கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பொது பல சேனாவும் முஸ்லிம்களும் !

பொது பல சேனா. இலங்கை முஸ்லிம்கள் விரும்பியோ விரும்பாமலோ அடிக்கடி தங்கள் உதடுகளில் உச்சரிக்கும்  பெயர். தம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கிஞ்சித்தும் சிந்திக்காமல் கல்யாண வீடுகளிலும் கத்த வீடுகளிலும் தம் புரியாணி தின்று, உண்டு கொழுத்து தொழுகையில் ருகூஃவில் காலை கூட நேராக வைக்க முடியாமல் முழங்காலை மடக்கி ருகூஃ செய்யும் பிஸிகல் பிட்னட்ஸ் உள்ள சமூகம். டயிபிடிக் என்றும் பைபாஸ் என்றும் 40 வயதிலேயே வயோதிப போராட்டங்களில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும் இவர்களில் ஏராளம். 

பொது பல சேனா. இவர்களின் உளவியல் பிரச்சார யுத்தத்திலேயே இலங்கை முஸ்லிம் சமூகம் ஆடிப் போயுள்ளது. இன்னும் அவர்கள் முஸ்லிம்களிற்கு எதிரான களங்களை திறக்கவில்லை. எதிரி எதை எதிர்பார்க்கின்றோனோ அதனை தங்கள் பாதுகாப்பிற்கான அரண் என நினைத்து முண்டியடித்து செயற்படும் ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறியுள்ளது. தேசத்தை மறந்து, சமூகங்களை மறந்து சடவாதத்தில் திளைத்த முஸ்லிம்கள் இப்போது தங்களிற்கான பாதுகாப்பிற்கான பதுங்கு குழிகளாக “ஜனநாயகம்”, “தேசியம்” என பலதை வலிதாக கொண்டு வந்து தம்முன் நிறுத்தியுள்ளனர். தங்களை சமானதான விரும்பிகளாக, தேசாபிமான பக்தர்களாக, மதங்களுடன் நல்லுறவு பேணும் மனிதர்களாக காட்டிக் கொள்வதில் முண்டியடித்து செயற்படுகின்றனர். 

பொது பல சேனா. இந்த இனவாத பாசிஸ்ட்கள்,  இலங்கை முஸ்லிம்கள் இப்போது தங்களை மாற்றி கொண்டு தேசிய நிகழ்வுகளில் தங்களை முன்னிறுத்துவதையிட்டு திருப்தியடையப்  போவதில்லை. முஸ்லிம்களின் சொத்துக்களையோ வர்த்தகத்தையோ குறியாக வைத்தும் அவர்கள் இயங்கவில்லை. முஸ்லிம்களின் சுய அடையாளத்தை இல்லாதொழிக்கும் ஒரு பெரிய நிகழ்ச்சி திட்டம் அவர்கள் வசம் உள்ளது. அந்த சுய அடையளாம் என்பதே இஸ்லாம் தான். 

இது இலாஹியத்திற்கும் குப்ரியத்திற்கும் இடையிலான ஒரு போராட்டத்தின் ஆரம்பமே. ஒருவன் முஸ்லிமாக வாழ முற்படும் பொழுது அவன் சோதிக்கப்படுவதும் இயல்பானதே. அது போல இஸ்லாத்தின் வளற்சியை கண்டு அஞ்சம் குப்ரிய சமூகம் முஸ்லிம்களை அழிக்க அல்லது விரட்ட முற்படுவதும் இயல்பானதே. இது தான் வரலாறு. அது இலங்கையில் நடந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. 

 இந்த நிலையில் முஸ்லிம் சமூகம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். காபிரை திருப்திப்படுத்துவதன் ஊடாக அவர்களிற்கான பாதுகாப்பு கிடைக்கும் என நினைத்தால் அது அவர்கள் தங்களை அழித்து கொள்ள தாங்களை வெட்டிய குழுியாக மாறும்.  இலங்கை எனும் குப்ரிய நிலத்தில் சத்திய இஸ்லாத்தின் தூதினை குப்ரிய தலைவர்களிற்கும், அந்த சமூகத்திற்கும் தெளிவாக எடுத்து கூறல் வேண்டும். அதனால் ஏற்படும் இழப்புக்களை கண்டு அஞ்சலாகாது. இதனைத் தான் ஒவ்வொது நபிமாரும் ரஸுல்மாரும் அன்று செய்தனர். 

