கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

யார் இந்த யாகூப் மேமன்?

'1994 ஜூலை மாதம், தனது பெற்றோர், மனைவி மற்றும் 40 நாள் 'கைக்குழந்தை'யோடு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து, தனக்கும் குண்டுவெடிப்புக்கும் சம்மந்தமில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காக 'சரண்' அடைந்தவர் தான் யாகூப் மேமன்.''
-----
-----------------------------------------------------------

பாபர் மசூதியை இடித்த கையோடு, தொடர்ந்து 3 மாதங்களாக முஸ்லிம்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், 12-03-1993 அன்று மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தது இந்திய அரசு.
தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட பலர் மீது, புலனாய்வுத்துறை'யினரின் பார்வை விழுந்துக் கொண்டிருந்த வேளையில் 'ஆடிட்டர்' யாகூப் மேமன் மூலம் குண்டுவெடிப்புக்கான பணபரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறி, யாகூப் மேமன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
தன் மீதான 'கரை'யை துடைக்கும் பொருட்டு, 1994 ஜூலை மாதம், தனது பெற்றோர், மனைவி மற்றும் 40 நாள் 'கைக்குழந்தை'யோடு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து, தனக்கும் குண்டுவெடிப்புக்கும் சம்மந்தமில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காக 'சரண்' அடைந்தவர் தான் யாகூப் மேமன்.
இதுகுறித்து யாகூப் மேமனின் வழக்கறிஞர் 'ஷியாம் கேஸ்வாணி'யின் விரிவான விளக்கம் :
யாகூப் மேமனை 'சரண்' அடையச் செய்து 'தடா' நீதிமன்றத்தில் யாகூப் மேமனுக்காக நான் வாதாடிக் கொண்டிருந்த வேளையில், புலனாய்வுத்துறை உயரதிகாரி ஓ.பி. சட்வால், 'மந்த்ராலயா'வுக்கு எதிரே அமைந்துள்ள அவரது அலுவலகத்துக்கு என்னை அழைத்து, யாகூப் மேமனுக்கு ஜாமீன் மனு போடுங்கள் என்றார்.
சாதாரண வழக்குகளில் கூட நான் முதல் நாளே ஜாமீன் மனு போடுவதில்லை, மிகவும் சீரியசான இந்த வழக்கில் முதல் நாளே ஜாமீன் கிடைத்திடுமா என கேள்வி எழுப்பினேன்.
யாகூப் மேமனின் ஒத்துழைப்பு அபாரமானது, 40 ஆண்டுகளாக நமது புலனாய்வு நிறுவனங்கள் சேகரிக்க முடியாத அளவுக்கான, பாகிஸ்தான் குறித்த பல தகவல்களை யாகூப் மேமன் வழங்கியுள்ளார், எனவே அவரது ஜாமீன் மனு மீது எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்பட மாட்டாது என்றார், ஓ.பி. சட்வால்.
இதனை நம்பி ஜாமீன் மனுவை தாக்கல் செய்தபோது, அதனை 'சிபிஐ' கடுமையாக ஆட்சேபித்து ஜாமீன் கிடைக்காமல் செய்துவிட்டது.
புலனாய்வு அதிகாரி சத்வாலிடம் நான் இதுகுறித்து கேட்டபோது :
கடந்த 12 மணி நேரத்தில் எல்லாம் 'தலைகீழ்' ஆகிவிட்டது, மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுகள் மாறிவிட்டது என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டு மன்னிப்பும் கேட்டார், சட்வால்.
இந்திய புலனாய்வு நிறுவனங்களை நம்பி நீ 'மகாத்மா'வாக முயற்சிக்காதே என சரணடைவதற்கு முன்பே யாகூப் மேமனை அவரது சகோதரர் 'டைகர் மேமன்' தடுத்தும் கூட, சரணடைந்தவர் தான் யாகூப் மேமன்.
சரணடைவதற்கு முன்பு, புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் செய்யப்பட்ட எல்லா (வாய்வழி)ஒப்பந்தந்தங்களையும் புறந்தள்ளிவிட்டு யாகூப் மேமனை நேபாள நாட்டிலிருந்து கைது செய்ததாகவும், புதுடெல்லி ரயில் நிலையத்திலிருந்து கைது செய்ததாகவும், முன்னுக்குப்பின் முரணான தகவல்களை பரப்பி, கதை கட்டிவிட்டது சிபிஐ.
நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்து, புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்து
கொண்டு,1994 ஜூலையில் சரண் அடைந்து, கடந்த 21 ஆண்டுகளாக ஜெயில்வாசம் அனுபவித்து வந்த நிலையில், இம்மாதம் 30-ந்தேதி தூக்கில் போடப்படுகிறார் யாகூப் மேமன்.
இதைத்தான் நீதித்துறையின் கேலிக்கூத்து என்கிறார், வழக்கறிஞர் ஷியாம் கேஸ்வாணி.



தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது...
________________________________________________
யாகூப் மேமன் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவருக்கு வயது 53. இன்று அவருடைய பிறந்தநாள்.
பிறந்த நாளே இறந்த நாளாய் மாறிய சோகம்..!

பல நிபந்தனைகளுடன் யாகூப் மேமனின் உடல்
அவருடைய குடும்பத்தாரிடம் இன்று நண்பகல் ஒப்படைக்கப்படும்.
இறுதி யாத்திரை கூடாது, விரைவில் அடக்கம் செய்துவிட வேண்டும்,
இறந்த உடலின் படங்களை வெளியிடக்கூடாது என்றெல்லாம்
காவல்துறை விதித்த நிபந்தனைகளை
மேமனின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக நாக்பூர் சிறை வளாகத்திலேயே மேமனின் உடலைப்
புதைத்துவிடத்தான் காவல்துறை முடிவு செய்திருந்தது.
பின்னர்அவருடைய குடும்பத்தினரின் கோரிக்கையை
ஏற்று உடலை ஒப்படைக்க முன்வந்துள்ளது.

முன்னாள் இந்திய ஜனாதிபதியும் இந்திய அணுசக்தி மற்றும் ஏவுகணை மனிதனுமாகிய டாக்டர் அப்துல் கலாம் வஃபாஅத் ஆனார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் காலமானார் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
இந்தியா என்றொரு தேசத்தின் இன்னொரு பரிமாணத்தை உலகின் கண்களுக்கு காட்டிய மாமேதை அப்துல் கலாம இறைவனடி சேரந்தார்கள்..!
இறைவன் அவரது பாவங்களை மன்னித்து நீடித்த சுவனபதிகளில் தங்கச் செய்வானாக ஆமின்..!
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த அப்துல் கலாம் பெத்தானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உயிர் பிரிந்தது.

