கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கொழும்பை தளமாக கொண்டு நான்கு முஸ்லிம் தீவிரவாத குழுக்கள்!


 
இலங்கையில் செயல்பட்டு வருகின்ற முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் குறித்து அமெரிக்கா சேகரித்து வைத்திருக்கின்ற தகவல்கள் மிகவும் அதிர்ச்சி ஊட்டுபவையாகவும், அதே நேரம் சுவாரஷியமானவை ஆகவும் உள்ளன.


புலனாய்வுப் பிரிவில் அதிகாரி தரத்தில் உயர் பதவி வகித்தவரான முஸ்லிம் ஒருவரே தூதரகத்துக்கு இத்தகவல்களை 2004 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் திகதி வழங்கி இருக்கின்றார்.

இத்தகவல்களில் மிக முக்கியமானவை வருமாறு:

*கொழும்பை தளமாக கொண்டு முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் நான்கு செயல்பட்டு வருகின்றன. ஸ்ரீலங்கா ஜம்தி இஸ்லாம், தௌஹித் ஜமாத், தப்லீக் ஜமாத், ஜமாதி முஸ்லிம் ஆகியனவே நான்கும். கொழும்பில் உள்ள பல்கலைக்கழகங்களை தளமாக கொண்டு செயல்படுகின்றது ஸ்ரீலங்கா ஜம்தி இஸ்லாம். உலக முஸ்லிம் இளைஞர்கள் பேரவை என்கிற அமைப்பு இந்த இயக்கத்துக்கு நிதி வழங்குகின்றது. அத்துடன் பாகிஸ்தான், சவூதி அரேபியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள பாடசாலைகளில் முஸ்லிம் இளைஞர்கள் கல்வி கற்கின்றமைக்கு இப்பேரவை நிதி அனுசரணை வழங்குகின்றது.

இந்த இளைஞர்கள் கல்வியை நிறைவு செய்து நடு திரும்பிய பின்னர் கொழும்பில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெரும்பாலும் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

தப்லீக் ஜமாத் இயக்கத்துக்கு இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், இந்தியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கிளைகள் உள்ளன. இலங்கை வருகின்ற வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களுக்கு இவ்வியக்கத்தோடு தொடர்புகள் உள்ளன.

ஜமாதி முஸ்லிம் இயக்கம் மிகச் சிறிய குழு. முறையான அளவில் வளர்ச்சி காணவில்லை.

*கிழக்கு இலங்கையில் உள்ள முஸ்லிம் தீவிரவாத குழுக்களை பாகிஸ்தானிய அமைப்பாளர்கள் வந்து சந்தித்து இருக்கின்றார்கள். ஜிஹாத், ஒசாமா, சதாம் .. என்று பெயரிடப்பட்ட முகாம்களில் இக்குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு தற்காப்புப் பயிற்சிகள் கற்பிக்கப்பட்டு உள்ளன.

ஆனால் சுடுகலன்களை இயக்குகின்ற பயிற்சிகள் வழங்கப்பட்டனவா? என்பது தெரியவில்லை. புனிதப் போராட்டங்களில் ஈடுபட முஸ்லிம் இளைஞர்களில் ஒரு தொகையினர் வெளிநாடு சென்றும் இருக்கின்றனர். ஏனையோர் வேலை செய்கின்றமைக்கு அல்லது கல்வி கற்கின்றமைக்கு சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்படுகின்றனர். சவூதியை தளமாக கொண்டு இலங்கையில் இயங்குகின்ற உலக முஸ்லிம்கள் இளைஞர்கள் பேரவை என்கிற அரச சார்பற்ற அமைப்பு நிதி உதவிகளை வழங்கி இந்நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இலங்கையில் சூடானிய பிரஜை ஒருவர் இப்பேரவையை நிர்வகிக்கின்றார்.

* இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத குழுக்களின் தோற்றத்துக்கு பிரதான காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு வந்த தாக்குதல்கள். நாடாளுமன்ற தேர்தலில் அண்மையில் ஆறு ஆசனஙகளை வென்றிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஐ. எஃப். யு (Islamic Unity Foundation) என்கிற அமைப்பின் பேராதரவு உள்ளது. இவ்வமைப்புக்கு இலங்கையில் 125 கோடி உறுப்பினர்கள் உள்ளார்கள். இவ்வமைப்பில் இராணுவ, புலனாய்வு, சமய மற்றும் அரசியல் பிரிவுகள் இருக்கின்றன.

இவ்வமைப்பின் அரசியல் பிரிவு தலைவர்தான் அமீர் அலி. இவர் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி உள்ளார். இவ்வமைப்பிடம் ஆயுதங்கள் உள்ளன. ஏராளமான வட்டாரங்களில் இருந்து ஆயுதங்களைப் பெறுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா அண்மையில் மட்டக்களப்பில் இருந்து பின்வாங்கியபோது அவரிடம் இருந்து ஒரு தொகை ஆயுதங்களை வாங்கி இருக்கின்றனர் அல்லது கைப்பற்றி இருக்கின்றனர்.

இந்தியாவில் இருந்தும் ஆயுதங்கள் இவர்களுக்கு கடத்தப்படுகின்றன. இவ்வமைப்பைச் சேர்ந்த இலங்கை உறுப்பினர்கள் இந்தியாவின் காஷ்மீரில் இராணுவ பயிற்சிகள் பெற்று இருக்கின்றார்கள். காஷ்மீரில் சண்டையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கவும் கூடும். இந்தியாவின் பாதாள உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் இவ்வமைப்பினருக்கு தொடர்புகள் இருக்கக் கூடும். ஆனால் இலங்கையில் உள்ள முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்பதில் நம்பிக்கை இல்லை.

*புலிகளிடம் இருந்து முஸ்லிம்களை பாதுகாக்க திருகோணமலையில் பிரதான மூன்று முஸ்லிம் இராணுவ குழுக்கள் இயங்குகின்றன. நொக்ஸ், ஒசாமா குழு, ஜெட்டி குழு என்பனவே மூன்றும். இவற்றுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு உள்ளது. அம்பாறையில் முஜாஹதீன் ஆயுத குழு உள்ளது. இதில் ஆயுதம் தரித்த போராளிகள் 150 பேர் வரை உள்ளார்கள். திருகோணமலையில் இயங்கி வருகின்ற ஒசாமா குழுவை விட இது பலம் வாய்ந்தது.

*இலங்கையின் பாதாள உலக கோஷ்டிகளுக்கும் முஸ்லிம் தீவிரவாத குழுக்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் நிலவுகின்றன. போதைப்பொருள், ஆயுத மற்றும் மனிதக் கடத்தல்களுடன் இத்தொடர்புகள் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. கொழும்பின் மிகப் பயங்கரமான பாதாள கோஷ்டி மாளிகாவத்தை பகுதியில் உள்ளது. இப்பாதாள கோஷ்டி கருணாவால் கைவிடப்பட்ட ஆயுதங்களை பெற்று கிழக்கு முஸ்லிம் குழுக்களுக்கு விற்று உள்ளது என நம்பப்படுகின்றது. இந்த ஆயுதங்களில் தன்னியக்க துப்பாக்கிகள், கிளேமோர் குண்டுகள், மோட்டார்கள் ஆகியனவும் அடக்கம்.

*கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சுக்கான கட்டிடம் தூதரகத்துக்கு மிக அணித்தாக புதிதாக வாடகைக்கு பெறப்பட்டு உள்ளது. அமைச்சர் அதாவுல்லா. புதிதாக நியமனம் பெற்று இருப்பவர். கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு உதவுவதே அமைச்சின் பிரதான நோக்கங்களில் ஒன்று.

