கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

வைபவரீதியாக பாதைதிறப்புக்கு- பா.உ உபெக்ஷா ஸுவர்ணமாலி வெகுவிரைவில் கஹடோவிடாவுக்கு விஜயம்



கஹட்டோவிட School lane அஷ்ரப் ஹாஜியார் மாவத்தையை ஊடருத்துச்செல்லும் பாதை திருத்தற் பணிகள் சென்ற வருடம் நிறைவுபெற்று மக்களின் பாவனைக்கு விடப்பட்டடிருந்தது. சகோதரர் ஸுஹைல் அவா்களின் வேண்டுகோளிற்கிணங்க பாராளுமண்ர உறுப்பிணர் உபெக்ஷா ஸுவர்ணமாலி அவா்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இப்பணிகள் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வைபவரீதியாக இப்பாதையை திறந்துவைக்க பாராளுமண்ர உறுப்பிணர் வெகுவிரைவில் எமது ஊருக்கு சமூகமளிக்க இருப்பதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.
175X10 அடி நீள, அகல எல்லைகளைக்கொண்ட இப்பாதை செப்பனிடல் பணிக்காக சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாதையை செப்பனிட்ட சகோதரா் ஸுஹைல் அவர்களுக்கு ஊர்மக்கள் சார்பாக எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இதுபோன்ற இன்னும் பல சேவைகள் அவா்மூலம் நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆக் கேட்போம்.





ஸ்னோடன் போட்ட புது குண்டு - மண்டை காய்கிறது அமெரிக்கா



பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட 35 நாட்டு தலைவர்களின் மொபைல் போன்களை ஒட்டு கேட்கிறது  அமெரிக்க உளவுத்துறை. & இப்படி ஒரு புதிய குண்டை அமெரிக்காவின் ‘உண்மை விளம்பி’ எட்வர்ட் ஸ்னோடன் போட்டதால் இப்போது ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு தர்மசங்கட நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் ஒத்துழைக்கும் எங்களையே சந்தேகிப்பதா? எங்கள் போன்களை ஒட்டு கேட்டு நம்பிக்கை துரோகம் செய்வதா என்று ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன. பதில் சொல்ல முடியாமல் அமெரிக்கா திணறுகிறது.   அமெரிக்காவின் உளவு அமைப்பின் உயர் அதிகாரியாக இருந்தவர் எட்வர்ட் ஸ்னோடன். இவர் அமெரிக்கா பற்றிய ரகசியங்களை வெளியிட்டதை தொடர்ந்து நாட்டை விட்டு ஓட்டம் பிடிக்க நேரிட்டது. இப்போது ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். பல நாடுகளிலும் அமெரிக்காவின் உளவு வேலை களை இவர் அவ்வப்போது பகிரங்கப்படுத்தி ஆதார ஆவணங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் ஒரு புதிய குண்டை இவர் போட்டார். ‘அமெரிக்க உளவுத்துறை 35 உலக தலைவர்களின் போன்களை ஒட்டு கேட்கிறது’ என்று அவர் வெளியிட்ட ரகசியம் லண்டன் கார்டியன் பத்திரிக்கையில் வெளியானது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாட்டு தலைவர்கள் என்று மட்டும் பொது வாக வெளியிடப்பட்டதால் இன்னும் பரபரப்பு கூடியது. இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகளை பெரிதும் சீண்டி விட்டது. சிரியா விஷயத்தில் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்காவுக்கு ஒத்துழைத்ததற்கு இது தான் பரிசா என்று பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் பெரும் கடுப்பில் உள்ளன. ஜெர்மனி பிரதமர் ஆஞ்செலா மார்கெல் கடந்த வெள்ளியன்று, ‘என் போன் ஒட்டு கேட்கப்படுகிறது. இதற்கு அமெரிக்கா விளக்கம் தர வேண்டும்’ என்று கூறிய மறுநாள், ஸ்னோடன் ரகசிய தகவல்களை கார்டியன் வெளியிட்டது. இது ஜெர்மனிக்கு கோபத்தை அதிகப்படுத்தியது.

தாங்கள் சந்தேகித்தது போல அமெரிக்க உளவு பிரிவு, ஜெர்மனி தலைவர்கள் உட்பட முக்கிய போன்களை ஒட்டு கேட்கிறது  என்பதை உறுதி படுத்துவதாக கருதியது. இதையடுத்து, பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்காய்ஸ் ஹாலன்ட்டும், ஜெர்மனி பிரதமர் மார்கெலும் பேச்சு நடத்தினர். அமெரிக்காவின் நம்பிக்கைக்கு எதிரான செயல்கள் பற்றி அதில் இருவரும் வருத்தப்பட்டனர். ‘இனி அமெரிக்காவை நம்ப முடியாது. நம்பிக்கை இல்லாதவர் புஷ் என்பதை சொன்னபோது, இனி பாருங்கள்; உங்கள் நம்பிக்கைக்கு முழு அளவில் அமெரிக்கா இருக்கும்’ என்று ஒபாமா கூறியிருந்தார். ஆனால் அவர் இப்படி நடந்து கொண்டதால் இனி எதிலும் நம்ப முடியாது’ என்று இருவரும் கொதிப்புடன் கூறினர். கடந்த ஒரு மாதமாகவே இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகளை கவலைப்பட செய்தது. ஐரோப்பிய பார்லிமென்ட் கடந்த வாரம் கூடி, ‘அமெரிக்காவுடன் நிதி தொடர்பான தகவல் பரிமாற்றம் , உளவு தகவல்கள் பரிமாற்றம் ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்தது. தீவிரவாதிகளுக்கு நிதி நடமாட்டம் குறித்து தகவல்களை பரிமாறிக்கொள்ள ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்கா பேசியிருந்தது. ஆனால், ஐரோப்பிய நாடுகளை நம்பாமல் போன்களை ஒட்டு கேட்பது, நிதி தகவல்களை சேகரிப்பது போன்ற செயல்கள் இந்த நாடுகளை ஆத்திரமடைய வைத்தது.

சிரியா விஷயத்தில் அமெரிக்காவின்  முடிவை ஜெர்மனி எதிர்த்தது. ஆனால், பிரான்ஸ் ஆதரித்தது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஆதரித்தாலும், பிரிட்டன் பார்லிமென்ட் நிராகரித்து விட்டதால் அமெரிக்காவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. மேலும், ரஷ்யா தலையிட்டு, சிரியா விஷயத்தில் போரை தவிர்க்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து, ஒபாமாவும் ஒப்புக்கொள்ள வேண்டியதாகி விட்டது. இப்படி குழப்பமான நிலையிலும் ஒத்துழைப்பு தந்த ஐரோப்பிய நாடுகளையே அமெரிக்கா சந்தேகித்து விட்டதே என்று அந்த நாடுகளுக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரான்சில் உள்ள அமெரிக்க தூதர் சார்லஸ் ரிவ்கின், ஜெர்மனியில் உள்ள அமெரிக்க தூதர் ஜான் எமர்சென் ஆகியோரை அந்தந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் அழைத்து தங்கள் கண்டனத்தை வெளியிட்டன.

2006 முதல் ‘டேப்பிங்’
ஸ்னோடன் வெளியிட்ட ரகசிய ஆவணங்களின் படி, 2006 ல் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சிக்கு 200 போன் நம்பர்கள் அடங்கிய பட்டியல் தரப்பட்டது.  அதை உளவு அதிகாரிகள் தொடர்ந்து ஒட்டு கேட்டு வருகின்றனர் என்று உறுதியாகிறது. இது பற்றி வெள்ளை மாளிகை அதிகாரிகள் மறுக்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் இப்படி நடக்காது’ என்று மட்டும் கூறியுள்ளது தான் ஐரோப்பிய நாடுகள் கோபத்தை  அதிகரித்துள்ளது.

ஒட்டு கேட்பதை நிறுத்த முடியாது
ஒபாமாவின் செய்தி தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில்,‘ ஜெர்மனி பிரதமர் மார்கெல் போன் ஒட்டு கேட்கப்பட்டதா என்று உறுதி கூற முடியாது. ஆனால், தலைவர்களின் போன் ஒட்டு கேட்கும் விஷயத்தில் எந்த தவறும் நடக்காது. உலக பாதுகாப்புக்கான நடைமுறையை தான் அமெரிக்கா பின்பற்றுகிறது. இதனால் எல்லாருக்கும்  தான் நல்லது. போன் ஒட்டு கேட்கும் விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை. அது நீடிக்கும்’ என்று கூறினார்.  இது ஐரோப்பிய நாட்டு தலைவர்களை கவலையடைய செய்துள்ளது.


 Jaffna Muslim

ரஷ்யாவை நோக்கி சரிகிறதா சவுதி அரேபிய அரசு?



Al Mukhabarat Al A'amah. என்றால் என்ன தெரியுமா?. சவுதி அரேபியாவின் உளவு ஸ்தாபனம். மன்னரிற்கு விசுவாசமாக செயற்படும் இரகசிய அமைப்பு. இதன் ஆங்கில கருத்து (GIP - General Intelligence Presidency).  உளவறிதல், சவுதி அரசர் இடும் கட்டளைகளை இரகசியாமாக செயற்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்களை இது செய்கிறது. 1956-ல் கிங் அப்துல் அசீஸ் அல் சவுத்தினால் தேசிய தேவை கருதி இது உருவாக்கப்பட்டது. மபாகித் எனப்படும் (General Investigation Directorate) மபாகித்ல் (சவுதி உளவு ஸ்தாபனம்) இருந்து இந்த அமைப்பு தனியாக பிரிக்கப்பட்டு மன்னரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இதன் இயக்குனராக சவுதி ரோயல் குடும்பத்தை சார்ந்த ஒருவரே இருந்து வருவது வழக்கம். அவ்வகையில் தற்போது “பந்தர் பின் சுல்தான்” அதன் தலைவராக இருந்து வருகிறார். 


1983-ல் இருந்து 2005 வரையான காலப்பகுதியில் அமெரிக்காவிற்கான சவுதி அரேபிய அம்பாஸிடராக கடமையாற்றியவர் இந்த பந்தர் பின் சுல்தான். ரொனால்ட் ரீகன், பில் கிளின்டன், ஜோர்ஜ் புஷ் போன்ற அமெரிக்க அதிபர்களுடன் கடமையாற்றியவர். 2012-ரீல் அல் முக்பராத் அல் ஆமாஃவின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். மன்னராட்சிக்கு எதிரான அனைத்துவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஒழிக்கும் பொருப்பினை மன்னர் அப்துல்லாஹ் இவரிடம் கையளித்திருந்தார். ஜித்தாவை தளைமாக மாற்ற அல்-காயிதாவினர் எடுக்கும் அனைத்து பிரயத்னங்களையும் முடியடிப்பதில் கணிசமான வெற்றியையும் இவர் பெற்றுள்ளார். அமெரிக்க உளவமைப்பான சீ.ஐ.ஏ.யுடன் சவுதி அரேபியா சார்பாக இராணுவ, உளவு விவகாரங்களை இவரே கவனித்தும் வருகிறார். 

இவர் சவுதி ரோயல் எயார் போஸில் கடமையாற்றியவர். அமெரிக்க மக்ஸ்வெல் எயார் பேஸில் சிறப்பு பயிற்ச்சிகளை மேற்கொண்டவர். இவர் ஒரு பைலட். அதுவும் சண்டை விமானங்களை ஓட்டும் பயிற்ச்சி பெற்ற பைலட். ஆயுத படைகளை கையாளும் பயிற்ச்சியையும் முடித்துள்ளார். 

அண்மை காலங்களில் இவர் அமெரிக்க செயற்பாடுகள் குறித்து பல அதிருப்தி தரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சிரிய சமர்களத்தில் அமெரிக்க சடுதியாக பின்வாங்கியுள்ளதாகவும், சிரிய அரசுடன் பேச்சுக்களை அது ஆரம்பிக்க முற்பட்டுள்ளதாகவும் இதனால் சவுதி அரேபியா ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கருத்து  வெளியிட்டுள்ளார். 

பஹ்ரைன் கிளற்ச்சியின் போது சவுதி அரேபியா பஹ்ரைனிற்கு ஆதரவாக தனது படையை அனுப்பியது. ஷியாக்கிளின் புரட்சியை அடக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா சவுதி அரேபியாவிற்கு உதவவில்லை என்பதும் இவரது குற்றச்சாட்டாகும். அங்கே தான் அமெரிக்காவின் 5வது கடற்படை பிரிவு தளமமைத்துள்ளது. பலஸ்தீன விவகாரங்களில் அமெரிக்கா இரட்டை வேடம் பூண்டுள்ளது என அவர் அண்மையில் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார்.  ஈரானுடன் அமெரிக்கா உறவுகளை வளர்பதும் சவுதி அரேபியாவிற்கு அது செய்யும் துரோகம் என்பது அவரது கருத்து. 

அமெரிக்கா தொடர்பான கொள்கைகளில் சவுதி அரேபிய அரசு சில மாற்றங்களை கொண்டு வருவதுடன் ஒட்டுமொத்த கொள்கையில் மீளாய்வுகள் செய்யப்படல் வேண்டும் என அவர் மன்னரிற்கு தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அண்மைக்காலமாக அவரது ரஷ்ய விஜயங்களும் அதிபர் விளாடிமிர் புட்டினுடனான சந்திப்புக்களும் இந்த மாற்றங்களிற்கு காரணமாக அமைந்துள்ளதா என சில கேள்விகள் அமைந்துள்ளன. இரண்டு இராஜதந்திரிககளின் சந்திப்பு என்பதனையும் விட சவுதி அரேபிய உளவமைப்பின் தலைவரும் ரஷ்யாவின் முன்னாள் கே.ஜீ.பீ. உளவமைப்பின் தலைவரும் சந்திப்பது என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
 
கைபர்தளம்

கட்டுகஸ்தோட்ட - உகுரஸ்ஸபிட்டிய பள்ளிவாசல் உடைப்பு



கட்டுகஸ்தோட்ட உகுரஸ்ஸபிட்டிய பள்ளிவாசலை இன்று 26-10-2013  அதிகாலை இனம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளதாக கட்டுகஸ்தோட்ட பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் பள்ளி வாசலின் கதவு உடைக்கப்பட்டு பிரதான அரையின் கதவும் உடைக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.

பள்ளிக்குள்ளே ஆற்கள் வந்ததை முஅத்தினார் அவதானித்து ஒளிபெருக்கி மூலம் அறிவித்தததை தொடர்ந்து பள்ளிக்குள் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

பள்ளிவாசலில் இருந்து  எவ்வத பொருளும் திருடப்படவில்லை என்று பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

(மொஹொமட் ஆஸிக்)

மலாலா பாகிஸ்தானிய பெண் இல்லையா (தகவலின் நம்பகத்தன்மை) ?????????



கடந்த இரண்டு நாட்களாக சமூக தளங்களில் பல சகோதரர்கள் "மலாலா பாகிஸ்தானிய பெண் இல்லை - திடுக்கிடும் தகவல்" என்ற ஒரு பதிவை ஷேர் செய்திருந்தார்கள். இந்த கட்டுரை நதீம் பரா...ச்சா என்ற ஊடகவியாளருடையது. இந்த மனிதர் இந்த கட்டுரையை பாகிஸ்தானின் டான் ஊடகத்திற்காக எழுதினார். இதனை தான் காப்பி செய்து சகோதரர்கள் கொடுத்த தளத்தில் (lathee farook என்று தொடங்கும் லிங்க்) போட்டுள்ளார்கள்.

கட்டுரையின் உண்மை தன்மையை இப்போது காண்போம். இந்த கட்டுரை தொடங்கும் போதும் முடியும் போதும், டிஸ்கி (குறிப்பு) என்று போட்டு அதில் "இந்த கட்டுரை கேலிக்காகவும், கற்பனையாகவும் எழுதப்பட்டது" என்பதை டான் ஊடகம் தெரிவித்து விடுகின்றது. ஆனால் இந்த டிஸ்கி நம் சகோதரர்கள் கொடுத்த தளத்தில் இல்லை. இருந்திருந்தால் நம் சகோதரர்கள் இதனை ஷேர் செய்திருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகின்றேன்.

இவை எல்லாத்தையும் விட, அந்த கட்டுரையை முழுமையாக படித்தால் அதில் உள்ள கேலியை நாம் புரிந்துக்கொள்ளலாம். உதாரணமாக: மலாலா குறித்த உண்மையை வெளியே தெரிவித்த ISI ஏஜென்ட், தன்னை யாரும் கண்டுபிடிக்க கூடாதென்று ஸ்பைடர்மேன் உடையில் தோன்றி விளக்கமளித்தார் என்று கூறி அவர் அந்த உடையில் தோன்றும்படியான படு கிண்டலான படத்தையும் டான் வெளியிட்டிருந்தது (இத்துடன் அந்த படத்தை அட்டாச் செய்துள்ளேன்). மேலும், மலாலா சுடப்படும் போது, உண்மையை யாரும் அறியாமல் இருக்க, தக்காளி சாஸை தன் மீது தடவிக்கொண்டு ரத்தம் வருவது போல நடித்தார் என்றும் அந்த கட்டுரையில் வருகின்றது. இப்படி அந்த கட்டுரையின் கேலிகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

மலாலா குறித்து எதிர்மறையான கருத்துக்கள் நிலவுவதால் அவற்றை கிண்டலடித்து இந்த கட்டுரையை எழுதியுள்ளார் நதீம். ஆகவே சகோதரர்களே, ஏதோ ஒரு தளத்தில் வெளியான செய்தியின் உண்மை தன்மையை ஆராயாமல் தயவுக்கூர்ந்து பதியாதீர்கள்/ஷேர் செய்யாதீர்கள்.

