கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முன்மாதிரி பெண் ஸுமையா அக்ரம்...

மரணித்தவரின் நல்ல விடயங்களை நினைவு படுத்துங்கள் அது
வாழ்கின்றவர்களுக்கு பிரயோசனமாகும் என்ற கருத்துக்கு ஏற்ப அண்மையில் வாழ்ந்து தன் இள வயதிலேயே மரணித்த இந்த சகோதரியை ஞாபகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.. எனக்கு இவர் பற்றி கிடைத்த சில தகவல்களைத் தான் இங்கு எழுதுகிறேன், இ...தில் ஏதும் தவறுதலாக எழுதப்பட்டிருந்தால் சுட்டிக்காட்டுமாறு தயவைக் கேட்டுக் கொள்கிறேன்..)

கஹட்டோவிட்டாவை வசிப்பிடமாக கொண்ட முஹம்மது அக்ரம், சீனங்கோட்டையை வசிப்பிடமாக கொண்ட பாத்திமா பர்ஸானா என்பவருக்கும் நான்காவது புதல்வியாக பிறந்தவர்தான் ஸுமையா. தன சிறு பராயத்தை கஹட்டோவிட்டவில் ஆரம்பித்தவர். பின்னர் தாயாரின் பிறப்பிடத்தை வசிப்பிடமாக்கி தன் கல்வியை தொடர்ந்தார். உயர் தரத்தில் விஞ்ஞான துறையை தேர்ந்தெடுத்து வைத்தியர் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் படித்திருக்கிறார். சிறு பராயம் முதலே இஸ்லாமிய குடும்பத்தின் அரவணைப்பில் வளர்ந்ததால் இஸ்லாம் தனது வாழ்க்கையாக மாறி இருந்தது எனலாம்.

தனது தோலில் ஏற்பட்ட சிறு சிறு மாறுதல்கள் ஒரு தோல் நோய்க்காக இருக்கும் என்றே எண்ணியிருந்தனர் இவரின் பெற்றோர். ஆனால், இந்த சகோதரி தனது மாறுதல்களை இந்த இன்டெர் நெட்டில் தேட நினைத்தார். தான் படித்ததும் விஞ்ஞான துறை அல்லவா. அல்லாஹ் தந்த அறிவை தனது நோய் பற்றி அறிய தனது தேடலை தொடங்கினார். சுருங்கச் சொல்லப் போனால் தான் என்ன நோயினால் பீடிக்கப் பட்டுள்ளேன் என்பதை அறிய தானே தேடுகின்றார். சும்மா சொல்ல கூடாது, தேடலின் விளைவு சாதகமா பாதகமா என்று அறிகின்ற இந்த துணிச்சல் 20 வயதில் யாருக்கு தான் வரும்? பாதகமான விளைவு வந்தால் அதை ஏற்கின்ற மனோநிலை யாருக்கும் இல்லையே.. உண்மையில், இந்த பெண் துணிச்சலானவள் தான்..

தான் தேடிய இணைய தளங்கள் தனக்கு பீடித்துள்ளது குணப்படுத்த முடியாத இரத்தத்தில் ஏற்பட்ட புற்று நோய் என்பதனை இவருக்கு உணர்த்துகிறது. அதை உறுதி செய்துகொள்ள மகரகமையில் அமைந்துள்ள வைத்திய சாலையை நாடுகிறார், அதுவும் தனது பெற்றோருடன். அங்கே பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் அது இரத்த புற்று நோய் என்பதனை உறுதி செய்கிறார்.

மரணம் எம்மை பின்தொடர்ந்து வருகின்றது என்பதனை அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், தன்னை மரணம் பிடித்துவிட்டது என்று ஊர்ஜிதப்படுத்தப் பட்டால் எமது வாழ்க்கை எப்படி இருக்கும்.? ஒரு நிமிடம் கொஞ்சம் யோசித்து பாருங்கள்..!!! ஒரு கருத்து சொல்வாங்க "இறக்கின்ற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வாழ்கின்ற நாள் நரகமாகிடும்" என்று. ஆனால், இந்த பெண் இவ்விடத்தில் மாறுபடுகிறாள்.
தன்னை மரணம் பிடித்துவிட்டது என்பதால் கலங்கவில்லை. தன்னை பெற்று இந்த இஸ்லாமிய சூழலில் வளர்த்தெடுத்த தன் பெற்றோருக்கு ஆறுதலாக, நம்பிக்கையூட்டும் விதமாக "இது அல்லாஹ் எனக்கு தந்த சோதனை. இன்ஷா அல்லாஹ் நான் இதில் பொறுமையாளராக இருப்பேன்" என்று கூறுகிறார். என்ன ஒரு அழகிய முன்மாதிரி நண்பர்களே!!

இந்த பொறுமையை இவர் மரணிக்கும் வரை காப்பாற்றியிருக்கிறார். இவர் வைத்திய சாலையில் இருக்கும் போது ஒருமுறை தொடர்பு கொண்டு பேசினேன். அந்த குரலில் எந்த கலக்கமும் தென்படவில்லை. அவர் சொன்னது "நான் பொறுமையை கையாளுகிறேன் இன்ஷா அல்லாஹ்" என்றுதான். அவரது யோசனைகள் எல்லாம் தன் மீது அன்பு வைத்திருக்கும் தன் பெற்றோரை நினைத்து தான் இருப்பதாக சொன்னார். இந்த அழகிய பொறுமை, தடுமாற்றம் இல்லா பேச்சு, இயக்க பேதமில்லாமல் பழகும் குணம் என்பவை அவரின் தகப்பனாரிடம் நான் பார்த்தவை.

எமது சமூகத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அந்த நோயாளியை எப்படியாவது, எந்த வழியிலாவது குணமாக்கணும் என்ற மனப்பாங்கு இருக்கிறதே ஒழிய அந்த நேரத்தில் இஸ்லாம் கூறும் பொறுமையை கடைப்பிடிக்க அந்த நோயாளியை அறிவுறுத்துவது குறைவு. இதனால் தான் இஸ்லாம் காட்டாத வழிகளில் கூட நோய்களுக்கு தீர்வு தேடி அலைகிறார்கள் இந்த அப்பாவி முஸ்லிம்கள். கடைசியில் முஸ்லிம் அல்லாத சாமியார்களிடம் கூட போய் இஸ்லாத்தையும் அந்த நோயாளியையும் அடகு வைக்கின்ற நிலை இன்னும் இருக்கிறது. இந்த நிலை மாற்றப்பட ஸுமையா அக்ரம் ஐ ஒரு முன்மாதிரியாக கொள்ளுங்கள் என் நெஞ்சங்களே..

மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட தனது குடும்பத்தில் தான் தான் முதலில் இறைவனை சந்திக்க போவதாக அடிக்கடி சொல்வாராம். வேதனை அதிகமாகும் போது இரண்டு ரகாத் தொழுதுவிட்டு அப்படியே சுஜூதில் இருப்பாராம். சனிக்கிழமை (29-12-2013) காய்ச்சலால் பீடிக்கப் பட்ட அவரை வைத்தியசாலைக்கு கொண்டு போயிருக்கிறார்கள் அவரது பெற்றோர். வைத்திய சாலையில், தனது அப்பா ( உம்மாவின் வாப்பா) வை பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அப்பாவும் வந்து பேசியிருக்கிறார். பின்னர் வாப்பாவை கூப்பிட்டு பேசியிருக்கிறார். அப்படியே கண்ணை மூடியிருக்கிறார்.. உயிரைத் தந்த ரப்பு தானே அதை வாங்கிக் கொள்கிறான்....
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

தனது நோயை தானே கண்டுபிடித்தது முதல் மரணிக்கின்ற வரை அழகிய பொறுமையை கடைபிடித்தார். இஸ்லாம் அல்லாத எந்த வழியையும் தனது நோய் நிவாரணத்துக்காக பயன்படுத்தாமை. இவை இந்த சகோதரி விட்டுச் சென்ற அழகிய முன்மாதிரிகள்..

