கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கட்டாரில் இயங்கி வரும்கஹட்டோவிட்ட கல்வி அபிவிருத்தி நலன்புரிச்சங்கம் மூலம் போட்டோகொபி இயந்திரம் அன்பளிப்பு.

அல் ஹம்துலில்லாஹ் கஹட்டோவிட்ட அல்பத்ரியா ம.வித்தியாலயத்துக்கு கட்டாரில் இயங்கி வரும்கஹட்டோவிட்ட கல்வி அபிவிருத்தி நலன்புரிச்சங்கம் மூலம் போட்டோகொபி இயந்திரம் அன்பளிப்பு.
மேற்படி நிகழ்வு இன்று 28.03.2016 திங்கட்கிழமை பாடசாலை காலைக்கூட்டத்தில் வைத்து கட்டாரில் இயங்கி வருகின்ற KESQ சங்கத்தின் அங்கத்தவர்களால் வழங்கிவைக்கப்பட்டது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பூ நானா அவர்கள் இந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அல்ஹாஜ் ஜிப்ரி,அல் ஹாஜ் வபா போன்றவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்ததோடு இந்த அன்பளிப்பு கட்டாரில் வசிக்கும் கஹட்டோவிட்ட வாழ் மக்களின் ஒன்றிணைந்த நன்கொடையாகும் இது இவர்களின் சிந்தனையில் இருந்த நீண்ட கால திட்டமாகும் எனவும் குறிப்பிட்டதோடு அந்த சங்கத்தின் கணக்காளராக பணிபுரிந்த அல் ஹாஜ் அன்ஸர் அவர்களுக்கும் இது செவ்வனே வந்தடைய உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் அல்லாஹ் அனைவருக்கும் நல்லருள் புரியவேண்டும் எனவும் பிரார்த்தித்து கொண்டதுடன். இந்த போட்டோகொபி இயந்திரத்தை உபயோகிப்பதில் சில விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும் கடைப்பிடித்து மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்படும் வண்ணம் உபயோகிக்குமாறும் அறிவுரை கூறுகிறோம் என்றும் தனதுரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை நலன்புரி சங்க அங்கத்தவர்கள் மற்றும் ஊர்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

குறிப்பு
ஏற்கனவே அல்பத்ரியா ம.வி அவசரமாக தேவைப்படும் வேலைகளை நாம் பட்டியலிட்டு உங்களுக்கு அறியத்தந்தோம் அந்த தேவைபட்டியலில் 8.ஆவது தேவையில் ஒன்றாகிய போட்டோகொபி் இயந்திரத்தினை கட்டார் கல்வி முன்னேற்ற சங்கத்தின் மூலம் நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும் இது போல இன்னும் குறிப்பிட்ட தேவைகளை செய்துகொடுத்தால் அதுவே உங்கள் பாடசாலைக்கு நீங்கள் செய்யும் பேருபகாரமாகவும்,கல்வி மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்தவர்களாகவும் மாற முடியும். ஆகவே உங்களால் முடிந்த உதவிகளை செய்து கொடுக்க இன்றே முயற்சிசெய்யுங்கள் நிச்சயம் அது வீண்போகாது.
எமது பாடசாலை அதை நாமே வளப்படுத்துவோம்.

சகோதரர் தாஸீம் அவர்கள் காலமானார்.

கஹடோவிடாவைச் சேர்ந்த சகோதரா் தாஸீம் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் சைராஸ், ஸப்ரான், ரம்ஸானியா, பானு ஆகியோரின் அன்புத் தந்தையாவார். நல்லடக்கம்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (2016.03.28)  கஹடோவிட  முஹியத்தீன் ஜும்ஆ மையவாடியில் நடைபெறும்.


  َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار  

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

உடுகொடையைச் சேர்ந்த நிஷாட் ஆசிரியர் காலமானார்.

கண்டியைப் பிறப்பிடமாகவும், உடுகொடையை வசிப்பிடமாகவும் கொண்ட சகோதரர் நிஷாட் ஆசிரியர் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் உடுகொட அரபா மகாவித்தியாலய ஆசிரியை நூர்ஸைஹா அவர்களின் அன்புக் கணவரும், கஹடோவிட அல்பத்ரியா ம.வ ஆசிரியை நஹ்ஜா, ஆசிரியைகளான நூருல் ஜென்னா, அமீருன்னிஸா மற்றும் ரோஷான் ஆகியோரின் மைத்துனரும், பாதிமா நதா, மொஹமட் சம்மர் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.



.  َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار  

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

எமது ஊரைச் சேர்ந்த சகோதரர் ஜலால்தீன் அவர்களின் இதயமாற்று சத்திரசிகிச்சைக்கான நிதியுதவி கோரல்.

சகோதரர்  ஜலால்தீன் அவர்களின் இதயத்தில்  பைபாஸ் அறுவை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக சுமார் ஆறு இலட்சம் ( 600,000)  ரூபா தேவைப்படுவதாக அறியக்கிடைக்கிறது. இதனை திரட்டும் முயற்சியில் தற்போது குடும்ப உருப்பிணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! "இறைவா! (இன்னும் கொஞ்சம்) குறைந்த காலலமாவது எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே" என்று அப்போது (மனிதன்) கூறுவான். (அல்குர்ஆன் 63:10)

தங்களால் முடிந்த உதவியை கொடுத்து இறை திருப்தியைப் பெற்றுக் கொள்ளுமாறு எமது இணையம் சார்பாக வேண்டுகிறோம். 

தொடர்புகளக்கு  0775784400

உதவிகளுக்கு 
A/C No.8650008691
Commercial Bank
Nittambuwa Branch 



வெளியாகியுள்ள O/L பரீட்சையில் அல் பத்ரியாவின் சிறந்த பெறு பேறாக 9 A

வெளியாகியுள்ள 2015ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தாரதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் எமது ஊர் பாடசாலைகளான அல்பத்ரியா மற்றும் பாலிகா இரு பாடசாலைகலும் சிறந்த பெறுபேறுகள் பெற்றுள்ளன.


எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்திலிருந்து தோற்றிய மாணவ, மாணவிகளில் சிறந்த பெறு பேறாக 9 A (அதி விசெட சித்திகள்) ஒரு மாணவி பெற்றுள்ளதாகவும்,  அதேபோன்று 8A, 6A, பேன்ற இன்னும் பல சிறந்த பெறுபேறுகள் கானப்படுவதாகவுதம் தகவல்கள் அறியக்கிடைக்கிறன.

எமது அயல்கிராமமான உடுகொட அரபாவித்தியாலயத்திலும் ஒரு மானவி 9A அதிவிசேட சித்திகள் பெற்றுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றன. 

இஸ்லாம் என்னை மாற்றியது - தென் ஆப்பிரிக்க வீரர்

ஜோஹன்ஸ்பெர்க்: தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல்இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகுஇம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாகபர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்றுகொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார்.தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும்எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்கநினைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும்அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன்முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென்ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தைமதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமைஎன்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர்முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும்இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லாமற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.
இது குறித்துகருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில்தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும்அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும்ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும்அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாகவிளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் மதுபரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர்நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரைஅறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர்
என்றனர்.
2006ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்குமாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட்வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது

அவதானம்..! உங்கள் அந்தரங்கள் வெளிச்சத்துக்கு வரும் அபாயம் (Hide Camera)

பெண்கள் மற்றும் தம்பதிகள் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கமரா மூலம் உங்கள் அந்தரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதை தடுக்க புதியமுறை உங்களுக்காக ......!!

முதலில் அறைக்கு வெளிச்சம் வராமல் அறைக்கதவு,ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் கையடக்க தொலைபேசியில்  உள்ள கமராவை ஆன் செய்யுங்கள், மேலும் கையடக்க தொலைபேசியில்   புகைப்படம் எடுக்கும்போது வரும் flash வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள்.

