கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க(அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1,5)

1) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

3) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலத்துல் கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதை பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்றுகூறி, அது உங்களுக்கு நலவாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே, அதை இருபத்தி ஒன்று, இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன். இவ்வாறு கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

اَللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

தமிழில்: அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது, ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ’83 வருடம் நாம் வாழ்வோமா?’ என்பதே கேள்விக்குறியானது! ஆனால் ஒரு இரவில் செய்யும் அமலுக்கு அவ்வளவு நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுபடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது, நம்மைப் போன்றவர்கள் எவ்வளவு அதிகம் அமல்களில் ஈடுபட வேண்டும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்! ஆகவே, இச்சிறப்பான இரவில் தொழுவது, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களில் நாம் அதிகம் ஈடுபடவேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த சிறப்பான இரவைப் பெற்று, நல் அமல்கள் புரிய வாய்ப்பளிப்பானாக!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் (PMGG) தலைமையிலான அரசியல் கூட்டணி சந்திப்பு


pmgg_tna
 
2013 ஜூலை 24ஆம் திகதி புதன் கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டணிக்குமிடையில் வடமாகாணத் தேர்தல் சம்பந்தமான முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் பா.உ. இரா. சம்பந்தன் மற்றும் பா.உ. சுமந்திரன் ஆகியோரும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டணி சார்பாக, பொறியியலாலர் அப்துர்ரஹ்மான், நஜா முஹம்மத், சிராஜ் மஸ்ஹூர், டாக்டர் ரிபாஸ், அப்துல் வாஜித், அஸ்மின் அய்யூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் போது, தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பரஸ்பர புரிந்துணர்வுடன் பொது நலன்களில் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் கடந்த காலங்களில் அவ்வாறான புரிந்துணர்வை கட்டியெழுப்பக்கூடிய சந்தர்ப்பங்கள் குறிப்பாக, கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது இருந்தும்கூட அந்த சந்தர்ப்பங்கள் சமூக நலன்களை முதன்மைப்படுத்திய வகையில் சரியாகப் பயன்படுத்தப்படாத நிலையில் தற்போது வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் தருணத்தில், தமிழ் முஸ்லிம் உறவினை வலுப்படுத்தி வடக்கு, கிழக்குப் பிராந்தியங்களில் இரு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்க அரசியலைக் கட்டியெழுப்புவதற்கான தொடக்க புள்ளியாக, இந்த மாகாண சபைத் தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பயண்படுத்த முடியும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

அத்தகையதொரு நம்பிக்கை தரும் முன்னெடுப்பை த.தே.கூட்டணி மேற்கொள்ளுமாயின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டணி அதனை வரவேற்பதோடு அதற்கான பூரண ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தயாராய் இருப்பதாகவும் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் இந்த சந்திப்பின்போது எடுத்துக் கூறினார்.
மேலும், வட மாகாண முஸ்லிம்களின் அபிலாஷைகளும் நிறைவேற்றப்படும் வகையிலான உத்தரவாதங்கள் த.தே. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்படுவது இரு சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்ப உதவும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.
த.தே. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறும்போது ‘வடக்கு, கிழக்கில் தமிழர்கள் தமது உரிமைகளை பெற்று கௌரவமாக வாழ விருப்புவது போலவே முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் சகல உரிமைகளும் பெற்று சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழ வேண்டும் என்றே விரும்புகின்றோம். நாம் சிங்கள மக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ இலங்கைக்கோ எதிரானவர்கள் அல்ல.

ஜனநாயகத்தை நம்புகிறோம், அதன் வழி நடக்கிறோம், வடக்கில் முஸ்லிம்கள் அனைவரும் மீண்டும் குடியேற வேண்டும். அங்கு அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும். அது அவர்களின் அடிப்படை பிறப்புரிமை. அதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்ற உத்தரவாதத்தையும் எம்மால் தர முடியும்.

எதிர்வரும் மாகண சபைத் தேர்தலில் முஸ்லிம் வேற்பாளர்களை நிறுத்தும் எண்ணம் த.தே. கூட்டமைப்பிற்கு இருக்கிறது. அமையப்போகும் வடமாகாண சபையில் முஸ்லிம் சமூகத்தின் கௌரவத்தையும் சுயமரியாதையும் பாதுகாக்கக்கூடிய பிரதிநிதிகளாக அவர்கள் இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றோம். அந்த வகையில் வடமாகாணத் தேர்தலில் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கிறோம்.
நீங்கள் எதிர்பார்ப்பது போல் உடன்பாடுகளுடன் கூடிய ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாம் இணைந்து செயற்பட முடியும்’ எனவும் மிகவும் ஆணித்தரமாக எடுத்துக்கூறினார்.

கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அடிப்படையில் மீண்டும் கூடி இறுதி தீர்மானங்கள் எட்டப்படும் என இரு தரப்பினரும் நேற்றைய கூட்டத்தில் இணக்கம் கண்டனர்.

மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வருகிறார்.. சுவாரஸ்யமான கட்டுரையின் (பாகம் 3)



மஹ்தி (அலை), பிறந்தவுடன் அப்துல்லாஹ் எனும் அவருடைய தந்தையார், அவருக்கு முஹம்மத் என்று பெயர் சூட்டுவார். இப்பெயர் பிறந்தவுடனேயே அவருக்கு வைக்கப்படும் பெயரே தவிர வளர்கின்ற போது இடப்படும் பெயரல்ல. இந்த விடயம் தெளிவாக்கப் பட வேண்டிய தேவை உள்ளது. காரணம், 30 க்கும் அதிகமான நபர்கள் வரலாற்றில், ஒவ்வொரு நூற்றாண்டிலும் தம்மை மஹ்தி என அழைத்துள்ளார்கள். இவர்களின் இயற்பெயர் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்பதல்ல. மாறாக, மஹ்தி என்று தம்மை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் சூட்டிய பெயரே முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்பதாகும். இவ்வாறு தம்மை மஹ்தி என்று அழைத்தவர்களுள் சிலரை இங்கே குறிப்பிடுவது சாலப் பொருத்தமாகும்.

1.       முஹம்மத் இப்னு ஹஸன் இப்னு அலி (9ம் நூற்றாண்டு)
2.       அப்துல்லாஹ் அல் மஹ்தி பில்லாஹ் (10ம் நூற்றாண்டு)
3.       இப்னு துமார்த் (12ம் நூற்றாண்டு)
4.       முஹம்மத் ஜௌன்புரி (15ம் நூற்றாண்டு)
5.       அஹ்மத் இப்னு அபீ மஹல்லி (17ம் நூற்றாண்டு)
6.       மிர்ஸா குலாம் அஹமத் (19ம் நூற்றாண்டு)
7.       முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் கஹ்தானி (20ம் நூற்றாண்டு)

