கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மஹிந்தரின் கோட்டைக்கு பேராபத்து!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டாக வெடித்து விட்டது என்று தகவல்கள் கசிந்துள்ளன. மஹிந்தர்ஆதரவாளர்கள் அணி, மஹிந்தர் அதிருப்தியாளர்கள் அணி என்று இரு பிரிவுகள் தோற்றம் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஸ எம்.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மஹிந்தர் அதிருப்தியாளர் அணியின் பிதாமகர்கள் என்று கூறப்படுகின்றனர்.

ஐ.தே.கவில் இருந்து ஆளும் கூட்டமைப்புக்கு தாவியவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை கொடுக்க மஹிந்தர் தீர்மானம் எடுத்தமையை அடுத்து கூட்டமைப்புக்குள் பூசல் ஏற்பட்டு இருந்தது.

தற்போது மு.கா அரசுடன் சேர்ந்துள்ள நிலையில் அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதை அடுத்தே உக்கிரமான பிளவு தோன்றி விட்டது என்று அரச வட்டரங்களில் இருந்து தகவல்கள் வெளி ஆகி உள்ளன.

0 comments:

Post a Comment