இப்போது புகைப்படத்தை கவனியுங்கள். ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்.. இதைவைத்து அறையினுள் இரகசிய கேமரா பொருந்தியுள்ளதை அறியலாம்.
virakesari

பூசாரியிடம் சிகிச்சைக்கு சென்ற பெண் மரணம்

பூசாரி ஒருவரிடம் சிகிச்சை பெற சென்ற பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அனுராதபுரம் கடுகெலியாவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.....
இவ்வாறு உயிரிழந்தது அனுராத புரம் - நெல்லிகுளம் பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாவார்.

இவர் தனது கணவனுடன் நேற்று குறித்த பூசாரியிடம் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக கடுகெலிய பிரதேசத்தில் அமைந்துள்ள பூசாரியின் வீட்டிற்கு சென்றிருந்தார்.

அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு சிகிச்சையளிக்கும் போது அவருக்கு மிகுந்த கஷ்டங்கள் ஏற்படுத்தப்பட்டதாக அவரது கணவர் தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து குறித்த பெண்ணிற்கு தேசிக்காய் ஒன்றை விழுங்க வைத்துள்ள நிலையில் , இதன் போது அந்த பெண் மயக்கமுற்றுள்ளார் .

மயக்கமுற்றவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முற்பட்டுள்ள போது அதனை குறித்த பூசாரி தடுத்துள்ளதாக அவரது கணவர் தெரிவித்தார்.

எனினும் , இன்று காலை குறித்த கணவரால் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . எவ்வாறாயினும் மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த பூசாரி மற்றும் மேலுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் காவற்துறையினர் மேற்கொள்கின்றனர்.

சகோதரர் முனாஸ் அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

காலம் சென்ற மஹ்மூத் அவர்களின் அன்பு மகன் முஹம்மத் முனாஸ் காலமானார். அன்னார் ஸித்தி பரீதாவின் அன்புக்கணவரும், நப்லான், பர்வீன், நைலா ஆகியோரின் அன்புத் தந்தையும், பாயிஸ், அல்ஹாஜ் இர்ஷாத் ஆகியோரின் மாமனாரும், அமீா், ஸுபைர், நவாப், பரீதா ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 911.03.2016) பிற்பகல் 4.00 மணியளவில் முஹியத்தீன் ஜும்ஆ மையவாடியில் நடைபெறும்.

 َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار   

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

சுத்திகரிப்பாளராக தொழிலை ஆரம்பித்த NO LIMIT உரிமையாளரின் மனதுதிறந்த பேட்டி (தமிழ்வடிவம்)

NOLIMIT உரிமையாளர் N.L.M. முபாறக்

நேர்காணல்: இனோகா பெரேரா பண்டார
தமிழில்: ஒகொடபொல றினூஸா

காத்தான்குடியில் இருந்து கொழும்பு சாஹிறாக் கல்லூரிக்கு வரும்போது இவர் ஒரு சிறிய பையன். எனினும் காத்தான்குடியில் இருந்து முதன்முறையாக சவூதி அரேபியாவுக்குச் செல்­கின்றபோது இவர் வலிமைமிக்க ஓர் இளைஞர். வர்த்தக அறிவும், மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கும் இயல்பும் இவருடன் கூடவே பிறந்த திறன்களாகும். பெஷன் தொடர்பில் எழுந்த ‘காய்ச்சலால்’ முதிர்ச்சியடைந்து சாதித்தவரான N.L.M. முபாறக், ஒரு புதுமையான மனிதர். NOLIMIT மற்றும் Glitz தோன்றியது இந்தப் புதுமையான மனிதரிடத்திலிருந்தே. இந்த வடிவமைப்பாளரிடமிருந்தே.

மிகவும் பரந்தளவிலான வாடிக்கையாளர் வலையமைப்பொன்றைக் கொண்டிருந்தபோதிலும்,  ஒருபோதும் இவர் பொது மக்கள் முன்னி­லையில் தோன்றியதில்லை. முதன் முறையாக அந்தக் கொள்கையைத் தகர்த்து இவர் உங்களைச் சந்திக்க வந்துள்ளார்.

நீங்கள் இந்த நாட்டில் பரந்த பெஷன் வலையமைப்பை உருவாக்கிய வர்த்தகர்?
வர்த்தகர் என்று சொல்வதைவிட தொழில் முயற்சியாண்மையாளர் என்று அறிமுகப்படுத்துவதையே நான் விரும்புகின்றேன். ஏனெனில் வர்த்தக நோக்கங்களைக் கடந்த மிகச் சிறந்த நோக்கங்கள் NOLIMIT இற்குள்ளும் என்னுள்ளும் இருக்கின்றன.  NOLIMIT என்­பது இன்று வளர்ந்து வருகின்ற வர்த்தகர்களுக்கு முன்மாதிரியான ஒன்றாகும். அவர்களுக்கு முன்மாதிரி ஒன்றை வழங்குகின்ற தொழில் முயற்சியாண்மையாளராகவும் தொழிலதிபராகவும் என்னை நான் காண்கின்றேன்.

நீங்கள் எவ்வாறு அப்படிக் கூறுவீர்கள்?
எனக்கு இருப்பது பெஷன் குறித்த ‘காய்ச்சல்’. இது என்னுடனேயே ஒன்றிப் பிறந்தது. இந்தக் காய்ச்சல் காரணமாக நான் பெஷன் பற்றி நிறையவே சிந்திக்கின்றேன். வர்த்தகக் கருத்தேற்புக்களை (Business Concepts) உருவாக்குகின்றேன். அதன் மூலம் தொழில்வாய்ப்­புக்களை ஏற்படுத்துகின்றேன். நான் இந்த நாட்டில் சில்லறை வணிகத் துறையை (Retail Industry) மாற்றியமைத்து அதற்குப் புதிய­தொரு வடிவத்தைக் கொடுத்தேன்.

நீங்கள் இந்நாட்டில் எந்தளவு எண்ணிக்கையான தொழில்வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளீர்கள்?
கடந்த 24 வருட காலத்தினுள் நாம் இந்த நாட்டின் சில்லறை வணிகத் துறையில் 10,000 இற்கும் அதிகமான தொழில்வாய்ப்புக்களை ஏற்ப­டுத்தியுள்ளோம். சிலவேளை இதனைவிட அதிகமாகவும் இருக்கலாம். பாடசாலையை விட்டுவிலகிய இளைஞர்களை உள்வாங்கி, அவர்­களுக்குச் சிறந்ததொரு பயிற்சியை வழங்கி, அவர்களின் நடையுடை பாவனை மற்றும் மனப்பாங்கு என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி­யுள்ளோம்.  அவ்வாறு உருவாகியவர்களுள் பலர் இன்று நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகின்ற விதத்தில் சர்வதேச ரீதியில் பணியாற்றுகின்றனர். NOLIMIT இல் பணியாற்றியதாகச் சொன்னவுடன் அவர்களுக்கு இன்று சர்வதேசத்தில் பாரிய வரவேற்புக் கிடைக்­கின்றது.

உங்களது பெஷன் வலையமைப்பில் தொழில்வாய்ப்புக்கள் முஸ்லிம் இனத்தவர்களுக்கு மாத்திரமா?
இது சகல இனங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்ற ஓரிடம். நூற்றுக்கு, ஐம்பது – ஐம்பது வாய்ப்புக்கள் அவர்க­ளுக்கும் உள்ளது. நான் தொழில்வாய்ப்புக்களை வழங்குவது இலங்கையர்களுக்கு. எமது வாடிக்கையாளர்களுள் பல்வேறுபட்ட வர்க்­கத்தைச் சார்ந்தவர்களும் உள்ளனர். அதேபோன்றுதான் எமது பணியாட்தொகுதியினரும்.

உங்களது வர்த்தகத்தின் நோக்கம் என்ன?
எந்தவொரு வர்த்தகருக்கும் மேலிருந்து கீழ் வரை (top to bottom) குறிப்பான கவனக்குவிவொன்று இருக்க வேண்டும். அதனூடே வாடிக்­கையாளர் மகிழ்ச்சியடைய வேண்டும். இறுதியில் மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். NOLIMIT இல் இருப்பது முற்றிலும் மகிழ்ச்­சியை அடிப்படையாகக் கொண்டமைந்த இத்தகையதொரு குறிக்கோளே.

சில நிறுவனங்களில் வாடிக்கையாளர் மீது கோபத்துடன் இருப்பதைப்போல் பெண் விற்பனையாளர் (Sales Girl) பதவியி­லுள்ள யுவதிகள் இருக்கின்றனர். இது சில்லறை வணிகத் துறையின் இயல்பா…
இல்லை. ஏதேனுமொன்றைக் கொள்வனவு செய்தாலும், செய்யாவிடினும் வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சியுடன் உதவுவதுதான் சில்­லறை வணிகத் துறையின் ஒழுக்க நெறியாகும். NOLIMIT பணியாளர்களும் அவ்வாறுதான். எமது நிறுவனத்தில் உயர்மட்டத்திலி­ருந்து அடிமட்டம் வரையான அனைத்துப் பணியாட்தொகுதியினரும் இத்தகைய மகிழ்ச்சியுடன் வேலை செய்யும் உளக்கருத்துக்கு இயை­பாக்கம் அடைந்தவர்களேயாவர். தனது உயரதிகாரி இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி அவர்கள் இதயசுத்தியுடன் பணியாற்றுவர். எமது முன்னேற்றமும் அதுதான்.

பணியாளர்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதென்பது இலகுவாக அமைந்ததா?
வாழ்க்கையின் பழக்கமாக அதனை மாற்றிக்கொண்டால் அது கடினமான ஒன்றல்ல. வாடிக்கையாளர் திருப்தியடைந்தால் மாத்தி­ரமே அவர்கள் மீண்டும் எம்மிடம் வருவர். அவ்விதம் அவர்கள் மீண்டும் மீண்டும் வந்தால்தான் எமது நிறுவனம் தொடர்ந்து இயங்கும். அவ்­வாறு தொடர்ந்து இயங்கினால் மாத்திரமே தமது தொழில் நீடிக்கும் என்ற யதார்த்தத்தைப் பணியாளர்கள் புரிந்து கொள்வதே முக்கிய­மாகும்.

சிறந்த மனப்பாங்கை உருவாக்கி பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்கள் உங்கள் நிறுவனத்தைவிட்டு விலகுவதற்கு நீங்கள் இடமளிக்கின்றீர்களா?
எம்மிடம் உள்ளவர்களில் நூற்றுக்கு இருபத்தைந்து வீதமானோர் 25 வயதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகள். பத்துப் பதினைந்து வருடங்கள் தொடர்ச்சியாக எம்மிடமே பணியாற்ற வேண்டுமென்ற எந்தவொரு நிபந்தனையையும் நாம் விதிப்பதில்லை. ஒரு கதவு மூடப்படும்­போது இன்னுமொரு கதவு திறக்கப்படுகின்றது. விலகிச்செல்கின்ற அளவுக்கு, நாம் புதியவர்களை ஆட்சேர்ப்புச் செய்து பயிற்றுவிக்­கின்றோம். அது எமக்குப் பிரச்சினையல்ல.

உங்களுடைய முகாமைத்துவப் பாங்கு யாது?
அது ஏதேனும் செயற்பாடுகளுக்கு அமைவாக நிகழ்கின்ற ஒன்று. மேலிருந்து கீழ் வரை சகலருக்கும் வழங்கப்படுகின்ற கடமை­யொன்று உள்ளது. அவரவருக்கென அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அதிகார வட்டத்தினுள் அவர்களுக்கான சுதந்திரமும் உள்­ளது. சகலவற்றிலும் தலையிடுவதை விடுத்து குறித்த வட்டத்தினுள் தொழிற்படுவதே எனது பாங்கு.

உங்களுக்கும் பணியாட்தொகுதியினருக்குமிடையே நிலவுவது, கொடுக்கல் வாங்கல்கள் மாத்திரமா அல்லது அதனையும் தாண்டிய பிணைப்பொன்றா?
சிறந்த பணியாளர் ஒருவர் கிடைப்பதென்பது சிறந்ததொரு மனைவி கிடைப்பதற்குச் சமமானதாகும். பண்பற்ற பணியாளர் ஒருவருடன் வேலை செய்வதானது கொடூரமான மனைவியுடன் வாழ்வதற்குச் சமமானதாகும். நிறுவனத்தின் முன்னேற்றமானது பணியாட்தொகுதியி­னரின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதனால் அவர்களுடன் எனக்குள்ளது ஒரு பிணைப்பேயாகும்.

தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது நீங்கள் எவ்வாறு சிந்திக்கின்றீர்கள்?
அவை மிகத் துரிதமான தீர்மானங்களாகும். இன்று பார்த்து நாளை பார்த்து. இன்னும் கொஞ்சம் பார்த்து எடுக்கப்படுபவை அல்ல. வர்த்தக நடவடிக்கைகளில் அவ்வாறு இழுத்தடித்துக்கொண்டு இருக்க முடியாது.

நீங்கள் வாழ்க்கை குறித்து நிறைய திட்டமிடுபவரா?
இதுவரை திட்டங்கள் ஏதுமின்றியே நிறைய விடயங்கள் நடந்துள்ளன. எனினும் இறைவனின் திட்டத்திற்கு ஏற்பவே அவை நிகழ்ந்துள்­ளன. நல்ல விடயங்களைச் செய்தால் முன்னோக்கிச் செல்வதற்கான பாதையொன்று உருவாகும்.

மனிதனின் முன்னேற்றத்தில் பெரிதும் தாக்கம் செலுத்துகின்ற காரணி என்ன?
முதலில் மற்றவர்களை முன்னேற்றுகின்ற முறை பற்றிச் சிந்தியுங்கள். சகல தொழில்வாண்மையாளர்களும் சாதிக்கவில்லை. சாதித்த அனைவரும் தொழில்வாண்மையாளர்களும் அல்லர். சிறந்த குறிக்கோளுடன் வேலைசெய்வதே முக்கியமானதாகும். அந்தக் குறிக்கோ­ளினுள் மற்றவர்களை முன்னேற்றிவிடுகின்ற செயற்றிட்டம் ஒன்றும் இருக்க வேண்டும். அதேபோன்று வாழ்க்கைக்கு எவ்வித பெறுமானத்­தையும் வழங்காத நபர்களிடமிருந்து விலகியிருப்பதும் முக்கியமாகும். சிறந்த மனிதர்களுடன் பழகுவதும், வாழ்க்கையில் நல்ல விடயங்­களை இணைத்துக் கொள்வதும் முக்கியமானவையாகும்.

பெஷன் உலகத்தில் நிலவும் போட்டியானது உங்களுக்கு சவாலான ஒன்றா?
என்னைப் போன்றே ஏனையவர்களும் வாழ வேண்டும். ஆனால் சமமான வர்த்தக நடவடிக்கை ஒன்றில் மாற்றமொன்றை, புதுமை­யொன்றை வழங்குவதற்கு என்னால் முடியுமாயின் அந்த இடத்தில்தான் நான் வெற்றியாளனாகின்றேன். நான் அத்தகைய போட்­டியை விரும்புகின்றேன். ஏனெனில், அப்போதுதான் எனக்கு மென்மேலும் புதிய விடயங்கள் குறித்துச் சிந்திப்பதற்கான சிறந்த தூண்டுதல் ஏற்படும். ஆடையணிகலன்களில் மட்டுமன்றி வீட்டு வாசல், சமையலறை, வரவேற்பறை, படுக்கையறை என சகல இடங்களும் எனக்கு பெஷன். வாழ்க்கையை வடிவமைக்கின்ற, அதனை வர்ணமயமாக்குகின்ற, எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன.

