கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தூய இஸ்லாத்தை சுமக்கவந்த எமது மௌலவிமார்களின் நிலை?


சாயிபாபாவின் ஜனன தினம் சாயி பக்தர்களால் வெகு சிறப்பாகக் கொழும்பு சத்ய சாயிபாபா மத்திய நிலையத்தில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியை நமது இஸ்லாமிய அறிஞர் மௌலவி மொஹமட் அரபாத் எவ்வாறு சிறப்பித்தார் என்பதை நி்ங்களும் பார்க்கலாமே!!!!!!!!!!!

தூய இஸ்லாத்தை படித்த இந்த மௌலவிமார்களின் நிலைமை இவ்வாரென்றால் இவர்களிடம் மார்க்கத்தை படிக்கச்செல்கின்றவர்களின நிலைமை எவ்வாறு இருக்கும். (நஊதுபில்லாஹ்).

2012 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் சாரம்சம்


* நடமாடும் மொழி ஆய்வுக்கூடங்களை உருவாக்க 100 மில்லியன் ரூபா மேலதிக ஒதுக்கீடு

* பாதுகாப்புப் படையினரின் ஒவ்வொரு பெற்றோருக்கும் 750 ரூபா கொடுப்பனவு

* 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான மாதாந்த கொடுப்பனவு 700 ரூபாவால் அதிகரிப்பு

* சமுர்தி கொடுப்பனவு 210 ரூபா முதல் 615 ரூபா வரை பெறுவோருக்கு 750 ஆக அதிகரிப்பு – 900 ரூபா பெறுவோருக்கு 1200 ஆக அதிகரிப்பு

* ஆரம்ப பாடசாலைகள், தர்ம பாடசாலைகளுக்கு உதவுவதற்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* புராதன சமய தலங்களைச் சூழ்ந்து காணப்படும் பாடசாலைகள், மகப்பேற்று நிலையங்கள், குடிநீர் பாதைகளுக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* 25 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கும் சிரேஷ்ட கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மோட்டார் கார் கொள்வனவுக்கு வட்டியில்லாக் கடன்

* குறைந்த வருமானம் பெறுவோருக்கு சட்ட ரீதியில் உதவ 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* புதிய கலை கேந்திர நிலையத்தை உருவாக்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* ஆராய்ச்சி, விதை அபிவிருத்தி மற்றும் விரிவாக்கலை உருவாக்க 200 மில்லியன் ரூபா மூலதனம்

* மரக்கன்று மற்றும் சமயல் எண்ணெய் மீதான செஸ் வரி அதிகரிப்பு

* தெங்கு,பனை மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் மீதான வரி நீக்கம்

* கால் நடை உற்பத்திக்கு தேவையான உபகரணங்கள் மீதான செஸ் வரி விலக்களிப்பு

* திவி நெகும ஊக்குவிக்கக் கடன் திட்டம்

* கரையோரப் பாதுகாப்புக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு

* கிராம நகரங்களை இணைக்கும் பாதை வலையமைப்பினை நிர்மாணிப்பதற்கு 170 மில்லியன் ரூபா 5 வருடங்களில் செலவிட எதிர்பார்ப்பு

* 48 சதவீத குடிநீரைச் சேமிப்பதோடு 680 மில்லியன் ரூபா முதலீடு

* 5 மில்லியன் குடும்பங்கள் மின்சாரத்தை நுகர்வதற்கு 34 ஆயிரத்து 187 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* பஸ்,லொறி டயர்கள் மீதான இறக்குமதித் தீர்வை 50 சதவீதம் குறைப்பு _

நழுவிச் செல்லும் அரசாங்க உதவிகள்.



எமது பிரதேசத்தில் உள்ள அதிகமான பாடசாலைகள் அரசாங்க உதவிகளையும், பொது நிறுவனங்களின் உதவிகளையும் எதிர்பார்த்து இருக்கின்ற இந்த வேலையில். அல்பத்ரியா ம.வி மற்றும் பாலிகா மகளிர் பாடசாலைக்கு மலசலகூ கட்டமைப்பை கட்டுவதற்காக அரசாங்கத்தினால் பண உதவி வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறுகிடைக்கப் பெற்ற உதவியின் மூலமாக அல் பத்ரியாவில் கட்டுமாணப் பணிகள் தொடர்வதாகவும், பாலிக்காவுக்காக அனுப்பிவைக்கப்பட்ட ரூபா 3 இலட்சம் பெறுமதியான பணம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் கதைப்பதை அவதானிக்க முடிகிறது.

ஏன் எதற்காக இந்த அரசாங்க உதவிகள் பாலிகாவினால் நிராகரிக்கப்பட்டன என்பதுதான் இவர்களது கேள்வி?!

இதன் உண்மை நிலவரம் என்ன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றோர்களுக்கு தெளிவு படுத்தவேண்டிய கடமை பாடசாலை அதிபர், நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்டவா்களின் கடமை என்பதை யாரும் மறுக்க முடியாது.

கஹட்டோவிடாவும் இவ்வாறு மாறுமா...?

