்திற்கொள்ளாதிருப்பதாகக் கூறமுடியாது. சகல விடயங்களும் ஆராயப்பட்டு வருகின்றன. மக்களால் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியையும், அவர்களது எதிர் பார்ப்பையும் நிச்சயமாக அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்போம். அந்த நிலைப் பாட்டில் மாற்றமில்லை.ஜனநாயக நாட்டில் நடைபெறுகின்ற தேர்தல் ஒன்றின் வெற்றி உறுதியாகி விட்டதன் பின்னர் மாற்றுத் தரப்பினரைத் தாக்கவோ அல்லது அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கோ முயற்சிக்கக் கூடாது. ஆனாலும், இன்று அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் பலவகையிலும் பழிவாங்கப்படுகின்றனர்.எமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற அதேவேளை, ஊடக அடக்குமுறைகளும், கருத்துச் சுதந்திரத்திற்கு இடையூறுகளும் ஏற்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாது, எனது பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது. எனக்கு ஆதரவாகச் செயற்பட்ட இராணுவ உயரதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.மேலும், பல அதிகாரிகள் பதவி இறக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது இவ்வாறிருக்க, எனது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோத்தர்கள், எனது அலுவலகப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், எனது அலுவலகத்திலுள்ள கணினிகள் மற்றும் அலுவலக உபகரணங்கள் பலவந்தமாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளதுடன், அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இவை மிகமோசமான, அராஜகம் நிறைந்த செயற்பாடுகளாகும்.உண்மையாகவே தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் இவ்வாறான செயற்பாடுகள் அவசியமற்றவை. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளே தேர்தலில் பொய் யான வெற்றிபெற்றுள்ளதை உறுதிப்படுத்துகின்றன.எம்மீதான அடக்குமுறைகள் தொடர்பில் பொலிஸாரும் பக்கச்சார்பாகவே நடந்து கொள்கின்றனர். முறைப்பாடுகளை ஏற்கவும் மறுக்கின்றனர். இதனால் இந் நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சித்திட்டம் தீட்டியதாக என்மீது குற்றம் சுமத்தப்பட்டது. குறித்த தினத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எமது அணியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனேயே நான் ஹோட்டலில் தங்கியிருந்தேன்.அந்தச் சந்தர்ப்பத்தில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அரசாங்கத்தினால் அரச ஊடகங்களில் வெளிப் படுத்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகும். அவற்றில் எந்தவிதமான உண்மைகளும் கிடையாது. இதனை பின்னணியாகக் கொண்டு நான் வெளிநாடு செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.இதே நிலை தான் எனது மனைவிக்கும் ஏற்பட்டுள்ளது. எனது மருமகன் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். மொத்தத்தில் எனது குடும்பம் பழிவாங்கலுக்கு உட்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் நானே மக்களின் ஜனாதிபதியாக இருக்கின்றேன். கௌரவமும் நேர்மையும் இல்லாத ஒருவராக நான் இருக்கவில்லை என்பதையும் இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன். நான் எங்குசென்றாலும் என்னைப் பின் தொடர்கின்றனர். எனது சுதந்திரம் முற்றாகப் பறிக்கப்பட்டுள்ளதுதேர்தலுக்கு முன்பதாக அரச தொலைக் காட்சிகளில் இராணுவ ஆட்சியாளர்களை சித்திரிக்கும் திரைப்படங்கள் ஒளிபரப்பட்டன. அந்த விடயங்கள் இன்று நிஜமாக நடைமுறைப்படுத்தப் படுகின்றன.வடக்கு கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களித்தனர். அதேபோல், சிங்களவர்களும் வாக்களித்தனர். இருப்பி னும், தமிழ்பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் என்ற காரணத்தால் நான் பிரிவினைக்குத் துணைபோனதாக என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிங்கள மக்களிடையே ஒருவித இனவாதப்போக்கை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது.வடக்கு கிழக்குப் பிரதேசங்களைப் பிரித்தெடுக்கும் நோக்கில் செயற்பட்ட பிரபாகரனே கடந்த காலங்களில் பிரிவினைவாதத்தைத் தோற்றுவித்திருந்தார். அந்தப் பிரிவினைவாதத்தை நாம் முறியடித்தோம். இருந்தாலும், இன்று தெற்கிலே பிரிவினையைத் தோற்றுவிப்பதற்கு துரோகத்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை முற்றாக நாம் நிராகரிக்கிறோம்.நடந்து முடிந்த தேர்தலில் நாம் 5.5 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருக்கின்றோம். அதுமட்டுமல்லாது, தமிழ் பேசும் மக்களிடமிருந்து ஒரு மில்லியன் வாக்குகளையும் பெற்றிருக்கின்றோம். அவ்வாறு பெற்ற வாக்குகள்தான் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் மக்கள் இதனைத் தான் இன்று பேசிக்கொண்டிருக்கின்றனர்.எனவே, எமது மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பற்கு நாம் சகலவிதத்திலும் நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் முதல் கட்டமாக, தேர்தல் முடிவுகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையை கொழும்பில் ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். இது நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும்.ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டன. எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அவ்வாறான கொள்ளை இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. அதற்கான மாற்று நடவடிக்கைகள் அவசியமானதாகும். அத்துடன், அடுத்து வரும் தேர்தல் விருப்புவாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேர்தலாகும். எனவே, அதில் இவ்வாறான கணினி தில்லுமுல்லுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகும். பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றேன். இது தொடர்பில் என்னோடு இணைந்துள்ள அரசியல் கட்சிகளின் தீர்மானம் மிகவும் முக்கியமானதாகும் என்றார்