டானில் வெளியான அந்த கட்டுரை: http://dawn.com/news/1048776/

வஸ்ஸலாம்..
Aashiq Ahamed

Facebook கணக்கின் User Email ஐடியை எவ்வாறு மாற்றுவது?

 
கூகுள் சேவைகளுக்கு அடுத்தப்படியாக வந்தேமாதரத்தில் அதிக இடுகைகள் இந்த பேஸ்புக் தளத்தை பற்றியதாக தான் இருக்கும். அந்த அளவு பல்வேறு வசதிகள் சமூக இணையதளமான பேஸ்புக்கில் உள்ளது. பெரும்பாலானவர்கள் பேஸ்புக் ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் பெர்சனல் ஈமெயில் ஐடியில் ஓபன் செய்து விடுகின்றனர். ஆதலால் அவர்களின் ஈமெயில் ஐடிக்கு பேஸ்புக் தளத்தில் இருந்து ஏராளமான ஈமெயில் அறிவிப்புகள் வருவதால் முக்கியமான ஈமெயில்களை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது. அல்லது உங்களின் பெர்சனல் ஈமெயில் தெரிந்து விடுவதால் அந்த ஐடியை சுலபமாக ஹாக் செய்து உங்கள் ரகசியங்களை கண்டறியும் பிரச்சினையும் உள்ளது. ஆதலால் பேஸ்புக் கணக்கை எப்படி இன்னொரு ஈமெயில் ஐடிக்கு மாற்றுவது என பார்க்கலாம்.
  • முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
  • உங்களுக்கு வரும் விண்டோவில் Email பகுதியில் உள்ள Edit என்ற லிங்கை கிளிக் செய்யவும். 
  • அடுத்து Add another Email என்பதை கிளிக் செய்யவும். 
  • இப்பொழுது வரும் விண்டோவில் உங்களின் புதிய ஈமெயில் ஐடியை கொடுத்து பேஸ்புக்கில் இப்பொழுது உள்ள Password கொடுத்து Save Changes என்ற பட்டனை அழுத்தவும். 
  • மேலே உள்ள படத்தில் உள்ளது போல சரியாக கொடுத்து Save Changes என்ற பட்டனலை அழுத்தியவுடன் உங்களின் புதிய ஈமெயில் ஐடிக்கு Activation link செய்தி அனுப்ப பட்டதற்கான அறிவிப்பு வரும். 
  • உங்களின் ஈமெயில் ஓபன் செய்து அதில் உள்ள Activation Link கிளிக் செய்தால் உங்களின் புதிய ஈமெயில் ஐடி பேஸ்புக்கில் சேர்ந்து விடும்.
  • மறுபடியும் Account Settings - Email - Edit பகுதிக்கு சென்று புதிய ஈமெயிலை தேர்வு செய்து பேஸ்புக் பாஸ்வேர்ட் கொடுத்து கீழே உள்ள Save changes என்பதை கிளிக் செய்து விடவும். 
  • இப்பொழுது மறுபடியும் அதே Email - Edit பகுதிக்கு சென்று பழைய ஈமெயில் அடிக்கு நேராக உள்ள Remove என்ற லிங்க் அழுத்தி கீழே பாஸ்வேர்ட் கொடுத்து Save Changes அழுத்தினால் பழைய ஈமெயில் ஐடி முழுவதுமாக பேஸ்புக் கணக்கில் இருந்து நீங்கிவிடும்.

இனி நீங்கள் புதிய ஈமெயிலில் பேஸ்புக் கணக்கை உபயோகிக்கலாம். உங்களின் பெர்சனல் ஈமெயில் ஐடியையும் பாதுகாக்கலாம்.

மலாலா பகிஸ்தானியப் பெண் அல்ல – திடுக்கிடும் மர்மம்


 
 
மலாலா பாகிஸ்தானியக் குழந்தை அல்ல. அவளின் நிஜப்பெயர் ஜேன் (Jane). 1997 இல் ஹங்கேரி (Hungary) நாட்டில் பிறந்தாள். அவளது உண்மையான பெற்றோர்கள் கிரிஸ்தவ மிஷனரிகள் ஆவர்.
2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் சுவாத் மாநிலத்தில் இரகசியமாக கிரித்தவ சமயத்தைத் தழுவிய தம்பதியினருக்கு தம் குழந்தையை தத்துக்கொடுத்தார்கள்.
அவள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு, அமெரிக்காவும் பாகிஸ்தானிய இராணுவமும் இணைந்து அரங்கேற்றிய ஒரு நடாகம்.
மேலும் பல திடுக்கிடும் தகவல்களை தரவு ரீதியாக ஊடகவியலாளர் லதீப் பாரூக் (Latheef Farook) தருகின்றார்.
மேலதிக விபரங்கள் இங்கே செல்லவும்.
இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை உரிதிப்படுத்தமுடியவில்லை

“ட்ரோன் அட்டாக்” எனும் பெயரில் நிகழ்த்தப்படும் அமெரிக்க பயங்கரவாதம் !!

People gather at the site of a drone strike on the road between Yafe and Radfan districts of the southern Yemeni province of Lahj August 11, 2013. (Reuters)
written by: Abu Sayyaf

அமெரிக்க தாக்குதல்களில் அவர்கள் எதிரிகளை கொன்றதை விட எதிலும் சம்மந்தம் இல்லாத சாதாரண பொது மக்களை கொன்றதே அதிகம் 
 ரு ஜீப் வண்டி புளுதியை கிளப்பிக்கொண்டு விடியல் காலை செல்கிறது. சில நிமிடங்களில் அது வெடித்து சிதறுகிறது. எங்கும் புகை மண்டலம். சிதறடிக்கப்பட்ட கருகிப்போன ஜீப்பினுள் எட்டிப் பார்த்தால் ஒரு தாயும் அவள் குழந்தைகளும் அவள் கணவரும் பிணமாக எரிந்த நிலையில் கோரமாக காட்சி தருகின்றனர். விடயம் இது தான். அமெரிக்க கண்காணிப்பு சட்டலைட் தொழில் நுட் ப தகவல்களிற்கமைய, ஜீப்பில் செல்வது அல்-காயிதா ஆதரவு பயங்கரவாதிகள்.  ட்ரோன் ஆளில்லா கட்டுப்பாட்டியக்க விமான கமெராக்கள் மூலம் அந்த ஜீப் கண்காணிக்கப்பட்டு பின் இலக்கு வைக்கப்படுகிறது. ஒரு ஏவுகணை மூலம் இலக்கு அழிக்கப்படுகிறது. ஜீப்பினுள் ஏ.கே.47 ஒன்று மட்டும் கிடந்தால் போதும் அமெரிக்க அறிக்கையில் மிஷன் கொம்பிளீடட் என அறிக்கை வரும். இறந்தது பொது மக்களாக இருந்தால் ரியலி வீ ஆர் வொரியிங் திஸ் ஸ்ரஜடி என அறிக்கை வரும். அவ்வளவு தான். 

யெமனில் மீண்டும் அப்பாவிகள் ட்ரோன் விமான தாக்குதலில் பலியாக்கப்பட்டுள்ளதாக Human Rights Watch மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தனது எதிரிகளை ட்ரோன் மூலம் வேட்டையாடுவது இப்போததைய அமெரிக்க ஸ்டைலும் டெக்னிக்குமாகும். சட்டலைட் உதவியுடன் வழிப்படுத்தப்படும் கட்டளைகளிற்கிணங்க ட்ரொன் ஆட்கொல்லி விமானங்கள் தங்கள் லேசர் கைடட் ஏவுகணைகளை இலக்கு நோக்கி ஏவுகின்றன. 

102 பக்க அறிக்கையை ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பானது யெமன் மீதான அமெரிக்காவின் பொது மக்கள் படுகொலைகள் பற்றி பேசுகிறது.  அம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் அமைப்பும் 2013ல் அமெரிக்கா மேற்கொண்ட பாகிஸ்தானின் வசிரிஸ்தான் மற்றும் குனார் பிரதேசங்கள் மீதான ட்ரோன் தாக்குதலால் பலியாகியுள்ள அப்பாவி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பற்றி குற்றம் சுமத்துகிறது.