ஜனவரி 8 புரச்சியின் கதானாயகா்களில் ஒருவராகிய ராஜித சேனானாரத்ன தற்போது கஹடோவிடாவில்

கம்பஹா மாவட்டத்தில் ஐ.தே.மு சார்பாக 14ம் இலக்கத்தில் போட்டியிடும் வேற்பாளர் சதுர சேனாரத்ன அவர்களுக்கு வாக்குச் சோ்க்கும் முகமாக இன்ற இரவு 10.00 மணி அளவில் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் விஜயம் செய்திருந்தாா்.



ஜனவரி 8 இந்த நாட்டில் ஏற்படுத்ப்பட்ட மாற்றத்தில் அவருடைய புதல்வர் சதுர சேனாரத்ன அவர்களுடைய பங்களிப்பைச் சுட்டிக்காட்டியதோடு, முஸ்லிம் மக்களுக்கு கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட அனர்த்தங்களின் போது எப்படி நான் குரல்கொடுத்தேனோ அதேபோன்று என்னுடைய புதல்வரும் எதிர்காலத்தில் அந்த பாதையில் நிலைத்து நிப்பார் என்று ஆதரவுவைத்தார்.  கடந்த ஆட்சிமாற்றத்தில் முஸ்லிம் மக்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்ததோ அதேபோன்று இந்த தேர்தல் பெறுபேறுகளிலும் உங்களது வாக்குகள் அமையவேண்டியதோடு அவருடைய புதல்வர் சதுர சோனாரத்ன அவர்களையும் ஆதரித்து பாராளுமன்றம் அனுப்புமாறு வேண்டிக்கொண்டார்.


கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை பெற்றுக்கொள்வோம்

சுமார் 70,000 த்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட கம்பஹா மாவட்டத்திலிருந்து விகிதசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு 1989 ஆண்டு முதலாவதாக நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல் தொடக்கம் 2010 ஆண்டு இறுதியாக நடைபெற்ற அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் எமது மாவட்ட முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கவோ முஸ்லிம் கிராமங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கோ எமது மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களின் அரசியல் ரீதியான ஒற்றுமையின்மை அரசியல் விழிப்புணர்வின்மை வாக்களிக்க செல்லாம இருப்பது கட்சியில் போட்டியிடுகின்ற பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கே மூன்று விருப்பு வாக்குகளையும் அளிப்பது அற்ப சொற்ப இலாபங்களை கருதி வாக்களிப்பது போன்ற காரணங்களால் தொடர்ந்தும் எம்மாலே இழக்கப்பட்டுக் கொண்டு வருகின்ற கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை இம்முறையாவது இன்ஷா அல்லாஹ் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்வோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான கௌரவ ரணில் விக்கரமசிங்க அவர்களுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவுப் ஹகீம் அவர்களுக்குமிடையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கம்பஹா மாவட்ட அமைப்பாளரும் எமது மாவட்டத்தின் ஒரே ஒரு முஸ்லிம் மாகான சபை உறுப்பினருமான கௌரவ சாபி ரஹீம் அவர்களை ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் (18ஆம் இலக்கத்தில்) ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பதனை நாங்கள் அனைவரும் அறிவோம்.

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்ட முஸ்லிம் வாக்களர்களில் 99 சதவீதமானவர்கள் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கே வாக்களிப்பதிருப்பதனாலும் 2004 ஆண்டு தொடக்கம் இன்று வரை 3 முறை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் மாகாண சபை உறுப்பினரான கௌரவ சாபி ரஹீம் அவர்கள் தனது 11 வருட பதவிக்காலத்தில் கட்சி, பிரதேச வேறுபாடுகள் இன்றி பல கோடிக்கணக்கான நிதி ஓதிக்கீடுகளின் மூலம் மாவட்டத்தின் அனைத்து முஸ்லிம் கிராமங்களுக்கும் தன்னாலான சேவைகளை செய்துள்ளார். எனவே எமது பெறுமதி முக்க வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்கு அளித்து எமக்கு இருக்கின்ற 3 விருப்பு வாக்குகளின் ஒன்றினை கௌரவ ஷாபி ரஹீம் அவர்களின் வெற்றி இலக்கமாகிய 18 ஆம் இலக்கத்துக்கும் அளித்து கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய மக்கள் காங்கிரஸ் மிகவும் அன்பாய் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

பின்வரும் முக்கியவிடயத்தை பற்றியும் வேட்பாளராகிய கௌரவ சாபி ரஹீம் அவர்கள் கருத்திற்கொண்டு செயற்பட்டால் முஸ்லிம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை இன்ஷா அல்லாஹ் பெற்றுக்கொள்ள முடியும் என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத்தேர்தலிலே தான் மாத்திரமே மீண்டும் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் 4000 விருப்பு வாக்குகளை பெற்று 2ஆம் இடத்துக்கு தெரிவாகும் வேட்பாளருக்கு தனது பதவிக்காலத்தில் இரண்டு வருட காலத்தினை தருவதாக கௌரவ சாபி ரஹீம் அவர்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் வாக்குறுதி அளித்தார். இத்தேர்தலில் போட்டியிட்ட கஹடோவிடையை சேர்ந்த சகோ. முஸ்தாக் மதனி ஹாஜியார் அவர்கள் கஹடோவிட, ஒகடபொல, உடுகொட, திஹாரிய, மல்வான உட்பட ஏனைய முஸ்லிம் கிராமங்களினதும் அமோக ஆதரவுடன் சுமார் 4300 விருப்பு வாக்குகளை பெற்று பட்டியலிலே 2ஆம் இடத்துக்கு தெரிவாரனார். எனவே அளிக்கப்பட வாக்குறுதி சம்பந்தப்பட்ட விடயங்களை கௌரவ சாபி ரஹீம் அவர்கள் தீர்த்து வைக்க வேண்டுமெனவும் அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
கமால் அப்துல் நாஸர் (JP)
முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர்
பொதுச் செயலாளர்
ஐக்கிய மக்கள் காங்கிரஸ்
இல. 86, கஹடோவிட
077 97 10 282

கம்பஹா மாவட்டமும் முஸ்லிம் பிரதிநிதித்துவமும். (By Abdul Careem)

இன்று தேர்தல்களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனேகர் தாம் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவெடுத்திருப்பர். இம்முடிவுகளின் தொகுப்பே இனி வரும் ஐந்தாண்டுகளுக்கு எம்மை ஆளப்போகிறது. இவை சாதாரண முடிவுகளல்ல எம்மை ஆளப்போகும் எமது தலையெழுத்துக்களின் பிரதிகள்.