இறுதி ஹஜ்ஜில் நபியவர்கள் மூலம் அல்லாஹுத்தஆலா புனித தீனுள் இஸ்லாத்தை நிறைவு செய்து அதனை ஒரு வாழ்க்கைத் திட்டமாக ஆக்கினான். நபியவர்களின் மறைவிற்குப் பிறகு இந்த மார்க்கத்தில் பல்வேறு பித்அத்துக்கள் புகுந்து இஸ்லாத்தின் தூய தண்மையை மாற்றி விட்டது என்பதை நாம் வரலாறுகள் மூலம் அறிகிறோம். அந்த வகையில் புகுந்த ஒரு பித்அத்துதான் தரீகாக்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கப்று வணக்கமாகும். மரணித்த நல்லவர்களின் கப்றுகளை கட்டி அதனைப் புனிதமாகக் கருதி வணக்க வழிபாடுகளை செய்யும் ஒரு சமூகம் எமதூரிலும் இருக்கத்தான் செய்கிறது. இந்த கப்று வணக்கங்கள் இறுதியில் எந்த இடத்தை அடையும் என்பதை கீழுள்ள விடியோவைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம். இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் இந்த இநத் பித்அத்தை எதிர்ப்பது ஒவ்வொரு மார்க்க உணர்வுள்ள மனிதனினதும் கடமையாகும். வருமுன் காப்போம் என்ற வகையில் நாம் இதனைப் பப்ளிஷ் பண்ணியுள்ளோம். எனவே எமதூரின் தரீக்கா சகோதரர்களே சிந்தியுங்கள்.

EID MUBARAK

THAKABBALALLAHU MINNA WA MINKUM

கஹட்டோவிட மஸ்ஜித் ஜாமிஉத் தௌஹீதினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகை காலை 7.25மணியளவில் கஹட்டோவிட அல்பத்ரியா மஹாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இப்பெருநாள் தொழுகையில்  இமாம் அஷ்ஷெக் முஜாஹித்  அவர்கள் பெருநாள் குத்பாவை நிகழ்த்தினார். பெருநாள் தொழுகையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.














மர்வானையும் தட்டிக் கேட்ட ஸஈத் அல் குதிரிகள் எமது ஊரிலும் தேவை

ஆட்சியாளர் மர்வான் ஒரு முறை பெருநாள் தினத்தன்று பெருநாள் தொழுகைக்கு முன்னதாக பெருநாள் குத்பாவை ஒத முற்பட்டார். அவ்வேளை அச்சபையில் இருந்த ஸஈத் அல் குத்ரி (ரழி) அவர்கள் மர்வானின் ஆடையைப் பிடித்திழுத்து நீ ஸுன்னாவை மாற்ற முற்படுகிறீரா என்று கேட்டு மர்வானின் இச்செய்கையைக் கண்டித்தார். மார்க்கத்தில் பித்அத் ஒன்று அரங்கேறுவதை உடனே தட்டிக் கேட்டார். பெருநாள் குத்பாவும் தொகையும் நபியவர்கள் எவ்வாறு காட்டித் தந்தார்களோ அவ்வாறே அமைதல் வேண்டும்.

மர்வான் இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்த முயன்றது போல் கடந்த ஞாயிறன்று(06.11.2011) எமது ஊரில் பெருநாள் தொழுத ஒரு குழுவினர் ரஸுலுல்லாவின் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு புதிய பித்அத்தை அறிமுகப்படுத்தினர். பெருநாள் தொழுகையும் அதன்பின்னரான உரையையும் நபியவர்கள் மைதானத்திலேயே நடைமுறைப் படுத்திக் காட்டினார்கள் என்பது சிறுபிள்ளையும் அறிந்துள்ள விடயமாகும். எனினும் இக்குழுவினரோ பெருநாள் தொழுகையை ஒரு ஊரில் தொழுதுவிட்டு அடுத்த ஊரிலுள்ள அக்குழுவினரின் பள்ளி வாசலில் ஜும்ஆவை நடாத்தினர். இந்த நடைமுறைக்கு நபியவர்களின் முன்மாதிரியும் அங்கீகாரமும் உள்ளதா? நபியவர்கள் எந்த இடத்தில் பெருநாள் தொழுதார்களோ அதே இடத்திலேயே குதபா உரையையும் நிகழ்த்தினார்கள்.  நபியவர்கள் காட்டித் தராத இந்நடைமுறை மார்க்கமாகுமா?  மனதுக்கு வந்தவிதமாக மார்க்க விடயங்களை நிறைவேற்றுவதால் இன்று நபியவாகள் காட்டித்தந்நத நடைமுறைக்கும் நமது நடைமுறைக்கும் பாரிய வித்தியாசங்கள் உள்ளன.  தீனென்பது அல்லாஹ்வின் கட்டளையும் நபியவர்களின் வழிகாட்டலுமேயாகும். எனவே எமது எந்த அமலாயினும் அது நபியவர்களின் வழிகாட்டலின் பிரகாரமே அமைத்துக் கொள்ளல் வேண்டும். எமது எதிர்கால  சந்ததிகள் மார்க்கத்தை அறிந்து பின்பற்றுபவர்களாக மிளிர அல்லாஹ் அருள் புரிவானாக!