அமெரிக்காவின் லோ ஒப் வோர் எனும் சண்டைக்கான சட்டங்கள் ட்ரோன் தாக்குதலிற்கு தாராள அனுமதியை அளிக்கின்றன. அதை உயர்தரமான இழப்புக்கள் அற்ற, செலவு குறைந்த, துரிதகதியில் நிகழ்த்தப்படும் தாக்குதல் என நியாயப்படுத்துகிறது. “சேர்ஜிகல் ஸ்ரைக்” எனும் இவ்வகை தாக்குதல்கள் அமெரிக்க லோ ஒப் வோரில் முதன்மை ரக தாக்குதல்களில் ஒன்றாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. 

அமெரிக்க தாக்குதல்களில் பயங்கரவாதிகளை விட பொதுமக்களே அதிகம் மரணிக்கின்றனர் என ஹியுமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பு சாடியுள்ளது. ட்ரோனினால் இலக்கு வைக்கப்படுபவர்களில் 70 விகிதமானவர்கள் அப்பாவி பொதுமக்கள் எனவும் மிகுதி 30 விகிதமானவர்களே பயங்கரவாதிகள் என்றும் அந்த அமைப்பு புள்ளி விபரங்களுடன் உறுதிபட தெரிவிக்கின்றது. 

 ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பின் இந்த அறிக்கையிடல் பாராட்டத்தக்க ஒரு செயற்பாடாகும். அதே வேளை அமெரிக்காவின் எதிரிகளை “பயங்கரவாதிகள்” என்று எந்த அளவுகோலின் அடிப்படையில் அது குறிப்பிடுகிறது என்பது நியாயமிக்க கேள்வியாகும். ஒரு யெமனியிடமோ அல்லது ஒரு வசிரிஸ்தான் வாசியிடமோ இறந்தது யார் என்றால் அது ஒரு புனித போராளி என்பான். இறந்தவரை கண்ணியமாக “அஷ்-ஷஹீத்” என்று சங்கையாக விளிப்பான். ஆக இறந்தவர் ஒரு தரப்பினரிற்கு புனித போராளி. மறு தரப்பினரிற்கு பயங்கரவாதி. இதில் ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பும், அம்னஸ்டி இன்டர்னஷனலும் அமெரிக்க எதிர்தரப்பினரை அமெரிக்கா குத்தும் முத்திரைகளான “பயங்கராவாதி, முஸ்லிம் அடிப்படைவாதி” போன்ற பதப்பிரயோகங்களை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் அடிப்படை பார்வைகள் என்ன என்பத பற்றிய கேள்விகள் எழுவதும் நியாயமானதே. 

மனித குலத்திற்கு எதிரான ஒரு அப்பட்டமான ஒரு இனஅழிப்புசார் குற்றத்தை அமெரிக்கா “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் நடாத்திகொண்டிருக்கிறது. டிஜிட்டல் மெக்கானிக்கள் உபகரணங்கள் இன்று ஒரு முஸ்லிமின் உயிரை எடுப்பதா விடுவதா என்று தீர்மானிக்கின்றன. 

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் பாம்பு ரோபோ

 
 
நாஸா (NASA) அமைப்பு மார்ஸ் கிரகத்திற்ககு சோஜோர்னர் (sojourner), ஸ்பிரிட் (spirit) மற்றும் ஆப்பர்ஷூனிட்டி (opportunity) ரோபோட்களை அனுப்பி மார்ஸ் கிரகத்தில் உள்ள மண்ணின் மாதரியை எடுக்க மற்றும் கேமராவை ஆப்ரேட் செய்ய ரோபோடிக் கைகளும் உண்டு.

இந்த ரோபோட்கள் மார்ஸ் கிரகத்தில் இருக்கும் மண்ணை சோதனை செய்து அதை பற்றிய தகவலை பூமிக்கு அனுப்பும். ஆனால் இந்த ரோபோட்கள் மார்ஸ் கிரகத்தில் உள்ள சில முக்கியமான இடங்களுக்கு சென்று மண்ணை எடுத்து பரிசோதிக்க முடியவில்லை. அதற்க்காகவே பாம்பு ரோப்பாட்டை (snake robot) அடுத்து மார்ஸ்க்கு பரிசீலனை செய்கின்றனர். பாம்பு வடிவ ரோபோட் மார்ஸ் கிரக்கத்தில் உள்ள மத்த ரோபோட்கள் செல்ல முடியாத இடத்திற்க்கு சென்று மண்ணை பரிசோதிக்க உதவும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கான கட்டணம் மற்றும் விதிமுறைகள்.



கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டதன் பின்னர் அந்த நெடுஞ்சாலையை பயன்படுத்துவதற்கான கட்டணம் 300 ரூபாவிலிருந்து 800 ரூபாவரை இருக்குமென துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இன்று 21-10-2013 அறிவித்துள்ளது.

பேலியகொடையிலிருந்து கட்டுநாயக்கவரை செல்லுகின்ற கார்,ஜீப்,சிறிய வான், கெப் ரக வாகனங்களுக்கு 300 ரூபாவும் அடுத்த வகையான வாகனங்களுக்கு 450 ரூபாவும் பஸ்களுக்கும் அதனிலும் பெரிய  வாகனங்களுக்கு 800 ரூபாவும் அறவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தையும் கொழும்பையும் இணைக்கும் கட்டுநாயக்க புதிய அதிவேக நெடுஞ்சாலை பொதுமக்களின் பார்வைக்காக நாளையிலிருந்து 22 ஆம் திகதியிலிருந்து மூன்று நாட்கள் திறந்துவிடப்படும்.

ஒக்டோபர் 27 ஆம் திகதியன்று இந்த நெடுஞ்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படுவதற்கு முன்னர் பொதுமக்கள் பார்வைக்காகவும் சமய அனுட்டானங்களுக்காகவும் கேளிக்கைகளுக்காகவும்; இந்த நெடுஞ்சாலை திறந்துவிடப்படவுள்ளது.

இதன்போது பொதுமக்கள் இந்த அதிவேக பாதைவழியே நடந்து செல்ல முடியும் எவரும் வாகனங்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையானது ஒக்டோபர் 24 ஆம் திகதியின்று இந்த நெடுஞ்சாலையில் நடை பவனியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

பல சமய, கலாச்சார, கேலிக்கை நிகழ்வுகள் கட்டுநாயக்க சீதுவை, ஜா-எல நகர சபைகளினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

முத்துராஜவெல சதுப்பு நிலம், நீர்கொழும்பு கடனீரேரி ஆகிய திறந்த வெளியூடாக இந்த நெடுஞ்சாலை 26 கிலோமீற்றர் நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது.


 

GPS (Global Positioning System) என்றால் என்ன?

                         

GPS (Global Positioning System ) என்ற வார்த்தையை நாம் இப்போது அடிக்கடி கேட்கிறோம். புவி இடம் காட்டும் அமைப்பு என்று தமிழில் அழைக்கப்படும் இது உலகத்தில் எந்த இடத்தையும் மிகத் துல்லியமாக வானில் செயற்கைக்கோள்கள் மூலம் கண்டறியும் கருவி ஆகும். இது பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் காண்போம். 

GPS (Global Positioning System ) என்ற புவி இடம் காட்டும் அமைப்பு, ஒவ்வொரு சுற்றிலும் குறைந்தது இரண்டு தடவைகள் உலகை சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் (man made stars-satellites) மூலம் தகவல்களை பயனாளிகளுக்கு தரும் முறையாகும். குறைந்தது மூன்று /நான்கிற்கு மேற்பட்ட கோள்கள் நமக்கு மேலே வந்து கொண்டிருக்கும். இந்த முறையில் 32 சாட்டிலைட்கள் செயலில் ஈடுபடுகின்றன. இவற்றில் 24 தொடர் இயக்கத்திலும்,சில பழுதடையும் போது பாவிக்கவும்,சில செயலில் ஈடுபடுத்த முடியாத நிலையிலும் உள்ளன. GPS முறையில் portable navigation devices, smartphone apps, GPS sports watches, sports shoes, maps , real-time services, HD Traffic, cars, ships, aircraft, OpenStreetMap (OSM) என பல வாங்கிகள் (Navigation Receiver) இயக்கப்படுகின்றன.

