கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சவுதி உளவுத்துறை தலைவர் பந்தர் பின் சுல்தான் பதவி விலகினார்.. (விரைவில் மேலதிக தகவல்கள்)

வுதி உளவுத்துறையின் தலைவராக இருந்த இளவரசர் பாந்தர் பின் சுல்தான், ‘அவரது சொந்த விருப்பத்துக்கமைய’ மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இடத்துக்கு புதிதாக வந்திருப்பவர், யூசுப் அல்-இத்ரிசி.

இவரது பெயரை முன்பே கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? ஆம். சில ஆண்டுகளுக்கு முன்பு சவுதியின் தூதராக வாஷிங்டனில் இருந்தவர்தான்.
கடந்த இரு ஆண்டுகளாக, சவுதி உளவுத்துறையின் தலைவராக இருந்த இளவரசர் பாந்தர் பின் சுல்தானுக்கு அடுத்த பதவியில், உளவுத்துறை துணைத் தலைவராக இருந்தவர், யூசுப் அல்-இத்ரிசி. இப்போது பதவியுயர்வு கிடைத்திருக்கிறது.
 
மற்றொரு விஷயம், தற்போது சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்துக்கு, சவுதி ரகசிய ஆயுத சப்ளை செய்த விஷயம் பற்றி  எழுதியிருந்தோம் அல்லவா? அந்த ஆயுத சப்ளை விவகாரத்தில், ரஷ்யாவுடன் டீல் பண்ணி, காதும் காதும் வைத்ததுபோல காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்தவரும் இவர்தான்!
 
(இவர் மருத்துவ சிகிச்சைக்காக உளவுத்துறை துணைத் தலைவர் பதவியில் இருந்து லீவு பெற்று சவுதிக்கு வெளியே தங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போதுதான் அவர் சிரியா ஆயுத டீலை கவனித்துக் கொண்டிருந்தார்)

இருந்து பாருங்கள், இனி சிரியா விவகாரத்தில் சவுதியின் ‘மறைமுக பங்களிப்பு’ முன்பைவிட அதிகமாக இருக்கும்!
 
-கைபர்தளம்.

0 comments:

Post a Comment