ஆட்சி தலைவர்களிற்கு இஸ்லாத்தை தெளிவாக எடுத்துரைத்தனர். அவர்களை திருப்திப்படுத்த தாகூத்திய கோட்பாடுகளிற்கு சலாம் போடவில்லை. இலங்கையில் உள்ள அரசியல், மத, சமூக தலைவர்களிற்கும் அவர்களின் கட்டமைப்புக்களிற்கும் இஸ்லாம் எடுத்துச் செல்லப்படல் வேண்டும். இது தான் இலங்கையில் இஸ்லாம் வேண்டி நிற்கும் தஃவா. இதுவரை காலமும் அதனை நாம் செய்யவில்லை. அந்நிய சமூக மக்களிற்கு இஸ்லாத்தின் ஒழுக்க மாண்புகளை, பொருளாதார விதிகளை, சட்டங்களை அறிமுகம் செய்யவில்லை. குறைந்த பட்சம் அல்லாஹ் யார் என்பதனை கூட சொல்லவில்லை. 

இந்த நாட்டில் நேர்மையாக இருப்பதென்பதும், உண்மையாக இருப்பதென்பதும் இதுவே. மாறாக பொய்யான ஜனநாயக வேடமும், பொய்யான தேசாபிமான நாடகங்களும் என்றுமே வெற்றி தரப்போவதில்லை. ஒரு இலட்சம் தலிபான்கள் அல்லது ஐம்பதாயிரம் ஹமாஸின் போராளிகள் இருப்பார்கள் என்றால் இலங்கை முஸ்லிம்கள் தேசாபிமானம் பற்றி பேசுவார்களா? இல்லை பௌத்தர்களிடம் ஜிஸ்யா அறிவிட முற்படுவார்களா?.  தங்கள் பாதுகாப்பிற்கான எந்தவொரு சக்தியும் துணையில்லை என்றவுடன் தேசத்தின் தலைவர்களின் வார்த்தைகளிற்கு தோத்திரம் பாடமுற்படுகின்றனர்.  இந்த நடைமுறை தவறானது. 

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் சொத்துக்களிற்கும், சுகங்களிற்கும் எந்தவித இழப்பும் இல்லாத எந்தவொரு எல்லைக்கு சென்றும் சமரசம் செய்ய தயாராகியுள்ளனர். கொம்பிரமைஸ் என்பது மெல்ல பிலக்ஸிபிள் ஆகும். பிளக்ஸிபில் என்பது மெல்ல அட்ஜஸ்ட்மென்ட் ஆகும். அட்ஜஸ்ட்மென்ட் என்பது அக்ஸெப்ட் என்ற முடிவை நோக்கி இட்டுச் செல்லும். இறுதியில் அது சரண்டர் எனும் சரணாகதி நிலையில் சமூகத்தை கொண்டு வந்து நிறுத்தும். இறைவனை திருப்திபடுத்துவது எப்படி, இறைவனின் பாதுகாப்பை பெறுவது எப்படி என்ற சிந்தனைகளை மறந்து குப்ரிய தலைவர்களை திருப்திப்படுத்துவதன் ஊடாக தங்கள் சமூக பாதுகாப்பையும் இறுப்புக்களின் பாதுகாப்பையும் பேண முற்படுவது நிச்சயமான அழிவின் அடையாளம். 

பொது பல சேனா. அது முஸ்லிம்கள் மீது ஒரு பெரிய இனக்கலவரத்தை கூட உண்டு பண்ணலாம் . குஜாராத்தில் முஸ்லிம்கள் மீது இனவெறிக் கலவரங்களை நடாத்திய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளில் மத்திய தர வர்க்கத்தினரே வெகுவாக ஈடுபட்டனர். அதன் அடிப்படை என்ன தெரியுமா?. ஆர்.எஸ்.எஸ். அதன் பாசிஸ நச்சுக்கருத்துக்களை அந்த சமூகத்தில் பூரணமாக மொபிலைஸ் பண்ணியதாகும். பின்னர் அது கலவரத்தை செய்யவில்லை. சும்மா வேடிக்கை பார்த்தது. ஆனால் நடாத்தி முடித்தது சாதாரண படித்த மத்திய தர வர்க்கத்தினர். இது தான் இனவாதத்தின் மிகக் கொடிய பண்பு. நாளை இது இங்கும் நடக்கலாம். 
அந்நிய மதத்தினரின் கதவை தட்டி இஸ்லாத்தை சொல்லும் தில் எம் சமூகத்திடம் இல்லை. அதுவும் இன்றைய சூழலில் இதனை செய்வது தற்கொலைக்கு ஒப்பானது என அது நினைக்கும். ஆனால் அது தான் தேவை. அதன் விளைவு ஹிஜ்ராவை நோக்கி இட்டு சென்று விடும் என துனியாவின் வஸத்துக்களை நினைத்து சமூகம் கவலை கொள்கிறது. அந்த சடவாத சிந்தனைகள் உள்ளத்தில் இருக்கும் வரை அச்சம் என்பது எம்மை விட்டு அகலாது. அந்த அச்சம் என்பதே பொது பல சேனாவின் பலமிக்க ஆயுமாகவும் இருக்கப் போகிறது.

கைபர்தளம்

0 comments:

Post a Comment