அந்த அரபு நாட்டில் மாத்திரமல்ல இந்த கஹட்டோவிட்டாவில் கூட இஸ்லாத்தை வாழ்க்கையாக கொண்ட ஸுமையாக்கள் வாழ்ந்து மரணித்தாலும், இது போன்ற முன்மாதிரிகளால் இன்னும் நிறைய ஸுமையாக்கள் உருவாக வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை...

யா அல்லாஹ் அந்த சகோதரியை ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவனத்தில் சேர்த்து வைப்பாயாக.. அவரின் பெற்றோருக்கு உனது சாந்தியையும் சமாதானத்தையும் நல்குவாயாக...


ஜதாகுமல்லாஹ்
Muhammadh Muhammadh.

மர்ஸூக் ஆசிரியர் அவர்கள் காலமானார்.

கஹடோவிடவைச் சேர்ந்த ஹைருள் பாத்திமா ஆசிரியை அவர்களின் அன்புக் கணவர் மர்சூக் (நளீமி) ஆசிரியர் அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். குருனாகல் ஐப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், அன்மையில் இடமாற்றம் பெற்று எமது ஊர் பாடசாலைக்கு வந்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அன்னார் சாகுல் ஹமீத் மௌலவி, மொகமட் ஹில்மி ஆகியவர்களின் மைத்துனரும் ஆவர. ஜனாஸா நல்லடக்கம் நேற்று (30.12.2012) மாலை 5.30 மணியலவில் கஹடோவிட ஜாமிஉத் தௌஹீத்  ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
.
அல்லாஹ் சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

சகோதரி பாதிமா சுமையா காலமானார்.

கஹடோவிடவைச் சேர்ந்த அக்ரம் ஹாஜியார் அவர்களின் அன்புப் புதல்வி சகேதரி பாதிமா சுமையா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் அல் ஹாஜ் அக்ரம், பர்ஸானா தம்பதியரின் அன்புப் புதல்வியும், மர்ஹும் தம்பீம் ஹாஜியார் அவர்களின் பேத்தியும் ஆவர். 
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (30.12.2012) காலை 10.00 மணியலவில்  சைனாபோட், பேறுவலையில் நடைபெறும்.

அல்லாஹ் இச்சகோதரியின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

கைகள் அற்ற நிலையில் சடலம் மீட்பு (ரன்பொக்குனகம)


நிட்டம்புவ, ரன்பொக்குனகம பகுதியில் அடையாளம் காணப்படாத நிலையில் இரு கைகளும் இல்லாதவாறு சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.


நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இச்சடலம் மீட்கப்பட்டபோது, இரு முழங்கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், உயிரிழந்த இந்நபர் சுமார் 26 வயதுடையவராக இருக்கலாமென்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

நடவடிக்கை எடுக்கப்படும் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் கோதபாய ராஜபக்ஷ தெரிவிப்பு


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று நண்பகல் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை அவரது அலுவலகத்தில் சந்தித்து முஸ்லிம் சமூகம் சமகாலத்தில் எதிர்நோக்கிவரும் பல்வேறு சவால்கள் தொடர்பில் சுமார் ஒன்டரை மணித்தியாலம் கலந்துரையாடியதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் துணை செயலாளர் தாஸீம் மௌலவி தெரிவித்தார் .
மேலும் அவர் எமக்கு தெரிவித்த தகவல்களில் இருந்து , இந்த சந்திப்பில் கண்டி மற்றும் பதுளையில் நடந்த சம்பவங்களை விளக்க அந்த பிரதேசங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர் .அங்கு சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகள் விளக்கியுள்ளனர்.
குறிப்பாக ஹலால் சான்றிதழுக்கு எதிரான பிரசாரம் , முஸ்லிம் சனத்தொகை அதிகரிப்பு தொடர்பான பிரசாரம் , முஸ்லிம் வர்த்தகம் தொடர்பான பிரசாரம் மேலும் சமூக வலைத்தள, இணையத்தள பிரசாரங்கள் ,கண்டி , பதுளை முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கொள்ளப் பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாருக்கு விளக்கியதுடன் அவை தொடர்பான ஆவணங்களையும் அவரிடம் கையளித்துள்ளனர்.
சந்திப்பில் மௌலவி ரிஸ்வி முப்தி, என்.எம்.அமீன் மற்றும் சட்டத்தரணி சுஹைர் ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பாக தெரிவித்ததுடன் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்று நெடுகிலும் மற்ற சமூகங்களுடன் சமாதானமாக வாழ்ந்து வருவதாகவும் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளனர்
மேலும் அவர்கள் முஸ்லிம் சமூக தொடர்பில் ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருப்பின் அவற்றை தமக்கு தெரியப்படுத்துமாறும் அவை தொடர்பாக தாம் நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இவைகள் தொடர்பில் கருத்துரைத்துள்ள பாதுகாப்பு செயலாளர். மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதுடன் .மேற்படி முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் , நடவடிக்கைகள் அரசாங்கத்தின் ஆதரவை அங்கீகாரத்தை பெற்றவை அல்ல என்றும் இந்த செயல்பாடுகளை பெரும்பான்மையான பௌத்தர்கள் ஏற்றுகொள்ள வில்லை என்றும் முஸ்லிம்கள் பௌத்தர்களுடன் மேலும் நெருக்கமான உறவை பேணிவரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான சந்திப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெறவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று நண்பகல் 12 மணி முதல் 1:30 மணி வரை நிகழ்ந்த இந்த சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் மௌலவி ரிஸ்வி முப்தி , செயலாளர் மௌலவி முபாரக் துணைச் செயலாளர் மௌலவி தாஸீம் , மௌலவி முர்ஸித், தாரிக் பதியுதீன் மஹ்மூத் ,முஹிதீன் , முஸ்லிம் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன் , ஹில்மி அஹமத் , மற்றும் அஸ்கர் கான் வை .எம் எம் .ஏ தலைவர் தீன் , சட்டத்தரணி சுஹைர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அதேவேளை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அடங்களான முஸ்லிம் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் முறைபாடுகளை கேட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்கள் மீதான சிங்களப் பேரினவாதம்; தீர்வு என்ன?



சுமார் முப்பது வருடகால கொடூர யுத்தம் நிறைவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் இலங்கைத் திருநாட்டில் நான்கின மக்களும் இன,மத,மொழி பேதங்களை மறந்து ஓர்தாய் பிள்ளைககளாக சுதந்திரக்காற்றை சுவாசித்துவரும் வேளையில் இந்நாட்டிற்கும் இந்நாட்டின் சகல இன மக்களுக்கும் சாபக்கேடாய் சில பேரினவாத சக்திகள் ஊடுருவி குறிப்பாக முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் பொருளாதாரம்,கலாச்சாரம்,வணக்கஸ்தலங்கள் போன்றவற்றை பகிரங்கமாகவே சூறையாடி வருகின்றமை இன்று உலகறிந்த விடயமாகும்.

இதற்கு உதாரணமாக,

01) 2011 செப்டம்பர் மாதம் பத்தாம் திகதி பொலிஸ் அதிகாரிகள் கைகட்டி நிற்க பௌத்த பிக்குகளின் தலைமையின் கீழ் அனுராதபுரம்-குருநாகல் வீதியில் அமைந்துள்ள ஒட்டுப்பள்ளம் தர்கா தகர்க்கப்பட்டது.