இதில் மிர்ஸா குலாம் அஹமத் என்பவர் தன்னை இமாம் மஹ்தி என்றும் ஈஸா (அலை) அவர்களின் இரண்டாம் வருகைக்குரியவர் என்றும் வாதிட்டவர். இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் காதியான் என்ற ஊரில் பிறந்த இவர், யூதர்கள் எதிர் பார்க்கும் மஸீஹ், கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கும் மெஸய்யா, முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் மஹ்தி, ஈஸா (அலை), இந்துக்கள் எதிர்பார்க்கும் கல்கி அவதாரம் ஆகிய அனைத்தும் நான்தான் என்று கூறியவர். தற்போது அண்ணளவாக 198 நாடுகளில் இயங்கும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்  அல்லது காதியானிகள் இவரின் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்கள் ஆவர்.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் அஹ்லுல் பைத் எனப்படும் ரஸூல் (ஸல்) அவர்களின் வம்சத்திலிருந்தே தோற்றம் பெறுவார். பனூ ஹாஷிம் கோத்திரத்தின் குறைஷிக் குலத்திலிருந்தே இவரது பரம்பரை அமையும். இவரின் வருகைக்கு முன் அநீதியில் திழைத்து நிற்கும் உலகம், இவரின் வருகைக்குப் பின் நீதியின் உறைவிடமாய் மாறும். இந்த மாற்றம் இமாம் மஹ்தி மூலமாகவே ஏற்படுத்தப் படும். அப்படி ஒரு கண்ணியத்தை அல்லாஹ் அவருக்கு ஏற்படுத்துவான்.

அலி (ரழி) அவர்கள், ஹஸன் (ரழி) அவர்களைக் காண்பித்து, எனது இந்தப் புதல்வன் தலைமைத்துவத்திற்கு உரியவர். இவரின் பரம்பரையிலே ஓர் இமாம் தோன்றுவார். அவரின் பெயர் ரசூல் (ஸல்) அவர்களின் பெயரை ஒத்திருக்கும். குணத்திலும், பழக்க வழக்கத்திலும் (உருவத்தில் அல்ல) அவர் ரசூல் (ஸல்) அவர்களைப் பிரதிபலிப்பார் எனக் கூறினார். மார்க்க அறிஞர்களிடையே இந்த விடயத்திலே பல கருத்துக்கள் காணப்படுகின்றன. இமாம் மஹ்தி (அலை) அவர்கள், ஹஸன் (ரழி) அவர்களின் பரம்பரையில் தோன்றுவார் என்பது அதிகமான மார்க்க அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும்.
'மஹ்தி எனது சந்ததியைச் சேர்ந்தவராவார், அவர் படர்ந்த நெற்றியையும் எடுப்பான மூக்கையும் உடையவராவார். போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் நிலை நிறுத்துவார். அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார்' என்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: அபூதாவூது 4272)

மஹ்தி (அலை) அவர்களின் தோற்றம் பற்றி வந்த பலமான ஹதீதாக மேலுள்ள ஹதீதே ஏராளமான மார்க்க அறிஞர்களால் ஏற்றுக்  கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மஹ்தி (அலை) பற்றிய நூற்றுக் கணக்கான ஹதீதுகள் இட்டுக் கட்டப்பட்டுள்ளன. பல்வேறு குழுக்கள், மஹ்தி என்ற கதாபாத்திரத்தை தங்களிலிருந்து காட்டி, பிரபல்யம் தேடிக் கொள்வதற்காகவும், சுய லாபத்திற்காகவும், மஹ்தி (அலை) பற்றிய பொய்யான கதைகளையும் ஹதீதுகளையும் தயாரித்துள்ளனர். அது பற்றி நாம் ஒவ்வொருவரும் அவதானமாக இருக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வருகை என்பது அவர் வெளிப்படுதல் என்பதைக் குறிக்கும். மஹ்தி (அலை) அவர்களின் பிறப்பு அவரின் வருகை அல்ல. அவர் பிறந்து வளர்கின்ற போது ஓர் மார்க்க அறிஞராகவோ, சீர்திருத்தவாதியாகவோ வளர மாட்டார். சாதாரண ஒரு மனிதராகவே இருப்பார். நெறி பிறழ்ந்து நிற்கும் உலகினை, நீதி நெறி நிலைக்கும் அளவு மாற்றி அமைக்கக் கூடிய ஓர் கண்ணியவானாக அல்லாஹ் அவரை குறித்த நேரம் வரும் போது மாற்றியமைப்பான். அது ஒரு இரவு நேரம் என அறிஞர்களால் கூறப்படுகிறது. மறைவான பல விடயங்களை அறிந்தவன் வல்ல அல்லாஹ் ஒருவனே.

மஹ்தி (அலை) அவர்கள் வெளிப்படக்கூடிய கால கட்டம், உலகிலே, மிக மோசமான காலமாக அமைந்திருக்கும். அட்டூழியங்கள் பல்கிப் பெருகிக் காணப்படும். அநீதி பூமியை நிரப்பி வைத்திருக்கும். கொடுங்கோன்மை மிகைத்திருக்கும். அவ்வாறான, ஓர் காலகட்டத்தில், நீதியான நேர்மையான ஆட்சிக்காக மக்கள் ஏங்கித் தவிக்கின்ற வேளையில் அல்லாஹ், அதற்குப் பொருத்தமான ஒருவராக இமாம் மஹ்தி (அலை) அவர்களை மாற்றியமைப்பான். அதன் பின்னரே, அவர் வெளிப்படுவார்.

'இவ்வுலகின் ஒரு நாள் மட்டும் மீதமிருந்தால், எனது குடும்பத்திலிருந்து ஒரு மனிதரை அல்லாஹ் எழச் செய்வான். போர்களால் நிரம்பி இருக்கும் இந்த பூமியில் அவர் நீதியை நிலை நிறுத்துவார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அலி (ரலி), நூல்: அபூதாவூது 4270)
{இன்ஷா அல்லாஹ் தொடரும்}

By: மௌலவியா தன்ஸீலா அம்ஜாட்

ஓகடபொலவைச் சோ்ந்த சகோதரி அலிமதுஸ் ஸஹ்தியா காலமானார்.



ஓகடபொலவைச் சோ்ந்த அலிமதுஸ் ஸஹ்தியா காலமானார்.   இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னார் முஹம்மத் பாயிஸ் அவா்களின் அன்பு மனைவியும், முஹம்மட் உவைஸ், அயினுல் நைமா ஆகியோரின் மகளும் ஆவா்.

பாதிமா ஸப்ரீனா, முஹம்மட் ஷரூஸ், முஹம்மட் ஸப்ரான், முஹம்மட் ஷஸான் ஆகியோரின் அன்புத் தாயும். கன்ஸுல் மஹ்ரிபா, பாதிமா ரிப்கா, முஹம்மத் அஸ்ஹா் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று (23.07.2013) இரவு 10.00 மணியளவில் ஓகடபொல மஸ்ஜிதுல் பலாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!
 

ஜுனைத் நானா அவர்கள் காலமானார்.

 

கஹடோவிடவைச் சேர்ந்த மர்ஹும் ரவுப் அவர்களின் மகனும், எல்லலமுல்ல மர்ஹும் மஸ்வுத் ஆலிம் அவர்களின் மருமகனுமாகிய ஜுனைத் நானா அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 

ஜனாஸா நல்லடக்கம் இன்று (21.07.2013) எல்லலமுல்ல ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

ஜம்இய்யத்துல் உலமா ஹலால் பிரிவு விடுக்கும் முக்கிய அறிவித்தல்

VIDEO: Halal logo removed from local products; ACJU to issue free Halal certification for exports

அன்மைகாலமாக இலங்கையில் ஹலால் தொடர்பாக எழுத்து வந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அகில இலங்கை  ஜம்இய்யத்துல் உலமா ஹலால் பிரிவு இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் முக்கிய  அறிவித்தல் ஒன்றை அன்மையில் விடுத்துள்ளது.
 முஸ்லிம்களாகிய நாம் ஹலாலான உணவுகளை மாத்திரமே உண்ணவேண்டியது எமது மார்க்க கடமையாகும். இதனை இலகுவாக முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்வதற்காகவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹலால் அத்தாட்சிப்படுத்தற் பிரிவு சேவையாற்றி வருகின்றது.

 ஹலால் என உறுதி செய்யப்பட்ட பொருட்களை பொதுமக்கள் இலகுவாக அடையாளங்கண்டு கொள்வதற்காகவே ஜம்இய்யா தனது ஹலால் சின்னத்தை அப்பொருட்களில் பொறிந்து வந்தது.

 எனினும் இது மாற்று மத சகோதர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் அவர்களுக்கு முஸ்லிம்கள் ஹலால் உணவைத் திணிப்பதாகவும் கூறி ஹலால் தேவையொன்றால் முஸலிம்களுக்கு மாத்திரம் அதனைக் கொடுக்குமாறு வேண்டி எழுப்பபட்ட பிரச்சினையை கவனத்திற் கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பல்வேறு உயர்மட்டங்களோடு இது சம்பந்தமாக கலந்துரையாடல்களை நடாத்தியது.
 இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உயர்பீட பௌத்த பிக்குகளோடு நடத்தப்பட்ட முக்கிய கலந்துரையாடலில் பின்வரும் இரண்டு தீர்மானங்களும் ஏக மனதாக எடுக்கப்பட்டன.

 01.ஜம்இய்யாவினால் ஹலால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பொருட்களில் ஜம்இய்யாவின்  ஹலால் சின்னத்தை பொறிப்பது நிறுவனங்களின் விருப்பத்தில் விடப்படும்.

 02.ஜம்இய்யா ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை இலவசமாகச் செய்ய வேண்டும்.

 மேற் கூறப்பட்ட இரண்டு தீர்மானத்துக்கமையவே ஜம்இய்யா தனது ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை தற்பொழுது நடாத்தி வருகின்றது.
 ஜம்இய்யாவினால் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட நிறுவனங்கள்,பொருட்கள் சம்பந்தமான பூரண தெளிவை முஸ்லிம்கள் பெற்றுக் கொள்வதற்காக ஜம்இய்யா 0117425225 எனும் இலக்க விஷேட தொலைபேசி சேவையொன்றை ஆரம்பித்து வைத்துள்ளது.
 அச் சேவையின் மூலம் வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 07.00மணி வரை ஹலால் சம்பந்தமான அனைத்து தெளிவுகளையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும்,ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் நிறுவனங்கள் பொருட்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியலும் நாடளாவீய ரீதியில்லுள்ள அனைத்து பள்ளி வாயல்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாவும் அவற்றினை பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை  ஜம்இய்யத்துல் உலமா ஹலால் பிரிவின் செயலாளர் அஷ்ஷேக் முர்ஷித் முழப்பர் தெரிவித்துள்ளார்.

ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் நிறுவனங்கள் பொருட்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியல் எமது ஊரிலுள்ள மூன்று ஜும்ஆ பள்ளிவாசல்களிலும்  அறிவித்தல் பலகையில் காணக்கூடியதாக இருக்கிறது.
 

மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வருகிறார்.. சுவாரஸ்யமான கட்டுரையின் (பாகம் 2)



மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நிஜமான வருகை இஸ்லாத்தின் மறுமை நாளின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகும். மறுமையின் அடையாளங்கள் சிறிய அடையாளங்கள், பெரிய அடையாளங்கள் எனப் பிரிக்கப் படுகின்றன. சிறிய அடையாளங்கள் நிகழ்ந்து முடிவுற்ற பின்னர் மஹ்தி (அலை) வெளிப்படுவார். அதன் பின்னரே பெரிய அடையாளங்கள் நிகழ ஆரம்பிக்கும். எனவே, மஹ்தி (அலை) அவர்களின் வருகை சிறிய, பெரிய அடையாளங்களை இணைக்கும் ஓர் பாலமாக அமையப் போகும் மிக முக்கிய நிகழ்ச்சியாகும்.

சிறிய அடையாளங்கள் பெருமளவு எம் கண்முன் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சிறிய அடையாளங்கள் ஓர் குறித்த நிகழ்ச்சியாகவோ அல்லது ஓர் தொடராகவோ அமையலாம்.

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள், மகளின் தயவில் தாய், பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல், குடிசைகள் கோபுரமாகுதல், விபச்சாரமும் மதுப்பழக்கமும் பெருகுதல், தகுதியற்றவர்களிடம் பொறுப்பு, பாலை வனம் சோலை வனமாதல், காலம் சுருங்குதல், கொலைகள் பெருகுதல், நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தல், பள்ளிவாசல்களை வைத்து பெருமை பேசுதல், நெருக்கமான கடை வீதிகள், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல், உயிரற்ற பொருட்கள் பேசுதல், பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல், தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல், பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல், இறப்பதற்கு ஆசைப்படுதல், இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள் தோன்றல், முந்தைய சமுதாயத்தை பின்பற்றல் என்பனவற்றை நடைபெறும் நிகழ்வுகளாகக் குறிப்பிடலாம்.

இது வரை நிகழாத சிறிய அடையாளங்கள் யூதர்களுடன் மாபெரும் யுத்தம், கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல், யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல், கஹ்தான் இன மன்னரின் ஆட்சி, அல்ஜஹ்ஜாஹ் எனும் பெயருடைய மன்னரின் ஆட்சி, எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் கலீபா ஒருவரின் ஆட்சி, செல்வம் பெருகுதல், மாபெரும் யுத்தம், பைத்துல் முகத்தஸ் வெற்றி, மதீனா தூய்மையடைதல் ஆகியனவாகும்.

சிறிய அடையாளங்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையுடன் ஆரம்பித்து விட்டது. அண்ணலாரின் வருகை கூட யுக முடிவின் அடையாளமாகும். கிட்டத்தட்ட 14 நூற்றாண்டுகளாக சிறிய அடையாளங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இன்னும் சில நடை பெற இருக்கின்றன.

பெரிய அடையாளங்களின் நிகழ்வு இவ்வாறு அல்லாமல் மிக வேகமாக நடந்து முடிந்துவிடும் எனக் கூறப்படுகின்றது. பெரிய பத்து அடையாளங்களாவன, புகை மூட்டம், தஜ்ஜால், (அதிசயப்) பிராணி, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, ஈஸா (அலை) இறங்கி வருவது, யஃஜுஜ், மஃஜுஜ், கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம், இறுதியாக எமனிலிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்றுதிரட்டல் ஆகும்.

எனவே, மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை சிறிய அடையாளங்களின் இறுதி நிகழ்வாகவும் பெரிய நிகழ்வுகளின் ஆரம்பமாகவும் உள்ள ஓர் சங்கிலி இணைப்பாகவே அமையப் போகின்றது. இங்கு முஸ்லிம்களாகிய நாம் அனைவரும், இதனை வரலாற்றுக் கதையாக உள்வாங்கும் அதேவேளை, மறுமையின் நேரம் எம்மை நெருங்குகின்றது என சிந்தித்து எம்மைத் தயார் படுத்தக் கடமைப் பட்டுள்ளோம். அல்லாஹ் அல்குர்ஆனில் “மனிதர்களுக்கு அவர்களின் விசாரணை நெருங்கி விட்டது. அவர்களோ புறக்கணித்து,கவனமின்றி உள்ளனர்” (21:1), என எச்சரிக்கின்றான்.
மஹ்தி (அலை) அவர்கள் வெளிப்பட்டுவிட்டால் பெரிய அடையாளங்கள் நிகழப் போகின்றன என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். “மஹ்தி” எனும் சொல்லின் பொருள் “வழிகாட்டப்பட்டவர் அல்லது வழிப்படுத்துபவர்” என்பதாகும். இது அவரின் பெயரல்ல. மாறாக, அவருக்கு வழங்கப்படும் சிறப்புப் பட்டமாகும். ரசூல் (ஸல்) அவர்கள், நான்கு கலிபாக்களையும் “மஹ்திய்யீன்” என ஓர் ஹதீதில் கூறியிருக்கின்றார். எனவே “மஹ்தி” என்பது வழிகாட்டப்பட்டவர் என்பதைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாகும்.
“இவ்வுலகில், ஒருநாள் மட்டுமே எஞ்சியிருந்தால் என் வழித்தோன்றலைச் சேர்ந்த ஒருவர் ஆள்வதற்காக அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான், அவரது பெயர் என் பெயரை ஒத்ததாகும், அவரது தந்தையின் பெயர் எனது தந்தையின் பெயராகும், போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் அவர் நிலை நிறுத்துவார்” என கண்மணி நாயகம் (ஸல்) கூறிய ஹதீதுகள் திர்மீதி மற்றும் அபூதாவூத் போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளன.

எனவே மஹ்தி (அலை) என சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படப் போகும் அவரின் உண்மையான பெயர் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்பதாகும். ஒரேயொரு நாள் எஞ்சியிருந்தாலும், அவருக்காக அந்த நாள் நீட்டப்படும் என்பதிலிருந்து அவரின் முக்கியத்துவம் எமக்கு உணர்த்தப்படுகின்றது. அவரின் வருகை நிகழாமல் உலக அழிவு ஏற்படாது என்பது ஊர்ஜிதமாகின்றது. பெரிய பத்து அடையாளங்களும் அவரின் வருகை நிகழாமல் நிகழாது என்பதும் தெளிவாகின்றது.
போரும், அநீதியும் பெருகி உலகம் தறிகெட்டு நிற்கும் பொழுதில் ஓர் சீர் திருத்தவாதியாக இன்ஷா அல்லாஹ் மஹ்தி (அலை) தோன்றுவார்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

By :மௌலவியா தன்ஸீலா அம்ஜாட்

United Arab Emirates - பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வகிக்கும் பங்கு!! - எமிரேட்ஸின் இஸ்லாமிய எதிர்ப்புவாதம் பற்றிய குறிப்புகள்...



 

து ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பற்றிய அரசியல் உண்மைகள். 
ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியின் போது எகிப்திற்கு ஐக்கிய அரபு இராச்சியம் ஒவ்வொரு வருடமும் தலா 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை ($ 12 billion) உதவியாக வழங்கி வந்தது. ஒயில் புரொடக்களையே இவ்வாறு வழங்கியது எமிரேட்ஸ் அரசு. இஹ்வான்களின் அரசு ஆட்சியை அமைத்து அதன் அதிபராக முஹம்மட் முர்ஸி தெரிவான போது அந்த உதவிகளை உடனடியாகவே நிறுத்தி கொண்டது. இப்போது எகிப்திய இராணுவம் செய்த சதிப்புரட்சியின் பின்னரான அரசிற்கு அந்த உதவிகளை மீண்டும் வழங்க முன்வந்துள்ளது யூ.ஏ.ஈ.
  • 2010-ல் அமெரிக்க அரசு பெரும் பொருளாதார சரிவை சந்தித்தது. வோல் ஸ்டீரீட் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என அது அரசியல் ரீதியிலும் பின்னடைவை சந்தித்தது. அப்போது அமெரிக்க அரசை கைதூக்கும் முகமாக எமிரேட்ஸ் அரசு அமெரிக்க அரசுடன் ஆயுத கொள்வனவு ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் $ 200 billion பெறுமதியான ஆயுதங்களை பணம் கொடுத்து வாங்கி அமெரிக்க பொருளாதார சரிவை ஈடுகட்ட உதவியது.
  • 2008-ல் அமெரிக்க அரிசோனாவில் (Arizona) ஏற்பட்ட பெரும் புயலின் (ஹரீகேன்) போது அந்த மாகாணத்தின் பாலங்கள், பாடசாலைகள், வீதிகள், மின்சார வசதிகளை மீள் கட்டமைக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு சுமார் பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களை (10 billion dollars) உடனடியாகவே வழங்கியது.
  • சிரிய சண்டைகள் ஆரம்பித்த நாள் முதலே சிரியர்களை நாட்டை விட்டு மெல்ல வெளியேற்ற ஆரம்பித்தது. அது போலவே UAE-ல் உள்ள சிரியர்கள் தங்கள் நாட்டிற்கு பணம் அனுப்புவதை தடுக்க முனைந்தது. UAE-ல் சேகரிக்கப்படும் பணம் சிரிய போராளிகளிற்கு சென்றடைவதை தடுப்பதே இதன் நோக்கம். 
  • மாலியில் இஸ்லாமிய ஷரீஆஃ சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கும் முகமாக பிரான்ஸின் சிலுவை யுத்த வீரர்களிற்கு மாலியின் ஒப்பரேசன் செலவை ஈடுகட்டும் முகமாக $ 7 billion அமெரிக்க டொலர்களை வழங்கியதும் இந்த எமிரேட்ஸ் அரசே.
  • புத்தாண்டு கொண்டாட்டங்களை வெகு சிறப்பாக நடாத்துவதற்கு எமிரேட்ஸ் அரசு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை ($ 2 billion) செலவு செய்தது. 
  • சர்வதேச கிரிமினல்களிற்கு அடைக்கலம் தரும் சொர்க்கமும் இந்த எமிரேட்ஸே. Ahmad Shafiq மற்றும் Dahlan போன்ற மனித படுகொலைகளுடன் சம்மந்தமுடைய கிரிமினல்களிற்கும், பஸர் அல் அஸாதின் உறவினர்களிற்கும் அடைக்கலம் வழங்கியுள்ள தேசம் இந்த யூ.ஏ.ஈ.
  • எமிரேட்ஸ் அமெரிக்க, ஐரோப்பிய உளவமைப்புக்களின் பதுங்குமிடம். எகிப்தின் ஹொஸ்னி முபாரக்கின் அரசு வீழ்த்தப்பட்டு இஹ்வான்கள் ஆட்சியை கைப்பற்றிய போது இந்த இன்டலிஜென்ட் அமைப்புக்கள் அனைத்தம் தங்கள் செயற்பாட்டு மையங்களை கெய்ரோவில் இருந்து டுபாய்க்கு மாற்றி கொண்டன.
  • எமிரேட்ஸ் சர்வதேச கருப்பு பணம் புழங்கும் தேசம். கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் தேசமும் கூட. ஆயுத தளவாட விற்பனை, பல்நாட்டு பெண்களின் விபச்சார மையம் என இங்கு நடக்கும் நிழல் தொழில்கள் ஏராளம். 
  • பொஸ்னிய முஸ்லிம்களை படுகொலை செய்த தேசமான சேர்பியாவிற்கு மனிதாபிமான உதவியாக $ 400 million அமெரிக்க டொலினை வழங்கியதும் இந்த எமிரேட்ஸே.
  • ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இஸ்லாமிய அறிஞர்களை சுதந்திரமாக இயங்க விடாமல் தடுக்கிறது.  Ibrahim al-Marzouqi, Hussain Al-Jaber போன்ற பல அறிஞர்கள் இந்த நாட்டை விட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். எமிரேட்ஸில் இஸ்லாமிய செயற்பாடுகள் தொடர்பாக அதன் உளவு அமைப்புக்கள் தீவிரமாக கண்காணிக்கின்றன.
  • ரஷ்ய அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க ரஷய் ஜம்மியதுல் உலமா எனும் துரோக கும்பலையும் அதன் அதிபர் Kadyrov ஐயும் வரவேற்று அவர்களிற்கு பல மில்லியன் திர்ஹம்களை வழங்கி ஊக்குவித்தது இந்த இராஜ்ஜியம். 
  • எமிரேட்ஸ் மாலியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பிரெஞ் படையினரிற்கு மட்டுமல்ல, ஈராக்கில் (பக்தாத்தில்) பயங்கரவாத செயல்களை புரியும் அமெரிக்காவின் கூலிப்படையான Blackwater இற்கும் நிதியுதவி செய்துள்ளது.
  • எமிரேட்ஸில்  (CIA base in Jebel Ali) வைத்து சீ.ஐ.ஏ. உளவாளிகள் முஜாஹிதீன்களையும், இஸ்லாமிய செயற்பாட்டாளர்கள் என சந்தேகப்பட்டவர்களையும் தடுத்து வைத்து சித்திரவதை செய்துள்ளதுடன் அவர்களை வேறு நாடுகளிற்கு நாடு கடத்தும் பணியையும் செய்கின்றது. 
  • ப்றீமேசனின் உப அமைப்புக்களான Rotary clubs மற்றும் Lions clubs அமைப்புக்களின் சம்மேளன கூட்டங்கள் பல டுபாயிலும் அபூதாபியிலும் நடந்துள்ளன. இந்த மசோனிக் குழுமங்கள் எமிரேட்ஸில் சுதந்திரமாக தொழிற்படுகின்றன. 
  • கிறிஸ்தவ தேவாலயங்கள், மடாலயங்கள் என மாற்று மத வழிபாட்டு தளங்கள் கட்டப்படும் பராமரிக்கப்படும் தேசமாகவும் எமிரேட்ஸ் திகழ்கிறது. 

இவ்வளவிற்கும் பின்பு ஒரு கேள்வி பிறக்கிறது. அது, “எமிரேட்ஸ் முஸ்லிம் தேசமா” என்பதாகும்.
.........
கைபர் தளம்




மஹ்தி அலைஹிஸ்ஸலாம் (பாகம் 1)



1979ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி, பஜ்ரு தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட்ட ஓர் அமைதியான நாள். கஃபதுல்லாஹ்வில் சாதாரண வழமையான நாளாகவே தொடங்குகின்றது. ஹறம் ஷரீபை நோக்கி மக்கள் கூட்டம் அலை அலையாகத் திரண்டு சுப்ஹு தொழுகைக்குத் தயாராகின்றனர். அது இஸ்லாமிய வரலாற்றின் கறை படிந்த கறுப்பு நாட்களுள் ஒன்றாக அமையப் போகின்றது என்பது தொழுகைக்காக அணி திரண்ட பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாள், ஹிஜ்ரி 1400 ஆரம்பிக்கின்ற முஹர்ரம் 1ம் நாளாகவும் அமைந்திருந்தது.

Sheikh Mohammed al-Subayil (ஷேக் முஹம்மத் அல் சுபையில்)எனும் இமாம் அவர்களினால் சுப்ஹு தொழுகை நடாத்தப்படுகின்றது. தொழுகை முடிவடைந்ததும், உடனடியாக, சில துப்பாக்கி வேட்டுக்கள் கேட்கின்றன. அதுவும், ஹறத்தின் உள்ளேயே கேட்கின்றது. முன்வரிசைப் புறத்திலிருந்து குழப்பமான ஓர் இரைச்சல் சத்தம் கேட்க ஆரம்பிக்கின்றது. அப்போது, Juhayman al-Otaybi (ஜுஹிமான் அல் உதைபி) எனும் நபர், இமாமிடமிருந்த ஒலிவாங்கியைப் பறித்தெடுக்கின்றார்.

இன்னும் சிலர் எழுந்து காவலுக்கு நிற்கின்றனர். அப்போது, ஒலிவாங்கியைப் பறித்த ஜுஹிமான் அல் உதைபி, அங்கு தொழுது விட்டு குழுமியிருந்த மக்களை நோக்கி பேச ஆரம்பிக்கின்றார்.  நாட்டிலுள்ள ஊழல் மற்றும் ஏனைய பாவச் செயல்களைப் பற்றி அவர் உரைக்கின்றார். உலக முடிவு நாளுக்குரிய ஏராளமான அடையாளங்கள் கண்முன்னே நிகழ்ந்தேறியும், நிகழ்ந்து முடிந்தும் இருப்பதை அவர் மக்களுக்குப் பறை சாற்றுகின்றார். மேலும், ஒவ்வொரு நூற்றாண்டுக்கொரு முறை, மார்க்கத்தை நல்வழிப்படுத்துவதற்காக ஓர் “முஜத்தித்” தோன்றுவார் என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருப்பதை நினைவு கூருகிறார்.
உலகம் நெறி பிறழ்ந்து, ஈனச்செயல்களிலும், பாவச்செயல்களிலும் மூழ்கியிருக்கும் போது மஹ்தி அலைஹிஸ்ஸலாம் தோன்றுவார் என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஹதீதையும் அவ்விடத்திலே அவர் ஞாபகமூட்டுகின்றார். இப்போது நாம் இருக்கும் கால கட்டம், நபி பெருமானார் கூறிய அந்தக் கால கட்டம் என அவர் நியாயிக்கின்றார். அதனைத் தொடர்ந்து ஒரு நபரை அவ்விடத்திற்கு எழுந்து வருமாறு அழைக்கின்றார்.

