கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நடவடிக்கை எடுக்கப்படும் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் கோதபாய ராஜபக்ஷ தெரிவிப்பு


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று நண்பகல் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை அவரது அலுவலகத்தில் சந்தித்து முஸ்லிம் சமூகம் சமகாலத்தில் எதிர்நோக்கிவரும் பல்வேறு சவால்கள் தொடர்பில் சுமார் ஒன்டரை மணித்தியாலம் கலந்துரையாடியதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் துணை செயலாளர் தாஸீம் மௌலவி தெரிவித்தார் .
மேலும் அவர் எமக்கு தெரிவித்த தகவல்களில் இருந்து , இந்த சந்திப்பில் கண்டி மற்றும் பதுளையில் நடந்த சம்பவங்களை விளக்க அந்த பிரதேசங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர் .அங்கு சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகள் விளக்கியுள்ளனர்.
குறிப்பாக ஹலால் சான்றிதழுக்கு எதிரான பிரசாரம் , முஸ்லிம் சனத்தொகை அதிகரிப்பு தொடர்பான பிரசாரம் , முஸ்லிம் வர்த்தகம் தொடர்பான பிரசாரம் மேலும் சமூக வலைத்தள, இணையத்தள பிரசாரங்கள் ,கண்டி , பதுளை முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கொள்ளப் பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாருக்கு விளக்கியதுடன் அவை தொடர்பான ஆவணங்களையும் அவரிடம் கையளித்துள்ளனர்.
சந்திப்பில் மௌலவி ரிஸ்வி முப்தி, என்.எம்.அமீன் மற்றும் சட்டத்தரணி சுஹைர் ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பாக தெரிவித்ததுடன் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்று நெடுகிலும் மற்ற சமூகங்களுடன் சமாதானமாக வாழ்ந்து வருவதாகவும் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளனர்
மேலும் அவர்கள் முஸ்லிம் சமூக தொடர்பில் ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருப்பின் அவற்றை தமக்கு தெரியப்படுத்துமாறும் அவை தொடர்பாக தாம் நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இவைகள் தொடர்பில் கருத்துரைத்துள்ள பாதுகாப்பு செயலாளர். மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதுடன் .மேற்படி முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் , நடவடிக்கைகள் அரசாங்கத்தின் ஆதரவை அங்கீகாரத்தை பெற்றவை அல்ல என்றும் இந்த செயல்பாடுகளை பெரும்பான்மையான பௌத்தர்கள் ஏற்றுகொள்ள வில்லை என்றும் முஸ்லிம்கள் பௌத்தர்களுடன் மேலும் நெருக்கமான உறவை பேணிவரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான சந்திப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெறவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று நண்பகல் 12 மணி முதல் 1:30 மணி வரை நிகழ்ந்த இந்த சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் மௌலவி ரிஸ்வி முப்தி , செயலாளர் மௌலவி முபாரக் துணைச் செயலாளர் மௌலவி தாஸீம் , மௌலவி முர்ஸித், தாரிக் பதியுதீன் மஹ்மூத் ,முஹிதீன் , முஸ்லிம் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன் , ஹில்மி அஹமத் , மற்றும் அஸ்கர் கான் வை .எம் எம் .ஏ தலைவர் தீன் , சட்டத்தரணி சுஹைர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அதேவேளை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அடங்களான முஸ்லிம் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் முறைபாடுகளை கேட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment