கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தம்புள்ள மஸ்ஜிதை மீண்டும் அகற்ற முயற்சி !

ரமழான் நோன்பு நிறைவடைந்துள்ள சூழ்நிலையில்இ தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றும் முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகிறது. ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக
அங்குள்ள முஸ்லிம்கள் பலர் வெளியூர்களுக்குச் சென்றுள்ள நிலையிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அறிய வருகிறது.
புதன்கிழமை நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்தை அளவீடு செய்ய வந்ததாகவும்இ அதுபற்றி மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தாம் தெரிவித்ததாகவும்இ அதற்கு அவர் தாம் அதுபற்றி கவனிப்பதாக கூறியதாகவும்இ அத்துடன் சமய விவகாரங்களைக் கையாளும் பொலிஸ் பிரிவிற்கு அறிவித்ததாகவும் பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினரான எஸ்.வை.எம். சலீம்தீன் குறிப்பிட்டார்.
இது பற்றி புதன் கிழமை தாம் தம்புள்ளை நகர அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பாளர் திரு. ஏக்கநாயக்காவிடம் தெரிவித்த போதுஇ அவர் தமது கோரிக்கைக்கு உடன்பட மறுப்புத் தெரிவித்ததாகவும் சலீம்தீன் கூறினார்.
இதற்கு சில தினங்களுக்கு முன்னர் தனியார் நிறுவனம் ஒன்று பள்ளிவாசல் அமைவிடத்தை அளவீடு செய்ய முற்பட்ட போதுஇ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதன் காரணமாக அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ரங்கிரி தம்புள்ளு ரஜமஹாவிகாரையின் பரிபாலன சபை (தாயக சபா) இனாமலுவே சுமங்கல தேரரின் தலைமையில் கூடி ஆராய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
சர்ச்சைக்குரிய தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்ந்தும் இழுபறியாகவே இருந்து வருகிறது. தம்புள்ளை பள்ளிவாசலை தாம் அகற்றப்போவதில்லையென்றும்இ பிரிதொரு தரப்பினரே அந்தக் காரியத்தில் ஈடுபடுவார்கள் என்றும் தேரர் சிலரிடம் கூறியுள்ளார்.
தகவல் : அஸ்லம் அலி via அப்துல் ஹபீஸ்
lankamuslim

Muhammad Al-Daif (General Commander of Izz Ad-Din Al-Qassam Brigades) - விடுத்த விசேட செய்தி...!!

துவரை காலமும் ஹமாஸின் அரசியல் தலைவர்களே அவர்களது போராட்டம் பற்றி பேசி வந்துள்ள நிலையில் முதன் முறையாக அதன் இராணுவப் பிரிவான இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம் பிரிக்கேட்டின் பொதுத் தளபதி Muhammad Al-Daif அவர்கள் காஸா சண்டைகள் தொடர்பாக பேசியுள்ளார். அவரின் வார்த்தை வரிகள்.......

“கருணைமிக்க அல்லாஹ்வின் பெயரால்..., சாந்தியும் சமாதானமும் முஜாஹிதீன்களின் தலைவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தவர் மீதும் அவருடன் இருந்து ஸஹாபாக்கள், எவெரல்லாம் அவர்கள் வழியில் நியாயத் தீர்ப்பு நாள் வரை இருப்பார்களோ அவர்கள் மீதும் உண்டாவதாக.”

“அவர்களுடன் சண்டையிடுங்கள். அல்லாஹ் அவர்களை உங்கள் கரங்களினால் தண்டிப்பான். அவர்களை அவமானத்தினால் மூடி விடுங்கள். அவர்கள் மீதான வெற்றியை விசுவாசிகளான உங்கள் அமைதிபெற அழைப்பேன்” எனும் இறைமறை வசனங்களை உங்களிற்கு ஞாபகம் ஊட்ட விரும்புகிறேன்.

“யா அல்லாஹ் உனது உதவியுடனேயே எமது தாக்குதல்களை அவர்கள் மேல் பரவச்செய்ய முடியும், உனது உதவியுடனேயே நாம் அவற்றை கையாள முடியும், உனது உதவியுடனேயே நாம் சண்டையிடவும் முடியும். உனது உதவியில்லாமல் எமக்கு என்ற சக்தியும் வல்லமையும் கிடையாது.”

இந்த காலத்தில் அர்பகா எங்கள் உம்மாவின் மீது அதி பயங்கரமான போர் இயந்திரங்களை ஏவி ஜெரூஸலம், மேற்குக்கரை, காஸா போன்ற எமது மண்ணை அபகரித்து விட்டான். வரம்பு மீறி விட்டான். எதிரி முற்றுகையிட்டுள்ளான். மக்கள் மீது பட்டினி சாவினை சாட்டியுள்ளான். எமது குழந்தைகளை, பெண்களை, முதியவர்களை பயங்கரமான முறையில் கொல்கின்றான். வீடுகளை தரைமட்டமாக்குகின்றான். அவரகள் கண்கள் முன் அவர்கள் வீடுகள் அழிந்து போனது. வரலாற்றில் காணத வகையில் சிவிலியன் இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றான்.

சுரங்கங்களின் ஊடான தாக்குதல்கள் காரணமாகவும், ஏவப்படும் ரொக்கெட்கள் காரணமாகவுமே தாங்கள் காஸா மீது தாக்குதல்களை தொடுப்பதாக அவன் பொய்யான எமாற்று வேலைகளை செய்கின்றான். தோல்வியடைந்த அடைந்த அவர்களது இராணுவத்திற்கு நான் சிலவற்றை கூற விரும்புகிறேன். 

  1. சண்டைக்களத்தில் படைப்பல மேலோங்கு நிலை மாறிவிட்டது. நீங்கள் எவ்வளவிற்கு போராடி உயிர் வாழ ஆசைப்படுகிறீர்களோ அவ்வளவிற்கு அவ்வளவு போராடி அல்லாஹ்வின் பாதையில் உயிரை விட விரும்புபவர்களுடன் தான் நீங்கள் சண்டையிடுகிறீர்கள் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் படைகளின் அனைத்து பிரிவுகளிற்கும் எதிராக போராட எமது மக்கள் எம்முடன் ஒன்றிணைந்துள்ளனர். 
  2. தாக்குதல் விமானங்கள், ஆட்டிலறிகள், பீரங்கி படகுகள் என எவ்வளவோ முயன்றும் உங்களால் எதையும் அடைய முடியவில்லை. உங்கள் தோற்கடிக்கப்பட்ட தரைப்படையுட்பட. அல்லாஹ்வின் அருளால் எமது முஜாஹிதீன்களின் துப்பாக்கி ரவைகளிற்கும், அதிரடி தாக்குதல்களிற்கும் முன் உங்கள் படைகள் சிதறுகின்றன. தரையில் நகர்ந்த எதிரிகளிற்கு எதிரான எமது வெற்றிகளிற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு. அவர்களின் படைகளின் பின்புறம் சென்று தாக்கியுள்ளோம்.  Al-Shujaya-வில் என்ன நடந்தது?. எதிரியின் பல அடுக்கு உளவமைப்புக்கள்  தோற்று விட்டன. தான் விட்ட தவறை எதிரி உணர்கிறான். தான் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதும் அவனிற்கு தெரியும். கடுமைாயன நரகம் அவர்களிற்கு தயாராக உள்ளது. இறைநாட்டம் அது.
  3. எதிரி எமது அயல் கிராமங்களில் புகுந்து மக்கள் மீடு படுகொலைகளை பிரிந்து அவற்றை இரத்தக்காடாக மாற்ற திட்டமிட்டிருந்தான். ஆனால் அது நடக்காமல் போயுள்ளது. அவர்கள் கொல்லப்படுகிறார்கள். எதிரியின் உடல்களே அங்கே இரத்தத்தில் மிதந்தன.
  4. ஸியோனிஸ்ட்கள் நினைக்கும் நிம்மதியான தேசம் என்பது ஒரு போதும் இருக்காது. அவர்களை பாதுகாப்பாக வாழ விடமாட்டோம். தாக்குதலை நிறுத்தி, முற்றுகையை தளர்த்தி அவன் பழைய இடங்களிற்கு பின்வாங்க வேண்டும். அது வரை போர் நிறுத்தம் கிடையாது. எமது மக்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் பகராமாக எதையும் நாம் ஏற்கப் போவதில்லை.
  5. நாம் ஏற்கனவே தயாராகி விட்டோம். எதிரி எம்மை உணர்வூட்டியோ அல்லது அவசரப்பட வைத்தோ அழிக்க முடியாது. நாம் ஒரு யுத்த கணிப்பிடலின் அடிப்படையில் நகர்கிறோம். எம்மை அவர்கள் முட்டாளாக்கி அழிக்க முடியாது. அல்லாஹ்வின் கருணையும், உதவியும் எமக்கு உண்டு என்பதை உறுதியாக நம்பியே நாம் இதில் இறங்கியுள்ளோம். 
“எம்மீதான முஸ்லிம் உம்மாவினதும், பலஸ்தீன் மக்களினதும் நம்பிக்கையையும், ஆதரவையும் நாம் அறிந்துள்ளோம். இறைவனிற்கு அடுத்து உங்களை நாம் நன்றியுடன் நினைக்கின்றோம். நாம் வலுவாக உள்ளோம். வெற்றி என்பது பொருமையிலேயே உள்ளது. அது இராணுவ ரீதியான செயற்பாடுகளிற்கும் பொருந்தும். உங்களிற்கும் பொருந்தும். வெற்றி நிச்சயம். அதற்கான பொருமையான செயற்பாடுகளும் இறைவனின் உதவியை எதிர்பார்ப்பதும் அவசியம். ஓ...முஸ்லிம் உம்மா!! நீங்கள் எங்கள் தலைகளின் கிரீடம் போன்றவர்கள். நாங்கள் உங்கள் கவசம் போன்றவர்கள். நாங்கள் உங்கள் ஊழியர்கள். நான் இதை உறுதியாக கூறுகிறேன். இறைவன் பாதுகாவலன். அவன் கருணையாளன். அல்லாஹ் எமது தியாகிகள் மீது கருணை காட்ட வேண்டும். எமது காயப்பட்ட போராளிகள் மீது கருணை காட்ட வேண்டும். எதிரிகளால் கைது செய்யப்பட்ட போராளிகள் மீதும் கருணை காட்ட வேண்டும். அல்லாஹ்வின் மாபெரும் வெற்றி வரை இது நிகழ வேண்டும். 

ATM இலிருந்து 1 கோடி 78 ஆயிரம் ரூபா எடுத்த 17 வயது இளைஞன் - ஜாஎலவில் சம்பவம்

வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பித்த 17 வயது இளைஞன் ஒருவன் அவ்வங்கியின் ATM இலிருந்து ரூபா ஒரு கோடி எழுபத்தெட்டு இலட்சம் எடுத்த சம்பவம் ஒன்று ஜாஎலவில் இடம்பெற்றுள்ளது. இது சம்பந்தமான வழக்கு இன்று கொழும்புக் கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கெடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த இளைஞனின் கணக்கில் ரூபா 163000 இருந்துள்ள நிலையில் ஒன்றரைக் கோடி ரூபாவுக்கு மேல் பணமெடுத்தமைக்கு வங்கியின் ATM களின் கோளாறே காரணம் என வங்கி நீதவான் முன்னிலையில் ஏற்றுக்கொண்டது.

சந்தேக நபர் ஏழு மாதங்களில் வெவ்வேறு நகரங்களில் 558 முறை இனைப் பயன்படுத்து பணம் எடுத்துள்ளார்.

எடுத்த பணத்தினை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக் கொடுக்க குறித்த இளைஞன் இணங்கியுள்ளார். சந்தேக நபர் ரூபா 50000 பிணையிலும் ரூபா 10 இலட்சம் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.

அதிர்ச்சி வீடியோ : ஒரே மணித்தியாலத்தில் ஒரு கிராமத்தையே முற்றாக அழிக்கும் இஸ்ரேல்



techislam

கடந்த பல ஆண்டுகளில் இஸ்ரேல் இராணுவம் சந்தித்த பாரிய இழப்பு

 நோன்பு பெருநாளை ஒட்டி நேற்று காசாவில் தாக்கு தல்கள் தணிந்திருந்தபோதும் காசா மீது படையெடுத் திருக்கும் இஸ்ரேல் இராணுவம் அங்கிருக்கும் ஹமாஸ் சுரங்கப்பாதைகளை அழிக்கும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

 கடந்த ஜ{லை 8 ஆம் திகதி தொடக்கம் காசாவில் இருந்து 2000க்கும் அதிகமான ரொக்கெட்டு தாக்குதல் கள் இஸ்ரேல் மீது நடத்தப்பட்டிருப்பதாகவும் மேலும் 492 ரொக்கெட்டுகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்திருப்பதாகவும், இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். பலஸ்தீன போராளிகளின் தாக்குதல்களில் இதுவரை 43 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் இரு இஸ்ரேல் சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஆனால் கடந்த 20 தினங்களாக நீடிக்கும் மோதலில் குறைந்தது 90 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டிருப்ப தாக ஹமாஸ் இஸ்லாமிய அமைப்பின் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படையணி குறிப்பிட்டுள்ளது.

 இதில் குறைந்தது 142 இஸ்ரேல் படையினர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாவும் இஸ்ரேல் ஊடகங்களை மேற்கோள்காட்டி குறிப் பிடப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும் கடந்த பல ஆண்டுகளில் இஸ்ரேல் இராணுவம் சந்தித்த பாரிய இழப்பாக இது கருதப்படுகிறது.

jaffnamuslim

"FREE GAZA" எனும் யூத வலை - சில புரிதல்களை நோக்கி...

“FREE GAZA” இந்த சொல் இன்று எங்கும் எதிரொலிக்கின்றன. காஸா மக்கள் மீது போடப்படும் குண்டுகள் நிறுத்தப்படல் வேண்டும். அவர்கள் படுகொலை செய்யப்படக் கூடாது. அவர்களிற்கான உணவு, மற்றும் அத்தியாவசிய தேவைகளின் விநியோகம் சீராக இடம்பெறல் வேண்டும். அவர்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். இதன் பெயரே “பிறீ காஸா”. இதனை உலக முஸ்லிம்கள் மட்டுமல்ல, யஹுதி நஸரானிகளும் சொல்கிறார்கள். துருக்கி மீண்டும் ஒரு கப்பலை அனுப்பத் தயாராகிறது. கட்டார் மீண்டும் இடிக்கப்படும் கட்டிடங்களை கட்டிக்கொடுக்க தயாராகிறது. சவுதி அரேபியா தன் பங்கிற்கு காஸாவின் அபிவிருத்திகளை மேம்படுத்த தயாராகிறது. காஸாவின் இளைஞர்களிற்கு ஐரோப்பிய விசா வழங்கவும் ஆலோசிக்கப்படுகிறது. பிறீ காஸாவின் விளைவுகள் இவை. 


துருக்கி அன்று அனுப்பிய MV Mavi Marmara கப்பலைப் போல இன்றும் அனுப்புவோம் என சொல்கிறது. உலர் உணவுப் பொருட்களையும், அத்தியாவசிய பொருட்களையும் ஏற்றிக்கொண்டு கப்பல் தயாராகியும் விட்டது காஸாவை நோக்கி செல்ல. கனரக ஆயுதங்களை கொண்டு வந்து காஸாவில் இறக்குவார்கள் என்று பார்த்தால் துருத்தி அத்தியாவசிய பொருட்கள் பற்றி பேசுகிறது. சரி கனரக ஆயுதங்கள் தான் வேண்டாம், உலக புகழ்பெற்ற கொமாண்டோ அணிகளில் ஒன்று துருக்கியிடமும் இருக்கிறது. அதில் 1000 கொமாண்டோக்களை அன்ஒபீஸியலாகவாவது கொண்டு வந்து காஸா கரைகளில் தரையிறக்கம் செய்வார்கள் என்று பார்த்த்தால் அதுவும் இல்லை. 

“FREE GAZA”  எனும்  துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்ட திறந்த வெளி மனிதச் சிறைச்சாலையா அவர்களிற்கு தேவை?. பலஸ்தீனர்களிற்கு அவர்களின் இழந்த மண் தேவை. அவர்களின் ஹோம் லேண்ட்ஸ் எனும் தாயகம் தேவை. மேற்குக்கரையும், காஸாவும் இணைந்த பெரும் பலஸ்தீன நிலப்பரப்பு தேவை. “FREE PALASTAINE" எனும் அடிப்படை கோரிக்கையை மேற்குலகம் தந்திரமாக  “FREE GAZA” என சுருக்கி விட்டது. இது கூட ஸியோனிச தேசமான இஸ்ரேலிற்காக, யூத நலன்களிற்காக செயற்படுத்தப்படும் நயவஞ்சக நாடகம். 

வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம். உமர் (ரலி) ஜெருஸலத்தை கைப்பற்றினார். சலாஹுத்தீன் ஐயூபியும் கைப்பற்றினார். அப்போது கிறிஸ்தவர்கள் வசம் இருந்த பூமி அது. அதன் திறப்புக்களை கையளிக்கும் போது அந்த கிறிஸ்தவ தலைவர்கள் சொன்ன வார்த்தை “தயை செய்து இதனை யூதர்களிடம் கொடுத்து விடாதீர்கள்” என்பதே. எந்த கிறிஸ்தவர்கள் யூதர்களிடம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னார்களோ அதே கிறிஸ்தவர்களை வைத்தே இன்று யூத தேசம் உருவாக்கப்பட்டது. அதே கிறிஸ்தவர்களின் கரங்களால் இஸ்ரேல் எனும் தேசம் பாதுகாக்கப்படுகிறது. அதே கிறிஸ்தவ தேசங்கள் இஸ்ரேலின் அநியாயங்களை நியாய்ப்படுத்துகின்றன. இஸ்ரேலின் லண்டன் என டெல்-அவீவை அவர்கள் வாய்கள் புகழ்கின்றன. 

இத்தனையையும் செய்தது ஸியோனிஸம். யூத மூளைகள். எவ்வளவு தூரம் அவர்கள் வரலாற்று நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து அதற்கான மாற்று திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை. அவர்கள் இன்று மட்டும் இதனை செய்யவில்லை. அன்றும் அதனைத்தான் செய்தார்கள். அப்போது யூத தேசமான இஸ்ரேல் இருக்கவில்லை. 

இஸ்லாத்தின் இறுதி கிலாபா ஈடாடிக்கொண்டிருந்த காலம். துருக்கி உலகப் போரில் ஜெர்மனி சார்பு நாடாகவே செயற்பட்டது. அப்போதும் இதே யூதர்கள் அதன் கலீபா ஹமீட் அவர்களை சந்தித்து பலஸ்தீனத்தின் நிலத்தை தங்களிற்கு தரும்படியும், தாங்கள் நேச நாடுகளின் தாக்குதல்களில் இருந்து துருக்கியை காப்பதாகவும் கூறினர். அதற்கு கலீபா சொன்ன வார்த்தை இது தான். “என் உடலின் ஒரு பாகத்தை கேளுங்கள் வெட்டித் தருகிறேன். ஆனால் பலஸ்தீன மண்ணை ஒரு போதும் தர மாட்டேன். அது என்னுடையதல்ல. முழு முஸ்லிம்களினதும் புனித பூமி. வரலாற்று பூமியும் கூட.”

எப்பேர்ப்பட்ட வார்த்தைகள் அது. அவ்வளவு பலவீனமான நிலையிலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விட்டுக்கொடுக்காமல் தன் ஆட்சியையும் இழக்கத் துணிந்த நிலையல்லவா அது. 

இங்கிலாந்தின் பலமே அன்று அதனது வலிமை மிகு கடற்படை. அதனை எதிர்கொள்ள முடியாமல் துருக்கிய படைகள் தடுமாறிய காலம். இந்த பலவீனத்தை, இந்த இராஜ ரகசியத்தை யூதர்கள் மோப்பம் பிடித்து இருந்தனர். மீண்டும் யூத தூதுக்குழு கலீபாவிடம் பேசியது. “உங்கள் கடற்படையை நாங்கள் இங்கிலாந்திற்கு நிகராக செப்பனிட்டுத் தருகிறோம். எங்களிற்கு பலஸ்தீனத்தை தந்து விடுங்கள்.” கலீபா அதனையும் வலிதாக மறுத்து விட்டார். 

பலஸ்தீன மண்ணை யூதர்கள் வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்தே விழுங்க நேரம் பார்த்து காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் பிரான்ஸினதும், பிரித்தானியாவினதும் நயவஞ்சகத்தனம் பலஸ்தீனத்தை யூதர்கள் விழுங்க காரணமாகவிருந்தது. இன்னொரு கட்டத்தில் அமெரிக்கா அந்த மண்ணில் இஸ்ரேல் எனும் ஸியோனிஸ தேசம் உருகாக காரணமாகவிருந்தது. இப்போது யூத தந்திரம் முழு உலகத்தையும் ஏமாற்றி பலஸ்தீனம் என்பதனை காஸா என முத்திரை குத்தப்பார்க்கிறது. காஸாவை விடுவித்தால் பலஸ்தீனர்களிற்கு விடிவும் விடுதலையும் வந்து விட்டது என உலகை நம்ப வைக்கப்பார்க்கிறது ஸியோனிஸ தேசம். 

