கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிடாவில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

“தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!”



கஹட்டோவிட அல் மஸ்ஜித் ஜாமிஉ பள்ளி வாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று காலை 7 .15 மணியளவில் நடைபெற்றது. நேற்றிரவு பெய்த மழையையும் பொருட்படுத்தாது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமையையும் காண முடிந்தது. ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் உட்பட சுமார் 1000 போ் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பெருநாள் தொழுகையைத் தொடாந்து பள்ளி வாசலின் பிரதம் இமாம் அஷ்ஷைக் மஸ்ஊத்(ஸலபி) அவாகளின் உரையும் இடம் பெற்றது. இவ்வுரையில் அல்லாஹுத்தஆலாவால் மனிதர்களிற்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு அருட்களான ஆரோக்கியம், ஓய்வு நேரம் என்பவற்றை நாம் எப்படி சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பது பற்றிய ஒரு சிறந்த விளக்கத்த வழங்கினார்.  குர்ஆன் சுன்னாவின் பிரகாரம் பெருநாள் தொழுகையை தொழுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்த அல்லாஹ்விற்கும், மஸ்ஜித் ஜாமிஉவின் நிர்வாகத்திற்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

நிழற்படங்களுக்கு இங்கே கிளிக் பன்னவும்.


0 comments:

Post a Comment