கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பேஸ்புக் போன்று இலங்கையில் பிரபல சமூக வலைத்தளம் அறிமுகம்.

இன்றைய உலகத்தை சமூக வலைத்தளங்களே ஆட்சி செய்கின்றன என்றால் மிகையாகாது. அதிலும் குறிப்பாக Facebook, Twitter போன்றன உலகளவில் முன்னுரிமை வகிக்கின்றன.
face
இது இவ்வாறு இருக்கையில் தற்பொழுது இலங்கைக்கான தனியானதும், முதன்மையானதுமான சமூக வலைத்தளமாக “லிங்லங்.கொம்” (www.linklank.com) எனும் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தற்பொழுது வாடிக்கையாளர்கள் கணக்குகளை திறக்கக்கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ள போதிலும் 2016.01.01 புதுவருடத்திலிருந்து உத்தியோகபூர்வமாக இயங்கும் என்பதும் இது இலங்கைக்கான சமூக வலைத்தளம் என்பதனால் வாடிக்கையாளர்கள் கணக்குகள் திறப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதிலும் குறிப்பாக Facebook போன்று இலங்கையிலுள்ள அனைவரும் கணக்குகளினை இலவசமாக திறந்துகொள்ள முடியும். இதில் Newsfeed, Like, Share, Comments, Events, Groups, Chat போன்று இன்னும் பல சேவைகளும் உள்ளடக்கப்பட்டு வாசகர்களை கவரும் வகையில் அழகிய தோற்றத்தில் அமைந்துள்ளது.
இவை தவிர விசேடமாக Free jobs, User profile counting options, Point batch system, News feed filtering option போன்ற பல சேவைகளையும் LinkLank (லிங்லங்) தன்னகத்தே கொண்டுள்ளது.
இனி எதிர்வரும் காலத்தில் Facebook போன்று இலங்கைக்கான தனித்துவ மற்றும் முதல்தரமான சமூக வலைத்தளமாக LinkLank அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனலாம்.

TSUNAMI 2004 -DEC - 26

கடந்த 2004 டிசம்பர் 26ம் நாள் ஞாயிறு காலையில் கிருஸ்தவ மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த மகிழ்ச்சிகரமான வேலையில் இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழி பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் அதிரச் செய்த நிகழ்வு பல இலட்ச மனித உயிர்களை பறித்தும் பல்லாயிரம் கோடிகளுக்கு பொருளாதார பேரிழப்பு ஏற்பட்டதையும் நாம் கண்ணீர் சிந்தியதையும் மறந்திட முடியாது
ஒரு சில நிமிடங்களில் ஆசியா கண்டத்தின் 10 நாடுகளில் அவற்றை ஒட்டியுள்ள தீவுகளில் மூன்று லட்சம் வரையான மக்கள் அழிந்தனர் ! ஆசியா தன் வரைபடத்தில் சில கிராமங்களை இழந்து விட்டிருந்தது . அவற்றில் பல மனிதர்களால் நிரந்தரமாக கைவிடப்பட்ட கிராமங்களாக போய்விட்டது
சுனாமி சுட்டு 11 வருடங்கள்
சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் 8.9 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. கடற்பரப்பில் ஏற்பட்ட இதேவேக நிலநடுக்கம் தரைப் பகுதியில் ஏற்பட்டிருந்தால் ஆசியாசின் பல நாடுகள் தரை மட்டமாகியிருக்கும். இதன் பாதிப்பு பல ஆயிரம் அணுகுண்டுகள் வெடித்ததற்குச் சமமாக இருக்கும் என்று புவியமைப்பியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ما اصابك من حسنة فمن الله وما اصابك من سيئة فمن نفسك
(மனிதனே!) உனக்கு ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அல்லாஹ்வின் புறத்தில் நின்றும் கிடைத்ததாகும். உன்னை ஏதும் தீங்கு பிடித்தால் (அது) உன்னிலிருந்தே ஏற்பட்டதாகும். 4:79.
واتبعوا احسن ما انزل اليكم من ربكم من قبل ان يأتيكم العذاب بغتة وانتم لا تشعرون 39:55
நீங்கள் அறிந்துக் கொள்ளாத நிலையில் திடீரென வேதனை உங்களை வந்தடைவதற்கு முன்னர் உங்கள் ரப்பிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட மிக அழகானவற்றை பின்பற்றுங்கள்.39:55
உலகத்தின் மீதுள்ள பற்றும் மரணத்தை பற்றிய பயமும் மனிதனை அல்லாஹ் ஏவியுள்ள கட்டளைகள் அனைத்திலிருந்தும் வேறான ஒரு பாதையில் இட்டுசெல்கின்றது இபாதத்துகள் வெறும் சம்பிரதாயங்களாக மட்டும் எம்மில் எஞ்சியுள்ளது இஸ்லாம் போதிக்கும் தனிநபர் நடத்தை, சமூக நடத்தை எதுவும் எமது சமுகத்தில் பெரிய அளவிலான தாகங்களை பெற்று எம்மை வழிநடத்த நாம் எம்மை தயார் படுத்துவதில்லை இறைவன் எமக்கு தொடர்ந்தும் அவகாசம் தருகின்றார் அவன் எமக்கு வழங்கியுள்ள அவகாசத்தை சரியாக பயன்படுத்துவதில் இருந்து தொடர்ந்தும் நாம் தவரிவருகின்றோம்.
அதற்கு பிரதான காரணமாக உலகத்தின் மீதுள்ள பற்றும் மரணத்தை பற்றிய பயமும் எம்மை ஆட்கொண்டுள்ளது என்பதுதான், சுனாமி போன்ற தாக்கங்களை நாம் எதிர்கொண்ட போது உலகத்தின் மீதுள்ள பற்று காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக ஆயுள் முழுவதையும் செலவு செய்து சேகரித்து கொண்ட பொருட்கள் சில நொடிகளில் அழிந்தி போய்யின அதேபோன்று மரணத்திலிருந்தும் எம்மால் தப்ப முடியாது போனது என்பது எமக்கு முன்னுள்ள படிப்பினையாகும்
மனிதன் இவ்வுலகில் வாழப் பிறந்தவன். இவ்வுலக வாழ்வின் மூலம் அவன் மறுமைக்கு தயாராகிறான். இவ்வுலகில் மனிதன் தன் வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்பதை மனிதனை படைத்த இறைவன் ஏற்றுக்கொள்ளவில்லை. மனித வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. இறை கட்டளைகளுக்குட்பட்டது.
எனவே இவ்வுலக வாழ்வில் பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். வரம்பு மீறாதீர்கள் இடப்பட்ட கட்டளைகளை வாழ்வின் இலக்குகளாக கொண்டு செயல்படுங்கள் என இறைவன் எச்சரித்துள்ளான். அவற்றை உணர்ந்துக் கொண்டே மனித இனம் மீறும் போது சில நேரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் மனித இனத்தை எச்சரித்து படிப்பினைக் கற்பிக்கின்றான் இறைவன்.
உலகில் சுனாமி, பூகம்பம், ,புயல், மழை, வெள்ளம், எரிமலை வெடிப்புக்கள் என பல நடந்து கொண்டேயிருக்கின்றது. கடந்த 100 வருடங்களில் மிகவும் மனித இனத்தை பாதித்த சம்பவங்களாக
1923-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் இறந்தனர்.
1935ல் இந்தியாவின் குவெட்டாவில் 50,000 பேரும்,
1939ல் சிலியில் 28,000 பேரும், அதே ஆண்டு துருக்கியில் 33,000 பேரும்,
1960ல் மொரோக்காவில் 12,000 பேரும்,
1976ல் சீனாவில் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேரும், அதே ஆண்டு கவுதமாலாவில் 23,000 பேரும்,
1978ல் ஈரானில் 25,000 பேரும்,
1985ல் மெக்ஸிகோவில் 9,500 பேரும்,
1988ல் ஆர்மீனியாவில் 25,000 பேரும்,
1990ல் ஈரானில் 50,000 பேரும்,
1993ல் இந்தியாவின் லட்டூரில் 10,000 பேரும்,
1995ல் ஜப்பானில் 6,000 பேரும்,
1998ல் ஆப்கானிஸ்தான் மற்றும் தாஜிஸ்தானில் 5,000 பேரும்,
1999ல் துருக்கில் 17,000 பேரும்,
2001ல் குஜராத்தில் 13,000 பேரும்,
2003ல் ஈரானில் 41,000 பேரும்
பூகம்பத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இவை பேரழிவு ஏற்படுத்திய பூகம்பங்களின் பட்டியல். இவை தவிர சில ஆயிரக்கணக்கில் பலி கொண்ட பூகம்பங்களும் உண்டு. இவை மனித இனத்தை பெரிதும் பாதித்தாலும் மிருக இனங்கள் பெரிதும் தப்பிகொள்வதாக ஆய்வுகள் சுட்டிகாட்டுகின்றது
فلما رأوه عارضا مستقبل اوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب اليم تدمر كل شيئ بامر ربها فاصبحوا لا يرى الا مسكنهم كذلك نجزى القوم المجرمين 46:24.25
ஆகவே (தண்டனையாகிய) அதனை தங்களது பள்ளத்தாக்குகளை முன்னோக்கிவரும் மேகக் (கூட்டமாக) கண்ட போது இது நமக்கு மழையை பொழிய வைக்கும் மேகமாகும், என்று அவர்கள் கூறிக் கொண்டனர். அல்ல. எதனை நீங்கள் விரைவாக தேடினீர்களோ அந்த ஒன்றாகும். (அது) ஒரு புயற்காற்று,அதில் நோவினை தரும் வேதனை இருக்கிறது (என்று கூறப்பட்டது).46:24.25

