கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தளபதி அப்துல்லாஹ் ஆஸம், கொமாண்டர் கத்தாப்ஃ வரிசையில் இன்னொரு மாமனிதன் - Dr. Abdul Fattah Numan

whysunni:

BEAUTIFUL STORY, BEAUTIFUL INDIVIDUAL-PLEASE READ!

Our wonderful brother, Dr. AbdulFattah Numan from Yemen, has been martyred in Syria. 

He was a Professor of Shariaa Jurisprudence at Sanaa University and also a surgeon. 

In 2011, he was a volunteer at the field hospital in “Change Square” in Sana’a to treat the wounded.

In 2012 he traveled to Gaza with a delegation to conduct medical surgeries for the wounded in the recent Israeli war on the Gaza Strip.

In 2013 he traveled to Egypt and volunteered at the field hospital “Rabaa El Adaweya” Square, site of the recent massacre. 

He then traveled to Syria to treat the wounded at a field hospital in Aleppo, where he was eventually martyred due to the Assad regime’s bombardment of the hospital.

May God have mercy on his soul and may God build him a house in Paradise.
கைபர் தளம்
ர்னஸ் டீ சேகுவேரா பற்றி நாம் நிறையவே தெரிந்து வைத்துள்ளோம். ஆர்ஜன்டீனாவலில் பிறந்து வளர்ந்த மருத்துவர். கியூபாவின் விடுதலைக்காக பிடல் கஸ்ரோ, ரால்ப் கஸ்ரோ, காமிலோஸ் போன்ற தலைவர்களுடன் கியூபாவின் காடுகளில் அலைந்து திரிந்து போராடியவர். பின்னர் பொலீவிய விடுதலைக்காக போராட முற்பட்ட வேளை படுகொலை செய்யப்பட்டார். ஒரு விடுதலை போராளியாகவும், மனித நேயமிக்க கெரில்லா போராளியாகவும் புரட்சிகர விடுதலை இயக்கங்கள் அவரை இன்றும் போற்றுகின்றன. 

இன்னொரு முஸ்லிம் முஜாஹித் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். அந்த விடுதலை போராளியின் பெயர் Dr. Abdul Fattah Numan. யெமனில் பிறந்து வளர்ந்தவர். மருத்துவதுறையில் பிரபலமான டாக்டர். ஸன்னாவில் உள்ள மருத்துவ மனையில் டாக்டராக பணியாற்றியவர். சிரியாவில் நடந்த ஜிஹாதில் சஹீதாக்கப்பட்டவர். (இன்சாஅல்லாஹ்).

2011ல் சன்னாவில் நடந்த “Change Square” ஆர்ப்பாட்டங்களின் போது காயப்பட்டவர்களி்ற்கு மருத்துவ சிகிச்சைகளை புரியும் மொபைல் ஹொஸ்பிடலை  தலைமையேற்று நடாத்தினார். 

2012-ல் காஸாவிற்கு  தனது குழுவுடன் சென்று அங்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளால் தாக்குதலிற்கு உள்ளாக்கப்பட்டு காயமடைந்த  பொது மக்களிற்கும், ஹமாஸின் போராளிகளிற்கும் உடனடி சத்திர சிகிச்சைகளை இரவு பகல் பாராது அயராது செய்து வந்தார். 

2013-ல் எகிப்திற்கு தனது உதவிகளை வழங்க விரைந்தார். “Rabaa El Adaweya” சதுக்கத்தில் ஜெனரல் சிசி நடாத்திய பாசிஸ படுகொலைகளில் காயமடைந்த எகிப்திய இஹ்வானிய சகோதரர்களிற்கு தொண்டர் மையமாக தற்காலிக ஆஸ்பத்திரியை நிறுவி அவர்களிற்கான சர்ஜரிகளை செய்து வந்தார். எகிப்திய இரகசிய பொலீஸார் இவரை தீர்த்துக்கட்ட தயாராகினர்..

மீண்டும் சிரியா நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார் டாக்டர் அப்துல் பதாஹ்ஃ நுஃமான். சிரிய சமர்க்களத்தில் காயமடைந்த முஜாஹித்களிற்கான வைத்திய சிகிச்சைகளை வழங்குவதில் முன்னணியில் திகழ்ந்தார். சமர்க்கள முனைகளில் வீழ்ந்து வெடிக்கும் செல்களிற்கு மத்தியில் அவர் தனது சத்திர சிகிச்சைகளை செய்து வந்தார். 

அலிபோவில் நடமாடும் ஹொஸ்பிடலை உருவாக்கி அலிபோ சமர்க்களத்தில் அளப்பரிய சேவைகளை ஆற்றினார் சகோதரர் நுஃமான். சிரிய பஸர் அல் அஸாதின் படையினர் அவரது அலிபோ ஆஸ்பத்திரி மீது நடாத்திய விமான குண்டு தாக்குதிலில் தனது இன்னுயிரை இறைவனிற்கு அர்ப்பணம் செய்தார் இந்த இனிய சகோதரர். 

களமுனையில் துப்பாக்கி ஏந்தி போராட முடியவில்லையே, எதிரியினால் தனக்கு இன்னும் மரணம் விளையவில்லையே!! என ஏங்கிய அவரது உள்ளத்திற்கு இசைவாக இறைவன் அவரின் மரணத்தை நிர்ணயித்து விட்டான். அல்ஹம்துலில்லாஹ்.

கைபர்தளம்

தோல்வியை ஏற்கும் திராணியற்றோர்..!




ஆடத் தெரியாதவர்கள் எப்போதும் அரங்கம் கோணல் என்பார்கள். தங்கள் தோல்விகளை ஏற்றுக் கொள்ளத் திராணியற்றவர்கள் - தாம் தோற்றுப் போனமைக்கான வெற்றுக் காரணங்களை வெளியில்தான் தேடிக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய பிழைகளை அடுத்தவன் தலையில் இறக்கி வைத்து விட்டு – ஒழித்துக் கொள்ளும் இவ்வாறானோர் ஆபத்தானவர்கள்.

நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இடறி விழுந்திருக்கின்றன. எந்தக் கட்சியின் ஆட்டமும் சோபிக்கவில்லை. சரியாகச் சொன்னால், மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கிய முஸ்லிம் கட்சிகள், வென்று - தோற்றிருக்கின்றன. தமது தோல்விக்கான காரணத்தை – ஒவ்வொரு முஸ்லிம் கட்சியும் மற்றைய முஸ்லிம் கட்சிகள் மீதும் நபர்கள் மீதும் இறக்கி வைக்க முயன்று கொண்டிருக்கின்றன.

வடக்கு மாகாணசபைத்  தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றிருக்கும் ஆசனங்களின் எண்ணிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறானதொரு வியப்பான வெற்றியினை பெறுவதற்கான சந்தர்ப்பம் கிழக்கில் முஸ்லிம்களுக்கும் இருந்தது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இணைந்து ஒரே அணியாகப் போட்டியிட்டிருந்தால் - இன்று கிழக்கு மாகாணசபையின் அதிகாரம் முஸ்லிம்களின் கைகளுக்குள் வந்திருக்கும்.

இப்போது மட்டும் - கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் கைகளில் இல்லையா? என்ன கதை இது? கிழக்கின் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருக்கிறார். ஏனைய நான்கு அமைச்சர்களில் மூவர் முஸ்லிம்கள். பிறகென்ன? என்று உங்களில் எவரேனும் கேட்டால் - அது நல்ல பகிடிதான்.

அனுபவங்களை விடப் பெரும் ஆசான் இல்லை என்பார்கள். முஸ்லிம் அரசியல் தரப்புக்கள் பிரிந்து கிடப்பதால்தான் தோற்றுப் போகின்றன என்பதை – முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் நன்கு அறியும். வடக்குத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து நின்று களமிறங்கியமையால்தான் - அங்குள்ள முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கேற்ப முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போயிற்று என்பதை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பி.பி.சி. தமிழோசையில் ஏற்றுக் கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனாலும், மீண்டும் மீண்டும் இதே தவறினை இந்தக் கட்சிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்வதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள் தயாராக இல்லை.

நடந்து முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலிலாயினும் முஸ்லிம் காங்கிரசும், அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.மக்கள் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டிருந்தால் - கணிசமான முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பெற்றெடுத்திருக்கலாம் என்பது – சமூகப் பற்றுள்ள முஸ்லிம் மக்களின் ஆதங்கமாகும். ஆனால், இந்தக் கட்சிகள் கூட்டிணைவதென்பது சாத்தியமில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

நடந்து முடிந்த மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, வடக்கில் கூட்டாக இணைந்து போட்டியிடுவதற்கு வருமாறு, றிசாத் பதியுத்தீனுக்கு மு.காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அந்த அழைப்பு திறந்த மனதுடனானதல்ல என்பது அரசியல் அறிந்தோருக்குத் தெரியும். ஆனாலும், மு.கா.வின் அழைப்பினை றிசாத் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்கள் இருக்கலாம். அவற்றில் முதல் காரணம், மஹிந்தவை எதிர்த்துக் கொண்டு – அரசியல் செய்யும் யோக்கிதையோ, தைரியமோ றிசாத் போன்றோரிடம் இல்லை என்பதாகும். மஹிந்தவின் தோளில் தொங்கிக் கொண்டுதான், றிசாத் அரசியல் செய்து வருகின்றார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கிறதொரு கட்சியை றிசாத் வைத்திருக்கிரார் அல்லவா? அந்தக் கட்சியின் சின்னம் என்வென்று உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். தனக்கென்றொரு கட்சியினை றிசாத் வெறும் பெயருக்கே வைத்துக் கொண்டிருக்கிறார். தேர்தல்களில் போட்டியிடுவதென்னவோ வெற்றிலைச் சின்னத்தில்தான்.

முஸ்லிம் சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்திச் சிந்தித்திருந்தால், இவர்கள் பிரிந்து நின்று போட்டியிட்டிருக்க மாட்டார்கள். சமூக நலனை விடவும் - தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் இவர்களுக்கு முக்கியமானவை – முதன்மையானவை. றிசாத் வென்று விடக்கூடாது என்று ஹக்கீமும், ஹக்கீம் வென்று விடக் கூடாது என்று றிசாத்தும் யோசிக்கின்றார்களே தவிர, முஸ்லிம் சமூகம் வெற்றிபெற வேண்டும் என்று - இந்த இருவரும் சிந்திக்கவேயில்லை.

வடக்கில் றிசாத் அணியினர் - முஸ்லிம் மக்களின் வாக்குகளை வெற்றிலைச் சின்னத்துக்குப் பெற்றுக் கொடுத்ததன் விளைவு – சிங்களப் பிரதிநிதித்துவம் அதிகரித்திருக்கின்றது. அதேபோல், மு.காங்கிரஸ் நூலிழையில் ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கிறது. கூட்டிக்கழித்துப் பார்த்தால், வட மாகாகணத்தில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கேற்ப – முஸ்லிம் பிரதிநிதித்துவம் பெறப்படவில்லை. இந்தத் தோல்விக்கான முழுப் பொறுப்பும் ஹக்கீமையும், றிசாத்தினையுமே சாரும்.

இந்தக் கூத்துக்குள் - அமைச்சர் அதாஉல்லா இல்லை. காரணம், கிழக்குத் தாண்டி தனது பருப்பு வேகாது என்று அவருக்குத் தெரியும். அக்கரைப்பற்றுக்குள் - வடக்கு மாகாணத்தினைக் கொண்டு வந்து கொடுத்திருந்தால் - அதாஉல்லாவும் தேர்தல் களத்தில் குதித்திருப்பார் என்று நண்பரொருவர் பகிடியாகக் கூறினார்.

முஸ்லிம் சமூகத்தின் நலன் குறித்து சிந்திப்பதற்கு தயாரில்லாத மேற்படி முஸ்லிம் கட்சிகளை மக்கள் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழிகளில்லை. மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் இந்தப் புறக்கணிப்பினைச் செய்து காட்டியிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினவாதிகள் நடத்திவரும் நெருக்குவாரங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தவறிய முஸ்லிம் காங்கிரசை விடவும், தனியனாக நின்று குரல் கொடுத்து வரும் ஆசாத்சாலிக்கு முஸ்லிம் மக்கள் வாக்குகளை அள்ளியிறைத்து வெற்றிபெறச் செய்திருக்கின்றார்கள். 55 ஆயிரத்துக்கும் மேலான விருப்பு வாக்குகள் ஆசாத்சாலிக்குக் கிடைத்திருக்கின்றன. இதேகளத்தில், போட்டியிட்ட மு.காங்கிரஸ் 11 ஆயிரத்துச் சொச்சம் வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கின்றது. மு.கா. என்கிற கட்சியை விடவும் - ஆசாத்சாலி எனப்படும் தனிமனிதருக்கு - மக்கள் அதிகபட்ச ஆதரவினைத் தெரிவித்திருக்கின்றார்கள்.

நமக்காகக் குரல் கொடுக்கத் தயாரற்ற, நமது சமூக நலன் குறித்து அக்கறைப்படாத அரசியல் கட்சிகளைப் பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும்? நமது ஆதவினை ஏன் வழங்க வேண்டும்? என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கும் புள்ளியில்தான் - மாற்றங்கள் நிகழத் தொடங்கும்.

இன்னொருபுறம், இவர்கள் இப்படி அடித்துப் - பிடித்துப் பெற்றுக் கொண்ட ஆசனங்களை வைத்துக் கொண்டு, மாகாணசபைகளில் முஸ்லிம் சமூகத்துக்காக ஒன்றும் மலைகளை உடைக்கப் போவதில்லை. மஹிந்தவின் ஆட்சிக்கு இந்த ஆசனங்களால் முட்டுக் கொடுக்கும் வேலைகளைத்தான் செய்யப்போகின்றார்கள். கிழக்கு மாகாணசபையில் திவிநெகும சட்ட மூலத்துக்கு சார்பாகவும், வடமேல், மத்திய மாகாண சபைகளில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஆதரவாகவும்; மேற்படி முஸ்லிம் கட்சிப் பிரதிநிதிகள் - கைகளை உயர்த்தியமையை மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

உயிரைக் கொடுத்து, மடக்கிப் பிடித்துக் கொண்டுவரும் காட்டு யானைகளை வைத்து, கோயிலில் பிச்சை எடுப்பது போல் - தனது மாகாணசபைப் பிரதிநிதித்துவங்களை மு.காங்கிரசும், றிசாத்பதியுத்தீனும் பயன்படுத்தி விடுவார்கள் என்கின்ற ஐயம் பெருவாரியாக உள்ளது.

ஆட்சியாளர்களைத் திட்டி தேர்தல்களில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதும், தேர்தல் முடிந்ததும் பெற்றுக் கொண்ட ஆசனங்களைக் கொண்டு சென்று – ஆட்சியாளர்களின் காலடியில் தாரை வார்ப்பதும் முஸ்லிம் காங்கிரசின் கீழ்தரமான மோசடி அரசியலாகும்.

மு.காங்கிரஸ் மூன்று மாகாணசபைக்கான தேர்தல்களிலும் பெற்றுக் கொண்ட ஆசனங்களை வைத்துக் கொண்டு  ஒரு துரும்பினைக் கூட அசைத்து விட முடியாது. வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் வெற்றிலைக் கட்சியும் ஏகப் பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைத்திருப்பதால், மு.கா. இம்முறையும் ஆட்சியாளர்களிடம் சோரம் போகும் நிலைதான் காணப்படுகிறது.

மக்களுக்கு – அபிவிருத்திகளை விடவும், அவர்களின் உரிமைகளே முக்கியமானவையும் முதன்மையானவையுமாகும். கண்டி மாவட்டத்தில் 02 வருடங்களில் 700 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அபிவிருத்திகளை தான் மேற்கொண்டதாகவும், ஆனால், தன்னுடைய அபிவிருத்திகளை மறந்து விட்டு, ஆசாத்சாலிக்கு மக்கள் வாக்களித்து விட்டனர் என்றும் பிரதியமைச்சர் காதர் ஊடகங்களில் கவலை தெரிவித்திருக்கின்றார். பள்ளிவாசல்களை விடவும் - கொங்றீட் வீதிகள் மக்களுக்கு முக்கியமானவையல்ல. கொங்றீட் வீதிகளை அமைத்துத் தருகின்றவர்களை விடவும், பள்ளிகள் உடைக்கப்படும் போது, அதற்கு எதிராக உரத்துக் குரல் கொடுப்பவர்களைத்தான் மக்கள் நேசிக்கின்றனர் என்பதை கண்டி மாவட்டத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் நிரூபித்துள்ளனர்.

தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, கண்டி மாவட்டத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் வெளிப்படுத்தியிருக்கும் செய்திகளில் இருந்து – முஸ்லிம் கட்சிகள் கற்றுக் கொள்வதற்கு ஏராளமான பாடங்கள் இருக்கின்றன. கற்பதும் - விடுவதும் அவரவர் கைகளில் உள்ளது. 

ஆனால், 'சாகப் போகின்றவனுக்கு - மருந்துகள் பலிப்பதில்லை' என்கிற பழமொழியொன்று இருப்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

(தம்பி)

உங்களிற்கு தெரியுமா? “புலிப்பயங்கரவாதத்தை அழிக்க உதவிய பீ.ஜே.பி. பயங்கரவாதிகள்”



திடீர் தமிழ் இன உணர்வாளர்கள் பலர், நரேந்திர மோடியை ஆதரிக்கும் பொழுதே அவர்களது சாயம் வெளுத்து விடுகின்றது. மோடியை பிரதமராக்கத் துடிக்கும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான், புலிகளின் அழிவு ஆரம்பமாகியது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தோல்வியின் விளிம்பில் நின்ற சிங்கள இராணுவத்திற்கு உதவும் நோக்குடன், "இந்தியர்களின் ஜென்ம விரோதியான" பாகிஸ்தானுடன் இரகசியமாக ஒத்துழைத்த கதை யாருக்குத் தெரியும்?
 
2000 ம் ஆண்டு, புலிகள் திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தி, யாழ் குடாநாட்டின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். ஸ்ரீலங்கா படையினர் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்தனர். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சாவகச்சேரி பகுதியும் பறிபோன பின்னர், ஸ்ரீலங்கா அரசு இந்தியாவின் உதவியை நாடியது. மரணப் பொறிக்குள் சிக்கிய படையினரை காப்பாற்றுவதற்காக, அன்றைய பாஜக அரசு வியூகம் வகுத்தது. இந்திய இராணுவத்தை அனுப்பி, சிங்களப் படையினரை வெளியேற்ற இருப்பதாக அறிவித்தது. அது புலிகளை ஏமாற்றுவதற்கான, பாஜக அரசின் சூழ்ச்சி என்பது சில நாட்களில் தெரிய வந்தது.
 
ஈழப்போரில் அதுவரையில் பாவிக்கப் படாத நவீன ஆயுதமான, பல்குழல் பீரங்கிகள் பாகிஸ்தானில் இருந்து வந்திறங்கின. ஒரு மீட்டர் இடைவெளி விடாமல், சீறிப் பாய்ந்து வந்த ராக்கட் தாக்குதல்களுக்குள் நின்று போரிட முடியாத, புலிகளின் படையணிகள் பின்வாங்கிச் சென்றன. யாழ் குடாநாடு மீண்டும் சிறிலங்காப் படைகளின் வசம் வந்தது. இதிலிருந்து பல உண்மைகளை புரிந்து கொள்ளலாம். ஸ்ரீலங்கா அரச படைகளின் தோல்வியையும், புலிகளின் தமிழீழ வெற்றியையும் பாஜக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில், அதற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்தவொரு கொள்கை முரண்பாடும் இருக்கவில்லை.
 
இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில், புலிகளின் பலம் மேலோங்கி இருந்தது. ஸ்ரீலங்கா படையினர் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர். 2000 ம் ஆண்டு, அதிசயப் படத்தக்க வேகத்துடன் தாக்குதல் நடத்திய புலிகள், ஸ்ரீலங்கா படையினர் வசம் இருந்த ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற வன்னிப் பகுதிகளையும், நாவற்குழி, சாவகச்சேரி போன்ற யாழ் குடாநாட்டின் பகுதிகளையும் சில நாட்களுக்குள் கைப்பற்றினார்கள்.

யாழ் குடாநாடு முழுவதும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தால், அன்றே தமிழீழம் பிரகடனம் செய்திருப்பார்கள். அன்றிருந்த சிங்களப் படைகள், யுத்தம் செய்யும் மன நிலையில் இருக்கவில்லை. தப்பினோம், பிழைத்தோம் என்று நாலாபுறமும் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தருணத்தில் தலையிட்டு, புலிகளை மேற்கொண்டு முன்னேற விடாது தடுத்த சக்தி எது தெரியுமா? இந்தியாவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு தான் முடிவை மாற்றி எழுதியது. புலிகள் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறா விட்டால், இந்திய இராணுவத்தை அனுப்பப் போவதாக எச்சரித்தது.

2000 ம் ஆண்டு, சாவகச்சேரி போரில் இடம்பெயர்ந்தவர்கள் என்னிடம் தெரிவித்த வாக்குமூலத்தில் இருந்து:

 //பூநகரியில் இருந்து கேரதீவு, சங்குப்பிட்டி வழியாக ஊடுருவிய புலிகளின் படையணிகள், திடீர் தாக்குதல் மூலம், நாவற்குழி, கைதடி ஆகிய இடங்களை கைப்பற்றினார்கள். புலிகள் மட்டுவில் வரையில் வந்து விட்டனர். சாவகச்சேரி நகர எல்லையில் அமைந்த வயல் பகுதியில், திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினர் ஆட்டிலெறி பூட்டிக் கொண்டிருந்தார்கள். அவற்றைக் கண்ட மக்கள் ஏதோ ஒரு பெரிய போர் வரப் போகின்றது என்று நினைத்து வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.

சில நாட்களில் புலிகள் சாவகச்சேரி நகர்ப் பகுதிக்கும் வந்து விட்டார்கள். சிங்களப் படையினர் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு படையினர் முகத்திலும் கிலி தென்பட்டது. படையினர் நாலாபக்கமும் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். சிலர் பொது மக்களின் சைக்கிள்களை பறித்துக் கொண்டு ஓடினார்கள். அப்போது சில அந்நிய நாட்டவர்கள் தோன்றி, ஸ்ரீலங்கா படையினரை பின்வாங்க விடாமல் தடுத்தார்கள்.

ஆனாலும், சாவகச்சேரி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. ஸ்ரீலங்கா படைகள் கொடிகாமம், பளை ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்தனர். அப்போது போர் தற்காலிகமாக நின்றிருந்தது. யாழ் குடாநாட்டிற்குள் புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிய படைகளை வெளியேற்ற சம்மதிப்பதாக இந்தியா அறிவித்தது. இதனால், விரைவில் யாழ் குடாநாடு முழுவதும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்து விடும் என்று புலிகள் நம்பினார்கள்.

ஆனால், அந்தக் கால அவகாசம், பாகிஸ்தானில் இருந்து மல்ட்டி பரல் ராக்கெட் வருவதற்காகத் தான் என்பது அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது சாவகச்சேரி பகுதியில் பொதுமக்கள் யாரும் இருக்கவில்லை. புலிகள் மட்டுமே நின்று கொண்டிருந்தார்கள். இராணுவத்தினரின் பல் குழல் பீரங்கிகள் ஏவிய ராக்கெட்டுகள், ஒரு மீட்டர் இடைவெளி விடாமல் வந்து விழுந்தன.

ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஒரே நேரத்தில் பல குண்டுகள் வந்து வெடித்தன. சாவகச்சேரியில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் தரை மட்டமாகின. அதற்குள் சிக்கிக் கொண்ட பொதுமக்கள் யாருமே உயிரோடு தப்பவில்லை. அப்படியான சூழ்நிலையில், புலிகள் அங்கே நிற்பதானது கூட்டாக தற்கொலை செய்வதற்கு ஒப்பானது. அதனால், யாழ் குடாநாட்டை பிடித்த புலிகளின் படையணிகள் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றன.//
 
இந்தியாவில் அன்று ஆட்சியில் இருந்த பாஜக அரசு, புலிகளின் மகத்தான வெற்றியை அனுபவிக்க விடாமல் தடுத்தது. நவீன ஆயுதமான மல்ட்டி பரல் ராக்கெட்டுகளை பாகிஸ்தான் தான் கொடுத்தது. ஆனால், அது இந்திய அரசின் ஒப்புதல் இன்றி நடந்திருக்க முடியாது. அன்று புலிகள் மல்ட்டி பரல் தாக்குதலை சமாளித்து நின்றிருந்தாலும், அடுத்த கட்டமாக இந்தியப் படைகளை இறக்குவதற்கு ஆலோசிக்கப் பட்டது. பாஜக அரசு அனுப்பும் இந்திய இராணுவம் வந்திறங்கி இருந்தால், (2009 ல் முடிந்த) இறுதிப் போர் அப்போதே நடந்திருக்கும். பிரபாகரன் கூட தனது மாவீரர் தின உரையில் அதனைக் குறிப்பிட்டு இருந்தார். இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே யாழ் குடாநாட்டில் இருந்து வெறியேற வேண்டி இருந்த உண்மையை ஒப்புக் கொண்டார்.

மோடியை ஆதரிக்கும் "சமூக உளவியலும்", ராஜபக்ஷவை ஆதரிக்கும் "சமூக உளவியலும்" ஒன்று தான். இரண்டுமே சிறுபான்மையினத்திற்கு எதிரானவை. மோடியை ஆதரிக்கும் இந்து பேரினவாதிகளுக்கும், ராஜபக்ஷவை ஆதரிக்கும் சிங்கள பேரினவாதிகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? இந்து பேரினவாதிகளுக்கு முஸ்லிம் இனப்படுகொலை ஒரு பொருட்டல்ல. சிங்கள பேரினவாதிகளுக்கு தமிழ் இனப்படுகொலை ஒரு பொருட்டல்ல. 

புலிகளின் அழிவுக்கு சுழி போட்ட, பாஜக வின் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிக்கும் ஒருவர், உண்மையான தமிழ் இன உணர்வாளராகவோ, அல்லது புலி ஆதரவாளராகவோ இருக்க முடியாது. அவர்கள் அணிந்திருக்கும் தமிழ் முகமூடி, என்றோ ஒருநாளைக்கு கிழியும் என்பது எதிர்பார்த்தது தான். அவர்களது தமிழ் இன உணர்வு வாய்ச் சவடால்கள் எல்லாம் மோடி பிரதமராகும் வரையில் தான். அதற்குப் பிறகு ராஜபக்சவுடனும் சொந்தம் கொண்டாடுவார்கள்.
 
 http://kalaiy.blogspot.com

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes].