லஸ்தீனம் என்பது காஸாவல்ல. காஸாவின் விடுதலை என்பது பலஸ்தீனத்தின் விடுதலையும் அல்ல. இதை நாம் யூத சதிகளிற்கு அப்பால் புரிந்து கொள்ளல் அவசியமாகிறது இன்றைய காலைகளில். 

 by:Abu Asjath
கைபர்தளம்

இஸ்ரேல் உங்கள் பள்ளிவாசலை ஏவுகணை வைத்து உடைத்தால் எங்கள் சர்ச்சில் தொழுகை நடத்துங்கள் - காஸா தலைமை பாதிரியார்

இஸ்ரேல் உங்கள் பள்ளிவாசலை ஏவுகணை வைத்து உடைத்தால் எங்கள் சர்ச்சில் தொழுகை நடத்துங்கள் - காஸா தலைமை பாதிரியார் 
காஸா மற்றும் மேற்கு கரையின் அத்தனை தேவாலயங்களும் உங்களுக்கு தொழுகைக்காக 24 மணி நேரமும் திறந்தேயிருக்கும்.காஸா வின் தலைமை பாதிரியார் "மேனுவேல் முசல்லம்" (Manuel Musallam) கண்ணியத்திற்குரியவர்.

மாஷாஅல்லாஹ்.. இதுதான் கிருஸ்துவத்தின் புரிதல்.

ஹக்கீமிற்கு எதிரான தீர்மானத்தில் ஜனாதிபதி தீடிர் மாற்றம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்களாகிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கிமிற்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளவிருந்த தீர்மானத்தில் தீடிர் மாற்றத்தை மேற்கொண்டதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தூதுக் குழுவொன்று கடந்த வாரம் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்ää கல்முனை மேயர் நிசாம் காரியப்பர், கட்சியின் அரசியல் பீட உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் மற்றும் கலீல் மௌலவி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது இஸ்லாமிய நாடுகள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் இயாட் மதனியையும் அமைச்சர் ஹக்கீம் சந்தித்து பேச்சு நடத்தினார். இதற்கு மேலதிகமாக இஸ்லாமிய நாடுகள் ஒன்றியத்தில் புதிதாhக உருவாக்கப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுகளை கையளும் பிரிவின் முக்கியஸ்தர்களையும் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தினர்.

இந்த சந்திப்புக்கள் காரணமாக அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக கடுமையான நடவடிக்கையினை மேற்கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருந்தார். எனினும் பின்னர் அந்த தீர்மானத்தினை ஜனாதிபதி மாற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் கலந்துகொண்டார். இந்த கூட்டத்திலிருந்து அமைச்சர் ஹக்கீம் வெளியேறும் போது, “இஸ்லாமிய நாடுகள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளரை நீதி அமைச்சர் சந்தித்தமை தனக்கு தெரியும்” என ஜனாதிபதி தெரிவித்தார்.

இதனை அமைச்சர் ஹக்கீம் உறுதிப்படுத்தினார். “நானும் அவர்களுடன் பேசினேன்” என ஜனாதிபதி இதற்கு பதலளித்தார். அத்துடன் அளுத்கம சம்பவங்கள் தொடர்பில் நானும் தகவல் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

vidiyal

'இலங்கை முஸ்லிம்கள்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில், அரபு நாடுகளுக்கு எல்லாம் தெரியும்' - ஆடிப்போன மஹிந்த..!

 அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்தமாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட பௌத்த பேரினவாத வன்முறை தொடர்பில், அரபு நாடுகள் அதீத ஆர்வத்தை வெளிப்படுத்தவே , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தென்னிலங்கையைச் சேர்ந்த மௌலானா ஒருவரை அவசரமாக அரபு நாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளார்.


 இதுதொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சவூதி அரேபியாவில் இருந்து கிடைக்கப்பெற்ற நம்பத்தகுதந்த தகவல்கள் கீழ்வருமாறு,

 ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த அந்த மௌலானா 56 முஸ்லிம் நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் செயலாளரை சந்தித்து இலங்கை முஸ்லிம்களுக்கு எத்தகைய பாதிப்புகளும் இல்லை, அவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவர் தலைமையிலான அரசாங்கமும் சுமூகமாகவே நடந்து கொள்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

 அத்துடன் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் என ஊடகங்கள் பொய் கூறுவதாகவும், சிறிய விடயங்களை பெரிது படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 இவற்றையெல்லாம் பொறுமையாக செவிமடுத்துள்ள இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் செயலாளர், மஹிந்த ராஜபக்ஸவின் தூதுவராக சென்ற அந்த தென்னிலங்கையைச் சேர்ந்த மௌனாவுக்கு முன், கடந்த வருடங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்கள், தாக்கப்பட்ட பள்ளிவாசல்களில் விபரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அப்படியே தூக்கிப்போட்டுள்ளார்.

 இதனால் கலங்கிப் போன அந்த தென்னிலங்கை மௌலான, வேறு வழியின்றி மீண்டும் இலங்கைக்கு திரும்பிவந்து, இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.

 இதையடுத்து முஸ்லிம் நாடுகள் தமக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டுவிடுமோ என ஆடிப்போன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ , உடனடியாகவே இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் செயலாளருடன்  தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு, இலங்கை முஸ்லிம்களை பாதுகாக்க தமது அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு - இதனுடன் தொடர்புடைய மேலும் 2 முக்கிய செய்திகளை இன்ஷா அல்லாஹ் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் விரைவில் எதிர்பருங்கள்..!

jaffnamuslim web

மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா,... சவ்வால் பிறை தென்பட்டுள்ளது. இலங்கையில் நாளை மறுநாள் ஜெம்இய்யா அறிவிப்பு

மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா,... போன்ற நாடுகளில் சவ்வால் முதல் பிறை தென்பட்டுள்ளது எனவே நாளை அந்நாடுகளில் நாளை புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

சற்றுமுன்னர், கொழுப்புப் பெரிய பள்ளிவாசலில் கூடியிருக்கினற பிறைக் குழு, நாட்டில் எந்தப் பாகத்திலும் ”பிறை” தென்படவிலை என்பதன் காரணமாக நாளை 30 ஆவது நோன்பை புர்த்தி செய்வதாகவும், நாளை மறுநாள் செய்வாய் கிழமை புனித நோன்புப் பெருநாள் கொண்டாடவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.

பலஸ்தீன் !!! ஆடு நழையுதேன்னு ஓநாய் அழுகிற இந்நிலையில் நாம் சில வரலாற்று பின்னணிகளை அறிந்து இருக்க வேண்டும்.

