கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

லெபனானினுள் புகுந்த முஜாஹிதீன் படையணிகள் - விரியும் Qusayr சண்டைக்களம் !!

  
தோல்வி ஏற்படாமல் நம்மை காத்துக்கொள்ளல் நம் கைகளிலேயே உள்ளது. ஆனால் எதிரியை தோற்கடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் எதிரியினாலேயே வழங்கப்படும் வரை காத்திருப்பதும் எம் கைகளிளேயே உள்ளது - சன்சூ (The Art of War)"

Qusayr நகர் சண்டைகளின் மாற்றங்கள் அபரீதமானவை. கடந்த புதன்கிழமை காலை முஜாஹித்கள் Qusayr ல் இருந்து பின்வாங்கினர். 5000 ஹிஸ்புல்லா போராளிகள் பெரும் எடுப்பில் மேற்கொண்ட பாரிய தாக்குதல் கடந்த செவ்வாய் மாலை ஆரம்பமானது. முஜாஹித்கள் நின்ற பகுதிகள் மேல் மழையென கயூட்சா ரொக்கெட்கள் வந்து விழ ஆரம்பித்தன. பின்புல ஆட்டிலறி சூட்டாதரவுடன் ஹிஸ்புல்லாக்களின் சிறப்பு படையணிகள் Qusayr ன் தென்முனைகளை உடைத்து கொடுக்க ஏனைண தாக்குதல் படையணிகள் சடுதியாக Qusayr ன் உள்ளே நுழைந்தன. இந்த சண்டையில் லெபனானிய ஹிஸ்புல்லாக்களுடன், ஈராக்கிய, யெமனிய, ஈரானிய மிலிசியாக்களும் களம்புகுந்தன.  கடும் சமர் வெடித்தது. பின்னர் சடுதியாக முஜாஹித்கள் பின்வாங்க ஆரம்பித்தனர். Qusayr fell down on Hisbullah's Hand என ஊடகங்கள் செய்தி சொல்ல ஆரம்பித்தன. 

புதன் கிழமை காலை ஹிஸ்புல்லா படையணிகள் Qusayr ன் மையப்பகுதியை வந்தடைந்தன. ஏறத்தாழ 90 விகித நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர் ஹிஸ்புல்லாக்கள். Qusayr ன் வெற்றியை பெய்ரூட்டில் உள்ள ஷியாக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இத்தாலியர்கள் பாணியில் வீதிகளில் ஆடிப்பாடி கொண்டாடினர். மோட்டார் சைக்கிள்களிலும், பிக்அப் வாகனங்களிலும் ஹிஸ்புல்லாக்களின் கொடிகளை அசைத்து ஆரவாரித்து, ஹிஸ்புல்லாக்களின் கீதங்களை கோரஸ்ஸாக பாடினர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். லெபனானின் அல் மனார் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நிகழ்த்தியது. பீஸ் டீவியும், அல்-ஜஸீராவும் “Qusayr முற்று முழுதாக ஹிஸ்புல்லாக்கள் வசம் வீழ்ந்தது” என தலைப்பு செய்தியிட்டன. இந்த அவகாசத்தில் காயப்பட்ட பொதுமக்களும், அடைபட்டிருந்த ஏனையவர்களும் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்தனர்.

எல்லாம் நன்றாகவே நடந்தன..

திடீரென ஹிஸ்புல்லாக்கள் கைப்பற்றிய Qusayr ன் மையப்பகுதி வெடிக்க ஆரம்பித்தது. முதல் குண்டு வெடிப்பிலேயே 12 இற்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா அதிரடிப்படை வீரர்கள் சிதறடிக்கப்பட்டனர். தொடர்ந்து பல குண்டுகள் பல இடங்களிலும் வெடிக்க ஆரம்பித்தன. இப்போது எல்லாமே புரிந்து போயிற்று ஹிஸ்புல்லாக்களிற்கு. “ஷஹாதத் தாக்குதல்கள்” ஆரம்பித்து விட்டன என்பது நன்றாகவே புரிந்து போயிற்று அவர்களிற்கு. முழு Qusayr ம் வெடிக்க ஆரம்பித்தது. ஹிஸ்புல்லாக்களிற்கு மீண்டும் தாங்கள் பொறி கிடங்கினுள் முழுதாக மாட்டி விட்டோம் என்பது புரிந்து போயிற்று. 250 இற்கும் மேற்பட்ட ஷியா ஹிஸ்புல்லாக்கள் பலியாகினர் குசைரில். 

இது இப்படியிருக்க ஹிஸ்புல்லாவும், நஸ்ருல்லாவும், கும்மின் முல்லாக்களும் எதிர்பார்க்காத இன்னொரு சம்பவம் ஆரம்பமானது. 

அது தான் முஜாஹித்கள் Qusayr ஐ விட்டு பின்வாங்கி அவர்களை உள்ளிழுத்து அவர்கள் கவனங்களை வெற்றி களிப்பின் பக்கம் திருப்பி விட்டு, லெபனானின் ஷியாக்களின் சிரிய எல்லை கிராமமான Balbec ன் உள்ளே ஊடுருவி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். ஹிஸ்புல்லாக்களின் விநியோக மையமாக செயற்பட்ட Balbec ல் முஜாஹித்களிற்கும் ஷியா மிலீசியாக்களிற்கும் இடையில் கடுஞ்சமர் வெடித்துள்ளது. ஹிஸ்புல்லாக்களின் கள முனைத்தளபதிகள் சண்டை செல்லும் திசையின்  நிலைமைகளை கவனத்தில் கொண்டு மீண்டும் மேற்கு நோக்கி பின்வாங்கி வருகின்றனர். இப்போது குசைர் முஜாஹித்களின் கைகளில் மீண்டும் வந்துள்ளது. 

Balbec தாக்கப்படும் என கனவிலும் எதிர்பார்க்காத ஹிஸ்புல்லாக்களிற்கு சிரிய சமர்களத்தின் பின்னால் உள்ள சத்தியத்தின் சத்தம் மெல்ல கேட்க ஆரம்பித்துள்ளது. லெபனானிய பிராந்தியத்தினுள் சிரிய முஜாஹித்கள் எல்லை கடப்பார்கள் என மேற்குலகும் எதிர்பார்த்திரக்க மாட்டார்கள். சத்தியத்தின் சத்தம் அவர்கள் காதுகளின் செவிபறைகளை தட்ட இன்னும் கொஞ்சம் காலம் தேவைதானே..

0 comments:

Post a Comment