கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எமது பள்ளிவாசல்களில் இம்முறையும் கூட்டு உழ்ஹிய்யா 2013



கடந்த வருடங்களைப் போல் இம்முறையும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் கூட்டாக குர்பானி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை கஹட்டோவிட பள்ளிவாசல்கள் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வகையில் முஹியத்தீன் பள்ளிவாசலும் மஸ்ஜிதுன் நுர் பள்ளி வாசலும் இணைந்து கூட்டாகக் குர்பானி கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வழமைபோன்று மஸ்ஜித் ஜாமிஉ  பள்ளிவாசலிலும் கூட்டுக்குர்பானி கொடுக்க சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைக்கிடைக்கின்றது.

தனியாக குர்பான் கொடுக்க விரும்புபவர்கள் தனியாகவும், ஏழு பேர் கொண்ட குழுவில் ஒரு பங்குதாரராகவும் நீங்கள் இணைந்துகொள்வதன் மூலம் இந்த கூட்டுக் உழ்ஹியாவில் சேர்ந்துகொள்ளலாம். பங்களிப்புச் செய்வதற்கு ஆர்வமாக உள்ளவர்கள் பள்ளிவாசல் நிர்வாகங்களை தொடர்புகொண்டு உங்கது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

  • முஹியத்தீன் பள்ளிவாசலும் மஸ்ஜிதுன் நுர் பள்ளி வாசல்
ஏழு பேர் கொண்ட குழுவில் 10.10.2013 திகதிக்கு முன்னர் 6000 ரூபா செலுத்தி ஒரவரது பங்கினை பதிவுசெய்துகொள்ளலாம்.
  • மஸ்ஜித் ஜாமிஉ  பள்ளிவாசல்
ஏழு பேர் கொண்ட குழுவில் 13.10.2013 திகதிக்கு முன்னர் 8000 ரூபா செலுத்தி ஒரவரது பங்கினை பதிவுசெய்துகொள்ளலாம்

இக் கூட்டுக் குர்பானியினால் முன்னர் போலன்றி சகலருக்கும் குர்பான் இறைச்சி கிடைப்பதுடன் வசதியற்றவா்களும் 7 நபர்கள் சோ்ந்து குா்பான் கொடுக்கும் வாய்ப்பும் கிட்டியுள்ளது எமத ஊர்மக்களிக்கு  மகிழ்ச்சி தரக்கூடியவிடயமே...

0 comments:

Post a Comment