மீலாது நபி விழா - சில கேள்விகள்

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

மீலாது நபி விழா இன்னும் சில நாட்களில் அனுசரிக்கப்பட போவதாக அறிய முடிகின்றது. ஒவ்வொரு முறை இந்நாள் வரும் போதும், ஒரு இனம்புரியாத வருத்தம் இருக்கத்தான் செய்கின்றது. காரணம் எளிமையானது தான். இஸ்லாம் என்னும் வாழ்க்கை முறை சொல்லாததை சிலர் செய்து கொண்டிருக்கின்றனரே என்ற ஆதங்கம் தான். 

ஒவ்வொரு வருடமும் இதுக்குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு, தங்கள் மூதாதையரின் அறியாமைக்கால பழக்கங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சியே. இருப்பினும் இதுக்குறித்து நம்மை நாமே பிரதிபலித்து கொள்ளவும், முஸ்லிமல்லாதவர்கள் இந்த விழா குறித்து அறிந்துக்கொள்ளவுமே இந்த பதிவு. 

முதலில், இந்த தேதியில் தான் நபியவர்கள் பிறந்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதை பதிவு செய்துவிட்டு மேற்கொண்டு தொடர்கின்றேன். 

மவ்லிது (Mawlid) என்ற வார்த்தைக்கு பிறப்பு அல்லது பிறந்தநாள் என்ற அர்த்தம் வரும். இது தான் மீலாது என்றும் ஆகி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

நபியவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது அல்லது அனுசரிப்பது போன்றவை இஸ்லாத்தில் இல்லை. நபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி நிலவுவதாக) அவர்களது காலத்திலோ அல்லது அவர்கள் இறந்து சில நூற்றாண்டுகள் வரையோ இப்படியான பழக்கம் இருந்ததில்லை. 

இறுதித்தூதர் இறந்து சில நூற்றண்டுகளுக்கு பிறகே ஒரு பகுதியினரிடையே இந்த பழக்கம் துவங்குகின்றது. பனிரெண்டாம் நூற்றாண்டுக்கு பிறகே உலகின் பல பகுதிகளிலும் இந்த விழாவிற்கு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கின்றனர் முஸ்லிம்கள். 

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்த காலத்திலேயே இந்த விழாவை எதிர்த்து குரல் எழுப்பி இருந்திருக்கின்றனர் சில மார்க்க அறிஞர்கள். தற்காலிகமாக இதனை தடை செய்தும் இருந்திருக்கின்றனர் சில ஆட்சியாளர்கள். 

தேவையா இந்த விழா?

"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக - குர்ஆன் 2:136.

தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள் - குர்ஆன் 2:185

குர்ஆன் மிகத்தெளிவாகவே கூறிவிட்டது, இறைத்தூதர்களிடயே வேறுபாடு காட்ட கூடாதென்று. ஆனால் இன்றோ, மீலாது நபி விழா என்ற பெயரில் நேரடியாக அதனை தான் நாம் செய்துக்கொண்டிருகின்றோம். 

நபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி உண்டாவதாக) அவர்களின் பிறந்த நாளை இன்று அனுசரிக்க முயலும் சிலர், மற்ற நபிமார்களுக்கு ஏன் பிறந்த நாள் விழா கொண்டாடாமல் விட்டார்கள்? ஏன் நபிமார்களிடையே வேறுபாடு காட்டுகின்றார்கள்? சிந்திக்க மாட்டோமா? 

நபியவர்கள் காட்டித்தந்த அழகிய வாழ்க்கைமுறையை சரியான முறையில் பின்பற்ற வக்கற்ற நிலையில் இருக்கும் நமக்கு, மீலாது நபி விழா ஒரு கேடா? இது நியாயம் இல்லை என்பது நமக்கு புரியவில்லையா? 

இறுதி நபியவர்கள் காட்டித்தந்த வழிப்படி வாழ்வது தான் நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சரியான மரியாதையே தவிர இம்மாதிரியான விழாக்கள் கொண்டாடுவதில் அல்ல என்பது நம் நினைவுக்கு வரவில்லையா? 

இஸ்லாம் கூறும் பண்டிகைகள் இரண்டு தான். இன்றோ, இந்த மீலாது நபி விழாவையும் மூன்றாவது பண்டிகை போல ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டோமே, இதற்கு மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும் என்ற அச்சம் நம்மிடையே இல்லாமல் போய்விட்டதா?

தர்க்காக்கள் என்னும் மூடநம்பிக்கை, இஸ்லாமின் பெயரால் நம் சமூகத்தில் ஏற்படுத்திய சீரழிவை நாம் நன்கு அறிந்தே இருக்கின்றோம். இப்போது இந்த மீலாது நபி விழா என்னும் அறியாமை பழக்கமும் அந்த திசையில் பயணிக்க நாம் அனுமதிக்க வேண்டுமா? 

இதுப்போன்ற விழாக்களால், இஸ்லாமும் இப்படித்தான் போல என்று பலரையும் விலகிச்செல்ல வைத்திருக்கின்றோமே, இதனையாவது உணர்ந்தோமா?

இதையெல்லாம் தாண்டி, மீலாது நபி விழா கொண்டாடவேண்டிய அவசியம் என்ன வந்தது? முஸ்லிம்களாகிய நாம் தினந்தோறும் நம் வாழ்வில் நபியவர்களை நினைவுக்கூர்ந்து கொண்டு தானே இருக்கின்றோம், அப்படியிருக்க இந்த விழாவிற்கு தேவை என்ன வந்தது? 

சிந்திப்போம்..மீலாது விழாவிற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம்கள் நிச்சயம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள். மார்க்கத்தில் புதுமைகளை புகுத்தாதீர்கள் என்ற நபிமொழியை நினைவுக்கூறவும் இந்நேரத்தில் நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். 

இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு:

இன்று, ஒரு கிளிக்கில் இஸ்லாம் குறித்து நாம் அறிந்துக்கொள்கின்றோம். பலருக்கு எடுத்தும் சொல்கின்றோம். இஸ்லாமின் பெயரால் நம் மூதாதையர் நடத்திக்கொண்டிருந்த பல தவறான பழக்கங்களை தகர்த்தெறிந்து இருக்கின்றோம். அதே முயற்சியை இந்த விசயத்திலும் காட்டுவோம். கூடிய விரைவில் இறைவனின் துணைக்கொண்டு இந்த அறியாமைக்கால விழாவை ஒழித்துக்கட்டுவோம், இஸ்லாமை இன்னும் வேகமாக பலருக்கும் கொண்டு சேர்ப்போம். இன்ஷா அல்லாஹ் 

முஸ்லிமல்லாதவர்களுக்கு: 

தயவுக்கூர்ந்து, மீலாது நபி விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து எங்களை சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம். புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகின்றோம். 

இறைவா, இம்மாதிரியான பழக்கவழக்கங்களில் இருந்து எங்களை காத்தருள்வாயாக..ஆமீன்..

இறைவனே எல்லாம் அறிந்தவன்..