நீங்கள் முதலாவதாகச் செய்த தொழில் என்ன?
பாடசாலையில் இருந்து விலகியவுடனேயே லங்கா ஒபரோய் ஹோட்டலில் House Keeping  பிரிவில் தொழிலொன்றை நானே தேடிக்­கொண்டேன். நான் அங்கு விறாந்தையை சுத்தப்படுத்தினேன். அறைகளை ஒழுங்குபடுத்தி அவற்றைப் பெருக்கிச் சுத்தப்படுத்தினேன். பகலிலும் வேலை, இரவிலும் வேலை, எனது தொழிலை நான் மிகவும் மதித்தேன். இயன்றவரை சிறப்பாக வேலை செய்தேன். அது தொந்­தரவு என்றோ தாழ்வானதென்றோ நான் ஒருபோதும் நினைக்கவில்லை. சவூதியில் இருந்த பத்து வருடங்களிலும் அவ்வாறுதான்.

இன்று அந்த கடந்தகாலம் ஞாபகத்திற்கு வருகின்றபோது என்ன நினைக்கின்றீர்கள்?
ஹோட்டல் அறையைப் பெருக்கிச் சுத்தப்படுத்திய ஒரு சிறிய பையனுக்கு இந்த நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்­களை வழங்கக்கூடிய பாரிய கம்பனியொன்றை உருவாக்க முடியுமாயின், இன்றைய சந்ததியினருக்கு எவ்வளவு விடயங்களைச் சாதிக்க முடியும். சரியான பாதையொன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் அர்ப்பணிப்புடன் பயணிப்பதே அவசியமாகும். தாய் தந்தை இல்லையெனில் ஏனைய முதியவர்களாவது அவ்வாறானவர்களுக்கு வழிகாட்டுங்கள். அதனையே நான் நினைக்கின்றேன்.

பத்து வருட காலம் நீங்கள் சவூதியில் என்ன செய்தீர்கள்?
அது “camp operation…” நிறுவனமொன்றாகும். நான் சுத்திகரிப்பாளர் ஒருவராகத் தொழிலை ஆரம்பித்தேன். சம்பளம் 950 ரூபா. எழுதுவி­னைஞர், மேற்பார்வையாளர், முகாமையாளர். என படிப்படியாக முன்னேறி, செயற்றிட்ட முகாமையாளர் என்ற உயர் பதவி வரை சென்றேன். சகல வழிநடத்தற் செயற்பாடுகளும் என்னிடமே ஒப்படைக்கப்பட்டன. 1500 பணியாட் தொகுதியினரை நிருவ­கித்தேன். நிருவாகம் மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பான சிறந்த அனுபவங்களை நான் அந்தத் தொழிலின்போதே பெற்றுக்­கொண்டேன்.

அத்தகைய சிறந்த தொழிலை விட்டுவிட்டு நீங்கள் ஏன் இலங்கைக்கு வந்தீர்கள்?
எனக்கே உரிய ஒன்றைச் செய்வதற்கு. சிலவேளை எனக்குள்ளேயே தொந்தரவு தருகின்ற பெஷன் பற்றிய ஆர்வத்தின் தூண்டுதலாகவும் அது இருக்கலாம். நான் இலங்கைக்கு வந்து எனது தந்தை முன்னர் தொழில் புரிந்த பதுளையில் துணிக்கடை ஒன்றை ஆரம்பித்தேன். தந்­தைக்கு மட்டக்களப்பில் துணிக்கடை ஒன்று இருந்தமையால் எனக்கு இதனைச் செய்வதற்குத் தோன்றியது. எனினும் ஆறு வருடங்களின் பின்னர் நான் அந்த வியாபாரத்தை நிறுத்திவிட்டேன். 

இந்தோனேசியா தீவுகளில் விசித்திர குள்ளர்கள்: யாஜுஜ் – மாஜுஜ்??

