கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சுன்னத்வல் ஜமாத்தினரிற்கும் ஷியாக்களிற்கும் நடக்கும் யுத்தம்! - யூசுப் அல்-கர்ளாவி

    Khaibar News Base
'இது ஹிஸ்புல்லாக்களிற்கும் சிரிய முஜாஹித்களிற்கும் நடக்கும் யுத்தம் மட்டுமல்ல! '

லக முஸ்லிம்களிடையே புகழ் பெற்ற அறிஞர் கலாநிதி யுசுப் அல்-கர்ளாவி உலக முஸ்லிம்களை நோக்கி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். பல விடயங்களில் சர்ச்சைக்குரியவரும், நவீனத்துவ இஸ்லாத்தின் (?) முன்னோடியுமான இவர் புரிந்து கொள்ள முடியாத ஒரு நபர். லிபியாவில் கடாபியை கொல்வதற்கு துணை நின்றவர். அதே வேளை காஸாவின் முஸ்லிம்களிற்காக கண்ணீர் விட்டவர். சரி விடயத்திற்கு வருவோம். அவர் முஸ்லிம்களை நோக்கி கடந்த வெள்ளியன்று நடைபெற்ற ஊர்வலத்தில் விட்ட வேண்டுகோள் இதுதான்...


“ஓ முஸ்லிம்களே. உங்களிற்கு எதிராக யகூதி நஸராக்கள் ஒன்று பட்டு விட்டனர். அவர்களின் ஒரே குறிக்கோள் முஸ்லிம்களை அழிப்பது. அதனை நாம் கடந்த பல தசாப்தங்களாக கண்கூடாக கண்டு வருகிறோம். ஆனால் அதனை தடுத்து நிறுத்த செயற்திறன் அற்றவர்களாக எம்முள் பிளவுண்டு கிடக்கிறோம்”.

“சிரியாவில் இஸ்லாத்தின் எழுச்சி எமக்கு நம்பிக்கைகளை தருகிறது. அந்த ஒளியை காப்பது நமது கடமை. அதற்காக நாம் தயாராக வேண்டும். சிரியா போராட்டத்திற்கான எமது பங்களிப்பை வழங்க வேண்டும்”.

“ஆயுத பயிற்ச்சி எடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. ஆயுதங்களை தயார்படுத்துவதும் அவ்வாறே. தன்னை தற்காத்து கொள்ளும் அளவாவது அவனது பயிற்ச்சிகள் அமைந்திருக்க வேண்டும்”.

“ஈரான் சிரிய அரசை பாதுகாக்க லெபனான் ஊடாக ஆயுதங்களை அனுப்புகிறது. ஆட்களை அனுப்புகிறது. ஹிஸ்புல்லாக்களை போராட அனுப்புகிறது. ஆனால் நாம் இதனை கைகட்டி பொம்மைகளாக பார்த்து கொண்டிருக்கிறோம். எதுவுமே செய்யாமல்”

“ஷியாக்கள் சுன்னத் வல் ஜமாத்தினரை (சுன்னிகளை) அழிப்பதற்கான யுத்தமே நடக்கிறது. பஸர் அல்-அஸாதின் படைகள் வென்றால் நாளை ஒரு சுன்னி முஸ்லிமும் சிரியாவில் வாழ முடியாது. ஈரானில் சுன்னத் வல் ஜமாத்தினரிற்கு ஏற்பட்டுள்ள கதியே இவர்களிற்கும் ஏற்படும். இந்த பேருண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்”. 

“நான் ஹஸன் நஸ்ருல்லாஹ்வையும், ஹிஸ்புல்லாவையும் சவுதி அரேபிய அஹ்லுல் சுன்னா அறிஞர்களின் தீர்ப்புக்களிற்கு எதிராக முன்னிற்று மறுதலித்தேன். ஆனால் இன்று அது எவ்வளவு பெரிய தவறு என்பதனை உணர்கிறேன். சவுதி அரேபிய அஹ்லுஸுன்னாவின் அறிஞர்கள் என்னை விட அறிவில் சிறந்தவர்கள் என்பதனை அந்த ஷியாக்களின் விடயத்தில் நான் உணர்கிறேன் இன்று”.

“ஈரான் ஒரு பெரிய கொலை களத்தை சிரியாவில் திறந்து விட்டுள்ளது. சுன்னிகளை கொல்லும் அவர்களின் நீண்ட கனவின் ஒரு மைல் கல் சிரியா”. இதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்”. 

“இந்த சண்டைகள் சிலுவை போர்களை விடவும் ஆபத்தான விளைவுகளை எமக்கு ஏற்படுத்தும். இந்த சண்டைகள் தாத்தாரிய போர்களை விடவும் கடுமையான வடுக்களை எமக்கு தரும்”.

“முஸ்லிம்களே சிரிய களங்கள் காத்திருக்கின்றன. அதில் உங்கள் பங்கு என்ன என்பதே எனது வினா”

இவ்வாறு காலநிதி கர்ளாவி தனது அடி மனதின் மகத்தான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். எவ்வளவு தான் அவர் தொடர்பில் எமக்கு முரண்பட்ட கருத்துக்கள் இருந்த போதும் இந்த வார்த்தைகள் வரலாற்றின் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டியவை.

0 comments:

Post a Comment