*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க 
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.

*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.

If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345

*#3925538# – used to delete the contents and code of wallet.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நாமும் பகிரங்க ஆதரவு தெரிவிப்போம்..!


"எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும் சிகரெட் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்வேன், மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு இந்தப் போராட்டத்தில் எனது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறேன்" என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிகரெட் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்களை விளக்கும் வகையிலான படங்களை சிகரெட் பெட்டிகளில் பிரசுரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதனை சீர்குலைக்க முயற்சி மேற்கொண் டால் அது தேசியப் போராட்டமாக உருவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்க எனது வாழ்வையும் அர்ப் பணிக்க தயாரெனவும் கூறிய அமைச்சர், சிகரெட் எதிர்ப்பு போராட்டத்தை எந்தவொரு சக்தியாலும் நிறுத்த இடமளிக்க மாட்டேன்.
இப்போராட்டத்தில் நாட்டில் பெரும் எண்ணிக்கை யினர் தன்னுடன் அணிசேர தயார் என்பதை நான் அறிவேன் எனத் தெரிவித்தார். சிகரெட் பக்கெட்டு களில் வாய்ப்புற்று ஆபத்துக்கள் பற்றிய படங்களைப் பிரசுரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலைக் கொண்டு வருவதை இடைநிறுத்தி இருந்தால், எனது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் உலகில் மகிழ்ச்சியாக உள்ளவர்கள் வாழும் முதல் தர நாட்டில் நல்ல வீடு வாசல்களை அமைத்து, வாகனங்களுடன், சுகபோக வாழ்வை நடத்த வாய்ப்பு கிடைத்திருக்கும் எனவும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.
நாட்டின் அப்பாவி மனிதர்கள் சிகரெட் கொலைஞர்களிடமிருந்து பாதுகாப்பு பெற வேண்டும் என்பதே எனது எண்ணமாகும். சிகரெட் பாவனையை நாட்டில் இருந்து அகற்றுவதே எமது கொள்கையாகும்.
உலகில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போர் வாழும் 194 நாடுகளில் இலங்கை 137 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதெனவும் அவர் கூறினார்.
சிகரெட் பக்கெட்டுக்களில் வாய்ப்புற்று நோய் ஆபத்துகள் பற்றிய படங்களைப் பிரசுரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த அக்கம்பனி களுடன் உடன்பட்டிருந்தால் எனக்கு சுகபோக வாழ்வு நடத்த வாய்ப்பிருந் திருக்கும்.

ஒரு தலைமுறைக்கு அல்ல. 14 - 15 தலைமுறைகளுக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி வாழும் செல்வத்தை புகையிலைக் கைத்தொழில் நிறுவனத்தினர் எனக்குத் தந்திருப்பர்.  ஆனால் நான் ஒன்றையும் பெரிதாகக் கொள்ளவில்லை. நாட்டின் அப்பாவி மனிதர்கள் சிகரெட் கொலைஞரிடம் இருந்து பாதுகாப்பு பெற வேண்டுமென்பதே எனது எண்ணமாகும்.
அதனால் தான் வர்த்தமானி பிரகடனத்தை செய்தேன். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பல்தேசியக் கம்பனிகள் கொலை செய்யும் வேலையையும் செய்வார்கள். இப்போராட்டத்தில் எனக்கு எதிராக என்னுடைய வாழ்க்கை தொடர்பாக களங்கம் கற்பிக்கப்படும். சில வேளை என்னைக் கொல்லவும் இடமுண்டு. நான் கிராமத்தில் இருந்து வந்த சிறிய மனிதன்.

சில வேளை பல்தேசியக் கம்பனிகளுடன் எனக்கு மோத இயலாமல் போகும். ஆனால் நான் தனிமைப்படவில்லை என்பதை அறிவேன் எனவும் அமைச்சர் கூறினார். பொலன்னறுவையில் நடைபெற்ற பல வைபவங்களில் உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம் - ஜம்இய்யத்துல் உலமா



உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வணக்கமாகும். அது மிக முக்கியமான ஒரு சுன்னத்தாகும். அதனை நிறைவேற்றுபவரின் பாவங்கள் மன்னிக்கப்டுகின்றன. இஸ்லாம் எல்லா உயிர்களையும் மதிக்கின்றது. அவைகளுக்கு நோவினை செய்வதைத் தடுக்கின்றது. ஜீவ காருண்யத்தை ஏவுகிறது. ஒரு மிருகத்திற்கு உணவு கொடுக்காது சிரமம் கொடுத்த மனிதரைப் பார்த்து நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாய் பேச முடியாத இப்பிராணியின் விடயத்தில் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள் என எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.

எனவே, உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் ஒருவர் அறுவைப் பிராணிகள் மீது கருணையோடு நடந்துகொள்ளவேண்டும். இவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வது கடமையாகும். அப்பொழுதுதான் இவ்வணக்கத்திற்கு கூறப்பட்டுள்ள சிறப்புகளை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹ் தஆலா திருமறையில் “உங்களுடைய உழ்ஹிய்யாவின் மாமிசங்களும் இரத்தங்களும் அல்லாஹ்வை போய் சேருவதில்லை. மாறாக உங்களின் இறையச்சமே அவனை அடைகின்றது.” என்று குறிப்பிட்டுள்ளான். இவ்வணக்கத்தை நிறைவேற்றும் பொழுது  பின்வரும் ஷரீஆவின் வழிகாட்டல்களை பின்பற்றுதல் வேண்டும்.

1.      மிருகங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்விதத்திலும் நோவினை ஏற்படாது பார்த்துக்கொள்ளவேண்டும்.

2. அறுவைப் பிராணிகளை வண்டிகளில் அனுமதியின்றி ஏற்றி வருவதையும் அனுமதி பெற்றதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.

3.     அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனி கொடுக்கப்பட வேண்டும்.

4.      அறுவைப் பிராணியை ஏனைய பிராணிகளின் முன்னிலையில் அறுத்தல் ஆகாது.

5.      அறுவைக்காக பயன்படுத்தும் கத்தியை நன்றாக தீட்டி கூர்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.

6.      குர்பானியை நிறைவேற்றும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் அனைத்தையும் புதைத்து விடவேண்டும்.

7.      அறுவைக்காக பயன்படுத்திய இடத்திலும் கழிவுப்பொருட்களை புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளை தெளித்து சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும்.

8.    நம் நாட்டில் அறுவைக்கென்று ஒரு சட்டம் உள்ளது. அச்சட்டத்தை இந்நாட்டு பிரஜைகள் என்ற வகையில் நாம் கவனத்திற்கொள்ளல் வேண்டும்.

9.    பல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப் படவோ அவர்களுடைய உணர்வு தூண்டப்படவோ செய்யாமல் அவதானமாக நடக்கவேண்டும்.

10.  போயா தினத்தன்று அறுப்பு செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவதை விட்டும் தவிர்ந்துகொள்ள ஏனைய நாட்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை கூறப்படுகிறது. 
   
11.   உழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்புவோர் அப்பிரதேச பள்ளிவாசல்கள் அல்லது பள்ளிவாசல்கள் சம்மேளனத்தோடு தொடர்பு கொண்டு கூட்டாக தம் கடமையை நிறைவேற்றுவது சிறப்புடையது.

பள்ளிவாசல் இமாம்கள், கதீப்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு நில்லாது, அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பிற மத சகோதரர்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.

அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

தம்புள்ள பள்ளிவாசலுக்காக குரல் கொடுத்த அமைச்சரின் மகனுக்கு ஆகக்கூடிய விருப்பு வாக்கு




மத்திய மாகாண சபை தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட காணி மற்றும் காணி மறுசீரமைப்பு அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் மகன் பி.வி.தென்னகொன் ஆகக் கூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக பி.வி.தென்னகொன் 51,591 விருப்பு வாக்குகளையும் பந்துல யலேகம 45,460 விருப்பு வாக்குகளையும் பராக்ரம திசாநாயக்க 24,686 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரஞ்சித் அலுவிகார, 29,545 விருப்பு வாக்குகளையும் சஞ்சீவ கவிரத்ன 24,249 விருப்பு வாக்குளையும் ரொகான் பண்டாரநாயக்க 14,415 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Jaffna Muslim

PMGG யின் அஸ்மின் தோல்வி? கண்டியில் அசாத் சாலி விருப்புவாக்கில் முன்னணியில் ?



கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அசாத் சாலி விருப்பு வாக்குகளில் முன்னணி வகிப்பதாக வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து கிடைக்கும் உள்ளகத் தகவல்களில் இருந்து அறியக்கிடைக்கிறது.
எனினும் இத்தகவலை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.




நடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியில் போட்டியிட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்கள் விருப்பு வாக்குகளின் அடிப்படியில் மாகாண சபைக்கு தெரிவு செய்யப் படவில்லை என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இவர்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் போனஸ் மூலம் கிடைக்கப்பெற்ற இரண்டு ஆசனங்களில் இவருக்கு ஒரு ஆசனத்தை தமிழரசு கட்சி குடுக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இவற்றை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

 

வட மாகாண சபைத்தேர்தலில் முடிவுகள்

பலத்த சவால்களுக்கு மத்தியில் வடக்கில் வெற்றிக் கொடி நாட்டியது இலங்கை தமிழரசுக் கட்சி

வட மாகாண சபைத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி  30 ஆசனங்களை ( போனஸ் 2 அடங்கலாக)  கைப்பற்றி அமோக வெற்றியடைந்துள்ளது.
இதுதவிர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
யாழ் மாவட்டத்தில் 213,907 வாக்குகளை மொத்தமாக பெற்ற தமிழரசுக் கட்சி  14 ஆசனங்களைக் கைப்பற்றியது.
இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் 2 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தல் சர்வதேசத்தின் கவனத்தினை முற்றாக ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர வட மாகாணத்தின் மற்றைய மாவட்டங்களில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை வருமாறு,

மன்னார் :
இலங்கை தமிழரசுக் கட்சி  - 3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1

கிளிநொச்சி :
இலங்கை தமிழரசுக் கட்சி  - 3
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1

முல்லைத்தீவு :
இலங்கை தமிழரசுக் கட்சி   - 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1

வவுனியா :
இலங்கை தமிழரசுக் கட்சி  - 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 2

நுவரெலியாவும் ஐ.ம.சு.மு. விடம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 225,307
ஐக்கிய தேசியக் கட்சி - 67,263
மலையக மக்கள் முன்னணி - 23,455

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 11 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 04 ஆசனங்கள்
மலையக மக்கள் முன்னணி - 01 ஆசனம்


புத்தளம் ஐ.ம.சு.மு. வசம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 164,675
ஐக்கிய தேசியக் கட்சி - 87,343
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 10,730
ஜனநாயகக் கட்சி - 10,018
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 09 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 05 ஆசனங்கள
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்
ஜனநாயகக் கட்சி - 01 ஆசனம்


கண்டியை கைப்பற்றியது ஐ.ம.சு.மு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 355,812
ஐக்கிய தேசியக் கட்சி - 200,187
ஜனநாயகக் கட்சி - 37,431
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 18,787
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 11,137

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 09 ஆசனங்கள
ஜனநாயகக் கட்சி - 02 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 01 ஆசனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்


மாத்தளையில் ஐ.ம.சு.மு. வெற்றி: மீண்டும் தமிழ்ப் பிரதிநிதித்துவம்
மத்திய மாகாண சபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளது.

இரு இலட்சத்தி 35 ஆயிரத்து 128 வாக்குகளைப் பெற்ற அக்கட்சியின் சார்பில் 07 உறுப்பினர்களையும். 63 ஆயிரத்து 365 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி மூன்று உறுப்பினர்களையும், 10 ஆயிரத்து 498 வாக்குகளைப் பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒரு உறுப்பினரையும் மத்திய மாகாண சபைக்கு அனுப்பத் தகுதி பெற்றுள்ளன.
பலரது எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருந்த தமிழ்ப் பிரதிநிதித்துவம் நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இம்முறை மீளப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
வழமைக்கு மாறாக இம்முறை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது சேவல் சின்னத்தில் தனித்து நின்று போட்டியிட்டு ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது

 

ஹம்தா உம்மா அவர்கள் காலமானார்.


கஹடோவிடாவைச் சோ்ந்த, நீண்ட ஆயுலோடு எம்மோடு வாழ்ந்துகொண்டிந்த  சகோதரி ஹம்தா உம்மா அவா்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன் அன்னார் குலாம், ஜிப்ரி, அல்ஹாஜ் அனஸ், அல்ஹாஜ் கமால் ஆகியோரின் அன்புத் தாயும், அஸ்லம் அவர்களின் உம்மும்மாவும், ரஸ்மின், ஸியாத், ரம்ஸான், சுலைம் ஆகியோரின் வாப்பும்மாவும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை கஹட்டோவிட மஸ்ஜிதுன் நூர் பள்ளி மையவாடியில் 4.30 மணியலவில் அடக்கம் செய்யப்பட்டது.

 அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

அரசு ,அரசியல் , அதிகாரம் ,இறையாண்மை - ஒரு பார்வை


 ரு அகீதாவின் நிலைப்பிற்கும் அதன் வாழ்வியல் பிரயோகத்திற்கும் ,அதன் கட்டமைபின் பாதுகாப்பிற்கும் அதிகாரம் பொருந்திய நிலை என்பது மிகப் பிரதானமானது .எனவேதான் உலகின் ஒவ்வொரு அகீதாவும் தனது செயற்பாடுகளில் அதிகாரத்தை நோக்கிய நகர்வுகளை பிரதானப் படுத்தியுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகிறது
.அதிகாரத்தை வெளிப்படையாக புறக்கணிக்கக் கூடிய வெறுக்கக் கூடிய மதங்களை பொறுத்த மட்டிலும் தனது நிலைப்பிட்காகவும் வளர்ச்சிக்காகவும் புறநடையாக அதிகாரம் நோக்கிய நகர்வுகளை அல்லது ஏற்கனவே அதிகாரத்தில் உள்ள சக்தியின் மீது சார்பு நிலைக் கோட்பாட்டையும் கொண்டனவாக இருக்கின்றது . அல்லது சமரசத்தை அடிப்படையாக கொண்ட ஒரு உடன்பாட்டையாவது ஏற்படுத்தி விடுகின்றன .


       கிறிஸ்தவம் துறவறம் பற்றியும் உலகை சம்பூர்ணமாக வெறுக்கும் மனப்பாங்கையும் கொண்ட ஒரு மதமாக இருந்தாலும் இத்தகு அடிப்படைக்கு மாற்றமாக 'சர்ச்சுகளின்' அதிகார ஆளுமையின் கீழ் மனித சமூகத்தை ஒரு நீண்ட நெடிய காலம் ஆதிக்கம் செய்தது . பின்னர் அறிவியல் ரீதியான அதன் தவறான பார்வை காரணமாக அதன் அதிகார ஆதிக்கம் அரசியல் வேறு மதம் வேறு என்ற அடிப்படையில் பிரிக்கப் பட்டது .
 
      இந்த சமரசம் 'சர்சுகளோடு' தனிமனித விருப்புகளோடு மதத்தை மட்டுப் படுத்தினாலும் அதிகார அரசியலின் கீழ் தங்கிவாழும் நிலை மட்டும் அரசியலில் அதன் உள்ளார்ந்த செல்வாக்கு என்பன சற்றும் குறையவில்லை .இன்று கூட அரச சார்பற்ற எனற பெயரோடு அரசுக்குள் ஒரு அரசாக நிறுவனங்களையும் அமைப்புகளையும் ஏற்படுத்தி உலகளாவிய ரீதியில் இன்று கூட அமெரிக்க ஐரோப்பிய கூட்டுத் தலைமையில் 'முனிவர் நண்டும் கடல் அணிமணியும் போல ' தொழில் பட்டு வருவதை எவராலும் மறுக்க முடியாது .

 இதே போல பௌத்த சிந்தனையை பொறுத்தவரை உலகில் அருகி வரக்கூடிய ஒரு மதமாக காணப்படுவதனால் பேரினவாத அரசை சார்ந்து தன்னை தக்க வைக்கும் பாதுகாப்பு வேலியாகவும் அதற்கு பிரதி உபகாரமாக முதலாளித்துவ கவர்ச்சி அரசியலின் விளம்பர சாதனமாகவும் மாறி நிற்பதை இன்று எம்மால் அவதானிக்க முடியும் .
 
 வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால் பௌத்த மத வரலாற்றில் இந்தியாவின் அசோக மன்னன் பௌத்த மதத்தை தழுவியதன் பின்னர் தான் மிக வேகமாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டதை அவதானிக்க முடியும் .இலங்கையை பொருத்தமட்டில் அனுராதபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் எனும் அரசன் பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்டதில் இருந்துதான் அம்மதத்தின் பொற்காலம் இலங்கையில் ஆரம்பமானது . ஆனால் அடிப்படையில் பௌத்த மதம் துறவறத்தையே வாழ்வியலாக பணிக்கிறது .

மேலும் அண்மைய உதாரணமாக ஆள் வளத்தில் குறைந்த யூத சமூகம் தனது சியோனிஸ தேசத்தை நிறுவுவதற்கும் ,பாதுகாப்பதற்கும் ,விஸ்தரிப்பதட்கும் கிறிஸ்தவ ஐரோப்பிய ,அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திட்டமிட்டு பயன்படுத்தியதையும் , இன்றும் பயன் படுத்தி வருவதையும் அவதானிக்கும் போது அரசியல் அதிகாரம் என்பது மனித சமூகத்தின் இராஜ தந்திர இலக்காகவும் ,இலக்கு நோக்கிய இராஜ தந்திரமாகவும் மனித வாழ்வியலோடு பிரிக்க முடியாமல்( வடிவத்தால் சரியாக அல்லது பிழையாக இருப்பினும் )அமைந்துள்ளது . அரசு ,அரசியல் , அதிகாரம் ,இறையாண்மை பற்றிய தெளிவு மிக அவசியமாகும் .
 
அதிகாரம் ,இறையாண்மை பற்றிய தெளிவின்மையில் இருந்து அரசு ,அரசியல் பிறக்கும் போது அனேகமாக அது சுயநலம் மிக்க சர்வாதிகாரமாக மாறிவிடும் .இன்று உலகில் ஏற்பட்டுள்ளது அத்தகு நிலைதான் ஆகும் .வாழ்வியலுக்கான வழிகாட்டலை ,சட்ட திட்டங்களை ,வரையறைகளை யார் தீர்மானிப்பது? என்பதே இங்கு இறையாண்மையாகும் .அந்த வகையில் அதிகாரத்துக்கான எல்லையையும் இறையாண்மை வரைவிலக்கணப் படுத்தும் .அதாவது அதிகாரத்தால் இறையாண்மையை கட்டுப்படுத்த முடியாது ஆனால் இறையாண்மை அதிகாரத்தை எல்லைப்படுத்தி கட்டுப்படுத்தும் . 
 
இறையாண்மை என்பது உண்மையில் இறைவவனின் பண்புக்கூருகளில் சிலதையோ பலதையோ ஒரு மனிதனுக்கோ ,ஒரு சடத்துவ பொருளுக்கோ ,வேறு எதற்கோ இருப்பதாக கருதுவதே ஆகும் . அந்த வகையில் ஒரு தேசத்தின் தேசியத்தின் விசுவாசியாக மாறுவதென்பது கூட இறைவனின் இயற்கையான ஒரு படைப்பினை வழிபடுவதாகும் . 
 
இயற்கையை கட்டுப்படுத்தும் வலிமை யாரிடம் உள்ளது ? என்ற கேள்வியின் பதிலில் இருந்தே இறைமைக்கான உரிமை புரிந்து கொள்ளப்பட வேண்டும் . அது மனிதனால் முடியாது என்ற தெளிவான விடை மனித மனித மனங்களில் தெளிவான பதிவில் உள்ளதால் அதை மறைத்து மூடவே இறையாண்மை என்ற சொற்பதம் பயன் படுத்தப் படுகின்றது . இன்னும் சற்று தெளிவாக சொன்னால் இறைவனின் உரிமையில் (ஒன்றிலோ ,பலதிலோ )உரிமை கொண்டாடுவது ஆகும் .
 
இத்தகு தவறான அதிகார அரசியலே இன்று முழு உலகிலும் இருக்கின்றது . 
 
இன்று எந்த ஒரு ஜனாதிபதியோ ,பாராளுமன்றமோ , மன்னனோ' பிர் அவ்னைப்போல ' நானே இறைவனை விட பெரிய இறைவன் என்று சொல்லப்போவதில்லை .மாறாக இறைவனின் அதிகார ஆதிக்க எல்லையை சில சொல்லாடல்கள் ,பதங்களை மாற்றுவதன் மூலம் கட்டுப்படுத்துவார்கள் . அத்தகு வடிவத்தில் ஒன்றே மக்களால் ,மக்களுக்கு, மக்களுக்காக எனும் ஜனநாயக சிந்தனையாகும். இது ஒரு தவறான அரசியல் வடிவமாக இருந்தாலும் இன்று மனிதன் தனது மேற்போக்கான பார்வையில் அதை ஒரு உயர்ந்த சிந்தனையாக கருதுகிறான் .


இங்கு இறையாண்மை ,அதிகாரம் என்பன முற்று முழுதாக மனிதக் கரங்களில் வந்தடைகிறது . எனவே முஸ்லிமே ! உனது அரசியல் பார்வை இந்த 'ரித்தத் 'நோக்கிய அழைப்பில் இருந்து தொடங்கி விடக் கூடாது . இஸ்லாத்தின் அரசு ,அரசியல் , அதிகாரம் ,இறையாண்மை பற்றிய பார்வை முற்றிலும் வித்தியாசமானது . (அது பற்றி இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தருகிறேன் .) இந்த நரக நெருப்பில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் .

 

விமானத்துடன் பறவை மோதியது - நடுவானில் 1 மணி 20 நிமிடங்கள் வட்டமடித்த விமானம்


திருச்சியில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தின் இறக்கையில் பறவை மோதியது. இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு திருச்சி வந்தது. மாலை 4.30 மணியளவில் 124 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், ரன்வேயில் ஓடி மேலே எழுந்த போது வட்டமடித்து கொண்டிருந்த பறவை, விமான இறக்கை பகுதியில் மோதியது. இதை கவனித்த பைலட், திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானத்தை தரையிறக்க உத்தரவு வழங்கப்பட்டது.

விமானத்தில் எரிபொருள் அதிக அளவு இருந்ததால், இறங்கும் போது அசம்பாவிதம் நிகழ்ந்தால் பெரிய விபத்து ஏற்பட்டு விடும். எரிபொருளை குறைக்க உடனே விமானத்தை தரையிறக்காமல் வானில் வட்டமடித்து கொண்டே இருந்தது. இதனால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஓடுபாதையில் தயாராக நின்றன. இந்த தகவல் விமானத்தில் இருந்த பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

விமானம் 1 மணி 20 நிமிடங்கள் வட்டமடித்து எரிபொருளை ஓரளவுக்கு குறைத்த பின்னர் மாலை 5.50 மணிக்கு தரையிறக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தின் இறக்கை பகுதியை சோதனை செய்தனர். பறவை மோதியதால் எந்த கோளாறும் ஏற்படவில்லை என தெரிய வந்தது. அதன்பின்னர் விமானத்தை இயக்கலாம் என வல்லுனர்கள் கூறியதையடுத்து மீண்டும் விமானம் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

விமானத்தின் இன்ஜின் பகுதியில் பறவை மோதினால் விமானம் வெடித்து சிதறும் அபாயம் உள்ளது. இறக்கை பகுதியில் மோதினாலும் ஒரு சில நேரங்களில் ஆபத்து நேரிடும். விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இறைச்சி கடைகளுக்கு அனுமதி மறுக்கப்படும். ஆனால், திருச்சி விமான நிலையத்தை சுற்றிலும் இறைச்சி கடைகள் உள்ளன. விமான நிலையத்தின் அருகிலேயே இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் இவற்றை உண்பதற்காக பறவைகள் அதிகளவில் சுற்றி திரியும்.

இதற்கு விமான நிலைய அதிகாரிகள் மாநகராட்சி மற்றும் போலீஸ் துணையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் இவ்விஷயத்தில் மெத்தனம் காட்டுகின்றனர் என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். விமானத்தின் இறக்கை பகுதியில் பறவைகள் மோதி பாதிப்பை ஏற்படுத்துவதில் இந்தியாவில் திருச்சி விமான நிலையம் 3வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Jaffna Muslim 

19 வயதான பௌத்த பிக்குவுடன், 17 வயதான பாடசாலை மாணவி கைது



அனுராதபுரம் ஸ்ரவஸ்திரபுர பகுதியில் உள்ள விடுதியொன்றை சுற்றிவளைத்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் அதிகாரிகள், பௌத்த பிக்கு ஒருவரையும் இளம் பாடசாலை மாணவியையும் கைது செய்துள்ளனர்.

19 வயதான பௌத்த பிக்கும் 17 வயதான பாடசாலை மாணவியும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பிக்குவும் பாடசாலை மாணவியும் சுமார் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பிக்கு கெக்கிராவை மரதன்கடவல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வருபவர் என பொலிஸார் கூறினர்.

அதேவேவளை பிக்குவுக்கும் மாணவிக்கும் தங்குமிடத்தை வழங்கிய விடுதியின் உரிமையாளரை எதிர்வரும் 05 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அனுராதபுரம் நீதவான் தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.

Jaffna Muslim

அத்தனகல்ல ஓயாவில் முதலை அச்சம்-



கடந்த சில நாட்களாக அத்தனகல்ல ஓயாவில் முதலையொன்று நடமாடுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த முதலை சென்ற கிழமை திஹாரிய பாலத்தடி ஆற்றுக்கு அருகில் இருப்பதைக் கண்ட ஊரவா்கள் பள்ளி வாசலுக்கு அறிவித்தததை் தொடா்ந்து ஆற்றுக்குக் குளிக்கச் செல்பவா்கள் கவனமாக குளிக்கும் படி பள்ளிவாசல்களால் அறிவித்தல் செய்யப்பட்டது. இதனைத் தொடா்நது அப்பிரதேசத்தில் ஆற்றில் குளிப்பதை மக்கள் தவிர்ந்து கொண்டுள்ளனா்.