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல்லாஹ்வின் அருள் மறையாம் திருமறைக் குர்ஆனில், மனித சமுதாயம் படிப்பினைப்  பெறுவதற்காக ஏராளமான வரலாற்று சம்பவங்களை எடுத்துக் கூறுகிறான். இனி வரும் காலங்களில் நடைபெறப்போகும் சம்பவங்களும் நமக்கு முன் எச்சரிக்கை ஊட்டுவதற்காக அதில் தெளிவாக விளக்கியுள்ளான். அப்படியான ஒரு நிகழ்வுதான் கடைசி  காலத்தில் வரக்கூடிய யாஜூஜ்-மாஜூஜ் கூட்டமாகும்.
இந்தக் கூட்டத்தைபற்றி எல்லா நபிமார்களும் தம் உம்மத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இக்கூட்டம் வெளிவரவில்லை. இறுதி உம்மத்தான நம்  காலத்தில்தான் இக்கூட்டம் வெளிவரப்போவதால், இக்கூட்டத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விரிவாக தெளிவாக விளக்கிச் சென்றுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் மக்காவில் இஸ்லாத்தை குரைஷி மக்களிடம் போதித்த நேரத்தில், உண்மையில் இவர் இறைதூதர்தானா என்பதை சோதிப்பதற்காக, வேதம் கொடுக்கப்பட்ட யூதர்களிடம் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினர்.
உண்மையில் இவர் இறைத்தூதர்தான் என்பதை அறிந்து கொள்ள மூன்று கேள்விகளைக் கேட்குமாறு யூதர்கள் ஆலோசனை சொன்னார்கள். அவற்றில்  ஒன்றுதான், உலகின் கிழக்கு மேற்கு திசைகளில் பிரயாணம் செய்த பயணியைப்பற்றிய செய்தி. இது குறித்து அல்லாஹ் வசனத்தை இறக்குகின்றான்.
(நபியே!)அவர்கள் துல்கர்னனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்,” அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக்காண்பிக்கிறேன்” என்று கூறுவீராக.  அல் குர்ஆன்.18:83.
பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை. அவர்கள் ”துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜுஜும், மஃஜுஜும் பூமியில் ஃபஸாது குழப்பம் செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.
அதற்கவர்; ”என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; ”நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் ”உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்”” (என்றார்).
எனவே, (யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை. ”இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள்தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.    அல்குர்ஆன் 18:83-98
யஃஜுஜு, மஃஜுஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.    அல்குர்ஆன் 21:96
பூமியில் குழப்பம் விளைவிக்கும் ஒரு பெருங்கொண்ட கூட்டம் இறுதி நாளில் வெளியாகி மக்களுக்குத் தீங்கிழைப்பார்கள் என்ற உண்மையை குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன. இவர்கள் பூமியில் இன்றும் உயரமான மலைகள் சூழ்ந்த அரண்களுக்குள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் மொத்தமே மூன்று அடி உயரமான விசித்திர குள்ளர்கள்.
‘இவர்கள் உயரம் ஒரு சான் அல்லது இரு சான் அதிகபட்சம் மூன்று சான்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்’ என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாக ஹாக்கிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசித்திர குள்ளர்கள் இறுதி நாளின்போது வெளிக்கிளம்பி வந்து பெரும் அட்டூழியங்களில் ஈடுபடுவர்.
ஃபத்ஹுல்பாரி, நூல்: புகாரி 7ம் பாகம் பக்கம் 573.
இவர்கள் நம்மைப்போல ஆதம் (அலை) அவர்களின் சந்ததியில் வந்த மனிதர்களே. “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம்(அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்படால் மக்களின் வாழ்க்கையை பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை:” என்பது நபிமொழி.-
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி). நூல்: தப்ரானீ; இப்னு ஹஜர்.பத்ஹுல் பாரி.
இவர்கள் நூஹ்(அலை) அவர்களின் புதல்வர் ‘யாபிஸ்’ என்பாரின் வழித்தோன்றல்களாவர் என்று கூறப்படுகிறது. யஃஜுஜ், மஃஜுஜ் அரபி அல்லாத சொற்கள். மனித வர்க்கமும் ஜின் வர்க்கமும் நூறு சதம் என்றால் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் மட்டும் 90 சதம்.
அல்லாஹ்வின் அடியார் துல்கர்னைன் அவர்கள், சூரியன் உதிக்கும் கிழக்கு திசை பயணத்திலேயே யாஜுஜ்-மாஜுஜால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்கள். குழப்பமான பித்னாக்கள் புறப்படும் திசை கிழக்கு, பெரும் குழப்பவாதி தஜ்ஜால் கிழக்கு திசையிலிருந்துதான் புறப்பட்டு வருவான் என்பது நபிமொழி (புஹாரி 3279) கீழ் திசையில் இருக்கும் இந்தோனேசியா அடர்ந்த காட்டுத் தீவான  புளோரஸ் என்னும் இடத்தில்,7- செப்டெம்பர் 2003 ம் ஆண்டு மூன்றடி உயரமுள்ள சுமார் 30 வயதுடைய ஒரு பெண்ணின் எலும்புக்கூட்டை அமெரிக்கா ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.
museum exhibit of the hobbit, homo floresiensisஇந்த விசித்திர குள்ளர்கள் வியாதியின் காரணமாக குள்ளமாக உள்ளார்களா அல்லது புதுவித இனமா என்பது பற்றி கடந்த பத்து  வருடங்களாக பல்வேறு ஆய்வுகள் செய்து இறுதியில், இது மனித இனத்தை  சார்ந்த குள்ள இனம். பல ஆயிரம் ஆண்டுகள் அத்தீவிலேயே தனிமைப்பட்டு வாழ்ந்ததில் குள்ளமாக உள்ளனர். மனிதர்கள் மட்டும் அல்ல, அங்குள்ள யானை போன்ற விலங்குகளும் குள்ளம்மாக இருந்தது. இது அத்தீவின்  தனிப்பட்ட விஷேசம் என்பதை ஆய்வுகள் கூறின.
The scientists suggest that on isolated islands, the ancestors of the hobbit underwent dramatic dwarfism, with their bodies shrinking from about 5.4 feet (1.65 m) to 3.6 feet (1.1 m), and brains dwindling from about 52 cubic inches (860 cubic centimeters) to 26 cubic inches (426 cubic cm). “For me, this work will turn the tide about the question of evolutionary origin of H. floresiensis,” study lead author Yousuke Kaifu, a paleoanthropologist at Japan’s National Museum of Nature and Science in Tokyo, told Live Science.
While the human lineage generally evolved larger bodies and brains over time, the hobbit suggests that isolation on islands could substantially reverse this evolutionary trend, Kaifu said
இந்தக் குள்ளர்கள்  இன்றும் மலைப்பாங்கான அடர்ந்த காட்டு அரண்களுக்குள் வாழ்ந்து  வர வாய்ப்புள்ளது, என்று அமெரிக்கா ஆய்வாளர்கள் கூறினர். இவர்கள் மறைந்து வாழும் யாஜுஜ்-மாஜுஜ் கூட்டமாக இன்ஷாஅல்லாஹ் இருக்கலாம் என்று அன்றே ஒரு கட்டுரை எழுதினோம்.
யஃஜூஜ், மஃஜூஜ், தஜ்ஜால்? http://www.readislam.net/portal/archives/353
இந்த குள்ள மனிதர்களைப்பற்றிய கூடுதல் ஆய்வுச் சான்றுகள், புகழ்பெற்ற ஆராய்ச்சி இதழான நேச்சரில்(Nature-International weekly journal of science. 14. january-2016) இவ்வாரம் வெளியானது. குள்ள மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட புளோரஸ் தீவிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள சூலவேசி என்ற தீவில் நடந்த தொல்பொருள் அகழாய்வில், மனிதர்கள் வேட்டையாட பயன்படுத்திய பல்வேறு கூர்மையான கற்கருவிகளை கண்டெடுத்தனர்.
stone artifacts இந்தக் கற்கருவிகளின் வயதை, அதி நவீன ஆய்வு முறையில் சோதித்து பார்த்த போது, இவைகள் சுமார் 118,000 முதல் 194,000 வருடத்தில் வாழ்ந்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று ஆய்வு  முடிவுகள் கூறுகின்றன. இந்த உண்மை தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. காரணம்,சுமார் 60,000 வருடங்களுக்கு முன்புதான் படகு  மூலம் பயணம் செய்து, மனித இனம் ஆப்ரிக்காவில் இருந்து இந்தோனேசியா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்ததாக இதுவரை  நம்பப்பட்டு வந்ததே.
சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பே இவர்கள் எவ்வாறு கடலைக் கடந்தார்கள் என்பது ஆய்வாளர்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை பெரும் சுனாமி அலையின் தாக்கத்தினால் காட்டுமரங்களோடு மிதந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சூலவேசி தீவுகளில் மனிதர்கள் வாழ்ந்துள்ளதால், இவர்களுக்கும் இதற்கு அருகில் உள்ள புளோரஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட குள்ள மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
