கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இரத்த தான முகாம் (இரத்த தானம் பற்றி ஒருசில வரிகள்)

“அன்றி எவன் ஓர் ஆத்மாவை வாழவைக்கின்றானோ அவன் மனிதர்கள் யாவரையும் வாழவைத்தவன் போலாவன்” (அல் குர்ஆன் 5:32)
கஹடோவிட முஸ்லிம் வாலிபர் முன்னனி (லுஆஆயு) கிளை 06 வது முறையாகவும் வத்துபிட்டிவளை ஆதாரவைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து இம்முகாமை நடாத்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

காலம் 30.06.2013 ஞாயிறு காலை 8.30 மணிமுதல்
இடம் அல்பத்ரியா ம.வி.
இரத்த தானம் கொடுப்போர் அறிந்துகொள்ளவேண்டியவை
ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள்:

* இரத்த தானம் செய்பவரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் அவசியம்.
* இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 – 16 கிராமிற்குள் இருக்க வேண்டும்.
* இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.

இரத்ததானம் செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்:

எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது. கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது. கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய்
முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இரத்த தானம் செய்பவர் பெண் எனில் தேவையான தகுதிகள்:

மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெருபவர்களும் இரத்த தானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
இரத்த தானம் செய்பவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:

இரத்த தானம் செய்ய விரும்புபவர் மது அருந்தும் பழக்கமுடையவர் எனில், மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம். புகைப்பிடிக்கும் பழக்கமுடையவராக இருப்பின், புகை பிடித்ததன் பின்னர் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது நல்லது. அதே போன்று இரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப்பிடிப்பது நல்லது. அதற்கு முன்பே புகைப்பிடிப்பது மயக்கம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். சில வங்கிகள் புகை, மது போன்ற பழக்கமுடையவர்களிடமிருந்து இரத்தம் பெற தயக்கம் காட்டும். புகையும் மதுவும் உடலுக்குக் கேடு செய்யக்கூடியவையாக இருப்பதே அவர்களின் தயக்கத்துக்கு காரணம். ஆகவே புகையும் மதுவையும் முடிந்த அளவிற்குத் தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.

இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம். இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது மூன்று மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும். இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பளுவுள்ள பொருட்களைத் தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.

கஹட்டோவிடாவின் பிராதன வீதிக்கு காபட்

 

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல அமைப்பாளரும் பெற்றோலியக் கைத்தொழில் பிரதி அமைச்சருமான ஸரன குணவா்தன அவா்கள் எதிர்வரும் 28.06.2013 அன்று மாலை 5.30 இற்கு கஹட்டோவிடவாழ் மக்களை சந்திக்கவுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது சுதந்திரக் கட்சியின் கஹட்டோவிட மேற்கு கிளையின் தலைவா் அல்ஹாஜ் நஸீர் அவா்களின் வீட்டில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் கஹட்டோவிடாவின் பிராதன வீதிக்கு காபட் இடுவது சம்பந்தமாக பேசப்படவுள்ளதாக அறிய வந்துள்ளது. எனவே இதில் சகலரும் கலந்து தமது ஆலோசனைகளை முன்வைக்குமாறு வேண்டப்படுகின்றது.

குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு இலவச வைத்திய முகாம்

Medical Funding

உலகில் உண்ணதமான குழந்தைப் பாக்கியத்துக்காய் ஏங்கி நிற்கும் தம்பதிகளுக்கான இலவச மருத்துவ முகாம் Fertility Medical Camp

சென்னை ஜனனம் கருத்தரிப்பு நிலையத்தின் இலங்கை ஒன்றிணைப்பு மையம் இரண்டாவது தடவையாக, நம் நாட்டில் குழந்தைப் பேறில்லாத தம்பதிகளுக்காக ஏற்பாடு செய்திருக்கும் மருத்துவ முகாம்கள் பின்வரும் இடங்களில் நடைபெற உள்ளன.
 