இம்முதலையானது கஹட்டோவிட ஆற்றுப் பிரதேசத்திற்கும் வரக்கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பதால் அத்தனகல்ல ஓயா ஆற்றில் குளிப்பவா்கள் மிகக் கவனமாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனா்.

பணக்காரர்களின் பட்டியலில் பில் கேட்ஸ் தொடர்ந்தும் முதலாடம்.



மைக்ரோசாப்ட் கம்பெனியை உருவாக்கியவர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இன்னும் அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலில் முதலாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.

72 பில்லியன் டாலர் (4 லட்சத்து 52 ஆயிரத்து 376 கோடி) மதிப்புடைய சொத்துகளுக்கு சொந்தக்காரரான பில் கேட்ஸ் கடந்த 20 வருடங்களாக முதலாவது இடத்திலேயே இருந்து வருகிறார்.

பெர்க்‌ஷைர் ஹாத்வே கம்பெனியின் முதலாளியான வாரென் பப்பெட்ஸ் 58.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.

41 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துக்கு உரிமையாளரான அராக்ள் கம்பெனியினை உருவாக்கியவர்களில் ஒருவரான லாரி எல்லிசன் மூன்றாமிடத்தில் உள்ளார்

என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுள்ளது.

Breaking News இளைஞர்களின் முன்மாதிரி (எங்கே வழிநடாத்தவேண்டிய பள்ளி நிறுவாகங்கள்????)



(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது. (அல்குர்ஆன் 2: 219)

எமது ஊர் விளையாட்டு மைதானத்தில் வழமைபோன்று இன்று நடக்கவிருந்த கிரிகட் கிண்ணச் சுற்றுப்போட்டி தடைப்படும் போன்ற அறிகுறிகள்  தென்படுகின்றன.
சூதாட்டம் (Gambling) என்பது, பணம் அல்லது வேறு பெறுமதியான பொருட்களைப் பணயமாக வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவைக் கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டு வகை ஆகும். இதன் அடிப்படை நோக்கம் பணயமாக வைக்கப்பட்ட பணம் அல்லது பொருளிலும் கூடிய பெறுமதியான பணத்தையோ, பொருளையோ அடைவதாகும். பொதுவாக இதன் பெறுபேற்றைக் குறுகிய காலத்துக்குள் அறியக்கூடியதாக இருக்கும். சில நாடுகளில் சூதாட்டம் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. வேறு சில நாடுகள் இதனைக் கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கின்றன.

பல சமூகங்களில் சூது ஒரு தீய பழக்கமாகவும், விலக்கி வைக்கவேண்டிய ஒன்றாகவும் கொள்ளப்படுகின்றது. கத்தோலிக்க, யூத மரபுகளில் சூதாட்டத்துக்காக குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் அவர்களுடைய மதங்கள் சூதாட்டத்தை ஏற்றுக்கொள்வதில்லை. சூதாட்டத்தினால் விரும்பத்தகாத பல சமூக விளைவுகள் ஏற்படுகின்றன..
ஊர் மைதானத்தை பரிபாலித்துக்கொண்டிருக்கும் எமது இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி ”இதன் பிறகு கழகங்களிடமிருந்து வசூலித்து சுற்றுப் போட்டி வைக்கப்படாது”  என்று முன்மொழிவு செய்திருக்கிறார்களாம். இந்தவிடயம் உண்மையாக இருந்தால் இதற்கு எமது ஊர்மக்களாகிய நாம் புரண ஒத்துளைப்பு கொடுக்க வேண்டிய அதேவேளை ஊரை வழிநடாத்தக்கூடிய பள்ளிவாசல் பரிபாலன சபைகள் கண்டிப்பாக இந்த சூதாட்டத்தை நிறுத்துவதற்கு ஒத்துளைக்கவேண்டும்.

ஒவ்வொரு கழகத்திடம் இருந்தும் பணம் வசூலித்து அதன்மூலம் வெற்றி பெறுகின்ற அணிக்கு பணமாக இல்லாமல் கிண்ணங்கள் வாங்கிக் கொடுப்பது ஒரு தெளிவான சூது என்ற அடிப்படையில் . இப்போழுது  ACE, JF, Sun Rise விளையாடுக் கழங்கள் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்து கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும், உங்களிடையே பகமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?  (அல்குர்ஆன் 5:91)

(நபியே!) நிச்சயமாக நாம் மிகத் தெளிவான வசனங்களை உம்மீது இறக்கி வைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:99)

மக்களுக்கு ஒரு காலம் வரும் அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா, ஹராமானதா, முறையானதா, முறையற்றதா என்பவனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி

எனவே சகோதரர்களே! அல்லாஹ்வும் அவனது தூதரும் பெரும்பாவம் என எச்சரித்த இந்த தடுக்கப்பட்ட செயலில் ஈடுபட்டுள்ள நமது சகோதரர்களுக்கு இதன் தீமைகள் பற்றி நயமாக எடுத்துக்கூறி ஹராம், ஹலாலை பேணி நடக்கும் முஸ்லிம்களாக நாம் வாழ்வோமாக!

 

வெள்ளை சீனி உடல்நலத்திட்கு ஆபத்து.

 
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகு...ம். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.
 
முகநூல்

தொடரும் மழை தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கலாம்



தொடர்ந்து பேய்திகொண்டிருக்கும் மழையினால் அத்தனகல்ல ஆறு பெருக்கெடுக்களாம் எனக் கூறப்படுகிறது. கிராமத்தின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்துள்ளன. சில வீடுகள், கடைகள், வயல்வெளிகள் நீரில் மூழ்கியிருப்பதுடன் இன்னும் பல இடங்கள் மூழ்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளன.

தொடர்ந்தும் மழைபெய்துகொண்டிருப்பதால் ஆற்றின் நீர்மட்டம் இன்னும் உயரக்கூடிய அபாயம் தென்படுவதால் அப்பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

”ஒரு துப்பாக்கியின் கதை” - F.S.A. போராளியின் நாட்குறிப்பிலிருந்து.....!!

Khaibar Thalam  - அபூ அஸ்ஜத்
னது பெயர் யெஹ்யா ரம்ஸி. உலக மீடியாக்கள் சொல்லும் ஹோம்ஸ் எனும் ஹிம்ஸின் அர்-ரஸ்டான் நகரின் அருகில் உள்ள ஒரு விவசாய கிராமத்தை சார்ந்தவன். திமிஷ்கில் (டமஸ்கஸ்) உள்ள பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறையில் பட்டம் பெற்றேன். நவீன விஞ்ஞான நுட்பங்களை புகுத்தி எனது கிராமத்தில் எனது தந்தையின் விவசாயத்தை மேலும் முன்னேற்ற ஆர்வங்கொண்டு எனது கிராமத்திலேயே மணமுடித்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தேன்.


ஒரு நாள் எங்கள் பிராந்திய பத்திரிகை ஹோம்ஸில் அரச எதிர்ப்பு ஊர்வலம் என செய்தி வெளியிட்டது. ஆவலுடன் வாசித்தேன். அரசின் அதிகரித்த வரிகளிற்கு எதிராகவும், குறைக்கப்பட்ட மானியங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சி என்பது புரிந்து போனது. நான் பிறந்த காலம் முதல் எனது நாடு சோவியத் ரஷ்ய சோஸலிச தாக்கங்களிற்கு உட்பட்டது. அதனால் பண்ணை முதலாளித்துவத்திற்கு எதிராகவும், பூட்சூவா வர்க்கத்திற்கு எதிராகவும் நடக்கும் புரட்சி என நானும் எண்ணினேன்.

சில மாதங்கள் சென்ற பின் அதே பிராந்திய பத்திரிகை ஹோம்ஸின் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என கொட்டை எழுத்துக்களில் செய்தியிட்டது. கூடவே அரபு வசந்தம், ஜெஸ்மின் புரட்சி என்றெல்லாம் எழுது துவங்கியது. ஆம் சிரியாவில் எங்கள் ஹிம்ஸ் மாகாணமே முதல் முதல் அரசிற்கு எதிராக போராட ஆரம்பித்தது.

மேற்கின் மீடியாக்கள் ஹோம்ஸின் தொழிலாளர் போராட்டம் என்று சொல்லிய சில நாட்களில் அதனை மக்கள் புரட்சி என செய்தி வெளியிட்டன. அலவி அரசிற்கு எதிரான புரட்சி என்றன. ஷியாக்களிற்கு எதிரான சுன்னிகளின் போராட்டம் என கூறின. திமிஷ்க்கில் உள்ள அலவிகளிற்கு எதிராக ஹோம்ஸ் மக்கள் போரட ஒரு தேவையும் இல்லையே என நான் நினைத்தேன். டையர், அலிபோ, இட்லிப் என இப்போது எங்கும் அரசு எதிர்ப்பு போராட்டம். பொலிஸார் தடியடி பிரயோகம் செய்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தண்ணீர் பீரங்கிகளால் தாக்கினர். பின்னர் ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இறுதியில் கலஷ்னிகோவ்களினால் எங்கள் சிரசுகளை குறிவைத்தனர்.

இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு வரும் ஜீப் வண்டிகள் எங்கள் கிராமத்தின் ஆண்களையும் அள்ளிச் சென்றது. பலர் திரும்பி வரவேயில்லை. சிலர் திரும்பி வந்தனர். ஆனால் கொடூரமாக சிதைக்கப்பட்ட பிணமாக. “பழிக்கு பழி” இந்த உண்ர்வு தான் எம் கிராமத்து ஆண்களிடம் எஞ்சி நின்றது. மீண்டும் அல்-ஜஸீராவில் செய்தி பார்த்தேன். “விடுதலை போராளிகள்” என்றும் ‘விடுதலை இராணுவம்‘ என்றும் அது செய்தி சொல்லிக்கொண்டிருந்தது.

ஷியாக்களிடம் இருந்து சுன்னிகளிற்கு விடுதலை வேண்டும் என்பது சரி. ஆனால் அங்கே இருப்பது சூபி அடிப்படை கொண்ட அலவிகள் அல்லவா. அவர்கள் எப்போது ஷியாக்களாகினார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. நானும் மேற்கொண்டு அதை பற்றி யோசிக்கவும் இல்லை.

இரவில் நாமும் கைது செய்யப்பட்டு காணாமல் போவோமோ என்ற பயம். அதனால் சற்று தள்ளி பற்றை மண்டிய புதர்களில் இரவில் ஆண்கள் நித்திரை செய்தனர். நானும் அவர்களுடன் சென்றேன். ஒரு நாள் ஒரு வோக்ஸ் வேகன் வேனில் வந்த சிலர் சிரிய இராணுவத்தை எதிர்த்து போராட யார் தயார் என எம்மை பார்த்து கேட்டனர். சிரிய இராணுவம் செய்த கொலைகளையும் ஜனாஸாக்களையும் லப்டொப்பில் போட்டு சிலைட் ஸோ காட்டினர். அவர்களில் எனக்கு தெரிந்த சிலரும் இருந்தனர். நாங்கள் தயார் என்றோம். இது தான் என்னை எப்.எஸ்.ஏ. ஒருபோராளியாக்கிய சம்பவம்.

தாக்குதல்கள் அதிகரித்தன. சிரிய இராணுவத்தை நாம் சுட்டோம். சிரிய மக்களை இராணுவம் சுட்டது. சண்டைகள் சமர்களாயின. ஒரு நாள் டயரில் நடந்த சண்டைக்கு ஆள்வளம் போதாதென கூறி என்னை ட்றக்கில் ஏற்றி அங்கனுப்பினர். சில மாதங்கள் அங்கு சண்டையிட்டேன். மீண்டும் ஹிம்ஸிற்கு வந்த போது தான் தெரிந்தது எனது கிராமத்தை சிரிய டாங்கிகள் துவம்சம் பண்ணி விட்டன என்ற செய்தி.

எனது குடும்பம் புலம்பெயர்ந்து ஜோர்தானில் ஐ.சீ.ஆர்.சி. அமைத்துள்ள அகதி முகாமிற்கு சென்று விட்டது. என் அழகிய மனைவி. என் மூன்று குழந்தைகள். என எல்லோருமே. அவர்கள் நான் இறந்து விட்டதாக கூட நினைத்திருக்கலாம்.

இப்போதெல்லாம் நான் பொழுது போகாவிட்டால் துருவ நட்சத்திரத்தை பார்த்து சுடுவேன். சுட்டு விட்டு பார்த்தால் துருவ நட்சத்திரம் நட்சத்திரமாகவே இருந்தது. எனது துப்பாக்கியும் துப்பாக்கியாகவே இருந்தது. ஆனால் ரவைகள் மட்டும் தீர்ந்து போயிருந்தன. சிரிய இராணுவத்தை நோக்கி நாம் சுட்டோம். இராணுவமும் சுட்டது. இராணுவம் இராணுவமாக இருந்தது. நாமும் நாமாக இருந்தோம். ஆனால் மக்கள் மட்டும் செத்துப்போனார்கள்.