Gerrit van den Bergh of the University of Wollongong in Australia, the study’s lead author, says that the tools likely were made by Homo erectus, an ancient hominin that lived on nearby islands beginning at least 1.5 million years ago. It’s also possible that the toolmakers are yet-undiscovered relatives of Homo floresiensis, a “hobbit” hominin found on the island of Flores, just south of Sulawesi, between 18,000 and 95,000 years ago, if not earlier.
இந்தோனேசியா புளோரஸ் தீவு குகையில் கண்டெடுக்கப்பட்ட மூன்றடி குள்ள மனித எலும்புகூடு, யாஜுஜ்-மாஜுஜ் மனிதக்கூட்டத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. ஆனாலும் அல்லாஹ்  மட்டுமே உண்மையை அறிந்தவன்.
  1. நமது பூலோக ரீதியான கணக்கின்படி, அல்லாஹ்வின் அடியார் துல் கர்னைன் அவர்கள் பயணம் செய்த சூரியன் முதலில் உதிக்கும் கிழக்கு திசையில் உள்ள நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. இங்கு மலைகள் சூழ்ந்த அடர்ந்த காடுகளைக் கொண்ட தீவுகள் ஏராளம்.துல் கர்னைன் பயணம் செய்த வடக்கு பக்கம் சூலவேசி தீவு உள்ளது.தெற்கில் உள்ளது புளோரஸ் தீவு.இந்த புளோரஸ் தீவுகளில் இன்று வாழ்ந்து வரும் மக்கள், வழி வழியாக தங்கள் மூதாதையர்கள் கூறிய  குள்ள மனிதர்களைப் Ebu  Gogo பற்றிய கதைகள் அவர்கள் ஊருக்குள் புகுந்து மக்களின் வாழ்வாதாரங்களை நாசம் செய்து, கிடைக்கும் அனைத்தையையும் தின்று தீர்க்கும் குணம், இவை அனைத்தும் யாஜுஜ-மாஜுஜ் கூட்டத்தாருக்கு ஒத்துப் போகிறது. Ebu Gogo என்று தீவுவாசிகளால் அழைக்கப்படும் சொல், Gog-Magog சொல்லுடன் பொருந்துகிறது.
  2. யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் ஆதம் (அலை)  அவர்களின் வழித்தோன்றலில்   வந்த ஒரு  இனமே என ஹதீஸ் கூறுகிறது. புளோரஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட  மூன்றடி குள்ள எலும்புகூடும் மனித இனத்தின் உள்ள தனி இனம் என்று ஆய்வு முடிவுகள் கூறுவது கவனிக்கத்தக்கது.
  3. யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் வில் அம்பு கொண்டு வேட்டையாடுவதில் வல்லவர்கள் என்று  ஹதீஸ் கூறுவதை, புளோரஸ் தீவின் குகையில் கிடைத்த வேட்டை பிராணிகளின் எலும்பும், கூர்மையான கற்கருவிகளும், சூலவேசி தீவில் கண்டெடுத்த கல் ஆயுதங்களும் உறுதிப்படுத்துகின்றன.
  4. அல்லாஹ்வின் அடியார் துல் கர்னைன் அவர்கள் இந்தோனேசியா தீவுப்பகுதிகளுக்கு வந்து ஆட்சி செய்ததற்கு சான்றாக.இன்றும் இந்தோனேசியா சுமத்ரா தீவு அரச குடும்பத்தினர் தாங்கள் துல் கர்னைன் மன்னர் வழி  வந்தவர்கள் என்று கூறி வருவது குறிப்பிடதக்கது.
  5. ஹதீஸ்களில் கூறிய யாஜுஜ்-மாஜுஜ் முக அடையாளமும் குள்ள எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டை வைத்து கணினி வரைந்த முக அமைப்பும் முற்றாக பொருந்துகிறது.
“யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வரும்வரை நீங்கள் போராடிக்கொண்டே இருப்பீர்கள்; அவர்களின் முகம் அகன்றதாகவும், கேடயம் போல்(வட்டமாகவும்) கண்கள் சிறிதளவும், முடிகள் பட்டையாகவும் அமைந்திருப்பார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ் நூல்கள்: அஹ்மத் தப்ரானீ.
Forensic reconstruction of Homo floresiensisயாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் ரஷியா,காகாசிய-துருக்கி மலைப்பகுதிகளில் இருக்கலாம் என்று இன்றைய, சில குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுவது; பைபிளின் விளக்கமாகவே உள்ளது. குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்கத்தின் படி யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் விசித்திர குள்ளர்கள். இவர்கள் எதையும் விளங்கிக்கொள்ள முடியாத காட்டுமிராண்டி ஆதிவாசிகள். கொலை, கொள்ளை, அழிவு நாசம் செய்யும் கொடுரமானவர்கள். இவர்கள் நாகரீகம் சூழ்ந்த காகாசிய நாடுகளில் இருக்க வாய்ப்பில்லை.
ஆதம் (அலை) அவர்களைப் படைத்தலிருந்து, மறுமை நாள் ஏற்படுவதற்கும் இடைப்பட்ட நாளில் தஜ்ஜாலின் குழப்பத்தை விட பெரிய குழப்பம் ஏதுமில்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:இம்ரான் இப்னு ஹுசைன் (ரழி). முஸ்லிம்.2946.
ஆதம் (அலை) அவர்கள் காலத்திலிருந்து இறுதி நபி (ஸல்) அவர்கள் வரை வந்த அத்துணை நபிமார்களும் தங்கள் உம்மத்திற்கு செய்த எச்சரிக்கை ஒன்றுதான். மகா குழப்பவாதி தஜ்ஜாலின் தீங்கிலிருந்து பாதுகாப்பு தேடுவதுதான். இன்று நமது ஐவேளை தொழுகையில் கேட்கப்படும் துவாவும் இதுதான். இந்த குழப்பவாதி தஜ்ஜாலை ஈஸா (அலை) அவர்கள் மட்டுமே கொல்ல முடியும். வேறு எவராலும் கொல்ல முடியாது.
“தஜ்ஜாலை விட்டும் அல்லாஹ் காப்பாற்றிவிட்ட ஒரு  கூட்டத்தாரிடம் அடுத்து ஈஸா  (அலை) அவர்கள் வருவார்கள். அவர்களின் முகங்களை தடவி விடுவார்கள். அவர்களிடம் சொர்க்கத்தில் உள்ள அவர்களுக்குரிய  தகுதிகளைப்பற்றிப் ஈஸா நபி கூறுவார்கள். அந்த  சமயத்தில் ஈஸாவிடம் அல்லாஹ், “நான் என் அடியார்களை சிலரை வெளியாக்கி  உள்ளேன். அவர்களிடம் யாரும் சண்டை  செய்ய முடியாது. எனவே என் அடியார்களை தூர் மலைப்பக்கம் ஒன்று சேர்ப்பீராக!”  என்று அல்லாஹ் கூறுவான்.
அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி) –முஸ்லிம்.2937.
தஜ்ஜாலுக்கு அடுத்து வரும் யாஜுஜ்-மாஜுஜ் குழப்பக் கூட்டத்தை கொன்று குவிக்க ஈஸா (அலை) அவர்களாலும் முடியாது. அவர்கள் மிகப்பயங்கரமாக பூமியில் அட்டுழியம் செய்வார்கள். அவர்கள் வெளியாக்கப்படும் போது கண்ணில் படுவதை எல்லாம் தின்றும், ஓடும் ஆற்று நீர் வற்றிப்போகும் அளவு குடித்தும் பலம் பெருவார்கள். ஒரு யாஜுஜ்-மாஜுஜ் பெண்ணானவள் ஆயிரம் குழந்தைகளைப் பெறாமல் மரணிக்க  மாட்டாள் என்பது நபி மொழி.
எனவேதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,உலகிலுள்ள அத்துணை  மனு,ஜின் கூட்டத்தில் ஆயிரத்தில் ஒருவர் நரகம் சென்றால்,யாஜுஜ்-மாஜுஜ் கூட்டத்தார் 999  பேர் நரகம் செய்பவர்கள் என்று கூறினார்கள். இந்த விசித்திர குள்ளர்கள் இறுதி காலத்தில் வெளியாக்கப்படுவார்கள் என்று சொல்வதிலிருந்து, இவர்கள் நாம் வாழும் உலகத்தில் எதோ ஓர் இடத்தில் மறைந்து வாழ்கிறார்கள். மறைந்து வாழ்வதற்கு பொருத்தமான இடமாக, அடர்ந்த காடு, உயரமான மலைகள், 150 எரிமலைகள் நிறைந்ததாக  இந்தோனேசியா தீவு கூட்டம் உள்ளது.
இந்தோனேசியா மொத்த  நிலப்பரப்பில்  சுமார் 64% அடர்ந்த காடாக உள்ளது. மொத்தம் உள்ள 18,307  தீவுகளில் சுமார்  8,844 தீவுகளுக்கு மட்டுமே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 6000 தீவுகளில் மனிதர்கள் பரவலாக வசிக்கிறார்கள். 922 தீவுகளில் மனிதர் யாரும் இல்லா அடர்ந்த காடாக உள்ளன. யாஜுஜ்-மாஜுஜ் குள்ளர்கள் வசிப்பதற்கு உகந்த இடமாக இவைகள் இருக்கலாம்.அல்லாஹ் அறிந்தவன்!
தொல்பொருள் ஆய்வாளர்கள் தொடர்ந்து இங்கு அகழாய்வு செய்து வருகின்றனர். குள்ள மனிதர்களைப்பற்றிய புதிய செய்திகள் இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் கிடைக்கலாம். எனினும் அல்லாஹ் யாஜுஜ-மாஜுஜ் கூட்டத்தாருக்கு அனுமதி கொடுக்கும் போதுதான், அவர்களைப்பற்றி உலகம் அறிந்து கொள்ள  முடியும். அதுவரை எந்த ஆய்வாளர்களாலும் அவர்களை உயிருடன் காண முடியாது. காரணம் அவர்கள் மலை  சூழ்ந்த அரணுக்குள் அகப்பட்டுள்ளார்கள்.
2003 ம் வருடம் Lia  Buang எனும் குகையில் கண்டெடுக்கப்பட்ட  பெண் எலும்புக்கூடு வாழ்ந்த காலம் சுமார் 12,000 வருடங்களுக்கு முன்பு.ஒரு வேளை துல்கர்ணைன்(அலை) அவர்கள் இப்பிரதேசத்திற்கு வருவதற்கு முன்பு மரணித்த பெண்ணாக இருக்கலாம். அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். அல்குர்ஆன் வசனங்களை இன்றைய நவீன ஆய்வுகள் தொடர்ந்து உண்மைப்படுத்தி வருவது ஆச்சரியமல்ல.
அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப்  பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதைத் தங்கள் கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்.     அல் குர்ஆன். 20:110.