02) குருநாகல் மாவட்டம் வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதுறு ஓயாவில் அமைந்துள்ள அல் அக்ரம் தைக்கியாவில் கடந்த ரமழான் கால வணக்கங்களுக்கு இடையூறு விளைவிக்கபட்டது.தெதுறு ஓயாவிலுள்ள கிரிந்திவேல்மட விகாரையின் விகாராதிபதி தலைமையில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பிக்குகள் அடங்கலாக சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையினத்தவர்கள் பள்ளிவாயிலின் வளவிற்குள் கதிரைகளில் அமர்ந்தவாறு பிரித் பாராயணம் செய்து தொழுகைக்கு இடையூறை ஏற்படுத்தினர்.இப்பள்ளிவாயில் 1994ம் ஆண்டு ஸ்த்தாபிக்கப் பட்டு முஸ்லிம் சமயக்கலாச்சார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

03) 2012 ஏப்ரல் மாதம் இருபதாம் திகதி தம்புள்ள புனித நகரிலுள்ள மஸ்ஜிதுல் ஹைரிய்யா ஜும்மா பள்ளிவாயில் தகர்க்கப்பட்டது.இவ்வன்முறைச் சம்பவம் தம்புள்ளை ரன்கிரி ரஜமகா விகாரையின் பீடாதிபதி இனாமளுவ ஸ்ரீ சுமங்கல தேரரின் தலைமையில் வழிநடாத்தப்பட்டது.பொலிசாரும் இராணுவத்தினரும் வேடிக்கை பார்க்க சுமார் நூறு பேர் வரையிலான பெரும்பான்மையினக் காடையர்கள் பள்ளிவாயிலுக்குள் அத்துமீறி உட்சென்று அங்கிருந்த பல பெறுமதியான பொருட்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்து வெளியேறினர்.

இதனைத் தொடர்ந்து இன்று வரைக்கும் அப்பள்ளிவாயிலில் ஐவேளை தொழுகைக்கும் கூட பாரிய அச்சுறுத்தல்களே காணப்படுகின்றன.

இச்சம்பவம் நடைபெற்று ஓரிரு நாட்களில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ரன்கிரி விகாரையின் விகாராதிபதி இனாமளுவ ஸ்ரீ சுமங்கல தேரர் "இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் இங்கே விரும்பினால் இருக்கலாம்.இல்லாவிடில் எங்காவது சென்றுவிடவேண்டும்.காகம் தலைக்கு மேல் பறக்கலாம் அனால் தலையில் கூடு கட்ட எத்தனிக்கக் கூடாது"என்று தனது இனத்துவேசத்தை வெளிக்காட்டினார்.

இவ்வன்முறைக்கு உந்து சக்தியாக தம்புள்ளையை தளமாகக் கொண்டு இயங்கும் ரன்கிரி FM என்னும் ஓர் தனியார் வானொலி சுமார் ஆறு மாத காலமாக முஸ்லிம்களுக்கெதிரான இனவாதப்போக்கைக் கொப்பளித்துவந்தது.

இஸ்லாமிய சரீயா சட்டம்,இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் போன்றவற்றை எள்ளி நகையடுவதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டு செயற்பட்டது.இன்னும் செயற்பட்டுவருகிறது.

04) 2012ஓகஸ்ட்,முப்பதாம் திகதி கோகிலவத்தை என்னும் ஊரில் உள்ள அல்-இப்ராஹிமிய்யா ஜும்மா பள்ளிவாயிலுக்குள் மஃரிப் தொழுகைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் பெரும்பான்மையின வாலிபர்கள் இருவர் மதுபோதையுடன் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொது மக்களைத் தாக்கி பள்ளிவாயிலில் இருந்த பொருட்களையும் துவம்சம் செய்துவிட்டுச் சென்றனர்.

05) 2012 மே மாதம் குருநாகல் ஆரிய சிங்களவத்தையிலுள்ள உமர் இப்னு ஹத்தாப் பள்ளிவாயிலில் தொழுகை நடாத்துவதற்கு அப்பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.குறித்த இப்பள்ளிவாயில் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக அவ்விடத்தில் இயங்கிவந்திருந்த போதிலும் கடந்த மே மாதமே இப்பிரச்சினை உருவெடுத்துள்ளது.

06) கடந்த ரமழான் மாதம் ராஜகிரிய தாருல் ஈமான் பள்ளிவாயிலில் தொழுகை நடாத்தக்கூடாதென்று பௌத்த தேரர்கள் குழுவொன்று திரண்டு வந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.அதனைத் தொடர்ந்து அப்பள்ளிவாயிலில் ஐங்காலத் தொழுகைக்கும் இடையூறுகள் ஏற்படுவதால் மக்கள் அங்கே தொழுகைக்காகச் செல்வதில்லை.எனவே இன்றளவும் ராஜகிரிய தாருல் ஈமான் பள்ளிவாயில் மூடப்பட்ட நிலையிலேயே காட்சியளிக்கிறது.

07) 2012 மே மாதம் தெகிவளை கல்விகாரை வீதியிலுள்ள தாருர் ரஹ்மான் பள்ளிவாயிலில் முஸ்லிம்கள் தொழுவதற்கு தடைவிதிக்குமாறு கோரி கல்விகாரையிலுள்ள பௌத்த தேரர்கள் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நிகழ்த்தப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்திற்கு காரணமாக குறித்த இப்பள்ளிவாயில் மாடுகளை அறுக்கப் பயன்படுத்தப்படும் மடுவமாகத் தொழிற்படுகின்றது என்ற பொய்யாகப் புனையப்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

08) 2012 ஒக்டோபர் 27ம் திகதி முஸ்லிம்களின் பெருநாள் தினமான ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று அனுராதபுரம் புதிய நகர் மல்வத்துஓயா லேனிலுள்ள தைக்காப் பள்ளி தீக்கிரையாக்கப் பட்டது.இச்சம்பவத்தில் பள்ளிவாயிலுக்குச் சொந்தமான பல பெறுமதி மிக்க உடைமைகள் முற்றாக அழிந்து போயின.

இதனைத் தொடர்ந்து எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் "அபிவிருத்திப் பணிகளுக்காக இப்பள்ளிவாயில் உடைக்கப்படும்" என்று அனுராதபுரம் மாநகர மேயர் தெரிவித்துள்ளார்.

09) 2012 ஓகஸ்ட் மாதம் புத்தளம் கற்பிட்டிப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மாத்திரம் தனித்து வாழும் பகுதியில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது.சிங்கள மக்களே இல்லாத ஒரு ஊரில் புத்தர் சிலையை நிர்மாணித்துவிட்டு அங்கு சென்று வழிபடுவதற்காக வெளிப்பிரதேசங்களிளிருந்து மக்கள் அனுப்பப்படுகின்றனர்.
10) அண்மையில் பதுளை நகரில் ஒரு முஸ்லிம் வர்த்தகரின் கடையில் விற்பனை செய்யப்பட்ட கையுறைகளில் புத்தரின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததாகக் குற்றம் சாட்டி அக்கடையின் உரிமையாளரையும் ஊழியர் ஒருவரையும் போலீசார் கைது செய்ததன் தொடர்ச்சியாக "பொதுபல சேனா" என்னும் அனாமதேய அமைப்பின் ஏற்பாட்டில் பௌத்த பிக்குகளின் தலைமையில் சுமார் நூற்றியைம்பது பேர் வரையில் கலந்துகொண்டு பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது.

இதில் பதுளையைச் சேர்ந்தவர்கள் இருபதுக்கும் குறைவானவர்களே காணப்பட்டனர்.

ஏனையவர்கள் வெளிப்பிரதேசங்களில் இருந்து வரவளைக்கப்பட்டிருந்தனர்.இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காடையர்கள் பலர் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கீழ்த்தரமான இழிவான வார்த்தைகளால் கோஷமெழுப்பி கேலிசெய்தனர்.

