கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நாளை புதன்கிழமைக்குள் பள்ளியை அகற்றுங்கள்! சுமங்கள தேரர் வேண்டுகோள்!

தம்புள்ளை புனித பூமி அபிவிருத்திப் பணிகளுக்கு தடையாக இருக்கும் பள்ளியை நாளை புதன்கிழமைக்குள் அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு தம்புள்ளை ரஜமகா விகாராதிபதி சுமங்கள தேரர் பள்ளி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

புனித பூமி அபிவிருத்திப் பணிகளின் ஓர் அங்கமான பாதை அபிவிருத்தி பணிகள் செவ்வாய் காலை ஆரம்பிக்கப்பட்ட போது பொலிஸார் சகிதம் அங்கு வந்த சுமங்கள தேரர் பள்ளி நிர்வாகிகளை சந்தித்த போது நாளை மாலைக்குள் பள்ளிவாசலை அகற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

தேரரின் கூற்று குறித்து அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியஸ்தகர்களுக்கு தாம் அறிவித்துள்ளோம் என்றாலும் இது வரை எது வித பதிலும் எமக்கு கிடைக்க வில்லை என்றாலும் சகல மட்டத்திலும் தொடர்ந்தும் தொடர்புகளை பேணி வருகிறேம். இன்றிரவு பள்ளி நிர்வாக சபை கூடி அடுத்து நடவடிக்கை குறித்த தீர் மானங்களை மேற்கொள்ள உள்ளதாக பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார். 

- ஸிராஜ். எம். ஷாஜஹான்
DailyCeylon

0 comments:

Post a Comment