கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

வில்பத்துவில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளனர் என்ற பொது பல சேனாவின் கருத்து தொடர்பில்.. அமைச்சர் றிஷாட் வும் ஹுனைஸ் எம்.பி யும்.…

வில்பத்துவில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளனர் என்ற பொது பல சேனாவின் கருத்து பெய்யானது என்கின்றனர்
அமைச்சர் றிஷாட் வும் ஹ{னைஸ் எம்.பி யும்.…

றிப்கான் கே சமான்

வில்பத்துவில் 20ஹெக்டயர் காணிகளை சுத்தப்படுத்தி பள்ளிவாசல்களும், வீடுகளும் கட்டப் பட்டுள்ளதாக அண்மையில் பொது பல சேனா அமைப்பினர் வெளியிட்ட கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது  என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன்;, சட்டத்தரணி ஹ{னைஸ் பாரூக் ஆகியோர் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.
அங்கு மேலும் தெரிவிக்கையில்: வில்பத்துவில் ஒரு அங்குலமும் எடுக்கவுமில்லை, அங்கு முஸ்லிம்கள் குடியேற்றப் படவுமில்லை.
மாறாக வில்பத்துவின் எல்லைப்பகுதியில் உள்ள நான்கு முஸ்லிம் கிராமங்களிலேயே இம் மக்கள் குடியேறியுள்ளனர் என்ற தெளிவான விளக்கமளிக்கப் பட்டது.

வில்பத்து காட்டில் பள்ளிகள் கட்டப் படுவதாக பொது பல சேனா தெரிவித்த கருத்திற்கு வில்பத்துவில் பள்ளிகள் கட்டப் படவில்லை மாறாக சேதமடைந்த பள்ளிகளிற்கு அருகில் தான் புதிய பள்ளிகள் கட்டப் படுவதாகவும் அங்கு விளக்கம் கொடுக்கப் பட்டது.

அத்துடன் 1990ம் ஆண்டு உடுத்திய உடையோடு ஒருலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் இரண்டு மணி நேரத்திற்குள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப் பட்டனர்
அங்கு சுமார் 79பள்ளிவாசல்கள், 60பாடசாலைகள் மற்றும் ஒருலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமாக்கப் பட்டிருக்கின்ற விடயமும் சுட்டிக் காட்டப் பட்டது.

அமைச்சின் கேற்போர் கூடத்தில் இடம் பெற்ற இவ்வூடகவியலாளர் சந்திப்பில் முசலிப் பிரதேச அரசியல் உயர்பீடத்தினர் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

Displaying 333333333333.jpg
Displaying photo (14).JPG
Displaying aar.jpg

0 comments:

Post a Comment