அதாவுல்லாவிடம் இருந்து அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகள் இது வரை வெளிப்படவில்லை. ஆனால் இவருக்கு பண்டா குழு என்கிற பாதாள உலக கோஷ்டியுடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இக்கிரிமினல் குழுவில் 50 – 60 பேர் வரை உள்ளார்கள். இவர்கள் கிழக்கு மாகாணத்துக்கு பணம், பாதுகாப்பு கொடுக்கின்றார்கள். இக்குழுவினர்தான் அதாவுல்லாவுக்கு பாதுகாப்பு சேவைகள் வழங்குகின்றனர். இக்குழுவினர்தான் ஒசாமா தீவிரவாத குழுவுக்கு பயிற்சிகள், போரியல் உபாயங்கள் சொல்லிக் கொடுத்து இருக்கின்றார்கள்.-

முன்னால் கிருத்தவ கன்னியாஸ்திரி Irena Handono இஸ்லாத்தை ஏற்ற வரலாறு.

இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவகன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்துஎழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.


நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.

பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த Liaision Maria என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா (அலை)அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் Stray Sheeps என்று சொல்லப்படக் கூடிய காணாமல் போன ஆடுகளை தேடுவதாகும். காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல.

மாறாக காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.


ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் உறுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.

சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்ட ஆரம்பித்தான்.

பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன்.அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.

இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள் என்று எங்களுக்கு விளக்கினார்கள்.


இந்தோனேசியாவில்,

# ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

# முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

# வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

# ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

# தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம் என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும் என்று கூறினேன்.

உதாரணமாக,
பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!

அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சிக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை அயர்லாந்தின் தீவிரவாதிகள் என்று கருதுகிறது. அவர்கள் ஐரோப்பிய தீவிரவாதிகள் என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் - இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும்.

அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே எனக் கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அப்போது நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டேன்.

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை பாதிரியார் அவர்கள் போதித்த போது கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் - Trinity என்று போதித்தார்.

அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான் என்றும் கூறிற்று.

மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.

கடவுளின் திரித்துவக் கொள்கை (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.

கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.

அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோணத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.

அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் இதற்கு சாத்தியமே இல்லை என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! என்று கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோணத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், முடியாது என்று கூறினார். முன்பு இதற்கு சாத்தியமே இல்லை என்று கூறிய அவர், தற்போது முடியாது என்று மட்டும் கூறினார்.

அது ஏன்? என்று நான் பாதிரியாரிடம் கேட்டேன்.

அதற்கு பாதியார், இது நம்பிக்கை. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.

இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.

ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், இந்த மேசைகளை உருவாக்கியது யார் என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.

அதற்கு நான் இந்த மேசைகளை உருவாக்கியது தச்சர்கள் (Carpenters) என்றேன்.


அது எப்படி? என்று பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும் தச்சார்களாக (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.

அப்போது நீ என்ன சொல்ல வருகிறாய்? என்றார் பாதிரியார்.

அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.

அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் ஜெனரலாக தேர்தெடுத்தால் அந்த தேர்வு மறுக்கப்பட்டுவிடும்.அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!

நீ என்ன சொல்ல வருகிறாய்? என்று மீண்டும் கேட்டார் பாதிரியார்.

அதற்கு நான், மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுல் என்று ஆக்கினால் அந்த தேர்வு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.

பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார் என்று கூறினேன்.

இப்படி பலவிதமான விவாதங்களை அந்தப் பாதிரியாரிடம் அவர் செய்ததாகக் குறிப்பிடுகிறார்.

மதங்கள் பற்றிய பலவிதமான ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்று ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார் முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள்.

முழு மூச்சுடன் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யும் சகோதரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருக்கிறார்..

சகோதரி Irena Handono அவர்களுக்கு அல்லாஹ் இன்னும் அதிகமான மார்க்கத் தெளிவை கொடுப்பானாக!

நன்றி : மடவல நியுஸ்.

இறுதித் தேர்தல் முடிவுகளின் பின்னர் எகிப்திய பாராளுமன்றத்தில் கட்சிகளின் நிலை .

Egypt-Parliament
55 நாட்களாக நீடித்த எகிப்தின் மக்களவைத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தில் கட்சிகளின் இறுதி நிலை தேர்தல் ஆணைக் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.


எகிப்திய பாராளுமன்றத்தில் இஸ்லாமியவாதிகள் 70 வீதமான ஆசனங்களைக் கொண்டுள்ளனர். இஹ்வான்களின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி 38 வீதமான ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது. ஸலபி அந்நூர் கட்சி 29 வீதமான ஆசனங்களைப் பெற்று இரண்டாம் நிலையில் உள்ளது.

எகிப்தின் பழம்பெரும் தாராளவாத அரசியல் கட்சியான வப்த் 11 வீதமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. எகிப்திய கூட்டமைப்பு 10 வீதமான ஆசனங்களைப் பெற்றுள்ளது.

மிதவாத இஸ்லாமியக் கட்சியான அல்-வஸத் 3 வீத ஆசனங்களையும், தொடரும் புரட்சி கூட்டமைப்பு 2 வீத ஆசனங்களையும் பெற்றுள்ளன.

சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி, அந்நூர் கட்சி, வஸத் கட்சி ஆகியன இஸ்லாமியப் போக்குடையவை. இவை இணைந்து 70 வீதமான (38+29+3) ஆசனங்களைப் பெற்றுள்ளன.

இதேவேளை, தற்போது கலைக்கப்பட்டுள்ள முபாரக்கின் முன்னாள் கட்சியான தேசிய ஜனநாயக கட்சியின் ஆதரவுக் கட்சிகள் 04 வீதமான ஆசனங்களை வென்றெடுத்துள்ளன.

எகிப்திய பாராளுமன்றத்தில் மொத்தமாக 508 ஆசனங்கள் உள்ளன. இதில் 498 ஆசனங்கள் தேர்தல் மூலமும் 10 ஆசனங்கள் நியமனம் மூலமும் தெரிவு செய்யப்படுகின்றன.

சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி அங்கம் வகிக்கும் ஜனநாயகக் கூட்டணி 235 ஆசனங்களை வென்றுள்ளது. இது தெரிவு செய்யப்படும் ஆசனங்களில் 47.2 வீதமாகும். இதில் 127 ஆசனங்கள் கட்சிப் பட்டியல் அடிப்படையிலும் 108 ஆசனங்கள் தனிநபர் போட்டி மூலமும் தெரிவாகியுள்ளனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கலவரம்! 21 பேர் காயம்! (படங்கள் இணைப்பு)

பிந்திய தகவல் வெலிக்கடை நியுமகசீன் சிறைச்சாலையில் அதிகாரிகளுக்கு எதிராக சிங்கள கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுவருவதாகவும் இதனால் தமிழ் கைதிகளிடையே பதட்டம் நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் மேற்படி கலவரத்தில் இதுவரை சிறைக் கைதிகள், அதிகாரிகள் என 21 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை முதல் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி எம்.எல். ரஞ்சன என்பவரை இடமாற்றக்கோரி சிங்கள சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் முற்பட்டபோது கலவரம் ஏற்பட்டதாகவும் கலவரத்தின் போது சிறைச்சாலையின் சில அலுவலகங்களுக்கும் களஞ்சியசாலைகளுக்கும் சிங்கள கைதிகள் தீ வைத்துள்ளதாகவும். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்ததார்.இதனிடையே மேற்படி சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகள் குறித்து சம்பந்தன் ஐயாவுடாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன் தமிழ் கைதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிந்திய தகவல்

வெலிக்கடை மகசீன் சிறைச்சாலைக்குள் சற்றுமுன்னர் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 21பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் சிலர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படுவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் பிரசாத் ஆரியவங்ச குறிப்பிட்டார்.அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.தற்போது சிறைச்சாலைக்கு பொலிஸ் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சார் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்








பகிரங்கமாக இளைஞர்கள் இருவர் மது அருந்திய சமபவம்




கஹடோவிடவில் உள்ள இரவுநேர ஹோட்டலின் முன்னால் நேற்று முன்தினத்தன்று இரவு 9.15 மணியளவில் பகிரங்கமாக சிங்கள இளைஞர்கள் இருவர் மது அருந்திய சமபவம் ஒன்று இடம் பெற்றது.