கம்பஹாவில் UNPல் ஷாபி ரஹீமும் UPFAல் A.H.M நௌசாதும் JVPல் கவுஸ் மொஹிடீனும் போட்டியிடுகின்றனர். இதில் ஒப்பீட்டளவில் ஷாபி ரஹீமுக்கே அதிக விருப்பு வாக்குகள் கிடைக்கும் சாத்தியமுள்ளது. எமது வாக்கு ஒரு அந்நியருக்குப் போவதால் தனிப்பட்ட இலாபங்கள் தவிர்ந்து சமூகத்திற்கான பிரயோசனங்கள் மிகக் குறைவே. கம்பஹாவைப் பொறுத்தவரை ஒரு முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்றைய சூழ்நிலையில் அசாத்தியமே. இருப்பினும் ஷாபி ரஹீமுக்கு இடும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியலுக்கான பேரம் பேசலை வலுப்படுத்த உதவும். எனக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும், ஷாபி ரஹீமுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் இவர்களது பல நகர்வுகள் நான் எனக்கு இயன்ற மட்டங்களில் விமர்சித்தது உண்டு. ஆனால் இன்றைய சூழ்நிலையில் முஸ்லீம் பிரதி நிதித்துவத்தை விட முஸ்லீம் கட்சியொன்றின் பிரதிநிதித்துவம் இன்றியமையாதது. இதுவே எமக்கு பாதகமான பல சட்டங்கள் பாராளமன்றத்தின் மூலம் அமுலாவதை தடுக்க உதவும். பதிருத்தீன் மஹ்மூத், ஷேர் ராஷிக் பரீத் போன்ற தலை சிறந்த அரசியல் தலைவர்களின் மத்தியில் அஷ்ரபின் காலம் அரசியலின் ஒரு மைல் கல்லாகப் பார்க்கப்படக் காரணம் அஷ்ரப் வெறுமனே முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை விடுத்து பலமான முஸ்லீம் கட்சியொன்றின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்தில் நிறுவியதே. இன்றைய அரசியலில் பேரம் பேசலின் மூலம் எமது உரிமைகளை வென்றெடுப்பதே அனுகூலமானது. இது தனி நபரை விட ஒரு கட்சியினால் முன்னெடுக்கவே சாத்தியங்கள் அதிகம் (கடந்த காலங்களிம் முஸ்லீம் கட்சிகளின் பேரம் பேசல் தமக்கான அமைச்சு, பிரதி அமைச்சுப் பதவிகளுடனும் சுருக்கப்பட்டது என்பது என்னவோ கசப்பான அனுபவமே.) 

இறுதியாகவும் சுருக்கமாகவும் 

1.UPFA ற்கு இடும் ஒவ்வொரு வாக்கும் பட்டுப்போய்கொண்டிருக்கின்ற மகிந்த எனும் விசக்கொடிக்கு ஊற்றப்படுகின்ற நீர் துளிகளாக அமையலாம்.

2.JVP ற்கு இடும் வாக்குகள் அவர்களது 10 உடன் சேர்ந்த 11 ஆவது வாக்காகவே அமையும். இன்னும் இவர்கள் விருப்பு வாக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் JVPன் முஸ்லீம் வேட்பாளருக்கு இடும் வாக்கால் பெரிய அழுத்தங்கள் உருவாகப் போவதில்லை.

3.UNP ன் அந்நியர் ஒருவருக்கு இடும் வாக்கால் அவர் சார்ந்த பிரதேச முஸ்லீம்களுக்கே சாதகங்கள் ஒலிய இலங்கையின் முஸ்லீம் சமூகத்திற்கும் பெரியளவில் சாதகங்கள் இருக்கப் வாய்ப்பில்லை.

4.ஷாபி ரஹீமிற்கு இடும் வாக்குகளால் ஒன்று அவரது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உறுதியாகும் அல்லது முஸ்லீம் காங்கிரசுக்கான தேசிய பட்டியல் பேரம் பேசலுக்கு உருதுணையாக அமையும்.

இவற்றில் முன்னைய மூன்றை விடவும் நான்காவது ஒப்பீட்டளவில் சிறந்தது. ஏனெனில் இது ஒரு முஸ்லீம் கட்சியின் இருப்பை உறுதிப்படுத்தும்.

(நாம் எமது ஒவ்வொரு வாக்கையும் இட எமது சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் இவ்வளவு சித்திக்கும் போது ஷாபி ரஹீமும் முஸ்லீம் காங்கிரசும் தமது அற்ப இலாபங்களுக்கு அப்பால் ஒரு பொதுத்தளத்தில் சமூக நலன்களுக்காக வஞ்சகம் இல்லாமல் சிந்திப்பது மாபெரும் கடமையாகும்.)

சகோதரி பாதிமா நஜுமூர்ரிலா அவா்கள் காலமானார்

கஹடோவிடாவைச்  சோ்ந்த  மர்ஹும் இ. மா. மஹ்மூது் லெப்பை மத்திச்சம் அவா்களின் மகன் மா்ஹும் கவுஸ் ஹாஜியாா் அவா்களின் அன்பு மனைவி பாதிமா நஜுமூர்ரிலா அவா்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் ரிஸ்வான், ரிழ்வான், ரிபாஸ், பாதிமா ரினொஸா அகியோரின் அன்புத் தாயாரும், அல்ஹாஜ் இக்பால், ரிஸ்மியா, சர்மிலா அகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (23.07.2015) இரவு 9.00 மணியளவில் முகியத்தீன்  ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار    

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

முகமது நபி வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்த குரானின் எழுத்துப் பிரதி பர்மிங்ஹாமில்

1400 ஆண்டுகளுக்கு முன்னர் முஹம்மது நபி (ஸல்) காலத்தில் கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பழைமையான குர்ஆனை இங்கிலாந்தில் உள்ள பிரிமிங்கம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ரேடியோகார்பன் பரிசோதனைக்கு இந்த குர்ஆனை உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், இது கி.பி. 568 மற்றும் 645-க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கும் என 95.4 சதவீதம் அளவுக்கு துல்லியமாக கணித்துள்ளனர்.
எனினும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் முஹம்மது நபி(ஸல்) வாழ்ந்த சமகாலத்தில் கி.பி. 570 மற்றும் 632-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த குர்ஆன் எழுதப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இந்த குழுவிடம் கிடைத்துள்ள அந்த குரானின் இரண்டு பக்கங்களும் பண்டைக்காலத்தில் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட தோலின் மீது, அரபு மொழியின் முந்தைய மொழி வடிவமான ஹிஜாஸி மொழியில் மையினால் வசனங்களாக எழுதப்பட்டுள்ளது.
அந்த இரு பக்கங்களிலும் குர்ஆனின் 18 முதல் 20 வரையிலான சூறாக்களின் (அத்தியாயம்) வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பிரதியை எழுதியவர் இறைதூதர் முகமதுவை கண்டும் கேட்டும் இருந்த ஒருவராக இருந்திருப்பார் என பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
Extract from the manuscript
Extract from manuscript