ConstellationGPS
அக்டோபர் 4, 1957 இல் அப்போதய சோவியத் யூனியன் உலகின் முதலாவது சாட்டிலையிட்டை (ஸ்பூட்னிக்) வானில் ஏவியது. அமெரிக்கா தனது முதல் சாட்டிலயிட்டை (Explorer 1 ) 1958 ஜனவரி 31 இல் வானில் ஏவியது.
மேற்சொன்ன வாங்கிகளுக்கு (Receiver), அமெரிக்காவின் GPS பொதுவாகப் முறை பயன்பட்டாலும், வேறு இரண்டு நாடுகளாலும் GPS முறையில் வேறு பல பாவனைகளுக்காக தனியாக இயக்கப்படுகின்றன. அவை,

(1) Global Positioning System (GPS)
அமெரிக்காவும்,

(2) Global navigation satellite systems (GLONASS)
ரஷ்யாவும்,

(3)
ஐரோப்பாவின் Galileo, Global Navigation Satellite System (GNSS).
சீனாவின் Compass சரியாக இயங்கவில்லை.
நான் எங்கிருக்கிறேன், எங்கே போகிறேன், நீங்கள் எங்கிருக்கிறீர்கள், இலக்கை அடைய சரியான வழி, எப்போது அங்கே செல்வேன் போன்ற கேள்விகளுக்கும் பதில் தருவதன் மூலம் இடங்கள் குறித்த சரியான தகவல்களை நமக்கு இது காட்டுகிறது. குழந்தைகளை பெற்றோர் கண்டறியவும்,அவர்களை அறியாது கண்காணிக்கவும், அப்படி கண்டறிவதன் மூலம் அவர்களிடம் செல்லவும், பாதுகாப்பாக அழைத்து வரவும், தவறான செயல்களில் ஈடுபடாது தடுக்கவும் GPS ஐப் பயன்படுத்துகிறார்கள். அதே போல் இணையத்தளங்கள், சமூக தளங்கள் இணைய பயனாளிகள் எங்கிருந்து இணையத்திற்கு வருகிறார்கள் என்பதையும் GeoLocation மூலம் கண்டறிகிறார்கள்.
இந்த 32 கோள்களும்,நிலத்தில் இருந்துஏறக்குறைய 20,200 – 26,600 கிமீ தூரத்தில்,ஆறு நீள்வட்டப் பாதையில், 11500கிமீ வேகத்தில் உலகை சுற்றுகின்றன. நமது வன்பொருளை (Receiver) ஐ இயக்கும் போது,நமக்கு மேலே உள்ள நான்கு கோள்களில் இருந்து தரவு சமிக்ஞைகளை carrier waves மூலம் பெற்றுக் கொள்கிறது.(carrier Frequencies, Digital Codes மற்றும் Navigation Message போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளது)

1960
இல் அமெரிக்க பாதுகாப்பு துறையினரால் சோதனை முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டு, 1970 இல் தரையில் இருந்தும் (The ground-based Omega Navigation System),
பின்னர் 1978 பெப்ரவரி 22 இல் சோதனை செயற்கைகோள் அனுப்பப்பட்டும்,1993 டிசம்பர்(08.12.1993 )முதல் 24 கோள்களுடன் செயல்பட ஆரம்பிக்கப்பட்டு,17.07.1995 முதல் முழு செயல்பாட்டிற்கும் கொண்டுவரப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை (DOD) அறிவித்தது. 2012 இல் 32 கோள்களாக உயர்ந்த இவை, 55 பாகை (degree) சாய்வாக, பூமியை சுற்றிவர எடுக்கும் நேரம், 11 மணி 58 நிமிடங்களாகும்..
இந்த GPS முறை மூன்று பிரிவுகளாக செயல்படுகிறது.

Space segment
Control segment
User segment
இதில் Space segment என்பது வானில் இயங்கும் செயற்கைகோள்கள் இருக்கும் பகுதி.
அடுத்து உள்ள Control segment பூமியில் இருந்து செயற்கை கோள்களின் இயங்கு பாதை, அவற்றின் செயல் போன்றவற்றை கட்டுபடுத்த இயங்கும் பகுதி.

User segment
பகுதி தான் நம்மிடம் இருக்கும் கருவிகள். இவற்றின் மூலம் நாம் ஒரு இடத்தை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம். கார், மொபைல்போன் உட்பட பல கருவிகளில் Map navigation வசதியாக இது தான் உள்ளது.

map

Distance = Velocity*Time
என்ற அலகை வைத்து இவை கணக்கிடப்படுகிறது. இதில் GPS signal இன் Velocity ஒளியின் வேகமான 300,000 Km/s இலும், GPS transmissions frequencies 1575.42 and 1227.60 Mhz ஆகவும் (L-Band இல்) இருக்கும்.இவை Trilateration என்ற முக்கோண வடிவிலான முறையில் செயல்படுகின்றன.கோள்களில் Atomic Clocks பயன்படுத்தப்படுகின்றன.
இது தவிர தற்போது அமெரிக்காவில் இயங்கும், GPS இன் Wide Area Augmentation System -WAAS- இன் செயல்முறை மிகத் துல்லியமாக கணக்கிடுகிறது. இது விமானங்கள், aircraft, போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

நாடுபூராகவும் 856 (அரச) முஸ்லிம் பாடசாலைகள் (விபரம் இணைப்பு)


நாடுபூராகவும் 856  ( அரச ) முஸ்லிம் பாடசாலைகள் செயல்படுவதாக கல்வி அமைச்சு இறுதியாக வெளியிட்டுள்ள தனது புள்ளி விபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக 148 முஸ்லிம் பாடசாலைகள் செயல்படுகின்றன. குறைந்த எண்ணிக்கையாக தலா ஒவ்வொரு முஸ்லிம் பாடசாலையாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் செயல்படுகின்றன.

  மாவட்ட ரீதியாக முஸ்லிம் பாடசாலைகளின் எண்ணிக்கை விபரம் வருமாறு:

 கொழும்பு          19             
 கம்பஹா           20
 களுத்துறை         20
 கண்டி              76
 மாத்தளை          22
 நுவரெலியா         9
 காலி               13
 மாத்தறை          13
 அம்பாந்தோட்டை    9
 யாழ்ப்பாணம்        1
 கிளிநொச்சி          1
 மன்னார்            32
 வவுனியா           11
 முல்லைத்தீவு         1
 மட்டக்களப்பு         70
 அம்பாறை           148
 திருக்கோணமலை    117
 குருநாகல்            78
 புத்தளம்              53
 அநுராதபுரம்           62
 பொலனறுவை         16
 பதுளை               23
 மொனராகலை         5
 இரத்தினபுரி            7
 கேகாலை             30

 நாட்டில் மொத்தமாக உள்ள 10118 அரச பாடசாலைகளில் 6826 சிங்களப் பாடசாலைகளும் 2223 தமிழ் பாடசாலைகளும் 856 முஸ்லிம் பாடசாலைகளும் செயல்படுகின்றன. 213 பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதாகவும் அமைச்சின் புள்ளி விபரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

Jaffna Muslim

”மைதானம்” சம்பந்தமாக கஹடோவிட விளையாட்டு கழகத்தினால்(KSC) அன்மையில் எடுக்கப்பட்ட சில முடிவுகள்..




ஆங்கில மொழிமூலம் கிடைக்கப்பெற்ற இநத தகவல்களை நாம் எமது வாசகர்களுடன் தமிழ்மொழி மூலம் பகிர்ந்துகொள்கின்றோம். இந்த இளைஞர்களுடைய முயற்சிக்கு எல்லாம் வள்ள அல்லாஹ் உதவிசெய்யவேண்டும் என்ற பிரார்த்தனைகளுடன்....


கஹடோவிட விளையாட்டு கழகத்தினால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த எமது ஊரின் முக்கிய அணிகளின் சில உறுப்பினர்களைக்கொண்ட கூட்டம் ஒன்று சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (11/10/2013) அன்று சகோ. முபீன் ஹாஜியார் வீட்டில் இடம்பெற்றது. மேற்ப்படி கூட்டத்தில் எமது ஊர் மைதானத்தின் தோற்றம் பற்றியும், கஹடோவிட விளையாட்டு கழகத்தின் நிர்வாக தோற்றம் பற்றியும் சில விடயங்கள் பேசப்பட்டன. கூட்டத்தின் கருவாக, எமது ஊர் வீரர்களின் நன்மை கருதியும், ஊர் மைதானத்தின் நன்மை கருதியும் சில முக்கியமான சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேற்ப்படி வகுக்கப்பட்ட சட்டங்களாவன,

1) மைதானத்தின் எல்லைக்குள் எந்தவிதமான போதைப்பொருளும் (தூல்,சிகரட்,மாவா,சாராயம்,மற்றும் இது சார்ந்த ஏனைய போதைப்பொருட்கள்) பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறும் பட்சத்தில், அவர் அந்த நாளில் விளையாட அனுமதி வழங்கப்பட மாட்டாது, அது ஒரு சுற்றுப்போட்டியாக இருக்கும் பட்சத்தில் அவர் அந்த போட்டித்தொடரிலேயே விளையாட அனுமதி மறுக்கப்படுவார்.

2) மைதானத்தில் விளையாடுபவர்கள் தொடைகளை மறைத்து விளையாட வேண்டும்.

3) இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாத்திரமே சுற்றுப்போட்டிகள் அமைய வேண்டும்.

4) சுற்றுப்போட்டிகள் நடத்த வேண்டும் எனில், சுற்றுப்போட்டி சம்பந்தமான அனைத்து தகவல்களும் கஹடோவிட விளையாட்டு கழகத்திற்கு சமர்ப்பித்து அனுமதி பெறல் வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட பின்னரே போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

5) சுற்றுப்போட்டிகளை நடத்த வேண்டும் எனில், அனுமதி வழங்கப்பட்ட பின் போட்டி நடத்துனர் ஒரு நாளைக்கு ரூ.1000 மைதனத்துக்காக வழங்க வேண்டும். மேற்படி தொகையானது பள்ளிக்கு (யாவியா) ரூ.750 கஹடோவிட விளையாட்டு கழகத்திற்கு ரூ.250 என்று பகிரப்படும்.

6) சுற்றுப்போட்டிகளை நடத்துபவரே சுற்றுப்போட்டி முடியும் வரை சுற்றியுள்ள காணிகளுக்கும் நிலங்களுக்கும் பொறுப்பு சொல்ல வேண்டும்.

7) தொடர்ப்போட்டிகள் (நட்பு போட்டிகள் -friendly matches) விளையாட வேண்டும் எனில் 2 நாளைக்கு முன்பாக கஹடோவிட விளையாட்டு கழகத்திடம் அனுமதி பெற்று இருத்தல் வேண்டும். (இதற்க்கு பொறுப்பானவர்- சகோ.இஹ்திஸாம் ஹாஜியார்)

ஒரு அணி மாத்திரம் அல்லது வெளி அணிகளுடன் போட்டி நடை பெற அனுமதி வேண்டும் பட்சத்தில் ரூ..250 கஹடோவிட விளையாட்டு கழகத்திற்கு வழங்கப்படல் வேண்டும். மாத்திரம் அன்றி ஒரு நாளின் அரைப்பகுதியே வழங்கப்படும். (காலை 9.00-12.30 அல்லது பகல் 1.00-4.30)
இவை எமது ஊரின் விளையாட்டு வீரர்களுக்காகவும், மைதானத்துக்காகவும் எதிர் கால நன்மை கருதி வகுக்கப்பட்ட, தொகுக்கப்பட்ட சில முக்கியமான சட்ட திட்டங்கள். கஹடோவிட விளையாட்டு கழகம் ஸவியா வுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இது போன்ற ஒழுக்காற்று நடவடிக்களை பேணுவதன் மூலமே இந்த மைதானத்தின் ஒப்பந்த நீடிப்பு தீர்மானிக்கப்படும்.

மக்கா முற்றுகை - இரத்தம் சிந்திய ஹஜ் கொலைகள் - கறுப்பு வருடம் 1979

ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி
1979 நவம்பர் 20 என்ற நாளை இஸ்லாமிய உலகம் ஒரு போதும் மறக்காது. ஏனெனில் அதற்கு இரு வலிமையான காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம் எங்கள் கண்மணி நாயகம் ரசூலே கரீம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்று 1399 ஆண்டுகள் கழிந்து 1400 ஆவது வருடம் ஆரம்பித்த முஹர்ரம் முதலாவது நாள்.அடுத்து காரணம் 1979 நவம்பர் 20 ஆம் திகதி இடம்பெற்ற மஸ்ஜிதுல் ஹரம் முற்றுகை. இந்த மக்கா முற்றுகை பற்றியே இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

 இஸ்லாமிய உலகை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கிய இந்த முற்றுகையை முன்னின்று நடத்தியவன் பெயர்  ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி.இவன் சவுதி அரேபியாவின் நஜ்த் பிரதேசத்தை சேர்ந்த  செல்வாக்கு நிறைந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நஜ்த் பிரதேசம் பற்றி இவ்வாறு முன்னறிவுப்பு செய்தார்கள்.

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்,

ஒரு முறை அண்ணல் நபியவர்கள், இறைவா! எங்களின் ஷாமுக்கும், யமனுக்கும் அபிவிருதியை அருள்வாயாக எனப் பிரார்த்திக்க…. அங்கிருந்த நஜ்து வாசிகளில் ஒருவர், இறைத்தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ, நபிகளார் மீண்டும் இறைவா! எங்களின் ஷாமுக்கும் யமனுக்கும் அபிவிருத்தியை அருள்வாயாக என்று கேட்டிட…. அதற்கு மீண்டுமவர், இறைத் தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ, (அறிவிப்பாளர் சொல்கிறார் மூன்றுமுறை ஷாமுக்கும் எமனுக்கும் அபிவிருத்தியை இறைவனிடம் வேண்டிய நபிகளார், இறுதியில் தம் தோழர்களை நோக்கி……
'நஜ்து தேசம் அதிர்ச்சி தரும் சம்பவங்களும், (பித்னா) குழப்பங்களும் உற்பத்தியாகும் ஸ்தலமாகும். அங்கிருந்து ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என தமது விரலை நஜ்து தேசத்தின் பக்கமாக நீட்டிச் சொன்னார்கள்.
(ஆதாரம்: புகாரி- பாகம்-2, பக்கம் 1051)

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட ஒரு பிரதேசத்திளிருந்தான் இந்த ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி வெளிவந்தான்.இவன் தன் மைத்துனனான் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தாணியை  வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்றும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அவருக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறிவித்தான்.

நஜ்த் பிரதேசத்தில் மிகவும் பலம்வாய்ந்த குடும்பத்தில் பிறந்த ஜுஹைமான் இஸ்லாத்தை நன்றாக கற்றறிந்த உலமாக்களில் ஒருவனாக இருந்தான்.மேலும் இவன் சவுதி பாதுகாப்புப் படையின் முன்னால் காப்ரல் ஆவான். மேலும் முப்தி அப்துல் அஸீஸ் அல் பாஸ் அவர்களின் முன்னாள் மாணவர்களில் ஒருவன்தான் இந்த ஜுஹைமான். பின்னாட்களில் முப்தி அவர்களுக்கு அதிராக போர்க்கொடி தூக்கியன் இவன்தான்.

சவுதி அரேபியாவை ஆளும் மன்னர் பரம்பரை சவுதி மண்ணை இஸ்லாத்தை விட்டு தூரமாக்கி மேலைத்தேய கலாச்சாரத்தை பரப்ப முயற்சி செய்கிறது இது தான் ஜுஹைமானின் அடிப்படை குற்றச்சாட்டு. மேலும் தனது மைத்துனன் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தானியே இமாம் மஹ்தி என்றும் அது பற்றி அல்லாஹ் தனக்கு கனவு மூலம் அறிவித்ததாகவும் அவன் கூறினான். உண்மையில் இந்த இரு பொய்யர்களையும் நம்பியவர்கள் இஸ்லாமிய அறிவற்ற பாமர முஸ்லிம்களல்ல இவர்களை நம்பியவர்களில் பெரும்பாலானோர் மதீனாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் படித்த உலமாக்கள். சவுதி அரேபிய தவிர்ந்த எகிப்து,யேமன்,குவைத் மற்றும் ஆபிரிக்காவின் கறுப்பின முஸ்லிம்களும் இந்த குழுவில் அடங்குவர்.

1979 நவம்பர் 20 அதாவது 1400 ஆவது ஹிஜ்ரி  ஆண்டின் முதல் நாள் கிட்டத்தட்ட 50000 தொழுகையாளிகளுக்கு தொழுகை நடத்த மஸ்ஜிதுல் ஹரத்தின் இமாம் முஹம்மத் அல் சுபைல் முன்வந்தார்.அப்போது தொளுகையாளிகளோடு கலந்திருந்த 500 க்கும் மேற்பட்ட கலகக்காரர்கள் அவர்களின் அங்கிகளுக்கிடையே ஒழித்து வைத்திருந்த ஆயுதங்களுடன் முன்வந்து மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் நுழையும் நுழைவாயில்கள் அனைத்தையும் சங்கிலிகள் கொண்டு பூட்டினார்கள். இந்த நேரத்தில் அவர்களுடன் போராடிய இரு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.
 