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
http://www.ethirkkural.com/2012/02/blog-post.html 

பைல் சிஸ்டம் ஒரு பார்வை: FAT32, NTFS மற்றும் exFAT

நீங்கள் பென்டிரைவ், எக்ஸ்டெர்னல் ஹர்ட்டிஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது அடிக்கடி கேள்விப் பட்டிருக்கும் விடயம், பைல் சிஸ்டம்! அண்ட்ராய்டு போன்களில் SD கார்ட்களைப் பயன்படுத்தும் போதும் இவற்றைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். சில வேலைகளில் பெரிய பைல்களை கணனியில் இருந்து USB பிளாஷ் டிரைவ்களுக்கு இடம்மாற்றும் போது, சில சிக்கல்களை நீங்கள் எதிர்நோக்கியிருக்கலாம்.
முக்கியமாக போர்மட் செய்யும் போது, பைல் சிஸ்டம் என்கிற இடத்தில் இருக்கும் தெரிவில் எதனைத் தெரிவு செய்யவேண்டும் என்றும் குழப்பம் வரலாம். அதற்காகவேதான் இந்தப் பதிவு.
பல்வேறுபட்ட வித்தியாசமான பைல் சிஸ்டங்கள் பற்றி எளிமையாகப் பார்க்கலாம்.
பொதுவாக விண்டோஸ் இயங்கு முறையில் மூன்றுவிதமான பைல் சிஸ்டங்கள் உண்டு.
  1. FAT32
  2. exFAT
  3. NTFS
லினக்ஸ் இயங்கு முறைமை தனக்கென்று வேறுபட்ட பைல் சிஸ்டங்களைக் கொண்டுள்ளது. பெருவாரியாக கணனிகள், மற்றும் USB கருவிகளில் பயன்படுத்தும் பைல் சிஸ்டங்கள் விண்டோஸ் இயங்கு முறைமை சார்ந்ததால், அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

FAT32 பைல் சிஸ்டம்

அதிகளவான கணனிகள் மற்றும் இலத்திரனியல் கருவிகள், அண்ட்ராய்டு, லினக்ஸ் என்று பெருமளவான முறைமைகளால் ஆதரிக்கப்படும் ஒரு பைல் சிஸ்டம். இதனால் இது மிகவும் பிரபல்யமான ஒரு பைல் சிஸ்டம்.
மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 95 இயங்கு முறைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட பைல் சிஸ்டம் இதுவாகும், ஆகவே இது மிகவும் பழைய பைல் சிஸ்டம். இதனால் இது அதிகளவான கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக நீங்கள் புதிதாக வாங்கும் USB பிளாஷ் டிரைவ்களில் இந்த பைல் சிஸ்டமே வருகிறது. மேலும் SD கார்டுகள், மைக்ரோ SD கார்டுகள் என்பனவற்றிலும் இந்த பைல் சிஸ்டமே வருகிறது. (தேவையென்றால் நீங்கள் போர்மட் செய்து மாற்றிக்கொள்ள முடியும்).
இப்படி வருவதற்குக் காரணம், விண்டோஸ், லினக்ஸ், மக்ஒஸ், அண்ட்ராய்டு மற்றும் புகைப்படக் கருவிகள், ஸ்மார்ட் TV, விளையாட்டுக் கருவிகள் என்று எல்லாமே இந்த FAT32 ஐ ஆதரிக்கின்றன.
பைல் சிஸ்டம் என்கிற பரப்பில் இதுவொரு நியமமாக ஆகிவிட்டது என்றே கூறலாம்.
எப்படியிருப்பினும், தற்போதைய விண்டோஸ் இயங்கு முறைமை FAT32 பைல் சிஸ்டத்தை பயன்படுத்துவதில்லை. காரணம் பின்வருவன.
  1. FAT32 இல் ஒரு தனி பைல் 4GB அளவைவிட அதிகமாக இருக்க முடியாது. பெரும்பாலும் இது பல பைல்களுக்குப் பிரச்சினை இல்லை என்றாலும், தற்போதைய திரைப்படங்கள், கணணி விளையாட்டுக்கள், மற்றும் சில மென்பொருட்களின் பைல் அளவுகள், பல GBக்களை தாண்டுகின்றன, இதனால் இந்த பைல்களை FAT32 முறையில் இருக்கும் ஒரு சேமிப்பகத்தில் சேமிக்க முடியாது.
  2. தபோதைய விண்டோஸ் இயங்கு முறைமைகள் பயன்படுத்தும் பைல் சிஸ்டமாகிய NTFS பல்வேறுபட்ட பாதுகாப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் மூலம், பல்வேறுபட்ட தாக்குதல்களில் இருந்து NTFS பைல் சிஸ்டம் பைல்களை பாதுகாப்பதுடன், பைல்கள் பாதிப்படைவதையும் குறைக்கின்றது.
  3. மேலும் FAT23 முறையில் இருக்கும் ஒரு ஹார்ட்டிஸ்க் பார்டிசன் 8TB ஐ விட அதிகமாக இருக்க முடியாது.
இப்படியான குறைபாடுகளால் FAT32 புதிய விண்டோஸ் இயங்கு முறைமைகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனாலும் போர்டபல் கருவிகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

NTFS பைல் சிஸ்டம்

விண்டோஸ் இயங்கு முறைமை தற்போது பயன்படுத்தும் பைல் சிஸ்டம் இதுவாகும். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், நீங்கள் விண்டோஸ் இயங்கு முறைமையை நிறுவினால், அந்த சேமிப்பகத்தை விண்டோஸ் NTFS பைல் சிஸ்டமாக போர்மட் செய்துவிடும்.
முதன் முதலாக விண்டோஸ் NT 3.1 இல் (1993) அறிமுகப்படுத்தப்பட்டாலும், விண்டோஸ் xp இல் இது பொதுவான பயன்பாட்டிற்கு வந்தது எனலாம்.
FAT32 இல் உள்ள உச்சக்கட்ட வரம்பு போன்றவை NTFS இற்கு இருப்பினும், அது மிகப்பெரியது என்பதால் அதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. உதாரணமாக NTFS இல் சேமிக்கக்கூடிய ஒரு பைலின் அளவு 16EB ஆகும். EB என்பது Exabyte ஆகும்.
1000GB ஒரு TB, 1000TB ஒரு PB, 1000PB ஒரு EB. தற்போது உங்களுக்கு EB எவ்வளவு பெரியது என்று புரிந்திருக்கும்.
FAT32 உடன் ஒப்பிடும் போது NTFS பைல் சிஸ்டத்தில் பல நல்ல அம்சங்கள் உண்டு. இது பாதுகாப்பு அனுமதி முறையைத் தன்னகத்தே கொண்டுள்ளது, மேலும் பைல்களில் ஏற்படும் மாற்றங்களை குறித்து வைப்பதன் மூலம், திடீர் என்று ஏற்படும் பிழைகளைத் திருத்த உதவுகிறது.
மேலும் Shadow Copy மூலம் backup செய்யும் வசதி, என்கிரிப்சன் மேலும் பல வசதிகளை NTFS கொண்டுள்ளது. விண்டோஸ் இயங்குமுறை பாதுகாப்பாக இயங்க NTFS இன் பல்வேறு அம்சங்கள் உதவுகின்றன.
NTFS இல் இருக்கும் சிக்கல் என்னவென்று பார்த்தால், அது மற்றைய இயங்குமுறைமைகளால் ஆதரிக்கப்படாமையே ஆகும். அப்பிள் நிறுவனத்தின் மக்ஒஸ் இயங்கு முறைமையால் NTFS இல் இருக்கும் சேமிப்பகத்தில் இருக்கும் பைல்களை வாசிக்க மட்டுமே முடியும், அதனால், NTFS இல் சேமிக்க முடியாது. பல்வேறு லினக்ஸ் இயங்கு முறைமைகள், மக்ஒஸ் போலவே NTFS பைல்களை வசிக்க மட்டும் செய்கிறது, சில லினக்ஸ் இயங்கு முறைமைகள் மட்டும் வாசிக்கவும், சேமிக்கவும் வசதியை வழங்குகின்றன.
அதேபோல சோனி நிறுவனத்தின் PlayStation மற்றும் Xbox360 ஆகிய விளையாட்டுக்கருவிகள் NTFS ஐ ஆதரிப்பது இல்லை. மைக்ரோசாப்ட்டின் புதிய விளையாட்டுக்கருவியான XBoxOne தற்போது NTFS ஐ ஆதரிக்கிறது. காரணம் இது விண்டோஸ் 10 ஐயே தனது இயங்கு முறைமையாகக் கொண்டுள்ளது.
ஆகவே NTFS இல் இருக்கும் பெரிய குறைபாடு என்றால், அது பல்வேறு தளங்களில் ஆதரிக்கப்படாமையே ஆகும்.
ஆகவே நீங்கள் பல்வேறு வகையான கருவிகளையும் இயங்கு முறைமைகளையும் பயன்படுத்துவீர்கள் என்றால் உதாரணமாக மக்ஒஸ், லினக்ஸ், ஸ்மார்ட்டிவி; இவற்றுக்கிடையில் பைல்களை பரிமாற்ற நீங்கள் NTFS பைல் சிஸ்டத்தில் இருக்கும் சேமிப்பகத்தைப் பயன்படுத்த முடியாது.