"ஹமாஸ் தலைவர் காலித் மஷால், பாலஸ்தினில் இருக்காமல் வெளிநாட்டிலேயே ஒளிந்து வாழ்கிறார்... சரியான கோழை... ஹமாஸ்க்கு கிடைக்கும் நிதிகளை வைத்து தங்கும் நாடுகளில் எல்லாம் ஏகப்பட்ட சொத்து வாங்கி சேர்த்து விட்டார்.. இவரும் பாலஸ்தினில் உள்ள இஸ்மாயில் ஹனியா வும் மக்கள் பணத்தை ஊழல் செய்து கொள்ளை அடிக்கின்றனர்... சுகபோகமாக வாழ்கின்றனர்...பாவம் பாலஸ்தீனியர்கள்... இவர்களை நம்பிக்கொண்டு...." என்றெல்லாம் இஸ்ரேல் இப்போது புலம்ப ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து உலக மீடியா இதை பெரிதாக படம் போட்டு பரப்பி வருகிறது.
ஆடு நழையுதேன்னு ஓநாய் அழுகிற இந்நிலையில் நாம் சில வரலாற்று பின்னணிகளை அறிந்து இருக்க வேண்டும்.
இந்த காலித் மஷால் ஜோர்டானில் ஹமாசின் பிராந்திய தலைவராக அவ்வளவாக உலகுக்கு அறியப்படாமல் இருந்த போது, 'இவர் தான் ஹமாஸ் இயக்கத்துக்கு முக்கியமான கமேண்டிங் தலைவர்களில் ஒருவர்' என்று எப்படியோ யூகித்து... இஸ்ரேலின் மொசாட் ஏஜெண்டுகள் இருவர் கனடா சிட்டிசன்ஸ் என்று கூறி கனடா பாஸ்போர்ட்டுகளுடன் ஜோர்டான் வந்து...நடந்து கொண்டு இருக்கும் பொது... உடலில் ஓட்ட வைக்கப்பட்ட ஒரு கருவியின் மூலம் இவருக்கு விஷம் வைத்து கொலை முயற்சி செய்தார்கள். 25 September 1997 அன்று ஜோர்டானில் நடந்த இந்த கொலை பாதக செயலில், விஷம் தாக்கி உடனடியாக கோமாவுக்கு சென்று, இறப்பின் விளிம்பில் ஜோர்டான் மருத்துவமனையில் இருந்தார் காலித் மிஷால்...
அப்போது... சும்மா சொல்லக்கொடாது.... மாஷாஅல்லாஹ்... ஜோர்டான் அரசு மிகப்பிரம்மாதமாக செயல்பட்டது.
அந்த இரு இஸ்ரேல் ஏஜெண்டுகளையும் ஜோர்டான் போலிஸ் மோப்பம் பிடித்து விட்டது. தப்பிக்கும் முன்னர் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்கள் இஸ்ரேல் காரர்கள் என்று உலகுக்கு நிரூபித்தது. அவர்கள் மூலம் அந்த விஷத்துக்கு ஆண்டி டோட் (விஷ முறிவு மருந்து) இஸ்ரேலிடம் மட்டுமே உள்ளதாகவும் விசாரணையில் அறிந்தது. அனைத்தையும் இஸ்ரேல் மறுத்தது. பொய் என்று கூறியது.
ஆனால்.....
"உடனே, இஸ்ரேல் அந்த ஆண்டி டோட்டினை தரவில்லை எனில், ஜோர்டான்-இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்றும் ஏஜெண்டுகள் தூக்கில் இடப்படுவார்கள் என்றும் தூதரக உறவு முடிவுக்கு வரும்" என்றும் மிரட்டலாக ஜோர்டான் மன்னர் அதிரடியாக அறிவித்தார். அட்டகாசமான சர்ப்ரைஸ் டர்னிங் பாயிண்ட்..!
எனவே, அமெரிக்க அதிபர் கிளிண்டன் இப்பிரச்சினையில் உள்ளே நுழைந்தார். இந்த கொலை முயற்சியை மிக வன்மையாக கண்டித்தார். உடனடியாக ஆண்டி டோட் ஜோர்டான் செல்ல வேண்டும் என்று இஸ்ரேலுக்கு உத்தரவு இட்டார்.
மொசாதின் தலைவர் மூலமாகவே... அவர் கையாலேயே... அந்த ஆண்டி டோட் ஜோர்டான் வந்து சேர்ந்தது. பிழைத்தார் காலித் மிஷால். அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிலையில், ஜோர்டான் மன்னர் ஹுசைன், தன் மண்ணில் நடந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்த இரு இஸ்ரேல் ஏஜெண்டுகள் இஸ்ரேலுக்கு தண்டனை இன்றி வேண்டும் என்றால்... ஹமாஸ் இயக்கத்தின் தானை தலைவரான ஷேக் அஹ்மத் யாசினை ரிலீஸ் பண்ண வேண்டும் என்று நிபந்தனை போட்டது. (சிறு வயதில் இருந்தே நடக்க முடியாமல் வீல் சேரில் வாழும் அவரை இஸ்ரேல் ஆயுள் தண்டனை தந்து தம் சிறையில் வைத்து இருந்தது)
அந்த மொசாத் ஏஜெண்டுகள் முக்கியம்... அவர்கள் வாய் திறந்தால்... பல வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறலாம் என்பதால்... வேறு வழி இன்றி... நிபந்தனையை ஏற்று, யாசினை விடுதலை செய்தது இஸ்ரேல். ஆனாலும், 22 மார்ச் 2004 இல் பஜ்ர் வழக்கம் போல பள்ளியில் தொழுது விட்டு வில் சேரில் வெளியே வந்த யாசினை ராக்கெட் வீசி கொன்றது. இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த படு கொலையை கண்டனம் செய்தன.
யாசினின் ஜனாஸா ஊர்வலத்திலும் தொழுகையிலும் சரித்திரம் காணாத சாதனையாக இரண்டு லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த தலைவராக.... ஹமாஸை யாசினுடன் சேர்ந்து தோற்றுவித்தவரான அப்துல் அசீஸ் ராண்டிசியை ஹமாஸ் அறிவித்தது. அடுத்த சில நாட்களில் ஏப்ரல் 17 அன்று அதே போல அடுத்த ராக்கெட் வீச்சில் அப்துல் அசீஸ் ராண்டிசி யும் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டார்.
இதற்கு பிறகுதான்... ஹமாஸ் தம் தலைவரை காக்கும் பொறுப்பை உணர்ந்தது. தேர்ந்து எடுத்துவிட்டு பல காலம் ரகசியமாக வைத்து இருந்தது.
பிற்பாடு... அறிவித்தது. தம் தலைவர் காலித் மஷால் என..!
2006 பாலஸ்தீன பொது தேர்தலில் ஹமாஸ் கட்சி, பத்தாஹ் கட்சியை தோற்கடித்து அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய உடன்...
காலித் மஷால் தான் பாலஸ்தீன் பிரதமர் ஆவார் என்று உலகமே எதிர்பார்க்க.... இஸ்மாயில் ஹனியாவை பிரதமர் ஆக்கினார் காலித் மஷால்.
பின்னர் பத்தாஹ் கட்சிக்கும் ஹமாஸ் கட்சிக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக, பத்தாஹ் கட்சியை சேர்ந்த பாலஸ்தீன அதிபரான மஹ்மூத் அப்பாஸ், ஹமாஸ் கட்சியின் ஆட்சியை கலைத்து விட்டார்.
ஆனால், இதை ஹமாஸ் ஏற்க வில்லை. இன்றும் பாலஸ்தீனின் பிரதமர் இஸ்மாயில் ஹனியா தான் என்கிறது. இவர் காசாவில் உள்ள்ளார்.
மேற்கு கரையில் உள்ள மஹ்மூத் அப்பாஸ் அங்கே அதிபராக மட்டும் உள்ளார்.
எகிப்து பார்டர் வழியே மட்டும் தான் காசாவில் நுழைய முடியும் என்பதால்... இந்நிலையில், ஒரு முறை... காலித் மிஷால் 7 டிசம்பர் 2012 இல் எகிப்து வழியே காசா வந்து சர்ப்ரைஸ் விசிட் தந்தார். செமை உற்சாக அமோக வரவேற்பு. அப்போது எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் முஹம்மத் மோர்சியின் ஆட்சி..! இல்லாவிட்டால்... இப்போதெல்லாம் எகிப்தை நம்ப முடியாது..!
இப்போது இஸ்ரேலின் ஏவுகணை தாக்க முடியாத தூரத்தில்...
ஏதாவது ஒரு நாட்டில் மறைந்து தான் வாழ்கிறார்.
தொலைபேசியில் தான் ஹமாஸை இயக்குகிறார்.
இருக்கட்டுமே... இதற்கு காரணம்...யார்..? இஸ்ரேலும் அதன் படுகொலைகளும்தானே..?!?
நாலாம் கட்ட தலைவராக இருந்த போதே ஜோர்தானில் வைத்து கட்டம் கட்டிய இஸ்ரேல்... இப்போது... முதலாம் தலைவர் ஆகி ஹமாஸை திறமையுடன் இயக்குவதால்.... எப்படியாவது காலித் மஷாலை காசா வரவழைத்து போட்டுத்தள்ள முயற்சி செய்கிறது இஸ்ரேல்.
காலித் மிஷால் தலைமையில் தான்... இஸ்ரேலிய சிறையில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன சிறை வாசிகள் இஸ்மாயில் ஹனியா மூலம் மீட்கப்பட்டு உள்ளனர். இதெல்லாம் இஸ்ரேலுக்கு செமை அடி.
இந்நிலையில் ஹமாஸ் கட்சித் தலைவர் காலித் மிஷாலுக்கும் பாலஸ்தீன் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவுக்கும் காசா மக்களிடம் ஏற்பட்டுள்ள உள்ள செலவாக்கை சரிக்க சதி செய்கிறது இஸ்ரேல். இல்லாவிட்டால் பாலஸ்தீனியரிடம் இஸ்ரேல் தோற்றுவிடும் என்ற அச்சம் அதற்கு வந்து விட்டது. அதன் ஒரு அங்கம் தான் மேற்படி... குற்றச்சாட்டுக்கள் எல்லாம்..!
இஸ்ரேல் சொல்வதை எல்லாம் நம்பி ஏமாந்து விட வேண்டாம் சகோஸ்..!

படம் :
TOP 3 - முதல் தலைவர் ஷேக் அஹ்மத் யாஸின் & படுகொலை
MIDDLE 2 - இரண்டாம் தலைவர் அப்துல் அஸீஸ் ரண்டிசி & படுகொலை
BOTTOM LEFT - மொசாட்டின் முறியடிக்கப்பட்ட காலித் மஷால் கொலை முயற்சிக்கு பிறகு ஹமாஸ் வேகமாக வளர்ந்து இருக்கிறது.
BOTTOM MID - மூன்றாம் தலைவராகி எட்டரை வருஷம் கழித்து முதல் முறை காசா வந்த காலித் மஷாலுக்கு காசாவில் உற்சாக வரவேற்பு.
BOTTOM RIGHT - உம்ராவில் இஸ்மாயில் ஹனியா, காலித் மஷால், மஹ்மூத் அப்பாஸ்

தகவல் - முகம்மத் ஆசிக் (முகநூல்)

இஸ்மாயில் ஹனியா (ismail haniyeh) அவர்கள அல்-அக்ஸா தொலைக்காட்சிக்கு கடந்த திங்கட்கிழமை காஸாவின் நிலவறையோன்றில் இருந்து அளித்த பேட்டி

இஸ்ரேலின் காஸா தாக்குதல் பற்றி காஸாவின் முன்னாள் பிரதமரும், ஹமாஸின் அரசியல் பிரிவின் பிரதித் தலைவருமான இஸ்மாயில் ஹனியா (ismail haniyeh) அவர்கள அல்-அக்ஸா தொலைக்காட்சிக்கு கடந்த திங்கட்கிழமை காஸாவின் நிலவறையோன்றில் இருந்து அளித்த பேட்டி வெளியாகியுள்ளது.

"இஸ்ரேல் கடந்த 8 வருடங்களாக காஸாவை முழு முற்றுகைக்கு உள்ளாக்கி வந்துள்ளது. இந்த சட்டவிரோதமான முற்றுகையை உலகநாடுகள் யாரும் கண்டிக்கவில்லை. இப்போது அது காஸாவின் ஒரு பகுதியை அழிக்க முனைகிறது. அப்போதும் இந்த சர்வதேசமும், முஸ்லிம் தேசங்களும் இதனை தடுக்காமல் வாழவிருக்கின்றன. யுகூதிகளின் கொலை வெறிக்கு எமது இரத்தத்தின் மீது உறுதி கூறுகிறோம். நாம் சளைக்காமல் போரடுவோம் என்று. அது போலவே இந்த பிரச்சனை தீர வேண்டும் என்றால் யூதர்கள் சிந்தும் இரத்தத்தின் பின்பே அது நடக்கும்.
எம்மை இஸ்ரேல் தாக்கும் போது, எமது சிறார்களையும், எமது குழந்தைகளையும் கொன்றொழிக்கும் போது, அவர்கள் மேல் இரசாயன ஆயுதங்களை பிரயோகிக்கும் போதும் எதுவும் பேசாத அமெரிக்காவும், ஜரோப்பாவும், நாம் நாம் யூதர்களுக்கு பதிலடி கொடுக்கும்போதும் அதில் பல வெற்றிகளை ஈட்டும் போதும் யூதர்களுக்காகவும் அவர்களது இரத்தத்திற்காகவும் இந்த தேசங்கள் ஆழ்ந்த கவலைகளை வெளியிடுகின்றன. இஸ்ரேலின் செயளிர்காக வக்காலத்து வாங்குகின்றன.
நாம் யார் மேலும் நம்பிக்கை வைத்து எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. அது போலவே யார் மீதும் நம்பிக்கை வைத்து எமது போராட்டத்தை முடிவுக்கும் கொண்டுவரப்போவதுமில்லை. எங்கள் அணைத்து நம்பிக்கைகளும் தகவல்களும் அந்த ஏக இறைவன் மீது மட்டும் தான். அவன் எமக்கு உதவுவான் என நாம் உறுதியாக நம்புகிறோம். அவனது வானவர்கள் எமக்கு உதவ அனுப்பப்படுவார்கள் எனவும் உறுதியாக நம்புகிறோம்.
ரஃபாவின் வாசலினால் வரும் அத்தியாவிசியப் பொருட்களை காட்டி எமது போராட்டத்தை எகிப்து கட்டுப்படுத்த முடியாது. இது இறை பாதையில் நடக்கும் போராட்டம். எமது கடைசி குழந்தை மரிக்கும் வரை ஃபாலஸ்தீனத்தின் துப்பாக்கிகள் ஓயாது. யூதனின் அச்சமும் விலகாது.
உலகம் துவங்கியது முதல் அது முடியும் வரை பாலஸ்தீனத்திற்கு என்று ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாற்றின் எந்த பகுதியில் நின்று இதை நான் கூறுகின்றேன் என்று எனக்கு தெரியாது. ஆனால், ஃபாலஸ்தீனர்கள் அல்-அக்ஸாவிற்கு சொந்தக்காரர்கள். உலகின் பெரும் அறிஞர்களும், தளபதிகளும் இங்கிருந்து வெளியாகியுள்ளார்கள். அந்த பரம்பரையில் வந்த ஒவ்வொரு ஃபாலஸ்தீனியனும் தனது மண்ணிற்காக போராடுவான். எமது விடா முயற்ச்சியான கடுமையான போராட்டத்தின் ஊடாக அந்த வெற்றியை விடுதலையை உறுதிபடுத்துவோம்.
என் கண் முன் எனது சகோதரிகளும், சகோதரர்களும் கண்டு துடித்து போகிறேன். ஆனால், நாங்கள் வெற்றியின் வாயர்கதவைத் திறந்து விட்டோம். இந்த காஸாவின் சண்டைகள் அதற்கான படிக்கட்டுகள்

மகிந்தவுக்கு எதிரான பொதுவேட்பாளர் – முக்கிய நகர்வாக இருக்கும்

சிறிலங்காவில் நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு, எதிர்க்கட்சிகள் பொது நிலைப்பாடு ஒன்றுக்கு வந்துள்ளன.

 கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று மாலை நடந்த கூட்டம் ஒன்றில், பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்துள்ளனர்.

 சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரரின் ஏற்பாட்டில் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜேவிபி தலைவர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகா, முன்னாள் தலைமை நிதியரசர் சிராணி பண்டாரநாயக்க, ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் மேல்மாகாண அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 அத்துடன் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

 இந்தக் கூட்டத்தில், அடுத்த அதிபர் தேர்தலில், நிறைவேற்று அதிகார ஆட்சிமுறையை முன்வைத்து பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்த ஒரு வரைவு முன்வைக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, தேர்தல் அறிக்கையில், நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சியை ஒழிக்கும் அரசியலமைப்புத் திருத்த வரைவை வெளியிடுதல், அதிபர் தேர்தல் முடிந்து ஒரு மாதத்துக்குள், அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருதல், தேர்தலுக்குப் பின்னர் ஆறு மாதங்களில் அதிபர் ஆட்சிமுறை முற்றாகவே செயலிழக்கச் செய்தல், உள்ளிட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 இந்தக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு, அடுத்த ஆண்டு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் சிறிலங்கா அதிபர் தேர்தலில், நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை ஒழிப்பை இலக்கு வைத்து, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சியில் ஒரு முக்கிய நகர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

jaffnamuslim

நிட்டம்புவ ஸுவிஸ் நகைக் கடையில் நிகழந்த கொள்ளைச் சம்பவ வீடியோ


நகைக்கடையில் கொள்ளையிட முயற்சித்த மூவர் கைது:நிட்டம்புவவில் சம்பவம் (வீடியோ)

சகோதரர் இஸ்மாயி்ல் ஹாஜி அவர்களுடைய நகைக்கடையில் கொள்ளையிட முயற்சித்த  மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் போது துப்பாக்கி முனையில் மயிரிழையில் ஹாஜியார் அவர்கள் உயிர் தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 theft-at-nittambuwa-jewellery-shop-foiled-3-armed-robbers-arrested-video
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இதன் போது இரண்டு சந்தேக நபர்கள்  தப்பிச் சென்றுள்ளதாகவும்  அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3 armed robbers who had attempted to break in to a jewellery shop in Nittambwa have been arrested.

6 robbers had arrived with full face covered helmets, but employees and those in the vicinity had managed to grab hold of 3 of them and hand them over to the Police.

அதற்குள்... அடுத்த விமானமா? அல்ஜீரிய விமானம் விபத்து

தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள அல்ஜீரிய விமானம் நைகரில் விபத்துக்குள்ளனதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

அல்ஜீரியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் அல்ஜெரி, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா ஃபாஸோவிலிருந்து கிளம்பிய தன் விமானம் ஒன்றுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தது. 

ஓவுகாகடகோவிருந்து கிளம்பிய 50 நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமான நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல்ஜீரியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த விமானம் அல்ஜியர்சிற்குச் சென்று கொண்டிருந்தது.

ஏ.எச்.5017 என்ற இந்த விமானத்தில் 110 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸாவில் ஷஹீத்தானவர்களின் எண்ணிக்கை 580 ஆக உயர்வு

இஸ்ரேலுக்கும், அண்டை நாடான பாலஸ்தீனத்தில் காஸா பகுதியை ஆட்சி செய்யும் ‘ஹமாஸ்‘ க்கும் இடையே கடந்த 8–ந் தேதி முதல் போர் நடந்து வருகிறது. காஸா மீது இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மூலம் குண்டு வீசுகிறது.

 கடந்த 2 நாட்களுக்கு முன்பு தரைவழி தாக்குதல்களையும் தொடங்கியது. இதனால், அங்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 நேற்று நடந்த குண்டு வீச்சு மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 54 பேர் பலியாகினர். கட்டிட இடிபாடுகளில் இருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் அங்கு சாவு எண்ணிக்கை 580 ஆக உயர்ந்துள்ளது.

 ரபா, டெர்அல்–பலா ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல்களில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

 இஸ்ரேல்–காஸாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் பாகுவுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா டெலிபோனில் பேசியுள்ளார். அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும் சமரச பேச்சு வார்த்தை நடத்த எகிப்து தலைநகர் கொய்ரோ புறப்பட்டு சென்றுள்ளார்.

 போர் தொடர்ந்து உச்ச கட்டத்தை அடைந்து வரும் நிலையில் அங்கு அமைதி ஏற்படுத்த அமெரிக்காவும், ஐ.நா.சபைையும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.

jaffnamuslim 

ஹமாஸின் தலைவர் (அரசியல்) “Khaled Mashal” உலக முஸ்லிம்களை நோக்கி விடுத்த அழைப்பு...!!

மாஸ்” காஸாவின் நிலங்களை மட்டுமல்ல, அந்த நிலங்களில் வாழும் மக்களின் ஆன்மாக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இயக்கம். அதன் அரசியல் தலைவர் Khaled Mashal. 2004-ல் இஸ்ரேலினால் கொல்லப்பட்ட சகோதரர் அப்துல் அசீஸ் ரன்தீஸி அவர்களின் இழப்பிற்கு பிறகு ஹமாஸின் அரசியல் தலைவராக இருந்து வருபவர். இஸ்ரேலின் சின்-பெட் பல முறை இவரை படுகொலை செய்ய முயன்றும் இறைவன் அருளால் இன்றும் அதன் தலைமமையை கொண்டு செல்பவர்.

உலக முஸ்லிம் உம்மாவிற்கு அதன் இணையத்தளம் ஊடாக ஹமாஸ் சார்பாக அவர் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார். 

“ஓஹ்..... எமது உலக முஸ்லிம் சகோதர்களே..!! எங்களிற்கு இங்க என்ன நடக்கிறது என்பதனை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எமது மண்ணை யூத இராணுவம் மீண்டும் ஒரு முறை விழுங்க முற்பட்டுள்ளது. அவர்களிற்கு எதிரான எமது போராட்டம் இதுவரை நடந்ததையும் விட எழுச்சியுடனும் பல அர்ப்பணங்களிற்கு மத்தியிலும் இடம்பெற்று வருகிறது. யஹுதிகள் இப்போது ஒரு புதிய எதிரியுடன் மோதுகிறார்கள். ஆம் நாம் அவர்களிற்கு எதிராக பல எதிர்பாராத தாக்குதல் முறைகளையும் சண்டைகளையும் ஆரம்பித்துள்ளோம். இதனை நான் பெருமையுடனும் சந்தோசத்துடனும் இந்த புனிித ரமாழானில் உங்களிற்கு சொல்லிக்கொள்கிறேன்”.

“உலகம் முழுதும் முஜாஹித்கள் போராடுகிறார்கள். அதற்காக தங்கள் உயிர்களை இறைவனின் பாதையில் இழக்கிறார்கள். அது போன்றே காஸாவிலும் புனித யுத்தம் நடக்கிறது. நீங்கள் இந்த சண்டைகளில் பங்கேற்க அவாவுற்றிருப்பீர்கள். உங்கள் உளமார்ந்த இந்த எண்ணத்தை ஹமாஸின் சார்பில் பாரட்டுகிறேன். ஆனால் எமக்கு உங்கள் ஆட்பலம் தேவையில்லை. தாராளமாக எமது போராளிகள் அதற்காக திரண்டுள்ளார்கள். எமக்கு ஆயுதங்களும் தேவையில்லை. யஹுதிகளை எதிர்கொள்ளும் மனப்பலம் எம்மிடம் உண்டு. அதுவே எமது பிரதான ஆயுதம். ஆயுத தளவாடங்கள் எம்மிடம் கையிறுப்பில் உள்ளன. அவற்றை காஸாவிற்கு கொண்டு வந்து சேர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.”

“ஓ... எம் அன்பின் முஸ்லிம் சகோதரர்களே..!! எமக்கு மருந்துகள் தேவை. காயப்படும் எமது சகோதரிகளையும், சகோதரர்களையும் காப்பாற்ற அவை தேவைப்படுகின்றன. மேலும் வைத்தியர்கள் தேவை. யஹுதிகள் வீசும் குண்டுகள் அபாயகரமானவை. அவை எமது உடன் பிறப்புக்களை படுகாயப்படுத்துகின்றன. எமது குழந்தைகளிற்கு பால்மா தேவை. இந்த ரமழானில் நீங்கள் இவற்றை எமக்கு வந்து சேர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மட்டும் எடுங்கள். மற்றவற்றை எமது எல்-கஸ்ஸாம் பார்த்துக்கொள்ளும்.”

“ஹமாஸ் உங்களிடம் இறைஞ்சி வேண்டுகிறது. புனித ரமழானில் நீங்கள் யஹுதிகளின் அழிவிற்காக துஆ செய்யுங்கள். எமது நிலங்களை நாங்கள் மீட்க துஆ செய்யுங்கள். எமது சகோதரிகளினதும், குழந்தைகளினதும் அநியாயமான இரத்தம் வீணாகாமல் இருக்க துஆ செய்யுங்கள். யாரெல்லாம் ஸியோனிஸ்ட்களால் கொல்லப்பட்டார்களோ அவர்களிற்கு பிர்தவ்ஸ் எனும் ஜன்னத் கிடைக்க துஆ செய்யுங்கள். எமது ஆன்மீக தலைவரும் ஹமாஸின் தந்தையுமான சேய்ஹ் அஹ்மத் யாஸீன் (ரஹ்) அவர்கள் எம்மை எல்லாக் கருமங்களிலும் துஆவை கொண்டு ஆரம்பித்து துஆவை கொண்டு முடிக்கும் படி அடிக்கடி பணிப்பார்கள். அவர்கள் காட்டிய பாதையில் தான் நாம் பயணிக்கின்றோம். ஒ... முஸ்லிம் உம்மாவே உங்கள் துஆக்களை விட பெரிய ஆயுதம் கஸ்ஸாமிடம் இல்லை. அவற்றை நீங்கள் எங்களிற்காக வழங்குங்கள். ஆமீன். யஹுதியின் அழிவு இதில் இருந்தே ஆரம்பிக்கும் ......”. 

