கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஒகடபொலயைச் சேர்ந்த சகோதரர் காமில் அவர்கள் காலமானார்.

ஒகடபொலயைச் சேர்ந்த சகோதரர் காமில் அவர்கள் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் அனீஸ் (குவைட்), மொஹமட் ஆசிரியர் (அல்பத்ரியா), டொக்டர் ரிகாஸா  ஆகியோரின் அன்புத் தந்தையாவார்.

அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் இன்று (2016.08.14)  மாலை ஓகடபொல  ஜும்ஆ மையவாடியில் நடைபெறும்.



  َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار   

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

உங்க வீட்டுல எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவாகும்னு தெரிஞ்சிக்கோங்க ?

நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை. எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவாகும்னு தெரிஞ்சிக்கோங்க


 150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும்.


2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப்படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும்


 100 வாட்ஸ் டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும்.


 750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.


15 வாட்ஸ் கொண்ட 2 சிஎப்எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம் உப யோகித்தால் மாதம் 4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.


 400 வாட்ஸ் வாஷிங் மெஷின் தினமும் ஒரு மணி நேரம் உப யே ாகப்படுத்தினால் மாதம் 12 யூனிட் செலவாகும்.


 500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும் செலவாகும்


 75 வாட்ஸ் திறனுள்ள 2 மின்வி சிறி தினமும் 8 மணி ஓடினால், மாதம் 36 யூனிட் செலவாகும்


300 வாட்ஸ் வெட் கிரைண்டர் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.''



 40 வாட்ஸ் திறன் கொண்ட 2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால், மாதம் 12 யூனிட் செலவாகும்.


 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும்.


 200 வாட்ஸ் ஏர் கூலர் என்றால் மாதம் 30 யூனிட் செலவாகும்.


 200 வாட்ஸ் கம்ப்யூட்டர் தினமும் ஒரு மணி நேரம் இயங்கி னால் மாதம் 6 யூனிட் மின்சாரமும் செலவாகும்.


 740 வாட்ஸ் குதிரை திறனுள்ள பம்பு மோட்டார் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால், மாதம் 22 யூனிட் மின்சாரமும் தேவைப்படும்


 7 வாட்ஸ் திறனுள்ள மொபைல் பேட்டரி சார்ஜர் தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் மாதம் 0.21 யூனிட் மின்சாரம் காலியாகும்.


http://www.rkslivenews.com/

சிறந்த பாடசாலை தரப்படுத்தலில் அல்பத்ரியாவும் தெரிவு, அரசாங்கத்தினால் 1 கோடி பெறுமதியான இன்னுமொரு கட்டிடம்.

கடந்த 09.08.2016 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  கஹடோவிட அல்பத்ரியா ம.வி இன் விசேட கூட்டத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் மேல்மாகணக் கல்வி அமைச்சினால் சிறந்த பாடசாலைகள் என்ற தரப்படுத்தலில் எமது பாடசாலையும் இடப்பெற்றுள்ளமையை அதிபர் சுட்டிக்காட்டினார். அத்தோடு அரசாங்கத்தினால் எமது பாடசாலைக்கு சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான கட்டிடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளமை இன்னுமொரு மையிற்கல் என்றும் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக பாடசாலை திருத்த வேலைகளை மேற்கொள்ளவென சுமார் 20 இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதில், சில ஆசிரியர்கள் கற்பித்தலில் முறையாக ஈடுபடாத விடயங்கள் பற்றியும், பாட நேரங்களில் வகுப்பரைக்கு செல்லாமல் அவர்களுடைய கடமையை புறக்கணிப்பது பற்றியும் பேசப்பட்டது. முக்கியமாக இதில் உரையாற்றிய பாடசாலை நலன்விரும்பி ஒருவர், ஆசிரியர்கள் தமது தொழிலில் ஹராம், ஹலால் பேணி நடந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டதுடன், பாடசாலையின் கல்வி முன்னேற்றத்தில் பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.