exFAT பைல் சிஸ்டம்

2006 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைல் சிஸ்டம், பிளாஷ் சேமிப்பகங்களுக்காகவே உருவாக்கப்பட்டது எனலாம். ஆகவே இது எளிமையான ஒரு பைல் சிஸ்டம், FAT32 பைல் சிஸ்டத்தில் இருந்த குறைபாடுகள் இதில் இல்லை.
அதாவது, ஒரு பைலின் ஆகப்பெரிய அளவு 4 GB என்கிற கட்டுப்பாடு எல்லாம் இதில் இல்லை. ஆகவே பெரிய பைல்களையும் இந்த exFAT ஐப் பயன்படுத்தி சேமிக்கலாம். ஆகவே SD கார்டு, பிளாஷ் டிஸ்க் போன்றவற்றிக்கு இது உகந்தது.
மேலும் NTFS போல் அல்லாமல், மற்றைய பலவேறு இயங்கு முறைமைகள் இந்த exFAT ஐ ஆதரிக்கின்றன. உதாரணமாக மக்ஒஸ், exFAT இல் இருக்கும் சேமிப்பகத்தில் இருக்கும் பைல்களை வாசிக்கவும், அதே நேரத்தில்புதிய பைல்களை சேமிக்கவும் வசதியளிக்கிறது. NTFS இல் வாசிக்கமட்டுமே முடியும்.
ஆனாலும் பல்வேறு பழைய FAT32 ஐ மட்டுமே ஆதரிக்கும் கருவிகள் அல்லது இயங்கு முறைமைகள், exFAT ஐ ஆதரிப்பது இல்லை. ஆனாலும் NTFS அயல் ஆதரிக்கும் முறைமைகளைவிட இதனை ஆதரிக்கும் முறைமைகள் அதிகம் என்றே கூறலாம்.
பொதுவாக exFAT உங்கள் பிளாஷ் டிஸ்க்களில் பயன்படுத்த உகந்தது. எப்படியிருப்பினும் நீங்கள் பாவிக்கபோகும் கருவிகள் exFAT ஐ ஆதரிக்கின்றனவா என்று சரிபார்த்துக்கொல்வது அவசியம்.

https://parimaanam.wordpress.com

இலங்கை வரலாற்றில் இப்படியொரு ஜனாதிபதியா?

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டமை அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி இங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

நாம்புளுவையைச் சேர்ந்த அல்ஹாஜ் எம்.வை. எம். நிஸாம் அவர்கள் காலமானார்.

நாம்புளுவையைச் சேர்ந்த  அல்ஹாஜ் எம்.வை. எம். நிஸாம் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அந்நார் கஹடோவிடாவைச் சேர்ந்த மர்ஹும் பிந்தி நிஹாரா அவர்களின் அன்புக் கணவரும், ஸப்வான், சிஹான், ரிஸ்னா, ரம்ஸான் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை சனிக்கிழமை (19.12.2015) காலை 9.00 மணியளவில் நாம்புளுவ ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار    இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

சகோதரா் சில்மி ஹாஜி (மெடி லப்) அவர்களின் தாயார் காலமானார்.

சகோதரா் சில்மி ஹாஜி (மெடி லப்) மற்றும் இல்ஹாம் ஆகியோரின் தாயாரும், மர்ஹும் அன்ஸார் (கிராம சேவகர்) அவர்களின் மனைவியுமான சகோதரி உம்மு ஜிபிரியா அவர்கள் காலமானார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை (14.12.2015) 9.00 மணியலவில் முகியத்தீன் ஜும்ஆ பள்ளிவாயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار    

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

இலங்கையில் இடம்பெற்ற மோசமான விமான விபத்து: இன்றுடன் 41 வருடங்கள்

இலங்கையின் மோசமான விமான விபத்து இடம்பெற்று இன்றுடன் 41 வருடம் பூர்த்தியாகின்றது.

1974.12.04ம் திகதி மக்காவுக்கு சென்று கொண்டிருந்த ஒல்லாந்தைச் சேர்ந்த மார்டின் எயார் டி.சி 8 என்ற விமானம் இந்தோனேசியாவின் சுரவெயார் விமான நிலையத்தில் இருந்து யாத்ரீகர்கள் 182 மற்றும் விமான ஊழியர்கள் ஒன்பது பேருடன் பயணித்துக்கொண்டிருந்துள்ளது.

இந்நாட்டு நேரப்படி இரவு 10.10 க்கு அக்கரபத்தனை , நோவுட் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு மேலாக பறக்கும் போது சுவப்தகண்ய மலையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அதில் பயணித்த 191 பேரும்  உயிரிழந்திருந்தனர். இதில் ஒரு பெண்ணின் சடலத்தை தவிர அனைத்தும் அந்த மலைக்கு கீழேயே புதைக்கப்பட்டுள்ளன.

மேலும் பணிப்பெண்ணாக இருந்த பெண்ணொருவரின் சடலத்தை அவரது காதலர் , இந்தோனேசியாவில் இருந்து ஹெலிகொப்டரில் வந்து அவரது சொந்த நாட்டுக்கு எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதன்போது விமானத்தில் இருந்த பயணிகளின் பெருந்தொகையான பணத்தை மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர். 

நெதர்லாந்து நாட்டு விமானியொருவரே விமானத்தை செலுத்தியுள்ளார். தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கான காரணமென பின்னர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



வை-பை'யை விட100 மடங்கு வேகம் வழங்கும் லை-பை..!!

இண்டர்நெட் வளர்ச்சியின் அடுத்த மைல் கல் இதுவாக தான் இருக்க வேண்டும். லை-பை எனும் புதிய தொழில்நுட்பம் ஒருநாள் வை-பை தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு வேகத்தில் இண்டர்நெட் வழங்க முடியும். ஆய்வாளர்கள் தற்சமயம் நொடிக்கு 224 ஜிபி வேகம் வரை சோதனை செய்திருக்கின்றனர். இது கண் இமைக்கும் நேரத்தில் 18 திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்கு சமம் ஆகும்.
எல்ஈடி
லை-பை அல்லது லைட் ஃபிடெலிட்டி தற்சமயம் நிஜ உலகில் சோதனை பணிகளில் ஈடுப்பட்டுள்ளது எனலாம். எஸ்தோனியாவின் தல்லின் ஆய்வகங்களில் தற்சமயம் நொடிக்கு 1 ஜிபி வேகம் வரை சோதனை செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண வை-பை தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு வேகமானதும் குறிப்பிடத்தக்கது.
 விட
பை-பை தொழில்நுட்பமானது ரேடியோ சிக்னல்களை கொண்டு இண்டர்நெட் வழங்குவதால் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் டேட்டா வழங்க முடியாது. 2019 ஆம் ஆண்டு வாக்கில் டேட்டா பறிமாற்றம் ஒவ்வொரு மாதமும் 35 க்வின்ட்டில்லியன் அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே ரேடியோ சிக்னல்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த சிக்னல்களை வழங்கும் ஸ்டேஷன்கள் 5 சதவீத விழிப்புடன் இயங்குவதால் அதிக டேட்டாக்களை பறிமாற்றம் செய்யும் போது பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இதற்கு மாற்றாக கண்டறியப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம் தான் லை-பை. எல்ஈடி ப்ளாஷ் மூலம் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் தகவல்களை அனுப்ப முடியும். இவ்வகை ப்ளாஷ் விளக்குகள் சாதாரண கண்களில் தென்படாத அளவு அதிவகேமாக செயல்படுகின்றது.

http://tamil.gizbot.com/

கோலாலம்பூரில் சகோதரர் முஹம்மது சதாம் அவர்களின் ஜனாஸா தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது

கோலாலம்பூரில் மௌத் ஆகிய சகோதரர் முஹம்மது சதாம் அவர்களின் ஜனாஸா தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க துஆ செய்கிறோம்.


ஓகடபொலயைச் சோ்ந்த சகோதரர் சதாம் அவர்கள் மலேசியாவில் காலமானார்.

Ogodapola(Sri Lanka) Mohamed Sadam passed away at Malaysia, 26Nov2105 at the age of 21, Still his body at kuala lumpur general hospital. 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிரஜிஊன். 


May almighty forgive him, have mercy on him and and grant jannathul Firdouse #Aameen

சிரியா மீது நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? ஏஞ்சலினா ஜூலி ஐரோப்பா மன்றத்தில் ஆற்றிய உரை.

'அழகான உதடுகளைக் கொண்டவர்' என உலகம் முழுக்க ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியைக் கொண்டாடுவார்கள். ஆனால், அவருடைய அழகான உதடுகள் பேசுவதெல்லாம் உலகில் கைவிடப்பட்ட மக்களுக்காக என்பதே உண்மை. சிரியா அகதிகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஏஞ்சலினா பேசிய உரை, உலகின் மனசாட்சியை இன்றளவும் உலுக்கி வருகிறது.
அந்த உரையின் முக்கியமான 5 பாயிண்ட்கள் இங்கே...
    