BIOCHEM Laboratories
3/4,  New Colombo Rd
Mawanella
30.06.2013 ஞாயிறு
காலை 7.45 முதல்
பதிவுகளுக்கு: 0773693633 அல்லது 0772772201
Darul Iman
Jamath-e-Islami Centre
Eravur 01
29.06.2013 சனிக் கிழமை
காலை 9.00 முதல்
பதிவுகளுக்கு: 0773148023 அல்லது 0775150134
 
தனியாள் மருத்துவ சோதனை – Scan உட்பட மருத்துவ ஆலோசனைகள், வழிகாட்டல்கள், பரிசோதனை முறைகள் பற்றி விளக்குகிறார் இத்துறைக்கேயுரிய இந்திய வைத்திய நிபுணர்
Dr. Vani Sundarapandian
MD DGO MRCOG (UK) and Master of Reproductive Medicine (Australia)
The lead consultant and Fertility Specialist and Director of the Jananam fertility centre –Chennai
 
மட்டுப்படுத்தப்பட்ட தம்பதிகளே அனுமதிக்கப்பட உள்ளதால் மேலுள்ள  இலக்கங்களுடன் தொடர்புகொண்டு முன்கூட்டியே தங்கள் பதிவுகளை செய்துகொள்ளுங்கள்.
Medical Director – Jananam
Dr. Mujahida Ibrahim – MBBS (Pakistan), MSc (UK)
SLMC Reg. No: 14804
No 18, Mount Pleasant, Baseline Rd, Colombo – 09

பராஅத்தும் பராஅத் இரவும் மார்க்கமாகுமா?

முதல் ஆதாரம்

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.
அல்குர்ஆன் 44:2-4
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவுபராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம். திருக்குர்ஆனை பொறுத்த வரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும். அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எதுஎன்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 97:1)
அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமளான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன்2:185)
இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமளான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின் 15ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

இரண்டாம் ஆதாரம்

ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்துபாவ மன்னிப்பு தேடுவோர் உண்டாநான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டாநான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டாநான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)நூல்: இப்னுமாஜா 1378
இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும்இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.
அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

மூன்றாம் ஆதாரம்

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவுபடுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: திர்மிதி 670
இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறிய கருத்தைப் பதிவு செய்துஇது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

நான்காவது ஆதாரம்

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போன்று வேறு எந்த மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான். அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார்
நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764,
ஃபலாயிலுர் ரமளான் - இப்னு அபித் துன்யாபாகம்: 1, பக்கம்: 9, ஹதீஸ் எண்: 8
இந்த ஹதீஸை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்மஸ்வூதி என்பவர் இடம் பெறுகிறார். இவர் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் பக்தாதிற்கு வந்த பிறகு மூளை குழம்பி விட்டார். அதாவது இவரிடம் பக்தாதில் வைத்துக் கேட்டவர்கள் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். இவரிடமிருந்து அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஹைரான் என்பவராவார். அல்மஸ்வூதி என்ற அறிவிப்பாளர் மூளை குழம்பிய பிறகு தான் இவர் செவியேற்றுள்ளார். இந்த அடிப்படையிலும் இது மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.

ஐந்தாவது ஆதாரம்

ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும்ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ

நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா
பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9
இந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள்இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 129)குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும்பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்: 1, பக்கம்: 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில்,இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும்அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.
அறிஞர் இப்னு அபீ முலைக்கா அவர்கள் இவ்வாறு ஷஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக இருந்த ஸியாதன் முன்கிரிய்யு என்பவர்,ஷஅபான் 15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும் என்று கூறியதாக இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது. என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால் அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன் என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 4, பக்கம்: 317)
முஹ்ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் பலவீனமானவனே! 15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.) அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகிறான் என்று கூறினார்கள்.
நூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ்பாகம்: 1 பக்கம்: 12
பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2697
நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நூல்: முஸ்லிம் 3243
எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.
அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றிஅதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்        source : onlinpj.com