மின்னல் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையாளரினால் தடை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளருமான ஜே. ஸ்ரீ ரங்காவினால் சக்தி டி.வியில் நடத்தப்படும் மின்னல் அரசியல் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் இன்று தடை விதிக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீடினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து பாராளுமன்றத் தேர்தல் காலப் பகுதியில் குறித்த நிகழ்ச்சியினை சக்தி டி.வியில் ஒளிபரப்ப முடியாது எனவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார். பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை ராஜகரியவிலுள்ள தேர்தல் செயலகத்தில் இடம்பெற்றது. பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஜே. ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஜே. ஸ்ரீ ரங்காவினால் சக்தி டி.வியில் நடத்தப்படும் மின்னல் அரசியல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தார். அத்துடன் ஒரு அரசியல் கட்சியின் பொதுச் செயலாளரும், அரசியல் கட்சியொன்றினால் முன்மொழியப்பட்டுள்ள தேசிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவருமான  ஜே. ஸ்ரீ ரங்காவினால் எவ்வாறு மின்னல் அரசியல் நிகழ்ச்சியினை நடத்த முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதன்போது குறிக்கிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா, "முல்லைத்தீவு மாவட்ட உள்@ராட்சி மன்ற தேர்தலிலிருந்து ஒவ்வொரு தேர்தலின் போதும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் மாத்திரம் தன்னால் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாக" குறிப்பிட்ட அவர், இது நியாயமற்றது என்றார்.
எவ்வாறாயினும், குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதனை பாராளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டார். எனினும், "சில மின்னல் நிகழச்சிகள் ஏற்கனவே பதிவுசெய்துள்ளதாகவும் அவற்றினை மாத்திரம் ஒளிபரப்புவதற்கு அனுமதி வழங்குமாறு" முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கோரிக்கை விடுத்தார்.
முன்கூட்டி பதிவுசெய்யப்பட்டுள்ள மின்னல் நிகழ்ச்சிகளை பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.முஹம்மட் பார்வையிட்டு அனுமதி வழங்கினால் மாத்திரமே ஒளிபரப்ப முடியும் என தேர்தல் ஆணையாளர் இதற்கு பதலளித்துள்ளார்.
அத்துடன் இன்றிலிருந்து புதிதாக எந்தவொரு மின்னல் நிகழ்ச்சியினையும் புதிதாக பதிவுசெய்ய முடியாது எனவும் தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டார்.  
ஜே. ஸ்ரீ ரங்காவினால் சக்தி டி.வியில் நடத்தப்படும் மின்னல் அரசியல் நிகழ்ச்சிக்கு  சமூக ஊடகங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கஹடோவிடா அல்பத்ரியா மைதானத்தின் நோன்புப் பெருநாள் நிகழ்வுகள் (Photos)













நீர்கடுப்பு எதனால் ஏற்படுகிறது.?அது வராமல் தடுக்கும் முறைகள் என்ன.?

ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது. எல்லாப் பருவத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
என்ன காரணம்?
உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைகாலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது; கடுக்கிறது.
கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் சீக்கிரம் நீரிழப்பு ஏற்பட்டுவிடும். நம் உடலில் போதுமான அளவு திரவம் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அப்போது சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். குளிர்காய்ச்சல் வரும்.
சிறார்கள், அலுவலகம் செல்பவர்கள், வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள், நீண்ட பயணம் மேற்கொள்பவர்கள், முதியோர் என யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்துவிட்டால், உடனடியாகச் சிறுநீர் கழித்துவிட வேண்டும்.
நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும். இவை தவிர மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
சிறுநீர்ப் பாதையில் கல்
சிறுநீரகத்தில் தொடங்கிச் சிறுநீர்ப் புறவழிவரை சிறுநீர் செல்லும் பாதையில் கல் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்று இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளலாம்.
கல் நகரும்போதும் சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும், வயிற்றில் வலி உண்டாகும். முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையான வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சில நேரம் அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி தொடங்கி, சிறுநீர் வெளியேறு கிற புறவழித் துவாரம்வரை பரவும்.
சிறுநீர்ப்பை பிரச்சினைகள்
சிறுநீர்ப் பையில் தொற்று ஏற்பட்டு வீக்கம் உண்டாகும்போது, நீர்க்கடுப்பு ஏற்படும். இங்கு கல், காசநோய், புற்றுநோய் என எது தாக்கினாலும் நீர்க்கடுப்புடன், சிறுநீரில் இரத்தம், சீழ் வெளியேறுதல், குளிர் காய்ச்சல், வாந்தி, வலி போன்ற துணைப் பிரச்சினைகளும் சேர்ந்துகொள்ளும்.
புராஸ்டேட் வீக்கம்
புராஸ்டேட் வீக்கமும் புற்றுநோயும், ஆண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்பட முக்கியக் காரணங்களாக அமைகின்றன. வழக்கத்தில் வழக்கமாக, நடுத்தர வயதைக் கடந்தவர்களுக்கே இந்த மாதிரியான பிரச்சினைகளால் நீர்க்கடுப்பு வருகிறது. இவர்களுக்கு சிறுநீர் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகப் போகும். மிதமான வேகத்தில் போகும். ஒருமுறை சிறுநீர் கழிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். எத்தனை முறை போனாலும் சிறுநீர் முழுவதுமாகப் போய்விட்ட திருப்தி இருக்காது. இன்னமும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு இருந்துகொண்டே இருக்கும்.
சுய சுகாதாரம் முக்கியம்
சிறுநீர் வெளியேறுகிற பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளத் தவறினால், சிறுநீர்க் கடுப்பு ஏற்படும். குறிப்பாக, குழந்தைகளுக்கும் புதுமணத் தம்பதிகளுக்கும் இந்தக் காரணத்தால்தான் அடிக்கடி நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. மேகவெட்டை (கொனோரியா) போன்ற பால்வினை நோய்கள் தாக்கினாலும், சிறுநீர்ப் புறவழி அழற்சி அடைந்து நீர்க்கடுப்பை உண்டாக்கும்.
சிறுநீர்த் தாரையில் கல் அடைத்துக்கொண்டாலும், அந்தப் பாதை சுருங்கிவிட்டாலும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. இவர்களுக்குச் சிறுநீர் சொட்டுச் சொட்டாகப் போகும். சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாகவோ, கருப்பாகவோ மாறும்.
பெண்களுக்குரிய பிரச்சினைகள்
கர்ப்பப்பைக் கட்டிகள், சினைப்பைக் கட்டிகள், அடி இறங்கிய கருப்பை போன்றவை சிறுநீர்ப் பையை அழுத்தும்போது பெண்களுக்கு அடிக்கடி நீர்க்கடுப்பு ஏற்படுவதுண்டு. மேகவெட்டை நோய் வந்த பெண்களுக்குச் சிறுநீர்க் கடுப்பு நிறைய தொல்லை தரும்.
மாத்திரை மருந்துகள் கவனம்!
வலி நிவாரணி மாத்திரைகள், சல்பா மருந்துகள், ஆக்சாலிக் அமிலம் கலந்த மருந்துகள், வீரியம் மிகுந்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவை நீர்க்கடுப்பை ஏற்படுத்தும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறினால் சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட வழி அமைக்கும். அதன் விளைவாக, நீரிழிவு உள்ளவர்களுக்கு நீர்க்கடுப்பும் அடிக்கடி தொல்லை தரும்.
பரிசோதனைகள் என்ன?
சிறுநீர்க் கடுப்புக்குச் சிறுநீரைப் பரிசோதித்தாலே காரணம் புரிந்துவிடும். இத்துடன் வயிற்றுப் பகுதியில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன் பரிசோதனைகளைச் செய்துகொண்டால் முழுமையான காரணங்களைத் தெரிந்து கொள்ள முடியும். இதைக்கொண்டு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதையும் முடிவு செய்துவிடலாம். அடிப்படைக் காரணத்தைக் களையும் சிகிச்சைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய சமாதான முன்னணியில் போட்டியிடுகின்றர் சகோதரர் ஸுஹைல் முகமட்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில்
ஐக்கிய சமாதான முன்னணியில் போட்டியிடுகின்ற
'ஐக்கிய மக்கள் காங்கிரஸின் (UPC) தலைவர்:-
M. SUHAIL MOHAMAD,
பொதுச் செயலாளர் 
KAMAAL ABDUL NAASAR (JP),
தேசிய அமைப்பாளர்
M.H.M KIYAS ஆகியோர்
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வெளியேருவதை காணலாம்.


ஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம்..

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
‘ஸகாதுல் ஃபித்ர்’ என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.
எவ்வளவு? எவர்களுக்காக?
‘ரமழானில் இருந்து விடுபடுமுகமாக ‘ஸகாத்துல் பித்ரை’ அனைத்து மனிதர்கள் மீதும் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம்பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை சுதந்திரமானவன், அடிமை, ஆண், பெண் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் வழங்க வேண்டும் என விதித்தார்கள்’
அறிவிப்பவர் : அலி இப்னு உமர்(ஸல்),
நூற்கள் :புகாரி, முஸ்லிம், முஅத்தா.
”ஒரு ‘ஸாஉ’ உணவு, அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை, அல்லது ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம் அல்லது ஒரு ‘ஸாஉ’ தயிர் அல்லது ஒரு ‘ஸாஉ’ வெண்னை என்பவற்றை ஸகாதுல் ஃபித்ராவாக நாம் வழங்குபவராக இருந்தோம்’ என அபூ ஸயீதில் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).
‘ஸாஉ’ என்பது நடுத்தரமான ஒரு மனிதரின் கைகளால் நான்கு அள்ளு அள்ளி வழங்குவதைக் குறிக்கும். இது அறபுகளிடம் காணப்பட்ட ஒரு அளவீட்டு முறையாகும். சாதாரணமாக அரிசி என்றால், ஒரு ‘ஸாஉ’ என்பது 2.3 kg. ஐக் குறிக்கும் என்பர்.
இந்த அளவு உணவையோ, உணவுத் தானியத்தையோ வழங்கவேண்டும். பெருநாள் செலவு போக மீதமிருக்கும் அளவு பொருளாதாரம் உள்ள அனைவரும் இதை வழங்கவேண்டும். ஒருவர் தனது பொறுப்பிலுள்ள அனைவருக்காகவும் இதை வழங்கவேண்டும்.
உதாரணமாக, ஒருவரிடம் மூன்று பிள்ளைகள், ஒரு மனைவி இருக்க, அவரது பொறுப்பில் அவரது பெற்றோர்களுமிருந்தால் தனது மூன்று பிள்ளைகள், தான், தனது மனைவி, பெற்றோர் இருவரும் என மொத்தமாக ஏழு பேர்களுக்காக ஏழு ‘ஸாஉ’ உணவு வழங்க வேண்டும். எனவே, இந்த ஸகாத் அனைவர் மீதும் விதியாகின்றது! சிறுவர்கள், வாய்ப்பற்ற முதியவர்கள் என்பவர்களுக்கும் விதியாகின் றது. அதை அவர்களது பொறுப்புதாரிகள் நிறை வேற்ற வேண்டும்.
எப்போது? எதற்காக!
‘நோன்பாளி வீண் விளையாட்டுக்கள், தேவையற்ற பேச்சுக்கள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால், அதற்குப் பரிகாரமாக அமைவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக அமைவதற்காகவும்’ ‘ஸகாதுல் பித்ரை’ நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
‘யார் பெருநாள் தொழுகைக்கு முன்னர் அதை வழங்கினாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘ஸகாத்’தாகும். யார் தொழுகைக்குப் பின்னர் அதை வழங்கினாரோ அது (சாதாரணமாக) வழங்கப்பட்ட ஒரு தர்மமாகக் கணிக்கப்படும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அபூ தாவூத், இப்னு மாஜா).
இந்த நபி வழி ‘ஸகாதுல் பித்ரா’வின் நோக்கம், அது வழங்கப்பட வேண்டிய கால எல்லை என்பவற்றை விபரிக்கின்றது.
நோன்பாளிக்கு நோன்பில் ஏற்பட்ட குறைகளுக்குப் பரிகாரம் என்பது முதல் காரண மாகும்.
நோன்பு கடமையான சிறுவர்களுக்காகவும் ‘ஸகாதுல் ஃபித்ர்’ வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு முதல் காரணம் பொருந்தாவிட்டாலும், பெருநாள் தினத்தில் ஏழை, எளியவர்கள் யாரும் உண்ண உணவு இன்றி இருக்கக் கூடாது, என்பது இரண்டாவது காரணமாகும். இது இவர்களுக்கும் பொருந்தும்.
இதனை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் வழங்கிவிட வேண்டும். இது வழங்கப்பட வேண்டிய நேரத்தின் இறுதிக் காலமாகும். பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர், இதனை வழங்குபவராக இப்னு உமர்(ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். (அபூதாவூத்).
மற்றுமொரு அறிவிப்பில், இது ஸஹாபாக்களின் நடைமுறையாக இருந்தது என்ற கருத்தைப் பெறமுடிகின்றது. ‘அதை பெற்றுக் கொள்பவர்களுக்கு நாம் வழங்குபவர்களாக இருந்தோம். நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அதை வழங்கு பவர்களாக இருந்தார்கள்.’ (புகாரி)
எனவே, பெருநாளைக்கு ஓரிரு தினங்க ளுக்கு முன்னர் இருந்து இதை வழங்க ஆரம் பிக்கலாம்.
எங்கே? எவர்களுக்கு?
‘ஸகாதுல் பித்ரை’ அவரவர் வகிக்கும் பகுதிக்கே விநியோகிக்க வேண்டும். அதுவும் ஏழை எளியவர்களுக்கு மட்டுமே விநியோகிக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் இதை கூட்டாக சேகரித்து வழங்கியுள்ளார்கள். சிலர் ‘ஸகாதுல் பித்ரா’ என்ற பேரில் ‘பித்ரா’ கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு ‘பித்ரா’ வழங்குவது பொருத்தமல்ல. சொந்த ஊரிலுள்ள ஏழைகளுக்கு வழங்கி மீதமிருந்தால் வெளியூர் ஏழைகளுக்கு வழங்கலாம். அஃதின்றி வெளியூர்களிலிருந்து ‘பித்ரா’ கேட்டு வருபவர்களுக்கு ஒரு சுண்டு இரு சுண்டு அரிசி அல்லது சில்லறை வழங்குவது ‘பித்ரா’வில் அடங்குமா என்பது சிந்திக்க வேண்டியதாகும்.
எதை வழங்குவது?
‘ஸகாதுல் பித்ரா’வாக ஒரு ‘ஸாஉ’ உணவுக்கான பணத்தை வழங்க முடியுமா? எனற விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் நிகழ்கின்றது.
பெரும்பாலான அறிஞர்கள் உணவுப் பொருளையே வழங்க வேண்டும் என்கின்றனர். இது ஒரு இபாதத்தாக இருப்பதால் இபாதத்தை ஏவப்பட்ட விதத்தில் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்காமல் செய்வது தான் சரியானது என்ற அடிப்படையில் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.
பணத்தையும் ‘பித்ரா’வாக வழங்கலாம் எனக்கூறுவோர் ஏழைகளுக்கு இது நன்மையாக அமையும் என்ற காரணத்தைக் கூறி இதை ஆமோதிக்கினறனர். இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் இக்கருத்தைக் கொண்டுள்ளார்.
இதில் முதல் கருத்தே மிகவும் பொருத்தமானதாகத் திகழ்கின்றது. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பலின் மகன் ‘எனது தந்தை ‘ஸகாதுல் பித்ரா’வுக்குப் பகரமாக அதன் அளவுக்குப் பணம் வழங்கப்படுவதை வெறுப்பவராக இருந்தார். பணம் வழங்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாமோ என நான் அஞ்சுகின்றேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
(அல் மஸாயினுல் இமாம் அஹ்மத்., பக். 171 அல்மஸஅலா., 647)
இமாம் இப்னு குதாமா அவர்களும் இது அங்கீகரிக்கப்படாது ‘தவி முஃனி’யில் குறிப்பிடுகின்றார்.
இமாம் ஷவ்கானி அவர்களும் குறிப்பிட்ட பொருளிலிருந்து தான் ‘ஸகாதுல் ஃபித்ர்’ வழங்கப்பட வேண்டும். குறித்த பொருள் இல்லாத போது, அல்லது ஏதேனும் ஒரு நிர்ப்பந்தத்தால் அன்றி அதன் பெறுமதிக்குப் பணம் வழங்க முடியாது என்ற கருத்தை வலியுறுத்துகின்றார்கள். குறித்த ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ வழங்கப்படவேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து ‘ஸாஉ’ என்ற அளவு தான் முக்கியம். அதன் பெறுமதி கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்பது புலப்படுகின்றது என இமாம் நவவி (ரஹ்) அவர்கள் ‘ஷரஹ் ஸஹீஹ் அல் முஸ்லிமில் குறிப்பிடுகின்றார்கள். அத்துடன் ‘அல் மஜ்முஉ’விலும் இக்கருத்தை விளக்கியுள்ளார்கள்.
இமாம் அபூ ஹனீபா அவர்கள்தான் பணத்தை வழங்கலாம் என்று கூறியுள்ளார்கள். ஏனைய அறிஞர்கள் உணவுத் தானியங்களை வழங்க வேண்டும் என்றும், ஏதேனும் நிர்ப்பந்தம் இருந்தால் மட்டும் பணத்தை வழங்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
ஒரு ஆட்டை அல்லது மாட்டை ஸகாத் கொடுக்கவேண்டும் எனும் போது, அதன் பெறுமதியைக் கொடுப்பது கூடாது என்பது போல், இதுவும் கூடாது என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். இவ்வாறே, இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறித்த பொருட்களின் அளவு ஒரே அளவாக இருந்தாலும் பணமாக கணக்கிடும் போது, அதன் அளவுகள் மாறுபடும். எனவே,
(1) ‘ஸகாத்துல் ஃபித்ர்’ இபாதத்தாக இருப்பதால் அதைக் குறிப்பிட்ட விதத்திலேயே செய்ய வேண்டும்.
(2) ஏழைகளின் நலன் நாடியே பணத்தை வழங்கலாம் என்று கூறப்படுகின்றது. தெளிவான ஆதாரம் இருக்கும் போது, ‘இஜ்திஹாத்’ செய்வதற்கு இடம் இல்லை.
(3) நபித்தோழர்களுக்கு மத்தியில் ஏராளமான ஏழைகள் இருந்தபோதும், அவர்கள் உணவுத் தானியங்களையே வழங்கினர். பணத்தை வழங்கவில்லை. எனவே, இது பின்னால் வந்ததொரு கருத்தாகவும், நடைமுறையாகவும் திகழ்கின்றது.
(4) நபி(ஸல்) அவர்களும், கலீபாக்களும் உணவு வழங்கிய நடைமுறைக்கு இது முரண்பட்டதாகும். நிர்ப்பந்த நிலைகளில் அனுமதிக்கப்பட்ட பணம் வழங்கலாம் என்ற கருத்து இன்று ‘பித்ரா’ வாகப் பணம் தான் வழங்கப்படவேண்டும் என்ற அளவுக்கு, சுன்னாவை மிஞ்சி வளர்ந்துவிட்டது.
எனவே ‘பித்ரா’வை உணவாகவே வழங்க வேண்டும். என்றாலும் நிர்ப்பந்தமான, தவிர்க்க முடியாத நிலையில் இருப்பவர்கள் மட்டும் மாற்று வழிகளைக் கைக்கொள்ளலாம்.
ஒரு ஆலோசனை:
ஏழைகளுக்கு உணவை வழங்குவது அவர்களுக்குப் போதியதாக இருக்காது என்று கருதுபவர்கள் ‘பித்ரா’வாக குறித்த அளவுக்கு உணவை வழங்கி விட்டு மேலதிக தர்மமாக வேண்டுமானால் பணத்தையோ, வேறு பொருட்களையோ வழங்கலாம். பணத்தை ‘ஸகாதுல் பித்ரா’வாக ஆக்காமல், உணவை ‘ஸகாதுல் பித்ரா’வாக ஆக்கி, பணத்தை மேலதிக தர்ம மாக ‘ஸதகா’வைச் செய்யலாம். இது அவசியம் என்பதற்காகக் கூறப்படவில்லை. அதிக வசதியுள்ளவர்கள், ஏழைகள் மீது அனுதாபம் கொண் டவர்கள் அதற்காக மார்க்க நிலைப்பாட்டில் மாற்று முடிவு எடுக்காது, செயல்படுவதற்காகவே இவ்வாலோசனையாகும்.
-அல்லாஹ்வே மிக அறிந்தவன்-
நன்றி: உண்மை உதயம் மாதஇதழ் 2007