ஒரு முஸ்லிம் ஊரில் எமது இளைஞர்கள் நடமாட்டம் அதிகமான நேரத்தில் இச்சம்பவம் இடம் பெற்றது. எமது ஊரின் பள்ளிவாயிலின் முக்கிய தர்மகர்த்தாக்களும் இச்சம்பவம் நடைபெற்றது என்பதற்கான சாட்சியாளர்களாக இருந்தார்கள்.

ஹோட்டலின் உள்ளே குடிக்க வேண்டாம் என ஹோட்டல் உரிமையாளர் உத்தரவு விட்டதும் வெளியே வந்து போத்தலை கையில் வைத்துக்கொண்டு மாறி மாறி குடித்துக் கும்மாளம் அடித்தனர். பைட்டுக்காக கொத்து ரொடியையும் சுவைக்குச் சேர்த்துக்கொண்டுதான் மதுவை அந்த சிங்கள இளைஞர்கள் அருந்தினர்.
இந்த இஸ்லாம் தடுத்த பாவச்செயலைத் தடுக்க கலிமாச் சென்ன எந்த முஸ்லிமும் அந்த நேரத்தில் முன்வரவில்லை. குறைந்த பட்சம் இது முஸ்லிம்கள் உள்ள ஊர், எம்முடைய கலாச்சாரம் இதற்க்கு அனுமதிப்பதில்லையென்ற வார்த்தைகளை கனிவுடன் கூற யாருக்கும் திராணி இருக்கவில்லை.

இன்று குடிப்பவன் நாளை பாதையில் செல்பவர்களுக்கு தேவையில்லாத வார்த்தைகளை பிரயோகிப்பான். இதன் போது ரோசம் கொண்டு இனப்பிரச்சினைகளுக்கு தூபமிடுவார்கள். முலம் எங்கே என ஆராய்ந்து இப்போதே நடவடிக்கை எடுக்க உரிய பொறுப்புதாரர்கள் தவறிவிடுவார்கள் என்றிருந்தால் நிலைமை புதாகரமாக இடமிருக்கிறது.

ஒரு சில ரூபா இலாபத்துக்காக எமது சிங்கள சமுகத்துடன் உள்ள சுமுக உறவு பாதிக்கப்பட்டு முருகல் நிலைக்கு காரணமாக அமைய இது போன்ற நடவடிக்கைகளை விட்டுவைக்கக் கூடாது

எமது ஊரில் நிறுவாக கட்டமைப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் பள்ளிவாயில்கள், சீர்திருத்த ஜமாஅத்துக்கள் இயக்கங்கள் போன்ற அமைப்பை சேர்ந்தவர்கள் பெரும்பாவங்கள் விடயத்திலும் அஜஸ்மன்ட் செய்கிறார்களா என பொதுமக்கள் அங்கலாய்த்துக்கொள்ள இடம்வைக்கக் கூடாது.
இது சில்லரைப்பிரச்சினையல்ல. பெரும்பாவம் இன்று ஹோட்டலுக்கு வெளியே நாளை பாடசாலைகளுக்குள் அடுத்த நாள்  எமது இளைஞர்களின் கைகளிலும்.....
இது தனிப்பட்ட ஹோட்டல் காரனுடன் தொடர்புபட்டதல்ல. ஒரு முஸ்லிம் ஊரில் எமத கலாச்சாரத்துடன் தொடர்புபட்டது. எமது கலாச்சாரம் குர்ஆனும் சுன்னாவும் என்பது மறந்து விட மாட்டோமே சிந்திப்போம் செயல்படுவோம்.

தகவல்..
ஜதாகுமுல்லாஹ் ஈமைல் அனுப்பிய சகோதரருக்கு நன்றி.