கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நிப்போன் ஹோட்டல் சம்பவம். ரவுப் ஹகீமின் அறிக்கை



ஊடகவியலாளர் மாநாடொன்றை பொதுபலசேனா அமைப்பின் தேரர்கள் குழப்பியது தொடர்பில் ஸ்ரீ.ல.முகாங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹகீம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த  ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது:
ஜாதிக பல சேனா என்ற அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டை சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் வந்த பொதுபலசேனாவைச் சேர்ந்த சங்கைக்குரிய தேரர்கள் குழப்பிய சம்பவம் தற்பொழுது பொது மக்கள் மத்தியில் பேசும் பொருளாகியிருக்கின்றது.
இலங்கையைப் பொருத்தவரை பௌத்த குருமார்கள் சிலரின் தார்மீக தண்மை பற்றி சிறுபாண்மைச் சமுகங்களைச் சேர்ந்தவர்கள் விமர்சிப்பதோ மீளாய்வு மேற்கொள்ளவதோ தகுதிக்கு அப்பாற்றபட்டவிடயம். இந்த நிலைமை உருவாகியிருக்கும்  சூழ்நிலையில் எவ்வாறாயினும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிறைவேற்றவேண்டியவர்கள் நடந்துகொள்ளும்  விதம் பொதுமக்களினதும் ஸ்ரீலங்கா முஸ்லீம்  காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளினதும்  கரிசணைக்குரியதாக ஆகி இருக்கின்றது.
சம்பந்தப்பட்ட நிகழ்வின் போது முர்க்கத்தனமானமுறைகள் பிரயோகிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கொம்பணிதெரு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் ஏனைய பொலிசாராரும் அங்கு வெறும் பார்வையளர்களாக  இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை குறித்து  ஸ்ரீ.ல.மு.கா மிகவும் கவலையடைகின்றது. மக்கள்  ஒன்று கூடுவதற்கு உள்ள சுதந்திரத்திற்கும் பேச்சு சுதந்திரத்திற்கும் உள்ள உரிமை பல வந்தமாக மீறப்பட்டதற்கு அப்போழுது ஒளிப்பதிவு செய்யப்பட்ட கானொளி காட்சிகள் சான்று பகிர்கின்றன.
இவ்வாறான சர்ந்தப்பங்களில் சட்டத்தின் பார்வையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட வேண்டிய அரசின் கடப்பாடு தளர்ந்திருப்பது இவ்வாறன ஈனச் செயல்கள் மீண்டும் தலை தூக்குவதற்கு வழிவகுக்கும்.
மோதலுக்குரிய தரப்பினர் தங்களுக்கிடையில் பிரச்சினைகள் காணப்பட்டால் அவற்றை சட்டரீதியாக தீர்த்துக் கொள்ள முற்படுவதே மிகவும் உகந்தது. என முஸ்லீம் காங்கிரஸ் வலியுறுத்துவதோடு அண்மைக் கால நிகழ்வுகளின் போது சட்டத்தையும் ஓழுங்கையும் பேணவேண்டியவர்களின் உதாசீனப் போக்கையும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
அன்று நடந்த கீழ்த்தரமான செயலை அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகவியலாளர்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கத்தக்கதாக பொலிசார் அங்கு நடந்து கொண்ட விதம் அவர்களுக்கு பின்னணியில் பலமான சக்திகளின் ஆதரவு உள்ளது என்பதை உணர்த்துகின்றது. இந்த இயக்கத்தினர் கடந்த 2 வருட காலமாக சட்டத்தையும் ஒழுங்கையும் தமது கையில் எடுத்துக்கொண்டு முஸ்லீம் சமுகத்திற்கு எதிராக செயல்ஆற்றுவது பெரும் வேதணைக்குரியதாகும்.
மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டை இலங்கை கொண்டிருப்பதாக அரசு அறிவித்திருக்கும் தருணத்தில் அரசியல் உரிமைகள் மற்றும் குடிசார் சுதந்திரம் என்பன ஜனநாயகரீதியாக நிலை நாட்டப்படுவது காலத்தின் இன்றியமையாத தேவையாகும். எனஅமைச்சர் ரவூப் ஹகீம்  தெரிவித்துள்ளார். 

0 comments:

Post a Comment