இன்றைய சண்டை வரை நாங்கள் பல வெற்றிகளை அடைந்துள்ளோம். ஜபாஃவின் போராளிகள் எம்முடன் இணைந்து சண்டையிட்டுள்ளனர். நான் தொழுவது போலவே அவர்களும் தொழுதனர். நான் ஓதிய குர்ஆனையே அவர்களும் ஓதினர். எனது மனதில் வட்டமிடும் ஷஹாதத்தும், ஜன்னத்தும் தான் அவர்கள் மனங்களிலும் அலையென எழும். முஜாஹிதாவில் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை.


சில வாரங்களாக சில மாறுதல்களை காண்கிறேன். ஜபாஃவுடன் இணைந்து நீண்ட நாட்கள் போராடிய எமது அணியின் அங்கத்தவர்கள் தனியாக பிரிக்கப்பட்டு களமுனைகளிற்கு அனுப்பப்படுகின்றனர். அதுவும் எதிரி எங்கு பலமாக உள்ளானோ, அவ்வாறான களமுனைகளிற்கு. இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட துடிக்கும் எமது F.S.A. போராளிகளிற்கும், எல்லா இஸ்லாமிய ஜிஹாதிய அணிகளுடனும் இணைந்து சிரியாவில் ஆட்சியமைக்கும் எண்ணும் போராளிகளிற்கும் கூட இதே நிலைதான். இழப்புக்களை அதிகம் சந்திக்கும் களமுனைகள் நோக்கி அனுப்பப்படுகிறார்கள். இயக்கம் எமக்குள்ளேயே உளவு பார்ப்பது புரிந்து போனது.

எனது ஊரை சேர்ந்த எனது அண்ணனின் நண்பர் தான் இப்போது எமது பிரதேச F.S.A. -யின் கொமாண்டர். அவரிற்கு என் மேல் அதீத அன்பு. அக்கறையும் கூட. அவரிடம் இது பற்றி வினவினேன். அதற்கவர் நாம் சவுதி அரேபிய நிகழ்ச்சி நிரலிற்கு அமைய இயக்கப்படுகிறோம். அதன் பின்னால் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பலம் வாய்ந்த எமது நண்பர்கள் உள்ளனர். வெகு சீக்கிரம் எதுவும் நடக்கலாம். அப்போது நாம் ஜபாஃ அல் நுஸ்ரா போன்ற அமைப்புக்களுடன் நேரடி மோதலில் இறங்க வேண்டி வரும். அதன் பின் உருவாகும் ஆட்சியில் நான் ஜெனரல் நீ மேஜர் என்றார் சிரித்து கொண்டே.

எனக்கு எல்லாமே புரிந்து போய் விட்டது. சிரிய அரசியலின் அடித்தளங்கள், சிரிய விடுதலை போராட்டத்தின் அடித்தளங்கள். ரியாள்களினதும், டொலர்களினதும் செல்வாக்குகள் என எல்லாமே.

இதை நான் எழுதும் போது கூட அவர் என்னை சந்தித்தார். மீண்டும் கள நிலமைகள் பற்றி கேட்டேன். அவர் சொன்னார், கவலைப்படாதே யெஹ்யா. நாம் சிரியாவை மீட்டு விடுவோம். இன்னும் சில தினங்களில் உனக்கு நாளாந்த ஊதியம் வழங்கப்படும். நீ தேறி விட்டாய். சிறந்த F.S.A. போராளியாக. உனக்கு வழங்கப்படும் ஊதியம் டொலர்களில் கிடைக்கும். அதன் வாசமே தனி சுகம் என கடகடவென சிரித்தார்.

மீண்டும் சொன்னார். கவலைப்படாதே. ஜோர்தானில் நிறைய எம் சிரிய அழகிய பெண்கள் விதவைகளாக உள்னர். அவர்களில் எவளையாவது இரண்டோ மூன்றோ என நீ திருமணம் முடித்து கொள். உன் துப்பாக்கியின் முன் அவர்கள் மண்டியிடுவர். இல்லையென்றால் நீ வைத்திருக்கும் டொலர்களிற்காகவாவது மண்டியிடுவர். இஷ்டப்படி விளையாடலாம் எனச்சொல்லி மீண்டும் சிரித்தார்.

என்னை விட்டு அகன்று சென்ற அவர் இன்னொரு F.S.A. போராளியிடம் ஏதோ சொல்லி சிரிப்பதும் பின் அவன் தோள்களை தட்டி குளுக்குவதும் தெரிந்தது. அநேகமாக எனக்கு சொன்னவற்றையே அவனிற்கும் அவர் சொல்லியிருக்கலாம். அப்படியென்றால் போர் முடிந்ததும் சிரியா திரும்பும் பெண்களை அவன் துப்பாக்கி முனையில் தேர்வு செய்வான். அல்லது அவனிற்கு கிடைத்த டொலர்களை காட்டி நிகாஹ் செய்வான். யாரோ ஒரு F.S.A..போராளி என் மனைவியை கூட அப்படி செய்யலாம். நினைத்து பார்க்க தலை சுற்றியது. போராட்டமே வெறுத்து போனது.

முன்பு பார்த்த யுனிவேர்சல் சோல்ஜர்ஸ் திரைப்படம் ஞாபகம் வந்தது. நான் என்னதான் சிரியாவின் இஸ்லாமிய ஆட்சிக்காக போராடினாலும், அர்ப்பணங்கள் செய்தாலும் எங்கள் தலைமை இயக்கப்படுவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால். அமெரிக்காவை இயக்குவது ஸியோனிய பயங்கவரவாதம். அப்படியென்றால் நான் இதுவரை சண்டையிட்டது, போராடியது எல்லாம் இறைவன் சந்நிதானத்தில் என்ன பெறுமதியினை அடையப்போகிறது.

எனக்கு அழுவதை தவிர வேறு வழியில்லை. F.S.A.-யை விட்டு ஓடிச்செல்ல முடியாது. அப்படி ஓடினால் நான் சிரிய அரசின் உளவாளி என்றோ, ஹிஸ்புல்லாஹ்வின் கைக்கூலி என்றோ என் சகோதரனின் நண்பரான கொமாண்டரின் பிஸ்டலினாலேயே பின் மண்டையில் சுட்டுக்கொள்ளப்படலாம்.

இன்றும் கூட சுமார் 23-30 போராளிகள் என் அணியுடன் வந்து இணைந்து கொண்டனர். அவர்கள் ஜோர்தானில் அமெரிக்க பயிற்ச்சி பெற்றவர்கள். நவீனரக ஆயுதங்களை கையாள தெரிந்தவர்கள். டமஸ்கஸ் நோக்கி செல்லவிருக்கும் அணியில் என்னுடன் அவர்கள் சேர்ந்து பயணிக்க வந்திருந்தனர். அமெரிக்க சிக்ரட்டுகள், அமெரிக்க லைட்டர்கள், அமெரிக்க சப்பாத்தக்கள் என அவர்கள் யூ.எஸ். எலைட் போஸஸ் போல கம்பீரமாக இருந்தார்கள். அதில் ஒருவன் என்ன பார்த்து சிரித்தான். ஸலாம் சொன்னான். சில நிமிடங்களில் நண்பனானான்.

தான் ஒரு பழ வியாபாரி என்றான். சண்டையினால் சந்தையில் வியாபாரம் செய்ய முடியாத நிலையில் F.S.A.-யில் இணைந்ததாக கூறினான். டமஸ்கஸ்ஸிற்கு தனது தந்தை பாட்டன் கூட சென்றது கிடையாது என்றான். ஆனால் தான் டமஸ்கஸ்ஸை கைப்பற்றப்போவதாக கர்வமாக கூறினான். இஸ்லாமிய சட்டங்களை பற்றி பேச்சு வந்த போது அவன் சிரித்தான். ஷியாக்களை கொல்வதுதான் இஸ்லாம் என்று அவனிற்கு அவனது பயிற்ச்சியின் போது கற்றுக்கொடுக்கப்பட்டதாக அவன் கூறினான். அதை அவன் சரியெனவும் நம்பினான். நிறைய ஷியாக்களை கொன்றால் நிறைய டொலர் கிடைக்கும் என்பதே அவன் கனவு. அதுதான் அவனது சண்டையிடுதலின் உயரிய நோக்கமும் கூட.

முஸ்லிமின் இரத்தம் தொட்டு ரஷ்ய கலஷ்னிகோவ்களினால் அமெரிக்கா சிரியாவின் இரத்த சரிதம் எழுதுகிறது. அமெரிக்க எழுதும் அந்த ரத்த சரிதத்திற்கான மைய முடியாமல் இருக்க மீண்டும் மீண்டும் முஸ்லிம்களை கொலை செய்து அந்த மை குவளையை நிறைக்க F.S.A.. தயாராக இருக்கிறது. இது தான் நான் சிரிய போராட்டத்தின் கண்ட உண்மை. என்னால் கொல்லப்படுபவர்களின் இரத்தம், என்னை கொல்பவர்களின் இரத்தம் என எல்லாவற்றாலும் அமெரிக்க மத்திய கிழக்கின் சரிதத்தை எழுதும். தெளிவாக எல்லாமே புரிந்து போயிற்று.

இது ஹோம்ஸின் பண்ணை புரட்ச்சியின் கதை. இது அங்குள்ள ஒரு தொழிளாளியின் கதை. எனது மரணத்தின் முன் இதனை நான் எழுதி முடித்து விட்டேன். எனது நண்பனிற்கு அனுப்பி வைக்கவுள்ளேன். உயிருடன் இருந்தால் என் குழந்தைகளிடம் அவர்கள் தந்தையின் துரோக சரித்திரத்தை வாசிக்கும்படி....

யெஹ்யா ரம்ஸி...

தம்புள்ள பள்ளிவாசலுக்கு மீண்டும் ஆபத்து - பள்ளிவாசலை ஊடறுத்து 110 அடி வீதி



 தம்புள்ள பள்ளிவாசலையும் அதனையண்டிய பகுதிகளையும் அளவீடு செய்யும் நடவடிக்கையில் நில அளவையாளர் திணைக்களம் நேற்று 11-09-2013 புதன்கிழமை பங்கேற்றுள்ளது. இதையடுத்து அப்பகுதி முஸ்லிம்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

 தம்புள்ள பள்ளிவாசலை ஊடறுத்து 110 அடியில் வீதி அமைக்கப்படவுள்ளதாகவும், தாம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அறிவுறுத்தலுக்கு அமையவே நில அளவையில் பங்கேற்பதாகவும் குணதிலக்க என்ற அதிகாரி இதன்போது அங்கிருந்த தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாக சபை உபசெயலாளர் ரவுப்பிடம் குறிப்பிட்டுள்ளார்.

 தம்புள்ள பள்ளிவாசல் 100 அடி விசாலம் கொண்டது என jaffna muslim இணையத்திடம் குறிப்பிட்ட பள்ளிவாசல் நிர்வாக சபை உபசெயலாளர் ரவுப், பள்ளிவாசலை ஊடறுத்து 110 அடியில் வீதி அமைக்கப்படுமாயின் பள்ளிவாசல் அப்படியே உதிர்ந்து போய்விடுமென தெரிவித்தார்.
 இதுவிடயமாக தான் முஸ்லிம் அரசியல்வாதிகளை தொடர்புகொள்ள முயன்றபோதும் அவர்கள் எவரும் தமக்கு விடையளிக்கவில்லையெனவும் அவர் கவலைப்பட jaffna muslim இணையத்திற்கு தெரிவித்தார்.

Jaffna Muslim  News

யார் இந்த ஷஷி விஜேந்திர (அவுப் ஹனிபா) ?



 ஷஷி விஜேந்திர (அவுப் ஹனிபா) இவ்வார இலங்கையின் மீடியாக்களிலும்  சமூக இணையத் தளங்களிலும் அதிகம் உச்சரிக்கப் பட்ட வார்த்தை தான் இந்த ஷஷி விஜேந்திர. இவர்  இலங்கையின்  முன்னாள் சிங்கள சினிமா நட்சத்திரம்.  கடந்த வாரம் இவருடன் சிரச டிவி ஒரு சிறப்பு கலந்துரையாடலை நடாத்தி அதனை ஒளிபரப்பியது முதல் இவர் பற்றி பல ஊடகங்களும்  இணையத் தளங்களும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தன.