கைபர்தளம்-

முஸ்லிம்கள் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார்கள் - பாராளுமன்ற உறுப்பினரான பாலித தேவப்பெரும

முஸ்லிம்கள் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பாலித தேவப்பெரும தெரிவித்தார்.
அளுத்கம பிரதேச முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த ஜுன் 15ஆம் திகதி இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது குறித்த பிரதேச முஸ்லிம்களை காப்பற்றியமைக்காக பாராளுமன்ற உறுப்பினருக்கு சிலோன் முஸ்லிம் அசெம்பிலியினால் நேற்று பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.
கட்டுகாஸ்தோட்டை ரிவர்சைட் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பாலித தேவப்பெரும,
“தமது வீடும் உடைமைகளும் பற்றி எரிகின்ற போது கதறி அழுகின்ற தாய்மார்களையும் பாடசாலைப் பிள்ளைகளையும் பார்த்து அவர்களுக்கு நேசக் கரம் நீட்டாத ஒரு மனிதனாக நான் எப்படி இருக்க முடியும்? களுத்துறை மாவட்டத்தில் நடந்தது ஒரு கலவரம் அல்ல. அது ஒரு மதகுருவைப் பின்பற்றும் ஒரு குழு அரச ஆதரவுடன் நடத்திய தாக்குதலாகும்.

கடந்த ஜூன் 15ஆம் திகதி பேருவலைää தர்காநகர்ää அளுத்கமää வெலப்பன்ன போன்ற இடங்களில் இடம்பெற்ற தாக்குதல் அரச ஆதரவுடனும் பொலிஸாரின் ஒத்துழைப்புடனும் நடந்த ஒன்று என்பதை நான் பொறுப்புடன் கூற விரும்புகிறேன். ஏனெனில் அதற்கு பல்வேறு சந்தர்ப்ப சு10ழ்நிலைகள் ஆதரமாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக விபரிக்க முடியாத அளவு பல விடயங்கள் உள்ளன. முக்கியமாக 30 வருட யுத்தத்தை வெற்றி கொண்ட அரசுக்கு ஒரு மத குரு தலைமையிலான சிறு குழுவைக் கட்டுப்படுத்துவது மிக இலகுவான காரியம்.

அதனை அரசு செய்வதில்லை. அன்று அளுத்கம பகுதியில் இருந்த சு10ழ்நிலையைக் கருத்திற்கொண்டு அமைச்சர் ஒருவர் கூட நடைபெற உள்ள பொதுபலசேனாவின் கூட்டத்தை தடைசெய்யுமாறு வேண்டியும் பொலிஸார் அதனைச் செய்யவில்லை. அது மட்டுமல்ல இரண்டாம் இராஜசிங்க மன்னனை ஒரு முஸ்லிம் பெண்மணி தனது உயிரையும் கொடுத்து அரசனைக் காப்பாற்றினாள். அதன் விளைவாகவே மஹியங்கனையில் பங்கரகம்மன என்ற கிராமம் உருவானது. அன்றிலிருந்து முஸ்லிம்கள் ‘மாரெக்கலே’ (என்னைப் பாதுகாத்த இரத்தம் ) என்று அழைக்கப்பட்டனர்.
அந்த சரித்திரம் கூடத் தெரியாத மதகுருதான் ‘அழுத்கம் முதல் தர்கா நகர் வரையுள்ள மரக்கலை கடைகளுக்கு இன்று மாலை அபசரணை’ என்றார். அடுத்த நிமிடமே அவை பற்றி எரிந்தன. களுத்துறைப் பிரதேசத்திலுள்ள பத்திராஜகொடை என்ற கிராமத்தில் உள்ள ஒரு இராணுவ அதிகாரி மிகவும் கடும் போக்குடையவர். அவர் சிங்களத்தை மட்டும் நேசிக்கும் ஒருவர். ஏனைய இனங்களை ஏளனமாகப் பார்ப்பவர். அவர் கூட இச் செயலை வன்மையாகக் கண்டித்தார்.

இது போன்ற உண்மையான பௌத்தர்கள் எவரும் இச்செயலை அனுமதிக்கவில்லை. அப்படியாயின் இத்தாக்குதலை மேற்கொண்டோர் பௌத்த சிங்களவர்கள் அல்ல. குறிப்பிட்ட மதகுருவின் சீடர்களேயாகும். என்னுடன் ஒத்துழைக்கும் முஸ்லிம்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சினை வந்த போது அரசியல்வாதி என்ற வகையில் நான் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். தங்கள் வீடுகள் உடைமை பற்றி எரிகிறது. தாய்மார் கதறி அழுகிறார்கள். பாடசாலை செல்லும் ஒரு மாணவி நான் எப்படி பரீட்சை எழுதுவேன் எனக் கதறி அழுகிறாள்.

இப்படியான நேரத்தில் நேசக் கரம் நீட்டாத நான் ஒரு மனிதனாக இருக்க முடியுமா? ஆனால் நடந்ததைப் பாருங்கள். இப்திகார் ஹாஜியாருக்கு 2,000 மேற்பட்ட ஆடுகளைக் கொண்ட ஒரு பன்னை இருந்தது. இது எமது நாட்டிற்கு ஒரு செல்வம். ஒரு வளம். அந்த ஆடுகள் ஒரு முஸ்லிமுக்கு சொந்தம் என்பதற்காக வாய் பேச முடியாத அந்த ஆடுகளை கொள்ளும் அளவு கள் நெஞ்சம படைத்தவர்கள்தான் இந்த பாதகத்தைச் செய்தார்கள்.
யுத்தகாலத்தில் பலர் உயிர் தியாகம் செய்தார்கள். இராணுவத்திலுள்ள முக்கியமான 97 பேர் பல்வேறு சந்தர்பங்களில் கொள்ளப்பட்டார்கள். அவர்கள் யார் தெரியுமா? யுத்த காலத்தில் உளவுப் பிரிவு முக்கிய பங்காற்றுகிறது. அதன் தகவலின் படியே யுத்தம் முன் எடுக்கப்படுகிறது.

அவ்வாறு புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி முஸ்லிம்கள் 97 பேர் கொள்ளப்பட்டார்கள். அவர்கள் மிகப் பெறுமதியானவர்கள்.
இவ்வாறு உயிர் தியாகம் செய்த முஸ்லிம் சமுகத்தை கொச்சைப்படுத்த முடியாது. முஸ்லீம்களுக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் அவற்றை எல்லாம் மறந்து விட்டனர். முஸ்லிம்களது ஒரு விடயத்தில் நான் அவர்களை பாராட்டுகிறேன். முஸ்லிம்கள் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார்கள். சமய விடயத்தில் மிக இறுக்கமாக இருப்பார்கள். அதனை சரிவரச் செய்வார்கள். எனவே அந்த விடயத்தில் நான் முஸ்லிம்களுக்கு பயப்படுகிறேன்” என்றார்.

முகநூல்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் கொலை செய்ய முயற்சித்த தாய்

பிரபல காற்பந்து வீரர்  கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் அழிக்க முயற்சி செய்ததாக அவரது தாய் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
 உலகில் பிரபலமான காற்பந்து வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானொ ரொனால்டோவும் உள்ளார். அவர் போர்ச்சுகல் மற்றும் ரியல் மாட்ரிட் கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார்.

 இந்நிலையில் அவரை கருவில் சுமந்த போதே அழித்து விட வேண்டும் என்று முயற்சித்தேன் என அவரது தாயார் டோலோரஸ் அவிரோ அதிர்ச்சி தகவலை  வெளியிட்டுள்ளார்.

 ‘துணிச்சலான தாயார்’ என்ற பெயரில் டோலோரஸ் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ‘ரொனால்டோவை கருவில் இருக்கும் போதே அழிக்க நினைத்தேன். கருவை கலைப்பதற்கு மருத்துவரை அணுகியதாக குறிப்பிட்டுள்ளார்.

 ஆனால் அவர் முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் வேறு வழியிலாவது கலைத்து விடலாம் என்று நினைத்து, பீர் குடித்து விட்டு, நீண்ட தூரம் ஓடினேன். ஆனாலும் எனது எண்ணம் ஈடேறவில்லை. பின்னாலில் இந்த ரகசியத்தை தெரிந்து கொண்ட ரொனால்டோ அவ்வப்போது ‘ஜோக்’ செய்வார்.

 ‘அம்மா என்னை பாருங்கள்...  நீங்கள் கருவிலேயே அழிக்க நினைத்தீர்கள். ஆனால் நான் தான் இப்போது சம்பாதித்து உங்களையும், வீட்டையும் காப்பாற்றுகிறேன் என அடிக்கடி சொல்வார்’ என்று அந்த புத்தகத்தில் டோலோரஸ் குறிப்பிட்டுள்ளார்.

jaffnamuslim

கஞ்சிக்கோப்பைகளுக்குள் இனியும் கவிழ்ந்து போகாது முஸ்லிம் சமூகம்….