அத்துடன் பதுளை நகரில் ஜும்மா தொழுகையை முடித்துவிட்டு வீதியால் சென்று கொண்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் பேரினவாதக் காடையர்களால் தாக்கப்பட்டு அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் சேதப்படுத்தப் பட்டது.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆறு ஆடுகள் அதே பேரினவாதக் காடையர்களால் திருடிச்சென்று பின்னர் கழுத்துக்கள் வெட்டப்பட்டு இறந்த நிலையில் அவ்வாடுகள் கண்டு பிடிக்கப்பட்டமை போன்ற முஸ்லிம்களின் உள்ளுணர்வுகளை தட்டிப்பார்க்கும் சம்பவங்கள் சுமார் பதினைந்திற்கும் மேற்பட்டவைகள் இன்றுவரைக்கும் பதுளை நகரில் மட்டும் நடந்தேறியுள்ளன.

11) சகல இன மக்களும் எதுவித முரண்பாடுகளும் இன்றி மிகவும் அன்னியோன்யமாக வாழும் ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம்தான் கண்டி மாநகர்.

அங்கே கடந்த 07.12.2012 அன்று பிரதான வீதிகள் உள்ளிட்ட பாதுகாப்புப் போலீசார் நடமாடுகின்ற முக்கிய பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்டுகின்ற சுவரொட்டிகள் பல ஒட்டப்பட்டுள்ளன.இச்சுவரொட்டிகளில் உள்ள வாசகங்கள் இவைதான்.2025ம் ஆண்டில் இலங்கை சபரிஸ்தான் (என்னும் ஒரு முஸ்லிம்) நாடாக மாறும்.(இனியும்) முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்குவோமா?

இவ்வாறு அச்சுவரொட்டிகளில் இனவாதத்தை தூண்டிவிடுகின்ற வாசகங்கள் பகிரங்கமாகக் காணப்படுகின்றன.

மேலே சொல்லப்பட்ட பேரினவாத அடக்குமுறைகளில் தற்போது மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு வரும் ஒன்றுதான் கையடக்கத் தொலைபேசிகளில் உலாவருகின்ற ஓர் அநாமதேயக் குறுந்தகவல்(SMS).

இக்குறுந்தகவல் கண்டி,குருநாகல்,கொழும்பு,மாத்தறை,அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களிலுள்ள பெரும்பான்மையின மக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அதிகளவில் வந்தடையக்கூடிய ஒன்றாகக் காணப்படுகின்றது.

-2032di sinhala jathiyata wada muslim jathiya 53%k wenawa,ape sinhala rata unta nithiyen aithi wenawa.danma muslim kadawalin badu ganna eka nathara karamu,halal lakuna sahitha badu warjanaya karamu,unta ape idakadan wikunanna epa,thambith ekka wiwaha epa..etisalat wani ayathana walin palli hadanna wisala lesa mudal denawa,fashion bug,nolimit walin redi ganna epa,ape rata beragamu,obath niyama sinhalayeknam meka sinhalunta yawanna-

இதுவே அக்குறுந்தகவலாகும்.

தமிழாக்கம்:
2032ல் சிங்கள இனத்தைவிட முஸ்லிம் இனம் 53% ஆகும்.நமது சிங்கள நாடு அவன்(ர்)களுக்கு நிரந்தரமாக சொந்தமாகிவிடும்.இப்பொழுதே முஸ்லிம் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்வதை நிறுத்துவோம்.ஹலால் சின்னம் உள்ள பொருட்களை பகிஷ்கரிப்போம்.அவ(ன்)களுக்கு நமது காணிகளை விற்க வேண்டாம்.தம்பி(முஸ்லிம்)களோடு விவாகம் வேண்டாம்..எடிசலாட் போன்ற நிறுவனங்கள் பள்ளிவாயில்கள் அமைப்பதற்கு பெருந்தொகையான பணம் வழங்குகின்றன,பெஷன் பக்,நோ லிமிட் போன்ற இடங்களில் உடுப்பு வாங்க வேண்டாம்,நமது நாட்டை பாதுகாப்போம்.நீங்களும் உண்மையான சிங்களவர்கள் என்றால்,இதை சிங்களவர்களுக்கு அனுப்புங்கள்.

இவ்வாறு இக்குறுந்தகவல் தொடர்கிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை த் தொடர்ந்து 2009ம் ஆண்டிலிருந்தே முஸ்லிம்களுக்கெதிராக பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுவிட்டது."புத்த மதத்தை காப்போம்,இது பௌத்தர்களின் பூமி.............."போன்ற பேரினவாதத்தைப் பறை சாற்றுகின்ற வசனங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் பெரும்பான்மை இனத்தவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் முச்சக்கர வண்டிகளிலும் பொதுமக்கள் நடமாடும் பஸ் நிலையம்,சந்தைகள் போன்ற இடங்களிலும் இன்றளவும் காணப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் முஸ்லிம்களுக்கெதிராக நம்நாட்டில் வேர்விட்டு வளர்கின்ற பேரினவாத அடக்குமுறைக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகளாகும்.

இலங்கை நாட்டில் எந்தவொரு மனிதனுக்கும் எந்தவொரு மதத்தினையும் பின்பற்றி வாழ்வதற்குரிய முழு சுதந்திரமும் உண்டு.

யாருடைய மத விவகாரங்களிலும் யாரும் இடையூறு ஏற்படுத்துவது பாரிய குற்றமாகும்.அவ்வாறு இடையூறுகளோ தடைகளோ விதிப்பது இலங்கை மதவுரிமைச் சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாகக் கருதப்படும்.

ஆனால் இலங்கை நாட்டிற்கும் இந்நாட்டில் வாழ்கின்ற நான்கின மக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கின்ற இப்பேரினவாத செயற்பாடுகள் குறித்து அரசாங்கமோ பாதுகாப்புத்தரப்புக்களோ இது வரைக்கும் வாய்திறக்காமல் இருப்பதே ஆச்சர்யமான விடயமாகும்.

முஸ்லிம் சமூகத்தின் மீது நாடுமுழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இப்பேரினவாதத்திற்கெதிராக இதுவரையில் முஸ்லிம்கள் எந்தவொரு வன்முறைகளிலும் ஈடுபடாமல் பொறுமை காப்பது இலங்கை நாட்டின் ஜனநாயக செயற்பாடுகளில் முஸ்லிம்களுக்கு நம்பிக்கை இன்னும் குறைந்து போகவில்லை என்பதையே பறைசாற்றுகின்றது.


இப்பேரினவாத அடக்குமுறைகளின் நோக்கம் என்ன?

இலங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள அதேநேரம், முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மை சமூகமாக வியாப்பகம் பெற்றுள்ளனர்.

இதன் காரணமாகவே "சிங்களத் தாய்களும் அதிகமான பிள்ளைகளை பெற்று தாய் நாட்டை பாதுகாக்க முன்வாருங்கள்"என்று அண்மையில் சில பேரினவாத சக்திகள் அழைப்பு விடுத்திருந்தன.அத்தோடு சிங்களத் தாய்மார்கள் அதிகம் பிள்ளைகள் பெறும்போது அவர்களுக்கு விருது வழங்கப்படும் சம்பவங்கள் இன்றும் தொடரவே செய்கிறது.

நாட்டின் சனத்தொகைப் பரம்பலில் இந்நிலை நீடித்தால் எதிர்வரும் சந்ததிக்கு இலங்கை பாதியளவிலேனும் முஸ்லிம்களைக் கொண்ட ஒரு நாடாக மாறிவிடும் என்ற ஓர் அர்த்தமற்ற பயத்தின் காரணமாகவேதான் இன்று இவ்வாறான ஒரு சமூகத்தின் மீதான அடக்கு முறைகள் அலைபாய்கின்றன.