1) " ‘உலக நாடுகளின் தலைவர்களே, குடிமக்களே... உங்களின் நாய்க்குட்டிகள் கூட உச்சபட்ச பாதுகாப்பில் தூங்கும் நேரத்தில்தான், 'என் மகளைத் துப்பாக்கி முனையில் ஒருவன் பாலியல் அடிமையாகக் கடத்திப் போனதைத் தடுக்க வழியின்றி வேடிக்கை பார்த்தேன்’ என ஒரு தாய் என்னிடம் அழுதபோது, நான் என் கண்களைத் தாழ்த்திக்கொள்ள நேர்ந்தது!’’ 

2) "ஒரு பெண் பிள்ளை, தன் சின்னஞ்சிறிய சகோதரர்களையும், சகோதரிகளையும் குடும்பத் தலைவியாகக் காத்து வருகிறாள் ஓர் அகதிக் கூடாரத்தில். அந்தச் சிறுமியின் தாய் விமானக் குண்டுவீச்சில் இறந்து போயிருந்தார். அவர்களின் தந்தை ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். அவரின் நிலை என்னவெனத் தெரியவில்லை. ஆக, குடும்பத் தலைவி பொறுப்பேற்றுக் கொண்ட அந்தப் பெண்ணின் வயது 11" 

3) " ‘பல கட்டடங்களைக் கட்டிய ஒரு பொறியாளர், அகதியாய் உயிர் பிழைக்க தப்பிச் செல்லும் போது அவரது கண் முன்பாக அவரின் மகள் சென்ற படகு விபத்துக்குள்ளாகி 8 வயது மகள் கடலில் மூழ்கிச் சாவதை செய்வதறியாமல் பார்த்துக் கதறினார்’ என்று அவருடைய உறவினர்கள் அவர்களுடைய மொழியில் சொன்னது எனக்குப் புரியவில்லை. ஆனால், ஆறு பிள்ளைகளின் தாயாக அதன் வலியை உணர்ந்தேன்!"
4) "கால்கள் அற்ற ஒரு இளைஞனைச் சந்தித்தேன், உனக்குச் செயற்கைக் கால்கள் வேண்டுமா, வேறெதுவும் உதவி வேண்டுமா எனக் கேட்டேன், 'ஒரே ஒரு உதவி. எனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது. நாங்கள் ஏன் நிர்மூலமாக்கப்பட்டு இரவில் பனிகொட்டும் பாலைவனத்தில் கூடார வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டோம்? இதற்கு மட்டும் பதில் தெரிய வேண்டும்' என்றான். கனவான்களே எனக்குத் தெரியும், இதற்கு உங்களிடத்திலும் பதில் இல்லை என்று!" 

5) "உலக நாடுகளே, நீங்கள் விமானத்தில் உணவும், மருந்தும் போடுவதால், அம்மக்கள் உயிரோடிருக்க முடிகிறது என்றால், அவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்தால் அவர்கள் மீது குண்டும் போடப்படுகிறது. எவ்வளவு பணம் வேண்டும், எவ்வளவு மருந்துகளும், உணவும் வேண்டும்? எனக் கேட்கும் விசாலமான மனது உங்களுக்கு இருக்கலாம், ஆனால் சிரியா மக்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கதகதப்பான கூடாரம் மட்டுமே. அது உயிர்ப் பாதுகாப்பு மிக்க உங்கள் நாடுகளில் வேண்டும். தயவு செய்து உங்கள் எல்லைகளைப் பூட்டிவிட்டு உணவுகளை எறியாதீர்கள், அது குண்டைவிடக் கொடியது" 

ஐ.நா பாதுகாப்பு சபையில் ஜோலி ஆற்றிய இந்த உரைக்குப் பின் ஐரோப்பாவில் சிரியா அகதி மக்கள் மீதான கரிசனப்பார்வை அதிகரித்தது. அதே கருத்துக்களை இப்போதும் நாம் மனதில் கொள்ள வேண்டும்!

- செந்தில் குமார்

சகோதரர் ஆதம் அலி நானா அவர்கள் காலமானார்.

கஹடோவிடயைச் சோ்ந்த சகோதரர் ஆதம் அலி நானா அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் சகோதரர் Fayas பயாஸ் அஹமட், அப்துர் ரஹ்மான்  ஆகியோரின் தந்தையும் ஆவார்.  ஜனாஸா நல்லடக்கம் இன்று (17.11.2015)  4.00 pm  மணியளவில் மஸ்ஜிதுன் நுாா் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار    இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

பாரிஸ் தாக்குதல்: சிரியாவை துண்டாடும் போருக்கு தயாராகும் பிரெஞ்சு வல்லாதிக்கம்

மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறும் பாரிஸ் பயங்கரம். பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது மக்கள் கொல்லப் பட்டனர். 13 - 14 நவம்பர் 2015, நள்ளிரவு நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு காரணமாக, பாரிஸ் நகரம் போர்க்களமாக காட்சியளித்து.
"இந்த தடவை, இது ஒரு யுத்தம்!" பிரெஞ்சு தினசரி Le Parisien  தலையங்கம் 

உதைபந்தாட்ட மைதானத்தில் கிரனேட் வீசப் பட்டது. கம்போடிய ரெஸ்டாரன்ட் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பலர் பலியானார்கள். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அரங்கு ஒன்றில் இருந்த பார்வையாளர்கள் தான் பெருமளவில் பலியாகி உள்ளனர்.

இசை நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் நுழைந்த ஆயுதபாணிகளை, நேரில் கண்ட சாட்சிகள் பல உள்ளன. முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டு, கருப்பு உடையணிந்து, AK-47 தானியங்கி துப்பாக்கிகளால் பதற்றப் படாமல், ஆறுதலாக சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். இடையிடையே மூன்று, நான்கு தடவைகள் ரவைக் கூடுகளை மாற்றினார்கள். நிலத்தில் படுத்திருந்த பார்வையாளர்களை, குருவி சுடுவது போன்று சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடந்த நேரத்தில், ஆயுதபாணிகள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை!

அதிகாலை வரையில், பிரெஞ்சு ஊடகங்கள், தாக்குதல் நடத்தியவர்களை பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை. இனந்தெரியாத ஆயுதபாணிகள் என்றே பிற ஐரோப்பிய ஊடகங்களும் தெரிவித்தன. இதற்கிடையே, ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள் சிலர், வழமை போல தமது இஸ்லாமிய விரோத பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.

வழமை போலவே, சில தமிழ் வலதுசாரிகளும் ஐரோப்பிய நிறவெறியர்களின் பிரச்சாரத்தை உள்வாங்கிக் கொண்டனர். அடுப்பு சட்டியைப் பார்த்து கருப்பென்று சொன்ன கதை இது. ஐரோப்பிய நிறவெறியர்கள் (தீவிர வலதுசாரிகள்), இஸ்லாமியருக்கு எதிராக மட்டுமல்ல, ஒட்டு மொத்த அகதிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில், அகதி முகாம்களுக்கு பலத்த பொலிஸ் காவல் போடப் பட்டுள்ளது.

பாரிஸ் தாக்குதலுக்கு முன்தினம், லெபனான், பெய்ரூட் நகரில் ISIS நடத்திய குண்டுத்தாக்குதலில், நாற்பது இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர். கடந்த ஐந்து வருடங்களாக நடக்கும் சிரியப் போரில், ISIS பயங்கரவாதிகளால் இலட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.

பாரிஸ் தாக்குதல் நடந்து பல மணி நேரமாகியும், யாரும் உரிமை கோரவில்லை. சமூக வலைத்தளத்தில் ISIS உரிமை கோரியிருப்பதாக, காலையில் யாரோ அறிவித்தார்கள். அதற்குப் பின்னர், சில நிமிடங்கள் கூடத் தாமதிக்காமல், பிரெஞ்சு அதிபர் ஹோலந்த் "இது ஒரு போர்ப் பிரகடனம்" என்று அறிவித்தார். ISIS கூட, "பாரிஸ் தாக்குதலானது பிரான்ஸ் மீதான போர்" என்று தான் அறிவித்திருந்தது. அதாவது, இரண்டு தரப்பினரும், வரிந்து கட்டிக் கொண்டு போரில் குதிக்கப் போகிறார்கள்.

சமீப காலமாக, ரஷ்யா தான் தனது பிரதான எதிரி என்று ISIS அறிவித்திருந்தது. எகிப்து, சினாய் பகுதியில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதற்கும், தாமே சுட்டு வீழ்த்தியதாக ISIS உரிமை கோரியது. அப்போது "விமானத்தில் குண்டு வைக்கப் பட்டிருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக...." பயமுறுத்திய மேற்குலக அரசுகள், தமது சுற்றுலா பயணிகள் எகிப்திற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தின.