முகம்மது ஸிபிதி அவர்கள் காலமானார்

 
உடுகொடையைச் சேர்ந்த காலம் சென்ற A.L.M. ஹுஸைன் அவர்களின் புதல்வன் முகம்மது ஸிபிதி அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் கஹடோவிட முன்னால் போஸ்ட் மாஸ்டராகப் பதவிவகித்த அல்ஹாஜ் பாரூக் அவர்களின் மருமகனும், விலாயா அவர்களின் கணவரும், முகம்மது ஹுஸ்னி, ரஸ்னி,ஸப்னி ஆகியோரின் தந்தையும் ஆவார். அல்ஹாஜ் முகம்மது நிஸார் ஆசிரியர், முகம்மது ஸரூக், அல்ஹாஜ் முகம்மது ஸித்தீக், மர்ஹும் ஸம்ஸுல் இனாயா, உம்மு லதீபா ஆகியோரின் சகோதரனும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை(25.06.2013)4.00 மணியலவி்ல் உடுகொட மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அல்லாஹ் இச்சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

கிண்ணியாவில் பதற்றம்: பொலிசார் பொதுமக்கள் மோதல்

Tense situation in Kinniya as residents throw stones at STF


கிண்ணியாவில் விறகு வெட்டச்சென்ற சிலரை சட்டவிரோதமான முறையில் விறகு வெட்டி வருவதாக குறிப்பிட்டு  அதிரடிப்படையினர் அவர்களை பிடித்த வேளையில்  அங்கு முறுகல் நிலை தோன்றியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அதிரடிப்படையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் வீதியை மறைத்து  டயர்களை எரித்து தடையை ஏற்படுத்தியுள்ளனர்.  இதன்போது அங்கு மேலும் கூடிய  பிரதேச வாசிகளுக்கும்  கிண்ணியா சூரங்கல் முகாம் அதிரடி படையினருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி முறுகல் நிலை தோன்றியுள்ளது .
இதன்போது   விஷேட அதிரடிப்படையினர் வானை நோக்கி துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டுள்ளனர். என்று தெரிய வருகிறது. சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
 
இதன்பின்னர் பட்ட நிலையை தவிர்க்கும் நோக்கில் குட்டிக்கராச்சி ஜும்ஆப்பள்ளிவாசலில் பொலிசாருக்கும் ,  கிண்ணியா சமூக தலைவர்களுக்கும்  இடையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சகோதரர் கலீல் அவர்கள் காலமானார்.


கஹடோவிடவைச் சேர்ந்த கலீல் அவர்கள் நாம்புளுவையில் காலமானார்.   இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார்  காலம் சென்ற மர்ஹும் மன்ஸுர் அவர்களின் அருமைப் புதல்வரும்,   நூர் நைமா, சித்திநிஸா, ஹலீமா, மர்ஹுமா கமருல்பரீதா(தாஸீம் லெப்பை), மர்ஹும் பாரூக், தாஸீம் ஆகியோரின்  சகோதரரும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு(17.06.2013) நாம்புளுவ ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
.
அல்லாஹ் இச்சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

கஹட்டோவிட முஹியத்தீன் மஸ்ஜித் புதுப் பொழிவிற்குத் தயாராகிறது.


நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த எமதூரில் முதல் முதலாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளி வாசலான முஹியத்தீன் பள்ளி வாசல் பல தலைமுறையினருக்கும் இறை இல்லமாக விளங்கியமை என்பது காலத்தால் அழியாத ஒரு பதிவென்றால் அது மிகையாகாது. இப்பள்ளி வாசலின் புணா் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவென தற்போதைய நிர்வாக சபை தீர்மாணித்துள்ளதுடன் இதற்கான நிதியினை ஊர்மக்களிடமிருந்தும், நலன்விரும்பிகளிடம் இருந்தும் திரட்ட திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்படும் மொத்த செலவினமான 25 மில்லியன் ரூபாய்களை திரட்டும் நோக்குடன் அது 4000 பங்குகளாக வகுக்கப்பட்டுள்ளது. ஒரு பங்கின் பெறுமதி 5000 ரூபா ஆகும்.  ஒருவர் ஒன்றையொ அல்லது அதற்குக் கூடிய பங்குகளையோ  வாங்குவதன் மூலம் இறை திருப்தியைபெற்றுக்கொள்ளுமாறு  பள்ளி நிர்வாகம் வேண்டியுள்ளது.
 
