கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இஸ்மாயில் ஹனியா (ismail haniyeh) அவர்கள அல்-அக்ஸா தொலைக்காட்சிக்கு கடந்த திங்கட்கிழமை காஸாவின் நிலவறையோன்றில் இருந்து அளித்த பேட்டி

இஸ்ரேலின் காஸா தாக்குதல் பற்றி காஸாவின் முன்னாள் பிரதமரும், ஹமாஸின் அரசியல் பிரிவின் பிரதித் தலைவருமான இஸ்மாயில் ஹனியா (ismail haniyeh) அவர்கள அல்-அக்ஸா தொலைக்காட்சிக்கு கடந்த திங்கட்கிழமை காஸாவின் நிலவறையோன்றில் இருந்து அளித்த பேட்டி வெளியாகியுள்ளது.

"இஸ்ரேல் கடந்த 8 வருடங்களாக காஸாவை முழு முற்றுகைக்கு உள்ளாக்கி வந்துள்ளது. இந்த சட்டவிரோதமான முற்றுகையை உலகநாடுகள் யாரும் கண்டிக்கவில்லை. இப்போது அது காஸாவின் ஒரு பகுதியை அழிக்க முனைகிறது. அப்போதும் இந்த சர்வதேசமும், முஸ்லிம் தேசங்களும் இதனை தடுக்காமல் வாழவிருக்கின்றன. யுகூதிகளின் கொலை வெறிக்கு எமது இரத்தத்தின் மீது உறுதி கூறுகிறோம். நாம் சளைக்காமல் போரடுவோம் என்று. அது போலவே இந்த பிரச்சனை தீர வேண்டும் என்றால் யூதர்கள் சிந்தும் இரத்தத்தின் பின்பே அது நடக்கும்.
எம்மை இஸ்ரேல் தாக்கும் போது, எமது சிறார்களையும், எமது குழந்தைகளையும் கொன்றொழிக்கும் போது, அவர்கள் மேல் இரசாயன ஆயுதங்களை பிரயோகிக்கும் போதும் எதுவும் பேசாத அமெரிக்காவும், ஜரோப்பாவும், நாம் நாம் யூதர்களுக்கு பதிலடி கொடுக்கும்போதும் அதில் பல வெற்றிகளை ஈட்டும் போதும் யூதர்களுக்காகவும் அவர்களது இரத்தத்திற்காகவும் இந்த தேசங்கள் ஆழ்ந்த கவலைகளை வெளியிடுகின்றன. இஸ்ரேலின் செயளிர்காக வக்காலத்து வாங்குகின்றன.
நாம் யார் மேலும் நம்பிக்கை வைத்து எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. அது போலவே யார் மீதும் நம்பிக்கை வைத்து எமது போராட்டத்தை முடிவுக்கும் கொண்டுவரப்போவதுமில்லை. எங்கள் அணைத்து நம்பிக்கைகளும் தகவல்களும் அந்த ஏக இறைவன் மீது மட்டும் தான். அவன் எமக்கு உதவுவான் என நாம் உறுதியாக நம்புகிறோம். அவனது வானவர்கள் எமக்கு உதவ அனுப்பப்படுவார்கள் எனவும் உறுதியாக நம்புகிறோம்.
ரஃபாவின் வாசலினால் வரும் அத்தியாவிசியப் பொருட்களை காட்டி எமது போராட்டத்தை எகிப்து கட்டுப்படுத்த முடியாது. இது இறை பாதையில் நடக்கும் போராட்டம். எமது கடைசி குழந்தை மரிக்கும் வரை ஃபாலஸ்தீனத்தின் துப்பாக்கிகள் ஓயாது. யூதனின் அச்சமும் விலகாது.
உலகம் துவங்கியது முதல் அது முடியும் வரை பாலஸ்தீனத்திற்கு என்று ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாற்றின் எந்த பகுதியில் நின்று இதை நான் கூறுகின்றேன் என்று எனக்கு தெரியாது. ஆனால், ஃபாலஸ்தீனர்கள் அல்-அக்ஸாவிற்கு சொந்தக்காரர்கள். உலகின் பெரும் அறிஞர்களும், தளபதிகளும் இங்கிருந்து வெளியாகியுள்ளார்கள். அந்த பரம்பரையில் வந்த ஒவ்வொரு ஃபாலஸ்தீனியனும் தனது மண்ணிற்காக போராடுவான். எமது விடா முயற்ச்சியான கடுமையான போராட்டத்தின் ஊடாக அந்த வெற்றியை விடுதலையை உறுதிபடுத்துவோம்.
என் கண் முன் எனது சகோதரிகளும், சகோதரர்களும் கண்டு துடித்து போகிறேன். ஆனால், நாங்கள் வெற்றியின் வாயர்கதவைத் திறந்து விட்டோம். இந்த காஸாவின் சண்டைகள் அதற்கான படிக்கட்டுகள்

0 comments:

Post a Comment