மொபைல் டேட்டாவை ON செய்தவுடன் காணப்படும் 2G, E, 3G, H, H+ இவற்றை பற்றி சில தகவல்கள்.

நம் மொபைல் டேட்டாவை ON செய்தவுடன் 2G, E, 3G, H, H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.

1). “2G” இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.

இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.

2). “E” இதுவும் 2G(2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும், 1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும். இந்த “E” பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
3). “3G” இது 3G மொபைல் இன்டர்நெட் UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.

4). Symbol “H” இது 3G மொபைல் இன்டர்நெட் HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும் இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.

5). “H+” இதுவும் 3G மொபைல் இன்டர்நெட் (Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும், 1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.

6). “4G” இச்சேவை 3G network internet – LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது. இதன் வேகம் மிகவும் அதிகம். இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம். அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.

SLmuslim

News Break : மெதுவாக..அடி மேல் அடி வைத்து…நாமலை நெருங்கிய C.I.D. – தாஜுதீன் கேசில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நாமல்..அடுத்து வரும் தினங்களில் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைதுசெய்யப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11813272_10153460872074030_5036116955211601572_n
சிங்களப் பத்திரிகை ஒன்று இந்த தகவலை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுடீனின் படுகொலை தொடர்பான விசாரணைகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் நாமல் ராஜபக்ச முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்படவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
11813272_10153460872074030_5036116955211601572_n
தாஜுடீன் கொலையுடன் சம்பந்தப்பட்ட பல தொலைபேசி கலந்துரையாடல்களை ஆய்வுசெய்திருக்கும் நிபுணர்கள் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் சாட்சியங்கள் பலவற்றை சமர்ப்பித்திருப்பதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைதுசெய்யப்படாமல் அதனை தடுப்பதற்காக சட்ட உதவிகளை பெறுவதற்கு நாமல் ராஜபக்ச தனது சட்டத்தரணிகள் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மற்றுமொரு தகவல் குறிப்பிடுகின்றது.
Puttalam today

குப்பை அள்ளும் தொழிலாளியான தந்தை ... பெருமை கொள்ளும் ‪மகள்‬ ..

முகநூல் வழியாக வெளியிட்ட செல்பி
இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானவர்கள் தனது தந்தை பார்க்கும் சில தொழில்களை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு கௌரவமாக கருதும் மக்கள் மத்தியில்..
அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இளம்பெண் குப்பை அள்ளும் தொழிலாளியான தனது தந்தை உடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக ஊடக மற்றும் பல்வேறு செய்தி இணையதளங்கள் ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.
இது பற்றி அவர் "தந்தை செய்வது எந்த தொழிலாக இருந்தால் என்ன அது ஹலாலா‬ என்பதை மட்டுமே நாம் பார்க்க வேண்டும் ..என்னை பொறுத்த வரை என் தந்தைதான் என் உண்மையான கதாநாயகன்‬

முஸ்லிம்களுக்கு வினோதம் காட்ட முனையும் மஹிந்த! (கடிதம்)

இந்த நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் விரும்பும் அனைவருடனும் இணைந்து நல்லாட்சி ஒன்றை கொண்டு செல்ல வேண்டிய அதிகாரமும், வல்லமையும் கொண்டிருந்த நல்ல சந்தர்ப்பங்களை எல்லாம் மண்ணாக்கி விட்டு இன்று எந்தவித அதிகாரமும், பலமும் இல்லாத நிலையிலும் கைநழுவிப்போன ஆட்சி அதிகாரங்களை மீண்டும் தன்வசப்படுத்திக் கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

இந்த வகையில் மஹிந்த முழு முஸ்லிம் சமூகத்தினையும் ஏமாற்றும் விதத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் சென்று தான் நல்லவன், யாருக்கும் வஞ்சகம் செய்ய வில்லை நான் நேர்மையானவன் என்ற விளையாட்டில் இறங்கியுள்ளமை பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் வேடிக்கையானதும், விநோதமானதுமான செயற்பாடுகளாகவே காணக் கூடியதாகவுள்ளது.

குறிப்பாக மஹிந்தவின் காலத்தில் இந்த நாட்டில் சிறுபான்மைக்குள் ஒரு சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் முழு முஸ்லிம் சமுகத்திற்கும் இனவாதிகளால் சமய, சமுக ரீதியாகவும், பொருளாதார, அரசியல் ரீதியாகவும் சொல்லொனாத் துன்பங்களையும், துயரங்களையும் கொடுத்து இந்த நாட்டு முஸ்லிம் சமுகத்தின் வாழ்வியல்கள் சிதைக்கப்பட்டு வந்ததுடன் முஸ்லிம்களின் இயல்பு வாழ்க்கை ஒரு கட்டத்தில் கேள்விக் குறியாக இருந்த நிலைமையைக் கூட இந்த நாட்டு மக்கள் அனைவரும் நன்கறிவர். குறிப்பாக முஸ்லிம்களால் மேற்படி நிலைமைகளை இலகுவில் மறந்து விடவும் முடியாத ஒரு சம்பவங்களுமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நடந்த சம்பவங்களை எல்லாம் தாராளமாகவே அறிந்திருந்தது மட்டுமல்லாது பல துன்பகரமான சம்பவங்களை நேரடியாக கண்ணால் கண்டு கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்த நாதியில்லாமல் மாற்றான்தாய் மனப்பான்மையில் இருந்து முழு முஸ்லிம் சமூகத்திற்கும் வஞ்சகம் செய்து விட்டு இன்று நீலிக் கண்ணீர் வடிப்பதும், தான் நல்லவன் என்ற வேடம் பூணுவதற்கு முயற்சிப்பதானது முழு முஸ்லிம் சமூகத்தினையும் மடயர்களாகவும், முட்டாள்களாக்கவும் நினைக்கும் வேடிக்கையான விடயங்களாகவே நோக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 20ம் திகதி மாவனல்லையில் முஸ்லிம் சமூகத்தினைச் சந்தித்து,  தனது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்கு தான் பொறுப்பு அல்ல என்றும் தன்னிடமிருந்து முஸ்லிம்களைப் பிரிப்பதற்கான சதியே என்றும் கூறியுள்ளமை இந்த நாட்டின் வரலாற்றைப் பொருத்த மட்டில் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற ஒரு விடயமாகவும், அப்பட்டமான பொய்யாகவுமே முஸ்லிம் சமுகம் நோக்குவதுடன் இச்செயற்பாடுகள் மூலம் மஹிந்த மீது மேலும் மேலும் வெறுப்புக்கள் ஏற்படுவதற்குமான நிலைமைகளை தோற்று வித்துள்ளது.

இந்த நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக புரையோடிப்போயிருந்த கொடிய யுத்தத்தை கடந்த 2009 இல் முடிவிற்கு கொண்டு வந்தார் என்ற ஒரே காரணத்திற்காகவே 2010ஆம் ஆண்டு மஹிந்தவை இந்த நாட்டு மக்கள் ஆட்சிப் பீடம் ஏற்றியதுடன் அவர் இந்த நாட்டில் சமாதானத்தையும் ஏற்படுத்துவார் என்று கனவு கண்டனர். மக்களின் கனவுகள் அனைத்தும் தலைகீழாகி இனவாதம் என்ற தீய சக்திகளின் கைகளில் நாட்டின் நீதித்துறையும், சட்டத்துறையும் தாண்டவமாடத் தொடங்கியதுடன் மக்களின் கனவுகள் சுக்கு நூறாகி மக்கள் வெறுக்கும் அளவிற்கு அவரின் ஆட்சி திறணற்றதாக மாறியதை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

ஒரு நாட்டின் தலைவர் குறிப்பாக ஜனநாயக நாட்டின் தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும், அவரின் கடமைகள் என்ன? பொறுப்புக்கள் என்ன? அவர் எவ்வாறு தனது ஆட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்ற சகல வரையறைகளையும் அறிந்த முதிர்ச்சி பெற்ற ஒரு அரசியல் தலைவர் தனது ஆட்சியில் இனவாதத்தை பாலூட்டி வளர்த்து விட்டு அதனால் தாராளமாகவே சுகம் அனுபவித்து விட்டு இன்று அவர் அன்று நடந்த சம்பவங்களுக்கு தான் பொறுப்பல்ல என்று கூறுவது எந்தளவு பிற்போக்கானதும், ஏமாற்றுவதுமான கருத்து என்பதனை மக்களாகிய அனைவரும் புரிந்திருப்பர்.