எனவே இப்பள்ளிவால் நிர்மாணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி எமதூரின் தாயப்பள்ளியான இப்பள்ளியை புதுப் பொழிவு பெறச் செய்வோம்.
 





லெபனானினுள் புகுந்த முஜாஹிதீன் படையணிகள் - விரியும் Qusayr சண்டைக்களம் !!

  
தோல்வி ஏற்படாமல் நம்மை காத்துக்கொள்ளல் நம் கைகளிலேயே உள்ளது. ஆனால் எதிரியை தோற்கடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் எதிரியினாலேயே வழங்கப்படும் வரை காத்திருப்பதும் எம் கைகளிளேயே உள்ளது - சன்சூ (The Art of War)"

Qusayr நகர் சண்டைகளின் மாற்றங்கள் அபரீதமானவை. கடந்த புதன்கிழமை காலை முஜாஹித்கள் Qusayr ல் இருந்து பின்வாங்கினர். 5000 ஹிஸ்புல்லா போராளிகள் பெரும் எடுப்பில் மேற்கொண்ட பாரிய தாக்குதல் கடந்த செவ்வாய் மாலை ஆரம்பமானது. முஜாஹித்கள் நின்ற பகுதிகள் மேல் மழையென கயூட்சா ரொக்கெட்கள் வந்து விழ ஆரம்பித்தன. பின்புல ஆட்டிலறி சூட்டாதரவுடன் ஹிஸ்புல்லாக்களின் சிறப்பு படையணிகள் Qusayr ன் தென்முனைகளை உடைத்து கொடுக்க ஏனைண தாக்குதல் படையணிகள் சடுதியாக Qusayr ன் உள்ளே நுழைந்தன. இந்த சண்டையில் லெபனானிய ஹிஸ்புல்லாக்களுடன், ஈராக்கிய, யெமனிய, ஈரானிய மிலிசியாக்களும் களம்புகுந்தன.  கடும் சமர் வெடித்தது. பின்னர் சடுதியாக முஜாஹித்கள் பின்வாங்க ஆரம்பித்தனர். Qusayr fell down on Hisbullah's Hand என ஊடகங்கள் செய்தி சொல்ல ஆரம்பித்தன. 

புதன் கிழமை காலை ஹிஸ்புல்லா படையணிகள் Qusayr ன் மையப்பகுதியை வந்தடைந்தன. ஏறத்தாழ 90 விகித நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர் ஹிஸ்புல்லாக்கள். Qusayr ன் வெற்றியை பெய்ரூட்டில் உள்ள ஷியாக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இத்தாலியர்கள் பாணியில் வீதிகளில் ஆடிப்பாடி கொண்டாடினர். மோட்டார் சைக்கிள்களிலும், பிக்அப் வாகனங்களிலும் ஹிஸ்புல்லாக்களின் கொடிகளை அசைத்து ஆரவாரித்து, ஹிஸ்புல்லாக்களின் கீதங்களை கோரஸ்ஸாக பாடினர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். லெபனானின் அல் மனார் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நிகழ்த்தியது. பீஸ் டீவியும், அல்-ஜஸீராவும் “Qusayr முற்று முழுதாக ஹிஸ்புல்லாக்கள் வசம் வீழ்ந்தது” என தலைப்பு செய்தியிட்டன. இந்த அவகாசத்தில் காயப்பட்ட பொதுமக்களும், அடைபட்டிருந்த ஏனையவர்களும் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்தனர்.

எல்லாம் நன்றாகவே நடந்தன..

திடீரென ஹிஸ்புல்லாக்கள் கைப்பற்றிய Qusayr ன் மையப்பகுதி வெடிக்க ஆரம்பித்தது. முதல் குண்டு வெடிப்பிலேயே 12 இற்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா அதிரடிப்படை வீரர்கள் சிதறடிக்கப்பட்டனர். தொடர்ந்து பல குண்டுகள் பல இடங்களிலும் வெடிக்க ஆரம்பித்தன. இப்போது எல்லாமே புரிந்து போயிற்று ஹிஸ்புல்லாக்களிற்கு. “ஷஹாதத் தாக்குதல்கள்” ஆரம்பித்து விட்டன என்பது நன்றாகவே புரிந்து போயிற்று அவர்களிற்கு. முழு Qusayr ம் வெடிக்க ஆரம்பித்தது. ஹிஸ்புல்லாக்களிற்கு மீண்டும் தாங்கள் பொறி கிடங்கினுள் முழுதாக மாட்டி விட்டோம் என்பது புரிந்து போயிற்று. 250 இற்கும் மேற்பட்ட ஷியா ஹிஸ்புல்லாக்கள் பலியாகினர் குசைரில். 

இது இப்படியிருக்க ஹிஸ்புல்லாவும், நஸ்ருல்லாவும், கும்மின் முல்லாக்களும் எதிர்பார்க்காத இன்னொரு சம்பவம் ஆரம்பமானது. 

அது தான் முஜாஹித்கள் Qusayr ஐ விட்டு பின்வாங்கி அவர்களை உள்ளிழுத்து அவர்கள் கவனங்களை வெற்றி களிப்பின் பக்கம் திருப்பி விட்டு, லெபனானின் ஷியாக்களின் சிரிய எல்லை கிராமமான Balbec ன் உள்ளே ஊடுருவி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். ஹிஸ்புல்லாக்களின் விநியோக மையமாக செயற்பட்ட Balbec ல் முஜாஹித்களிற்கும் ஷியா மிலீசியாக்களிற்கும் இடையில் கடுஞ்சமர் வெடித்துள்ளது. ஹிஸ்புல்லாக்களின் கள முனைத்தளபதிகள் சண்டை செல்லும் திசையின்  நிலைமைகளை கவனத்தில் கொண்டு மீண்டும் மேற்கு நோக்கி பின்வாங்கி வருகின்றனர். இப்போது குசைர் முஜாஹித்களின் கைகளில் மீண்டும் வந்துள்ளது. 

Balbec தாக்கப்படும் என கனவிலும் எதிர்பார்க்காத ஹிஸ்புல்லாக்களிற்கு சிரிய சமர்களத்தின் பின்னால் உள்ள சத்தியத்தின் சத்தம் மெல்ல கேட்க ஆரம்பித்துள்ளது. லெபனானிய பிராந்தியத்தினுள் சிரிய முஜாஹித்கள் எல்லை கடப்பார்கள் என மேற்குலகும் எதிர்பார்த்திரக்க மாட்டார்கள். சத்தியத்தின் சத்தம் அவர்கள் காதுகளின் செவிபறைகளை தட்ட இன்னும் கொஞ்சம் காலம் தேவைதானே..

கஹட்டோவிடாவில் இலவச கத்னா நிகழ்வு

கடந்த வருடங்களைப் போன்று இம்முறையும் இலவச கத்னா நகழ்வொன்றை Kahatowita Muslim Ladies Study Circle நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும்   15.06.2013ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது.இலவசமாக கத்னா செய்ய விரும்பும் பிள்ளைகளின் பெயா்களை எதிர்வரும் 06.06.2013ஆம் திகதிக்கு முன்னர் நிறுவனத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

சுன்னத்வல் ஜமாத்தினரிற்கும் ஷியாக்களிற்கும் நடக்கும் யுத்தம்! - யூசுப் அல்-கர்ளாவி

    Khaibar News Base
'இது ஹிஸ்புல்லாக்களிற்கும் சிரிய முஜாஹித்களிற்கும் நடக்கும் யுத்தம் மட்டுமல்ல! '

லக முஸ்லிம்களிடையே புகழ் பெற்ற அறிஞர் கலாநிதி யுசுப் அல்-கர்ளாவி உலக முஸ்லிம்களை நோக்கி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். பல விடயங்களில் சர்ச்சைக்குரியவரும், நவீனத்துவ இஸ்லாத்தின் (?) முன்னோடியுமான இவர் புரிந்து கொள்ள முடியாத ஒரு நபர். லிபியாவில் கடாபியை கொல்வதற்கு துணை நின்றவர். அதே வேளை காஸாவின் முஸ்லிம்களிற்காக கண்ணீர் விட்டவர். சரி விடயத்திற்கு வருவோம். அவர் முஸ்லிம்களை நோக்கி கடந்த வெள்ளியன்று நடைபெற்ற ஊர்வலத்தில் விட்ட வேண்டுகோள் இதுதான்...


