கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிட ஜாமிஉத் தௌஹீத் நபி வழிப் பெருநாள் தொழுகை

வழமைபோன்று புனித ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகை நபி வழியில் கஹடோவிட அல்பத்ரியா ம.வித்தியாலய மைதானத்தில் பள்ளிவாசலின் இமாம் மௌலவி மஸ்ஊத் (ஸலபி) தலைமையில் நடைபெற்றது.

மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய மௌலவி மஸ்ஊத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையில் இருந்து இரண்டு படிப்பினைகளை எடுத்துக்காட்டினார்.
அதில் வாலிபர்கள் தமது ஆயுளை மார்க்கத்துக்காக அர்ப்பணிக்க வேண்டிய படிப்பினையை விரிவாக விளக்கினார். அத்துடன் குழந்தை வளர்ப்புக்கு முன்னுதாரணமாக எப்படி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் திகழ்தார் என்பதையும் எடுத்துக்காட்டினார். வழமைபோல் பெரும்திரளான ஊர்மக்கள் திரண்டிருந்ததனனை காணக்கூடியதாக இருந்தது.

0 comments:

Post a Comment