"ரஷ்ய விமானத்தில் குண்டு இருந்தது தெரியும்" என்று அறிவித்துக் கொண்டிருந்த, அமெரிக்காவும், பிரிட்டனும், ISIS நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கவில்லை! இருநூறுக்கும் அதிகமான பயணிகள் பலியான போதிலும், எந்த நாடும் போர்ப் பிரகடனம் செய்யவில்லை. (ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை பிரான்ஸ், அமெரிக்கா ஆதரிக்கவுமில்லை.)

இப்போது எதற்காக ஒரு புதிய போர்?

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ISIS தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இழந்து கொண்டிருக்கிறது. வாரக் கணக்காக நடந்து கொண்டிருக்கும் ரஷ்ய விமானக் குண்டுத் தாக்குதல்களால், ISIS நிலைகுலைந்து போயுள்ளது. ISIS நிர்வகிக்கும் நடைமுறை (de facto) "இஸ்லாமிய தேசத்தின்" மேற்குப் பகுதிகளை சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு முன்தினம் தான், ஈராக்கில் உள்ள சிஞ்சார் மலைப் பிரதேசத்தை கைப்பற்றியுள்ளதாக, ஈராக்- குர்திஸ்தான் படையணிகள் அறிவித்தன. சிரியா - ஈராக் எல்லையோரம் அமைந்துள்ள சிஞ்சார் பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. குர்திய படைகள் அதைக் கைப்பற்றியதன் மூலம், ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் நடுவில் ஊடுருவி உள்ளது. மேலும், அடுத்ததாக எண்ணை வளம் நிறைந்த மொசுல் நகரை கைப்பற்றப் போவதாக, குர்திய படைகள் அறிவித்தன.

முன்னர் எப்போதும் இல்லாதவாறு, ISIS பலவீனமடைந்துள்ள நிலையில், இப்போது எதற்காக ஒரு புதிய போர்?

ISIS தனது பிரதான எதிரிகளான ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளை விட்டு விட்டு, எதற்காக பிரான்ஸ் மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்? அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற மேற்குலக நாடுகளால் உருவாக்கப் பட்ட இயக்கம் தான் ISIS. இதற்கான ஆதாரங்களை ஏற்கனவே பலர் எடுத்துக் காட்டி விட்டார்கள். விக்கிலீக்ஸ் கூட அது சம்பந்தமான இரகசிய ஆவணங்களை பிரசுரித்திருந்தது. மேற்குலகம் ISIS என்ற பூதத்தை எந்த நோக்கத்திற்காக உருவாக்கினார்களோ, அது நிறைவேறாமல் போய் விடும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

"அரேபியர்களுக்கு உலகில் பத்துக்கும் குறையாத நாடுகள் உள்ளன... தமிழனுக்கு என்றொரு நாடில்லை...!" என்று வலதுசாரி- தமிழ்த் தேசியவாதிகள் அடிக்கடி சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கு வரலாறு பற்றிய எந்த அறிவும் கிடையாது. உண்மையில், மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள் யாவும், ஐரோப்பிய காலனிய எஜமானர்களின் படைப்புகள் ஆகும். பிரிட்டிஷ் காலனி ஈராக் என்றும், பிரெஞ்சுக் காலனி சிரியா (மற்றும் லெபனான்) என்றும் பிரிந்தன. அதை நினைவுபடுத்தும் வகையில் தான் ISIS தனது இயக்கத்திற்கு பெயரிட்டுக் கொண்டது.

தற்போது, சிரியாவையும், ஈராக்கையும், மீண்டும் பிரிப்பதற்கான திட்டம் மேற்குலக கொள்கை வகுப்பாளரிடம் உள்ளது. காலனிய கால பிரித்தாளும் தந்திரம் மீண்டும் அரங்கேறுகின்றது. ISIS தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரதேசம் "இஸ்லாமிய தேசம்" என்று அழைக்கப் படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலர் அறியாத ஓர் உண்மை இருக்கிறது.

சிரியாவின் மேற்குப் பகுதியும், தெற்குப் பகுதியும் ஆசாத் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அங்கே ஷியா அல்லது அலாவி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களுடன் கிறிஸ்தவ சிறுபான்மையினரும் ஆசாத் அரசை ஆதரிக்கின்றனர். வடக்கில் குர்து மொழி பேசும் சிறுபான்மையினரின் பிரதேசம் உள்ளது. அதனை PKK-YPG போன்ற குர்திய இயக்கங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

மத்தியில் உள்ள "இஸ்லாமிய தேசம்", சுன்னி - முஸ்லிம் சமூகத்தினரின் தாயகமாக உள்ளது. அதாவது, இஸ்லாமிய தேசத்தினுள் சுன்னி முஸ்லிம்கள் மட்டுமே வாழ முடியும். கிறிஸ்தவர்களை மட்டுமல்ல, ஷியா, அலாவி முஸ்லிம்களை கூட, ISIS இனச் சுத்திகரிப்பு செய்து விரட்டி விட்டது. ஈராக்கிலும் அதே கதை தான். வடக்கில் குர்து மொழி பேசும் சிறுபான்மையினர். தெற்கில் ஷியா முஸ்லிம்கள். மத்தியில் சுன்னி முஸ்லிம்கள்.

பாரிஸ் நகரில் நடந்த தாக்குதலின் மூலம், ISIS தனது மேற்குலக எஜமானர்களுக்கு பேருதவி புரிந்துள்ளது. பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு, சில தினங்களுக்கு முன்னர், CIA தலைமை நிர்வாகி John Brennan பாரிஸ் வந்திருந்தார். அவர் தன்னைப் போன்று, பிரெஞ்சு புலனாய்வுத் துறையான DGSE தலைமையில் உள்ள Bernard Bajolet உடன் சந்தித்துப் பேசி உள்ளார். மொசாட் பிரதிநிதி ஒருவரும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது. (இந்தத் தகவல் பெல்ஜியத்தில் இயங்கும் பிரெஞ்சு மொழி இணையத் தளமான RTL info, 28 அக்டோபர் 2015 அன்று பிரசுரித்தது. ( http://www.rtl.be/info/monde/international/-le-moyen-orient-d-avant-ne-reviendra-pas--766109.aspx# )

"சிரியாவின் வரைபடம் இனி ஒருபோதும் முன்னரைப் போல இருக்கப் போவதில்லை..." என்று, புலனாய்வுத் துறை தலைவர்களின் உயர்மட்ட சந்திப்பின் போது Bernard Bajolet கூறினார். "தற்போது சிரியாவின் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே ஆசாத் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. வடக்கில் குர்தியர்கள் ஆட்சி செய்கிறார்கள். நாங்கள் சிரியாவின் மத்திய பகுதியை கைப்பற்ற வேண்டும்." என்று தெரிவித்தார்.

அனேகமாக, பிரான்ஸ் நடத்தப் போகும் புதிய போரானது, "இஸ்லாமிய தேசத்தை" தனி நாடாக்கும் போராக இருக்கலாம். அதற்கு இஸ்லாமிய தேசம் என்ற பெயர் இருக்க வேண்டுமென்றோ, அல்லது அதை ISIS தான் ஆள வேண்டும் என்றோ, எந்தக் கட்டாயமும் இல்லை. மேற்கத்திய வல்லரசுகள் புதிதாக உருவாக்கப் போகும், "ஜனநாயக ISIS கட்சி" அந்தப் பிரதேசத்தை நிர்வகிக்கலாம். எது எப்படி இருப்பினும், மத்திய கிழக்கின் வரைபடம் மாற்றியமைக்கப் படவுள்ளது என்பது மட்டும் நிச்சயம்.

http://www.kalaiy.blogspot.nl/

ஷாபி ஆசிரியர் அவா்கள் காலமானாா்.

அல்பத்ரியா ம.வி முன்னால் அதிபரும், நாம் கல்வி கற்ற ஆசிரியர்களில் ஒருவருமாகிய ஷாபி மாஸ்டர் அவா்ள் இன்று காலமாகியுள்ளார். அன்னாா் அஸ்ஹர் ஆயிரியர் அவா்களின் அன்புத் தந்யையும் அவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 11.00 மணியளவில் கஹடோவிட முகியத்தீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

//// "அறங்காத்த இஸ்லாத்தின் தரங்காத்த மாணவராய் , ஒழுங்கேற்ற வாழ்வமைத்தெம் வருங்காலம் ஒளி பெறவே , அல்லாஹ்வின் புகழ் பாடுவோம் " பாடசாலை கீத வரிகள், எத்தனையோ மாணவரகளின் வாழ்வை ஒளிரச்செய்த வரிகள். இன்று.....அந்த வரிகளுக்கு உரியவர். வப்பாத்தாகி விட்டார்கள். மதிப்புக்குரிய அதிபர், புலவர், ஷாபி ஹாஜியார் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக./// facebook post..



  َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار    

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

சிறப்பான வரலாற்றுத்தகவல்.

இங்க ரெண்டு படங்கள் இருக்கு...
முதலில் உள்ளது மன்னர் சுல்தான் சலாகுதீன் அய்யூபி அவர்கள் ஜெருசலத்தை கிருத்துவ மன்னர்கள் பிடியில் இருந்து மீட்ட பிறகு, முதன்முதலாக அங்கிருக்கும் பள்ளிவாசலின் வளாகத்துக்குள் அவர் நடக்கையில், அங்கு கிருத்துவர்களால் அந்த தரையில் பதிக்கப்பட்டு இருந்த சிலுவை பொரித்த கல்லை மிதிக்காமல் சற்று விலகி நடந்து சென்றார்கள்..!
இரண்டாவது அமெரிக்காவில் ஹாலிவூட், ஹால் ஆப் பேம் என்னும் இடத்தில் பிரபலமானவர்கள் பெயர்கள் தரையில் பதிக்கப்படும், அங்கு குத்துச்சண்டை வீரர் முகமது அலி அவர்கள் பெயரை மட்டும் தரையில் பொரிக்காமல் அந்த கல்லாய் மட்டும் சுவற்றில் பதித்துள்ளனர். ஏனெனில் அவரது பெயரில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பெயர் வருவதால்..!
இரண்டும் வேறு வேறு காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள். ஆனால் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. அரபியும் வெள்ளைக்காரனும் இத்தனை சகிப்புத் தன்மையோடு வாழ்கையில், உலகத்துக்கே கலாசாரத்தை போதிக்கும் நம்மால் சகோதரத்துவத்துடன் வாழ முடியாதா என்ன..? பொய்யை பரப்பி நமக்குள் சண்டை மூட்டும் ஒவ்வொருவனையும் ஒதுக்கிவிட்டு...
...நாம் ஒன்றாவோம்; எல்லாம் மாறும்..!
முகநூல்

தலித் குழந்தைகள் உயிரோடு எரிப்பு, ஒட்டுமொத்த கிராமமும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவிப்பு..!

 'தலித் குழந்தைகள்' உயிரோடு எரிப்பு :

ஒட்டுமொத்த கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவிப்பு..!

'உயர்ஜாதி'யினரின் தாக்குதலை விட்டு தப்பிக்க 'இஸ்லாம்' தான் ஒரே தீர்வு..!!

'பரீதாபாத்' கிராம மக்கள் முடிவு...!!


The arson in Sunped village of Faridabad has created fear among people, especially the lower caste community, in the adjoining villages. Due to the continuous threat posed by upper castes, a section of people from the lower caste have expressed their desire to convert to Islam.

"The upper caste people used to humiliate us over petty incidents like pulling out a mobile phone from the drain. They would often threaten and dishonour us and also the women from our community. We do not feel secure as the current government has failed to protect our pride. We have no other option than to convert to Islam," said Rohtash, a villager.

"At least we know few leaders who represent the minority community. There is no leader for the lower caste here," Rohtash added.

Villagers have demanded that Faridabad police commissioner Subhash Yadav be sacked as he has failed to control the law and order situation.

"The district police and local administration have ignored us and our complaints," alleged another villager Ramesh Kumar.

In adjoining Asawati village, a teenage girl was abducted by an upper caste youth and was later found unconscious in UP's Bulandshahr district. Despite a complaint of sexual assault at the Ballabhgarh police station, cops dismissed the matter saying that the girl had eloped with her boyfriend.

"One of the reasons behind the police apathy is the majority of the upper caste people. Sunped village has a population of 1,400 with 75 per cent belonging to the upper caste community. They have strong political connections with local leaders," said another villager Sunil Kumar.

jaffnamuslim

அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்துள்ளதனால் கஹட்டோவிட்டாவின் பிரதான பாதை நீரில் மூழ்கியுள்ளது

அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்துள்ளதனால் கஹட்டோவிட்டாவின் பிரதான பாதை நீரில் மூழ்கியுள்ளது.

இதனால், கஹட்டோவிட்டா ஊடாகச் செல்லும் வேயாங்கொட – கிரிந்திவெல பிரதான பாதையின் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து பெய்து வரும் அடைமழையினால் நேற்றிரவு இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கஹட்டோவிட்டாவின் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் சுமார் ஐம்பது குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, உடுகொட, ஓகொடபொல, திஹாரிய பிரதேசங்களிலும் தாழ் நிலப் பிரதேசங்கள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
Dailycelyon.

முஸ்லிம் என்றால்..!

முஸ்லிம் நாணயமானவனாக இருப்பான் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பான் அவனுக்கு இறைவன் தடுத்த வற்றை ஒரு போதும் எடுக்க மாட்டான் அவன் கஸ்றத்தில் இருந்தாலும் நஸ்டத்தில் இருந்தாலும் அமானிதங்களை பேணகுடியவனாக இருப்பான் அடுத்தவன் பொருளுக்கு ஆசை படாதவனாக இருப்பான்.

சிரிய முஸ்லிம்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு சென்று குடியேறி வருகின்றனர் அகதிகளாக செல்பவன் குபேரனாக இருக்க வாய்பில்லை சிரிய அகதிகளில் பலர் அன்றாட உணவு தேவைகளுக்கே சிறம படுகின்றனர்

இந்த சிறமம் நிறைந்த சூழலிலும் அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடாத 

தனக்கு தேவைகள் இருந்தாலும் அமானிதத்தை ஒப்படைக்க தவறாத ஒரு ஒப்பற்ற சகோதிரியை தான் படத்தில் பார்கின்றீர்கள்


ஆம் அந்த சகோதிரிய சிரியாவிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மனுக்கு அகதியாக வந்தவர்

அவர் வீதியில் நடந்து செல்லும் போது ஒரு மணிபர்சை கண்டு எடுக்கிறார்

அந்த பர்சை திறந்து பார்த்த போது அதர்கும் 1000 யூரோக்கள் இருப்பதை காண்கிறார் அவரது நிலைக்கு 1000 யூரோ அல்ல 10000 யூரோக்கள் இருந்தாலும் அவருக்கு தேவை இருக்கிறது நமக்கு தேவை இருந்தாலும் இது நமக்கு உரியது அல்ல என்பதை தெழிவாக உணர்ந்து மொழி தெரியாத நிலையிலும் அந்த பர்சில் இருந்த முகவரியை பிறரின் உதவியோடு படித்து தெரிந்து உரியவலை நாள் முழுவதும் தேடி அலைந்தார்

அவரால் பர்சுக்கு சொந்த காரரை சென்று அடைய முடியவில்லை

மறு நாள் விடிந்ததும் இஸன் நகர காவல் நிலையத்தை தேடி செல்கிறார் அங்கிருந்த காவலரிடத்தில் தான் வீதியில் கண்டெடுத்த பர்சை பணத்தோடும் முகவரியோடும் ஒப்படைக்கிறார் உரியவரை தேடி ஒப்படைக்குமாறு வேண்டுகிறார்

அந்த சகோதிரியின் நாணயத்தையும் அமானிதத்தையும் கண்ட காவலர்கள் அதிசயித்தனர் அவருக்கு சன்மானம் கொடுக்க முன் வந்தனர் அவர்கள் வழங்க விரும்பிய அன்பளிப்பை பெற்று கொள்ள விரும்பாமலேயே தனது கடமையை செய்து முடித்த மன நிறைவோடு அந்த சகோதிரி திரும்பி சென்றார்

இஸன் நகர காவல் துறை தமது அதிகார பூர்வ இணைய தளத்தில் அந்த சகோதிரியின் புகைபடத்தை பதிவிட்டு மகிழ்ந்தனர்
அதை தான் நீங்கள் பார்க்கின்றீாகள் 
Jaffnamuslim

நடைபாதை கடையில் பிள்ளைக்கு பொருட்கள் வாங்கும் பாராளுமன்ற உறுப்பினர்…

இலங்கை , இந்தியா போன்ற நாடுகளில் அரசியல்வாதி, அதுவும் நாட்டை ஆளும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்றால் அவரின் ஆடம்பர வாழ்க்கை தான் எமக்கு நினைவுக்கு வரும்.. சிறு பொருள் ஒன்றை கொள்வனவு செய்ய, செல்லப்பிரானிக்கு மருந்தெடுக்க வெளிநாட்டுக்கு பறந்தவர்கள் என முந்தைய பல ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் அவ்வாறு பந்தாவாக இருந்ததே அதற்கு காரணம்,
01ஆனால் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வரும் சில மாற்றங்களால் பாராளுமன்ற உறுப்பினர் முதற்கொண்டு நாட்டின் தலைவன் வரை எளிமையாக பல சந்தர்ப்பங்களில் நடந்து கொள்வதை நாம் சமூக வலைகள் ஊடாக அவதானித்தும் வருகிறோம்..
அதன் ஒரு காட்சியாக JVP பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி அவர்கள் நடை பாதை கடையொன்றில் தன பிள்ளைக்கு விளையாட்டு சாமான்களை (முன்பள்ளியில் சிறுவர் தின நிகழ்வுக்கு தேவையான பொருட்கள்) கொள்வனவு செய்தது புகைப்படமாக சமூக வலைகளில் வெளியாகி பலரை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
JVP கட்சி ஏற்கனவே எளிமைக்கு பெயர்போன ஒரு கட்சி என்ற நிலையில் இந்த புகைப்படங்கள் அதனை மேலும் உறுதி செய்கின்றன.
02 (1)
03
04