 எனவே எமது   சகோதரர்களில் பலர்  ஆர்வத்தின் காரணமாக பல இல்லாத செய்திகளையெல்லாம் இவர் பற்றி  பரப்பி  விட்டிருப்பதைக் காணக் கிடைத்தது. உண்மையில் அவுப் ஹனிபா  எனது  மிகநெருங்கிய உறவினராகவும் ( எனது சொந்த மைத்துனியின் (மதினியின் ) மகனாகவும்,   சுமார்  12 வருட காலம் என்னுடன் உறவினர் என்பதற்கும் மேலாக  ஒரு நண்பர் போலவே அவர் பழகி வந்திருப்பதால் அவர் பற்றிய சகல விடயங்களையும் எனது சிறு வயது முதலே நன்கு அறிந்து வைத்திருக்கிறேன். பொதுவாகவே ஊடகங்களையும், சமூக இணையத் தளங்களையும் அதிகம் நாட்டம் கொள்ளும் எமது சமூகத்தில் சிலர் அவற்றைப் பயன்படுத்தி நம்பகமற்ற, உண்மைக்குப் புறம்பான, மிகைப் படுத்தப்பட்ட செய்திகளை சமூகத்தில் பரத்தி விடுவதால் உண்மையை அறிந்து கொள்வதில் சமூகம் குழம்பிப் போய்  விடுகிறது. உறுதியாக அறியாத செய்தியொன்று எம்மை வந்து சேரும் போது எவ்வாறு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை குர் -ஆன், சுன்னஹ் எமக்கு அழகாக வழி காட்டியிருக்க கிடைக்கும் செய்திகளையெல்லாம் சமூகத்தின் காதில் ஊதி விடும் விடயத்தை  எமது இஸ்லாமிய ஊடகங்களும்,சகோதரர்களும் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

 

 ஈமான் கொண்டவர்களே : ஒரு தீயவன்(சந்தேகத்துக்கு இடமானவன்) ஒரு செய்தியை உங்களிடம் கொண்டு வரும் போது (அச் செய்தியின் உண்மை நிலை பற்றி ) தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள் என்று சூரா அல்  ஹுஜுராத்தின் 06 ஆவது வசனம் குறிப்பிடுகிறது. தான் செவியுறும் செய்திகள் அனைத்தையும் (அவற்றின் உண்மை நிலை அறியாது பிறருக்கு) கூறி விடுவதே ஒருவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும் என்ற ஹதீஸ் சஹீஹான பல ரிவாயத்துக்களில் பதிவாகியுள்ளது. இன்னும் ஏராளமான குர்- ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் இவ்விடயம் பற்றி கடுமையாக எச்சரித்திருப்பதால்  இன்றைய உலகில் மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள ஊடகங்கள் (குறிப்பாக முஸ்லிம் ஊடகங்கள்) மேற் கூறிய விடயத்தில் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். மக்கள் உலக நடப்பைப் பற்றி   அறிந்து கொள்வது கட்டாயம் தான். ஆனால் அது பற்றி மக்கள்  அறிந்து கொள்ளாமல் இருப்பதை விட செய்திகளை அவர்கள் பிழையாகப் புரிந்து கொள்வது மிகப் பெரிய கொடுமையும்  அநியாயமும்  ஆகும்  என்பதை ஊடகங்கள் நினைவில்வைத்திருக்க வேண்டும்.

 சரி இப்போது விடையத்துக்கு  வருகிறேன். இவ்வாரம் அவுப் ஹனிபா அவர்கள் பற்றி பல சமூக இணையத்தளங்கள் இன்று வரை செய்திகள் வெளியிட்டு வரும் நிலையில் சிலர் இன்று அவர் மாத்தளையில் ஒரு பள்ளி வாசலின் இமாம் என்று எழுதியிருந்தனர். அப்படியானால் அவர் (அவுப் ஹனிபா ) ஒரு ஆலிம் என சொல்ல வருகிறார்கள் போல. இன்னும் சில இணையத் தளங்கள் அவரது மனைவி ஒரு ஆளிமாவாக இருப்பதால்  தான் அவர் படம் நடிப்பதை விட்டார் என்றும், ஒரு இணையத் தளம் அவர் இன்று தப்லீக் ஜமா- அத்தின் அமீர் என்றும் எழுதியிருந்தது. இன்னும் பல .............  உண்மையில் அவர் பற்றிச் சொல்வதாயின் அவரது தாய்,தந்தை இருவரும் (ஹனிபா தம்பதியினர்) கண்டி- கல்ஹின்னையை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். பின்பு அவர்கள் மாத்தளை கம்பளை போன்ற பகுதிகளில் வசித்ததால் பிள்ளைகளான  அவுப் ஹனிபா, முனவ்வர் ஹனிபா, றோசான்  ஹனிபா ஆகியோரும் அப்  பகுதிகளிலே தமது  ஆரம்ப கால கல்வியைத் தொடர்ந்தனர். பின்பு குடும்பம் கொழும்பு சென்ற போது கல்வியை பிள்ளைகளும்  அங்கே தொடர்ந்தனர். கல்வி கற்ற காலத்தில் அவுப் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்துள்ளார்.

 1978 - 1983 களில் பல நாடகங்களில் பங்கு பற்றிய அவர்  1985 ஆம் ஆண்டு  தான் திரைப் பட நடிகரானார். அவரது தாய் அவரின் நடிப்புத் துறைக்கு விருப்பம் காட்ட வில்லை. உண்மையில் அந் நாட்களில் நாம் சிறு பிள்ளைகளாக இருந்த போது எமது குடும்பத்தில் எல்லோரும் அவர் படம் நடிக்கச் சென்றதை ஏசிக் கொண்டிருந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. போதாமைக்கு அவர் தம்பி முனவ்வர் ஹனிபாவும் திரைப் பட இயக்குனரானார். நாம் குடும்பப் பெயராக அவுப் ஹனிபாவை  ஆஜா நானா என்று அழைத்து வந்தோம். 1995 வரை 60 இற்கும் மேற் பட்ட சிங்களத் திரைப் படங்களை  நடித்து வந்த அவர் 90 களின் ஆரம்பத்தில் இலங்கையில்  அழகு ராணிப் போட்டியில் முதலாவது வந்த கிறிஸ்தவப் பெண்ணை தான் திருமணம் செய்தார்.
 அக்காலங்களில் எமது தந்தையின் குடும்பமே அவர்களை விட்டும் விலகியிருந்தது. 1996 ஆம் ஆண்டு இலங்கையின் மிகச் சிறந்த தேசிய சினிமா நட்சத்திரம் பட்டம் பெற்றார். இன்னும் பல திரைப் படத்  படைத்துறையின் உயரிய  விருதுகளையும்  பெற்றிருந்தார். தாயின் வற்புறுத்தலாலும், குடும்பத்தினரின் விருப்பமின்மையாலும், குறிப்பாக  தனது கிறிஸ்தவ மனைவி இஸ்லாத்தை சரிவரத் தெரிந்து கொண்டு இவருக்கு புரிய வைத்ததுமே 1996 இன் இறுதிப் பகுதியில் இவரையும் இவரது தம்பியையும் சினிமாத்துறைக்கு முழுக்குப் போடத் தூண்டியது .

 அன்று முதல் படிப் படியாக இஸ்லாத்தை நடை முறைப் படுத்திய இவர் சுமார் 17 வருட காலங்களாக எந்த மீடியாக்களுக்கும் முகம் கொடுக்காது இருந்து வந்தார். அவர், மனைவி பிள்ளைகள், அவரது தம்பி தங்கையின் குடும்பங்கள்  என அனைவரும் முழுமையான இஸ்லாமிய வாழ்கை நெறிக்குள் இன்று வந்திருக்கிறார்கள். 04 ஆண்  பிள்ளைகளையும்  ஒரு பெண் பிள்ளையையும் பெற்றுள்ள அவர் அனைத்து ஆண்  பிள்ளைகளையும் நபிமாரின் வாரிசுகளாக ( உலமாக்களாகவும்  ஹாபிழ்களாகவும்) ஆக்குவதில் ஆர்வம் கொண்டுள்ளார். அவரது மூத்த மகன் அப்துர் ரஹ்மான் இன்று குர்- ஆணை முழுமையாக மனனம் செய்த ஹாபிழ் ஆவார். உண்மையில் சினிமாப் பிரியர்களாக இருக்கும் எமது அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் இவர் மிகச்  சிறந்த உதாரண புருஷர் ஆவார்.

(Ash Sheikh Shakeek - uk)

சிரிய சண்டைகளில் களமாடும் “அமெரிக்க மீடியா அல்-காயிதா” - டிஜிட்டல் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றிய புரிதல்கள்!!

கைபர் தளம்
சிரிய இராணுவமும், சியா வெறியர்களும், ஹிஸ்புல்லாக்களும் தங்களால் கைது செய்யப்பட்ட சிரிய போராளிகளை சித்திரவதை செய்வதும் கொலை செய்வதும் பல வீடியோ கிளிப்களில் பாத்திருக்கின்றோம். அதே போல் இஸ்லாமிய போராளிகள் சியா இராணுவத்தினரை வதை செய்து கொல்லும் கிளிப்களும் வருகின்றனவே. அப்படியானால் இவர்களிடையே வித்தியாசம் இல்லையா. இவர்கள் இரு தரப்பினருமே அழிக்கப்படல் வேண்டுமா? இந்த நியாயமான கேள்வியின் பின்னால் இருந்து நாம் முட்டாளாக்கப்படுகிறோம். அது எப்படி?

அமெரிக்கா சிரியா மீதான உள்நாட்டு போரில் F.S.A. எனும் பிறீ சிரியன் ஆர்மியை தனது துரும்பாக கொண்டே ஆரம்பம் முதல் செயற்பட்டு வந்தது. லிபியாவின் சுதந்திர போராளிகள் போன்றே இவர்களையும் தனது கட்டுப்பாட்டு ஊடகங்கள் மூலம் உலகிற்கு அறிமுகம் செய்தது. தராளமாக ஆயுதமயப்படுத்தியது. ஒரு கட்டத்தில் சிரிய ஜிஹாதில் செயற்பட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் குறிப்பாக அல் காயிதா ஆதரவு தரப்புக்களுடன் F.S.A.-இனை நெருங்கி செயற்பட வைத்தது. எந்தளவிற்கு என்றால் பல தாக்குதல்களின் F.S.A. அவர்களுடன் இணைந்து கூட்டு தாக்குதல்களை நடாத்தியது. பலரின் மனதில் F.S.A.-யும் இஸ்லாமிய சாயல் கொண்ட அமைப்பாக மாறும் என நம்பும் அளவிற்கு.

பின்னர் அதே F.S.A.-யின் அமெரிக்க ஆதரவு பிரிவினை வைத்து படுகொலைகளை சிவிலியன்கள் மேல் செய்தது. தனது ஊடகங்கள் மூலம் அதனை இஸ்லாமிய அணிகளின் பாசிஸமாக காட்டியது. சிரியாவில் அல் காயிதா ஆதரவு அணிகள் இருப்பது உண்மை. அது போல அமெரிக்க மீடியா உருவாக்கியுள்ள பொய்யான தரவுகளும் தகவல்களும் அடங்கிய போலி அல் காயிதாவும் சண்டையிடுகிறது. இந்த அல் காயிதா அமெரிக்காவின் டிஜிட்டல் சட்டலைட் தொழில் நுட்பங்களால் உருவாக்கப்பட்ட அல்-காயிதா. நிஜத்தில் அல்-காயிதா என்ற பெயரில் அமெரிக்க பினாமிகளான F.S.A. போராளிகள் அவர்கள். 

சிரியாவை எடுத்த எடுப்பில் தாக்க முடியாது. அதனை ரஸ்யா அனுமதிக்காது. இஸ்லாமிய குழுக்களின் ஸரீஆஃ ஆட்சி என்ற பெயரில் அஸாதிய அரசை பலவீனப்படுத்தி அதன் பின் அந்த குழுக்களிற்கு பயங்கரவாத முத்திரை குத்தும் சீ.ஐ.ஏ.யின் மோசடியின் ஒரு வாசிப்பு இது.

சரி இப்போது கீழே வாசியுங்கள். அமெரிக்க மோசடியின் பிம்பங்கள் புரியும்.... 

சிரியாமீது அமெரிக்க நடத்த இருக்கும் ஆக்கிரமிப்பு போர்கள் குறித்து ஒபாமா நிர்வாகத்தின் இராணுவப் படை பயன்பாட்டிற்கு அங்கீகாரம் பெறும் தீர்மானம், காங்கிரஸ் குழுக்கள் முன் வேண்டுகோள்விடுவதற்கு முன்பு இந்த வாரம் இருமுறை சாட்சியமளிக்கையில் வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி சிரியாவில் அமெரிக்கா தூண்டிவிட்டுள்ள உள்நாட்டுப்போரில் அல் காயிதாவும், அதன் தொடர்புபட்ட குழுக்களும் கொண்டுள்ள முக்கிய பங்கு பற்றிய வினாக்களை உதறித்தள்ளி, “எதிர்த்தரப்பு பெருகிய முறையில் அதன் நிதானத்தால் வரையறுக்கப்பட்டு வருகிறது” என்று வலியுறுத்தினார்.

ஒரு தசாப்தத்தில் இரண்டாவது தடவையாக அமெரிக்க ஏகாதிபத்தியம் பேரழிவு ஆயுதங்கள்  மற்றும் அல் காயிதா குறித்த பொய்களை அடிப்படையாக கொண்ட போரை தொடுக்க தயாராகின்றது. 2003ல் வாஷிங்டன் ஈராக் மீது படையெடுத்து, சதாம் ஹுசைன் ஆட்சியை கவிழ்க்க, அது பேரழிவு ஆயுதங்களை கொண்டுள்ளது,  அவற்றை அல் காயிதாவிற்குக் கொடுக்க இருக்கிறது என்ற கூற்றை அடிப்படையாக கொண்டிருந்தது. அத்தகைய ஆயுதங்களும் ஈராக்கில் இருக்கவில்லை, ஈராக்கிய ஆட்சி அல்குவேடாவின் எதிரியாக இருந்தது.