மக்களுக்கு அவரைக் காட்டி, இதோ, இவர்தான் அந்த மஹ்தி. அனைவரும் இவரிடத்திலே “பையத்” செய்து கொள்ளுங்கள் என்று வேண்டினார். இவருடைய பெயர் Mohammed Abdullah al-Qahtani (முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் கஹ்தானி). ரசூலுல்லாஹ் கூறியது போல், இவருடைய பெயர் முஹம்மத். இவரின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ். இவரின் குலம் அல்-கஹ்தான் என்று சொல்லப்படுகின்ற குறைஷிக் குலத்திலிருந்து தோன்றுகின்ற குலம். இதோ இவர் ஹஜ்ருல் அஸ்வத் மற்றும் மகாமு இப்றாஹீம் ஆகியவற்றிற்கிடையே இருந்து தோன்றுகின்றார். மேலும், ஹிஜ்ரி 1400 முதலாம் நாளிலேயே உங்களிடத்தில் இவர் வந்திருக்கின்றார். ஆகவே, சந்தேகமின்றி இவர்தான் மஹ்தி. நாம் அனைவரும் இவரை ஏற்றுக் கொள்வோம் எனக் கூறினார். மக்களோ செய்வதறியாது திகைத்து நின்றனர். பலருக்கு அறபி மொழி தெரியாததன் காரணமாக எதுவுமே விளங்காத சூன்ய நிலையும் அங்கு தோன்றியது.

சிலர் அங்கிருந்த வெளியேற முற்பட்டனர். கதவுகள் அடைக்கப்பட்டு, அங்கு மக்களை வெளியேற விடாமல் ஆயுதம் தரித்த குழு ஒன்று நிற்பதும் அவதானிக்கப் பட்டது. மக்களிடையே பீதி பரவ ஆரம்பித்தது. அன்றிலிருந்து சுமார் ஒன்றரைக் கிழமைகள் (அண்ணளவாக 2 வாரங்கள்) புனித கஃபா அந்த ஆயுதம் தரித்த ஜுஹிமான் அல் உதைபியின் குழுவினரால் கைப்பற்றப் பட்டிருந்தது. மக்கள் பணயக் கைதிகளாக்கப்பட்டிருந்தனர். யாரும் உள் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப் படவில்லை.
இவர்களால் கஃபா தடுத்து வைக்கப்பட்டிருந்த நாட்களில் தவாப், அதான், தொழுகை, ஸயீ என எவ்வித அமல்களும் இடம்பெறவில்லை. சவூதி அரசாங்கத்திற்கு ஆரம்பத்தில் எதுவுமே புரிந்திருக்கவில்லை. என்ன நடக்கின்றது என்று பார்ப்பதற்கு யாரையாவது அனுப்ப முயற்சித்தால் அவர்கள் கஃபாவின் மினாறாக்களில் இருந்த குறிபார்த்துச் சுடும் ஜுஹிமான் அல் உதைபியின் குழுக்களால் கொல்லப்பட்டனர். கஃபாவில் இரத்தம் சிந்தப்பட்டது. தொழுகை நடாத்திய இமாம் ஷேக் முஹம்மத் அல் சுபையில் அவர்களுக்கு இது கடும் போக்காளர் குழு ஒன்றின் வேலை என்பது புரிந்து விட்டது. பெண் ஒருவரின் ஹிஜாபை அணிந்து அவர் எப்படியோ தப்பித்து விட்டார். அரச தரப்பினருக்கு தகவல் அளித்த முக்கியஸ்தர்களுள் அவரும் ஒருவர்.

அரசாங்கம் எவ்வளவோ முயற்சித்தும் பலன் கிட்டவில்லை. மஹ்தியை ஏற்று, அரசாங்கம் தமது பதவிகளை இவர்களுக்குத் தரும் வரை விடமாட்டோம் என கடும் போக்காளர்கள் விடாப் பிடியாக நின்றனர். சுமார் 8 நாட்கள் கடந்த நிலையில் சவூதி அரசு படைகளை அனுப்ப முடிவு செய்தது. உண்மையான மஹ்தி இப்படி நடந்து கொள்ள மாட்டார் என சவூதியின் உலமாக்கள் குழு தீர்மானித்து யுத்தம் செய்வதற்கு பத்வா வழங்கியது. பொதுவாக யுத்தம் செய்வதற்கு தடுக்கப்பட்ட பிரதேசமாக ஹறம் ஷெரீப் அமைந்திருந்தாலும் இஸ்லாத்தைப் பாதுகாக்க வேண்டிய சூழலில் இது அனுமதிக்கப் பட்டிருந்தது.

மிகவும் திறமையான படைகளை அனுப்பி போராடி மீட்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. படைகள் சென்றன. மூடப்பட்டிருந்த கதவுகளைத் தகர்த்து இராணுவம் உள் நுழைந்தது. அங்கே, ஜுஹிமான் அல் உதைபியின் படையினர்க்கு எதிராக யுத்தம் நடத்தப்பட்டது. கஃபாவின் உள்ளேயே இது நிகழ்ந்தது. கஃபாவின் அடித்தளத்தில் ஜுஹிமான் அல் உதைபியின் குழுக்கள் மறைந்திருந்து ராணுவத்தைத் தாக்கினர். அவர்கள் உணவுக்கென பேரீத்தம் பழங்களைக் கொண்டு வந்திருந்தனர். தண்ணீரை ஸம் ஸம் கிணற்றிலிருந்து பெற்றனர். ஆயுதங்களை பஜ்ரு நேரம் ஜனாஸாக்கள் கொண்டுவரும் சந்தூக்குகளில் கொண்டு வந்திருந்தனர்.

யுத்தம் நிகழ்ந்தது. இரு தரப்பிலும் உயிர்கள் பறிக்கப் பட்டன. மஹ்தி என்று கூறப்பட்ட முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் கஹ்தானியும் இதில் கொல்லப்பட்டார். இவற்றிற்கெல்லாம் மூல காரணமாக இருந்த ஜுஹிமான் அல் உதைபி உயிருடன் பிடிபட்டார். அவருடன் சேர்த்து சுமார் 70 பேர் கைது செய்யப் பட்டனர். ஜுஹிமான் அல் உதைபி உட்பட பிடிபட்ட 70 பேரும் 3 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிகழ்வு “மஹ்தி” எனும் புனிதரை பலருக்கும் நினைவு படுத்தியது. இஸ்லாத்தில் மிக முக்கியமாகக் கூறப்பட்ட ஒரு புனிதரின் வருகை 80 களில் பெருமளவு மறந்திருந்தாலும் இந்த நிகழ்வின் பின்னர் மெருகடையத் தொடங்கியது. மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றிய ஆய்வுகள் அதிகரித்தன. பலர் புதிதாக அறிந்து கொள்ள ஆரம்பித்தனர்.

ஜுஹிமான் அல் உதைபி எனும் படையினர் தம்மில் ஒருவராக அறிமுகம் செய்யுமளவு முக்கியமான இந்த மஹ்தி அலைஹிஸ்ஸலாம் யார் ?.
மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை மறுமை நாளின் அடையாளமா ?.