மஹிந்த தனது ஆட்சியில் பொதுபல சேனா, இராவணபலய, சிங்கள ராவய உள்ளிட்ட பல இனவாத தீவிரவாத சக்திகளை வளர்த்து விட்டு அவர்கள் இந்த நாட்டின் ஜனநாயக. குடியியல், பாதுகாப்பு, நீதி, நிர்வாக விடயங்கள் அனைத்தையுமே குழி தோண்டிப் புதைத்து விட்டு சிறுபான்மை முஸ்லிம்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் சமயத்தையும், சமயத்தளங்களையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கியது மட்டுமல்லாது முஸ்லிம் சமுகத்தின் பொருளாதாரத்தை முடக்கி அவர்களின் உடமைகளை தீயிட்டுக் கொழுத்தியும், சூறையாடியும் அடாவடித்தனங்கள் தாண்டவமாடியபோது ஒரு கனமேனும் அவற்றைக் கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முயற்சிக்காது இருந்து விட்டு இன்று ஆட்சி பறிபோன வெறியில் முஸ்லிம்களை அரட்டியும், மிரட்டியும் ஆட்சி செய்ததை மறந்து விட்டு தான் பொறுப்பில்லை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயமான விடயமாக அமையும்?

கடந்த 2014இல் அளுத்கம, தர்ஹா டவுன், பேரவல உள்ளிட்ட பகுதிகளில் பொதுபல சேனாவின் ஞானசார தேரரின் வழி நடத்தலில் செய்த அட்டூழியமும், அதன் மூலம் ஏற்பட்ட இழப்புக்கள், உயிர்ப்பலிகள் எல்லாவற்றையும் பொறுமைக்கு மேல் பொறுமை காத்து பட்ட துன்பங்களை எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு இந்த நாட்டின் சிறுபான்மை என்ற ஒரே காரணத்தால் தமது ஆதங்கங்களை எல்லாம் தத்தமது மனங்களுக்குள்ளேயே புதைத்து விட்டு மௌனம் காத்த சமுகத்தின் மத்தியில் இன்று அவர் நீலிக்கண்ணீர் வடிப்பது மீண்டும் முஸ்லிம் சமுகத்தினை வேதனைப்படுத்தி முன்னைய நிலைக்கு இட்டுச் செல்வதற்கு கங்கனங்கட்டுவதையே கோடிட்டுக் காட்டுகின்றது.

ஒரு நாட்டுத் தலைவன் தனது மக்களுக்குச் செய்ய வேண்டிய தலையாய கடமைகளை துஸ்பிரயோகம் செய்து அந்த மக்களுக்கு அநியாயங்களை இழைக்கப்பட்ட போதெல்லாம் பொறுப்பற்ற விதத்தில் இருந்து விட்டு பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கருத்துக்களை தெரிவிப்பது இந்த நல்லாட்சியிலும் அமைதியான சமுகங்களாக வாழும் இந்த மக்கள் மத்தியில் அமைதியற்ற நிலைமைகளைத் தோற்று விக்கும் ஒரு சதி முயற்சியின் கைங்கரியமாகவே பார்க்கப்படுகின்றது.

தேவையற்ற விதத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வன்முறைகள் மூலம் பள்ளிகளை உடைத்தும், இஸ்லாமிய மத்ரஸாக்களை தாக்கியும், ஹலாலான உணவகளுக்கு தடை வித்தித்தும், இஸ்லாமியப் பெண்களின் கண்ணியமான  ஹபாயா உடைகளை கொச்சைப்படுத்தியும், முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தகத்தை முடக்கும் விதத்தில் பொய்யான சண்டைகளை உண்டாக்கி இளைஞர்களை சிறையில் அடைத்தும், முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பௌத்தத்தை கொச்சைப் படுத்தவதாகவும் ஆடைகளில் புத்தரின் படங்களை அச்சிட்டு விற்பதாகவும் அப்பட்டமான பொய்களைக் கூறி கடைகளை மூட வைத்தமை, நோ லிமிட் போன்ற பல வர்த்தக நிலையங்களை தீயிட்டுக் கொழுத்தியும், தாக்கியும் செய்ததுக்கு மேலாக பாணந்துறையில் ஒரு பௌத்த துறவி தான் வந்த வாகனத்தால் முஸ்லிம் வாலிபர்கள் மீது மோதி அவர்களை பொலிஸாரிடம் கைது செய்ய வைத்தமை போன்ற சொல்லிலடங்காத விரும்பத்தகாத செயற்பாடுகளைச் அனுபவித்த மக்களாக முஸ்லிம் காணப்படுகின்றனர்.

மேற்படி நிலைமைகளை அவ்வப்போது தகுந்த ஆதாரங்களை காட்டி மஹிந்த முதற்கொண்டு அவர்களின் முக்கிய அரசியல் பிரமகர்களிடமும் முறையிட்டும் ஒரு சதமளவேனும் கண்டு கொள்ளாத நிலையிலும் மஹிந்த அரசால் புத்தசாசன அமைச்சில் உருவாக்கப்பட்டிருக்கும் சமய சம்பந்தமான பிரச்சினைகளை முறைப்பாடு செய்ய அமைக்கப்பட்ட விஷேட பொலிஸ் பிரிவிலும் கூட நூற்றுக் கணக்கான முறைப்பாடுகளை தகுந்த ஆதாரங்களுடன் செய்தும் அதில் ஒன்றுக்குக் கூட நீதி, நியாயங்கள் பெற்றுக் கொடுக்காத மஹிந்த அரசு முஸ்லிம் சமுகத்தினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளை குப்பையில் போட்டது மட்டுமே அவர்கள் கண்ட பலனும் முஸ்லிம் சமுகத்திற்கு அதன் மூலம் கிடைத்த நியாயங்களுமாகும்.

ஓரு நாட்டின் தலைவர் என்பவர் அவர் அந்த நாட்டில் வாழும் பிச்சைக்காரன் தொடக்கம் செல்வந்தர் வரையான சகல மக்களுக்கும் பொறுப்பானவர். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ ஒரு குறிப்பிட்ட குழுக்களுக்கு மட்டுமே ஜனாதிபதியாக இருந்தார். முற்றய சமுகத்தினையோ அல்லது புத்தி ஜீவிகளையோ அனுகி ஜனநாயக வழியில் செல்வதற்குப் பதிலாக இனவாதக் குழுக்கள் இந்த நாட்டின் ஜனநாயகச் சட்டங்களை கையில் எடுத்து தாண்டவமாட இடங்கொடுத்த ஒருவராகவே அவர் காணப்பட்டார்.

இவ்வாறு தனது ஆட்சியல் ஒரு சிறந்த மக்கள் தலைவனாக செயற்படாது சர்வாதிகார போக்கில் சென்று அனைத்து சமாதான விரும்பிகளிடமிருந்தும் எதிர்ப்பையும், குரோதத்தையும் பெற்றதுடன் நாட்டு மக்களிடத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் காட்டி அவர் ஆட்சியிலிருந்து தூக்கி எறிவதற்கு வித்திட்டமையை இலங்கையில் அரசியல் வரலாற்றில் தற்காலத்தில் மக்கள் கண்டு கொண்ட சம்பவங்களாக அமைந்து விட்டது எனலாம்.

மேற்படி செயற்பாடுகளின் வெளிப்பாடுகளே அவரை அவரின் பூரணமான ஆட்சிக் காலம் முடிவதற்கு முன்னர் பதவியில் இருந்து அகற்றுவதற்கும் அதன் மூலம் இன்று அரசியல் அநாதையாகவும், பறிபோன அரசியல் அதிகாரங்களை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு விகாரைகளுக்கும், ஆலயங்களுக்கும் சுற்றித் திரிவதற்கு வழிவகுத்துள்ளது என்ற உண்மையையே இன்று அவரால் பாதிக்கப்பட்ட மக்கள் கண்டு கொள்ளக் கூடிய ஒரு விடயமாக அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

-சத்தார் எம் ஜாவித்