சகோதரி உம்மு ஸபீலா காலமானார்

கஹட்டோவிடாவைச் சோ்ந்த காலம் சென்ற ரசீத் ஆலிமின் மனைவி உம்மு ஸபீலா(வயது 93) அவா்கள் இன்று (29.09.2015) காலமானார். அன்னாா் காலம் சென்ற அரச அதிகாரி கோதரா் தஹ்லான் சகோதரா் ஸாபித், சகோதரா் ஜாபிா் ஆகியோரின் அன்புத் தாயாரும் , ஓய்வுபெற்ற கிராம அதிகாரி ஜனாப் ஜௌபா் அவா்களின் மாமனாருமாவாா். கையடக்கத் தொலைபேசி திருத்துனா் நளீம், சகோதரா் சினான், சகோதரா் சப்னி, சகோதரா் ரஸான், சகோதரா் ரினாஸ், சகோதரா் ருமைஸ் ஆகியோரின் வாப்பும்மாவார். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3.30 மணியளவில் கஹட்டோவிட முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

”எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பா்ஸகுடைய வாழ்வை சிறப்பனதாக ஆக்கி வைப்பானாக!. அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் நல்குவானாக!” 

சகோதரர் பஷீர் அவர்கள் காலமானார்.

கஹடோவிடயைச் சோ்ந்த சகோதரர் பஷீர் நானா அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் இலியாஸ் மாஸ்டர் அவர்களின் சகோதரரும். சகோதரர் இம்தியாஸ் அவர்களின் தந்தையும், அல்பத்ரியா ம.வி முன்னால் அதிபர் ரிஸான் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.  ஜனாஸா நல்லடக்கம் நாளை (26.09.2015)  முகியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

திருத்தம்
ஜனாஸா நல்லடக்கம் நாளை 26.09.2015 காலை 11.30 மணியலவில் மஸ்ஜிதுன் நூர் மையவாடியில் நடைபெறும்.


  َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار   

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

கஹடோவிட ஜாமிஉத் தௌஹீத் நபி வழிப் பெருநாள் தொழுகை

வழமைபோன்று புனித ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகை நபி வழியில் கஹடோவிட அல்பத்ரியா ம.வித்தியாலய மைதானத்தில் பள்ளிவாசலின் இமாம் மௌலவி மஸ்ஊத் (ஸலபி) தலைமையில் நடைபெற்றது.

மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய மௌலவி மஸ்ஊத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையில் இருந்து இரண்டு படிப்பினைகளை எடுத்துக்காட்டினார்.
அதில் வாலிபர்கள் தமது ஆயுளை மார்க்கத்துக்காக அர்ப்பணிக்க வேண்டிய படிப்பினையை விரிவாக விளக்கினார். அத்துடன் குழந்தை வளர்ப்புக்கு முன்னுதாரணமாக எப்படி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் திகழ்தார் என்பதையும் எடுத்துக்காட்டினார். வழமைபோல் பெரும்திரளான ஊர்மக்கள் திரண்டிருந்ததனனை காணக்கூடியதாக இருந்தது.

கௌரவ அரஜுன ரணதுங்க அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.

කහටෝවිට මුස්ලිම් බාලිකා විද්‍යාලයේ තෙමහල් ගොඩනැගිල්ලට අමාත්‍ය අර්ජුන රණතුංග මහතා මුල්ගල තැබීමේ උත්සවය- 2015/09/16


ජාත්‍යන්තරය හා සැසඳෙන අධ්‍යාපන ක්‍රමවේදයක් අපේ රටට අවශ්‍ය බව ගරු වරාය සහ නාවික අමාත්‍ය අර්ජුන රණතුංග මැතිතුමා පවසයි. ඒ සඳහා අධ්‍යාපන ක්‍රමවේදයේ පවතින අඬුලුහුඩුකම්වලට වහා පිළියම් යෙදිය යුතු බවද අමාත්‍ය අර්ජුන රණතුංග මැතිතුමා කියා සිටී. එතුමා මේ බව අද (19) ප්‍රකාශ කළේ කහටෝවිට මුස්ලිම් බාලිකා විද්‍යාලයේ නව තෙමහල් ගොඩනැගිල්ලට මුල්ගල තැබීමේ උත්සවයට එක්වෙමිනි.

“මෛත්‍රීපාල සිරිසේන ජනාධිපතිතුමාගේත්, රනිල් වික්‍රමසිංහ අගමැතිතුමාගේත් පැහැදිලි දර්ශනයක් තියෙනවා මේ රටේ අධ්‍යාපනය දියුණු කරන්න. පසුගියකාලේ දේශපාලනීකරණය වී තිබුණු අධ්‍යාපනය වෙනස් කරලා ජාත්‍යන්තරයේ ඕනම තැනකට යා හැකි අධ්‍යාපන ක්‍රමයක් ඇති කරන්න මේ දෙපළ එකතු වෙලා ඉන්නවා. පසුගිය කාලේ අධ්‍යාපනයට ඉතාම සුළු මුදලක් වෙන්කරලා තිබුණේ. නමුත් අපි ආණ්ඩුව භාරගත්තට පස්සේ තීරණයක් අරන් තියෙනවා අධ්‍යාපනය වෙනුවෙන් වියදම් කරන මුදල රජයෙන් වැඩි කරලා අවශ්‍ය පහසුකම් ගමේ සිටින දරුවන් වෙනුවෙන් ලබාදෙන්න. දැන් වනවිට අධ්‍යාපන ක්‍රමවේදය වෙනස් වියයුතු කාලයක් ඇවිත් තියෙනවා. අද ජාත්‍යන්තරයට යා හැකි ජාත්‍යන්තරය හා එකට ගැටෙමින් ඉදිරියට මහුණ දිය හැකි ක්‍රමවේදයක් මේ රට තුළ ඇති විය යුතුයි. ඒ සඳහා දැන් පවතින අධ්‍යාපන ක්‍රමය වෙනස් කරන්නට අලුත් ආණ්ඩුව බලාපොරොත්තු වෙනවා.....” යැයිද මෙම උත්සවයේදී අමාත්‍ය අර්ජුන රණතුංග මැතිතුමා පැවසීය.
කහටෝවිට මුස්ලිම් බාලිකා විද්‍යාලය ආරම්භ කළේ 1954 වර්ෂයේදී එස්.ඩබ්.ආර්.ඩී බණ්ඩාරනායක ශ්‍රීමතාණන්ගේ අනුග්‍රහයෙනි. සාමාන්‍යපෙළ දක්වා ඉගෙනුම් කටයුතු සිදු කෙරෙන මෙම පාසලේ දැනට ශිෂ්‍යාවෝ 1000කට ආසන්න සංඛ්‍යාවක් අධ්‍යාපනය හදාරති. ඉදිරියේදී උසස් පෙළ සඳහා වූ පහසුකම් මෙම පාසලට ලබා දීමටද අමාත්‍ය අර්ජුන රණතුංග මැතිතුමාගේ අවාධානය යොමු වී තිබේ. අර්ජුන රණතුංග අමාත්‍යතුමා අවධාරණය කරන්නේ ගමේ පාසල් දියුණු කිරීමෙන් නගරයේ පාසල්වල තදබදය අවම කර ගත හැකි බවයි. කහටෝවිට මුස්ලිම් බාලිකා විද්‍යාලය නව තෙමහල් ගොඩනැගිල්ලට මුල්ගල තැබීමේ උත්සවයට කුවේට් රාජ්‍යයේ තානාපති යෙකූබ් යුසෙෆ් අල් අතීක් මහතාද එක්විය







இன்று பாலிகா மகளிா் பாடசாலையில் மூன்று மாடிகளாக அமையவுள்ள கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் எடுக்கப்பட்ட சில நிழல்படங்கள்.

பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்த நிகழ்வில் விசேட அதிதிகளாக குவைட் மற்றும் கதார் பிரதிநிதிகளும். இவர்களுடன் கப்பல் துறைமுகங்கள் அமைச்சர் அரஜுன ரணதுங்கவும் கலந்து சிறப்பித்திருந்தனர்.