இப்பொழுது பத்தரை ஆண்டுகளுக்குப்பின், ஒபாமா நிர்வாகம் சிரியா மீது ஒரு போருக்குத் தயாரிப்புக்களை கொண்டுள்ளது, போலியாகத் தயாரிக்கப்பட்ட உளவுத்துறை அறிக்கை ஆகஸ்ட் 21ல் இரசாயன ஆயுதங்கள் டமாஸ்கஸிற்கு வெளியே ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டது என்பதை அடிப்படையாக கொண்டு மற்றும் “போராளிகள்” எனப்படுவோர் “நிதானமான ஜனநாயகவாதிகள்” என்றும் அல் காயிதா கூறுபாடுகள் முக்கியத்துவமற்ற வகையில் சிறுபான்மையில்தான் உள்ளது என்றும் கூறுகிறது. இரு கூற்றுக்களுமே பொய்கள்தான்.

ஆகஸ்ட் 21ம் திகதி தாக்குல் — அசாத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட ஐ.நா. ஆயுதங்கள் ஆய்வாளர்கள் சிரியாவிற்கு தங்கள் பணியைத் தொடங்கிய அன்றே— அமெரிக்கத் தாக்குதலுக்கு ஒரு போலிக் காரணத்தை அளிக்க “எழுச்சியாளர்களால்” செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை நம்புவதற்கு இடமுண்டு. 

சிரிய அரசாங்கப் படைகளால் இராணுவத் தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ள அவர்கள், அத்தகைய நிகழ்ச்சி திருப்பத்தால் எப்படியும் ஆதாயம் அடைவர், அசாத் ஆட்சி அனைத்தையும் இழக்கும்.

கெர்ரியின் அசாத் விரோத சக்திகள் பற்றிய கூற்றுக்களை பொறுத்தவரை, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அமெரிக்க வெளிவிவகார செயலரை முரண்படுத்தும் கட்டாயத்திற்கு உட்பட்ட வகையில், செப்டம்பர் 5ம் திகதி அவருடைய “சிரிய நிதானமான எதிர்த்தரப்புக் குழுக்கள்  செல்வாக்கில் பெருக்கம் கண்டுள்ளன என்ற வலியுறுத்தல்கள், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை ஆதாரங்கள் மற்றும் அரசுசாராத நிபுணர்களின் மதிப்பீட்டிற்கு மாறுபட்டுள்ளன, அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான் கடுமையான, மிகச் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட கிளர்ச்சிக் குழுக்கள் என்று கூறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

கெர்ரி புதன் அன்று “எழுச்சியாளர்களின்” ஜனநாயக குணநலன்களைப் போற்றுகையில், ஜிகாத்திச போராளிகள் கிறிஸ்துவக் கிராமமான டமாஸ்கஸுக்கு வடக்கே உள்ள மாலுலாவை முற்றுகையிட்டு நிலைத்தை அபகரித்து, ஆதரவற்ற குடிமக்கள் வாழும் பகுதிகளையும் திருச்சபைகளையும் குண்டுத்தாக்குதல் நடத்தி, குறுங்குழுவாத  இரத்தக்களரியை கட்டவிழ்த்துவிடுகின்றனர்.

அமெரிக்க ஆதரவுடைய இஸ்லாமியப் போராளிகளின் எண்ணிலடங்கா கொடுமைகளில் இது சமீபத்தியதாகும். அவர்கள், அசாத் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்துடனும் மத்திய கிழக்கில் அரசியல் வரைபடத்தை மறுபடி வரைவதற்கும் வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஆதரவில் சிரியாவிற்குள் ஆயுதங்களுடனும் நிதியுடனும் அனுப்பப்பட்டனர்.
  நேரடி அவசர அமெரிக்க இராணுவ தலையீட்டிற்கு முக்கிய காரணம், எதிர்த்தரப்பு போர்க்களத்தில் பெற்ற தோல்விகளால் சிதைவுற்று இருப்பதும், சிரிய மக்கள் உடைய விரோதப் போக்கு மற்றும் வெறுப்புணர்வும்தான்.
ஆன்லைனில் வந்துள்ள சமீபத்திய காணொலிகள் இஸ்லாமியப் போராளிகளின் குற்றங்களைப் பதிவு செய்துள்ளன. நம் வாசகர்களை நாம் எச்சரிக்கிறோம்: நீங்கள், அமெரிக்க அரசாங்கத்தின் நட்பு அமைப்பாக செயல்படும் ஒரு வக்கிரமான அமைப்பின் செயலைக் காண்கிறீர்கள், அமெரிக்க அரசாங்கம் அதைப் பதவியில் கொண்டுவர உழைக்கிறது.
அச்செயல்களில், அலாவைட் சிறுபான்மை உறுப்பினர்கள் என்ற "குற்றத்திற்காக" சாலையோரத்தில் மூன்று கனசாரதிகள் கொல்லப்படுவதும் அடங்கியுள்ளது. (கொலையாளிக்கு ஒரு சாரதி கூறுகிறார்: “நாங்கள் வாழ்வதற்கு சம்பாதிக்க முயற்சிக்கிறோம்.”) 
இவற்றில் ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் தலை துண்டிக்கப்படுவதும் உள்ளது. 

மற்றொரு காணொலியில், சமீபத்தில் வெறுப்படைந்து "போராளி" முகாமில் இருந்து அகன்றவரால், கைது செய்யப்பட்டு சிரியாவிற்கு வெளியே கடத்தப்பட்டிருந்த ஏராளமான பாதுகாப்பற்ற சிரியப் படையினர்கள் கொல்லப்படுவதை காட்டுகிறது.

இக்கொடூரங்கள் பெரிதும் பெருநிறுவனச் செய்தி ஊடகத்தால் தகவல் கொடுக்கப்படுவதில்லை; அவை தங்கள் முயற்சிகளை (குறையும் வெற்றிகளுடன்) போருக்கான பொதுமக்கள் கருத்தை உருவாக்க முற்படுகின்றன. இந்த “எழுச்சியாளர்களின்” உறுதி செய்யப்பட்ட கொடூரங்களைப் பற்றி கருத்துக் கூறுமாறு வினவப்பட்டதற்கு கெர்ரியும் பிற போர் ஆதரவாளர்களும் அமெரிக்கக் குண்டுத்தாக்குதல்தான் இத்தகைய “தீவிரமயப்படுதல்களை” தடுக்கும் என வலியுறுத்தினார்.

சிரியா மீது ஒரு “மனிதாபிமான” தாக்குதல் தேவை என வாதிடும் அரசியல்வாதிகள் செய்தி ஊடகப் பண்டிதர்கள் அனைவரும் கிட்டத்தட்ட அந்நாட்டு உள்நாட்டுப்போரில் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளர் என்பதை அமெரிக்கத் தாக்குதலை நியாயப்படுத்தக் கூறுகின்றனர். அவர்களில் எவரும் இப்போர் சிரியா மீது அமெரிக்கா இன்னும் பிற மேற்கத்தைய சக்திகளால் திணிக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. இப்போரில் அவர்களுடைய பினாமிகளாக, ஆட்சி மாற்றத்திற்காக போரிடும் இஸ்லாமியவாதப் போராளிகள்தான் படுகொலைகளுக்கு பொறுப்பு என்ற உண்மையையும் மறைக்கின்றனர்.

அசாத்-விரோத குழுவான மனித உரிமைகள் சிரியக் கண்காணிப்பு அமைப்பின்படி, இந்த இறப்புக்களில் முற்றிலும் 40% சிரிய படையினர்கள் மற்றும் அரசாங்க சார்புடைய போராளிகள் ஆவர் என்று கூறுகிறது. இந்த பாசிச வகைப்பட்ட கொலை நடத்தும் குழுக்கள் எத்தனை குடிமக்களை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவில்லை, ஆனால் அவர்கள் தொடர்ந்த தாக்குதல்களை அல்லாவைட்டுக்கள், கிறிஸ்துவர்கள், குர்திஸ்துக்கள் இன்னும் ஏனைய சிறுபான்மையினர் மீதும் மதச்சார்பற்ற சுன்னி முஸ்லிம்கள் மீதும் நடத்துகின்றனர்.

இக்கூறுபாடுகளின் குற்றங்களைப் பற்றி பொய் சொல்லும் கட்டாயத்தில் கெர்ரி ஏன் உள்ளார்? இல்லாத “நிதான எதிர்தரப்பு” என்று அவர் ஏன் பாசாங்குத்தனம் செய்கிறார் மற்றும் வெற்றுத்தனமான “சுதந்திர சிரிய இராணுவம்” குறித்து, அவைதான் அசாத் ஆட்சியை எதிர்க்கும் உண்மை சக்திகள் என்கிறார்?

இப்பொய்கள், அமெரிக்காவும் அதன் உளவுத்துறை நிறுவனங்களும் அல் காயிதா மற்றும் அத்துடன் பிணைந்த அமைப்புகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளன என்னும் உண்மையை மூடிமறைக்கும் நோக்கத்தைக் கொண்டவை. இது ஒன்றும் புதிதல்ல. வாஷிங்டன் வழக்கமாக வலதுசாரி இஸ்லாமியக் குழுக்களை இடது தேசியவாத, சோசலிச இயக்கங்களை நசுக்குவதற்கு மத்திய கிழக்கிலும் அப்பாலும் பயன்படுத்தியுள்ளது. இது CIA மூலம் அத்தகைய சக்திகள் ஈரானில் 1953ம் ஆண்டு மோசடெக் அரசாங்கத்தை அகற்றப் பயன்படுத்தியது; CIA  ஆதரவுடைய இராணுவ சதி மற்றும் பாரிய மக்கள் கொலைகள் இந்தோனேசியாவில் 1965ல் நடைபெற உதவியது.

இச்சக்திகளில் மிகவும் அறியப்பட்டுள்ள அல் காயிதா, 1980 களில் ஆப்கானிஸ்தானில் இருந்த சோவியத் சார்பு ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா தூண்டிவிட்ட போரின்போது CIA மற்றும் பாக்கிஸ்தான் உளவுத்துறையால் தோற்றுவிக்கப்பட்டது,  சவுதி அரேபிய முடியாட்சியால் ஆயுதங்கள், நிதிகள் கொடுக்கப்பட்டன.

வாஷிங்டன் ஒசாமா பின் லாடனை தேடுவதில் ஆர்வத்தை காட்டவில்லை, அவர் பயன்பாடு இல்லா வாழ்க்கைக்கு இயலாமையால் செல்லும் வரை?

சிரியாவிற்கு எதிராக, வரவிருக்கும் தவிர்க்க முடியாத அமெரிக்க ஆக்கிரமிப்பு தாக்குதல் வாஷிங்டனின் பயங்கரவாதத்தின் மீதான போர் என்பதில் உள்ள மகத்தான மோசடியை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது; 

இன்று சிரியாவில் நடப்பதைப் போல் லிபியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும், இஸ்லாமிய மெகரப்பில் அல் குவேடாவிற்கும் அதையொத்த கூறுபாடுகளுக்கும் ஆயுதம் அளித்து, பயிற்சி கொடுத்து வான் தாக்குதல் ஆதரவையும் கொடுத்து இச்சக்திகளை பயன்படுத்தி ஆட்சிமாற்றத்தை நடத்தின. அத்தலையீடும் இன்று சிரியாவில் உள்ளதைப் போல் “மனிதாபிமான” அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டது; அதில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், நாடு அழிவிற்கு உட்பட்டது.

இந்த பயங்கரவாதிகள் ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கையின் கருவியாக பயன்படுத்தப்படும் முறை, நயமற்ற முறையில் சமீபத்திய பேச்சுக்களில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் இளவரசர் பண்டர் பின் சுல்த்தான், சௌதி உளவுத்துறைத் தலைவர் மற்றும் வாஷிங்டன் ரியாத்திற்கு இடையே முக்கிய இணைப்பாளராக இருப்பவருடன் நடத்திய பேச்சுக்களில் வெளிப்பாட்டைக் கண்டது.

இப்பேச்சுக்களின் கசியவிடப்பட்ட ஆவணத்தின்படி, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு ரஷ்யா உடன்பாட்டால், பண்டர் எண்ணெய் மற்றும் எரிவாயு உடன்பாடுகளை அளிக்க முன்வந்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடக்க இருக்கும் குளிர்கால ஒலிம்பிக், சேஷென் இஸ்லாமியவாதிகளின் பயங்கரவாத தாக்குதலுக்கு உட்படாது என்னும் உத்தரவாதத்தையும் கொடுக்க முன்வந்தார். புட்டினுக்கு பண்டார் இக்குழுக்கள் “எங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன” என்றும் சௌதி மற்றும் அமெரிக்க நலன்களுக்கு ஏற்றார்போல் தூண்டிவிடப்படலாம் அல்லது தடுக்கப்படலாம் என்று உறுதியளித்துள்ளார்.

சிரியாவில், தாக்குதல் அணிகளை பயன்படுத்தி குற்றம் சார்ந்த வகையில் அமெரிக்கத் தலையீடு, இப்பொழுது நேரடியாக தூண்டுதலற்ற இராணுவத் தாக்குதலாக மாறுவது, பிராந்திய, ஏன் உலகப் போரை எரியூட்டும் அச்சுறுத்தலைக் கொண்டது. இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பாரக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவிக்காலத்தில் ஆழ்ந்த குற்றத்தன்மைக்கு இழிந்துவிட்டதைத்தான் அம்பலப்படுத்துகிறது.
 
கைபர் தளம்