மஹ்தி அலைஹிஸ்ஸலாம் ஏன் இஸ்லாத்தில் முக்கியத்துவம் பெறுகிறார்?.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

BY: மௌலவியா தன்ஸீலா அம்ஜாட்.

உலர் உணவுப் பொருட்கள் வினியொகம் - நஜீம் நானா


அத்தனகல்ல பிரதேசசபை உறுப்பினரும் சமாதான நீதவானுமாகிய M.A.M நஜீப்தீன் (நஜீம் நானா) அவா்களின் ஏற்பாட்டில்  இம்முறையும் பிரபல தனவந்தர் ஒருவரின் உதவியோடு வழங்கப்பட்ட ஒரு தொகை உணவுப்பொருட்கள், மற்றும் பணப் பொதிகள் என்பன ஏழைக்குடும்பங்களுக்கு சென்ற ஞாயிற்றுக்கிழமை (07.07.13) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் எமது ஊருக்கு மட்டுமன்றி  எமது அயல் கிராமங்களான ஓகொடபொல, உடுகொட, ஸார்லங்க ஆகிய ஊர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

வியக்க வைக்கும் சீன: 100 மெகாபிக்சல் கமராவை உருவாக்கி சாதனை!





100 மெகாபிக்சல் கமராவை கண்டுபிடித்து சீன மின்னனுவியல் நிறுவனம் ஒன்று உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த கமராவால் வானியல் அளவீடுகளையும், இயற்கை பேரழிவுகளையும் தெளிவாக படம் எடுக்க முடியும். சர்வதேச அளவில் பல வழி போக்குவரத்து முறைகளை பாதுகாப்பானதாக மாற்றவும் இந்த கேமரா உதவும். சீன அரசின் அறிவியல் ஆய்வுகழகத்தின் கீழ் இயங்கும் ஒளிதரன் மின்னணு நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.

கேமரா குறைவான எடையுடன் சுமார் 20 செ.மீ. அகலத்துடன் உள்ளது. மைனஸ் 20 டிகிரி முதல் 55 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையிலும் இந்த கமரா இயங்கும். மிகவும் நவீனமான ஒளிப்பதிவும், உயர்திறன் தகவல் சேமிப்பு திறனும் உள்ள இந்த கமராவிற்கு IOE3 கான்பான் என்று பெயரிடப்பட்டது.

வானியல் தொலைவு இயக்க ஆய்வில் இந்த கமரா வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நிறுவனம் 81 மெகாபிக்சல் கமராவை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

முஹம்மட் ஆசிரியர் (ஓய்வுபெற்ற) காலமானார்.

 

கஹடோவிடவைச் சேர்ந்த மர்ஹும் KP ரவுப் அவர்களின் மகனும், சகோதரி நூருல் ஐன் அவர்களின் கணவரும் ஆகிய ஓய்வுபெற்ற ஆசிரியர் மொஹம்மட் அவர்கள் காலமானார்.   இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார்  மர்ஹும் நிதாம்,  ஸாலி ஆசிரியர், மதனி(மம்மிநான), உம்மு ஐமா, ஸுரத், இரீபா ஆகியோரின் சகோதரரும்,  பிர்தௌஸ் நளீமி, பியாஸ் மொஹமட், சானாஸ் (பாலிகா மகளிர் பாடசாலை-அதிபர்), நிப்ராஸ், பிர்னாஸ் ஆகியோரின் தந்தையும் ஆவர்.

ஜனாஸா நல்லடக்கம் நாளை  (11.07.2013) காலை 11.00 மணியலவில் மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

பாலத்திற்கு அறிகாமையில் விபத்து, முச்சக்கர வண்டிக்கு கடுமையான சேதம்.

Traffic-Accident-Logo-Crash2

இன்று காலை 8.45 மணியலவில் நடந்த வாகன விபத்தில் எமது ஊரைச் சேர்ந்த Hi Ace வான் ஒன்றும், முச்சக்கர வண்டியொன்றும் ஒன்றோடொன்று நேரடியாக மோதி முச்சக்கர வண்டிக்கு கடுமையான சேதமேற்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் சென்ற சிறு குழந்தையொன்று கடுமையான காயத்திக்கு உள்ளாகி  வதுபிடுவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றும் சிலருக்கு  சிறு காயங்களே ஏட்பட்டுள்ளதாகவும் தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.
இப்விபத்து கஹடோவிட பாலத்தைதான்டி சற்று அறிகாமையில் நிகழ்ந்துள்ளது.

ஜனாதிபதி முர்சியின் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னால் ?

 Egyptian President Mohamed Mursi at the United Nations during a meeting at the General Assembly on September 25, 2012 in New York City. Over 120 prime ministers, presidents and monarchs are gathering this week at the U.N. for the annual meeting. This years focus among leaders will be the ongoing fighting in Syria with is beginning to threaten regional stability. (Photo by Spencer Platt/Getty Images)
நேற்று (03/07/2013) அன்று இரவு ஒப்பது மணியளவில் எகிப்திய ஜனாதிபதி முர்சி அவர்களின் ஆட்சி இராணுவத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இது மிக கவனமாக பல இஸ்லாமிய தீய சக்திகளின் திட்டமிட்ட சதி முயற்சியால் நடந்தேறியது.

இதற்கு பின்னால் உள்ளும் வெளியுமாக பல இஸ்லாத்தின் பயங்கரவாத சக்திகள் நிற்பது தெளிவாக சொல்ல முடியும் அதன் விளைவே இப்போது அரங்கேறிவருகிறது.முர்சியை ஆட்சியில் இருந்து கவிழ்த்த அடுத்த நிமிடம் இஸ்லாமிய வாதிகளுக்கு எதிராக பல அராஜகம் நடைபெற்றதை நேரடியாக உள்ளிருந்து அவதானிக்க முடிந்தது உலக வரலாற்றில் இஸ்லாத்துக்கு எதிராக பல சதிகள் நடை பெற்றுள்ளதாகவும் அதில் பெரும் இஸ்லாமிய சிந்தனையாளர்கள் தூக்கில் இடப்பட்டதாகவும் பல வருடங்கள் சிறையில் வாழ்த்ததாகவும் படித்துள்ளேன்  இப்போது அதை என் கண் முன்னே உணர்கின்றேன் .

அல்லாஹ் நீயே போதுமானவன் நீயே எல்லா வற்றையும் அறிந்தவன் நேற்று இராணுவம் ஆட்சி கவில்ப்பை அறிவித்தது முதல் பல விளைவுகள் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றம் நடைபெற்றது .
அந்த வகையில் பின்வருவன மிக முக்கியமாகும் .

ஜனாதிபதி முர்சி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் 

நாப்பது பேர் கொண்ட மிக முக்கியமான இஸ்லாமிய தலைமைகள் நாட்டுக்கு வெளியே பிரயானிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எகிப்தில் இயங்கி வந்த 17 இஸ்லாமிய சானல்களும் முடக்கப்பட்டுள்ளது .
இஸ்லாமிய சானல்களில் வேலை செய்த அனைத்து ஊ டகவியாலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் 

ஜெசீரா தொலைகாட்சி எகிப்தில் முடக்கப்பட்டு அதில் பணி புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் 

எகிப்தின் பல இடங்களிலும் பலர் சஹீதகப்பட்டுள்ளனர் 

முர்சிக்கு ஆதரவானவர்கள் இராணுவத்தினால் முற்றுகைக்கு ஆளாக்கப்டுள்ளனர் .