மஹிந்தவுக்கு சவால் விடுக்கும் வகையில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்ட பின்னர் அதிருப்தியடைந்த ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கிய தரப்புக்கள், கூட்டமைப்பில் இருந்து விலக தீர்மானித்துள்ளன.
இதனையடுத்து அந்த தரப்புக்கள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன.
அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, துமிந்த திஸாநாயக்க, அர்ஜூன ரணதுங்க ஆகியோர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்து தமது முடிவை அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இந்த அணியினர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் முன்னணி ஒன்றை அமைப்பதற்கான பேச்சுக்களில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரின் கீழ் புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கப்பட்டு அதுவே மஹிந்த ராஜபக்சவின் தரப்புக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும்.
இதன்கீழ் சம்பிக்க ரணவக்க மற்றும் ஹிருனிக்கா பிரேமசந்திர ஆகியோர் கொழும்பில் போட்டியிடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவுக்கு எதிரான நல்லாட்சி ஐக்கிய தேசிய முன்னணியில் மேலும் பலர் இணைவு
மஹிந்தவுக்கு எதிரான நடவடிக்கையின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து மேலும் பலர் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணையவுள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சியின் கீழ் பொதுத்தேர்தலில் இவர்கள் போட்டியிடவுள்ளனர்.
ஏற்கனவே இந்த முன்னணியில் அர்ஜூன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க, ராஜித சேனாரத்ன, ஹிருனிக்கா, ரத்தன தேரர், ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
தற்போது அது விரிவாக்கப்பட்டு எஸ். பி.திஸாநாயக்க, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, பியசேன கமகே, சரத் அமனுகம, ரெஜினோல்ட் குரே, சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே, நியூமல் பெரேரா ஆகியோர் புதிய அணியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இவர்கள் புதிய முன்னணியில் இணைந்து கொள்வதற்கு முன்னர், ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வேட்புமனுவில் கைச்சாத்திட்டமையை திரும்பப் பெற்றுக்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இந்த வாரம் லண்டனில் இருந்து நாடு திரும்பியவுடன், விசேட அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தின் கீழ் பௌத்த பிக்குகள் போட்டியிட முடியாது என்று யாப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அத்துரலியே ரத்தனவின் விடயம் தொடர்பில் தீர்வுக்காணப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை இஸ்லாம் ஆளும் .... ! இன்ஷாஅல்லாஹ்....!!

உலகில் முதலாளித்துவத்திற்கு சவால் விடும் ஒரே சித்தாந்தம் இஸ்லாமாகும். கம்யூனிஸம் கூட இன்று திரை மறைவு முதலாளித்துவ அச்சினிலேயே நகர்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய தேசங்களின் பொருளாதாரங்களை கட்டுப்படுத்தும் யூதர்களும் இலுமினாட்டிகளும் பயப்படுவது வட்டிக்கு எதிரான இஸ்லாத்தின் சமூக சித்தாந்தகளிற்கும் அதன் பொருளாதார முறைமைக்குமாகும். ஆனால் சிகப்பு தேசம் எதற்காக இஸ்லாத்தை தன் நாட்டில் ஒடுக்க முனைகிறது..?   

தனது இராணுவ பூட்சுகளை பாதுகாப்பு என்ற பெயரில் ஷின்-ஷியாங்கின் மூலை முடுக்கெல்லாம் பதிக்க முனைகிறது..?. கன்பூஷியஸ் பாதையில் சில ஒழுக்க நெறிகளே உள்ளன. அடுத்தவரை துன்புறுத்தாமை, பொருமை காத்தல், மூத்தோரை மதித்தல், பலவீனர்களுடன் அன்பாக இருத்தல், தியானத்தில் மன நிம்மதியை தேடுதல் என அதன் அறவழிகள் தொடர்கின்றன. குற்றவியல் பற்றியோ, சிவில் பிரச்சனைகள் பற்றியோ, அரசியல் கொள்கைகள் பற்றியோ எதுவும் சொல்லவில்லை. ஒவ்வொரு சீனானும் இதற்கு பகரமாக மனசாட்சியையே தங்கள் வழிகாட்டியாக கொள்ள வேண்டும். இங்கே தான் சீன அரசிற்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது.    

எதுவுமே இல்லாத சிந்தாந்த குளருபடிகள் உள்ள சீனமக்கள் பொருளாதார தேசமாக உலகை மிகைக்க முற்பட்ட போது அவர்களின் ஆன்மீகம், லொகீகம் இரண்டையும் பலன்ஸ் பண்ணும் நியூட்ரல் ரிலிஜன் இல்லாததன் குறையை நிறையவே உணர ஆரம்பித்தனர். ஷின்-ஷியாங்கின் இஸ்லாம் அவர்களை ஆகர்ஷிக்க முனைந்தது. ஆன்மீக தேடலில் ஆரம்பித்த அவர்களது மதத்திற்கான பயணம் இஸ்லாமிய அரசியல் கொள்கை வரை சென்றது. இங்கு தான் பிரச்சனையின் மையப்புள்ளி ஆரம்பமாகிறது.   