இந்த 500 பேரில் சில பெண்களும் குழந்தைகளும் அடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மஸ்ஜிதுல் ஹரத்தை கைப்பற்றிய கலகக்காரர்கள் ஹரத்துக்கும் கட்டுப்பட்டு அறைக்கும் தொடர்பை ஏற்படுத்தும் தொலைபேசி அழைப்பை துண்டித்தனர்.பணையக் கைதிகளாக பிடிக்கப்பட்ட பல தொழுகையாளிகள் விடுவிக்கப்பட்டனர்.ஆனால் எல்லோரும் விடுவிக்கப்படவில்லை சிலர் தொடர்ந்தும் பணயக் கைதிகளாக ஹரத்துக்குள்ளே தடுத்து வைக்கப்பட்டனர்.ஆனால் இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாது,மேலும் அவர்கள் மஸ்ஜிதின் மேல்மட்டங்களை தற்காப்பு நிலைகளாகவும் மினராக்களை ஸ்னைப்பர் நிலைகளாகவும் பயன்படுத்தினர்.
 
புனித மஸ்ஜிதுல் ஹரம் கலகக்காரர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்து ஒரு சில மணித்தியாலத்திலே மஸ்ஜிதை மீட்க களத்தில் குதித்தது சவுதி அரேபியாவின் பாதுகாப்புப் படை அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த இளவரசர் சுல்தான் அவர்களே களத்தில் படைகளை வழிநடத்தினார்.அன்றைய நாள் மாலை நேரத்துக்குள் முழு மக்கா நகரிலும் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.என்றாலும் மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் யுத்தம் செய்வதை இஸ்லாம் தடுத்துள்ளதால் சவுதியின் பாதுகாப்புப் படை உலமாக்களின் பாத்வாவுக்கு காத்திருந்தனர்.நிலைமையை உணர்ந்த முப்தி அப்துல் அஸீஸ் அல் பாஸ் அவர்கள் மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் நுளைய பத்வா வழங்கினார்.
 
உலமாக்களின் பத்வாவை பெற்றுக்கொண்ட சவுதி பாதுகாப்புப் படை பிரதான மூன்று வாயில்கள் ஊடாக முன்னணி தாக்குதலை தொடுத்தனர்.சவுதி பாதுகாப்புப் படை போன்றே கிளர்ச்சியாளர்களின் தாக்குதலும் மிகவும் கடுமையாக இருந்தது. மேலும் மினராக்களில் பதுங்கியிருந்த ஸ்நைபேர் துப்பாக்கிகளின் தாக்குதல் சவுதி பாதுகாப்புப் படைக்கு பெரும் சவாலாக இருந்தது.இறுதியில் நவம்பர் 27 ஆம் திகதியாகும் போது மஸ்ஜிதுல் ஹரத்தின் பெரும்பாலான பகுதிகதி சவுதி பாதுகாப்புப் படை வசம் வந்தது. கிளர்ச்சியாளர்களின் வசம் அப்போது பாவனையில் இருந்த நிலக்கீழ பாதை மட்டுமே இருந்தது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்த இந்த முற்றுகை 255 பேருக்கு மரணத்தை தேடிக்கொடுத்து முடிவுக்கு வந்தது. இதன்போது 560 பேர் காயம் அடைந்ததனர். மேலும் இறந்தவர்களில் 127 சவுதி பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் 117 பேர் கிளர்ச்சியாளர்கள்.

ஜுஹைமான் இமாம் மஹ்தி என அறிவித்த அவன் மைத்துனன் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தானி.
கிளர்ச்சிக் குழுவின் தலைவன் ஜுஹைமான் உட்பட 67 கிளர்ச்சியாளர்கள் கைதி செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சவுதியின் மிக முக்கியமான நான்கு நகரங்களில் மக்கள் மத்தியில் சிறைச்சேதம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல் தெரிந்தவர்களோ அல்லது நான் மேலே பதிந்த விடயங்களில் ஏதாவது தவறு இருப்பின் தயவு செய்து உங்கள் கருத்துகளை குறிப்பிடவும்.திருத்தி கொள்கிறேன்.

எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.





 

கஹ்ட்டோவிடாவைச் சோ்ந்த ஸாலி ஆசிரியா் அவா்களின் மனைவி பௌஸுல் ஹிதாயா காலமானார்.



கஹடோவிடாவைச் சோ்ந்த சகோதரி பௌஸுல் ஹிதாயா  காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன் அன்னார். அன்னார் மா்ஹும் ஸதகதுல்லா ஆலிம், பாதிமா தம்பதியினரின் அன்புப் புதல்வியும் ஸாலி ஆசிரியரின் அன்பு மனைவியுமாவார். எம்.எஸ்.எம் பூசரி ஆசரியா், மௌலவி அப்துல் முஜீப், பொரியியலாளா் ரஜப், டொக்டா் பாயிக், மௌலவியா அஸ்ஹா ஆகியோரின் அன்புத் தாயாருமாவார். பாதிமா ஸாதிகா,  மஸூனா, பரீதா, மதனியா,  முஹம்மத் வபா ஆகியோரின் சகோதரியுமாவார். அனனாரின் ஜனாஸா  நாளை  ( 16.10.2013) 12.00 மணியளவில் மஸ்ஜித் ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار
 
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

கஹட்டோவிட கிளினிக் பாதை புணரமைப்பு - மேலமாகான சபை உறுப்பினா் சாபி ரஹீம் நிதி உதவி.


நீண்ட காலமாக சீரற்றுக் காணப்பட்ட கஹட்டோவிட தாய்மார் பிள்ளை பராமரிப்பு நிலையத்திற்கான வீதி மேல்மாகான சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினா் ஜனாப் சாபி றஹீம் அவா்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புணரமைப்பு செய்யப்பட்டுள்ளது. 

இப்புணரமைப்பு வேலைக்காக 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுமார் 25 வருடங்களிற்கு முன்னர் எமதூருக்கென்று கிளினிக் காணப்படாதபோது எமது ஊரின் கா்ப்பினிப் பெண்கள் அண்மையில் உள்ள சிங்களக் கிராமமான வல்கம்முல்லை கிளினிக்கிற்கு சென்றே மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று வந்தனா். இதன் பின்னா் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முயற்சியின் பயனாக கஹட்டோவிடாவிற்கான கிளினிக் நிா்மாணிக்கப்பட்டு  திறநது வைக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து இக்கிளினிக்கிற்கு சுற்று மதில் கட்டுவத்ற்கும் முஸ்லிம் காங்கிரஸ் நதியொதுக்கி தந்தமை குறிப்பிடத்தக்கது. 



 தற்போது மூன்றாவது கட்டமாக இக்கிளினிக்கிற்கான பாதையை கொங்கிரீட் இட்டு செப்பனிட்டு கடந்த மாதம் மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. இதுவரை இவ் அபிவிருத்திப் பணிகளுக்காக சாபி ரஹீம் அவா்களின் நிதியொதுக்கீட்டிலிருந்து சுமார் 42 இலட்சம் ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தன்னம்பிக்கை மிக்க தம்பி இர்ஷாட் ஷரீப்.. தேசிய மட்ட ஓட்டப் போட்டியில் முதலிடம் !





கஹடோவிடா மன்னுக்கு பெருமை சேர்த்த மன்னின் மைந்தன் இர்ஷாட் ஷரீப், சிறு வயதில் ரயில் விபத்தில் தனது கால்களை இழந்தவர். ஆனாலும், தனது பெற்றோரின் அதிமிகு பாசத்தால் தன்னம்பிக்கை மிக்க ஒருவராக வளர்க்கப்பட்டார். தனது வகுப்பு நண்பர்கள் மற்றும் கிராமத்தவரின் ஒத்துழைப்பு அவருக்கு எப்போதும் இருக்கும். நல்ல குணம் படைத்தவர். மார்க்க அறிவு உள்ளவர். இவர் பங்குபற்றி வரும் இந்த அங்கவீனர்களுக்கான ஓட்டப்போட்டியில் தொடர்ந்தும் முதலிடமே பெற்று வருகிறார். ஓட்டப்போட்டியில் மாத்திரமில்லாது நன்றாக கிரிக்கட் விளையாடக் கூடியவர்.

மேலும், இவர் அண்மையில் போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு நியமனம் பெற்று நிட்டம்புவ தபால் நிலையத்தில் பயிற்சியை முடித்துவிட்டு தற்பொழுது ஏறாவூரில் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். சுமார் முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகு எமது ஊரைச் சேர்ந்த ஒருவர் போஸ்ட் மாஸ்டர் பதவி வகிப்பது என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், இஸ்லாமிய நாகரிகம் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியாராகக் கூட அஹதியா வகுப்புகளில் கடமையாற்றியிருக்கிறார். இவரின் எதிா்கால இலட்சியங்கள் நிறைவேற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக! இவரைப் பற்றிய மேலதிக தகவல்களை  அறிந்தவா்கள்  எம்மோடு பகிர்ந்து இச்சகோதரரின் முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளிக்கவும்.