இவ்விடையத்தை தம்புள்ளை பள்ளிவாயிலில் நடைபெற்ற வன்முறைக்கும்,காடைத்தனத்திற்கும் தலைமை வகித்த ரங்கிரி விகாரையின் விகாராதிபதி இனாமளுவ தேரர் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியொன்றில் வெளிப்படுத்தினார்.

எனவே எதிர்வரும் காலங்களில் இலங்கையின் பௌத்த சந்ததியை பெருக்க வேண்டுமென்பதற்காகவே தற்போதுள்ள இரண்டாம் நிலை இனத்தின் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.இதன் பிரதிபலிப்புக்கள்தான் இன்று "பொது பலசேனா" என்னும் ஓர் அனாமதேய அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மையின அப்பாவி இளைஞர்களுக்கு வன்முறையை போதித்து நாட்டின் எதிர்காலத்தையும் சிங்கள மக்களின் குடும்ப,சமூகக் கட்டமைப்பையும் சீர்குலைக்கின்ற கைங்கர்யத்தையுமே இவ்வமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

முஸ்லிம்கள் ஆளடையாள அட்டைக்கு தொப்பி அணிந்து படம் பிடித்தல் பற்றிய சர்ச்சை, குர்பான் கொடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள்,பள்ளிவாயில்கள் தகர்ப்பு, சிங்கள மொழிமூல பாடசாலைகளில் முஸ்லிம் பிள்ளைகள் எதிர்கொள்ளும் திட்டமிட்ட சவால்கள் போன்ற முஸ்லிம்களுக்கெதிரான சவால்களில் முன்னின்று செயற்படுவது இந்த "பொது பலசேனா"அமைப்பே.

கடமை தவறிய முஸ்லிம் தலைமைகள்.

இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் எதிர்கால இருப்புக்கள் கேள்விக்குறியாக்கப் பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் தலைமைகள் தொடர்ந்தும் வாய்மூடி மௌனிகளாக இருப்பது முஸ்லிம்களுக்கெதிரான பேரினவாத அடக்குமுறைகளுக்கு மௌன அங்கீகாரம் அளிப்பதாகவே நோக்கப்படுகின்றது.

தேர்தல் மேடைகளில் முஸ்லிம்களின் தனியுரிமை என்றும்,முஸ்லிம்களின் எதிர்காலம் என்றும் வீர வசனங்கள் பேசிய முஸ்லிம் தலைமைகள் தங்களுக்கு பதவிகளும் கதிரைகளும் கிடைத்த மறுகணமே சமூகத்தை மறந்து சமூகத்திற்கு தங்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மறந்து அரசியல் லாபங்களுக்காக முழு சமூகத்தின் குரல்களையுமே அடக்குகின்ற மாபாதகச் செயல்களையே கைக்கொண்டுள்ளன.

தம்புள்ளை நகரில் பட்டப்பகல் வேளையில் பிக்குகளின் தலைமையில் மஸ்ஜிதுல் ஹைரிய்யா ஜும்மா பள்ளிவாயில் தகர்க்கப்படுகிறது.முழு முஸ்லிம் சமூகத்தினதும் மதச் சுதந்திரம் பேரினவாதக்காடையர்களின் கால்களின் கீழே நசுக்கப்படுகிறது.மறுநாள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த முஸ்லிம் அமைச்சர் ஒருவர் "குறித்த பள்ளிவாயிலுக்கு எதுவித சேதமும் இழைக்கப் படவில்லை"என அறிக்கை விடுகிறார்

இன்னுமொரு முஸ்லிம் அமைச்சர் விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறுவதற்கு "தினமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை உச்சரியுங்கள் நன்மை கிடைக்கும்"என்கிறார்.

எங்கே செல்கின்றன எமது முஸ்லிம் தலைமைத்துவங்கள்.

மாற்றுமத அரசியல் தலைவர்களை தர்காக்களுக்கும் பள்ளிவாயில்களுக்கும் அழைத்துவந்து அவர்கள் பெயரில் பிரார்த்தனை செய்த நமது இறையச்சம்(?)மிக்க முஸ்லிம் தலைமைகள் அதே பள்ளிவாயில்களும் தர்காக்களும் பேரினவாத சக்திகளால் உடைக்கப்படும்போது மாயமாகிப்போனதேன்?

தேர்தல் மேடைகள் தோறும் ஜனாதிபதியை அழைத்துவந்து "எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு பள்ளிவாயிலுக்கும் எதுவித சேதமும் இழைக்கப்படமாட்டாது"என்று வாக்குறுதியளிக்க வைத்த முஸ்லிம் தலைமைகள் அதே ஜனாதிபதியின் கண் முன்னாலேயே முஸ்லிம்களின் கலாச்சார மையங்கள் அழித்தொழிக்கப்படும்போது வாய் மூடி மௌனம் காப்பதன் மர்மம்தான் என்ன?

தேர்தல்கள் நெருங்கும்போது முஸ்லிம் சமூகத்தின் மீது அதீத அக்கறைகொள்ளும் அரசியல் தலைமைகள் ஆட்சிக்கு வந்த மறுகணமே "ஆற்றைக் கடக்கும் வரைதான் அண்ணன் தம்பி" என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கின்றன.

மதிப்புக்குரிய முஸ்லிம் அமைச்சர்களே!தலைவர்களே!

நாம் எல்லாம் வல்ல இறைவனை கடவுளாக ஏற்று அந்த இறைவனுக்கு மாத்திரமே அடிபணிகின்ற முஸ்லிம்கள்.மறுமைக்குப் பின்னரான நிரந்தர வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டவர்கள்.பட்டங்கள்,பதவிகள் என்பன இவ்வுலகில் அல்லாஹ் நமக்களித்த பேறுகள்.அவற்றை நம்மால் முடிந்தளவு இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் பயன்படுத்தவேண்டும்.

மறுமையில் நமது பட்டம்,பதவிகள்,பொறுப்புக்கள் பற்றி நிச்சயமாக நாம் விசாரிக்கப்படுவோம்.அந்த நாளில் எந்தவொரு ஆட்சியாளரும் எமக்குப் பரிந்துரை செய்யப்போவதில்லை.இவ்வுலகில் கிடைக்கின்ற அற்ப சொற்ப இலாபங்களுக்காக மறுமை வாழ்க்கையினை தீர்மானிப்பதற்காக அல்லாஹ் நமக்களித்த பொறுப்புக்களை சரிவரப்பயன்படுத்துவோம்.அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சிவாழும் ஒரு முஸ்லிமைப் பார்த்து முழு உலகும் அஞ்சும்.நாங்கள் பத்ரையும் உஹதையும் கண்ட வீரமிகு முஸ்லிம் சமுதாயம்.கல்லையும் மண்ணையும் வணங்கும் காபிர்களுக்கு ஒருபோதும் அடிபணிந்து போகாமல் உறுதியுடன் வாழ்வதற்கு நம் சமூகத்திற்காகக் குரல் கொடுங்கள்.

பொதுமக்களின் கடமை................

நம் நாட்டில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையானது ஒரு சில பேரினவாத இயக்கங்களால் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது.சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் கணிசமான அளவில் அவர்கள் அன்பான இரக்க மனமுடையவர்கள்.

சாதாரணமாக தொழில் செய்து அன்றாட வாழ்க்கை வாழக்கூடிய மக்கள் இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவதில்லை.சிங்கள மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் வாழ்கின்ற எமது முஸ்லிம்கள் அவர்களை எதிரிகளாகப் பார்ப்பது கூடாது.அம்மக்களுடன் மிகவும் கண்ணியமாக நல்ல முறையில் நடந்து கொள்ளவேண்டும்.பரஸ்பரம் அன்பு பாராட்ட வேண்டும்.பெருநாள் தினம்,வெள்ளிக்கிழமை போன்ற விஷேட தினங்களில் அருகிலுள்ள சிங்கள மக்களுக்கு அன்பளிப்புக்களை வழங்குவது,அவர்களின் பிள்ளைகளுக்கு ஆடைகள்,புத்தகங்கள் போன்றவற்றை நமது சக்திக்கேற்ற வகையில் அன்பளிப்புச் செய்வது போன்ற விடயங்களில் அக்கறை செலுத்தவேண்டும்.

அது மட்டுமல்லாது அவர்கள் நோய்வாய்ப் படும்போது வீடுகளுக்குச் சென்று நலம் விசாரிப்பது போன்ற நற்செயல்கள் முஸ்லிம்கள் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

சமூக சேவை அமைப்புக்கள் சிங்கள் மக்கள் செறிவாக வாழக்கூடிய பிரதேசங்களுக்குச் சென்று அங்கே வறிய நிலையிலுள்ள மக்களுக்கு தங்களின் சேவைகளை முன்னெடுக்க வேண்டும்.இரத்ததானம் போன்ற உயிர்காக்கும் சேவைகளை சிங்கள மக்கள் வசிக்கின்ற பிரதேசங்களில் அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்.

எனவே இஸ்லாம் காட்டித் தந்த மனித நேயப்பணிகளை முன்னெடுத்துச் செல்லும் போது முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணங்கள் பெருமளவில் களையப்படும்.

அத்துடன் இறைவனை அஞ்சி நடக்கும் சமூகமாக நம் முஸ்லிம் சமூகம் மாற வேண்டும்.மாற்றுமத மக்கள் வசிக்கின்ற பிரதேசங்களில் வர்த்தகம் செய்கின்ற நாம் கொடுக்கல் வாங்கல்,அளவை நிறுவை போன்ற விடயங்களில் மிகவும் உன்னிப்பாக நடந்து கொள்ள வேண்டும்.மாற்று மதத்தவர்களுடன் நட்புடன் பழகும் நமது இளைஞர்கள் இஸ்லாம் விதித்த எல்லைக்குள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மது,புகைத்தல் போன்றவற்றை கைக்கொள்ளுதல் கூடாது.

எனவே இஸ்லாமிய உணர்வுள்ள ஒவ்வொரு முஸ்லிம்களும் மாற்றுமத மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென்று இஸ்லாம் கட்டளையிட்டுள்ளதோ அவ்வழி வகைகளை கையாண்டு சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை சாதுர்யமான முறையில் எதிர்நோக்கி அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக.

அபூஆஸியா, காத்தான்குடி.

வீட்டில் சிறைப்பட்ட சிறுமி நுஸ்கியா (உடுகொட, கஹடோவிட)

நுஸ்காவின் இருப்பிடம்


தனக்கேற்பட்டுள்ள ஒரு கொடிய நோயினால் தன் வீட்டிலேயே சிறைப்பட்டுக்கிடக்கும் ஒரு சிறுமியின் பரிதாப நிலையை ஆலோசனைக்காகவும், படிப்பினைக்காகவும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விளைகின்றோம். 
103 A, Thihariya Road, Udugoda, Ruggahawilla, Sri Lanka என்ற முகவரியையுடைய  எம், ஏ, எப், நுஸ்கா (M.A.F. Fathima Nuska) என்ற இந்தச் சிறுமி தனது மூன்றாவது வயதில் பதுளைப் பிரதேசத்துக்கு பெற்றோருடன் பயணம் சென்ற போது திடீரென்று அவளுக்கு மிகக் கடுமையான காய்ச்சலேற்பட்டு, அது வலிப்பு நோயாக மாறி, சுயநினைவிழந்த நிலையில் அச்சிறுமியை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.  சுமார் இரு வாரமாக வைத்தியசாலையிலிருந்த போதிலும் நோயின் தன்மையில் சாதகமான மாற்றங்களேதும் ஏற்படவில்லை. வைத்தியர்களாலும் உறுதியான முடிவொன்றைத் தர இயலவில்லை. பெரும் பெரும் வைத்தியர்களைச் சந்தித்துச் சிகிச்சை பெறுவதற்கோ, ஆலோசனை பெறுவதற்கோ முடியுமான சூழ்நிலையில் சிறுமியின் பெற்றோரும் அப்போது இருக்கவில்லை. ஆனாலும்  தம் குழந்தையின் சுகவாழ்வுக்காக தம்மால் முடியுமான பல்வேறு கோணங்களிலும் சிறுமியின் பெற்றோர் முயற்சித்துள்ளனர்.  இச்சிறுமிக்கேட்பட்டுள்ள நோய் குறித்து மருத்துவர்கள் கூறியவற்றிலிருந்து பின்வரும் விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

ENCEPHALITIS 'என்செபலிடிஸ்" மூளையழற்சி என்ற நோயினால் இக்குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது இலகுவில் இந்த நோயைக் குணமாக்க முடியாது. (மூளையழற்சி என்பது மூளையில் ஏற்படும் ஒரு கடிய அழற்சி நோய் ஆகும். இந்த தொற்றுநோய்கான நோய்க்காரணிகள் தீ நுண்மம், பாக்டீரியா போன்றனவாகும். தலைவலி, காய்ச்சல், குழப்பம், சோர்வு, களைப்பு போன்றன இந்நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். பின்னர் நோய் தீவிர நிலையை அடையும்போது வலிப்பு,  தசைவலிப்பு,  நடுக்கம், உளமாயம், நினைவாற்றல் பிரச்சனைகள் என்பன தோன்றும் (விக்கிபீடியா)

சில மருத்துவர்களின் கருத்துப்படி இந்நோய் குழந்தையின் 12வது வயதில் அல்லது 21வது வயிதில் குணமாகலாம்……….
சுமார் தற்போது ஒன்பது வயதை எட்டியிருக்கும் இச்சிறுமி தனது உடலில் ஆடை எதனையும் அணிவதில்லை. ஆடைகளை அணிவதற்குரிய மனநிலையில் அவளில்லை. ஆடைகள் அணிவிக்கப்பட்டால் அவற்றை அவள் கிழித்துக் கொள்வதாகவும், தன்னைப் பராமரிக்கச் செல்வோருக்கும் பலவித ஊறுகளை ஏற்படுத்துவதாகவும் சிறுமியின் தாயார் எம்மிடம் கண்ணீர்மல்கக் கூறினார். மருத்துவப் பரிசோதனைக்காக இச்சிறுமியைக் கொண்டு செல்வது மிகச் சிரமம் என்பதையறிந்த சில வைத்தியர்கள் சிறுமியைத் தம்மிடம் வரவழைக்காமலேயே மருந்துகளை வழங்குமளவிற்கு இச்சிறுமியின் நிலை பரிதாபகரமாகவுள்ளது. தான் என்ன செய்கின்றேன்? தனக்கு என்ன நேர்ந்துள்ளது போன்ற எதுவுமே தெரியாத நிலையில் நடைப்பிணம் போலவே இரும்புக்கம்பிகளாலான கதவால் அடைக்கப்பட்ட அறைக்குள் இச்சிறுமியின் நாட்கள் கழிகின்றன. இதில் வேதனை என்னவென்றால்… மாலையானால் இச்சிறுமிக்கு ஊசி போட்டு அவளை மயக்கமடைய வைத்துத்தான் தம் பிள்ளைக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இச்சிறுமின் பெற்றோர் செய்து வருகின்றனர் என்பதுதான். இந்தச் சிறுமியைப் பரிசோதித்த சில வைத்தியர்கள் அதற்காகக எவ்விதக்க கட்டணங்களையும் பெறாது இலவசமாக மருந்துகளையும் கொடுத்துள்ளனர் என்பதை வைத்து இந்தச் சிறுமியின் நிலை எந்தளவுக்குப் பரிதாபகரமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  இன்று வரைக்கும் இதே நிலையே தொடர்கின்றது.