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள சிறந்த 25 வழிகள்


சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ.

1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள்.

2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள்.

4. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

5. பொதுவாகவே ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றே கால் கரண்டி உப்பு போதும். கடுமையான சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீரக மருத்துவரின் அறிவுரைப்படி இன்னும் கூட உப்பைக் குறைக்க வேண்டி இருக்கும்.

6. நேரத்திற்குச் சாப்பிடுங்கள்.

7. ஒரு நாளைக்கு 21/2 முதல் 3 லிட்டர் நீர் அருந்துங்கள். சில வகை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு குடிக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு குறைவாக இருக்கலாம். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொள்ளுங்கள்.

8. பச்சைத் தேயிலை (கிரீன் டீ- Green Tea) இதயத்திற்கு நல்லது

9. தினமும் உடற்பயிற்சி (குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி) அவசியம்.

10. வீட்டு வேலைகளை நாமே செய்தல், லிப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறுதல் போன்றவை மறைமுக உடற்பயிற்சியாகும்.

11. எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

12. புகைப் பிடிப்பதை (நீங்களும் உங்கள் அருகில் இருப்பவரும்) தடை செய்யுங்கள்.

13. மதுபானங்களா! வேண்டவே வேண்டாம்.

14. நேரத்திற்கு தூங்குங்கள்.

15. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

16. இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை (பேட்-கொலஸ்டிரால் – Bad Cholesterol) கட்டுப்பாடட்டில் வைக்க தேவையான உணவுப் பழக்கங்கள், மருந்துகள், உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

17. வேலை நேரத்தில் சரியாக் கணக்கிட்டுச் செய்து சரியான நேரத்தில் தூங்கி டென்ஸன் ஆகாமல் இருங்கள்.

18. மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்வது நல்லது.

19. சிரித்துப் பழகி இசை கேட்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட இதயத்திற்கு நல்ல மருந்து கிடையாது.

20. வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது.

21. சர்க்கரை நோய் பல நோய்களுக்கு அடிப்படை. உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

22. இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சோள எண்ணெய், ஆலிš எண்ணெய் ஆகியவற்றையும் இதயத்திற்கு இதமான ஓமேகா கொழுப்பு அடங்கிய ஆழ்கடல் மீன்கள், பாதம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

23. நாள்பட்ட வியாதிகளான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுவது அவசியம். தொடர் மருத்துவக் கண்காணிப்பு மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.

24. பிசியான வாழ்க்கையிலும் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள். இடையிடையே சுற்றுலா என்று உங்களை அவ்வப்போது ரீ-சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

25. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மருத்துவர் சொல்லியிருந்தால் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.