கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

Malaysia Airlines MH-370 ன் மர்ம மறைவின் பின்னணி என்ன?

 
லேசிய விமானம் MH370-ன் மர்ம மறைவு குறித்து பலதரப்பட்ட கருத்துக்களும் ஊகங்களும் வெளியாகியுள்ள நிலையில் எமக்கு கிடைத்த தகவல்களின் உறுதித்தன்மைகளின் அடிப்படையில் சில விடயங்களை பகிர்ந்து கொள்வது முறையாகும் என எண்ணுகின்றோம். சில மாதங்களிற்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க உளவுத்துறை இராணுவ கொம்பிளேக்ஸ் தலிபான் போராளிகளின் தாக்குதலிற்கு உள்ளானது. இதன் போது அந்த கட்டிடம் சில மணிநேரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இந்த தாக்குதல் பற்றி விபரங்கள் அடங்கிய ஒரு பதிவை நாம் முன்பு வெளியிட்டிருந்தோம். உள்நுழைந்த தலிபான் போராளிகள் அங்குள்ள “ட்ரோன் கட்டுபாட்டு” மையத்தில் உள்ள உபகரணங்களையும், கனணிகளையும் கைப்பற்றி கூடவே தம்முடன் எடுத்துச் சென்றிருந்தனர். 
(Getty)

தலிபான்கள் என்றால் அழுக்கு ஆடையுடன் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு கையில் கலஸ்னிகோவ்-47 இனை சுமந்து கொண்டு மலைப்பொந்துகளில் வாழும் குகைவாசிகளாகவே மேற்கின் ஊடக சித்தரிப்புக்கள் இதுவரை இருந்து வந்தன. ஆனால் மேற்கைரோப்பிய நாடுகளில் டெனிம் ட்றவ்சர்களும், டீ-சேர்ட்களும் அணிந்து  தோளில் லெப்-டொப்களை சுமந்தவாறு கசுவலாக வலம் தலபான்களை பற்றி இவர்களும் அறியவில்லை. நாமும் அறியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் முழு மேற்கைரோப்பா முதல் கனடா வரை  இயங்கும் தலிபான்களில் லொபிகள் பற்றிய விவரம் எவரிற்கும் தெரியாது. தலிபான்கள் தங்கள் பிறதேச முகாம்களை எம்பஸிகள் என்று அழைப்பார்கள். 

சர்வதேச உளவு வலையமைப்புகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளும உறவுநிலைகளையும் தலிபான்கள் பேண தவறவில்லை. அந்த வகையில் ட்ரோன் விமான கட்டுப்பாட்டு மென்பொருளும் அதன் கட்டுப்பாட்டு இயந்திரங்களும் மலேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சீன உளவமைப்புடன் நடந்த பேரத்தின் பின்னர் பெரும் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதில் மலேசிய உளவமைப்பின் முகவர்களும் இடைத்தரகர்களாக செயற்பட்டிருந்தனர். 

சீனாவிடம் இந்த ட்ரோன் கட்டுப்பாட்டு செயன்முறை செல்லுமாக இருந்தால் முழு ஆசியா கண்டத்திலும் அமெரிக்காவினால் ட்ரோன் யுத்தம் செய்ய முடியாத நிலை உருவாகும். எந்த ட்ரோன்களும் பறக்க முடியாது. நிலைமையின் விபரீதம் அமெரிக்காவிற்கு நன்றாயவே புரிந்து இருந்தது. அமெரிக்க உளவமைப்பினர் இது எங்கு கடத்தப்பட்டது என்பதனை மோப்பம் பிடிப்பதற்கு உதவியது இஸ்ரெலின் மலேசிய மொஸாட் ஏஜேன்ட்டுகளேயாகும். இந்த கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் நேரம் இல்லை. பொருள் சீன உளவமைப்பின் கரங்களிற்கு சென்று விட்டது. அவர்களுடன் சண்டையிட்டு கைப்பற்ற முடியாது. சீனாவும் அவசர அவசரமாக அதனை மலேசியாவில் இருந்து பீஜிங்கிற்கு கொண்டு வரும் செயற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. இது மலேசிய அரசிற்கும் தெரிந்த விடயம். 

இந்த விமானம் காணாமல் போன மர்ம நாடகம் தொடரர்பில் இணையங்களில் வெளியான புகைப்படங்களில் இருந்தவர்கள் இருவர் இஸ்ரேலியர்கள். மற்றையவர் அமெரிக்கர். விமானியுடனான சீ.ஐ.ஏ.யின் பேரத்தின் பின்னர் தான் விமானம் புறப்பட்டது. அது நேராக டியகோ கார்சியா செல்லாமல் சுற்றுப்பாதையில் கடல் மட்டத்திற்கு பணிவாக சென்று ராடர்களின் பார்வைக்கு புலப்படாத நிலையில் மீண்டும் டியாகோ கார்சியாவில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ட்ரோன் மெக்கானிசமும் அதன் கொன்ரோலிங் யூனிட்டும் அதன் மென்பொருளும் மீண்டும் அமெரிக்கா வசமாகிவிட்டது. 

டியாகோ-கார்சியா பற்றி நாம் ஏற்கனவே ஒரு சிறப்பு பதிவினை வெளியிட்டிருந்தோம். பல வாசகர்களும் அதனை வாசித்திருந்தனர். இப்போது இந்த விமான கடத்தல் தொடர்பாக அமெரிக்காவிற்கோ, மலேசியாவிற்கோ, சீனாவிற்கோ எதுவும் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பின்னைய இரு நாடுகளிற்கும் உண்மைகள் புரிந்தும் சர்வதேச அரசியல் களத்தில் தங்கள் நாட்டிற்கு பங்கம் வராமல் இருக்க மௌனம் காக்கின்றன. 

அதில் பயணித்த பயணிகள் என்ன ஆனார்கள்?, கொல்லப்பட்டு விட்டனரா போன்ற கேள்விகளிற்கான விடைகள் கிடைக்க பல வருடங்கள் ஆகலாம். ஆனால் விமானம் பத்திரமாக  டியாகோ-கார்சியாவில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை. கடத்திய அமெரிக்காவிற்கு அதன் கறுப்பு பெட்டியை கடலில் போடுவது ஒன்றும் பெரிய விடயமல்ல. கூடவே சில விமான பாகங்களையும் மனித உடல்களையும்.

- khibarthalam.

0 comments:

Post a Comment