தமது குழந்தையின் நிலையைப் பார்த்து வெந்து போயுள்ள பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் கூறியுள்ள மாறுபட்ட கருத்துக்களால் நிலையான முடிவெதனையும் எடுக்க முடியாமற்போனமையால் தன் வீடே தனக்கு சிறையாகிப் போனமைதான் சிறுமிக்கு ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிiலாயாகும்.

இச்சிறுமியின் பெற்றோரிடம் காணப்படும் ஆதங்கமெல்லாம் எவ்வழியிலாவது யாராவது தம் குழந்தையின் நோயைக் குணப்படுத்த முடியுமான வழிகளைச் செய்ய வேண்டும், தேவையான ஆலோசனை வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என்பதுதான்.

இதை வாசிக்கும் போது வேதனையாயிருக்கின்றது. ஆனாலும் இதற்கு நாம் என்னதான் செய்யலாம்" என்று இருந்து விடாது உங்களால் முடியுமான ஏதாவதொன்றை இச்சிறுமியின் சுகவாழ்வுக்காகச் செய்ய முயலுங்கள் இம்மையிலும் மறுமையிலும் நிச்சயமாக அதனைப் பெறுவீர்கள். குறிப்பாக இந்நோய் பற்றி நன்கு தெரிந்த வைத்தியர்கள், துறைசார் நிபுணர்களின் தயவையே இச்சிறுமியின் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.






தொடர்புகளுக்கு

நுஸ்காவின் தந்தை அஷ்ரப்.
தொ.பே. இல - 072 6899774 அல்லது 0334906041

விண்டோஸ் 8 இணைந்து வரும் புரோகிறாம்கள்.



விண்டோஸ் 8 சிஸ்டத்தின் புதிய இடைமுகத்துடன் சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைந்தே தரப்படுகின்றன.

விண்டோஸ் ஸ்டோர் அணுகி, ஆயிரக்கணக்கில் நமக்குத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்களை,பெரும்பாலும் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். இங்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படும் இருபது அப்ளிகேஷன்கள் குறித்து காணலாம்.

1. ஸ்டோர்:

விண்டோஸ் ஸ்டோர் அணுகி நாம் பல புதிய அப்ளிகேஷன்களைப் பெற்றுக் கொள்ளலாம். இது ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே போலவே இயங்குகிறது. இதில் சர்ச் மூலம் நமக்குத் தேவையான அப்ளிகேஷனைத் தேடி, இன்ஸ்டால் பட்டனை அழுத்துவதன் மூலம் அதனை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.

சில அப்ளிகேஷன்கள், அவை வைக்கப்பட்டிருக்கும் இணைய தளங்களில் இருந்து தான் பெற முடியும். தளத்திற்கு இணைப்பு பெற்று, டவுண்லோட் செய்து, பின்னர் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

2. இன்டர்நெட் எக்ஸ்புளோரர்:

விண்டோஸ் 8 சிஸ்டத்தின் மாறா நிலையில் தரப்படும் பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10. முன்னர் வந்த பிரவுசர்களைக் காட்டிலும் இது, கூடுதல் வேகத்தில் இயங்குகிறது. தொடுதலில் இதனை இயக்கலாம்.

இதில் ஆட் ஆன் மற்றும் பிளக் இன் புரோகிராம்களைப் பெற்று இயக்க முடியாது. சில இணைய தளங்களில் மட்டும் பிளாஷ் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

3. மெயில், காலண்டர், மக்கள் மற்றும் செய்தி அனுப்புதல்:

விண் 8 சிஸ்டத்தில் Mail, Calendar, People மற்றும் Messaging ஆகிய அனைத்தும் ஒன்றுக் கொன்று இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கிறது. இவற்றில் ஒரு அப்ளிகேஷனில் ஒரு அக்கவுண்ட்டினை இணைத்தால், அது மற்றவற்றிலும் கிடைக்கும். இதில் கிடைக்கும் மெயில் அப்ளிகேஷன், நமக்கு வரும் மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான வசதியை மட்டும் தருகிறது.

இங்கு ஹாட்மெயில், அவுட்லுக் அல்லது ஜிமெயில் அக்கவுண்ட்களை இணைத்துக் கொள்ளலாம். IMAP, POP, or Exchange ActiveSync (EAS) போன்ற எதனையும் இணைக்கும் ஆப்ஷனையும் கொண்டுள்ளதால், எந்த மெயில் அக்கவுண்ட்டினையும் இணைக்கலாம்.

காலண்டர் அப்ளிகேஷன், இணைய தள சேவைகள் தரும் காலண்டர்களைக் காட்டுகிறது. ஹாட்மெயில், அவுட்லுக் மற்றும் கூகுள் காலண்டர்களை இணைக்கிறது. People அப்ளிகேஷன் ஒரே இடத்தில் உங்கள் காண்டாக்ட் அனைத்தையும் தருகிறது. ஹாட்மெயில், அவுட்லுக் மற்றும் கூகுள் அக்கவுண்ட்ஸ் மட்டுமின்றி, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் லிங்க்ட் இன் தொடர்புகளையும் இணைக்கிறது.

Messaging அப்ளிகேஷன் நம்முடைய நண்பர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. விண்டோஸ் லைவ் மெசஞ்சர் மற்றும் பேஸ்புக் சேட் ஆகியவற்றையும் சப்போர்ட் செய்கிறது. ஆனால், இதில் மற்ற பிரபலமான கூகுள் டாக் போன்றவைகளுக்கு சப்போர்ட் இல்லை.

4. சீதோஷ்ண நிலை (Weather):

இந்த அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் இயங்கும் இடத்தின் சீதோஷ்ண நிலையைக் காட்டுகிறது. இத்துடன் மற்ற இடங்களுக்கான சீதோஷ்ண நிலையைக் காட்டும்படியும், செட் செய்திடலாம். இதற்குள்ளாகச் சென்று, ஒவ்வொரு மணி நேரத்திற்குமான, சீதோஷ்ண நிலை, வர இருக்கின்ற நிலைக்கான முன்னறிவிப்பு ஆகியவற்றையும் பெறலாம்.

5. செய்தி, நிதி மற்றும் விளையாட்டு (News, Finance, மற்றும் Sports):

மைக்ரோசாப்ட் Bing தளத்திலிருந்து தகவல்கலைப் பெற்று இந்த அப்ளிகேஷன் இயங்குகிறது. News அப்ளிகேஷன் அண்மைச் செய்திகளை, விரல் தொடுதலில் தருகிறது. மாறா நிலையில் “Bing Daily” என்னும் செய்தியைக் கொடுக்கிறது.

மற்ற BBC, New York Times, மற்றும் Wall Street Journal போன்ற செய்தி சேனல்களுக்கும் இதில் செட் செய்திடலாம். Finance அப்ளிகேஷன் சந்தை நிலவரத்திற்கேற்ப தகவல்களையும் வரை படங்களையும் தருகிறது.

நாம் விரும்பும் பங்குகள் குறித்த தகவல்களை மட்டும் காணும்படி இதனை செட் செய்திடலாம். Sportsஅப்ளிகேஷன், விளையாட்டுத் துறை சம்பந்தமான அண்மைத் தகவல்கள், நடக்க இருக்கின்ற போட்டிகள், நடந்த போட்டிகளின் முடிவுகள் ஆகியவற்றைத் தருகிறது.

