கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் 215 வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலம் மீது மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்துவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஒருமணிநேரம் ஒத்திவைக்கப்பட்டு கட்சித்தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் அவை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் மாலை 18.58க்கு கூடியது.  பின்னர், பெயர் கூப்பிட்டு வாக்கெடுக்கப்பு நடத்தப்பட்டது. அதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 215 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.


எதிராக ஒருவரும் , ஏழு பேர் சமூகமளிக்காமலும் , ஒருவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாமலும் இந்த வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது.
இன்றைய வாக்கெடுப்பின் போது ஜானக பண்டார, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பசில் ராஜபக்‌ஷ, விநாயகமூர்த்தி, பிரேமலால் ஜயசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.

இதேவளை டொக்டர். சரத் வீரசேகர 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார். பாராளுமன்ற உறப்பினர் அஜித் குமார வாக்களிக்கவில்லை.

தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் தாண்டி நேற்றைய தினம் 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் பாராளுமன்றில் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment