கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

'தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை' நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்

தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்போவதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நீதி அமைச்சில் இன்று திங்கட்கிழமை காலை கடமையை பெறுப்பேற்றுக்கொண்ட பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகவியளாலர்கள் மத்தியில் கத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நான் நீதியமைச்சராக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸிடம் தெரிவித்துள்ளேன்.
இவர்களின் விடுதலை தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடனும் நான் கலந்துரையாடவுள்ளேன்.
அத்துடன் வக்பு சபை, நல்லிணக்க சபை, நியாயாதிக்க சபை போன்றவற்றை திறம்பட செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்று முதல் நீதியமைச்சு சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து பணியற்றும்" என்றார்.
நீதியமைச்சராக ரவூப் ஹக்கீம் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேருடன் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிப்லி அஸீஸ், நீதியமைச்சின் செயலாளர் சுஹத கே. கம்லத், முன்னாள் அமைச்சர்களான ஏ.ஆர்.எம்.மன்சூர், கே.என்.சொக்ஸி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்கள், அதியுயர் பீட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

இஸ்லாமிய பாரம்பரிய முறைப்படி அபுதாபி மசூதிக்குச் சென்ற எலிசபெத் மகாராணி படங்களுடன்

ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ள எலிசபெத் மகாராணி நேற்று அபுதாபியில் உள்ள மிகப்பெரிய மசூதிக்குச் சென்றார். அங்கிருந்த இஸ்லாமிய மாணவர்களை சந்தித்து கலந்துரையாடவும் செய்தார்.

 நேற்று மகாராணியும் இளவரசர் பிலிப்பும் லண்டனிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் அபுதாபி சென்று சேர்ந்தவுடன் உடனடியாக நாட்டின் மிகப்பெரிய மசூதியாகக் கருதப்படும் ஷேக் சயேத் மசூதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
இந்த மசூதியின் சிறப்பம்சம் இதில் விரிக்கப்பட்டுள்ள தரை விரிப்புக்கள் 35-டன் எடை கொண்டது என்பது தான். 1,200 ஈரான் பெண்கள் இணைந்து இரண்டு வருடங்களாக கைகளாலேயே இந்த தரை விரிப்புக்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
அங்கிருந்த மற்ற பெண்கள் அனைவரும் இஸ்லாமிய பாரம்பரிய உடையில் இருந்ததால் மகாராணிக்கும் இதற்கென அவர் உடையுடன் பொருந்தக் கூடிய வகையில் அங்கி சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
 
மசூதிக்குள் சென்றவுடன் பாரம்பரிய முறையில் ஷூக்களை கழற்றி விட்டு வெறும் கால்களுடன் தலையிலும் இஸ்லாமிய பாரம்பரிய உடைகளுடன் நேற்று முழுதும் காணப்பட்டார்.
 
நிழற்படங்களுக்கு இங்கே சொடுக்கவும். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=14559:2010-11-25-04-47-04&catid=43:2010-01-01-15-58-29&Itemid=401 

கஹடோவிட கடைகளுக்கு அநாமேதய துண்டுப்பிரசுரம்.

சிகரட் விற்பனையை தவிர்ந்துகொள்ளுமாரு வேண்டி கடந்த சில நாட்களிற்கு முன்னர் கஹட்டோவிடாவின் கடைகளிற்கு ஒரு அநாமேதயத் துண்டுப்பிரசுரம் போடப்பட்டிருக்கிறது. சிகரட் விற்பனையால் ஏற்படும் பாதிப்புக்களை உணர்த்தி எமதூரின் இளைய தலைமுறையினரை புகைக்காத ஒரு சமூகமாக உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் அதன் வாசகங்கள் அமைந்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. (இத்துண்டுப் பிரசுரத்தின் நிழற்படம் இணைக்கப்பட்டுள்ளது). இது இப்படியிருக்க கடந்த சில நாட்களிற்கு முன்னர் தடை செய்யப்பட்ட சிகரட் வகையை விற்பனை செய்த குற்றத்திற்காக எமதூரின் ஒரு வியாபாரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துண்டுப்பிரசுரத்தின் இறுதியில் நலன் விரும்பும் ஊர்வாசிகள் என்று ஒப்பமிடப்பட்டிருப்பதைக்  காண முடிகின்றது.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று நியமனம் பெற்ற புதிய அமைச்சரவையின் விபரங்கள் பின்வருமாறு:-



சிரேஷ்ட அமைச்சர்கள்
1. தி.மு.ஜயரட்ன – புத்தசாசன மதவிவகாரம்.

2. ரட்ணசிறி விக்கிரமநாயக்க – நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு

3. அதாவுட செனவிரட்ன – கிராமிய விவகாரங்கள்

4. டியூ குணசேகர – மனிதவள அமைச்சு

5. பி.தயாரட்ன – உணவு மற்றும் போஷாக்கு

6. ஏ.எச்.எம்.பௌசி – நகர அபிவிருத்தி

7. எஸ்.பி.நாவின்ன – நுகர்வோர் நலன்

8. பியசேன கமகே – தேசியவளம்

9. திஸ்ஸ வித்தாரண – விஞ்ஞான விவகாரம்

10. சரத் அமுனுகம – சர்வதேச நிதி திட்டமிடல்


அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
1. நிமல்சிறிபாலடி.சில்வா – நீர்ப்பாசன நீர்வளம் மற்றும் முகாமைத்துவம்

2. மைத்திரிபால சிறிசேன – சுகாதாரம்

3. சுசில் பிரேமஜயந்த – பெற்றோலிய வளத்துறை

4. ஆறுமுகம் தொண்டமான் – கால்நடை, கிராம சமூக அபிவிருத்தி

5. தினேஷ் குணவர்த்தன – நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு

6. டக்ளஸ் தேவானந்தா – பாரம்பரிய கைத்தொழில், மற்றும் சிறு கைத்தொழில்

7. ஏ.எல்.எம்.அதாவுல்லா – உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபை

8. ரிஷாட் பதியுதீன் – வர்த்தக மற்றும் முதலீட்டு விவகாரம்

9. பாட்டலி சம்பிக்கரணவக்க – மின்சக்தி மற்றும் எரிசக்தி

10. விமல் வீரவன்ஸ – வீடமைப்பு, பொறியியல் நிர்மாணத்துறை

11. ரவூப் ஹக்கீம் – நீதியமைச்சு

12. பஷில் ராஜபக்ஷ – பொருளாதார அபிவிருத்தி

13. வாசுதேவ நாணயக்கார – தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்கம்

14. எஸ்.பி.திஸாநாயக்க – உயர்கல்வி

15. ஜி.எல்.பீரிஸ் – வெளிவிவகாரம்

16. டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன – பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள்

17. சுமித்திரா ஜி.ஜயசேன – நாடாளுமன்ற விவகாரம்

18. ஜீவன் குமாரதுங்க – தபால் சேவைகள்

19. பவித்திரா வன்னியாராய்ச்சி – தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி

20. அநுர பிரியதர்ஷன யாப்பா – சுற்றாடல் விவகாரம்

21. திஸ்ஸ கரலியத்த – சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகாரம்

22. காமினி லொக்குகே – தொழில் மற்றும் தொழில் உறவுகள்

23. பந்துல குணவர்த்தன – கல்வி

24. மஹிந்த சமரசிங்க – பெருந்தோட்ட கைத்தொழில்

25. ராஜித சேனாரட்ன – மீன்பிடி மற்றும் நீரியல்வளம்

26. ஜனக பண்டார தென்னக்கோன் – காணி மற்றும் காணி அபிவிருத்தி

27. பீலிக்ஸ் பெரேரா – சமூகசேவைகள்

28. சி.பி.ரத்நாயக்க – தனியார் போக்குவரத்து சேவைகள்

29. மஹிந்த யாப்பா அபயவர்த்தன – விவசாயம்

30. கெஹெலிய ரம்புக்வெல்ல – வெகுஜன ஊடக மற்றும் தகவல்

31. குமார வெல்கம – போக்குவரத்து

32. டலஸ் அழகப்பெரும – இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன்; விருத்தி

33. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர்;

34. சந்திரஸ்ரீ கஜதீர – புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

35. சலிந்த திஸாநாயக்க – சுதேச மருத்துவம்

36. ரெஜினோல்ட்குரே – சிறு ஏற்றுமதிப்பயிர் ஊக்குவிப்பு

37. டிலான் பெரேரா – வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி சேவைகள்

38. ஜெகத் புஷ்பகுமார – தென்னை அபிவிருத்தி மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி

39. டீ.பி.ஏக்கநாயக்க – கலாசாரம் மற்றும் கலைகள்

40. மஹிந்த அமரவீர – அனர்த்த முகாமைத்துவம்

41. எஸ்.என்.சந்திரசேன – கமநலசேவைகள் மற்றும் வனவிலங்கு

42. குனரத்ன வீரக்கோன் – மீள்குடியமர்தல்

43. மேர்வின் சில்வா – பொதுசன உறவுகள் மற்றும் பொதுசன விவகாரங்கள்

44. மஹிந்தானந்த அளுத்கமகே – விளையாட்டுத்துறை

45. தயாசிறித்த திசேர – அரச வளங்கள் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி

46. ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய – தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம்

47. டொக்டர் ஜகத் பாலசூரிய – தேசிய மரபுரிமை

48. லக்ஷ்மன் செனவிரத்ன – உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு

49. நவின் திஸாநாயக்க – பொதுமுகாமைத்துவ சீர்திருத்தம்


பிரதியமைச்சர்கள்
1. சுசந்த புஞ்சி நிலமே – மீன்பிடி மற்றும் கடல்வள விவகாரம்

2. லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன – பொருளாதார அபிவிருத்தி

3. ரோஹித்த அபய குணவர்த்தன – துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி

4. பந்து பண்டாரநாயக்க – ஆயுர்வேத மருத்துவ விவகாரம்

5. ஜயரத்ன ஹேரத் – கைத்தொழில் மற்றும் வர்த்தகம்

6. துமிந்த திஸாநாயக்க – இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி

7. லசந்த அழகியவண்ண – வீடமைப்பு, பொறியியல் நிர்மாணத்துறை

8. ரோஹண திஸாநாயக்க – போக்குவரத்து விவகாரம்

9. ஏச்.ஆர்.மித்ரபால – கால்நடை, கிராம சமூக அபிவிருத்தி

10. நிர்மல் கொத்தலாவ – துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி

11. பிரேமலால் ஜயசேகர – மின்சக்தி மற்றும் மின்வலு

12. கீத்தாஞ்சன குணவர்த்தன – நிதி திட்டமிடல்

13. விநாயமூர்த்தி முரளிதரன் – மீள்குடியேற்றம்

14. பைஸர் முஸ்தபா – தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி

15. இந்திக்க பண்டாரநாயக்க – உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபை

16. முத்துசிவலிங்கம் – பொருளாதார அபிவிருத்தி

17. சிறிபால கம்லத் – காணி அபிவிருத்தி

18. டபிள்யூ.பி.ஏக்கநாயக்க – நீர்ப்பாசன நீர்வளம் மற்றும் முகாமைத்துவம்.

19. சந்திரசிறி சூரியாராய்ச்சி – சமூக சேவைகள்

20. நந்தமித்த ஏக்கநாயக்க – உயர்க்கல்வி

21. நிரூபமா ராஜபக்ஷ – நீர்வழங்கல் மற்றும் வடிகால்

22. லலித் திஸாநாயக்க – சுகாதாரம்

23. சரண குணவர்த்தன – பெற்றோலிய வளம்

24. காமினி விஜித் விஜிதமுனிசொய்சா – கல்வி

25. எம்.எல்.ஏ ஹிஸ்புல்லா – மகளிர் மற்றும் சிறுவர் விவகார

26. வீரகுமார திஸாநாயக்க – பாரம்பரிய கைத்தொழில், மற்றும் சிறுகைத்தொழில்

27. எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன – புத்தசாசன மதவிவகாரம்.

28. ஏர்ல் குணசேகர – பெருந்தோட்ட கைத்தொழில்

29. பஷீர் சேகுதாவூத் – உள்நாட்டு வர்த்தகம் கூட்டுறவு

30. அப்துல் காதர் – சுற்றாடல் அபிவிருத்தி

31. துலிப் விஜயசேகர – அனர்த்த முகாமைத்துவம்

பிரதேச சபைத் தோ்தலில் ஜனாப் நஜீம் போட்டி

See full size imageஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தோ்தலில் அத்தனகல்ல தோ்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ஜனாப் நஜீம் நாநா அவர்கள் போட்டியடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் அரசியலில் ஈடுபாடு கொண்டு பல்வேறு சேவைகளை எமதூருக்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் அரசியலின்றி தனிப்பட்ட முறையில் பல்வேறு சமூக சேவைகளையும் இவர் ஊரின் நலனிற்காகச் செய்துள்ளார்.
பொது ஜன ஐக்கிய முன்னனி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னனி சார்பகாக எந்தவொரு முஸ்லிமும் போட்டியிடுவதாக இதுவரை எவ்விதத் தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை.

கஹட்டோவிடாவில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

“தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!”



கஹட்டோவிட அல் மஸ்ஜித் ஜாமிஉ பள்ளி வாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று காலை 7 .15 மணியளவில் நடைபெற்றது. நேற்றிரவு பெய்த மழையையும் பொருட்படுத்தாது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமையையும் காண முடிந்தது. ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் உட்பட சுமார் 1000 போ் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பெருநாள் தொழுகையைத் தொடாந்து பள்ளி வாசலின் பிரதம் இமாம் அஷ்ஷைக் மஸ்ஊத்(ஸலபி) அவாகளின் உரையும் இடம் பெற்றது. இவ்வுரையில் அல்லாஹுத்தஆலாவால் மனிதர்களிற்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு அருட்களான ஆரோக்கியம், ஓய்வு நேரம் என்பவற்றை நாம் எப்படி சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பது பற்றிய ஒரு சிறந்த விளக்கத்த வழங்கினார்.  குர்ஆன் சுன்னாவின் பிரகாரம் பெருநாள் தொழுகையை தொழுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்த அல்லாஹ்விற்கும், மஸ்ஜித் ஜாமிஉவின் நிர்வாகத்திற்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

நிழற்படங்களுக்கு இங்கே கிளிக் பன்னவும்.


ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை அறிவித்தல்

இன்சா அல்லா நாளை 17.11.2010 ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. பெருநாள் தொழுகை முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளியில் பெண்களுக்கு காலை6.45 மணிக்கும் ஆண்களுக்கு 7.00மணிக்கும் நடைபெறும். தவ்ஹீத் ஜமாஅத்தினரால்  காலை 7.00மணிக்கு வழமை போன்று நபிவழியின் அடிப்படையிலான பெருநாள் தொழுகை  கஹட்டோவிட அல்பத்ரியா மகாவித்தியாலய மைதானத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னனிக்குப் பின்னால்…… கிளை 10

கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.

.................................................................................
கல்வியை ரசித்தவன் அறிஞனாகின்றான்.கவியை ரசித்தவன் கவிஞனாகின்றான். தத்துவத்தை ரசித்தவன் ஞானியாகின்றான். அறிவியலை ரசித்தவன் விஞ்ஞானியாகின்றான். ரசனைகளால் சமைந்ததே மனித வாழ்வு. புரிதல் மனிதனின் பொது மொழி ரசித்தல் மனிதனின் தனிமொழி. கருத்துக்களை ரசிப்பதனால் அவற்றுள் மறைந்திருக்கும் வலிகளைப் புரியலாம். காட்சிகளை ரசிப்பதால் கல்லாகிப்போன நெஞ்சங்களை நெகிழவைக்கலாம். காவியங்களும் ஓவியங்களும் ரசனையால் பிறந்தவைதான். சில ரசனைகளில் அர்த்தமில்லை என்பதற்காய் ரசனைக்கே அர்த்ததில்லாமற் போய்விடாது. எழுத்தை ரசிக்கும் ஒரு எழுத்தாளன் தன் கருத்தைக் கட்டுரையிலும் சொல்வான் கவிதையிலும் சொல்வான். கருத்துக்களே இங்கு கவனத்துக்குறியன. கவிதையோ கட்டுரையோவல்ல. எழுத்தில் அசிங்கத்தையும் கூறலாம். அழகையும் கூறலாம். ஓர் அறிஞன் புறக்கனிக்கப்படுவதால் அங்கே அறிவு புறக்கனிக்கப்படுகின்றது. விமர்சனங்களால் சில ரசனைகள் நசுக்கப்படுகின்றன. விமர்சிப்பதாய் கூறி சிலர் வஞ்சிக்கின்றனர். ரசனைகள் பசுமையானவை அவற்றை புண்படுத்தாதீர்ககள் பண்படுத்துங்கள். ரசனைகள் சுகந்திரமானவை அவற்றை சிறைப்படுத்தாதீர்கள் சீர்படுத்துங்கள். இதய ஆழத்தில் என்றோ புதையுண்ட பல ரசனைகளாளேயே மாறுகின்றன. உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத மனித ஜடங்களிடம் தம் இதயக்கிடக்கைகளைச் சொல்லி நொந்து போவதை விட இயற்கையை ரசித்து சில உள்ளங்கள் ஆறுதலடைகின்றன. வார்த்தைகளால் தம் உணர்வுகளைக் கூற முடியாத உள்ளங்கள் எழுத்தால் எத்திவைக்கின்றன. ரசனைகளுக்குப்பின்னால் இப்படியும் சில மறைந்து போயுள்ளன

மஹிந்தரின் கோட்டைக்கு பேராபத்து!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டாக வெடித்து விட்டது என்று தகவல்கள் கசிந்துள்ளன. மஹிந்தர்ஆதரவாளர்கள் அணி, மஹிந்தர் அதிருப்தியாளர்கள் அணி என்று இரு பிரிவுகள் தோற்றம் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஸ எம்.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மஹிந்தர் அதிருப்தியாளர் அணியின் பிதாமகர்கள் என்று கூறப்படுகின்றனர்.

ஐ.தே.கவில் இருந்து ஆளும் கூட்டமைப்புக்கு தாவியவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை கொடுக்க மஹிந்தர் தீர்மானம் எடுத்தமையை அடுத்து கூட்டமைப்புக்குள் பூசல் ஏற்பட்டு இருந்தது.

தற்போது மு.கா அரசுடன் சேர்ந்துள்ள நிலையில் அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதை அடுத்தே உக்கிரமான பிளவு தோன்றி விட்டது என்று அரச வட்டரங்களில் இருந்து தகவல்கள் வெளி ஆகி உள்ளன.

ஜனாஸா அறிவித்தல்

மாவனல்லையைச் சேர்ந்த அல்ஹாஜ் இல்யாஸ் அவர்கள் காலமானார். அன்னார் மர்ஹும்களான உம்மு குல்ஸும், ஸகரீயா தம்பதிகளின் புதல்வியான ஸம்ஸுல் ஹிதாயா அவர்களின் கணவராவர். அன்னார் கஹடோவிடாவை சேர்ந்த அஹமட் முனவர் (இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்), ஜிபிரி, ஹுசைன், மர்ஹும் ஜாபிர், மர்ஹும் ஐன் பாதிமா, நூருல் அமீனா, சித்தி உமைரா, சித்தி கதீஜா (கஹடோவிட) ஆகியோரின் மைத்துன்னும் ஆவர்.


அன்னாரின் ஜனாஸா இன்று (2010.11.13) சனிக்கிழமை இரவு 10.00 மணியளவில் மாவனல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸஹவுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி வைப்பானாக!

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் ஸதகத்துல் ஃபித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்ஹியா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பயிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

இப்ராஹீம் நபியவர்கள் தமது மகனைப் பயிடுவதாகக் கனவு கண்டு அதை நிறைவேற்ற முயலும் போது, இறைவன் அதைத் தடுத்து நிறுத்தி ஓர் ஆட்டைப் பயிடச் செய்தான். இந்த வரலாறு திருக்குர்ஆனில் 37வது அத்தியாயம் 102 முதல் 108 வரையிலான வசனங்கல் கூறப்பட்டுள்ளது. அதன் இறுதியில் பின்வரும் மக்கடையே இந்த நடைமுறையை நாம் விட்டு வைத்தோம் எனக் கூறப்படுகின்றது.

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காக அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!
அல்குர்ஆன் 22:28

இந்த வசனத்தில் குர்பானிக்கான பிராணிகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்
பொழுது அன்ஆம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளையும் குறிக்கும். எனவே ஆடு,மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே குர்பானி கொடுக்க வேண்டும்.


குர்பானி கொடுக்கும் நாட்கள்

குர்பானி கொடுக்கக் கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகு தான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அவர்கள் கால நிர்ணயம் செய்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை
நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலே, யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு
குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆக மாட்டார் என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: பரா (ர), நூல்: புகாரி 955, 5556

இந்த ஹதீஸில் இருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை
நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டும் இன்றி ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்து வரக்கூடிய 11, 12, 13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். பெருநாள் தினத்தில் கொடுக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்கலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.


அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காக அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!
அல்குர்ஆன் 22:28

குர்பானி கொடுப்பதற்கான பிராணிகளை வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்கல்
இறைவனைத் துதிப்பார்கள் என்ற வாசகத்தைச் சிந்திக்கும் போது அறியப்பட்ட
நாட்கல் குர்பானி கொடுக்கலாம் என்பது தெரிகிறது. இன்னின்ன நாட்கள் என்று
விளக்கத் தேவையில்லாத அளவுக்கு அனைவருக்கும் தெரிந்த நாட்களையே அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

ஹஜ்ஜின் கிரியைகள் ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்து வரக்கூடிய மூன்று
நாட்கள் வரை நீடிக்கும். பிறை 13 வரை ஹஜ்ஜின் கிரியைகள் உள்ளன. இது
அனைத்து ஹாஜிகளுக்கும் தெரிந்த ஒன்றாகும். எனவே அறியப்பட்ட நாட்கள்
என்பது 10, 11, 12, 13 ஆகிய நாட்கள் தான். சாதாரண மக்களுக்கே தெரிந்த
விஷயமாக உள்ளதால் தான் அல்லாஹ் அறியப்பட்ட நாட்கள் எனக் கூறுகிறான்.

எனவே இந்த வசனத்திருந்து பிறை 13 மக்ப் வரை குர்பானி கொடுக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அறுக்கும் முறை

குர்பானிப் பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள். கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன், ஆயிஷாவே! கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு, இறைவா இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும், முஹம்மதின் சமுதாயத்தாரிடம் இருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ர), நூல்: முஸ்ம் 3637

முஸ்ம் நூல் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம்
பெற்றுள்ளது.

எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக்கூறி அறுக்க
வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள
வேண்டும்.

எத்தனை ஆடுகள்?

நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள இரண்டு கருப்பு, வெள்ளை செம்மறியாட்டுக்
கடாக்களின் பக்கம் சென்று தமது கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ர), நூல்: புகாரி 5554

நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஆடுகள் குர்பானி கொடுத்து இருப்பதால் நாமும்
இரண்டு ஆடுகள் கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இரண்டு ஆடுகள் கொடுத்த நபி (ஸல்) ஒன்று தமக்காகவும் மற்றொன்று தமது சமுதாயத்திற்காகவும் கொடுத்ததாக அவர்களே குறிப்பிட்டதாக மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சமுதாயத்திற்காக கொடுக்கின்ற பொறுப்பு நபி(ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லாததால் நாம் நமக்காகவும் நம் குடும்பத்திற்காகவும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பது போதுமானதாகும்.

ஆபிது பின் ஹிப்ஸ் என்ற நபித் தோழர் தமது குடும்பத்தார் அனைவரின்
சார்பாகவும் ஒரே ஒரு ஆட்டை குர்பானி கொடுத்து இருக்கிறார் என்று
புகாரியில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கன் காலத்தில் எத்தகைய நடை முறை இருந்தது என்பதைப் பின்வரும்
செய்தியிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கன் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது?
என்று அபூ அய்யூப் (ர) அவர்கடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர்
தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி
கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார்.
இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது
என்று விடையத்தார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார்
நூற்கள்: திர்மிதீ 1425, இப்னு மாஜா 3137, முஅத்தா921

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரே ஒரு
ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிருந்து
அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது
என்பதற்குத் தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களைக்
குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது
அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.
அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: புகாரி 1718

மாட்டையோ, ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7 பேர் சேர்ந்து
ஒரு மாட்டை அல்லது ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு,
அல்லது ஓர் ஒட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர். அறிவிப்பவர்: ஜாபிர் (ர), நூல்: முஸ்ம் 2323

எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல்,
விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டைக் குர்பானி கொடுக்கலாம். ஆட்டை
குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் கொஞ்சமும்
இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து
கொள்ளலாம்.

விநியோகம் செய்தல்

குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக்
கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள்.
ஆரம்ப காலத்தில் முஸ்ம்கடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமான அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அத்தார்கள். இது புகாரியில் 1719வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் மக்காவில் குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியை மதீனாவிற்கு
நபி (ஸல்) அவர்கடம் நாங்கள் கொண்டு வருவோம் என்று ஜாபிர் (ர) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்று உள்ளது.

எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான
அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச்
செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக்
கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனுடைய இறைச்சி, தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து, அறுத்து, பங்கிடக்கூடியவருக்குக் கூயாக அந்த இறைச்சியையோ, தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள். அறிவிப்பவர்: அலீ (ர), நூல்:
புகாரி 1717

இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவருக்கு, உரிப்பவருக்கு தனியாகத் தான் கூ
கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி பிராணியின் எந்த ஒரு பகுதியையும் கூ என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல்
தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின்
கட்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள்! வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள் என்று அல்லாஹ்
கட்டளையிடுகிறான். எவ்வளவு உண்ணலாம்; எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் நமக்கு நியாயம் என்று தோன்றுகின்ற அளவுக்கு நாம் எடுத்துக் கொண்டு, எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

சில இடங்கல் குர்பானி இறைச்சியை மூன்று பங்குகளாக வைத்து ஒரு பங்கு
தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானிப் பிராணிகள்

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும். என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

குர்பானி கொடுக்கப்படும் பிராணிகள் ஏனோ தானோ என்று இருக்கக் கூடாது.
மாறாக தரமுள்ளவையாக அவை இருக்க வேண்டும்.

நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையல்ல. வெப்படையாகத் தெரியக் கூடிய குருட்டுத் தன்மை, வெப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெப்படையாகத் தெரியக்கூடிய ஊனம், கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! கொம்பில் ஒரு குறை, பல்ல் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு! மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: பரா (ர), நூல்: நஸயீ 4293

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெப்படையாகத் தெரியக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிருந்து அறிந்து கொள்ளலாம்.

குர்பானிப் பிராணியின் வயது

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளைத் தான் குர்பானி
கொடுக்கவேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு
செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

இது பற்றி நமக்குக் கிடைத்துள்ள முக்கியமான ஹதீஸ்களைப் பார்ப்போம்.

நீங்கள் முஸின்னத் தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள்!
உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர. அவ்வாறு சிரமமாக இருந்தால்
வெள்ளாட்டில் ஜத்அத்தை அறுங்கள்! என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: ஜாபிர் (ர), நூல்: முஸ்ம் 3631

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் யார் நமது தொழுகையைத் தொழுது விட்டுப் பயிடுகிறாரோ அவர் தான் (குர்பானி எனும்) கடமையை நிறைவு செய்தவராவார். யார் தொழுகைக்கு முன் அறுக்கிறாரோ அவர் கிரியையைச் செய்தவராக மாட்டார் என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது அபூ புர்தா (ர) அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுகைக்கு முன்பே
அறுத்து விட்டேன். இது உண்ணுகின்ற பருகுகின்ற நாள் என்று விளங்கிக்
கொண்டேன். எனது குடும்பத்தில் நான் அறுக்கும் ஆடே முதல் ஆடாக இருக்க
வேண்டும் என்று விரும்பி தொழுகைக்கு வருவதற்கு முன்பே அறுத்து விட்டேன் எனக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமது ஆடு இறைச்சிக்காக அறுக்கப்பட்டதாகும் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்கடம் ஜத்அத் பருவத்தில் ஆட்டுக்குட்டி உள்ளது. இரண்டு ஆடுகளை விட அது எனக்கு விருப்பமானது. அதை அறுத்தால் போதுமா? என்று அவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், போதும். ஆனால் உம்மைத் தவிர வேறு யாருக்கும் இது போதுமாகாது என்றார்கள்.
அறிவிப்பவர்: பரா (ர), நூல்: புகாரி 955

நபி (ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தனர். அதில்
எனக்கு ஜத்வு கிடைத்தது. அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஜத்வு தான் கிடைத்தது என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதைக் குர்பானி கொடுப்பீராக! என்றனர். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ர), நூல்கள்: புகாரி 5547, முஸ்லிம் 3634 எந்த வயதுடைய பிராணியைக் குர்பானி கொடுக்கலாம் என்பதற்கு இம் மூன்று ஹதீஸ்கல் போதுமான விளக்கம் கிடைக்கின்றது.

முஸின்னத் எனும் பருவம் உடையதைக் குர்பானி கொடுக்குமாறு முதல் ஹதீஸ் கட்டளையிடுகிறது.

முஸின்னத் என்பது எத்தனை வயதுடைய பிராணி என்பதில் ஏராளமான கருத்து
வேறுபாடுகள் உள்ளன. இந்தக் கருத்து வேறுபாடுகள் யாவும் அர்த்தமற்றதாகவே உள்ளன.

முஸின்னத் என்றால் இனவிருத்தி செய்வதற்கான பருவத்தை அடைந்தவை என்பது பொருள். அதாவது மனிதர்கள் வயதுக்கு வருவது போல், பருவமடைவது போல் கால்நடைகளும் குறிப்பிட்ட வயதில் பருவமடைகின்றன. இங்கே வயதை விட பருவமடைவது தான் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மனிதர்கல் பெண்கள் பருவமடைவது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் 15
வயதில் பருவமடைவார்கள். சிலர் ஒன்பது வயதிலும் பருவமடைவதுண்டு. அவர்களது நாட்டில் நிலவும் தட்பவெப்பம், குடும்பப் பாரம்பரியம், உணவுப் பழக்கம், வசதி வறுமை போன்று எத்தனையோ காரணங்களால் இந்த வித்தியாசம் ஏற்படுகின்றன.

இது போன்ற வித்தியாசம் மனிதர்களைப் போலவே கால்நடைகளுக்கும் உள்ளது. காஷ்மீர் ஆடுகளும் தமிழகத்து ஆடுகளும் ஒரே வயதில் பருவமடையும் என்று கூறமுடியாது.

பெரும்பாலும் ஒட்டகம் ஆறு வயதில் பருவமடையும். மாடுகள் மூன்று வயதில்
பருவமடையும். ஆடுகள் இரண்டு வயதில் பருவமடையும். இந்தப் பருவத்தில் உள்ள பிராணிகள் முஸின்னத் எனப்படும். இந்தக் கணக்கு உத்தேசமானது தான். இதில் பல காரணங்களால் வித்தியாசம் ஏற்படும். துணை தேடுவது, பற்கள் விழுதல் போன்றவற்றை வைத்து அதற்கான அறிவு உள்ளவர்கள் பருவமடைந்ததைக் கண்டு பிடித்து விடுவார்கள்.

முஸின்னத்தை குர்பானி கொடுங்கள் என்றால் பருவமடைந்ததைக் குர்பானி
கொடுங்கள் என்பது பொருள். நமது நாட்டில் இத்துறையில் அனுபவமுள்ளவர்கடம் கேட்டு வெள்ளாடு, செம்மறி ஆடு, மாடு ஆகியவை எத்தனை வருடம் எத்தனை மாதத்தில் பருவம் அடையும் என்று அறிந்து கொள்ளலாம்.

பவருமடைவதற்கு முந்தைய நிலையில் உள்ளது ஜத்வு எனப்படும். அதாவது பல் விழும் பருவத்தில் உள்ளது என்பது பொருள். உறுதியான பற்கள்
முளைப்பதற்காகப் பிறக்கும் போது இருந்த பற்கள் விழுந்து விடும். அவ்வாறு
பல் விழ ஆரம்பித்து விட்டால் அது ஜத்வு எனப்படும். இதுவும் ஆடு, மாடு,
ஒட்டகங்களுக்கு வித்தியாசப்படும். நாட்டுக்கு நாடு மாறுபடும்.

பல் விழுந்து விட்டதா என்று பார்த்து அறிந்து கொள்ளலாம். அல்லது
விசாரித்து அறிந்து கொள்ளலாம். ஏறத்தாழ ஒரு வயதில் பல் விழக்கூடும்.

முதல் ஹதீஸில் பருவம் அடைந்ததைக் குர்பானி கொடுக்கச் சொன்ன நபி (ஸல்) அவர்கள் சிரமமாக இருந்தால் அதற்கு அடுத்த நிலையில் உள்ளதைக் கொடுக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

இரண்டாவது ஹதீஸில் பல்விழும் பருவத்தில் உள்ளது உனக்கு மட்டும் தான்.
மற்றவருக்குப் போதாது என்று நபி (ஸல்) கூறியுள்ளனர். இது முந்திய ஹதீஸின் கருத்துக்கு எதிரானது போல தோன்றுகிறது.

சக்தி இல்லாவிட்டால் யார் வேண்டுமானாலும் ஜத்வு கொடுக்கலாம் என்று முதல் ஹதீஸும், அந்த நபித் தோழரைத் தவிர வேறு எவரும் கொடுக்கக் கூடாது என்று இரண்டாவது ஹதீஸும் கூறுகிறது.

மூன்றாவது ஹதீஸில் உக்பா என்ற மற்றொரு நபித்தோழருக்கும்
அனுமதியக்கப்பட்டுள்ளது. உம்மைத் தவிர வேறு யாருக்கும் இந்த அனுமதி
கிடையாது என்ற ஹதீஸுடன் இதுவும் முரண்படுகிறது.

இரண்டாவது ஹதீஸை சிறந்தது என்ற அடிப்படையில் கூறியதாகத் தான் எடுத்துக் கொள்ளவேண்டும். சட்டம் தெரியாத நிலையில் நீர் முன்பே அறுத்து விட்டதால் இப்போது ஜத்வு கொடுத்தாலும் முஸின்னத்தின் நன்மை கிடைக்கும். மற்றவர்களுக்கு இந்த நன்மை கிடைக்காது. ஜத்வு கொடுத்தால் ஜத்வு கொடுத்த நன்மை தான் கிடைக்கும் என்று புரிந்து கொண்டால் ஹதீஸ்களுக்கிடையே முரண்பாடு ஏதுமில்லை.

இயன்ற வரை பருவமடைந்ததைக் கொடுக்க வேண்டும். அது கிடைக்காவிட்டால் அல்லது
சக்தி இல்லாவிட்டால் குறைந்த பட்சம் பல் விழுந்த ஆட்டையேனும் கொடுக்க
வேண்டும். இவ்வாறு புரிந்து கொண்டால் முரண்பாடு இல்லை.


கிடாயும் பெட்டையும்

பெட்டை ஆடுகளையும், கிடாய்களையும் முஸ்ம்கள் வித்தியாசமாகவே
பார்க்கின்றனர். சில பகுதிகல் பெட்டை ஆடுகள் சாப்பிடுவது மார்க்கத்தில்
தடை செய்யப்பட்டது போலவும் கருதுகின்றனர்.

சாதாரணமான நேரத்திலேயே பெட்டை ஆடுகளைச் சாப்பிடக் கூடாது எனக் கருதக் கூடியவர்கள், குர்பானி கொடுப்பதற்குப் பெட்டை ஆடுகள் அறவே தகுதியற்றவை என்று நினைக்கின்றனர். பெட்டை ஆடுகளைக் குர்பானி கொடுக்கக் கூடிய ஒருவரைக் கூட தமிழகத்தில் காண முடியாது.

இது பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்வது
அவசியம்.

உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதில் கிடாயும் ஆடும், காளையும் பசுவும்,
சேவலும் கோழியும் சமமானவை தான் என்பதை முஸ்லிம்கள் முதல் நம்ப வேண்டும்.
பறவையினங்கல் இதை ஏற்கக் கூடியவர்கள் கால்நடைகல் மட்டும் ஏற்கத்
தயங்குகின்றனர்.

குர்பானி கொடுப்பதற்குக் காளையும் கிடாயும் தான் தகுதியானது என்று
திருக்குர்ஆனிலும் கூறப்படவில்லை. நபிகள் நாயகத்தின் பொன் மொழிகலும்
கூறப்படவில்லை.

இன்னும் சொல்லப் போனால் குர்பானி பற்றிக் கூறும் போது ஜத்வு என்று
ஆண்பால் கூறப்பட்டுள்ளது போலவே ஜத்அத் என்று பெண்பாலும் கூறப்பட்டுள்ளது.
முஸின் என்று ஆண் பாலாகவும் முஸின்னத் என்று பெண் பாலாகவும்
கூறப்பட்டுள்ளது. எனவே ஆண் கால்நடைகளைத் தான் குர்பானி கொடுக்கவேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை

ஒருவர் குர்பானி கொடுப்பதாக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ்
மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம்
வெட்டக்கூடாது, முடிகளை நீக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ர), நூல்: நஸயீ 4285

தாமே அறுக்க வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போது தமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்ம் உட்பட பல நூல்கலும் இடம் பெற்றுள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

பொது நிதியிருந்து குர்பானி கொடுத்தல்

வசதியுள்ளவர்கள் மட்டுமின்றி வசதியற்றவர்களும் குர்பானி கொடுப்பதற்கான
ஏற்பாட்டை நபி (ஸல்) அவர்கள் நடைமுறைப் படுத்தியிருந்தார்கள். அவர்கள்
நடைமுறைப்படுத்திய பொருளாதாரக் கொள்கை காரணமாக அரசுக் கருவூலத்தில் ஏராளமாக நிதி குவிய ஆரம்பித்தது. ஆரம்ப காலத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிடக் கூட வசதியற்றிருந்த ஒரு சமுதாயம் மிக உன்னதமான பொருளாதார முன்னேற்றத்தை எட்டியது.

இவ்வாறு செல்வச் செழிப்பு ஏற்பட்ட காலத்தில் குர்பானி கொடுக்க
விரும்புகிறவர்களுக்கு குர்பானி பிராணிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
வழங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணிகளை மக்களுக்குப் பங்கிட்டுக்
கொடுத்தனர். எனக்கு ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி தான் கிடைத்தது.
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஆறு மாதக் குட்டி தானே கிடைத்துள்ளது எனக் கூறினேன். அதையே நீர் குர்பானி கொடுப்பீராக! என்று நபி (ஸல்)
கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ர), நூல்கள்: புகாரி 5547, முஸ்லிம் 3634
பொது நிதியிருந்து குர்பானிப் பிராணிகள் வழங்கப்படும் வழக்கம் நபி (ஸல்)
அவர்களது காலத்தில் இருந்ததை இந்த ஹதீஸிருந்து அறிந்து கொள்ளலாம்.

குடும்பத்துடன் கனடாவில் அரசியல் தஞ்சம் பெற கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் தீவிர முயற்சி!

 

இலங்கையின் கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் குடும்ப அங்கத்தவர்களுடன் கனடாவில் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

முஹமட் அஸிஸ் என்கிற இரத்தினக் கல் வியாபாரியே மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் அரசியல் தஞ்சம் கோரி கனடா வந்துள்ளார்.

 இவர் கனேடிய எல்லையை வந்தடைந்தபோது 85.000 அமெரிக்க டொலர் பெறுமதியான இரத்தினக் கற்களை உடைமையில் வைத்து இருந்தார். அமெரிக்காவின் அரிஷோனா மாநிலத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற இரத்தினக் கல் வர்த்தக கண்காட்சியில் பங்குபற்றி விட்டு வந்திருக்கின்றார் என்று கூறி இருக்கின்றார்.

 கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை இவரது அரசியல் தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து விட்டது. இருப்பினும் இவர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.

 நீதிமன்றம் இவரது மேன்முறையீட்டை தொடர்ந்து செவிமடுக்க தீர்மானித்து உள்ளது. இலங்கையில் கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இவர் அடித்துக் கூறுகின்றார்.

 தமிழ் பேசும் கோடீஸ்வர வர்த்தகராக இருக்கின்றமையால் இரு தடவைகள் இலங்கையில் கப்பம் கோரிக் கடத்தப்பட்டார் என்றும் 250,000 அமெரிக்க டொலர் வரை கப்பமாக ஒரு முறை கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார்.

 இந்நிலையில்தான் உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றமைக்காக குடும்பத்துடன் சொந்த நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்கிற நம்பிக்கை இவருக்கு உண்டு. தற்போது தலைநகர் ரொரன்ரோவில் உள்ள கம்பனி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.

இஸ்லாத்தின் கோட்பாடுகளை விட்டு விலகிச் சென்றுவிட்ட தீவிரவாதிகள் - ஒபாமா

obama-5மும்பை: ஜிகாத் என்ற வார்த்தைக்கு தீவிரவாதிகள் பல்வேறு அர்த்தங்களைக் கொடுத்துக் கொண்டு அதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்துகின்றனர். இஸ்லாம் என்ற புனிதமான மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விட்டு தீவிரவாதிகள் விலகிச் சென்றுவிட்டனர் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

மும்பையில் புனித சேவியர் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே இன்று ஒபாமா உரையாற்றினார். பின்னர் மாணவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு ஒபாமா பதிலளித்தார்.

அவர் கூறுகையில், இந்தியா வளர்ந்து வரும் தேசம் என்கிறார்கள். இதை நான் மறுக்கிறேன். இந்தியா ஒரு வளர்ந்து விட்ட தேசம் தான். உலக விவகாரங்களில் இந்தியாவின் பங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளை அதிசயிக்க வைத்துள்ளது. வறுமையையும் தீவிரவாதத்தையும் ஒழித்துக் கட்டும் தகுதியும் பலமும் இந்தியாவிடம் உள்ளது.

இந்திய-அமெரிக்க உறவு என்பது இந்த நேரத்தில் மிக மிக அவசியமானது. உலகின் பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒத்த கருத்து நிலவுகிறது என்றார்.

பின்னர் ஜிகாத் குறித்து ஒரு மாணவர் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த ஒபாமா, ஜிகாத் என்ற வார்த்தைக்கு தீவிரவாதிகள் பல்வேறு அர்த்தங்களைக் கொடுத்துக் கொண்டு அதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்துகின்றனர். இஸ்லாம் என்ற புனிதமான மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விட்டு தீவிரவாதிகள் விலகிச் சென்றுவிட்டனர் என்பதே உண்மை. அவர்களை ஒடுக்குவது நம் முன் உள்ள பெரிய சவால்.

அனைவருமே உலகின் எல்லா மதங்களையும் மதித்து நடக்க வேண்டும். பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் அமைதியையும் நியாயத்தையும் நேர்மையையும் விரும்புபவர்கள். அவர்கள் அதீத சகிப்புத்தன்மை கொண்டவர்கள் தான் என்றார்.

மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு குறித்து நேற்று எந்தக் கருத்தையும் தெரிவிக்காத ஒபாமாவிடம், ஒரு மாணவி கேள்வி எழுப்புகையில், தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் தவறிவிட்டதை சுட்டிக் காட்டினார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஒபாமா,

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் எவ்வளவு வேகம் காட்ட வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அந்த வேகம் பாகிஸ்தானிடம் இல்லை. தீவிரவத்தை பாகிஸ்தான் இன்னும் வேகம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து இரு நாடுகளும் அனைத்துப் பிரச்சனைகளையும் பேசித் தீர்க்க வேண்டும். இரு நாடுகளுமே இணைந்து வளர்ச்சி பெற முடியும். இதில் அமெரிக்காவுக்கும் உதவ முடியும். ஆனால், எங்களது கருத்தை எந்த நாடு மீதும் திணிக்க மாட்டோம்.

ஆப்கானி்ஸ்தானிலும் அமைதியைத் திரும்பச் செய்து அந்த தேசத்தை ஸ்திரமுள்ளதாக்குவதும் சாத்தியம் தான் என்றார்.

முன்னதாக மாணவர்களுடன் கலந்துரையாடலுக்கு ஒபாமா தயாரானபோது மைக்கைப் பிடித்த அவரது மனைவி மிஷேல், குழந்தைகளே, ஒபாமாவிடம் மிகக் கடினமான கேள்விகளைக் கேளுங்கள் என்றார்.
 

கஹடோவிட, ஓகொடபொளை பள்ளி வாசல்கள் சம்மேளனம் - முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்.

கஹட்டோவிட, ஓகொடபொளை பள்ளி வாசல்கள் சம்மேளம் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இந்நடவடிக்கைகளின் கன்னி முயற்சியாக கடைகள், வீடுகளை வெளியார்களுக்கு வாடகைக்கு விடும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் அடங்கிய ஒரு சட்ட விதியை உருவாக்கியுள்ளது. இச்சட்டவிதிகள் அடங்கிய ஒரு விளக்கக் கடிதம் சகல பள்ளி வாசல்களிற்கும் அனுப்பப்ட்டுள்ளது. இதன் புகைப்படப் பிரதியை எமது வாசகர்களிற்காக நாம் தருகின்றோம். இப்பள்ளி வால் சம்மேளனம் தனது சேவையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்.

ஈராக் மீது போர் தொடுத்தது தவறு : ஜார்ஜ் புஷ்

ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது ஈராக் மீது போர் தொடுத்தார். இப்போதும் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து அங்கே இருக்கிறது. போரில் ஏராளமான ஈராக் நிருபர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க தரப்பிலும் ஏராளமான போர் வீரர்கள் பலியானார்கள். பல ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு அமைதியை நாட்ட முடியவில்லை. இந்த நிலையில் ஜார்ஜ்புஷ் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அதில் அவர் ஈராக் போர் தொடர்பாக தகவல்களையும் குறிப்பிட்டு உள்ளார்.
அதில் ஜார்ஜ் புஷ் கூறியிருப்பதாவது:-
ஈராக் மீது போர் தொடுத்ததில் நான் பல தவறுகளை செய்து விட்டேன். போர் தொடுத்ததன் மூலம் நான் மூழ்கிய கப்பலின் கேப்டன் போன்ற நிலயில் இருந்தேன்.
ஈராக் தொடர்பான பிரசாரத்திலும் தவறு நடந்து விட்டது. பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்து வதிலும் தவறு நேர்ந்து விட்டது. போர் நடந்தது முறையிலும் தவறு செய்து விட்டோம்.
இவ்வாறு அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகள் என்று பெயரிட்டுள்ள இந்த புத்தகம் அடுத்த வாரம் முறைப்படி வெளியிடப்பட இருக்கிறது.

பர்தா அணிவதை அச்சுறுத்தலாக நினைப்பது தவறு " - செர்ரி பிளேயர்

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதை அச்சுறுத்தலாக நினைப்பதும் அதற்கு தடை விதிப்பதும் தவறான செயல் என்ற தன் கருத்தை ஸ்பெயினிலிருந்து வெளியாகும் செய்தித்தாள் ஒன்றிடம் முன்னாள் பிரதமர் டோனி பிளேயரின் மனைவி செர்ரி பிளேயர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவரும் எப்படி உடை அணிய வேண்டும் என்பதை அவர்களே தான் முடிவு செய்ய வேண்டும். அதில் பிறர் குறுக்கிடுவது மனித உரிமைகளை மீறிய செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 சில நாட்களுக்கு முன்பு செர்ரி பிளேயரின் தங்கை இஸ்லாம் மதத்திற்கு மாறியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதால் அது குறித்த ஸ்பெயின் ஊடகத்தின் கேள்விக்கு எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பது அவரவர் உரிமை எனவும் பதிலளித்துள்ளார்.

 பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஐரோப்பா முழுவதும் இருப்பதாகவும் அனைவரும் சகோதர உணர்வுடனே பழகி வருவதையும் குறிப்பிட்டுள்ள செர்ரி பிளேயர் அவரவர்களின் மத நெறிமுறைகளுக்கு ஏற்ப உடை அணிந்து கொள்வதை நாம் ஏன் அச்சுறுத்தலாக பார்க்க வேண்டும் எனவும் வினவியுள்ளார்.
 

சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.
'கிட்னி ஸ்டோன்' என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.
சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது. பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.
சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.
* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.
* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.
* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.
* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.
* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவ துநல்லது.
உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.
'கிட்னி ஸ்டோன்' என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.
சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது. பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.
சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.
* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.
* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.
* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.
* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.
* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவ துநல்லது.