“ஓ முஸ்லிம்களே. உங்களிற்கு எதிராக யகூதி நஸராக்கள் ஒன்று பட்டு விட்டனர். அவர்களின் ஒரே குறிக்கோள் முஸ்லிம்களை அழிப்பது. அதனை நாம் கடந்த பல தசாப்தங்களாக கண்கூடாக கண்டு வருகிறோம். ஆனால் அதனை தடுத்து நிறுத்த செயற்திறன் அற்றவர்களாக எம்முள் பிளவுண்டு கிடக்கிறோம்”.

“சிரியாவில் இஸ்லாத்தின் எழுச்சி எமக்கு நம்பிக்கைகளை தருகிறது. அந்த ஒளியை காப்பது நமது கடமை. அதற்காக நாம் தயாராக வேண்டும். சிரியா போராட்டத்திற்கான எமது பங்களிப்பை வழங்க வேண்டும்”.

“ஆயுத பயிற்ச்சி எடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. ஆயுதங்களை தயார்படுத்துவதும் அவ்வாறே. தன்னை தற்காத்து கொள்ளும் அளவாவது அவனது பயிற்ச்சிகள் அமைந்திருக்க வேண்டும்”.

“ஈரான் சிரிய அரசை பாதுகாக்க லெபனான் ஊடாக ஆயுதங்களை அனுப்புகிறது. ஆட்களை அனுப்புகிறது. ஹிஸ்புல்லாக்களை போராட அனுப்புகிறது. ஆனால் நாம் இதனை கைகட்டி பொம்மைகளாக பார்த்து கொண்டிருக்கிறோம். எதுவுமே செய்யாமல்”

“ஷியாக்கள் சுன்னத் வல் ஜமாத்தினரை (சுன்னிகளை) அழிப்பதற்கான யுத்தமே நடக்கிறது. பஸர் அல்-அஸாதின் படைகள் வென்றால் நாளை ஒரு சுன்னி முஸ்லிமும் சிரியாவில் வாழ முடியாது. ஈரானில் சுன்னத் வல் ஜமாத்தினரிற்கு ஏற்பட்டுள்ள கதியே இவர்களிற்கும் ஏற்படும். இந்த பேருண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்”. 

“நான் ஹஸன் நஸ்ருல்லாஹ்வையும், ஹிஸ்புல்லாவையும் சவுதி அரேபிய அஹ்லுல் சுன்னா அறிஞர்களின் தீர்ப்புக்களிற்கு எதிராக முன்னிற்று மறுதலித்தேன். ஆனால் இன்று அது எவ்வளவு பெரிய தவறு என்பதனை உணர்கிறேன். சவுதி அரேபிய அஹ்லுஸுன்னாவின் அறிஞர்கள் என்னை விட அறிவில் சிறந்தவர்கள் என்பதனை அந்த ஷியாக்களின் விடயத்தில் நான் உணர்கிறேன் இன்று”.

“ஈரான் ஒரு பெரிய கொலை களத்தை சிரியாவில் திறந்து விட்டுள்ளது. சுன்னிகளை கொல்லும் அவர்களின் நீண்ட கனவின் ஒரு மைல் கல் சிரியா”. இதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்”. 

“இந்த சண்டைகள் சிலுவை போர்களை விடவும் ஆபத்தான விளைவுகளை எமக்கு ஏற்படுத்தும். இந்த சண்டைகள் தாத்தாரிய போர்களை விடவும் கடுமையான வடுக்களை எமக்கு தரும்”.

“முஸ்லிம்களே சிரிய களங்கள் காத்திருக்கின்றன. அதில் உங்கள் பங்கு என்ன என்பதே எனது வினா”

இவ்வாறு காலநிதி கர்ளாவி தனது அடி மனதின் மகத்தான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். எவ்வளவு தான் அவர் தொடர்பில் எமக்கு முரண்பட்ட கருத்துக்கள் இருந்த போதும் இந்த வார்த்தைகள் வரலாற்றின் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டியவை.