எகிப்திய முழு ஊடகமும் முஸ்லிம்களை தூற்ற ஆரம்பித்ததுள்ளது.

இக்வான்களின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

90 வீதமான முஸ்லிம்களை ஒரு கிறிஸ்தவ தலைவர் ஆட்சி செய்ய அமர்த்தப்பட்டுள்ளார் .

இஸ்ரேல் ,சிரியா ,சவூதீ ,குவைத் .இமாரத் அமெரிக்க போன்ற நாடுகள் வாழ்த்துக்களை ஆட்சி கவிழ்ப்புக்கு தமது வாழ்த்துக்களை அனுப்பியுள்ளது.

ஹிஜாப் அணிந்துது தொலை காட்சியில் தோன்றுவது தடைசெய்யப்பட்டுள்ளது .

இஸ்லாமிய பிரசாரம் செய்து வந்த அல் ஹாபில் சானல் மற்றும் அதன் உரிமையாளர் ஆதிப் அப்துர் ரசீத் கைது செய்யப்பட்டுள்ளார்

எகிப்தின் மிக முக்கிய சலபி சானல் நாஸ் முடக்கப்பட்டு அதன் மிக முக்கிய ஊடகியலாளர் அப்துல்லாஹ் காலித் கைது செய்யப்பட்டுள்ளார் 

இக்வங்களின் சனல் 25 மிஸ்ர் முடக்கப்பட்டு அதன் மிக முக்கிய ஊடகியலாளர்  கைது செய்யப்பட்டுள்ளார்கள் 

இக்வான்களின் தினசரி பத்திரிகை ஹுர்ரியா வ அதாலா வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது .

முபாரக்கின் ஆதரவாளர்கள் அமைச்சு பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் .
இக்வங்களின் பிரதி தலைவர் ரசாதுள் பய்யூமி மற்றும் ஹுர்ரியா வ அதாலா கட்சின் தலைவரும் முன்னால் பாராளுமன்ற சபாநாயகர்  கலாநிதி சஹ்த் கதாதினி இன்னும் சிலர் கைது செய்யப்பட்டு ள்ளனர் .
 
இஸ்லாமிய வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் ஜனாதிபதிக்கு எதிராக நஸ்ரானிகள் மேலேளுந்துள்ளனர் .
 
இரனுவம் காடையர்களுக்கு எகிப்து கொடியை ஹெலிகாப்டர் மூலம் வழங்கி அவர்களை இன்னும் தூண்டுகிறது .
 
ராபியா அத்தஅவிய்யா வை சூழ கேமிரா பூட்டப்பட்டு அதிலிருந்து வெளியேறும் நபர்கள் சோதனைக்கும் (செக்கிங்) உள்ளாக்கப்படுகிறார்கள்.   
 
முர்சியின் ஆதரவாளர்கள் இருக்கும் இடத்துக்கு பத்திரிகையாளர்கள் போவது தடை செய்யப்பட்டுள்ளது .
 
இப்படி மிக படு மோசமான முறையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் கட்டாயம் உங்கள் துஆக்களில் எகிப்துக்கு நல்ல ஆட்சி கிட்ட அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்

குழந்தைகளுக்கான சராம்பு நோய் தடுப்புசி வழங்கல்


Clinic Request

எதிர்வரும் 2013.07.05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் கஹடோவிட தாய் சேய் பராமரிப்பு நிலையத்தில் (கிளினிக்கில்) 6 -12 மாதம் புர்தியான குழந்தைகளுக்கு சராம்பு நோய் தடுப்புசி வழங்கப்படும் என்பதை அறியத்தருகிறேன்.

இப்படிக்கு
குடும்ப நல உத்தியோகத்தர்
கஹடோவிட

இவள் பெயர் டென்சிலா!..500 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட சிறுமி


 
இறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத மூன்று மம்மிக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அர்ஜெண்டினாவின் லுல்லைலிகோ மலையில் கடந்த 1999ம் ஆண்டு சுமார் 6739 மீற்றர் ஆழத்தில் மூன்று மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மதத்தின் பெயரால், பனியில் புதைக்கப்பட்ட இச்சிறுமிக்கு லா டென்சிலா, அதாவது திருமணமாகாத இளம் பெண் என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.
...
மேலும் இன்கா இனத்தை சேர்ந்த இப்பெண் கடவுளுக்காக அர்பணிக்கப்பட்டு, கடவுளுடன் வாழ ஆசைப்பட்டு, மதத்தின் பெயரால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த டென்சிலாவின் உடல்களில் பாகங்கள் எதுவும் கெட்டுப் போகவில்லையாம், இரத்தம் கூட உறையாத அளவிற்கு பதமாக பாதுகாப்பாக இருந்திருக்கின்றன. தோல் கூட புத்துணர்ச்சியுடன் இருப்பது தான் ஆச்சர்யம்.

இந்நிலையில் அவளது முடியை வைத்து, அவள் என்ன மாதிரியான உணவுப் பழக்க வழக்கக்களைக் கொண்டவள் என ஆராய்ந்ததில், இன்கா மக்கள் தங்கள் குழந்தைகளை நன்கு கொழுக்க வைத்து கடவுளுக்கு அர்ப்பணித்தது தெரிய வந்துள்ளதாம்.

கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே, விலங்கு கொழுப்புகள் மற்றும் தானியங்களைக் கொடுத்து அக்குழந்தைகளை நன்கு செழிப்பாக்குவார்களாம் அவர்கள் குடும்பத்தார்.

டென்சிலாவின் வயிற்றுப்பகுதியை ஆய்வு செய்த போது, அவள் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏதோ காய்கறி போன்ற உணவை உட்கொண்டிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டென்சிலாவின் உடல் இருந்த நிலையை வைத்து பார்க்கும் போது, அவள் இறப்பதற்கு முன்னதாக ஏதேனும் மருந்து உட்கொண்டிருக்கலாம், அதன் மூலம் அவளது மரணம் நிகழ்ந்திருக்கலாம் என யூகிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

இன்காக்கள் இவ்வாறு அர்ப்பணிக்கப் பட்டவர்களை மலையின் உச்சிக்கு சுமந்து செல்வார்களாம்.

அந்த மலைப்பயணம் மிகவும் அபாயகரமானதாகவும், சிரமமானதாகவும் அமைந்திருக்குமாம்.

இலக்கை அடைந்தவுடன் குடிக்க ஒரு மருந்து திரவம் தரப்படுமாம். அதன் மூலம் வலி, பயம் மற்றும் எதிர்க்கும் மனோபாவம் இல்லாமல் போய்விடுமாம்.

பின்னர் அவர்களை உடன் சென்றவர்களே மூச்சுத் திணறச் செய்தோ, தலையில் ஓங்கி அடித்தோ அல்லது பனியில் உறைய விட்டோ பலி கொடுப்பார்களாம்.

நிறைய இன்கா குழந்தைகள் இதுபோல் திருவிழாவின் போதோ அல்லது சாதாரண நாட்களிலோ பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.