அபூஜஹலின் மூளை இயல்பாகவே உணர்ந்து கொண்ட அந்த எச்சரிக்கையின் ஓசையை சீன உளவுப்பிரிவு கண்டறிய நிறைய வருடங்கள் பிடித்துள்ளன. மக்கள் குடியரசு, மக்கள் இராணுவம், மக்கள் பாராளுமன்றம், மக்கள் நீதிமன்றம், மக்கள் சுப்ரீம் கவுன்ஸில் என்று மாவோ சேதுங் ஏமாற்றிய அதிகார அரசியல் இஸ்லாத்தின் அரசியல் கொள்கை சீனாவில் எங்கேயும் எப்போதும் பரவக்கூடாது என்பதில் குறியாக செயற்படுகிறது.   

 ஷின்-ஷியாங்கில் அது குவித்துள்ள செஞ்சேனை இராணுவ உளவாளிகளில் பாதிப் பேர் கூட சீனாவின் ஏணைய மாகாணங்களில் செயற்படவில்லை. இஸ்லாம் சொல்லும் அதிகாரத்தின் மையப்புள்ளியை அவர்கள் உணர்ந்த கொண்டதன் விளைவு இது. நோன்பில் கூட முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகைக்கு ஒன்று கூடுவது அவர்களிற்கு அவர்களின் சகோதர பலம் பற்றிய பயத்தை உருவாக்கியுள்ளது. அதனால் தான் ஏராளம் தாராளமான தடைச்சட்டங்கள்.   

முஸ்லிம்களின் சின்ன சின்ன உரிமைகளிற்கான போராட்டங்களை கூட தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் இரும்புக் கரம் கொண்ட நசுக்குகிறது. செயற்பாட்டாளர்களை இராஜ துரோகிகள், உளவாளிகள் என்ற பெயரில் அழைத்து வந்து பொதுமக்கள் முன் மண்டியிட வைத்து தலையின் பிடரியில் சுட்டு அரச கட்டளைகளை நிறைவேற்றுகிறது.    

ஆனால் அதையும் தாண்டி இன்றை சேர்வேயின் புள்ளிவிபரங்கள் என்ன சொல்கிறது தெரியுமா!. 30 வயதிற்கு குறைந்த சீனர்களில் 22.4% மானவர்கள் இஸ்லாத்தின் பக்கம் கவரப்பட்டு முஸ்லிம்களாக மாறி வருகின்றனர் என்பதே. சீனாவில் முஸ்லிம் சிறுபான்மை இனக் குழுக்களாகவேயுள்ளனர். சீனப்பெண்களே இஸ்லாத்தை நேசித்து பெரிதும் மதம் மாறுகின்றனர். சீன அரசின் குடும்பகட்டுப்பாடுகளை புறந்தள்ளி அவர்கள் பல குழந்தைகளை பெறுகின்றனர். இவர்களிற்கு பிறப்பவை அனைத்தும் முஸ்லிம் குழந்தைகளாகவே பிறக்கின்றன.   


60 வயதினை கடந்தவர்கள் தான் மன அமைதி நாடி புத்த மதத்தையும் தாவோயிஸத்தையும் பின்பற்ற முனைகின்றனர். அதாவது உற்பத்தி திறன் குறைந்த வினையாக்க திறன் குறைந்த ஓய்வு பராயத்தினர் தான் அப்படிச் செல்கின்றனர். உழைக்கும் இளம் சீன இரத்தம் இஸ்லாத்தை நாடுகிறது. இது இறைவன் வகுத்த விதி. இது தான் அவர்களின் டெஸ்டினி. இதை எந்த சட்டம் கொண்டு செஞ்சீன அரசு நிறுத்தப் போகிறது. ஸைஃய்த் இப்னு அபீவக்காஸ் (ரலி) விதைத்த இஸ்லாம் அல்லவா அங்குள்ளது நம் தேசத்திற்கு இஸ்லாம் வந்தது போலல்லாமல்..........!!! 

நன்றி  by கைபர் தளம் .

பாரூக் அப்பா (போஸ்ட் மாஸ்டா்) அவா்கள் காலமானர்

கஹடோவிடாவைச்  சோ்ந்த  போஸ்ட் மாஸ்டர் என புணைப்பெயரல் அழைக்கப்படும் சகோதரர் பாரூக் அவர்கள்  இன்று (06.07.2015) காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் உம்முல் ஹைரா அவர்களின் அன்புக் கணவரும், பயாஸ் நானா, அஸாம், விலாயா, ரஸினா, ரிஹானா ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் முகியத்தீன்  ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار   

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

Florida நீதிமன்றில் ஒரு சுவாரஸ்சியமான சம்பவம்.

அண்மையில் Florida வில் ஒரு சுவாரஸ்சியமான சம்பவம் நடந்திருக்கின்றது.
ஒரே வகுப்பில் படித்த இருவர் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள் ஒருவர் நீதிபதியாக, மற்றவர் குற்றவாளியாக.
தீர்ப்பு வழங்குமுன் அங்கிருந்த பெண் நீதிபதி நீங்கள் Nautilus Middle என்ற கல்லூரியில் என்னோடு ஒன்றாகப் படித்த நண்பர்தானே என்று குற்றவாளியுடன் அறிமுகமாகின்றார்.
தனது பாடசாலை நண்பிதான் நீதிபதி என்று அறிந்து கொள்ளும் குற்றவாளி கண்ணீர்விட்டு அழுகிறார்.
பின்னர் அந்த பெண் நீதிபதி: உங்களை இப்படி சந்திக்கக் கிடைத்ததை எண்ணி நான் மிகவும் வருத்தமடைகிறேன்.
எமது கல்லூரியில் இருந்த சிறந்த Foot Ball வீரர் இவர். கல்லூரிக் காலத்தில் மிகத் திறமையான மாணவர் என்று அந்த குற்றவாளி நண்பரை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினார் நீதிபதி.
அதோடு உங்களது பாதையை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறி தனது நண்பருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
ஒரு நல்ல நிலமைக்கு வந்ததும் ஒன்றாக இருந்த நண்பர்களை கண்டும் காணமல் இருப்பவர்களுக்கு மத்தியில் ஒரு நீதிபதியாக இருந்து கொண்டு ஒரு குற்றவாளியை தனது நெருங்கிய நண்பர் என்று அறிமுகம் செய்த அந்த பெண் நீதிபதியின் பன்பு அழகானது.
வீடியோ பார்க்க  https://www.youtube.com/watch?v=5gBWlFGzGWs