முஹம்மது நியாஸ்:
வழமை போன்று இம்முறையும் வேப்பிலையில் தேன் பூசும் பாணியிலான இப்தார் ஒன்றை இம்மாதம் எதிர்வரும் 21ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, கொழும்பில் ஏற்பாடு செய்திருக்கின்றார். கிரீஸ் பூதம் தொடக்கம் அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கிவருகின்ற இனவாதிகளின் முஸ்லிம்கள் மீதான அதிகபட்ச வன்முறைகளின் பின்னரும் ஒரு கஞ்சி கோப்பையை வைத்தே நமது பிரதிநிதிகளை வாயடைக்க வைத்துப் பழகிப்போன அரசாங்கம் அந்தவகையில் இம்முறையும் முஸ்லிம்களின் மீதான இப்தார் என்னும் உளமாற்றத் தந்திரோபாயத்தை மிகவும் இலாவகமாகவும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் முன்னெடுத்துள்ளது.
secretary_attends_iftar_20130802_01p9 (1)
பொதுவாகவே நபிகளாரின் காலத்திலும் முஸ்லிம்களின் மீதான அச்சுறுத்தல் அதிகமாக இருந்த காலப்பகுதியில் கூட நபிகளார் (ஸல்) அவர்கள் அந்நிய மக்களை ஒன்றிணைத்தோ அல்லது அவர்களுடன் கூட்டுச் சேர்ந்தோ இவ்வாறான இப்தார் நிகழ்வுகளை நடாத்தியதற்கான எந்தவொரு வரலாற்றுச் சான்றுகளையும் நானறிந்த வரையில் காணக்கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் இன்றைய கால சூழ்நிலையினை கருத்திற்கொண்டு MR082110நம்மவர்கள் மேற்கொள்ளுகின்ற மதநல்லிணக்க இப்தார்களை கூடாது என்று கூறுவதற்கும் என்னிடம் போதிய ஞானம் இல்லாவிட்டாலும் இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற இப்தார் நிகழ்வுகளுக்கு ஓர் காத்திரமான காரணப்பின்னணி இல்லாவிடின் அது ஓர் வீண் விரயமேயாகும். அழ்ழாஹ் வீண் விரயம் செய்வோரை ஒரு போதும் நேசிப்பதில்லை. எனவே ஒரு நல்ல செயல் என நாம் கருதி மேற்கொள்ளுகின்ற இந்த செயற்பாடானது இறுதியில் அழ்ழாஹ்வின் சாபத்தை நம்மீது அள்ளிவீசாமல் பாதுகாத்துக்கொள்வது நமது கைகளிலேயே உள்ளது.
இக்கட்டுரையில் நாம் மிக முக்கியமாக அலசுவதற்காக எடுத்துக்கொண்ட விடயம் இதுதான்,
அதாவது இன்று நாட்டின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச வேலைத்தளங்கள் போன்றவற்றில் முஸ்லிம்களும் ஏனைய மக்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ளுகின்ற இந்த இப்தார் நிகழ்வானது மத நல்லிணக்கம் என்னும் நோக்கில், ஒருவர் பின்பற்றுகின்ற மதத்தை மற்றொருவர் மதிப்பது எனும் நல்லெண்ணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சியான செய்தியாகவே கொள்ளப்படவேண்டும். மாத்திரமின்றி இஸ்லாம் காட்டித்தந்த வரையறைகளுக்குள் இவ்வாறான இப்தார் நிகழ்வுகள் இடம்பெறுமாக இருந்தால் அதில் அதிகளவான மக்கள் பங்கெடுப்பதும் வரவேற்கத்தக்கதே.
ஆனால் இதில் இன்று மிகப்பெரும் சர்ச்சையாகவும் வேடிக்கையாகவும் மாறியிருப்பது இந்த இப்தார் நிகழ்வுகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்ற கேலிக்கூத்தான செயற்பாடேயாகும்.
காரணம் என்னவெனில் நான் மேலே குறிப்பிட்டது போன்று பொதுவாக இந்த நிகழ்வுக்கு நபிகளாரின் வழிகாட்டல்கள் இல்லாத சந்தர்ப்பத்திலும் கூட இவ்வுலகம் சார்ந்த விடயம் எனக்கருத்திற்கொண்டேனும் ஒரு உயரிய நோக்கமான மத நல்லிணக்கத்திற்காக மேற்கொள்ளப்படுகின்றமையால் அதனை நாம் வரவேற்கிறோம்.Rev. Iththbekande Saddhatissaஇதன் போது மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வுகள் பலமடைவதுடன் மதங்களைப்பற்றிய தவறான எண்ணங்கள் களையப்பட்ட வரலாறுகளும் ஏராளமாகவே நடந்தேறியுள்ளன. எனவே அந்த வகையில் இந்த மதநல்லிணக்க இப்தார்கள் சமகாலத்திற்கு பெரிதும் ஏற்புடையவையாகும்.
அனால் நமது நாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களோ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அவர்களோ விருந்தோம்புகின்ற இப்தார்கள் இவ்வாறானவைகளல்ல. இந்த இப்தார் நிகழ்வானது மதநல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டதும் கிடையாது. மாறாக ஒரு மதத்தின் மீது தாம் மேற்கொண்ட வன்முறையினை, அப்பட்டமான அடந்தேறலை மூடி, மறைத்துப் பூசி மெழுகிப்போர்த்துவதற்காக வெறுமனே சகட்டு மேனிக்காக மேற்கொள்ளப்படுகின்ற இப்தார் நிகழ்வே நாம் மேற்கூறிய ஜனாதிபதியும் இன்னும் அவரோடு சார்ந்த அந்தஸ்த்துக்களில் வீற்றிருக்கும் பொறுப்புதாரிகளும் மேற்கொள்கின்ற பெயரளவிலான மதநல்லிணக்க இப்தார்கள் என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் தெளிவாகப்புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
ஏனெனில் உண்மையிலேயே இவ்வாறு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரால் மேற்கொள்ளபடுகின்ற இப்தார்கள் முஸ்லிம்கள் மீதான பற்றை, மதிப்பை, மரியாதையினை வெளிக்கொணர்வதற்காகத்தான் நடாத்தப்படுகின்றன என்றால் அந்த பற்றையும் பாசத்தையும் வெளிக்கொணர்வதற்காக இந்த அரசாங்கத்திற்கு கடந்த காலங்களில் ஏகப்பட்ட சந்தர்ப்பங்கள் மிகவும் சாதகமாகவே அமைந்திருந்தன. அந்த_66482840_muslims_gotaசந்தர்ப்பங்களிலெல்லாம் தம்மை அரச பதவியில் வீற்றிருக்கவைத்த முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை, பாதுகாப்பை, மத சுதந்திரத்தை தமது அனுசரணையின் கீழ் இயங்கிவருகின்ற பேரினவாதக் காடையர்களின் காலடிகளில் கசக்கி வீசிய இந்த அரசாங்கம் நோன்பு காலங்களில் மாத்திரம் “மத நல்லிணக்க இப்தார்” என்னும் போர்வையில் வேப்பிலையில் தேன் பூசிய கதையாக ஒரு கஞ்சிக்கொப்பையில் அத்தனை அநீதிகளையும் மூடி மறைக்க எத்தனிப்பது தனது தந்திரோபாயத்தின் மூலமாக முஸ்லிம்களின் தலையில் மிளகாய் அரைக்கின்ற செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.
சென்ற மாதம் அழுத்தகம நகரில் இடம்பெயற்ற முஸ்லிம்களின் மீதான உச்சபட்ச வன்முறையினை கூட முஸ்லிம்கள் மீதே பாரத்தையும் பழியையும் அள்ளிவைகின்ற இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும்,
அந்தக் கலவரத்தில் இனவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மரணித்த முஸ்லிம்களைக் கூட வாள் வீச்சில் 10453291_691721394235085_315305069_nமரணித்ததாக பொய்யான அறிக்கை தயாரிப்பதற்கு உடந்தையாக இருக்கின்ற இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும்,
பல மில்லியன் கணக்கான சொத்துக்களும் பெறுமதிமிக்க ஐந்து உயிர்களையும் இழந்து விரக்தி நிலையின் உச்சகட்டத்திற்கே சென்றுள்ள இந்நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் இந்த இக்கட்டான நிலைக்குக் காரணமான ஞானசார என்னும் பயங்கரவாதியை தமது உள்வீட்டுக்குள் வைத்துப் பாதுகாக்கின்ற இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும்,
கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து தெருவோர அநாதைகளாக நிற்கின்ற அளுத்கம முஸ்லிம்களை தீவிரவாதிகள், வெளிநாட்டுக் கைக்கூலிகள் என வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுகின்ற வகையில் அறிக்கை விடுகின்ற ஞானசார என்னும் தேச விரோதிக்கு அடைக்கலம் கொடுக்கின்ற இந்த ஜனதிபதியும் பாதுகாப்பு செயலாளரும்,
இலங்கை நாட்டில் வேரோடிப்போயிருந்த விடுதலைப்புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை தாம் ஒரு சிறுபான்மையாக இருந்த போதிலும் இந்த அரசாங்கத்திற்கு இராணுவ ரீதியாக தமது ஒத்துழைப்புக்களை10313815_777341682310077_561115653057528223_n அள்ளிவழங்கிய முஸ்லிம்களை வெளிநாட்டித் தீவிரவாதிகள் என சில இனவாத அமைச்சர்கள் முத்திரை குத்துகின்றபோதும் அதனை கண்டிக்க வக்கில்லாத இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும்,
இதே அரசாங்கத்தின் தலைமைத்துவங்கள் ஐக்கிய நாட்டின் சர்வதேச விசாரணைக் கூண்டில் சிக்கிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரையும் இலாவகமாக மீட்டெடுத்த முஸ்லிம்களை தேச விரோதிகள், இனவாதிகள் என சர்வதேசத்திற்கு வெளிச்சமிட்டுக்காட்டுகின்ற இரத்தக்காட்டேறிகளை சுதந்திரமாக நாட்டில் உலாவ விட்டுள்ள இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும்,
முஸ்லிம்களின் உயிர்நாடியான பள்ளிவாயில்கள் தம்புள்ளை தொடக்கம் கிராண்ட்பாஸ், மஹியங்கணை, மற்றும் அழுத்கம வரையிலான சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட வகையில் தகர்க்கப்பட்டபோது ஆழ்ந்த தூக்கத்தில் அயர்ந்திருந்த இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும்
வெறுமனே நோன்புகாலங்களில் மாத்திரம் இப்தார் என்னும் போர்வையில் முஸ்லிம்களின் மீதான தங்களின் ஆழ்ந்த அன்பையும் அக்கறையையும் வெளிக்கொணரப்புறப்பட்டிருப்பது வேடிக்கையும் நயவஞ்சகத்தனமுமாகும்.
உண்மையில் இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்திருந்தால் இந்தக் கஞ்சிக்கோப்பையில் தங்களின் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதை விடுத்து இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து, சுதந்திரமாக வாழ்வதற்குரிய வழிவகைகளை முறையாக ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
தாங்கள் முஸ்லிம்கள் மீது வைத்துள்ள அன்பும் அக்கறையும் உண்மையானதாக இருந்திருந்தால் தம்புள்ளை monk-immolation-protestமஸ்ஜிதுல் ஹைரிய்யா ஜும்மா பள்ளிவாயில் தகர்த்தெறியப்பட்ட போது அதற்குக் காரணமாக இருந்த சிங்களப் பயங்கரவாதிகளை கையும் மெய்யுமாகக் கைது செய்து முஸ்லிம்கள் மீது தாங்கள் கொண்டுள்ள அக்கறைக்கு செயல் வடிவம் கொடுத்திருக்க வேண்டும்
இந்த பிரமுகர்கள் இருவரும் தமது நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மீதான அக்கறைக்கு செயல்ரூபம் கொடுக்க நாடியிருந்தால் சிங்களப் பேரினவாதிகளால் கிராண்ட்;பாஸ் பள்ளிவாயில் அடித்து நொறுக்கப்பட்ட போது அங்கே தமது அதிகாரத்தின் கீழுள்ள காவல்த்துறையினரை சட்டத்தை நிலை நாட்டும்படி பணித்திருக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்திருக்கவேண்டும்.
இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் யதார்த்தமாகவே இந்நாட்டு முஸ்லிம்கள் மீது அன்பு கொண்டவர்களாக இருந்திருந்தால் பௌத்த பேரினவாத, பயங்கரவாதக் காடையர்கள் சிலரின் தனிப்பட்ட இலாபங்களுக்காகப் பந்தாடப்பட்ட முஸ்லிம்களின் ஏகபோக உரிமையான ஹலால் சான்றிதழை முஸ்லிம்களிடத்திலேயே அமானிதமாகத்திருப்பி ஒப்படைத்திருக்க வேண்டும்.
மாத்திரமல்லாமல் இந்த அரச சகோதரர்கள் இருவரும் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் மீது நன்றியுணர்வுள்ளவர்களாக இருந்திருந்தால் இனவாதக்காடையர்களால் முஸ்லிம் சமூகத்தின் மீது உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் மேடைகள் தோறும் காட்டுக்கூச்சல் போடுகின்ற ஞானசார என்னும் பயங்கரவாதியை கைது செய்து தங்களின் நீதியான, இனங்களுகிடையிலான் பாரபட்சமற்ற நீதியை நிலைநாடியிருக்க வேண்டும்.
இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் கூறுவது போன்று முஸ்லிம்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்களாக இருந்திருந்தால் அழுத்கம நகரில் ஊரடங்கச்சட்டம் அமுலில் இருகின்றபோதே அரச காவல்த்துறையின் அனுசரணையோடு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அத்தனை அநீதிகளுக்கும் காரணமாகwataraka-vijitha-thero இருந்த, தனது வார்த்தைப்பிரயோகங்களால் சிங்கள மக்களை வன்முறையின் பக்கம் தூண்டிய, முஸ்லிம்களை கொதிப்படையச்செய்த ஞானசார என்னும் இழிந்த பிறவியை இந்நாட்டை விட்டே துரத்தியடித்திருக்க வேண்டும்.
ஆனால் ரமழான் காலம் வந்துவிட்டால் மாத்திரம் முஸ்லிம்களின் மீதுள்ள அன்பையும் அக்கறையையும் வெளிக்கொணர்வதர்காகப் புறப்பட்டுள்ள இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களின்போதும் வன்முறைகளின்போதும் அந்த அன்பையும் அக்கறையையும் தங்களின் முதுகுக்குப்பின்னால் ஒளித்துக்கொண்டு இனவாதிகளின் காவியுடைக்குள் தஞ்சம் புகுந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.
தம்புளை நகரில் தகர்க்கப்பட்ட பள்ளிவாயில் விடயத்தில் இன்று வரைக்கும் முஸ்லிம்களுக்கு சாதகமான, நீதியான எந்தவொரு தீர்ப்புரைகளும் வழங்கப்படவில்லை.
மஹியங்கனை, கிராண்ட்பாஸ் பள்ளிவாயில்கள், முஸ்லிம்களுக்குச் சொந்தமான நோலிமிட், பெஷன் பக் வர்த்தக நிலையங்களுக்கு பௌத்த இனவாதிகளால் இழைக்கப்பட்ட அநீதிகள் அத்தனைக்கும் இன்றுவரைக்கும் எந்தவொரு நீதியான, பக்க சார்பற்ற விசாரணைகள் நடாத்தப்படவுமில்லை. உரிய முறையிலான உண்மையான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுமில்லை.
மாறாக பௌத்த இனவாதிகளின் தாக்குதல்களால் பல பில்லியன் கணக்கான சொத்துக்களையும் ஐந்து உயிர்களையும், இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளையும் இழந்து இந்த ரமழான் காலத்திலும் உடுக்க ஆடைகள் 140616225803-sri-lanka-aluthgama-9-story-topஇன்றி உண்ண உணவின்றி முஸ்லிம் சமூகம் அல்லலுறுகின்ற அழுத்கம சம்பவத்தில் இன்று வரைக்கும் முஸ்லிம்களே தேச விரோதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் பதிவிட்ட ஹன்சார்ட் அறிக்கையில் கூட அழுத்கம கலவரத்திற்கு முஸ்லிம்களே காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.
அழுத்கம முஸ்லிம்களின் மீதான சிங்களப் பேரினவாதிகளின் அடந்தேறல்களுக்கு முஸ்லிம்களே காரணம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண குறிப்பிடுகிறார். இதே வார்த்தையினை ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகிறார்.
ஆக, இலங்கை நாட்டில் சிங்களப் பேரினவாதிகளால் முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்படுகின்ற அத்தனை அடந்தேறல்களின்போதும் அந்த இனவாதிகளுக்கே பாதுகாப்பும் அனுசரணையும் அடைக்கலமும் வழங்குகின்ற இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இறுதியில் அவ்வன்முறைகள் தொடர்பானColombo-Muslim-02 அறிக்கைகளை வழங்குகின்றபோதும் அதன் பாரத்தையும் பழியையும் முஸ்லிம்கள் மீதே போட்டுவிட்டு இனவாதக்காடையர்களை காப்பாற்றிவிடுகின்ற இழிந்த செயலையே தொடர்ந்தேச்சையாக மேற்கொள்ளுகின்றனர்.
ஆக, காவியுடைக்கொரு நீதியும் தாடி வைத்தவனுக்கு மற்றொரு நீதியும் என்ற காடைத்தனமான சட்டமூலமே இந்நாட்டில் அமுலில் காணப்படுகிறது.
இவ்வாறு முஸ்லிம்கள் என்றால் தங்களின் தேவைகளுக்கு மாத்திரம் கிள்ளுக்கீரைகளாகவும் கறிவேப்பிலைகளாகவும் பயன்படுத்தி விட்டு தூக்கி வீசுகின்ற இந்த ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் ரமழான் காலம் வந்து விட்டால் மாத்திரம் நோன்புதிறக்கின்ற அந்தப் பத்து நிமிட நேரப்பொழுதில் மட்டும் முஸ்லிம்கள் மீதான அன்பும் அக்கறையும் பொங்கி வழிந்தோடுவதன் பின்னணிதான் என்ன?
பாதுகாப்புக்கடமைகளுக்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து ஊதியம் பெறுகின்ற காவல்த்துறையினர் சிங்களப்பேரினவாதிகளால் முஸ்லிம்கள் மீது அடந்தேறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களின் உயிர்களை, உடமைகளை பாதுகாக்கத் துப்பற்ற நிலையில் கைகட்டி, வாய்பொத்தி மௌன விரதம் அனுஸ்ட்டிகின்ற அல்லது2014617112222520320_8வெளிநாடுகளுக்குப் பறந்தோடுகின்ற இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் ரமழான் காலத்தில் மாலை ஆறு மணிதொடக்கம் ஆறரை மணிவரைக்கும் மாத்திரம் முஸ்லிம்கள் மீது பற்றும் பாசமும் கொண்டு நடந்து கொள்வதன் மர்மம்தான் என்ன?
முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் சிறுபான்மையினராக இருந்தபோதிலும் அவ்வப்போது ஆட்சிபீடம் எறிய அரசாங்கங்கள் அனைத்திற்கும் தங்களால் முடியுமான பங்களிப்பை வழங்கியே வந்துள்ளது. அது போன்றுதான் தற்போதுள்ள மஹிந்த ராஜபக்ச அரசிற்கும் தமது உச்சபட்ச பங்களிப்பை வழங்கி அவர்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கும் மூலகாரணியாக இருந்துள்ளது. அவ்வாறான ஓர் உன்னத சமூகத்தை, அதன் இருப்புக்களை இந்த அரசாங்கம் சரிவரப்பேணிப் பாதுகாக்கத்தவறிவிட்டது.
நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறையானது உரிய முறையில் செயல் ரூபமளிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் வாழ்வாதாரம், மத சுதந்திரம், கலாச்சார உரிமைகள் என்பன உரிய முறையில் பாதுகாக்கப்படுவதற்கு இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இதுவரையில் செயற்பாட்டு ரீதியாக எந்தவொரு உத்தரவாதமும் அளிக்கவில்லை. முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகளின்140616225426-sri-lanka-aluthgama-10-horizontal-gallery போது குற்றவாளிகளை துல்லியமான முறையில் இனங்கண்டு பாரபட்சமற்ற முறையில் தண்டனைகள் வழங்கப்படவில்லை. மாறாக இனவாதிகளால் பாதிப்புகளுக்குள்ளான அப்பாவி முஸ்லிம்களே இந்த அரசாங்கத்தினால் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே இவ்வாறான, முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளுக்கு அரசாங்கமே கைகொடுத்து உதவி புரிகின்ற தருணத்தில் ரமழான் கால இப்தார் நிகழ்வென்பது ஒரு சூழ்;ச்சிமிக்க ஒன்றாகவே நோக்கப்படுகிறது. இலங்கை நாட்டில் முஸ்லிம் சமூகம் இனரீதியான எதுவித அச்சப்பாடுகளுமில்லாமல் அரசோடு ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக வாழ்வது போன்றதொரு காட்சியினை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டுவதற்காக வருடாவருடம் அரசாங்கத்தினால் அரங்கேற்றப்படுகின்ற நாடகமாகவே இந்த இப்தார் நிகழ்வை முஸ்லிம்கள் நோக்குகின்றனர்.
அதன் காரணமாகவே இவ்வருடம் ரமழான் மாதம் எதிர்வரும் 21ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் இப்தார் நிகழ்வுக்கான அழைப்பினை காத்தான்குடி வாழ் உலமாக்கள், புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள் அனைவருமே புறக்கணித்துள்ளதுடன் அதற்கான காரணமாக அளுத்கம சம்பவத்ததையே மேற்கோள்காட்டியும் உள்ளனர்.
இதன் காரணமாக இம்முறை நடக்கவிருக்கின்ற பாதுகாப்பு செயலாளரின் ஏற்பாட்டிலான இப்தார் நிகழ்வுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் அல்லது இப்தார் ஏற்பாடு கைவிடப்படும் என்பதில் சந்தேகமில்லை. அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து குருவிச்சைகளாகவும் ஒட்டுண்ணிகளாகவும் MR082110ஒட்டிக்கொண்டுள்ள சில முதுகெலும்பற்ற, குரல்வளையற்ற பாதியமைச்சர்களும் மீதியமைச்சர்களும் வேண்டுமானால் இதில் பங்கெடுத்து தங்களின் நிமிர்த்த முடியாத வால்களை அரசிற்கு விசுவாசமாக அசைத்துக்கொள்ளமுடியுமே தவிர, சமூகத்தின் உண்மைநிலையினை மனதார உணர்ந்த எந்தவொரு முஸ்லிம் பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை என்பது வெள்ளிடை மலையான ஒன்றாகும்.
இதன் காரணமாக தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு வந்த நமது முஸ்லிம் சமூகத்தின் அநாதரவான நிலையிமையினை மனதார உணர்ந்தவர்களாக முஸ்லிம் சமூகத்தின் சமூகப்பற்றாளர்கள் அநேகர் வெறுமனே அரசாங்கத்தின் கஞ்சிக்கோப்பையில் தமது சமூகத்தின் அவலத்தை மூடிமறைத்துவிடாமல் சமூக உணர்வுடன் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு ஓர் விடிவு ஏற்படுகின்ற வரைக்கும் இந்த அரசாங்கத்தின் இவ்வாறான சகட்டு மேனிக்கு மேற்கொள்ளுகின்ற பகட்டான நிகழ்வுகளை தொடர்ந்தும் புறக்கணித்தே வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறேன்.
http://srilankanmuslim.wordpress.com/