(சகோஸ் ஹிமாஸின் கவனத்திற்கு தங்களால் எமது தளத்துக்கு அனுப்பப்பட்ட ஆக்கத்தில் சிறுமாற்றங்கள் செய்து பிரசுரித்துள்ளோம்) 


பிந்திக்கிடைத்த தகவல்
குண்டெரிதல் பொட்டியில் கலந்துகொண்ட 35 போட்டியாளா்களில் இவருக்கு 5 ஆவது இடம் கிடைத்துள்ளது.

"ஆபாசம்" உள்ளத்தை தொடவேண்டிய ஒரு பதிவு

ஒரு சமுதாயத்தின் அழிவுக்கு ஆபாசம் மிக முக்கிய காரணமாகிறது.
வரலாற்று ஆசிரியர் எட்வாட் கிப்பன், ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கான ஐந்து காரணங்களைப் பட்டியல் இடுகிறார்.
 
1,திருமண முறிவுகள் அதிகமானது
2.அதிக வரி வசூலித்து மக்களுக்கு இலவச ரொட்டியும் கேளிக்கைகளும் அளித்தது
3.இன்ப வெறி-அதுவும் விளையாட்டுப் போட்டிகள் காட்டுமிராண்டித்தனமாக இருந்தது.
4.மக்களின் தரம் தழ்ந்ததை உணராமல்,படைக்கலன்களை வாங்கிக் குவித்தது.
5.சமயம் என்பது வெறும் குறியீடாக மாறி தினசரி வாழ்க்கைக்கு சம்பந்தம் இல்லாமல் போனது.
 
இப்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம் கேளிக்கையில் மூழ்கி விடுகின்ற சமுதாயம் -நுகர்வுகளில் மூழ்கி விடுகின்ற சமுதாயம் அழிவுகளின் பக்கமாகத்தான் செல்ல வேண்டும்.

இதற்கு சிறந்த உதாரணமாக இன்றைய மேலை நாடுகள் திகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

அங்கு நிலைமை என்ன? திருமணமே வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். லிவிங் டுகெதர் -கொஞ்ச நாளைக்குச் சேர்ந்து வாழ்வோம்; பிரிந்து விடுவோம்; கல்யாணமெல்லாம் தேவையில்லை என்கிற நிலை அங்கு உருவாகி விட்டது....

திருமணத்திற்கு முன்பே உறவு கொள்வது மிகச் சாதாரண நிகழ்ச்சியாக ஆகி விட்டது.

இதன் காரணமாக சிங்கிள் பேரண்ட் ஃபேமிலி -தாயுடனோ அல்லது தந்தையுடனோ வாழும் நிலை. மொத்தத்தில்,குடும்ப வாழ்வே அங்கு சிதைந்துப் போய் விட்டது.

இன்று ஆபாசம் ஆக்டோபஸ் மாதிரி ஆகி விட்டது. அதனுடைய கால்கள் பதிக்காத இடமே இல்லை. ஆபாசத்திலிருந்து தப்பிக்க முடியாத நிலை இன்று உருவாகி விட்டது.

ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் சொல்கிற போது, இந்த ஆபாசத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒன்று சொல்கிறார்கள். ஆபாசத்தை வரையறை செய்யவே முடியாது என்கிறார்கள். ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, ஆளுக்கு ஆள், காலத்துக்கு காலம் இதனுடைய வரைமுறை மாறும் என்கிறார்கள்.

இங்கே ஆபாசமாகக் கருதப்படுவது மேலை நாட்டில் ஆபாசமாகக் கருதப்படுவதில்லை; ஒரு காலத்தில் ஆபாசமாகக் கருதப்படுவது இன்னொரு காலத்தில் ஆபாசமாகக் கருதப்படுவதில்லை.

ஆகவே ஏன் தலையைப் போட்டு உடைத்துக் கொள்கிறீர்கள்? இது முடியவே முடியாத காரியம் என்று சொல்கிறார்கள்.

ஏன் முடியாது? ஆபாசத்தை ஏன் வரையறை செய்ய முடியாது?

 .மறைக்க வேண்டிய பாகங்களை மறைக்காதிருந்தால் அதற்குப் பெயர் ஆபாசம்.

.மறைவில் பேச வேண்டியதை வெளியில் பேசினால் ஆபாசம்.

.நான்கு சுவர்களுக்குள் செய்ய வேண்டியதை வெளிப்படையாகச் செய்தால் அதற்குப் பெயர் ஆபாசம்.

.திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்டு எந்த உறவை வைத்துக் கொண்டாலும் அது ஆபாசம்.

.இச்சைகளையும் வக்கிரங்களையும் தூண்டக் கூடிய எல்லாச் செயல்களும் ஆபாசம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பு.

இன்று சினிமாவிலே பெண்களை ரசித்துப் பார்க்கிறீர்களே, உங்கள் பெண்களை இது போன்ற காட்சிகளில் நடிக்க விடுவதற்கு தயாரா?

உங்களுக்கு பாவம் என்றால், உங்களுக்கு ஆபாசம் என்றால்,உங்களுக்கு அசிங்கம் என்றால் அந்தப் பெண்களுக்கும் அது ஆபாசம் தான்.

ஒரு தீமைக்கு உடனடியாக யாரும் பலியாகி விடுவதில்லை. அது சில கட்டங்களைக் கடந்து வருகிறது.

முதலாவதாக அப்சர்வேஷன் -பார்த்தல்; இரண்டாவதாக இமிடேஷன் -அதைக் காப்பி அடித்தல்; மூன்றாவதாக டிசென்சிடிசெஷன் -மரத்துப் போதல். கடைசியில் ஜஸ்டிபிகேஷன் -அதை நியாயப்படுத்தவும் ஆரம்பித்து விடுகிறோம்.
நாமே இதற்குப் பலியாகி விட்டோமே! குடும்பத்தோடு உட்கார்ந்து சினிமா பார்க்கிறோமே! கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பார்க்கிறோமே! அப்படியானால் நாம் மரத்துப் போன மனிதர்களாக மாறி விட்டோம் என்பதுதானே பொருள்?

மக்கள் ரசிப்பதைத்தானே கொடுக்க முடியும்? மக்களுக்குப் பிடிப்பதை நாங்கள் கொடுக்கிறோம் என்கிறார்கள்.

நோயளிக்குப் பிடித்த உணவுகளையெல்லாம் டாக்டர் பரிந்துரை செய்ய முடியுமா?

ஒரு எழுத்தாளன்.படைப்பாளன் தாய் மாதிரி...! தாய் பத்தியம் பேண வேண்டும் குழந்தைக்கு எது நல்லதோ அதை கொடுப்பதுதான் தாயின் கடமை.

பெண்ணை ஒரு மனுஷியாகப் பார்க்காமல் ரசிப்பதற்குரிய ஒரு சதைப் பிண்டமாகப் பார்ப்பதுதான் ஆபாசம் உருவாகக் காரணம்.
அடுத்து ஆணாதிக்க உணர்வுகள் ஒரு காரணம்.

அடுத்தப்படியாக கட்டுபாடற்ற பாலியல் சுதந்திரம். செக்ஸ் எனபது சுதந்திரமானது. அதில் ஏன் தலையிடுகிறீர்கள்?நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம். மதத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால், பண்பாட்டின் பெயரால் குறுக்கிடாதீர்கள் எனும் மனப்பான்மை.

மக்களிடையே நாண உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதும் ஆபாசம் பெருக ஒரு காரணம்.

ஆபாசத்தை எதிர்ப்பது எப்படி?

ஊரைத் திருத்துவதற்கு முதலில் உங்களைத் திருத்துங்கள். உங்கள் அளவில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள்.

’ஆபாசத்தைப் பார்க்கதே; ஆபாசத்தைப் பேசாதே; ஆபாசத்தைச் செய்யாதே!’

உங்கள் கண்களை,உங்கள் காதுகளை,உங்கள் நாவை,உங்கள் கால்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

வெட்கத் தலங்களின் மூலம் நிகழ்த்தப்படுவது மட்டுமல்ல ஆபாசம்...!
‘கண்கள் செய்யும் விபச்சாரம்;காதுகள் செய்யும் விபச்சாரம்;கால்கள் செய்யும் விபச்சாரம்’ என்று நபிகள் (ஸல்) அவர்கள் பட்டியல் போட்டார்கள்.

இறுதியாக, ஆபாசத்தை வளர்க்கிறார்களே அவர்களிடம் ஒரு வேண்டுகோள்:
‘உங்கள் வயிற்றை வளர்ப்பதற்காக எங்கள் ஒழுக்கத்தைச் சாகடிக்காதீர்கள்.
 
நன்றி முகநூல் நண்பர் ஹைதர்.