6.ட்ராவல் (Travel):

Bing Travel அப்ளிகேஷன் மூலம் நாம் சுற்றுலா செல்லக் கூடிய இடங்கள் குறித்த தகவல்களை அறியலாம். குறிப்பிட்ட இடம் குறித்த தகவல்கள், பயணிக்க வசதிகள், அங்கு இயங்கும் விடுதிகள் போன்றவற்றை அறியலாம்.

7. புகைப்படங்கள் (Photos):

பல்வேறு இடங்களில் நாம் சேவ் செய்து வைத்திருக்கின்ற போட்டோக்களை இந்த அப்ளிகேஷன் மூலம் பார்க்கலாம். ஹார்ட் ட்ரைவ் அல்லது இணைக்கப்பட்டிருக்கும் ட்ரைவ், ஸ்கை ட்ரைவ், பேஸ்புக் அல்லது ப்ளிக்கர் அக்கவுண்ட்ஸ் என எதில் வைத்திருந்தாலும், இதன் மூலம் காணலாம். ஆனால்,கூகுள் பிகாஸா உட்பட மற்ற எந்த புகைப்பட சேவை தளங்களும் இதில் சப்போர்ட் செய்யப்படவில்லை.

8. இசை மற்றும் வீடியோ (Music and Video):

இதன் மூலம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பாடல் மற்றும் வீடியோ பைல்களை இயக்கலாம். இணையதள மியூசிக் மற்றும் வீடியோ ஸ்டோர்களும் இதில் இணைக்கப் பட்டுள்ளன. Xbox Music ஸ்டோரிலிருந்து பாடல்களை இந்த அப்ளிகேஷன் மூலம் கட்டணம் செலுத்திப் பெறலாம்.

9. விளையாட்டுக்கள் (Games):

Xboxbranded Windows 8 கேம்ஸ் மட்டும் இதில் பெறலாம்.

10. பிங் (Bing):

மைக்ரோசாப்ட் பிங் தேடல் சாதனத்தை இந்த அப்ளிகேஷன் தருகிறது.
உங்களுக்கு கூகுள் தேடல் வசதிதான் வேண்டுமென்றால், விண்டோஸ் 8க்கான கூகுள் சர்ச் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனைப் பெற http://apps.microsoft.com/webpdp/enUS/app/googlesearch/308dc1456851487db83b1223a3b52dc2 என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்திற்குச் செல்லவும்.

11. மேப்ஸ் (Maps):

இந்த அப்ளிகேஷன் Bing Mapsஐப் பயன்படுத்துகிறது. ஜி.பி.எஸ். இணைந்த டேப்ளட் ஒன்றை நீங்கள் வைத்திருந்தால், நீங்கள் இருக்கும் இடத்தினை இந்த மேப் மூலம் பெறலாம். கூகுள் மேப் பயன்படுத்துவது போல, குறிப்பிட்ட இரு இடங்களுக்கிடையே பயணம் செய்வதற்கான வழியைப் பெறலாம்.

12. ஸ்கை ட்ரைவ் (SkyDrive):

இணையத்தில் உங்கள் SkyDrive அக்கவுண்ட்டில் பதிந்து வைத்துள்ள பைல்களை இந்த அப்ளிகேஷன் காட்டுகிறது. உங்கள் பைல்களை, இந்த அப்ளிகேஷன் மூலம், SkyDrive தளத்திற்கு அப்லோட் செய்திடலாம்.

நீங்கள் ஸ்கை ட்ரைவ் வசதியை, டெஸ்க்டாப்பிலேயே வைத்துப் பயன்படுத்த வேண்டும் எனில், அதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டும். அதனைப் பெற http://windows.microsoft.com/enUS/skydrive/download என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

13. ரீடர் (Reader):

PDF மற்றும் XPS பைல்களைப் படிக்க உதவும் ஓர் எளிய அப்ளிகேஷன் இது. இந்த வகையில், விண்டோஸ் சிஸ்டம் முதல் முதலாக ஒரு பி.டி.எப். ரீடர் அப்ளிகேஷனைக் கொண்டுள்ளது.

14. கேமரா (Camera):

உங்கள் வெப் கேமராவினைப் பயன்படுத்தி, கேமரா அப்ளிகேஷன் மூலம் போட்டோ மற்றும் வீடியோவினை எடுக்கலாம். பெர்சனல் கம்ப்யூட்டரிலேயே வெப்கேமரா இணைக்கப் பட்டிருந்தால், அதனையும் பயன்படுத்தலாம். விண்டோஸ் ஸ்டோர் அணுகினால், இன்னும் நிறைய இது போன்ற அப்ளிகேஷன்களைப் பெற்று பயன்படுத்தலாம்.

மேலே காட்டப்பட்டவை அனைத்தும் விண்டோஸ் 8 சிஸ்டத்துடனேயே நமக்குக் கிடைக்கின்றன. வருங்காலத்தில், மைக்ரோசாப்ட் இந்த அப்ளிகேஷன் தரும் வசதிகளை இன்னும் சீரமைக்கும் என எதிர்பார்க்கலாம்.


Read more: http://therinjikko.blogspot.com/2012/12/8.html#ixzz2EwmIQghW

சகோதரி ரஜபுன்னிஸா அவர்கள் காலமானார்.

கஹடோவிடவைச் சேர்ந்த சகேதரி ரஜபுன்னிஸா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் அல் ஹாஜ் அனஸ் நானா அவர்களின் மனைவியும். ஹுஸ்னா, வஸ்னா ஆகியொரின் தாயாரும். முஜ்புர்ரஹ்மான், பைஸல் ஆகியொரின் மாமியும் ஆவர்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (12.12.2012) கஹடோவிடவில் நடைபெறும். மேலதிக விபரங்கள் பின்னனர் அறியத்தரப்படும்.

அல்லாஹ் இச்சகோதரியின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

........
ஜனாஸா நல்லடக்கம் இன்ற மாலை 3.30 மணியலவில் கஹடோவிட ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சாபி ரஹீமின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்



மேல்மாகாண சபை உறுப்பினர் சகோதரர் சாபி ரஹீம் அவா்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12.12.2012ஆம் திகதியன்று கஹட்டோவிட பாலிகா வித்தியாலயத்தில் நடாத்தப்படவுள்ளதாக அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது. ஊரின் ஆரோக்கிய விடயங்கள் சம்பந்தமாக வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
சிறீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் சார்பாக மாகான சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள சாபி ரஹீம் அவா்கள் எமது ஊருக்குப் பல சேவைகள் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அல்லாஹ் அவருக்கு சிறந்த வெற்றிகளைக் கொடுப்பானாக!

விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு






சகோதரர் நாஸர் அவர்களின் முயற்சியின் காரணமாக எமது ஊரில் விளையாட்டுத்துறையில் ஈடுபடும் இளைஞர்களுக்கு சில விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பாக கிடைக்கப் பெற்றுள்ளன.

பாராளுமன்றத் உருப்பினரும், பிரதி அமைச்சருமான கௌரவ பண்டு பண்டாரனாயக அவர்கள் இன்று (09.12.2012) கஹடோவிட   Muslim Ladies Study Circle க்கு வருகைதந்ததாகவும், அப்போது எமது ஊரில் விளையாட்டுத்துரையுடன் ஈடுபாடுள்ள இளைஞர்களின் வேண்டுகொளுக்கு இணங்க ஒரு தௌகுதி விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பாக வளங்கப்பட்டதாகவும் தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

மேலும் கௌரவ பண்டு பண்டாரனாயக அவர்களினால் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலய பாடசாலையின் நூலகத்துக்காக சுமார் 100,000 ரூபா நிதியுதவியும் கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.