கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கிண்ணியாவில் பதற்றம்: பொலிசார் பொதுமக்கள் மோதல்

Tense situation in Kinniya as residents throw stones at STF


கிண்ணியாவில் விறகு வெட்டச்சென்ற சிலரை சட்டவிரோதமான முறையில் விறகு வெட்டி வருவதாக குறிப்பிட்டு  அதிரடிப்படையினர் அவர்களை பிடித்த வேளையில்  அங்கு முறுகல் நிலை தோன்றியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அதிரடிப்படையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் வீதியை மறைத்து  டயர்களை எரித்து தடையை ஏற்படுத்தியுள்ளனர்.  இதன்போது அங்கு மேலும் கூடிய  பிரதேச வாசிகளுக்கும்  கிண்ணியா சூரங்கல் முகாம் அதிரடி படையினருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி முறுகல் நிலை தோன்றியுள்ளது .
இதன்போது   விஷேட அதிரடிப்படையினர் வானை நோக்கி துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டுள்ளனர். என்று தெரிய வருகிறது. சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
 
இதன்பின்னர் பட்ட நிலையை தவிர்க்கும் நோக்கில் குட்டிக்கராச்சி ஜும்ஆப்பள்ளிவாசலில் பொலிசாருக்கும் ,  கிண்ணியா சமூக தலைவர்களுக்கும்  இடையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment